தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்

This entry is part 30 of 31 in the series 19 பிப்ரவரி 2012

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.//

உயிர்மை ஆசிரியரும், ஜெயமோகன் போன்றவர்களால் அறிவுஜீவி என்று கொண்டாடப்படுபவருமான மனுஷ்ய புத்திரன் பிபிஸி தமிழ் சேவையில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதனை இந்த பக்கத்தில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/01/120124_manushyaputhiran.shtml
… இந்த பேட்டியில் முதன்பகுதியில் சல்மான் ருஷ்டிக்கான தடை தவறு என்றும், அரசாங்கம் சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அவரை தடை செய்தது, இந்திய குடிமகனான தனக்கு பெரிய அவமானம் என்று கூறுகிறார். இது ஒரு ஓட்டு வங்கிக்காக இப்படிப்பட்ட நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். இஸ்லாமியர்கள் மீது உலகம் முழுவதும் ஒரு களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வன்முறையாளர்கள், விவாதத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்ற களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்கிறார்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிற குற்றச்சாட்டை உண்மையாக்குகிறது; இது இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் பார்க்கிறார். “இஸ்லாமியர்களை வேட்டையாடக்கூடிய அமெரிக்க அதிபர்” இந்தியாவுக்கு வந்தால் அதனை எதிர்த்து போராடுவீர்களா என்று கேட்டாராம். எழுத்தாளர்களுக்கு கருத்துரிமையைவிட முக்கியமானது பொறுப்புரிமை என்று அறிவுரை தருகிறார். கருத்துரிமையை விட சமூகத்தின் நல்லிணக்கம் மிகவும் முக்கியம் என்று கூறுகிறார். அதற்காக எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை திரும்பபெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார்.

தஸ்லிமா நஸ்ரினும் சல்மான் ருஷ்டியும் தங்கள் கருத்துக்களை திருப்பிப்பெறவேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் கோரினால், பெரியாரையும் அம்பேத்காரையும் தடை செய்யலாமா என்று பேட்டியாளர் கேட்டார். அதற்கு மென்று விழுங்கினார் மனுஷ்ய புத்திரன்.

அதாவது எம்.எப் உசேனை வைத்து இந்துத்துவா அமைப்புகள் பலம் பெறுமென்றால், அதனை தடுப்பதற்காக, அப்போது எம்.எப் உசேனை விட்டுக்கொடுக்க தயங்கமாட்டேன் என்றார். மக்கள் ரத்தம் சிந்துவதை தடுப்பதை விட கருத்துசுதந்திரம் முக்கியமில்லை என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாக கூறி பேட்டி முடிவடைகிறது.

இப்போது சிக்கல் உங்களுக்கு புரிந்திருக்கும். முதலில் சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காக இந்திய அரசை விமர்சித்தவர், இறுதியில் இந்திய அரசின் நிலைப்பாட்டையே எடுத்து, சல்மான் ருஷ்டி தனது கருத்துக்களை திரும்ப பெற்றுகொள்ள வேண்டும். சல்மான் ருஷ்டிக்கான கருத்து சுதந்திரம் முக்கியமில்லை. அவருடைய கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பதால், ரத்தம் சிந்தப்படுமெனில் அவரது கருத்து சுதந்திரம் தடுக்க பட வேண்டும் என்ற நிலைப்பாடுக்கு வந்துவிடுகிறார். பேட்டி எடுத்தவருக்கு என் பாராட்டுகள்.

வன்முறை வெடிக்கும் என்ற அச்சுருத்தலை முன் நிறுத்தி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகள் வைக்கும்போது அதனை ஒப்புக்கொள்வதுதான் அந்த அமைப்புகளை பலமிழக்க வைக்கும் என்ற தலைகீழ் வாதத்தினை வைக்கிறார் மனுஷ்ய புத்திரன். தங்களது வன்முறை மிரட்டல் ஒப்புக்கொள்ளப்படும்போதெல்லாம் இந்த இஸ்லாமிய அமைப்புகள் மேலும் மேலும் பலமடைகின்றனவே தவிர பலமிழக்கின்றனவா? சரி, சல்மான் ருஷ்டியை உள்ளே விட்டால் வன்முறை வெடிக்கும் என்று இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுகின்றன. அவர்கள் யாருடைய ரத்தத்தை சிந்துவார்கள்? சொந்த முஸ்லீம்களின் ரத்ததையா அல்லது சுற்றியிருக்கும் இந்துக்களின் ரத்தத்தையா?

பெரியார், அம்பேத்கார் பற்றிய கேள்விக்கும் மென்று விழுங்குகிறார் மனுஷ்யபுத்திரன். அவர் எளியதாக சொல்லியிருக்கக் கூடிய பதிலை அவர் ஏன் சொல்லவில்லை என்ற காரணத்தையும் அலசலாம்.

பெரியார் அம்பேத்கார் தங்களது கடுமையான இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தபோது யாரும் அவர்கள் மீது வன்முறை தொடுக்கவில்லை. வன்முறை வெடிக்கும் என்று எந்த இந்து அமைப்பும் அறிவிக்கவில்லை. சொல்லப்போனால், இந்துக்களில் பெரும்பாலானவர்களே அவர்களின் ஆதரவாளர்களாகவும் இருந்தார்கள். இந்து மதத்தை பற்றிய விமர்சனத்தால் நாடெங்கும் கலவரம் நடக்கவில்லை. தலித்துகளில் தனது ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களோடு பௌத்தமதத்தை தழுவியபோது கூட இந்துக்கள் அவர்கள் மீது எந்த விதமான வன்முறை தாக்குதலையும் தொடுக்கவில்லை. இன்றைக்கும் கூட தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொள்ளும் எந்த இந்துவும் குடும்பத்தால் விலக்கி வைக்கப்படுவதில்லை. அதே போல தன்னை நாத்திகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு முஸ்லீம் அவருடைய குடும்பத்தாலும் சமூகத்தாலும் எப்படி நடத்தப்படுவார் என்பதற்கு மனுஷ்யபுத்திரன் உதாரணம் தரலாம்.

மனுஷ்ய புத்திரன் எளியதாக சொல்லியிருக்கக்கூடிய பதில், “இந்து மதத்தின் மீதான விமர்சனங்களுக்கு இந்துக்கள் எப்போதுமே வன்முறையை பதிலாக எடுக்கவில்லை. அவர்கள் எப்போதுமே விவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால் பெரியார் அம்பேத்கார் போன்றவர்களின் எழுத்துக்களை தடை செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் யாரும் தடை செய்ய கோரவில்லை” ஆனால் அவர் அதனை சொல்லவில்லை. ஏன்? அப்படி சொன்னால், இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் மீதான விமர்சனங்களை வன்முறை மூலமாகவே சந்திக்கிறார்கள். அவர்கள் விவாதங்களில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று ஒத்துகொள்வது போல. அந்த கேள்வியை உடனே பேட்டி எடுப்பவர் கேட்டிருப்பார். அதனால்தான் அந்த பதிலை மனுஷ்ய புத்திரன் சொல்லவில்லை.

இஸ்லாமியர்கள் எப்போதுமே தங்கள் மதத்தின் மீதான விமர்சனங்களை விவாதத்தின் மூலமாக சந்தித்ததில்லை. அதன் இன்றைய நிரூபணமாகவும் இருப்பது கடைய நல்லூரும், சவுதி அரேபியாவும்.

சமூக நல்லிணக்கம் என்ற பொய்மானை தேடுவதற்காக கருத்து சுதந்திரத்தை பலிகொடுக்கலாம் என்ற உயரிய மனுஷ்யபுத்திரனின் கருத்துக்கு எளிய பதில் இருக்கிறது.

நான் மனுஷ்ய புத்திரன் நடத்தும் உயிர்மை பத்திரிக்கை மத நல்லிணக்கத்தை குலைக்கிறது என்று கருதுகிறேன். அப்படி கருதும் ஒரு ரவுடி கும்பல் ஒன்று சேர்ந்து, உயிர்மையை தடை செய். இல்லையேல் வன்முறை வெடிக்கும் என்று அறிவித்தால், மனுஷ்ய புத்திரன் தனது பத்திரிக்கையை மூடிவிட்டு இதே மாதிரி பேசுவாரா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

உயிர்மை என்னுடைய மத நம்பிக்கையை பாதிக்கிறது, மத நல்லிணக்கத்தை கெடுக்கிறது என்று அதன் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். அது மட்டுமல்ல, இஸ்லாமிய கிறிஸ்துவ பத்திரிக்கைகள் எல்லாவற்றின் மீதும் அதே வகையில் வழக்கு தொடரலாம். அது சரியானது என்று மனுஷ்ய புத்திரன் கருதுவாரா?

^^

கடைய நல்லூர்.ஒர்க் தளத்தில்

http://kadayanallur.org
இந்த செய்தி இருக்கிறது. படித்து பாருங்கள்.

சுருக்கமாக விஷயம் இதுதான்.

மக்கட்டி துராப்ஷா என்ற மனிதர் தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமை விமர்சிக்கும் ஒரு பக்கத்தின் சுட்டியை கொடுத்திருக்கிறார். அதற்காக, அவர் மீது கடையநல்லூரில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், பொது ஜனங்கள் கோபம் கொண்டு அவரை விசாரணை செய்ய முடிவு செய்கிறார்கள். இஸ்லாமை விமர்சித்ததற்காக அவரை காபிர் என்று அறிவிக்கிறார்கள். இறுதியில் அவர் மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை மீண்டும் கலிமா சொல்லி ஏற்றுகொண்டிருக்கிறார்.

ஒரு சிலர் அவரை அங்கஹீனம் செய்யபோவதாக இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் அவரை காபிர் என்று ஆக்கியதால் அவரது மனைவி கட்டாய விவாகரத்து செய்யப்படும் படி நிர்பந்திக்கப்பட்டார் அதுவல்ல நான் சொல்வது.

அதில் உள்ள அதிகாரப்பூர்வ காகிதத்தை பாருங்கள். தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட காஜி அவர். ஆக தமிழ்நாடு அரசின் அதிகாரத்துடன் அவர் செயல்படுகிறார். இதே போல ஒரு இந்து குருக்கள் இந்து மதத்திலிருந்து ஒருவருக்கு விலக்கமும், அவரது மனைவி விவாகரத்து செய்யப்படுகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மனித உரிமை காவலர்கள், முக்கியமாக மனுஷ்ய புத்திரன் என்ன சொல்வார் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

%%%
ஹம்ஸா கஷ்காரி என்ற சவுதி அரேபிய ப்ளாக்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மிலாது நபி திருநாளன்று சில ட்விட்டுகளை செய்தார். இந்த அரபி ட்விட்டுகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு இவை “On your birthday, I will say that I have loved the rebel in you, that you’ve always been a source of inspiration to me, and that I do not like the halos of divinity around you. I shall not pray for you,” he wrote in one tweet.

“On your birthday, I find you wherever I turn. I will say that I have loved aspects of you, hated others, and could not understand many more,” he wrote in a second.

“On your birthday, I shall not bow to you. I shall not kiss your hand. Rather, I shall shake it as equals do, and smile at you as you smile at me. I shall speak to you as a friend, no more,” he concluded in a third.

http://www.theblaze.com/stories/saudi-bloggers-tweets-about-muhammad-has-some-calling-for-his-execution/

இதற்காக அவரது தலையை துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை சவுதி அரேபியாவில் பலமாக எழுந்தது. அதிர்ச்சி அடைந்த ஹம்ஸா உடனே தன் ட்விட்டுகளை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரினார். ஆனாலும், அவரது தலையை துண்டிக்க கோரிய குரல்கள் அடங்கவில்லை. இதனால், ஹம்ஸா கஷ்காரி நியூசிலாந்துக்கு ஓடி தஞ்சமடைய விரும்பினார். சவுதி அரேபியா அவரது பெயரில் ரெட் லெட்டர் நோட்டீஸை இண்டர்போல் அமைப்புக்கு கொடுத்து அவரை எங்கிருந்தாலும் கைது செய்யவேண்டும் என்று கோரியது. அவரது விமானம் மலேசியாவில் நின்றபோது, மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆமாம். இண்டர்போல் என்ற உலகளாவிய போலீஸ் அமைப்பு இஸ்லாமிய ஷரியாவின் நீளும் கையாக செயல்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்தில் பிறந்துவிட்ட மனிதர்கள் தங்களது குரல்வளைகளை தாங்களே நெரித்துகொள்ள வேண்டும் என்று மனுஷ்ய புத்திரன் கூறுகிறார். மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக கருத்துரிமை பற்றி பேசுபவர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தலாம் என்று கேட்கிறார்.

இஸ்லாம் ஒரு மதம்.

மதம் என்பது ஒரு கொள்கை.

(இந்து மதத்திலிருந்து வெளியேறியவர்கள் இந்து பயங்கரவாதிகளுக்கு பயப்படுகிறார்களா? இந்து ஜாதியிலிருந்து வெளியேறி மற்றொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டவர்கள் தங்கள் சொந்த ஜாதி பயங்கரவாதிகளுக்கு பயப்படுகிறார்களா? ஆனால், ஒரு ஜாதி என்பது ஓரளவு இன ரீதியானது. அது பொது பேச்சில் இழிவு படுத்தப்படும்போது அது இன ஒடுக்குமுறையாகிறது. அதற்கு எதிராக தலித்துகள் பொங்கி எழுவதோ வன்னியர்கள் பொங்கியெழுவதோ சரியானது. ஆனால், இஸ்லாம் இந்து மதம் கிறிஸ்துவம் ஆகியவை இன ரீதியானவை அல்ல. அவை மதங்கள். அவை ஒரு கொள்கையை அடிப்படையாக கொண்டவை. இந்த மதங்கள் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு போன்ற கொள்கை ரீதியானவை. அந்த கொள்கையை ஒப்புகொள்பவரே அதில் இருக்கலாம். திமுவிலிருந்தோ அல்லது அதிமுகவிலிருந்தோ கம்யூனிஸ்டு கட்சியிலிருந்தோ கொள்கை பிடிக்காமல் வெளியேறுபவரை கொல்வது போன்ற கொடுமையானதுதான் ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவரை கொல்வது)

விமர்சிக்கப்படவே முடியாத ஒரு கொள்கை என்று ஒன்றுமே இருக்க முடியாது. இஸ்லாம் என்ற கொள்கை மட்டுமே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்ற முஸ்லீம் தலைவர்களின் கோரிக்கைக்கு மனுஷ்ய புத்திரன் கூறும் வாதத்தை வைத்து உலகளாவிய நாடுகள் தலையாட்டுகின்றன. மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல்.. ஆமாம்.

அதற்காக இண்டர்போலை கூட ஷரியாவின் கரமாக ஆக்க தயாராகும்போது, தமிழ்நாடு அரசு மட்டுமே எப்படி தனியாக நிற்க முடியும்? அதனால்தான் தமிழ்நாடு அரசே, முஸ்லீம் குடும்பத்தில் பிறந்துவிட்ட ஒரு மனுஷரின் மன்னிப்பை ஏற்று அவர் காபிர் அல்ல, அவர் முஸ்லீம் என்று அறிவிக்கிறது. என்ன செய்வது? மத நல்லிணக்கம், ரத்தம் சிந்துதல்… இந்துத்துவா அமைப்புகளை ஒடுக்குதல்தானே மிக முக்கியம்?

இடதுசாரிகள் வெகுகாலத்துக்கு முன்னரே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் apologist ஆகிவிட்டார்கள் என்பது இன்று பலரும் வைக்கும் ஒரு விமர்சனம். நான் அதனையும் தாண்டி ஒரு விஷயத்தை கருதுகிறேன் இன்று பல ”சிறுபான்மையின”: அறிவுஜீவிகள் இந்துமதத்தையும் இந்துத்துவாவையும் திட்ட இடதுசாரி முகமூடியை அணிந்துகொள்கிறார்கள் என்பது நான் கண்டது. அ மார்க்ஸ், இன்குலாப், எஸ் வி ராஜதுரை வரிசையில் இன்று மனுஷ்யபுத்திரனையும் வைத்து பார்க்க ஆரம்பிக்கிறேன்

ஆனால் விஷயம் அவ்வளவு எளியதும் அல்ல. இதே பேட்டிக்கு ஒரு இடதுசாரி (இந்து என்று நினைக்கிறேன்) ஒருவர் ”இஸ்லாமியர் இதயங்களை ரணமாக்கிய மனுஷ்யபுத்திரன்..” என்று எழுதியிருக்கிறார். என்ன காரணம். அதே மேற்கண்ட பேட்டியின் முதல் பகுதியில் சல்மான் ருஷ்டியை இந்தியா வரவிடாமல் செய்த இந்திய அரசாங்கத்தை கண்டித்ததுதான் காரணம். தனக்கு பிடிக்கவில்லை என்பதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மனுஷ்யபுத்திரனை காட்டிகொடுக்கும் வேலை. நெருங்கி கேட்டால் நான் இந்து அல்ல நாத்திகன் என்று தைரியமாக சொல்லிகொள்வார்கள். முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நாத்திகர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் பயப்படுவது நிஜமானது. நாத்திகர்கள் இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரியாக காட்டிக்கொள்வது ஈஸியானது. இல்லையா? கடையநல்லூரில் செய்தது போலவா இந்து பயங்கரவாதிகள் செய்யப்போகிறார்கள்? அல்லது சவுதி அரேபியா செய்தது போல இந்து பார்ப்பன பயங்கரவாத இந்தியா இவர்களை இண்டர்போல் மூலம் தேடப்போகிறதா?

இஸ்லாம் ஒரு பிரச்னை என்று எனக்கு தோன்றவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமை தங்களுக்காக உபயோகப்படுத்திகொள்கிறார்கள். இஸ்லாமை யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற கருத்தை உலகம் முழுவதும் உறுதிப்படுத்துவன் மூலம் இந்த தலைவர்களுக்கு எதிராக எழும் எந்த குரலையும் “இஸ்லாமிய எதிர்ப்பு குரலாக” காட்டுவது எளிது. நம்பவும் வன்முறையில் இறங்கவும் ஆட்கள் இருக்கும்போது, எந்த ஒரு அரசியல் எதிர்ப்பையும் இஸ்லாமுக்கு எதிராக குரலாக காட்டுவது மிக மிக எளியது. அதனாலேயே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் மிக எளிதில் சர்வாதிகாரத்துக்கு இடம் கொடுக்கின்றன.

2005இல் ஒரு அறிவுஜீவி இதனை எழுதினார்

இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகயுமே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்தக்கூடியது என்பதை நான் பல அரங்குகளில் முன்வைத்திருக்கிரேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பத்தற்கோ, ஹிந்த்துத்வாவை எதிர்ப்பத்தற்கோ இஸ்லாமிய பயங்கரவாத்தை மறைமுகமாகவோ, ரகசியமாகவோ ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன். ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் நான் ஷாபானுவை ஆதரித்து எழுதிய கட்டுரைக்காக அடிப்படை வாதிகளால் மிரட்டப்பட்டேன். கவிஞர் ரசூலின் கவிதைத் தொகுப்பை அடிப்படை வாதிகள் எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அவரை ஆதரித்து நான் எழுதிய கட்டுரை என்னுடை ‘காத்திருந்த வேளையில்’ தொகுப்பில் இருக்கிறது.

எழுதியது மனுஷ்ய புத்திரன் 2005இல்

Series NavigationKalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamilசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54
author

சின்னக்கருப்பன்

Similar Posts

77 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    உண்மை நிலவரத்தை வெளிப்படையாக எழுதியுள்ளமைக்கு நன்றி. ஏனென்றால் அதற்கே இன்று துணிவு வேண்டியிருக் கிறது. ஆனால் இஸ்லாமிய மதம் வேறு இஸ்லாமிய மதத் தலைவர்கள் வேறு என்பதுபோல் சப்பபைக் கட்டுக் கட்டுவது எதற்காக? இஸ்லாமிய மதத் தலைவர்கள் இஸ்லாமிய மதத்தின் அடிப்படைகளான குரான், ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டுதலுக்கு ஏற்பவே எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்து வருகிறார்கள்.
    -மலர்மன்னன்

  2. Avatar
    Ramki says:

    இந்துக்கள் சாதியை அடியொற்றிய விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? சாதியை அடியொற்றிய விமர்சனம் சாத்தியமானதா?

  3. Avatar
    Ramki says:

    ஈ வெ ரா வை எதிர்த்து ஏது வன்முறை? அது தான் அவர் கையிலிருந்ததே!!

  4. Avatar
    னேம் says:

    கருத்துசுதந்திரம் என்பது அதனளவில் முக்கியமான அடிப்படை உரிமை என்பதை உரத்துச் சொல்ல தமிழகத்தில் உள்ள இடதுசாரிகளும் தயாராக இல்லை,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களும் தயாராக இல்லை.ஏனெனில் அவரவர் அரசியல் மற்றும் இன்ன பிற தேவைகளை சார்ந்தே அவர்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்.ரசூல் விவகாரத்தில் மனித உரிமை அமைப்புகள் உண்மை அறியும் குழுக்களை அனுப்பவில்லை,கடையநல்ல்லூருக்கும் அனுப்ப மாட்டார்கள்.ஏனென்றால் மனித உரிமை பெயரில் அரசியல் செய்பவர்களுக்கு உள்ள நோக்கம் மிகக்குறுகியது.
    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை படைப்பாளிகள் தங்களுடைய கருத்து சுதந்திரத்திற்கு சிக்கல் வரும் போது ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பார்கள் அல்லது ஹுசைன் போன்றவர்களை ஆதரித்து இந்த்துவ எதிர்ப்பு வேசம் கட்டுவார்கள். அரசு தனக்கு நெருக்கடி கொடுத்தால் அதை எதிர்க்க கருத்துரிமைக்கு ஆபத்து என்று குரல் எழுப்ப மனுஷ்யபுத்திரனுக்கு தெரியும்.அப்போது மட்டும் உலக அளவில் இவர்கள் தங்களுக்காக ஆதரவு திரட்ட முனைவார்கள். தமிழ்நாட்டில் மனுஷ்யபுத்திரன்,அ.மார்க்ஸ்,எஸ்.வி.ராஜதுரை,சுகுமாரன் உட்பட பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.ராஜதுரை அ.ராசாவுக்கு ஆதரவாக எழுதுவார்.அ.மார்க்ஸ் ‘உண்மை’ அறிய காஷ்மீருக்கு போவார்,தக்கலைக்கு வரவே மாட்டார்.
    சுகுமாரன் போன்றவர்கள் மனித உரிமை பேசிக்கொண்டே அதற்கு எதிராக செயல்படும் மதவாதிகளுக்கு மேடை அமைத்து கொடுப்பார்கள்.

  5. Avatar
    S. Krishnamoorthy says:

    சொல்லத்தான் நினைக்கிறோம். பயமாக இருக்கிறது.  ஆனால் அச்சமின்றி நேர்மை, சத்தியம் துணை நிற்க உண்மையைச் சொன்ன சின்னக்கருப்பனுக்கு நன்றி.
    அ. நாமதேயன்

  6. Avatar
    மலர்மன்னன் says:

    //இந்துக்கள் சாதியை அடியொற்றிய விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? சாதியை அடியொற்றிய விமர்சனம் சாத்தியமானதா? -ஸ்ரீ ராம்கி//
    சரியான கேள்வி. பிராமணர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவர்களை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் மட்டுமல்ல கேலி, கிண்டல் எதுவும் செய்யலாம்!ஹிந்துக்களிடம் உள்ள குறைபாடு இதுவே. ஹிந்து என்பதை விட இன்ன சாதி என்று தன்னை உணர்பவர்கள்தான் கூடுதலாக இருக்கிறர்கள். ஹிந்துக்களை ஹிந்து என உணர்த்தி ஒன்று திரட்டச் சிறிது தீவிரமாகப் பேசினால உடனே ஹிந்து தர்மத்தையும் ஆபிரகாமிய மதமாக்கப் பார்ப்பதாகக் குறை கூறத் தொடங்கிவிடுகிறார்கள்! ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஐயரும் அய்யங்காரும் முதலியாரும் பிள்ளைமாரும் நாடார்களும் செட்டியார்களும், வன்னியரும் பள்ளரும் பறையரும்தானே இருக்கிறார்கள் என்று எகத்தாளமாகக் கேட்போருக்கு என்ன பதில் சொல்வது என்று அனைத்து சாதியினரும் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் கள்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      இக்கருத்தை நீட்டி ஒரு கட்டுரை வரையுங்கள் திண்ணையில் மலர்மன்னன். நீங்கள் சாதி, பிராமணர்,. ஹிந்துமதம் இவைகளுக்கெல்லாம் என்ன பொருட்கள் தருகிறீர்கள் என்று பார்க்கலாம். ஏன் உங்கள் கருத்துக்கள் எதிர்க்கப்படுகின்றன என்றும் பார்க்கலாம்.

    2. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      உங்களைப் பிராமணர் என்றழைத்துக்கொண்டு, மற்றவர்கள் சாதியுணர்வோடு இருந்து இந்துமத்தத்தைப்பிரித்துக்கொண்டிருக்கிறார்களே என்பது ஹிப்பாக்ரசி.

  7. Avatar
    sathyanandhan says:

    Dear Chinna Karuppan, First of all you and Thinnai are to be congratulated. Your detailed article is sharp and deep as well. Thinnai is congratulated because your article will never see the light of the day had you sent it to any of the small/big magazines. Unknowingly you have selected Jayamohan and Manushya Putran who were fortunate to have SundaraRamasamy as their mentor. But both of them are very progressive. So they have progressed a great deal. Manushya Putran is faster and open. Jayamohan is not far behind but he feels a little bit delicate. Particularly i noted Jayamohan is in the race to establish himself as a great Tamil intellectual and crusader when he participated in the Koodangulam protest. In Tamil Nadu these two intellectuals can be understood. After all how long one can dream that his creativity and creations can speak for themselves? Taking sides, switching loyalties, posing as a revolutionary etc are to be done as quickly to establish one’s image loftier than the rival’s. I wish them both all the best. Please come up with more such penetrating penning Chinna Karuppan. Thanks. Sathyanandhan

  8. Avatar
    களிமிகு கணபதி says:

    //இஸ்லாம் ஒரு பிரச்னை என்று எனக்கு தோன்றவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் இஸ்லாமை தங்களுக்காக உபயோகப்படுத்திகொள்கிறார்கள். //

    True. If Christianity could get separated from government, paving way for liberalism, why not Islam ?

    Islam is now in its own medieval period. The same God who defeated the monopoly of the Church will defeat the monopoly of Masjids.

    That God is named as “Science & Technology”.

    .

  9. Avatar
    களிமிகு கணபதி says:

    மனுஷ்ய புத்திரன் எப்போதும் மதராஸா புத்திரன்தான்.

    கம்யுனிசக் கோஷங்கள் எனும் ‘மை’யை ஜிகாதியத்தின் மேல் பூசி இனவெறி இஸ்லாமை ‘உயிர்’ப்புடன் வைக்கும் பணிகளைச் செய்யத்தான் “உயிர்””மை”.

    .

  10. Avatar
    Bala says:

    1. இந்திய இறையாண்மை என்னும் கொடுங்கோன்மைக்கு எதிரான கருத்துகளைத் திண்ணை வெளியிடுவதில்லை. கருத்துரிமையின் எல்லை திண்ணைக்கும் உண்டு, திண்ணையையும், சின்னக்கருப்பனைப் புகழும் ஆட்களுக்கும் உண்டு.
    2. நாடு, மொழி, இனம், மதம் போன்ற அனைத்தின் பேரிலும் கருத்துரிமை நசுக்கப்பட்டே வருகிறது. திண்ணை விதிவிலக்கல்ல.

    1. Avatar
      Sathyanandhan says:

      Mr.Bala respecting law of land and joining with the Government to save the mother land is correctly placed. THE SICKENING SCENARIO IN TAMIL NADU IS THE UNWRITTEN LAW OF WHAT TO TALK WHO SHOULD TALK AND WHO HAS THE PATENT TO TALK WHAT. So the praise for the writer and the web site is in no way undue. Can you please just tell all of us the name of one magazine or platform where this unwritten law is transgressed? Sathyanandhan

  11. Avatar
    Viswamitra says:

    துணிவான ஒரு கட்டுரை. மனுஷ்யபுத்திரனின் பத்திரிகை மறைமுகமாகவும் பல சமயங்களில் நேரடியாகவும் ஊழல், இஸ்லாமிய பயங்கரவாதம் ஆகியவற்றை ஆதரிக்கும் ஒரு அடிப்படைவாதப் பத்திரிகையாகவே விளங்குகிறது. இவரைப் போன்ற ஆட்களைத்தான் தமிழ் சமூகம் அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டாடுகிறது.

    இஸ்லாமில் பிரச்சினை ஏதும் இல்லை அதைப் பயன் படுத்தும் தலைவர்களிடத்தில்தான் பிரச்சினை என்ற வாதம் தவறான வாதமாகும். இஸ்லாம் அடி முதல் நுனி வரை இந்த உலகின் அமைதிக்கே கேடு விளைவிக்கும் ஒரு மதம் தான். இந்த உலகம் நாளை அழியுமானால் அது இஸ்லாமியப் பயங்கரவாதத்தினால் மட்டுமே இருக்கும் அதற்கான அத்தனை அடிப்படைகளையும் அந்த இறையில் தன்னுள் அடிப்படையிலேயே கொண்டுள்ள ஒரு மதமாகும்.

  12. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    முதலில் தன் வாழ்வுக்கு எந்த குந்தகமும் நேர்ந்து விடக்கூடாது. ஹெச் ஜி ரசூல் கேஸ் முன்னால் எச்சரிக்கை தருகிறதை அலட்சியம் செய்ய முடியாது. காஜிகளிடம் முல்லாக்களிடம் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்கள்கோபத்துக்கு ஆளாகக் கூடாது. அதே சமயம் சுற்றியிருக்கும் ஹிந்து எழுத்தாலர்களின் முன் தன்னை கருத்து சுதந்திரம் பேணுபவனாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் வாயைத் திறக்கும் முன் ஒரு சொல் எழுதும் முன் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த அவஸ்தையெல்லாம் சின்ன கருப்பன்யுக்கும் மலர் மன்னனுக்கும் களிமிகு கணபதிக்கும் என்ன தெரியும்? முந்திய தலைமுறை போலவா? இப்போதெல்லம் முஸ்லீமாகப் பிறந்து விட்டவனுக்கு ஒவ்வொரு கணமும் வாழ்வதும் அதே சமயம் சுய சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்வதும் எவ்வளவு அவஸ்தைஎன்பது இவர்களுக்கு என்ன தெரியும்? சும்மாவா, நான் மனுஷ்யபுத்திரன் தான் வேறு எந்த புத்திரனும் இல்லை என்று காட்டிக்கொள்வது எவ்வலவு கஷ்டம்? திண்ணையில் எழுதினால் போதுமா? வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்?12

    1. Avatar
      Sathyanandhan says:

      Mr.Ve.Sa.’s comparing Rasool with Manushya Puthran is not apt in the sense that the latter has moved to chennai and if i am correct he is not identifying himself with other fellow muslim people. The issue is when a writer goes beyond his works and poses as a great crusader the motives are political only. How Mr.Ve.Sa is diluting this as a survival issue? Sathyanandhan

    2. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      சாமிநாதன் எழுதுவ்தைப்பார்த்தால் மனுஷய புத்திரன் என்ற ஆள் முசுலீம் போலத் தெரிகிறது. உண்மையா ?

  13. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ வெ.சா. சொல்வது சரிதான். தனிப்பட்ட சந்திப்புகளில் என்னிடம் பேசுகையில் கருத்து வேறுபாடே இல்லாததுபோல் பேசும் சில முகமதிய எழுத்தாளர்களும் என்னுடன் தொடர்பு கொள்ள விழையும் முகமதிய எழுத்தாளர்களும் இருக்கிறார் கள்தான். பெயரை வெளியிடுவது அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கலாம். ஆனால் இவர்களில் மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டுகிறவர்களும்கூட இருக்கிறார் கள். இவர்களை அடையாளம் காண்பது சிரமம். விழுங்கவும் மாட்டாமல் உமிழவும் முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களின் நிலையை வாழ்ந்து பார்க்கிற விஷப் பரீட்சை வேண்டுமா என்ன? மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு ஸ்திரமான தொழில் அமைய உதவியவர் சுஜாதாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுடச்சுட விற்கக் கூடிய அவரது புத்தகங்களை வெளியிடும் வாய்ப்பைக் கொடுத்துத் தூக்கிவிட்டாராம். அந்த சுஜாதா ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகு சமாசாரத்தை எழுதி முகமதியரின் கடும் எதிர்ப்புக்கு இலக்கானபோது மனுஷ்யபுத்திரன் அவர் பக்கம் நிற்கமுன்வந்தாரா எனபதை அறியேன்.
    -மலர்மன்னன்

  14. Avatar
    Bala says:

    சத்தியானந்தன் என் கருத்துக்கு உடன்படுகிறாரா அல்லது முரணபடுகிறாரா என்பது எனக்குப் பிடிபடவில்லை. தமிழ்நாட்டில் பேச்சுரிமை இல்லை என்றால் (இல்லை என்பதுதான் என் கருத்து) தவறு எங்கே இருக்கிறது? மக்களிடமா? ஆட்சியாளர்களிடமா? அல்லது `அனைவருககும் கருத்துச் சுதந்திரம் உண்டு` என்னும் தன் நாட்டின் சட்டத்தைக் கட்டிக்காக்க இயலாத மைய அரசிடமா?

  15. Avatar
    punai peyaril says:

    பாலா தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெ, ராமகோபாலன்,சோ, தா.பாண்டியன்,விஜய்காந்த், சரத்குமார், என்று யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க பேச்சு சுதந்திரம் உண்டு. ஆனால், சில சிறுபான்மையினரை மட்டும் நீங்கள் ரோட்டில் பார்த்து போங்க என்று கூட சொல்ல முடியாது… அதற்கு காரணம் யார்…?

  16. Avatar
    Bala says:

    சட்டத்தை நிலை நாட்ட இயலாத மைய அரசின் கையாலாகாத்தனம்.

  17. Avatar
    Bala says:

    ஊழல் நாடுகளின் பட்டியலில் மோசமான இடத்தில் இருப்பது போலவே பத்திரிகைச் சுதந்திர நாடுகளின் வரிசையிலும் இந்தியா மோசமான நிலையில்தான் உள்ளது.
    காண்க
    http://en.rsf.org/press-freedom-index-2011-2012,1043.html

  18. Avatar
    மலர்மன்னன் says:

    //மம, எங்கே போனீர்கள், ரொம்ப நாளாச்சு.-punai peyaril//

    நினைவில் வைத்திருக்கிறீர்களா? எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். இல்லாவிட்டால் வயிற்றுக்கு ஈவது எப்படி? இப்போது கிலாஃபத் இயக்கம் பற்றி எழுதும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறேன். நிறையப் புத்தகங்கள் வாங்கிவிட்டேன். ஆனால் இன்னமும் விவரங்கள் தேவைப்படுகின்றன. மேலும் புத்தகங்கள் வாங்கவும் நூலகங்கள் சென்று பழைய ஆவணங்களை நகல் எடுக்கவும் நிதிப் பற்றாக்குறை பெருந் தடையாக உள்ளது! நம்ம சென்னை என்ற அழகான இதழில் சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு கிறிஸ்தவ மதப் பிரசாரகர் டி ஜி எஸ் தினகரன் பெயரைச் சூட்டியிருப்பதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உலகளாவிய வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மறு பிரசுரம் வேண்டி திண்ணைக்கு அனுபியுள்ளேன். பிரசுரிக்கத் தகுந்தது என திண்ணை கருதினால் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கலாம்.
    -மலர்மன்னன்

  19. Avatar
    punai peyaril says:

    உங்களின் புது புத்தக முயற்சி பற்றியும் அதற்கு எதிர்பார்க்கும் செலவு விவரங்கள் பற்றியும் திண்ணையில் எழுதினால் நிச்சயம் வழி பிறக்கும்… ஆழ்ந்த அனுபவங்கள் வெளிப்படுத்தும் புத்தகங்கள் காலமெல்லாம் நிற்கும் ஆசான்கள்…

  20. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ புனைபெயரிலி,
    தாங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. தங்களின் ஆலோசனையை ஏற்க இயலாதவனாய் இருக்கிறேன். ஏற்கனவே என்மீது சுமத்தப்பட்டுள்ள பழிகள் போதாதா?
    மேலும் நாம் திண்ணையின் இடத்தைத் தனிப்பட்ட உரையாடல்களுக்குப் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்காது.
    -மலர்மன்னன்

  21. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    இசுலாம, இசுலாமியர்கள், கிருத்துவம், கிருத்துவர்கள் பற்றி ஒரு பதிவெனறால், தமிழ்.இந்து காம் ஆஸ்தான எழுத்தாளர்கள் அணிஅணியாக கருத்துகளைப்போட வருகிறார்களே? வெ.சா, ம.ம. களிமிகு, விசுவாமித்திரா போன்றவர்கள் வேறுகட்டுரைகளிலும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  22. Avatar
    punai peyaril says:

    ஏனென்றால் தமிழ் ஹிந்து .காம் எழுத்தாளர்கள் கலாச்சாரத்தை காவு கொடுத்து காசிற்கு காட்டி கொடுப்பவர்களல்ல…

      1. Avatar
        punai peyaril says:

        புரியலையா.. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீகளா…

  23. Avatar
    punai peyaril says:

    சரியாக சொல்லவேண்டுமென்றால், உங்களுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மிருகம், எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தான் ஹிந்து மதம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      விசேஷமான இந்துமதமாக இருக்கிற்தே ! மிருகத்தை உறங்கல்லவா வைத்துக்கொண்டிருக்கிறது உங்களுள் !! எப்போது எழுப்பி எப்போது அதை விரட்டும் உங்கள் இந்து, சாரி, ஹிந்து மதம் ?

      ‘எங்கள் இந்துமதம்’ என்பது ரிலிஜியஸ் பிகாட்ரி. இந்துமதம் உங்கள் முப்பாட்டன் வீட்டுச்சொத்தன்று. ‘எங்கள்’ என்ற சொல்லே வரக்கூடாது ஆன்மிக விசயத்தில். இதை நான் அடிக்கடி பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். A true Hindu is not a religious bigot. It is better you quit the religion and adopt some thing else and there you can feel free to use ‘engkal’

  24. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோமே என்று பார்த்தேன்.
    நான் எழுதுவது ஒவ்வொரு வாரமும் திண்ணையில் இடம்பெறுகிறது. அப்படி இருக்க நான் வேறு விஷயங்களும் எழுதவேண்டும் என்று உபதேசம் செய்யும் காவ்யா (இது ஆணா, பெண்ணா, ஹிந்துவா, முஸ்லீமா என்று கவலைப்படவில்லை. என்னவாக இருந்தால் என்ன? தனக்கு ருசியான இரை தேடும் ) கழுகு ஆகாயத்தில் எவ்வளவு பரந்த வட்டம் இட்டாலும் தான் குத்திக் குதறும் இரை கிடைத்தால் மாத்திரமே கீழ்நோக்கிப் பாய்வது போல, தன் இரைக்காகக் காத்திருக்கும் காவ்யா கண்களுக்கு மர்ற எதுவும் தென்படுவதில்லை. தன் இரையைத் தவிர வேறு எதுவும் உலகத்தில் இல்லை என்ற பட்டை போட்ட பார்வையைக் களைந்தால் நல்லது.

    கடைசியில் ஒரு வார்த்தை: மனுஷ்ய புத்திரன் இந்துவா முஸ்லீமா என்ற விசாரணையைக் கைவிட்டு, அவரது கருத்துக்களை, எழுத்துக்களை, செயல்களை மாத்திரம் சர்ச்சித்தால் போதும். அதோடு 20 வருடங்களாக கவிதை, கட்டுரை, பத்திரிகை தளம், புத்தக பிரசுரம் என்று செயல்பட்டு செல்வாக்கு பெற்றவரை, தமிழ் பத்திரிகை இலக்கிய உலகம் அறிந்தவரை மனுஷ்ய புத்திரன் என்று சொன்னால் போதும். மனுஷ்யு புத்திரன் என்ற ஆள் என்று குறிப்பிடுவது ரொம்பவும் கீழ்த்தரம்.

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      ங்கள் திண்ணையில் எழுதிக்கொண்டிருப்பது தொடர் சுயசரிதை. நான் சொல்வது பிறர் எழுதும் கட்டுரைகளில் உங்கள் எதிர்கருத்துக்கள். அல்லது பின்னூட்டங்கள். அப்படிப்பார்க்கும்போது எங்கு இசுலாம், கிருத்துவம் விமர்சிக்கப்படுகிறதோ, எங்கு உங்கள் ஜாதியினர் விமர்சிக்கப்படுகிறதோ அங்குதான் உங்கள் கருத்துக்கள் போடப்படுகின்றன. தவறில்லை. தெரிந்ததைச் சொல்கிறேன். அவ்வள்வுதான்.

      எல்லாருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. எனவே மனுஷ்ய புத்திரன் (என்ன வேடிக்கையான பெயரிது) என்பவர் ஆணா, பெண்ணா, இசுலாமியரா, கிருத்துவரா, பர்ர்ப்ப்னரா, பார்ப்பனரல்லாதாரா என்பனவெல்லாம் எனக்குத் தெரியாது. உங்கள் பின்னூட்டத்தைப்படித்த போது அவர் இசுலாமியரோ எனத் தோன்றுகிற்து. அவ்வளவுதான்.

      எழுத்தாளர்களும் நம்மைப்போல சம மனிதர்கள்தான். அவர்களுக்கு கட அவுட் பாலாபிசேகம் பண்ணத்தேவையில்லை.
      நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று திண்ணையைப்படிக்க ஆரம்பித்த (ஓராண்டாக) பிறகுதான் தெரியவந்தது. என் தமிழ் இலக்கிய பரிச்சயம் வெகு இளமையானது.

  25. Avatar
    மலர்மன்னன் says:

    கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கலை இலக்கிய வெளிகளில் ஒரு மாபெரும் ஆக்க பூர்வமான சக்தியாகத் தன்னந் தனியே உரத்துக் குரல் கொடுத்துவரும் வியக்தி ஸ்ரீ வெங்கட் சாமிநாதன். அவரது ஆளுமை அவருடன் கருத்து வேறுபாடு கொள்வோரையும் தலை வணங்கி மதிக்கச் செய்வது. தமிழ் வாசகனின் ரசனையைத் தமது எழுத்துகளால் இடை விடாது உயர்த்தி வந்தவர், அவர். தற்காலத் தமிழ்க் கலை இலக்கியப் பரிச்சயம் சிறிதும் இல்லாதவர்கள் வெ. சா.வின் எழுத்தை விமர்சிப்பதும், எதற்கெல்லாம் அவர் பின்னூட்டம் இட வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை கூறுவதும் தமிழ்த் தளத்தில் மட்டுமே சாத்தியமாகும். ஹிந்தி, வங்காளி, மலையாள கன்னட தளங்களில் என்றால் தற்கால கலை இலக்கியப் போக்கைப் பற்றி ஏதும் அறியாமலே விமர்சனம் செய்ய முன்வரும் அரை குறையே, அதிகப் பிரசங்கியே முதலில் அதெல்லாம் ஓரளவாவது தெரிந்துகொண்டு அதன் பிறகு பேச வா என்று விரட்டி விடுவார்கள்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      “உடுக்கையிழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்
      களைவதாம் நட்பு”

      வள்ளுவர் சும்மாவா சொன்னாரு என்பதை மேலே காணும் பின்னூட்டம் குறிப்பிடுகிறது.

      கம்பரை நான் படித்ததில்லை. மணிமேகலையையோ சிலப்பதிகாரத்தையோ படித்ததில்லை. இதுபோன்ற பல காப்பியங்களும் இலக்கிய படைப்புக்களையும் நான் படித்த்தில்லை. என்னைப்போல்வே பலரும் இங்கே இருப்பார்கள். வாழ்க்கை இலக்கியம் படைக்க படிக்க என்று போவதில்லை. உண்டி, இருப்பிடம் கிடைத்தவுடந்தான் இலக்கியம். இப்படித்தான் பாமரர்கள் தமிழகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுள் ஒருவரிடம் போய், ‘கம்பர் ஒரு பெரும் காவியத்தை அழ்கு தமிழில் எழுதி மங்காப்புகழையடந்தார்’ என்று சொல்லும்போது, ஆம் அப்படியேயென்று சொல்வார். பாரதியார் மாபெரும் கவிஞரென்றாலோ, பாரதிதாசன் மாபெரும் கவிஞரென்றாலோ, வள்ளுவர் பெரிய இலக்கிய ஞானியென்றாலோ, ஆம் அப்படியேன்று சொல்வார். அப்படிச்சொல்வோர்: இக்கவிஞர்களைப்படித்தோரில்லை. கேள்விஞானமே.

      அதுபோலவே இன்றைய இலக்கிய வாதிகள் இருக்கவேண்டும். ஒருவேளை அந்தப்பாமரன் அவர்கள் நூலைப்படித்தாலும் ஆம் அவர்கள் சொலவது சரியே என்று உணரும்படி அவ்வெழுத்துக்கள் திகழவேண்டும்.. இதுதான் இலக்கியம்.

      மாறாக வெ.சா என்று சொல்லிப்பாருங்கள். எத்தனை பேருக்குத் தெரியும்.? அவர் ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்குத்தான் எழுதுகிறாரென்றும். எனவே அவரின் எழுத்துக்கள் எல்லா மக்களையும் சென்றடையவில்லையென்பதுமே அவரின்மேல் வைக்கப்படும் விமர்சன்ம். மற்றொரு விமர்சனம் அவர் எழுத்துக்களில் பார்ப்பனச்சார்பு உள்ளது. அக்ரஹாரத்தைத் தாண்டி அவர் சிந்தனை நகரமறுக்கிறது. இதுவே அவரின் எழுத்துக்களைப் பரவலாகப்போய்ச் சேர்வதைத் தடுக்கிறது. எனவே மலர் மன்னர் போன்ற அவர் ஜாதிக்காரகள் அவரின் கொ.ப.செவாக திகழ்கிறார். ஒருவன் எழுத்தே அவன் பேர் சொல்லும். மலர் மன்னர் மெனக்கிடத்தேவையில்லை..

      இதை உள்வைத்தே நான் எழுதினேன்: அதற்காக எவரும் அதிகப்பிரசங்கி, அரைகுறை என்றெல்லாம் சொல்ல மாட்டார்..

      I wd suggest that Malarmannan may approach Jeyalalitha and make Ve Sa’s essays a non detailed study for school or college children. Many writers became famous through this route. Or, ask Rajni Kanth who does not know Tamil, let alone Tamil lit, to preside over a function to release Ve Sa’s creative output. Ve Sa will become overnight.

    2. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      Seniority does not decide the worth of a writer. Neither how much he wrote. Only his creations will. And, quality, not quantity, will matter.

      Take the e.g the Sahitya Academy winning author of Kavalkottam Mr Venkatesan. He is in his 30s only and his books are only a few.

  26. Avatar
    மலர்மன்னன் says:

    //சரியாகச் சொல்லவேண்டுமென்றால், உங்களுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மிருகம், எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தான் ஹிந்து மதம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது…punai peyaril //
    இதில் எங்கள் ஹிந்து மதம் என்று எங்கே சொல்லப்பட்டிருக் கிறது? ஒருவர் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி அதற்கு நீள நீளமாக பதில் சொல்வது திராவிட இயக்க சம்பிரதாயம் அல்லவா?
    நான் சினிமா பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது டிவியில் ஏதேனும் காட்சிகளைப் பார்த்துவிடும்படி ஆகிவிடும். அப்படித்தான் வடிவேலு செமத்தியாக அடிவாங்கிக் கொண்டு திருப்பி அடிக்காததற்குக் காரணம் எவ்வளவு அடி வங்கினாலும் தாங்கிக்கொள்கிறான் ரொம்ப நல்லவண்டான்னு சொன்னார்கள் அதனாலதான் திருப்பி அடிக்கவில்லை என்று சொல்வார். ஹிந்துக்களும் அப்படியே இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும்! அப்போதுதானே அடித்துக்கொண்டே இருக்கலாம்!ஹிந்து மதம் ஸாத்விக மதம். அதனால் யார் என்ன செய்தாலும் எருமை மாட்டின்மேல் மழை பெய்வதுபோல ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து கொண்டிருப் பதுதான் ஹிந்துவின் லட்சணம் என்று சொல்கிற அடாவடியை அனுமதிக்க முடியாது.
    -மலர்மன்னன்
    Reply

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      இதில் எங்கள் ஹிந்து மதம் என்று எங்கே சொல்லப்பட்டிருக் கிறது? ஒருவர் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி அதற்கு நீள நீளமாக பதில் சொல்வது திராவிட இயக்க சம்பிரதாயம் அல்லவா//

      திராவிட இயக்கச் சம்பிரதாயத்தின் பிதாமகன்களின் ஒருவரோடு (அண்ணாவோடு) ஒன்றாக ஊர் ஊராகச்சுற்றினேன் என்றெல்லாம் அடிக்கடி திண்ணையில் பெருமைப்பட்டுக்கொள்ளும் மலர் மன்னன திராவிட இயக்கத்திலிருந்த வந்தவரா, இல்லை திராவிட இயக்கம் தோன்றி அதன் பிதாமகன்கள் மறைந்த வெகு ஆண்டுகளுக்குப் பிறந்த எனக்கு திராவிட இயக்கமும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது. இனி படிக்கலாமென்று இருக்கிறேன். அண்ணா போடா போடா இந்து மதத்தை? அந்த ஆளுடன் ஊர் சுற்றி இந்த ஆள் நமக்கு இந்துமதத்தைப் பற்றி சொல்ல வருகிறார். என்ன வேடிக்கை.

      மலர் மன்னன் உணர்ச்சிவசப்பட்டு என்ன பலனுமில்லை. எங்களுக்குச் சொன்னது ஹிந்து மதமென்றால், பிறருக்கு அது வேறேயாச் சொன்னது?

      ஹிந்துக்களாகிய நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாதென்றால், ஆரை அடிக்க கிளம்பியிருக்கிறீர்கள்? அதைச்சொல்லுங்கள். கிருத்துவர்களையா ? இசுலாமியர்களையா ?

      வன்முறை இந்துமத்தத்தை வளர்க்கும் என்பது உங்கள் எண்ணம். உண்மைய்தான். ஆனால் அப்படி வளர்ந்த இந்துமதம் முன்னோர்கள் வகுத்த மதமாக இருக்காது.

      உங்களுக்கும் உங்கள் கூட்டத்துக்கும் ஒரு இந்து மதம் இருக்கிறது. அதை இந்தியாவில் வாழும் கோடானுகோடி இந்துக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற கற்பனையில் மிதக்கவேண்டாம்.

      எங்கள் இநது மதம் வன்முறையை என்றுமே அனுமதிக்காது. நாங்களும் இந்து. நீங்களும் இந்து. வன்முறையை விரும்பா இந்து எவனோ அவனோ உண்மையான இந்து. நீங்கள் இந்து என்ற போர்வையில் உலாவரும் நாஸ்திகள்.

      கிடக்கட்டும். உங்களுக்கு ஏன் தமிழின் மீது இவ்வளவு வெறுப்பு? வியக்தி என்ற சொல் எந்த மொழி? அதை ஏன் வெ.சாவுக்கு பயன்படுத்துகிறீர்கள் ? திரு எனற சொல் ஏன் உங்கள் வயிற்றில் புளியக்கரைக்கிறது? அதை பயன்படுத்தவே மறுக்கிறீஈகளே. திருவாய்மொழிதான் நம்மாழ்வார் பாடினார். அதைக்கூட ஸ்ரீவாய்மொழியென்பீர்களோ ? ஏன் பிராமணர் என்று சொல்லிக்கொண்டு மத்தவாளுக்கு சாதியிருக்கக்கூடதென்கிறேள் சுவாமி?

      1. Avatar
        paandiyan says:

        தமிழின் மீது இவ்வளவு வெறுப்பு? yes. Tamil oru Kattumirandi paasai. just a business language for the people from 1960 onwards..

  27. Avatar
    மலர்மன்னன் says:

    பிறர் சொல் கேட்டு ஒஹோ என்று ஒப்புகொண்டு போகும் பாமரர் சபை நடுவே நெட்டைப் பனைமரமாய் நின்று விமர்சனம் செய்வதோ ஆலோசனை சொல்வதோ இல்லை. தம் தகுதி அறிந்து வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருப்பதுதான் வழக்கம். வாயைத் திறந்தால் யோக்கியதாம்சம் அம்பலமாகிவிடுமல்லவா? எழுத்து ஒரு வியாபாரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிற மனப் போக்கிற்கு என்ன சொன்னால் மூளையில் ஏறும்? சரி இப்படியும் சில அரை வேக்காடுகள் என்று சகித்துக் கொண்டு போக வேண்டியதுதான்! அவையில் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தாலாவது புத்திசாலி என்கிற அபிப்ராயத்தை உண்டுபண்ணலாம். வாயைத் திறந்து தொலைத்துத் தனது அறியாமையைத் தானே வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொள்ள வேண்டுமா என்ன?
    -மலர்மன்னன்

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      மலர்மன்னன்!

      இது இலக்கிய சர்ச்சை. எது இலக்கியம் ? எவருக்காக படைபபுக்கள்? எவர் இலக்கியவாதி? எனப்னவெல்லாம் இலக்கிய் தியரிகள். அதற்கென தனியாக கட்டுரை வரையுங்கள். பேசுவோம். இப்போ வெ.சாவை விட்டுவிடுங்கள். அவர் நூல்களில் சத்து இருந்தால் அவை படிக்கப்ப்டும்; பேசப்படும். நீங்கள் ஏன் இவ்வள்வு தூரம் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்?

      ஏற்கனவே ஒரு விமர்சனம் திண்ணையில் சமீபத்தில் எழுதியிருக்கிறீர்கள். அத சுந்தர ராமசாமியின் பாரியாளில் சுயசரிதை. அவங்க் உங்களுக்கு உறவு. எனவே விமர்சனம் பாசிட்டிவாக.

      அதைப்போல இப்படி வெ சா வைப்பற்றி உசர்த்தூக்கி வைத்தெழுதினால் கடைக்காரனே தன் பொருளை விளம்பரம் பண்ணின மாதிரி. சந்தேகப்படுவார்கள். சரியா?

      மாசித்திருவிழா ஜோரா போய்க்கிட்டிருக்கு. வாங்க மீனாட்சியம்மன் கோயிலுக்கு.

      1. Avatar
        punai peyaril says:

        அப்பா அப்பா இப்படி ஒரு துவேஷ சிந்தனை மட்டுமே மனதாக இருக்க முடியுமா…? வெசா-வின் அனுபவத்திற்கு முன் காவ்யாவின் பிதற்றல்கள் புறந்தள்ளப்படும்…

        1. Avatar
          Kavya says:

          அக்ரஹாரத்து அனுபவங்கள். அவற்றைக்குறை சொல்லவில்லை யான். ஏனெனில் அவற்றிலிருந்தும் அழகிய இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. எ.கா. அநுத்தமா, ஜோதிர்லதா கிரிஜா, அனுராதா ரமணன், குயில் ராஜேஸ்வரி, திருவல்லிக்கேணி எழுத்தாளி தி கிரேட் கோதை நாயகி. இவர்கள் எழுதிய நாவல்கள் அக்ரஹாரத்து அடுப்பங்கரைக்கதைகள் எனலாம். அநுத்தமாவின் கேட்டவ்ரம் திருக்குறுங்குடி விழாவைப்பற்றியது. What a brilliant novel மக்கா!

          ஆனால் இவர்கள் பெண்கள். இவர்கள் வாழ்க்கைமுறை பிறமக்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையின் நேரடியாகப்பார்த்தறிய தடை செய்தது. எனவே நான் அவர்களை இருப்பதை வைத்து சிறக்கச்செய்தார்கள் எனலாம்.

          இருப்பதை வைத்து சிறக்கச்செயதாரா இவர் என்பதே கேள்வி. மேலும். இவர் ஆண்.

          வயதான எல்லாருக்குமே அனுபவங்கள் உண்டு. அந்த அனுபவம் அவருக்கு என்ன சொன்னது? அதை அவர் நமக்கு எப்படி சொன்னார்?

          “நான் வாலிப வயதில் என் சிற்றூரில் இருந்த போது, தபால் காரன் என்னைச்சாமி சாமியென்று கூப்பிடுவான். என் முதல் வேலைக்கான கடிதம் தபாலில் வந்தது. அய்யகோ. இப்போது என்னைச்சாமியென்று கூப்பிட தபால்காரன் இல்லையே! எல்லாம் ஈமெயிலாகி விட்டதே” என்ற புலம்பல் வெகு சாதாரானமான வயதானவர்களிடம் காணப்படும் சராசரி சிந்தனை. இதற்குமேல் என்ன சொல்வது?

          வயதானவர்கள் தங்கள் அனுபவங்களை செல்ஃ பிடி இல்லாமல் சொல்லவேண்டும். மேலும், அவற்றால் இன்றைய தலைமுறைக்கு ஏதாகியினும் பயனிருக்கவேண்டும். ‘சாமி..சாமி’யென பிற தன்னை அழைக்கவேண்டுமென ஏங்குவது ஆதிகாலத்து பார்ப்பனீய சிந்தனை. இன்றைக்கு இருக்கக்கூடாது. எல்லாரும் இன்னாட்டு மன்னர். எவரும் எவருக்கும் சாமி அல்லர்.

          1. Avatar
            punai peyaril says:

            சரி, காவ்யா ஒரு வேளை அம்பானியிடம் வேலை பார்த்தால் , சார் என்று கூப்பிடாமல் எலேய் அம்பானி என்று கூப்பிடுவார் போலும். அது சரி இவர் சாமிநாதன், சுப்ரமணிய சாமி, மன்னார்சாமி,கருப்பசாமி , தேங்காசாமி, மாங்கா சாமி, இவர்களை எப்படி கூப்பிடுவாரோ…? அது தான் மரியாதைய கேட்டுத்தா வாங்கனும் என்று திருவாழ் மார்பன் என்று பெயர் வைத்துள்ளாரே….

          2. Avatar
            Kavya says:

            சார் என்பது முதலாளி, தொழிலாளி என்ற தொடர்பைக்குறிக்கும். பணத்தால் பதவியால் வருவது.

            சாமி எனபது உயர்ஜாதியான வெ சாவுக்கு அவ்வூர் மக்கள் தாங்கள் கீழ்ஜாயினர் என்பதால் அழைக்கவேண்டிய சொல் என பன்னெடுங்காலமாக தமிழகமக்கள் மேல் திணிக்கப்பட்ட ஜாதீயச்சொல்லாகும். தான் உயர் ஜாதி அனைவருக்கும் மேலாக என்பதைக்காட்டவே ‘சாமி’ என்ற அழைப்பு. “அஃது இந்நாளில் இல்லையே. எனது நாட்களில் இருந்ததே. அதற்காக தான் ஏங்குகிறேன்” என சுய சரிதையில் எழுதுகிறார். இன்று காலம் மாறி விட்டது. ஆனாலும் த‌குதியில்லாப் பெருமைக்குத்தான் எவ்வ‌ள‌வு பேர் இன்றும் அலைகிறார்க‌ள்!

            பாரதியார் தன்னை ஐயரென்று எவரழைத்தாலுமே எரிச்சல்படுவார். ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்று பாடிய மாமனிதர். அது மட்டுமா?

            ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும் பாடினார்.

            என்ன உட்பொருள் இங்கே?

            எந்தச்சொல்லும் ஒருவனை பிறப்பால் உயர்ந்தவன் எனக்காட்டக்கூடாதென்பதே. பிறப்பொக்க எல்லாவுயிர்க்கும் என்பது பாரதியாரின் கொள்கை. ‘சாமி’ ‘ஐயர்’, பிராமணர்’ (இது ம.மவின் உயிர்மூச்சுச் சொல். இதை வளர்க்க இந்துமதம் வேண்டுமாம்) இவைகளெல்லாம் ஜாதீயக்குறியீடுகள். தேவையில்லை. ஒழிப்போம்.

    2. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      பிறர் சொல் கேட்டு ஒஹோ என்று ஒப்புகொண்டு போகும் //

      மலர்மன்னனுக்கு அடிப்படைக்கருத்தையே புரிய முடியல.

      சவால், இங்கு எழுதும் திண்ணைவாச்கர்களுள் எத்தனை பேர் மணிமேகலையைப்படித்திருப்பார்கள்?
      எத்தனை பேர் சிலப்பதிகாரம் முழுவதையும் படித்திருப்பார்கள்? மதுரைக்காஞ்சியை எவரேனும் படித்ததுணடா? கம்பராமாயணத்தை முழுவதும் படித்ததுண்டா ?

      சிலம்பாவது பள்ளியில் கொஞ்சம் வரும். இப்படி வாரா காவியங்களும் இல்க்கிய படைப்புக்களும் எத்தனை எத்தனை?

      ஆனால் இவர்கள் இள்ங்கோ, வள்ளுவர், கம்பர் என்றால், அவர்கள் மாபெரும் இலக்கிய கர்த்தாக்கள் தமிழுக்கு அணி சேர்த்தவர்கள் என்று சொல்லத்தய்ங்குவார்களா?

      எப்படி எதை வைத்துச் சொல்கிறார்கள்;

      இதை வைத்து”

      யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
      வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல்
      பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
      உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

      – கவிச்சக்கரவர்த்தி கம்பனைப் பற்றி மகாகவி பாரதி

      கம்பனைப் பழிக்க வரிதேடி, கம்பனைப் படித்தேன்.
      அவன் கவிதையில் மயங்கி கம்பனிடமே சரணடைந்தேன்.

      ஆக, மலர்ம்னனன் கருத்துப்படி பாரதியார் டூப்படிக்கிறாரெனப்து மட்டுமன்று; அவர் ஒரு பேத்தல்; அவருக்கும் ஒன்னும் தெரியாது.

      ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. பாரதியார் சொல்வதை ஏற்று கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்றவர்களின் எழுத்துக்கள் ஓஹோவென்று இருக்கும். ஒரு நாள் படிக்கலாமென்றிருக்கிறேன்.

    3. Avatar
      Kavya says:

      பண்டிதருக்காக எழுதும் எழுத்துக்கள்; பாமரருக்கும் போய்ச்சேரும் எழுத்துக்கள். இருவகை. இரண்டாவதை இருசாராரும் படிக்கலாம். அப்படி இரண்டாவதையும் தன் எழுத்துக்களில் காட்டும் எழுத்தாளன் மக்களிடையே பரவலாக அறியப்படுவான்.

      முதல் வகை எழுத்துக்களை பாமரனால் அணுக முடியாதென்றாலும், கற்றோர் அதன் அருமை பெருமைகளை அவனுக்குச்சொல்லவேண்டும். ஏனென்றால், பிறருக்குதவா கல்வி கல்வியன்று. தான் கற்காவிடிலும் கற்றொர் சொல் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும் எனபது வள்ளுவர் வாக்கு: ‘கற்றிலாயினும் கேட்க’

      ஆக, மலர்மன்னன், என்னை நெட்டைமரம், பெட்டைப்புலம்பல், வடிவேலு என்று சொல்லியெல்லாம் ஒன்றும் தேராது. நீங்கள் சொல்லும் கருத்தைத்தான் படிக்கிறார்கள். அக்கருத்தில் சாரமில்லையென்று தெரியும்போது அதை மறைக்கவே வசைபாடுகிறீர்கள்.

      இப்போது சொல்லுங்கள். வெசாவின் நூலகள் ஏன் படிக்கப்படவில்லை? அவரைப்பற்றித் தமிழக மக்கள் ஏன் தெரிந்து கொள்ளவைல்லை? அவர் ஏன் உங்களைப்போன்ற சிலருக்கு மட்டுமே தெரிந்தவராகிறார்? ஏன், அவரே அதை எழுதி விசனப்படுகிறார்.

      இதற்கு விடைகள் நான் எழுதிய முதற்பத்திகள்.

      Your friend’s writing will help him swim across unpopulariity and obscurity successfully IF THEY HAVE WORTH.

      However much you try, you cant help a boat with a hole to cross a river. Vain attempt.

      Leave it to readers.

      1. Avatar
        punai peyaril says:

        வெ.சா மீது ஏன் உங்களுக்கு குரோதம். நான் விரும்பிப் படிக்கிறேன் அவரது தொடரை. திருக்குறளை உலக மக்களில் எத்துனை பேருக்கு தெரியும்…? அப்ப அதுவும் எழுத்தே இல்லை என்று தானே ஆகிறது. அதிகமான பேருக்கு தெரிந்தவர் தான் தலைவர் என்றால் பின்லேடன் தான் தலைவராக இருக்க முடியும்..

        1. Avatar
          punai peyaril says:

          எங்களுக்கு ஜார்ஜ்புஷ், மோடி தான் தலைவராகத் தெரிகிறார்கள். நீங்கள் யாரென்று புரிகிறது.

  28. Avatar
    punai peyaril says:

    மம, வெசா நீங்கள் காவ்யா சிலம்பத்திற்கு ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்… இவர் சௌதி அரேபியாவில் போய் கருத்துச் சொல்லி பார்க்கட்டும்… அப்ப தெரியும் நம்ம ஊர் அருமை…

    1. Avatar
      Thiruvaazh Maarban (Kavya) says:

      தப்பா எழுதியிருந்தா திருத்திக்கனும். பெரியவர் வந்து உணர்ச்சிவசப்பட்றார் பாருங்க்.

  29. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    கட்டுரையாசிரியரின் பெயர் சின்னகருப்பன்.

    ஏன் இந்த பெயர்? அதாவது தமிழ்கத்து கிராமப்பெயரை வைத்தால் ஒரு பிரமை உருவாகும், அதற்காகவோ ?

    இப்படி பலர் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு அவரக்ள் பெற்றோர்கள் அழகாக வடமொழியில் வைதீகத்தெய்வங்களில் பெயர்களைச்சூட்ட இவர்கள் சின்ன கருப்பன், பெரிய கருப்பன் என பெயரெடுக்கக்காரணம்?

    சின்னக்கருப்பன் என்ற பெயர் பொதுவாக அக்காலத் த்லித்துமக்களிடையே நிலவுவது. பாவம் அவர்கள். அவர்களுக்கு இசுலாமும் தெரியாது, கிருத்துவமும் தெரியாது, இலக்கியமும் தெரியாது. மனுஷ்ய புததிரனோ, புத்திரியோ பிபிசியோ தெரியாது. ஆனால் திண்ணையில் பிரச்சினைக்குரிய கருத்துக்களை கட்டுரையாகப் போடுகிறார்கள்.

    புனைப்பெயர் வைத்தால், அம்மக்கள் பெயர்களை வைக்காமல் வேறு சமசுகிருதப் பெயர்களில் ஒன்றை வைச்சுக்கோங்க.

    1. Avatar
      punai peyaril says:

      சின்னக்கருப்பன் என்ற பெயர் பொதுவாக அக்காலத் த்லித்துமக்களிடையே நிலவுவது.– அரைவேக்காட்டின் அடுத்த கண்டுபிடிப்பு. கருப்பன் என்பது கருப்பசாமி வகையறா. இதில் இளைவனுக்கு சின்னகருப்பன் என்று பெயர் வைப்பார்கள். இந்த பெயர் கருப்பண்ணன், கருப்பசாமி, என்றெல்லாம் உண்டு. தலித்துகள் இது என்ன சொல்லாட்சியோ.. இதுவும் வடக்கத்திகள் உபயோகிக்க ஆரம்பிக்கப்பட்டு வந்ததே…. ஆதிதிராவிடர் என்று இருந்தது மாற்றி வடநாட்டு அடிமையாக அவர்களையும் மாற்றியது காவ்யா கோஷ்டி…

      1. Avatar
        Kavya says:

        என் உட்கருத்து அஃதன்று. சின்னகருப்பன், பெரிய கருப்பன், பாண்டியன் என்பதெல்லாம் வெ சா, ம.ம ஜாதி மக்களும், அவர்களின் வைதீகமதத்தை ஏற்றுக்கொண்டோரின் பெயர்களும் கிடையா. என் பெயரும் வைதீகப்பெயரே. அதைச்சொல்ல நான் வெட்கப்படுவது கிடையாது. எனக்கு தமிழகக் கிராமத்தேவதைகள், தொல் தெய்வங்கள் நம்பிக்கை கிடையாதென்பது மட்டுமன்று; வெறுப்பும் கூட. என் ‘மதுரை என்ற மாநரகம்’ என்ற கட்டுரை இதை விளக்கும்.

        கிடக்க. இங்கு எழுதும் பிராமணர் என்போர் இப்பெயர்களை வைக்கக்காரணம் ஒன்றே. இவர்கள் தங்கள் கருத்துகளுக்கு அ-பார்ப்பன முலாம் பூச ஆடும் நாடகம் இது

        உங்கள் கருத்தைத் தைரியமாகக்கூறுங்கள். உங்கள் பெயரில் அல்லது புனைப்பெயரில். ஆனால் கிராம மக்கள் பெயர்களை வைத்துக்கொண்டு, அல்லது ‘பாண்டியன்’ என அபார்ப்பன பெயர்களை வைத்துக்கொண்டு நாடகாமாடுவது ஏன்? கட்டுரகள் மட்டுமா? பின்னூட்டங்கள் இப்படி போடப்படுகின்றன.

        They want to make us feel that their pro brahmin views are those of general non brahmin population of TN. Indeed, there is a lot of non brahmin population who have pro brahmin views. But let them write. Why do you write using their names to attempt to create a false impression here?

  30. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    Dalits should protest against the absue of their names.

    U cant write ‘avaa..ivaa’; thinnai will censor it.

    But u can write sinnakaruppan, periya karuppan.

    Because dalits cant come and read internet. So, u can beat them as u like.

  31. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    //பிராமணர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அவர்களை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் மட்டுமல்ல கேலி, கிண்டல் எதுவும் செய்யலாம்!ஹிந்துக்களிடம் உள்ள குறைபாடு//

    இது மலர்ம்னன்ன அவர் ஜாதியினருக்காக எழுதியது.

    இந்த சின்ன கருப்பன் என தலித்துக்களிக்கிண்டல்டிக்கும் அவர்களுக்காக எவர் எழுதுவார்?

    Dont say I am reading too much into the nick name. There is a clear hint of ridicule.

  32. Avatar
    Thiruvaazh Maarban (Kavya) says:

    வெ சா ‘பிராமணர்’; திருமதி சுந்தர ராமசாமி பிராமணர். எனவே அவர்கள் உயர்ந்த இலக்கிய வாதிகள். அவர்கள் நூலகள் படிக்கப்படவேண்டியவை. இப்படி ஜாதிப்பித்து இலக்கியத்திலிருக்கட்டும். மலர் மன்ன காட்டிய வழியை நான் ஆமோதிக்கிறேன்.

    தலித்த்துகள் தலித்து எழுத்தாளர்களையே சப்போர்டு.
    நாடார்கள் நாடார் எழுத்தாளர்களுக்கு.
    தேவர் தேரின எழுத்தாளர்களுக்கு
    பிள்ளைகள் பிள்ளை ஜாதி எழுத்தாளர்களுக்கு
    முதலியர்கள், நகர்ததார்கள், வன்னியர்கள், செட்டியார்கள், இப்படி அவரவர்கள் அவரவர் ஜாதியெழுத்தாளர்களை சப்போர்டு பண்ணி திண்ணையில் கட்டுரையும் விமர்சன்மும் எழுதுங்கள்.

    இந்த ஜாதி வேசம் வெளுக்கட்டும் இங்கே.

  33. Avatar
    punai peyaril says:

    எழுத்துக்களில் பார்ப்பனச்சார்பு உள்ளது.— இருந்தால் என்ன…> பார்ப்பன வெறுப்பு உமிழ்ந்த பெரியாரின் வாரிசு கருணாநிதி கண்டது 2ஜி தானே… அதை வெளிக்கொணர்ந்தது சுப்.சாமி என்ற பார்ப்பனர் தானே… கி.வீரமணி என்ற அந்த பார்ப்பன எதிர்ப்பு வீரர் இப்போது எங்கே… பார்ப்பனர் எதிர்ப்பு என்று சொல்லி கொள்ளைகாரர்கள் சொத்து சேர்த்து சுகமானது தான் மிச்சம்.. அதே பெரியார் இள நங்கை மணம் புரிய பார்ப்பன ராஜாஜியுடன் தானே ஆலோசித்தார்.. உங்களின் பார்ப்பன எதிர்ப்பு பிரச்சார பீரங்கிகள் யோகா கற்று கொள்வது யாரிடம்… சும்மா வந்தட்டாங்கய்யா… நமத்து போன பீலா விட…. அரேபிய அடிமையாய் இருந்தாலும் இருப்போம் என்று ஒரு கூட்டம்…

    1. Avatar
      Kavya says:

      மற்றவர்களுக்கு இருக்கலாமென்றாலும், எழுத்தாளனுக்கு இருக்கவே கூடாது. இருந்தால் எழுத்தாளின் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் அவரைத் தூக்கிக்கொண்டாடுவார்கள். என்வே வெ.சா என்றால் யார் என்று கேட்கும் நிலை.

      ஒரு கட்டுரையில் வெ.சாவுக்காக எடுக்கப்பட்ட விழாவைப்பற்றி வெ.சாவே சொல்கிறார். என்னைப்பற்றி தெரிந்தவர்கள் இவ்வளவு பேர்களாகவாது இருக்கிறார்களே என விசனப்படுகிறார். படித்துப்பார்க்கவும். அவரின் ஃபேவரிட் தமிழ்.ஹிந்து காமில் அவரின் கட்டுரையின் திறப்பு வாசகமே அதுதான்.

      இன்று தில்லி தமிழ்ச்சங்க நூலகத்தில், ‘வெ.சாமிநாதன் என்று எழுத்தாளர் இருக்கிறாமே? அவர் நூல்கள் உண்டா?’ என்று கேட்க, ‘மாலை வாருங்கள், இருந்தால் எடுத்துவைக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

      பார்ப்போம்.

  34. Avatar
    punai peyaril says:

    இளையராஜா என்ற தலித், சிவாஜி என்ற தேவர், கண்ணதாசன் என்ற செட்டியார், இவர்களை கமல் என்ற அய்யங்கார் ஆரதித்த அளவிற்கு யாரும் ஆராதித்ததில்லை… காவ்யாவிற்கு ஏதோ தோல்வி மனக்குழப்பம்… வக்கத்தவனுக்கு வாத்தி வேலை என்று வாத்தியார் வேலைக்கு போனவரா தெரியலை… இப்படி வெறுப்பு உமிழ்ந்தால், படிக்கிற பசங்க எதிர் சிந்தனையோடல்லவா வளர்வார்கள்…

    1. Avatar
      Kavya says:

      Kamalahasan is a cine actor intermingling – or had to intermingle – with cross sections of people who come as workers in his field. Indeed, that field is a team work. He has to depend on them for his name and fame. He had acheived his name and fame only thanks to them. By such close intermingling, he helped himself erase his caste consciousness and began to see all people whoever they are have something special to offer to society and therefore each and everyone is a valuable person.

      Such open and broad mindedness; such love of fellow human beings is missing in most of us. In the context of this writing, missing in Malar mannan and Ve saa anf such brahmins.

      I wonder whether Ve Sa has ever visited a dalit slum. But Kamal does often. His fan clus in Nochhi Kuppam is strong.

      The historic aloofness of brahmins and the religious injunction upon them to not mingle with others, may be held responsible for the caste consciousness. For the same consciousness in others, reasons are different.

      Kamalahasan is not a brahmin by living or consciousness. But Ve Sa and MM are, as seen from their writings . You cant compare chalk and cheese.

      1. Avatar
        Kavya says:

        I should add a few words more abt Kamal. MM has a viceral hatred of Christians and Muslims. Ve Sa too (A writer shd not have that!). But Kamal has not such thing.

        In Madurai city, his fan club is led by Muslims. All through TN, muslim youth adore him. When he acted in a film in which some muslims were portrayed as terrorits, he raised some disaffection among the Tamil muslim. But it was not widespread. Some muslims met and him and got his personal clarification and spread it. Soon the muslmis were satisfied.

        That he is an ayyangar is in the consciounsess of you and you only. Kamal has transcened all such narrow consciousness.

        A writer here has not. An elderly man who wants all to come back to his religion has not. And you, smitha have not.

        Alas, a cine actor has done that. I dont like cine actors. I like writers, and elders. What a pity a cine actor has become a role model for a good social behaviour

        1. Avatar
          punai peyaril says:

          MM has a viceral hatred of Christians and Muslims. — நிச்சயமாக கிடையாது. ஆனால், கிறிஸ்து / முஸ்லீம் என்ற பெயரில் இந்த நாட்டை ஏறி மேய்வது இனி தொடரக்கூடாது என்ற மனநிலை கொண்ட வீரர்கள் அவர்கள். முஸ்லீம்களின் எதேச்சிகாரத்தை உங்களால் பொது இடத்தில் உங்கள் அடையாளத்துடன் பேச முடியுமா உங்களால்…. அப்ப உங்க வீரத்தை இந்த வயசான பெருசுங்கட்ட காட்டுவதன் உங்கள் வீராண்மை வெளிச்சமாகும்

      2. Avatar
        punai peyaril says:

        காவ்யா எப்படியாவது கடாமுடா என்று எழுதி பிறாமணாளை விட தான் கற்றவர் என காண்பிக்க விரும்புகிறார். அவர் எண்ணத்தில் பிறாமணாள்கள் தான் அதிகமாக இருப்பார்கள் போலும்.

        1. Avatar
          Kavya says:

          Again you fall. Please remove from your consciousness that Tamil brahmins are intellectually superior to others. Anyone can be so and that depends upon his or her hard work. All that one requires is opportunities and ideal milieu to grow.

          For e.g today, in modern Tamil lit, there r so many writers who come from all other castes; and in other fields too, achievers come from all other castes.

          Pirappokka ellaavurikkum is a phrase that was thrown upon the casteists of ancient TN and here, we must throw it upon you.

    2. Avatar
      punai peyaril says:

      சரோஜாதேவி என்ற எழுத்தாளர் புத்தகம் கரோல்பார்க்கில் கூட கிடைக்கும். அப்ப உங்க அகராதிபடி அவர் தான் எழுத்தாளர்…

  35. Avatar
    மலர்மன்னன் says:

    மிக்க நன்றி, ஸ்ரீ க்ருஷ்ணகுமார். எடுத்துக்கொண்டுவிட்டேன். மிகவும் உதவியாக இருக்கும். என் மீது நீங்கள் இவ்வளவு தூரம் கவனமாக இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறர் கட்டுரைகளில் நான் வெளியிடும் கருத்துகளைக்கூட விடாமல் கரிசனத்துடன் படித்தும், தமது கருத்துகளை அஞ்சல் வழி பகிர்ந்துகொண்டும், தகவல் தெரிவித்தும் பலர் உதவிவருவது உற்சாகமளிக்கிறது.
    -மலர்மன்னன்

  36. Avatar
    punai peyaril says:

    I wonder whether Ve Sa has ever visited a dalit slum.– முட்டாள்தனமான விவாதம். ஏன், நான் பிற குடியிருப்பிற்கு போக வேண்டும். அந்த சிலம் வாழ்வு சரியில்லையென்றால் அங்கு வாழ்பவர்கள் சுத்தமாக வாழத் தான் முயல வேண்டும். இளையராஜா ஏதாவது ஒரு குப்பத்திற்கு போயிருக்கிறாரா என்று கேட்பீர்கள் போலிருக்கிறது. இவ்வளவு பேசும் நீங்கள், வாத்தி வேலையை விட்டு விட்டு ஆழ்சாக்கடை அள்ளும் வேலையை ஒரு நாள் பார்ப்பீர்களா… அப்படி பார்க்கவில்லையென்றால் உங்களுக்கு அக்கறையில்லையென்றா அர்த்தம்..? இவருக்கு சினி ஆக்டர்களை பிடிக்காதாம் – பல வாத்தியார்களை விட சில சினிஆக்டர்கள் நல் மனிதர்களை உருவாக்குபவர்களாக இருப்பதுண்டு… எல்டர்களை மதிப்பவராம்… அட இதே திண்ணையில் இவர் தான் நரைகூடி கிழப்பருவம் பற்றி கேவலமாக பேசியவர்.

  37. Avatar
    ruthraa says:

    சின்ன‌க்க‌ருப்ப‌னின் சின்ன‌ம்
    ========================

    எத்தனையோ
    சொன்னக் கருப்பன் தான்
    இந்த சின்னக்கருப்பன்.
    இப்போது சொன்னது
    மிக மிகப்பெரியது.
    மிக உண்மையானது.
    சின்ன‌க்க‌ருப்ப‌னின் சின்ன‌ம்
    த‌ற்போது
    ம‌னித‌நேய‌ம் ம‌னித‌நேய‌ம் ம‌ட்டுமே!

    எல்லாப்புகழும் இறைவனுக்கே
    என்பது போல்
    எல்லாக்குரல்களும் இறைவனுக்கே
    கேட்கும்.கேட்கும்.கேட்கும்.

    அவன்
    என்றாவது ஏதாவது
    ஒரு அவதாரம் எடுத்து
    வராமலா இருக்கப்போகிறான்.

    “சம்பவாமி யுகே யுகே”
    ச‌ம‌ஸ்கிருத‌த்தில் சொன்னாலும்
    அர‌பியில் சொன்னாலும்
    இதுவே ந‌ம‌க்கு இப்போது
    ஆறாத‌ புண்ணையெல்லாம் ஆற்றும்
    ஆறுமுக‌க்க‌ளிம்பு.

    ஒருவ‌னை ஒருவ‌ன்
    அடித்து சாப்பிடுவ‌து ஒன்றும்
    த‌ப்பில்லை என்னும்
    ம‌னித‌னின் வெறி
    துப்பாக்கியாய் பிற‌ந்து
    துப்பாக்கியை
    தின்று கொண்டிருக்கும் வ‌ரை
    இது தான் ந‌ட‌க்கும்.

    ம‌லைப்பிர‌ச‌ங்க‌ம் கேட்ட‌வ‌ர்க‌ளுக்கு
    ப‌சியெடுத்த‌போது
    க‌ட‌வுள்
    ஒரே அப்ப‌மாக‌த்தான் தெரிந்தார்.

    ப‌சி தீர்ந்த‌ போது
    அவ‌னே நினைத்தான்
    க‌ட‌வுள்
    துப்பாக்கியைத்தான்
    அப்ப‌டி
    பிய்த்து பிய்த்து த‌ந்தாரா என்று!

    க‌ட‌வுளும் க‌ம்யூனிஸ‌மும் அப்ப‌டித்தான்.
    ஏன் இஸ்லாமும் அப்ப‌டி……
    நான் இன்ன‌மும் முடிக்க‌வில்லை.
    அந்த‌ அரைகுறை வ‌ரியே
    ஒரு எந்திர‌த்துப்பாக்கியாய்
    எழுந்து வ‌ந்து
    என்னை இந்நேர‌ம்
    சுட்டுத்த‌ள்ளியிருக்கும்.
    …………
    இந்த‌ சிலேட்டை அழித்து விடுங்க‌ள்.
    ம‌ணி அடித்து விட்ட‌து.
    வ‌குப்பு முடிந்து விட்ட‌து.
    ஓடி விடுகிறேன்..விடு..ஜூட்…

    =====================================================ருத்ரா

    1. Avatar
      punai peyaril says:

      இது பெயர் கவிதையா…? இதுல ஆள்மாறாட்டம் வேறு… மனச்சிதைவா…? ஏன் பல பெயரில் எழுதினால் தனது ஒரு பெயர் கருத்திற்கு பலர் ஆதரவு என்று தோன்றுமா..? வகுப்பில் மாட்டின பசங்க தான் பாவம்…

  38. Avatar
    admin says:

    அன்புள்ள காவ்யா,
    ஒரே ஒரு பெயர் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரியில் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

    வெவ்வேறு பெயர்கள் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரிகள் கொடுத்தால் அவை ஸ்பாமாக வேர்ட்பிரஸ் வகைப்படுத்துகிறது.

  39. Avatar
    க்ருஷணகுமார் says:

    \என் மீது நீங்கள் இவ்வளவு தூரம் கவனமாக இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\

    என் உத்தரம் ஸ்வார்த்தமுடன் கூடியது மஹோதய். காஷ்மீர ப்ராந்தியத்தின் 370 முள்ளால் குத்தப்பட்ட ஹிந்துக்கள் எவருக்கும் ஹிந்துஸ்தானத்தின் பிளவு என்பது புரையோடிய ஆனால் எப்பாடு பட்டாவது சரிசெய்யப்பட வேண்டிய புண் என்பதும் காந்தியடிகளுக்கு ஹிந்துஸ்தானப் பிளவு மற்றும் காஷ்மீரத்தின் இன்றைய நிலையில் பங்குள்ளது என்றும் கருத்துண்டு. காந்தியடிகளின் ராம பக்தி மற்றும் க்ராம ஸ்வராஜ்யம் எனக்கு ஏற்புடையவை. அவருடைய ராஜநீதி எனக்கு ஏற்பில்லாதது. காந்தியை ஏற்கும் ஹிந்துக்கள் பலருக்கு அவரது எல்லா நிலைப்பாடுகளையும் ஞாயப்படுத்த வேண்டும் என்ற ஒரு அவா இருப்பது தெரிகிறது. தாங்கள் அவருடைய கொள்கைப்பாடுகளை சாதக பாதகங்களுடன் நிர்தாக்ஷண்யமாக நடுநிலமையுடன் எழுதி கிலாஃபத் இயக்கம் பற்றிய ஹிந்துஸ்தானத்தின் சரித்ரத்தை விளக்குவீர்கள் என்ற ஒரு ஆசையிலேயே நான் வாசித்து விஷயங்களின் கருவூலமாக எனக்குத் தென்பட்ட ஒரு சுட்டியை தங்களுக்கு தெரிவித்துள்ளேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *