தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !

This entry is part 9 of 20 in the series 21 ஜூலை 2013

 

 

Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

 

 

வெண்ணிலவின் புன்னகை

முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை !

மேலேறின தூக்கும் உத்திரங்கள்  !

வெள்ளைப் பூவே !*

உள்ள  நறுமணத்தைப்

பேரளவில் பொழிந்து தள்ளிடு.

வானுலகத் தேனமுது !  

எங்கே போக  அழைக்கப் படும் என்று

தாறு மாறாய்த்

திரியும் காற்றுக்குத்  தெரியாது !

பூந்தோட்டத்தில் 

பக்கத்தில் எது இருப்பினும்

பாய்ந்து

சூழ்ந்து கொள்ளும் அதனைச்

சூறாவளி !

 

 

நீல வானின் நெற்றியில்

திருமணப் பெண்ணுக்குப் போல்

இன்றிரவில் மின்னும்

சந்தனத்தைக் குழைத்துப் பூசுவது !

கலைத் தெய்வத்தின்

பூந்தோட்டத்தில்

இரண்டு அன்னப் பறவைகள்  

சிறகு விரித்துள்ளன !

நிலவும், நீயும் பூமியில்

பரப்பிடும்

இதுவா வானுலக நறுமணப்

பாரிஜாத மகரந்தம் ?  

இந்திரன்

வாழும் மாளிகையில் சிற்சில

எழிலொளி

ஏற்றி வைத்திடும் விளக்கை

உறவு கொள்ளும்

அறையில்.

 

+++++++++++++++++++++++++++++

நறுமண வெள்ளைப் பூக்கள் à Fragrant Tuberose

+++++++++++++++++++++++++++++

பாட்டு : 94   தாகூர்  68 வயதினராய்  ஜூன் 1929 இல் பரித்திரன் [Paritran] என்னும் நாடகத்துக்கு  எழுதப்பட்டது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 16, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 16வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *