தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?

This entry is part 20 of 44 in the series 22 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதலில் எனக்கு
வேதனை தவிர வேறில்லை
ஏது மில்லாக் காதல் எதற்கு ?
உன் இதயத்தை அவளுக் களித்து
அவளது
இதயத்தை நீ பறிக்கப் போவது
எத்தகை அறிவீனம் ?
ரத்தத்தில் வேகும் இச்சை உன்
பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர
பாலைவனத்தைச் சுற்றி
நானும் வட்டமிட்டு வருவதா ?
ஏனிந்த வீணான காதல்
சுயமதிப்பைத் தன்
வயப் படுத்தி
வைத்துள்ள வனுக்கு ?
வசந்த காலத்தின் இனிய தென்றல்
வாலிப னுக்கே !
வானம்பாடியும்
வண்ண மலர்களும்
வாலிப னுக்கே !
விழுங்கும் நிழல்தனைப் போல்
வெளிவரும் காதல்
முழு உலகை
அழித்திட !

++++++++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 355 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). தாகூரின் சொந்த மொழிபெயர்ப்பு
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali &

Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 16, 2012
*********************

Series Navigationஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு ஜெயபாரதன்,

    அழகான தமிழாக்கம். நன்றி.

    இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை – இந்த இடுகை முழுமையாகவும் வரவில்லை,பின்னூட்டம் போடவும் இடமில்லை. அற்புதமான இடுகை. பகிர்விற்கு மிக்க நன்றி. எளிய நடையில் நன்கு புரியும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளீர்கள்.
    //நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.// நம் இந்திய விஞ்ஞானிகளின் அறிவாற்றலைக் கண்டு மனம் பெருமிதம் கொள்கிறது ஐயா. நாங்கள் இந்தியர்கள், இவர்கள் எம் நாட்டு விஞ்ஞானிகள் என்று மார்தட்டிக் கொள்ளத் தோன்ற்கிறது. நீங்களெல்லாம் நீடூழி வாழ வேண்டும்.இன்னும் பலப்பல அப்துல் கலாம்கள் உருவாக பிரார்த்திப்போம். வாழ்க,வாழ்க!

    அன்புடன்

    பவள சங்கரி.

    1. Avatar
      ஜெயபாரதன் says:

      மதிப்புக்குரிய திருமதி பவள சங்கரி,

      உங்கள் உன்னத பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி.

      எனது அக்கினி -5 விஞ்ஞானக் கட்டுரையில் இறுதிப் பகுதி வரவில்லை. அதை ஆசிரியருக்கு உடனே அனுப்பித் திண்ணையில் இணைக்கும்படி வேண்டியுள்ளேன்.

      அன்புடன்
      சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *