தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !

This entry is part 6 of 18 in the series 14 ஜூலை 2013

 

 Tagore


மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.


 

எதைக் கேட்கப் போகிறது உனது

இதயம் முழுமை யாக ?

யாசகம் செய்யாதே வெறுங்கை யோடு !

வாசல் முன் செல்லாதே

வேசக் கண்ணீர் விழிகளுடன்  !

மணிக்கற்கள் ஆரமாய்க் கிடைத்தால்

மாலை மாற்றிக் கொள்ளலாம். 

உன் பெண் தெய்வப் பீடத்தை

வீதி ஓரத்துக்

குப்பைத் தூசி வெறுந் தரையில்

வைப்பாயா ?

 

வைகாசி மாதத்தில் காட்டு மரங்கள்

வறட்சியில் காய்ந்து

தீப்பற்றிப் பெரும் தொல்லைகள்

நேர்ந்திடும் புயல் காற்றால்  !  

நிரப்பு வாயா அப்போது நீ

வரவேற்புக் கூடையில்

வாடிச் சுருங்கிய பூக்களை ?

விருந்தாளி யை வீட்டுக்குள் நீ

விளித்திட நேர்ந்து

பரிவோடு வரவேற்பு முடிந்தால்

இருட்டில் பெரு வெளிச்சம்

பரப்பிட வைக்கும்

உன் விளக்கு

பத்தாயிரம் தீப்பொறிகளைப்

பற்ற வைத்து !

 

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 324   ஜூலை 1928 இல் தாகூர்  67 வயதினராய்   இருந்த போது  பங்களூரில் எழுதப் பட்டு  வெளியானது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 9, 2013

http://jayabarathan.wordpress.com/

 

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​15. உல​கை உலுக்கி அச்சுறுத்திய ஏ​ழை‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *