தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்

This entry is part 25 of 33 in the series 11 நவம்பர் 2012


 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

இங்கும் அங்கும் போகும்
வீதிகளில் உலவிக்
கானங்கள் பாடிக் கொண்டென்
காலம் கடந்து போனது.
பிரியும் தருணத்தில் யார் கையில்
நானென் இதயத்தில் வாசித்த
வீணையைத் தருவது ?
பூக்களின் வண்ணத்தில் வைப்பேன்
பாக்களின்
பல்வேறு இசைத் தொனியை !
யாழிசைக் கருவியைப் பொன் முலாம்
பூசிய முகில்களின் சந்திப்பில்
போட்டு விடுவேன்.

 

பூமாலைகள் சூடி ஐக்கிய மாகிய
பாமரர் தொண் டைக்குள்
பதுங்கிக் கொள்ளும் சில பாடல் !
ஆர்வமாய் நோக்கும்
இருவர் கண்ணி மைகளை
ஈரமாக்கும் சில பாடல் !
சித்திரை மாதத்தில்
போகுள் பூக்கள் மூடிய காட்டுப்
புல் வெளியில்
துறவி ஒருவன் காண்பான்
ஒரு வேளை
சிறிய என் இருதயத் துணுக்கை !

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 19 1922 மார்ச் 15 இல் தாகூர் 61 வயதினராய் ஆகும் போது , ஒருநாள் கல்விக்கூட விடுமுறையில் சிலைதஹா குடும்ப எஸ்டேட்டில் தங்கிய சமயம் எழுதியது.
+++++++++++++++++++++++++
Source

 

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 6, 2012

Series Navigationகுன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *