ஞானக்கண் மானிடன்

This entry is part 11 of 12 in the series 15 மார்ச் 2020
image.png

சி. ஜெயபாரதன், கனடா

ஞானக்கண் மானிடன்

சி. ஜெயபாரதன், கனடா

பூனைக் கண்ணுக்கு 

தெரியும்

இரவினில் வெளிச்சம் !

நரிக்குத் தெரியுது 

இருட்பாதை !

கருந்துளை,

கருஞ்சக்தி, கரும்பிண்டம்,

கருமை விசைபோல்

காரிருளில்

மறைந்திருக்கும் 

கடவுள்

ஊனக் கண்ணுக்கு

தெரியுதா என 

பூனையைக் கேட்டேன் !

மியாவ்”, என்று

பாடி விட்டுப் போனது ! 

கோனார் நோட்சில் நான்

அர்த்தம் தேடினேன் !

தூரத்தே 

கோர சுனாமி 

பாம்பு போல் நகர்வது

நாயின் காதில் 

பட்டு 

மேட்டுக்கு ஏறுது.

கருமை நிறக்

கடவுள்

பூனைக் கண்ணுக்கு

தெரியுது ! 

சொல்ல முடிய வில்லை !

ஊனக்கண் 

மானிட னுக்கு கடவுள்

தெரிவ தில்லை.

ஞானக்கண்

வேண்டும்  முதலில் 

தோண்டிப் பார் 

மூளையில்.

++++++++++++

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்மாவோவால் உருவான கொரோனா வைரஸ் நோய்கள்.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *