திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

This entry is part 10 of 33 in the series 27 மே 2012

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழி களுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக்கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும்  விளைந்தது தான். பதவிப் போட்டியும் பொறாமையும் தான் இன்று வரை ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. கொளுந்து விட்டெறியும் இந்த ஆசை தான் வன்னியர்களுக்கு என்றும் மூவேந்தர்களுக்கு என்றும், இன்னும் எத்தனை ஜாதிகள் உண்டோ அவ்வளவுக்கும் அவரவர் பங்கு பெற கட்சிகள். இங்கு முளைத்துள்ளன. அவர்கள் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனங்கள் என்னவாக இருந்தாலும் அவரவர் ஜாதி மீறிய சிந்தனைகள் ஏதும் அவற்றுக்குக் கிடையாது. தம் ஜாதி, பதவி, இவை சார்ந்த பிற சொந்த நலன்கள். இப்படித் தொடங்கியது தான் நூறாண்டு வரலாறு படைத்துள்ளது. அதைத்தான் “நூறாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் “பார்ப்பனர் நடு நடுங்க “ என்று நினைவு படுத்துகிறார் இன்றைய தலைவர். அவர் தம் திராவிட இயக்க சிந்தனைகளைப் பெற்றது, பனகல் மகாராஜா பற்றிய பள்ளிப் பாடத்திலிருந்து என்று சொல்கிறார். அவரது பார்ப்பன துவேஷத்துக்கு அவரது நெஞ்சுக்கு நீதியில் காரணம் தேடினால் கிடைக்காது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அன்றைய நாயர்கள் பனகல் ராஜாக்கள், ரெட்டியார்களுக்கும் சரி அவர்களது இன்றைய வாரிசுகளுக்கும் சரி திராவிட என்றால் என்னவென்று தெரியாது. நமது தந்தை பெரியார் கன்னடக்காரர் தான் என்றாலும் காவிரி நீர் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது.  நமது கலைஞர், வை கோ, விஜய காந்த், நேரு எல்லாம் தெலுங்கர்கள் தான் என்றாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது நிற்காது. டி.எம். நாயரை நாங்கள் நினைவு கொண்டுள்ளோம் நீங்கள் மறந்தாலும் ,எங்கள் இயக்க பிதாமகர் அவர், என்று என்ன கூச்சலிட்டாலும் முல்லைப் பெரியார் தகராறு தொடரும். காரணம் திராவிட பிரக்ஞை அவர்களுக்கு இருந்ததில்லை நமக்கும் இல்லை. நமது சிந்தனைகள் ஒரு பக்கம் பிராமண துவேஷம் மறுபக்கம் சுயஜாதி வெறி. மற்றது பதவி வேட்டை. சுயநலம். இதற்கெல்லாம் மேலாக, சமீபத்தில் சேர்ந்து கொண்டது அவரவர் குடும்ப நலம். குடும்ப நலமே கட்சி நலமும். கட்சி ஒரு குடும்பம்..அதுவே திராவிட நலனாகக் கோஷமிடப்படும்.

மற்றதெல்லாம், நாத்திகம், பகுத்தறிவு, வடவர் ஆதிக்கம், தமிழ்ப்பற்று, ஈழத்தமிழர் போராட்டம், இத்யாதி எல்லாம் இப்பயணத்தில் அவ்வப்போது அவசியத்துக்கு சேர்த்துக் கொண்டவை,. பெரியாரின் நாத்திகம் இந்த வகையினது தான்
எதுவும் முக்கியமில்லை. பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பீராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை. 1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர் ஒரு மடாதிபது சுவாமிகளை ஆசீர்வதிக்கும் படி வேண்டி பின் வருமாறு தலையங்கள் எழுதுகிறார், வெகு சீக்கிரம் பகுத்தறிவுப் பகலவன் ஆக இருப்பவர்.

”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.

பகுதறிவுப் பகலவன் ஆகப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கர்  வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் சுவாமிகளை.

இன்னொரு முகம் வெகுசீக்கிரம் பிராமண துவேஷியாக அவரதாரம் எடுக்க இருப்பவர் எழுதியது. இதுவும் அவரது குடியரசு பத்திரிகை யிலிருந்து தான். .

”பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் ஸர். பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ரா. இரங்கல் எழுதுகிறார்:

“…”.என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை. அரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். … நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை”.. .

கோவை அய்யாமுத்து தன் :எனது நினைவுகளில் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில், நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”
.
குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது.
இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதிக்கு அங்கு  இடமிருக்கவில்லை. ஏனெனில் அவர் பார்ப்பனர் என்று     பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த மாற்றம், நாத்திகமும், சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்? காங்கிரஸிலிருந்து விலகியதும் இது எல்லாம் அவரை ஒரு package deal – ஆக வந்தடைகின்றன. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். புராணங்களில்  சொல்லப்படும் வரமோ சாபமோ தான் இதைச் சாதிக்கும்

இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை. ஆனால் அவர் இப்புதிய சிந்தனை பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் அது மிக பாமரத்தனமானதாகவும், அவ்வப்போதைய தேவைக்கு ஏற்றதாகவும் இருக்கும். “ராஜாஜி என் நண்பர் தான். ஆனால் அவர் பார்ப்பான். அவர் சிந்தனைகள் பார்ப்பனருக்குச் சாதகமானதாகத் தானே இருக்கும்?” என்று சொல்லும் அவர் தனது சிந்தனையும் நாயக்கர் சாதிக்கு மாத்திரம் தானே சாதகமாகத்தானே இருக்கும்,? அப்படித்தானே எல்லோருக்கும் அவரவர் சாதிக்கு சாதகமாக இருக்கும்  தனது மாத்திரம் எப்படி திராவிட இனம் முழுதுக்குமாக இருக்கக் கூடும்? என்று அவர் யோசித்ததாகவோ, அதற்கு பதில் கண்டதாகவோ செய்தி இல்லை. சாட்சியம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கட்சியையும் சொத்துக்களையும் தனக்கு நம்பிக்கை தருபவரிடம் ஒப்படைக்கிறேன் என்று தனக்கு சேவை செய்து வந்த 26 வயதுப் பெண் மணியம்மையை மணம் செய்துகொள்கிறார். அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம். அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லை. ஆக, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும். என்பது நமக்குத் தான் தெளிவாகிறது. அவர் சொன்னது கிடையாது. கழகக் கண்மணிகளும் கேட்டது கிடையாது..

அவரது எல்லா சிந்தனைகளும் இந்த ரக வெளிப்பாடாகவே இருந்துள்ளன. “சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்.? என்பது பகுத்தறிவுப் பகலவனின் கேள்வி.  இந்த ரகத்தில் தான் அவரது சிந்தனைகள் எல்லாமே இருந்துள்ளன. புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாதவை என்று சொல்லும்போது அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற திராவிட இயக்கத்தவர் தம் தமிழ்ப்பற்றில் போற்றிக் கொண்டாடுவதை எல்லாம் அவர் உதறி எறிந்துள்ளார்.

“தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மீக மோசமான காரியம் என்றே படுகிறது”

இது குடியரசு பத்திரிகையில் தந்தை பெரியாரின் அருளுரை.

ஆனால் தந்தை பெரியாரின் இந்தமாதிரியான கருத்துக்களையும் சரி, தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று திரும்பத் திருப சொன்னதையும் தமிழ் மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும், தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூலுரைத்த பாரதி தாசனும் ஈ.வே ராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லை. திராவிடத்தந்தை தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர். சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை. என்று சொன்ன திராவிட தந்தைக்கு என்ன பதில் சொன்னார்கள்?

கருணாநிதி காலையில் குளிக்கச் சென்றால் கூட திராவிடத் தந்தைக்கு பொறுப்பதில்லை. ”ஏன்யா அவன் என்ன இங்கே வேலைசெய்ய வந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா? என்று கடிந்து கொள்வார் பெரியாரும் அண்ணாவும் தமக்கு வழி காட்டியவர்கள்  என்று அடிக்கடி சொல்லி தம் சிஷ்ய பெருமையை காட்டிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். வேறு யாரும் சொல்லியிருந்தால் முரசொலியில் கவிதை, தலையங்கம், அல்லது உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி தந்தை வழி நடக்கச் சொல்வாரா தெரியவில்லை.

காரணம் என்ன? ஏன் இந்த மௌனம்? எது இவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்தது?. தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்றும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும் சொன்ன பெரியார் எப்படி தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் ஆனார்? அன்றிலிருந்து இன்று வரை திராவிட கட்சிகள் அனைத்திலும், ஏன் தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் வந்தன தான். அவை அனைத்தும் தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. இதை நாகரீகமாக ”நாங்கள் வெறுப்பது பிராமணீயத்தை, பிராமணனை அல்ல,” என்று சொல். கவுண்டரீயம், நாயக்கரீயம் வன்னியரீயம் என்றெல்லாம் ஏதும் கிடையாது. பிராமணரை எல்லா தளத்திலிருந்தும் ஒதுக்க இன்னொரு முக்கிய காரணம் இவர்கள் எல்லாரையும் பீடித்துள்ள தாழ்வு மனப் பான்மை. இந்த தாழ்வு மனப்பான்மை தான் திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு சொட்டா மோட்டா நடிகருக்கும் பட்டங்கள் அள்ளிச் சொரிந்து அந்தப் பட்டங்களையே டமாரம் அடிப்பது. சினிமா வசனம் எழுதினால் கலைஞர். வாத்தியார் வேலை பார்த்திருந்தால், பேராசிரியர், எல்லாம் திலகம் தான் சிகரங்கள் தான். உலகத்தில் வேறு எங்கும் காணாத ஒரு அபத்த கலாசாரம்.

தொடர்ந்து அன்றைய 1910=க்களின் தொடக்கத்திலிருந்து இன்று வரைய சரித்திரம் திராவிட இயக்கத்தவர்கள் யாரும், அதன் முந்தைய அவதாரங்களையும் சேர்த்து, இன்றைய அதன் கிளைகள் பிரிவுகளையும் சேர்த்து எவரும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவர்கள் கிடையாது. அவரவர்க்கு சொந்த குடும்ப, ஜாதி நலன்கள். அவற்றுக்கு அலங்காரமான  வெளியில் சொல்லத்தக்க ஒரு கொள்கை லேபிள். வடவர் ஆதிக்கம் என்று ஆரம்பித்தது, இன்று அன்னை சோனியா காந்தி சொக்கத் தங்கமாக காட்சி தருகிறது. விதவை மறு வாழ்வுத் திட்டத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளே, நிலையான ஆட்சி தருக” என்று வேண்டப்பட்டார். ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிகட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால், சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டது. மதவாதக் கட்சி என்று வசைபாடிய பா.ஜ.காஅணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால், அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறது. இதெல்லாம் பெரியார், அண்ணா காட்டியவழியில் சாதியை ஒழிக்கப் பிறந்த கட்சியின் தலைவர் அருளிய வாசகங்கள். ஹிந்தி அரக்கியை ஒழிக்கப்போராடிய கட்சியின் தலைவர் தன் மருமகனுக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்று மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்கிறார். ’என் குடும்பத்தில் எவருக்காவது பதவி தேடினால் என்னைச்செருப்பால் அடியுங்கள்,’ என்ற வன்னியர் கட்சித் தலைவர் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் ஏந்தக் கட்சி தரும் என்று தேடி அணி சேர்கிறார். தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்க்கவேண்டும். என்ற அவர் ஆசையும் தீர்கிறது.

ஹிந்தி அரக்கியை விரட்டி தமிழுக்காகவே போராடிய இயக்கம் ஆண்ட 50 வருட கால ஆட்சியில் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை ஒருவர் கல்வி பெறமுடிகிறது தமிழ் நாட்டில். எந்தத் தொலைக் காட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் அரிதாகிக் கொண்டுவருகின்றனர். ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகக் கருதப்படுகிறது. முத்தமிழ்க் காவலர் குடும்பத்து SUN, KTV, SUN Music, SUN News என எதிலும் தமிழ் பேசுபவர்கள் கிடைப்பதில்லை.
அறுபது வருட கால திராவிட ஆட்சிக்குப் பிறகு, குழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைக்க மோதிரம் தரப்படும் என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. தமிழ்த் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு ஆனை பிறக்கிறது.  ஏன்? தம் குடும்பத்திலேயே கூட உதய நிதி, கலாநிதி, தயாநிதி என்று தான் பெயர்கள். அது போகட்டும். அவர்களுக்கு தங்க மோதிரம் வேண்டாம். தமிழ்ப் பற்றும் வேண்டாம். வேறென்ன வேண்டும்? பின் ஏன் எல்லா பெயர்களும் நிதி என்றே முடிகின்றன? இருப்பினும் கோஷம் என்னவோ பொறியியல், மருத்துவம், வானசாஸ்திரம் எல்லாம் தமிழில் போதிக்கப்படவேண்டும் என்று எல்லாக் கட்சிகளிலிருந்தும் வருகிண்றன பலத்து.

வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை. வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மழை நீர் தேக்கி, வளம் தந்த ஏரிகள் தூர்த்தப்பட்டு வீட்டு மனைகளாகின்றன. விளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் வசமாகின்றன. கேட்டால் தொழில் வளம் என்று கோஷமிடுகிறார்கள்.  நிலத்தடி நீர் எங்கோ அதளபாதாளத்துக்கு போகிறது. அண்டை மாநில திராவிடர்களோ 1971-லிருந்து எந்த ஆற்று நீரையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயில்லை. எல்லாவற்றிலும் திராவிடத் தலைமையோ விட்டுக்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன. காரணம் என்ன வென்று தெரியவில்லை. கர்நாடகாவிலிருக்கும் தன் சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயமோ? சுமுகமாகப் பேசித் தான் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப் படுகிறது. பிராமண துவேஷம் சாதி ஒழிப்பு என்று பெயர் பெறுவது போல, பேசித் தீர்த்துக்கொள்வது என்ற சொல் எதை மறைக்க என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆற்று மணலை அள்ள ஒவ்வொரு குத்தகை விடப்படுகிறது. ஆற்று மணல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது நாட்டின் சொத்து. கவலையில்லைல் அரசியல்வாதிகளுக்கும் குத்தகை தாரருக்கும். ஒரு முறை ஆற்று மனல் முழுதுமாக அள்ளப்பட்டு விட்டால் தமிழ் நாடு இனி சகாரா பாலை வனம் தான். வேறு எந்த மாநிலமும்  தன் நில வளத்தை, கனிம வளத்தைச் இப்படிச் சுரண்ட விடுவதைல்லை

.திராவிட இனம், தமிழ் பற்று என்று 60-70 வருடங்களாக உரத்த கோஷம் இட்டவர்கள் தான் தமிழ் நாட்டை மீளமுடியாத ஒரு அழிவுக்கு இழுத்துச் செல்கிறார்கள். இது வரும் தலைமுறை தமிழ் மக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒப்பாகும்.

சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம், சுய ஜாதிப் பற்று என்பது, திராவிட ஆட்சி ஏற்பட்ட 1967 – லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படு கொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. பட்டியலிட்டு சாத்தியமில்லை. ஆனால் இவைஎல்லாம் திராவிட கட்சிகளின் பாஷையில் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் ஜாதி வெறியினால் நிகழ்ந்தவை, உயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரை. இதற்கு என்ன அர்த்தம்? எந்த திராவிடகட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாயவு செய்ததா? அல்லது தன் கொள்கைகளைத் தான் புணர் ஆய்வு செய்ததா? பறையர்களே பள்ளர்களை சமமாக ஏற்பதில்லையே. திருமாவளவனும் டா. கிருஷ்ணசாமியுமே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லையே? எந்த பார்ப்பனர் இந்த சுய வெறுப்பை விளைவித்தார்? எத்தனை மொக்கையான, அர்த்தமற்ற அபத்தமும் பொய்யுமான சாதிக் கொள்கை இவர்களது? கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இவற்றில் தலையிட்டு சமரசத்துக்கும் அமைதிக்கும் வழி தேடுகின்ற்ன. அவர்கள் எத்தரப்பு சுயஜாதி வெறியையும் கண்டனம் செய்வதில்லை. ஏன்?. அவர்களுக்கும் திராவிட கட்சிகள் போலவே ஜாதிவெறியின் முக்கியத்வம் தெரிகிறது. எல்லோருமே நாடகமாடுகிறவர்கள் தான். அவர்களின் கோஷங்கள் வெற்றுக் கோஷங்களே. ஒரு ஜாதியினரைக் கண்டித்தால் மற்ற ஜாதியினரின் ஓட்டை இழக்க நேருமே”

இவர்களில் எவருக்கும், திராவிட கழகங்கள் ஆகட்டும் மற்ற கட்சிகள் எதற்கும் சுய ஜாதி வெறி தான் ஆதாரமானது. அதை வைத்துத் தான் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதும் கட்சிகளின் வெற்றி தோல்வியும்  தீர்மானிக்க[ப்படுகிறது. கல்வி, பதவி எல்லாவற்றுக்கும் ஜாதி சார்ந்து ஒதுக்கீடு. இதுவே ஜாதிகளை என்றென்றைக்குமாக நிரந்தமாக பாதுக்காக்கும் வழியுமாகிறது. ஜாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடு. அந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் உகுக்கும் கண்ணீரும், உதறுவதாகப் பயமுறுத்தும் மந்திரி பதவிகளும், டிவி காமிராக்களை வைத்துக்கொண்டு ஆடும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகங்களும், எல்லாமே திரைப்பட வசனங்கள் தாம். . இவர்களது தமிழ்பற்று போலத் தான். எத்தனை லக்ஷம் தமிழர்கள் முள்வேலிக்கம்பிச் சிறைகளில் அடைபட்டிருந்தாலும், ராஜபக்‌ஷேயிடம் தூது சென்று பரிமாறிக்கொண்ட புன்னகைக் காட்சிகள் பெற்று வண்டஹ் பரிசுகளும், குலுக்கிக்கொண்ட கைகளும் போதும் தமிழருக்கு நாம் அளித்த துரோகத்திற்கு சாட்சியம் தர.

இன்றைய மத்திய அரசுக்கு தமிழகத் தமிழரும் சரி, ஈழத் தமிழரும் சரி ஒரு பொருட்டே இல்லை. என்பதும் அதைவேடிக்கை பார்த்திருப்பது திராவிட கழகங்கள் மாத்திரமல்ல, காங்கிரஸ் கட்சியும் தான். அவ்வப்போது ஒரு கழகம் எதிர்க்குரல் எழுப்பினால், மற்றது மத்திய அரசுக்கு தன்னை மிகுந்த விசுவாசியாகக் காட்டிக்கொண்டு தன் எதிரிக்கழகத்தின் எதிர்ப்புக்க்குரலை மடியச் செய்யும். எத்தனை உதாரணங்கள் தேவை, காவிரி நீரா, சுனாமியா, தானே புயலா, ஈழத்தமிழர் மரண ஓலமா? எதையும் மத்திய அரசு காதில் விழாதது போல நாடகமாட எதிர் கழகம் துணை போகும்

கழகங்களின் கூச்சலும் பிரசார நாடகமேடை ரக வசனங்களும்
சிந்தனைக்கோ இலக்கியத்துக்கோ எந்த கலைக்குமோ வித்தாக முடியாது. எல்லாத் துறைகளிலும், பத்திரிகை, மேடைப் பேச்சு, இலக்கியம், சினிமா, நாடகம், இப்போது தொலைக்காட்சி எதையும் இவர்கள் விட்டு வைத்ததில்லை. இவற்றில் எல்லாம் சுமார் 60 – 70 வருட காலமாக திளைத்து உலப்பி வந்தாலும், எல்லாம் மலையெனக் குவித்திருந்தாலும், எவையும் உயிரற்றவை. உண்மையற்றவை. உரத்த கூச்சல் கலையாவதில்லை. பொய்மையும் கலையாவதில்லை. திராவிட இயககங்கள் இதுகாறும் படைத்த எதுவும் இலக்கியம் என்றோ கலையென்றோ சொல்லத் தக்கவை அல்ல. ஒரு அடிப்படையான காரணம், இவர்களிடம் உண்மையுமில்லை. கலை உணர்வும் இல்லை. கடந்த கால முற்போக்குக் காரர்கள் போலத்தான். கூச்சலும் பிரசாரமும் அரசியலுக்குப் பயன்படலாம். கலைக்கோ இலக்கியத்துக்கோ அல்ல. தலித் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் நேர்மையானவர்கள். சிறந்த எழுத்துக்கள் அவர்களிடமிருந்து பிறந்துள்ளன.ஏனெனில் அவர்கள் தம் அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள்.

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களீடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்கமுடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார், “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?
பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா என்றாராம் பெரியார். காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் காமராசர் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி  இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்? கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம். .

. .  . . .  .
.

Series Navigationஎன்னுடைய திருக்குறள் புத்தகத்தைப்பற்றிக் கட்டுரை வடிவில் விளம்பரம்மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

44 Comments

  1. Avatar
    sathyanandhan says:

    திரு. வெ.சா. அவர்களோ அல்லது ஏனைய பலருமோ குறிப்பாகச் சுட்டிக் காட்டுவது இரண்டை 1. பெரியாரின் அதிரடியான நடவடிக்கைகள், 2. ஒரு குறிப்பிட்ட சாதியினரை மற்றும் இந்து மத மூட நம்பிக்கைகளை அவர் இலக்காக்கியது. இவை பெரிதும் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவை. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இன்று நாம் காண்பது என்ன? மத நம்பிக்கைகளால் பிழைப்பு நடத்துவது இப்போது பல்கிப் பெருகி விட்டது. இந்து மதத்தின் சமூகக் கட்டமைப்பில் தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இவை எந்த அளவு வேரூன்றி விட்டன என்பதை அவர் அப்போதே அறிந்திருந்தார். அவர் சொல்லாலும் செயல்லாலும் மத உணர்வுள்ளோர் மனதைப் புண்படுத்தியதைத் தவிர்த்திருக்க வேண்டுமே என்று வரிந்து கட்டும் நாம் ஏன் மனித நேயமே இன்றி மதமும் வழிபாடும் பேசித் திரிவோர் பற்றி எந்தவித வெட்கமும் ஏன் கொள்வதில்லை? பிராமணரோ வேறு யாரோ சமுதாயம் மேம்படும் கனவுகளே இன்றி தன்னலமே மையமாக வாழ்வதில் பெருமிதம் கொள்ள ஏதுமில்லை. சுமாராக 50 ஆண்டுகள் முன் திருச்சியில் நடந்த ஒரு பகுத்தறிவு மாநாட்டில் தனது கருத்துக்களை மறுத்துக் காட்டமாகப் பேசிய மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தனை பேச அனுமதித்தது மட்டுமன்றி அவரை மரியாதையாக நடத்தி அவருடன் உரையாடியவர் பெரியார். அவரிடம் இருந்த லட்சியவாதம் பின்னாளில் அவரது வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் அரசியல் ரீதியாகப் பயன் படுத்திக் கொள்ளப்பட்டதே சோகம். நாத்திக வாதி பெரியார் பற்றி பேசும் நாம் ஆத்திகரான வைணவப் பெருந்தகை ராமானுஜரின் வழித்தோன்றல்கள் என்ன செய்தார்கள் என்று சிந்திப்பதுண்டா? அனைவரும் ஆலயப் பிரவேசம் செய்ய வழிவகுத்தார் அவர் மைசூர் மேல் கோட்டை திருநாராயணபுரத்தில். அனைவரும் மூல மந்திரம் அறியட்டும் என்று கோபுரம் ஏறி உச்சரித்தார் திருக்கோட்டியூரில். ராமானுஜர் பெரியார் இருவரும் இரு துருவங்கள் நம்பிக்கைகளில். ஆனால் லட்சியத்தில் ஒரே புள்ளியில் இணைவர். கசப்பான உண்மை அவர்களை நீர்க்க அடித்து இன்னும் கிணற்றுத் தவளைகளாய் இருப்பதில் பெருமிதம் கொள்ளும் நம் பிற்போக்கான சிந்தனையே. அன்பு சத்யானந்தன்.

  2. Avatar
    Kavya says:

    கட்டுரையை முழுக்கப்படித்தேன். பொதுவாக காழ்ப்புணர்வில் எழுதப்படும் கட்டுரைகளை நான் படிப்பது கிடையாது. பின்னூட்டத்திற்காக முழுவதும் படித்தேன்.

    சத்யநாதன் சொன்னது போல இவையனைத்தும் பழைய கருத்துக்கள்.

    கருநானிதி ஒருவர்தான் அக்காலத்திராவிட இயக்கத்தைச்சார்ந்தவர்களில் உயிரோடு இருப்பவர்களில் முதன்மையானவர். இரண்டாவதாக அன்பழகன் வருவார். அல்லது இருவரும முதலில். இவர்களில் ஒருவர் இவ்வியக்கத்தைக்கொண்டாட அழைப்பதில் என்ன தவறு என்று வெசா கண்டார். கொண்டாடக்கூடாதா கருநானிதி? கொண்டாட ஆரை அழைக்கிறார் அவ்வியக்கத்தில் நாட்டம் கொண்டோரைத்தானே? அதற்காக பிறர் ஏன் கவலைப்படவேண்டும். ஊரில் நாளைக்கொரு பொழுதுக்கொரு கொண்டாட்டங்கள் இருக்க ஏன் இக்கொண்டாட்டத்தில் காழ்ப்பு? அவர் ஆட்சியிலிருந்து அரசு விழாவாகக்கொண்டாடினால் குற்றம் சாட்டலாம். இப்போது ஆர் செலவில் நடக்கிறது சாமிநாதன்?

    இவ்வியக்கம் பார்ப்ப்னரல்லாதோரால் தொடங்கப்பட்டு, அப்பார்பனரல்லாதோருக்கு சமூகநீதிக்காக போராடுவ்தைக்குறிக்கோளாகக் கொண்டது. எனவே நீதிகட்சியெனவாயிற்று. அக்காலத்தில் சென்னை மாகாணம்தானே – தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும்மக்களையும் உள்ள்டக்கியதுதானே. அவர்களுக்கெல்லாம் சென்னைதானே தலைநகரம். அப்படி அவர்களும் பார்ப்ப்னர்மீது அவர்கள் வாழும் வாழ்க்கைமீது வெறுப்பு கொண்டிருந்தார்கள்தானே? தமிழ்பேசுவோர் மட்டும்தான் கொள்ளவேண்டுமா? எப்படி தெலுங்கு பேசும் ரெட்டியார், மலையாளி நாயர், ஒன்றாக்ச்செர்ந்து பார்ப்ப்ன எதிர்ப்பாளராகினார்கள் என்ற கேள்வி அப்பாவித்தனமானது. அவர்களும் வாழ்ந்தார்கள்; கண்டார்கள். எனவே எதிர்வினை.

    அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள் பார்ப்பன்ர்களுக்கெதிராக. உண்மையில் இவ்வியக்கம் பிராமணரல்லாதோர் சங்கமாகத்தான் தொடங்கியது. ஏன்? பார்ப்ப்னர்கள் எல்லா பதவிகளிலும் இருந்தார்கள். அவர்கள் நினத்ததெல்லாம்தான் நடந்தன‌. ஆட்சியாளர்களுக்கருகிலே வாழ்ந்து பிறமககளை மிரள வைத்தார்கள். கல்வி, வேலை வாய்ப்பு வசதியான வாழ்க்கை எல்லாம் அவர்களுக்குத்தான். இதன் எதிர்வினைதான் பிராமணல்லாதோர் இயக்கம்.

  3. Avatar
    Kavya says:

    திராவிட இயக்க வரலாறும் தமிழ்நாடும்’ என்பது தலைப்பு.

    இரண்டையும் இணைக்கிறார். அவ்வியக்கம் தோன்றி வளர்ந்தது ஒருகாலம். தற்போது கருநானிதி குடும்ப அரசியலில் பணம் சேர்த்தது இக்காலம்.

    அக்கால் இயக்கம் செயத பல செயல்களைப்போற்றி மகிழத்தான் விழா. இக்காலத்து தமிழக நிலைக்காகன்று.

    எந்த சமூக இயக்கமும் ஒரு காலம் என்று கட்டுக்குள்தான் மேயும். அதன் வயிறு நிறந்தவுடன் இடத்தைவிட்டு போய்விடும். அதாவது இயக்கம் தான் செய்ய நினைத்தவைக;ளைச்செய்தாலும், அல்லது செய்ய முடியாவிட்டாலும், ஒரு காலகட்டதுக்கப்பறம் நீர்த்துத்தான் போகும். அப்போது அதை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பர் சிலர் எந்தவொரு பலனுமில்லாமல். அல்லது அதை வைத்துப்பிழைப்பு நடாத்துவோர் இருப்பர். இப்பொது நடக்கும் செயல்களால் அப்பொது செழித்த இயக்கத்தைப் பார்த்து இகழ்வது சரியான ஆராச்சி சிந்தனையன்று.

  4. Avatar
    admin says:

    கருத்துத் தெரிவித்து பின்னூட்டம் இடும் வாசகர்களுக்கு சில வேண்டுகோள்கள்:

    1.படைப்புகளின் மையக் கருத்தை ஒட்டியே உங்கள் விமர்சனம் அமைய வேண்டும்.

    2. தயவு செய்து கருத்துகளை முடிந்த வரையில் தமிழில் இடவும்.
    Firefox உலவி(browser)ல் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள்
    பொதுவாகவே Epic உலவியில் default ஆக google transliteration addon நிறுவப்பட்டிருக்கும்(install). ஆனால் Firefox உலவி(browser)ல் google transliteration addon ஐ நிறுவ (install) கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். இதன்மூலம் நாம் அதே இணையப்பக்கத்தில் இருந்தபடியே தமிழில் தட்டச்சு செய்யலாம்.

    1. Kindly navigate this page https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-transliteration-formerl/versions/

    2. Kindly click the button ‘Add to Firefox’. (Refer 2.png)

    3. Kindly click ‘Allow’ button (Refer 3.png)

    4. Kindly click ‘Install Now’ Button. (Refer 4.png)

    5. Kindly click ‘Restart Now’ Button. (Refer 5.png)

    6. Kindly go to ‘Tools’ on your browser menubar and click ‘Transliterator Preference’ (Refer 6.png)

    7. A popup will be opened. After that, kindly select the checkbox ‘Enable Transliterator for Textboxes’, select the checkbox ‘Enable Transliterator for Rich text editing’, select ‘Tamil’ option from ‘Default Language’ selectbox (Refer 7.png)

    8. Refresh the page by pressing F5 or restart your browser.

    9. If you type a word in english and hit space button, it will be automatically converted from english to tamil. (Refer 8.png)

    Using this addon, we can type in tamil within a same webpage.

    (முனைவென்றி நா சுரேஷ்குமார் அளித்த ஆலோசனை

  5. Avatar
    Kavya says:

    அடுத்து பிராமணீயம் என்ற சொல்லும் பேசப்படுகிறது சாமிநாதனால். கவுண்டரியம், தேவரியம், பிள்ளையியம் இல்லை. பிராமணீயம் மட்டும் ஏன்? என்கிறார்.

    பிராமணீயம் என்ற சொல்லைத் திராவிட இயக்கத்தினரே கண்டுபிடித்து உலவ விட்டதாக நினைக்கிறார். பொதுவாக, இந்திய தொல் வரலாறு என்று நூலகளை வாசித்தால் இச்சொல் பரவலாகக் காணப்படும். பிராமணிசம் என்ற ஒரு அத்தியாயம் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வரலாறு பாடத்தில் காணலாம்.

    அக்காலத்தில் பிராமணர்கள் தமக்கென இந்துமதக்கலாச்சார வாழ்வு வாழ்ந்தனர். அதில் சமூகத்தில் பிறர் ஏற்றுக்கொண்டு தம்மை அங்கீகரிக்கவேண்டும் அல்லது தனியே விட்டுவிட வேண்டுமென்பதே அதன் நோக்கம். அதனால் என்ன விளைவுகள் மதத்தில் சமூகத்தில் என்று விளக்குவதே அந்த அத்தியாயத்தின் நோக்கம்.

    ஆக, இந்துமத்ததிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதுதுதான் பிராமணீயம். பெரும் வைதீக முறைக்கோயிலகளில் பணிபுரிய அவர்களை பிறவிடங்களில் இருந்தெல்லாம் மன்னர்கள் கொணடுவந்தார்கள். சிரிரங்கத்திற்கு வடநாட்டிலிருந்தும் வந்தார்கள். திருவைகுண்டத்தில் நவ திருப்பதிகள் என 9 கோயில்கள் உண்டு. அவற்றை நடாத்த 250 பிராமண்க்குடும்பங்களை பாண்டியன் ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவந்து குடியமர்த்தினான் என்பது அவர்கள் வர்லாறு.

    அப்படி அமர்த்திய மன்னர்கள் அவர்களை தங்கள் வைதீக பிராமண வாழ்வு வாழ வசதியாக கோயில்களைச்சுற்றி அக்ரகாரம் அமைத்தும் பிரமதேயங்கள் வழங்கியும் அவர்களைப்பிறம்க்களிடமிருந்து தனித்து வாழ்ப்பண்ணினான். பிறமக்களோடு கலந்தால் அபச்சாரம் என்பது தொன்றுதொட்ட பிராமணீயம். பிராமணீயம் தலித்துககளை மட்டுமன்றி, மற்றெல்லா ஜாதிமக்களையும் தீட்டு என்றுதான் சொல்லி தனித்திருந்தது. …contd

  6. Avatar
    Kavya says:

    இது பார்ப்ப்னர்களைத் தலைமுறைதலைமுறையாகப்பாதித்தது. நமது காலத்தில்தான் மாற்றம் வந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் அன்று.

    பிறம்க்களிடம் கலக்கா தனித்த வாழ்வு விமர்சிக்கப்படும். இது இயற்கை. எனவே பிராமண்ரல்லாதோர் இயக்கம் விமர்சித்தது.

    கவுணரடரோ, செட்டியார்களொ, முதலிகளோ, பிள்ளைகளோ இப்படி பிறஜாதி மக்கள் இத்தகைய தனித்த வாழ்வு வாழவில்லை. அபச்சாரம் பார்க்கவில்லை. எனவே கவுண்டரியம், தேவரியம், செட்டியாரியம், முதலியும், பிள்ளையிய்ம என்றெல்லாம் பேசப்படவில்லை.

    1. Avatar
      punai peyaril says:

      பொய்.. காவ்யா… தாழ்த்தப்பட்டவர்களின் வீரத்தின் காரணம் பற்றி ஒரு தேவர் தலைவர் சொன்ன காரணத்தை எழுதினால் திண்ணை அனுமதிக்காது,… தமிழகம் கலவர பூமியாகும். நல்ல வேளை அப்போது ஜெ ஆட்சி நடந்தது. ஜாங்கிட் மூலம் அந்த நபருக்கு சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்டு தடுக்கப்பட்டது. வடமாவட்டத்தின் நிம்மதியற்ற நிலைக்கு படையாட்சிகள்- தலித்துகள் மோதலே காரணம்… இராமநாதபுர கலவரத்திற்கு தேவரிசம்… தென்கோடியில் நாடாரிசம்.. என்று பரவிக்கிடக்கிறது. ஏன் மதுரை மடாதிபதியாக தலித் வர போராடுங்கள் அப்போது தெரியும் பிள்ளையிசம் பற்றி.. செட்டியார் வீட்டில் தலித் சமையக்காரர்களைக் காட்டுங்கள்… இளையராஜா என்ற தலித்திற்கு சிம்மாசன் அங்கீகாரம் கொடுத்தது அய்யர்களே… டி டி கே வாசு என்ன செய்தார் அப்போது செம்மங்குடி என்ன செய்தார் என்று கேளுங்கள்.. சுப்புடு இளையராஜா பற்றிச் சொன்னது கேளுங்கள்… உண்மை தெரியும்…

    2. Avatar
      Rajan says:

      பிற ஜாதியை தீண்டாமல் இருப்பது, அடி மட்ட ஜாதிகளிலும் இருக்கிற வழக்கம் தான். இதை பிராமணருக்கு மட்டும் சொந்தமாக ஆக்குவது கண்டிக்க தக்கது. தலித் மக்களில் கூட சக்கிலியர்களும் பறையர்களும் ஒன்று கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், பிராமணர்கள், தங்கள் ஜாதி குள்ளேயே தீட்டு பார்பார்கள். இது தெரியுமா உங்களுக்கு? இன்றளவும் சில ஐயங்கார் வீடுகளில் ஐயர்களை உள்ளே வர விடமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்கள் போன பிறகு அந்த இடத்தை மாட்டு சாணத்தை வைத்து சுத்தம் செய்வார்கள். இதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஏன் நீங்கள் சொல்லும் கௌண்டர்களும், செட்டியார்களும் என மற்ற ஜாதிகளும் கூட தீண்டாமையை தங்களுக்கு கீழே உள்ள ஜாதியில் காட்டுகிறார்கள்.

      சமுதாயத்தில் இருக்கிற ஒரு சில சம்பிரதாயங்களை மிகை படுத்தி, அதை அரசியல் ஆக்கி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை “scape goat” ஆக்குவது தான் திராவிட கழகங்களின் டெக்னிக். இது மிஷனரிகளிடமிருந்து தி.க பெற்ற ஒன்று. ஒரு சமுதாயம் இயங்க, எல்லோரும் கட்டி பிடித்து புரள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவர் தனித்தனியாக இருந்தாலே கூட நன்றாக செயல் படலாம். இப்படிதான் ஒரு காலக்கட்டத்தில் இருந்தார்கள்.

      The term brahminism was invented by the missionary saints during the 16th century. According to them a religion cannot exist without an institution (it was their perception), so they were hunting for a group whom they can categorize as authorities. They found the Brahmins as most orthodox of all and were very strict in praciticing their rituals, and also they did not mingle much with other members in the society. Despite that, the other castes had enormous respect for the Brahmins, so the missionaries considered the Brahmins are authorities of Hinduism. This was not true. The missionaries also had their rife with the Brahmins, as they were the ones who were the most difficult to convert. These are all well documented but no one seems to read them. Professor Prodosh Aich, personally took interest in this subject and went on to research about the missionary role in the architecting the Aryan invasion theory and wrote a book subsequently named “Lies with Long Legs”. There he has documented in detail about the missionaries ,British and their plans to divide india . Go and read them if you have time, and then you’ll know the truth.

      1. Avatar
        Kavya says:

        Rajan!

        Do u write English? or do u cut and paste from others?

        I strongly feel it is a cut-and-paste exercise from a fanatic hindutva follower coz the language is offensively put in the last line. Maybe the original wrtier’s ire against Xian missionaries and their acolytes. If it s urs, who s ur enemy bere? Whoever he s, we must write courteously in our responses.

        The reference cited by u is from the Hindutva lobby. Their brand of Hinduism is militant one. They want that way. So they use offensive language. As I have consistently been pointing out in this forum, history can be easily manipulated and skewed by vested interests. The pro missionaries and the other group the Hindutva groups are at each other’s neckr; and no doubt, both will manipulate history to suit their ends. Therefore, dont cite references from either group please. I have already written in this forum about Trichy Bishop who was cheated by one Ganesh Iyer of Srirangam and reported it to police. Later, there was an Out of court settlement between the 2. The case was that Mr Iyer went to the Bishop and told him that Thiruvalluvar was a Xian and he could prove this beyond doubt by various means. He needed some investment, thats all. The Bishop gave him one lakh for the project. Mr Iyer went absconding with that money. Months passed; but Thiruvalluavar continued to remain either as a Jain or a Vaishanvite Hindu. The Bishop lost patience and reported to Police. Mr Iyer returned the money in an out of court settlement. This was an interesting news in BBC Thamilosai London when it happened.

        Therefore, we must keep aloof from both sides.

        Caldwell wrote books and treatises. The books are spoken about. To rebut him, u need to write equally famous or notorious book proving your theory. When r u going to do that?

        1. Avatar
          Kavya says:

          // பிற ஜாதியை தீண்டாமல் இருப்பது, அடி மட்ட ஜாதிகளிலும் இருக்கிற வழக்கம்தான். இதை பிராமணருக்கு மட்டும் சொந்தமாக ஆக்குவது கண்டிக்க தக்கது. தலித் மக்களில் கூட சக்கிலியர்களும் பறையர்களும் ஒன்று கூட மாட்டார்கள். இவ்வளவு ஏன், பிராமணர்கள், தங்கள் ஜாதி குள்ளேயே தீட்டு பார்பார்கள். இது தெரியுமா உங்களுக்கு? இன்றளவும் சில ஐயங்கார் வீடுகளில் ஐயர்களை உள்ளே வர விடமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்கள் போன பிறகு அந்த இடத்தை மாட்டு சாணத்தை வைத்து சுத்தம் செய்வார்கள். இதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஏன் நீங்கள் சொல்லும் கௌண்டர்களும், செட்டியார்களும் என மற்ற ஜாதிகளும் கூட தீண்டாமையை தங்களுக்கு கீழே உள்ள ஜாதியில் காட்டுகிறார்கள்.//

          ஐயங்காரோ எவரோ அவர்கள் வீட்டுக்குள் என்ன செய்தாலும் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து சென்றவுடன் நாங்கள் கழுவிவிட்டால் அது எங்கள் விசயம். உங்கள் முன்னால் செய்தால் மட்டுமே தவறு. என்று ஐயங்காரகள் கேட்டால் தவறில்லை. அதே சமயம், முன்னாள் வரும் தலித்தை ‘ஒத்திப்போ’ எனபதும், ஐயர் போலி, நாங்கள்தான் உண்மைப்பிராமணாள் என்று பத்திரிக்கைகளில் எழுதுவது, பொதுவிடங்களில் பேசுவது தவறு. ஊரில் உள்ள டீக்கடையில் எல்லாருக்கும் டீ கொடுப்போம். தலித்துக்கு மட்டும் தரமாட்டோம் என்றால் அது தீண்டாமை. அதே தலித்தை என்வீட்டுக்குள் வரவிட மாட்டேன் தீட்டாகும் என்றால் தீண்டாமை கிடையாது. நாங்கள் கட்டிய கோயிலில் தலித்துவரக்கூடாதென்பது தீண்டாமையன்றூ. அக்கோயில் ஊருக்கு நடுவில் எல்லாருக்கும் பொதுவான வழிபாட்டுக்குக்கட்டிவிட்டு தலித்தை மட்டும் வராதே என்பது தீண்டாமை தீண்டாமை பொதுவிடத்தில் காட்டப்படவேண்டும்.

           உங்கள் சொற்களையேப் பாருங்கள். உங்கள் ஜாதியினரரை பிராமணர்கள் என்றழைக்கிறீர்கள். அவர்களைப் பறையர், சக்கிலியர் என்றழைக்கிறீர்கள். சக்கிலியருக்கு அருந்ததியர் என்றும் நாவிதருக்கு மருத்துவர் என்ற பெயரும் பறையருக்கு ஆதிதிராவிடர் என்ற பெயரும்தான் பொதுவிடங்களில் சொல்லப்படவேண்டும். உங்களுக்குப்பிராமணர் அவர்களுக்கு அவர் விரும்பாப்பெயர். மனதிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். உங்கள் பார்ப்பனர்கள் என்பதே தமிழ். பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயரன்று.

          //சமுதாயத்தில் இருக்கிற ஒரு சில சம்பிரதாயங்களை மிகை படுத்தி, அதை அரசியல் ஆக்கி //

          ”சிலசம்பிராதாயங்கள்” உங்கள் பார்வையில். அவை சமூகத்தைக்கெடுக்கும் விசயங்கள் என்பதும் அதை அவர்கள் மட்டுமல்லாமல் மற்றும்பலரும் ஆதிகாலத்திலிருந்தே தட்டிக்கேட்டுவந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.

          சதி, விதவைகளுக்கு மொட்டை போட்டு அவமானப்படுத்துவது, பால்ய விவாஹம், தலித்துக்களின் மீது தீண்டாமைக்கொடுமை – இவையெல்லாம் சம்பிராதாயங்களா?

          1. Avatar
            Rajan says:

            //உங்கள் சொற்களையேப் பாருங்கள். உங்கள் ஜாதியினரரை பிராமணர்கள் என்றழைக்கிறீர்கள். அவர்களைப் பறையர், சக்கிலியர் என்றழைக்கிறீர்கள். சக்கிலியருக்கு அருந்ததியர் என்றும் நாவிதருக்கு மருத்துவர் என்ற பெயரும் பறையருக்கு ஆதிதிராவிடர் என்ற பெயரும்தான் பொதுவிடங்களில் சொல்லப்படவேண்டும். உங்களுக்குப்பிராமணர் அவர்களுக்கு அவர் விரும்பாப்பெயர். மனதிலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம். உங்கள் பார்ப்பனர்கள் என்பதே தமிழ். பிராமணர் என்பது ஒரு ஜாதியின் பெயரன்று.//

            முதலில் உங்கள் பார்வையே தவறு. சக்கிலியர், பறையர் என்பது இழிவான சொல் என்று ஏன் நினைக்குறீர்கள்? நான் அப்படி நினைக்கவேயில்லை. அது ஒரு ஜாதியின் பெயர் அவ்வளவு தான். அந்த ஜாதியை சேர்தவர்கள் அதை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் செர்துகொள்ளவேண்டும். அதை இழிவுபடுத்த எவன் ஒருவனுக்கும் உரிமை இல்லை. ஜாதி என்ற அழகான மனித கட்டமைப்பை அரசியலாக்கி கொச்சை படுத்திவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். இதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் பண்டை கால இந்தியாவை பற்றி (ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வரவுக்கு முன்பு) படிக்கவேண்டும். தரம்பால் எழுதிய “The Beautiful Tree” ஐ படியுங்கள், அப்பொழுது புரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று.

            //அதே சமயம், முன்னாள் வரும் தலித்தை ‘ஒத்திப்போ’ எனபதும், ஐயர் போலி, நாங்கள்தான் உண்மைப்பிராமணாள் என்று பத்திரிக்கைகளில் எழுதுவது, பொதுவிடங்களில் பேசுவது தவறு. ஊரில் உள்ள டீக்கடையில் எல்லாருக்கும் டீ கொடுப்போம். தலித்துக்கு மட்டும் தரமாட்டோம் என்றால் அது தீண்டாமை. அதே தலித்தை என்வீட்டுக்குள் வரவிட மாட்டேன் தீட்டாகும் என்றால் தீண்டாமை கிடையாது. நாங்கள் கட்டிய கோயிலில் தலித்துவரக்கூடாதென்பது தீண்டாமையன்றூ. அக்கோயில் ஊருக்கு நடுவில் எல்லாருக்கும் பொதுவான வழிபாட்டுக்குக்கட்டிவிட்டு தலித்தை மட்டும் வராதே என்பது தீண்டாமை தீண்டாமை பொதுவிடத்தில் காட்டப்படவேண்டும். //

            இதுவும் தவறான கருத்து. முதலில் அந்த காலத்து கிராமத்து கட்டமைப்பே வேறு. ஒவ்வொரு சாதிக்கும் தனி தனி இடம் ஒதுக்கப்பட்டது. பிராமணர்கள் கடைபிடிக்கும் மிகக்கடுமையான ஆசாரங்கள் அவர்களை வேறு ஒருவரிடமும் ஆண்ட விடாமல் செய்தது. அப்படி யாரவது அவரை தொட்டுவிட்டால் அவர் பொய் மீண்டும் குளித்து விட்டு தன பணியை செய்வார். இதை புரிந்த அக்காலத்து மக்கலம் அவர்கள் கிட்டேயே செல்ல மாட்டார்கள். இப்பொழுது அரசியல்வாதிகள், நீங்கள் செல்லும் அதே பொது இடங்களில் பவனி வரும்பொழுது அவரை சுத்தி நிற்கும் கமாண்டோக்களும் இதே “ஒத்திப்போ” வை தானே சொல்கிறார்கள்? அப்பொழுது இது கூட தவறு தானா?
            அதனால் தான் சொல்கிறேன் இந்த மாதிரி விஷயத்தை ஆழமாக பார்க்கவேண்டும். வெறும் மேம்போக்காக குற்றம் சாட்டக்கூடாது. இந்தியர்கள் பண்டை காலத்தில் ஓர்வித வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தார்கள். அதை முற்றிலுமாக அழித்து விட்டு கடந்த சில நூற்றாண்டுகளாக ஆங்கிலேய வாழ்க்கை முறையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம், அதன் விளைவு தான் இவ்வளவு ப்றேச்சனைகளுக்கும் காரணம். இதை தான் ஆங்கிலத்தில் “Clash of the Civilizations” என்பார்கள்.

            சரி இப்பொழுது தலித் ப்றேச்சனைக்கு வருவோம். தலித் என்று அழைக்கபடுவோர் தங்களுக்குலேயே பாகுபாடு பார்ப்பதுண்டு அது தெரியுமா உங்களுக்கு? உதாரணத்துக்கு சக்கிளியர்களுக்கும், பறையர்களுக்கும் உள்ள பாகுபாடு. தங்களை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்று சொல்லும் அவர்களுக்குலேயே ஏன் இந்த பாகுபாடு? இதை எப்போதாவது சிந்தித்தீர்களா? இதை தான் நான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். சமுதாயத்தில் இருந்த இயல்பான விஷயங்களை புரிந்துகொள்ளாமல் அதை அரசியல் ஆக்கியதன் விளைவு தான் இவ்வளவு ப்றேச்சனைகளுக்கும் காரணம்.

            // ”சிலசம்பிராதாயங்கள்” உங்கள் பார்வையில். அவை சமூகத்தைக்கெடுக்கும் விசயங்கள் என்பதும் அதை அவர்கள் மட்டுமல்லாமல் மற்றும்பலரும் ஆதிகாலத்திலிருந்தே தட்டிக்கேட்டுவந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மைகளாகும். சதி, விதவைகளுக்கு மொட்டை போட்டு அவமானப்படுத்துவது, பால்ய விவாஹம், தலித்துக்களின் மீது தீண்டாமைக்கொடுமை – இவையெல்லாம் சம்பிராதாயங்களா?//

            நீங்கள் சொல்லும் இந்த சம்பிரதாயங்கள் பற்றி என்றைக்காவது நீங்கள் முழுமையாக படித்துருக்கீர்கள? நாம் இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கையானது முழுக்க முழுக்க மேற்க்கத்திய வாழ்கை முறையை தழுவியது. இங்கே இருந்துகொண்டு பழைய வாழ்கை முறையை விமர்சிப்பது முட்டாள்தனம். அப்படி பார்த்தல் நீங்கள் கிறிஸ்துவ கன்யாஸ்திரிகளையும் அல்லவா விமர்சிக்கவேண்டும். முதலில் எதையும் முழுமையாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். எதையும் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்கர்தீர்கள். உங்களைபோன்றோர் பகுத்தறிவு, பகுத்தறிவு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்குரீர்கள், ஆனால் அதை பயன் படுத்தவே மாட்டீர்கள? உண்மையை சொன்னால் என்னை ஹிந்துத்வா வாதி என்று சொல்லி ஒதுக்குகுரீர்கள். உங்களை போன்று நானும் ஒரு கால கட்டத்தில் ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை போன்றவற்றை ஒன்றும் தெரியாமலேயே ஒத்திக்கு கொண்டு வந்தேன். ஆனால் அதை பற்றி இன்னும் ஆழமாக படித்த பிறகுதான் அது இன்று எவ்வளவு கொச்சைபடுத்த பட்டு இருக்கிறது என்று புரிந்தது.

        2. Avatar
          Rajan says:

          Kavya,

          //Do u write English? //

          I thought you knew Tamil :-). Looks like you want me to write in English and let me satisfy your request.

          You say I copy-paste from a Hindutva site. Show me the evidence from where I did that and then we can have a separate debate about it. Don’t write non-sense otherwise.

          //The reference cited by u is from the Hindutva lobby. Their brand of Hinduism is militant one. They want that way. So they use offensive language//

          May I know what abusive language that I used? I used a normal language that everyone uses in forums.

          //As I have consistently been pointing out in this forum, history can be easily manipulated and skewed by vested interests.//

          That’s exactly what I’m saying. It equally applies to you as well. History has been distorted a lot. Go and read the proper history first and then make such comments.

          // The case was that Mr Iyer went to the Bishop and told him that Thiruvalluvar was a Xian and he could prove this beyond doubt by various means. He needed some investment, thats all. The Bishop gave him one lakh for the project. Mr Iyer went absconding with that money. Months passed; but Thiruvalluavar continued to remain either as a Jain or a Vaishanvite Hindu. The Bishop lost patience and reported to Police. Mr Iyer returned the money in an out of court settlement. This was an interesting news in BBC Thamilosai London when it happened.//

          Have you ever made any sincere efforts to learn in depth about this case? You are just pointing to some stupid radio news only? How sure are you that those radio waalas made any attempt to research the case before telecasting the program? Go and read the recent interview by Ganesh Iyer himself in “The Hindu” where he clearly says that he was forced by Bishop Arulappa to create forged documents on ancient Tamil scriptures which was shown to the Pope in Vatican. Read another excellent article about this entire incident here.

          http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/archbishop-arulappas-history-project-goes-terribly-wrong-k-p-sunil/

          Have you ever read about Deivanayagam and his ill minded works to distort Tamil sangam literature? Have you ever done any research about other religions and their plans to destroy Hinduism. What do you know about Caldwell and G.U.Pope? Have you ever critically analyzed them?

          You must do your homework first before condemning others. Here are some books I recommend. Go read them to enlighten yourself and then debate with me. Each author in these books talk with complete evidence on whatever they discuss. Their facts are not based on day dreaming.

          1. Breaking India (Rajiv Malhotra)
          2. Lies with Long Legs (Prodosh Aich)
          3. The Beautiful Tree (Dharampal)

          1. Avatar
            Kavya says:

            கடைசி வரியில் இருக்கிறது முறைகேடான ஆங்கிலம் என்று நானெழுதியதைப்படிக்கவில்லை ? அதே முறைகேடாவே மீண்டும் எழுதுகிறீர்கள்:
            Go and read the recent interview by Ganesh Iyer himself in “The Hindu”
            இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், போய்படித்துக்கொள் இந்துவில் கணேச ஐயர் என்ன சொன்னாரென்றுதான் வரும். இல்லை: ஹிந்துவில் போய் படியுங்கள் என்றுவருமா?
            கீழ்க்காண்பதும் கண்ணியமில்லாச் சொற்கள்:
             Have you ever read about Deivanayagam and his ill minded works to distort Tamil sangam literature? Have you ever done any research about other religions and their plans to destroy Hinduism. What do you know about Caldwell and G.U.Pope? Have you ever critically analyzed them?
            You must do your homework first before condemning others. Here are some books I recommend. Go read them to enlighten yourself and then debate with me. Each author in these books talk with complete evidence on whatever they discuss. Their facts are not based on day dreaming.
            1. Breaking India (Rajiv Malhotra)
            2. Lies with Long Legs (Prodosh Aich)
            3. The Beautiful Tree (Dharampal)
            முதலில் நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை உங்களுக்கு.. கணேச ஐயரையும் திருச்சி பிஷப்பையும் பற்றிச் சொன்னது. கிருத்துவர்கள் எந்த லெவலுக்கும் கீழே இறங்குவார்கள் என்பதைக் காட்டவும், இதைப்போல இந்துத்வாவினரும் இறங்குவார்கள் எனவும் இருவரிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்றும், அதாவது அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் நன்றன்று என்பதைச் சொல்லவே கணேச ஐயரின் கதை சொல்லப்பட்டது. ஆனால், உங்கள் ஜாதிப்பற்று உங்களை அப்படிப்பார்க்கவிடாமல் உங்கள் ஜாதிக்காரர் ஒருவர் செய்த ஏமாற்றைச்சுட்டிக்காட்டி உங்கள் ஜாதியையே இழிவுபடுத்துகிறேன் என்று எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். கால்டுவெல், தேவநாயகம், போப் எல்லாரையும் உங்கள் எதிர்க்கட்சியினர்கள் படித்துக்கொள்வார்கள். ராஜீவ் மல்ஹோத்ரா, தரம்பால் இவர்களை இந்துவாவினர் படித்துக்கொள்வார்கள். மற்றவர்கள் ஏன் சந்தர்ப்ப சுயநலவாதம் வரலாற்றாய்ச்சியாக வேடம் போடுவதைப்படிக்க வேண்டும்? தயவுசெய்து, மல்ஹோத்ராவைப்படி,, அரவிந்தன் நீலகண்டனைப்படி, தரம்பாலைப்படி, என்றெல்லாம் திண்ணைவாசகர்களிடம் சொல்லாதீர்கள். எவர் உங்களைக் கால்டுவெல்லைப்படி, போப்பைப்படி, தேவநாயப்பாவாணரைப்படி என்கிறார்களோ அவர்களிடம் போய் சொல்லிக்கொள்ளுங்கள்.
            //You must do your homework first before condemning others. Here are some books I recommend//
            ஆங்கிலம் எழுதத்தெரியும் என்றால் இதுவா அந்த ஆங்கிலம்? தெரியாமலே இருந்திருக்கலாமே? முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எப்படி கண்ணியமாக பொதுமேடையில் எழுத வேண்டும் எனப்படித்துக்கொண்டுவாருங்கள்.

  7. Avatar
    punai peyaril says:

    அச்சமில்லை அச்சமில்லை எனும் நிலை முழுதாய் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. முன்னேறிய ஜாதியினரை பார்த்து பின் ஜாதியினர் முன்வர வேண்டும் என்ற நோக்குடன் செய்த தகிடுதத்தங்களை உள்ளது உள்ளபடி இந்த கட்டுரையாளர் எழுதியுள்ளார். பாப்பான் பாப்பான் என்றும் , அந்த ஜாதியினரை கேவலமாகப் பேசிய போது, கூழைக்கும்பிடு போகாமல், மூளையால் உலகின் பல பகுதிக்கும் இடம் பெயர்ந்தனர். எல்லாவற்றிற்கும் விரட்டப்பட்ட ஜாதி இன்று தான் ஓடியது நிப்பாட்டி நின்று நிமிர்ந்து புஜபலத்தை காட்டலாமா என்று நினைக்கிறது. வாஞ்சிநாதன் அந்த ஜாதியில் வந்தவர் தான். மீசை முறுக்கி பாரதியும் அந்த ஜாதி தான்.. தொடந்த உடற்பயிற்சி அவர்களுக்கும் உரமேற்றும்.. இன்று உலகிற்கே இந்தியாவின் உயர்ந்த பிம்பமாய் நிற்கும் மோடி, 1970களில் இருந்து இந்திரா எமர்ஜென்சி, கிளைவ் ஹாஸ்டல், திக, திமுக அராஜகங்கள், எம்ஜிஆரில் இடர்கள், காங்கிரஸ் பிஜேபி கோமாளித்தனங்கள் என அனைத்தையும் உரித்துப் போட்ட சோ , கிணற்றுத்தவளை சினிமாவை உலகமெங்கும் எடுத்துச் சென்ற மணிரத்னம், கமல்,எல்லாம் அந்த சாதி தான். ஏனய்யா தற்போது நியூட்டனின் 350வருட புதிர்களை வழிகண்ட விடைதந்தவன்… என பலர் பலர்…. ஆர். எஸ். எஸ்ஸில் எல்லா இந்துக்களும் – எந்த அரசியல் கட்சியில் இருப்பினும், நாத்திகனாக இருப்பினும்- சேர வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். சாலையில் வந்து கடற்கரையில் வந்து, காலையில் நித்திரை கெடுத்து என அடையாளம் காண்பவர்களுக்கு பதிலாக, அனைத்து இந்துக்களும் தங்கள் அடையாளங்களுக்க்கா சாலையில் கடற்கரையில் வருடம் ஒரு நாள் அடையாள இறை வழிபாடு செய்ய வேண்டும். அப்போது தெரியும் இந்த தேசத்தின் வலிமை. கருணாநிதி மருமகள் துர்காவின் பூஜை அறை ஒன்று போதும் கருணாநிதி நிலைக்கு… வெ.சா இந்த மாதிரி எழுதுங்கள்… இனி உங்களிடம் இழக்க என்ன இருக்கிறது.. வயதான கிழம் அல்ல…. வைரம் பாய்ந்த கிழம் என்று புரிய வையுங்கள்… தாழ் பணிவேன்… நன்றி…

  8. Avatar
    Kavya says:

    திராவிட இயக்கம் பிராமணரல்லாதாருக்காக தோன்றிய இயக்கம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்களின் சீற்றம் இயற்கையே. ஒரு வழக்கில் இருவர் தொடர்புடைய்வர்கள்: பாதிக்கப்பட்டவர்; பாதித்தவர். இவர்களுள் எவர் அவ்வழக்கப்பற்றிப்பேசினாலும் மற்றவர் 100/100 குற்றம்செய்தவர் என்றுதான் வாதாடுவர்.
    சாமிநாதன் பாதிக்கப்பட்டவர் சார்பாக எழுதும் கட்டுரையே இது. மலர்மன்னன் திராவிட இயக்க வரலாறு எழுதப்போகிறார் என்று திண்ணையில் சொன்னவுடன் எனக்கு ஒரு நகைப்புத்தான் வந்தது. எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக நோகுபவரும் அவர் இனத்தவரானவரும் எப்படி இவ்வரலாற்றை நேர்மையாக எழுதமுடியும் எனப்தே.

    இவ்வரலாற்றை இருசாராரும் எழுதமுடியாது. எழுதினால் அது ஒருதலைப்பட்சமான வரலாறாக்த்தான் இருக்கும்.

    இருவரையும் சாரா மூன்றாமவரே எழுத முடியும்.

  9. Avatar
    தங்கமணி says:

    காவ்யா எழுதுவது நகைப்புக்கிடமானது.
    திராவிட இயக்கம் தன்னைப் பற்றி தானே எழுதும் எந்த ஒரு எழுத்தும் இதே போல அவநம்பிக்கையுடன் திராவிட இயக்க ஆதரவாளர்களால்பார்க்கப்படுகிறதா? அல்லது காவ்யாவால் பார்க்கப்படுகிறதா?

    இன்றைக்கு வரலாறு என்பதே திராவிட இயக்கத்தினர் எழுதிய வரலாறாகவே இருக்கும் போது, அதனை பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்காத காவ்யா போன்றவர்கள், மறுதரப்பு வாதத்தை இப்படி அமுக்க நினைப்பது அவலமானது.

    இதுவரை திராவிட இயக்க வாதங்கள்தானே படி ஏறி இருந்தன. இனிமேலாவது அவமதிக்கப்பட்ட பிராம்மணர்கள் தங்கள் வாதத்தை தங்களது வரலாற்றை வைக்கட்டும்.


    மேலும் பிராம்மணரல்லாதவர்கள் மத்தியிலும் ஏராளமானவர்கள் திராவிட இயக்க கொள்கைகளை ஒப்புகொள்ளவில்லை என்பது உண்மை.
    அதே போல பிராம்மணர்கள் மத்தியிலும் திராவிட இயக்க கொள்கைகளை ஒப்புகொண்டவர்கள் உண்டு என்பதும் உண்மை.

    இருபுறத்திலும் இவைகளுக்கு அப்பால் நின்று அகடமிக்காக ஆய்ந்தவர்களும் உண்டு.

    அமெரிக்க வரலாற்றை கருப்பினத்தவரோ வெள்ளையரோ எழுத முடியாது. அதனை வேறொருவர்தான் வந்து எழுத வேண்டும் என்பது போன்ற அபத்தமே மேலே காணும் காவியாவின் எழுத்து.

    1. Avatar
      Kavya says:

      //திராவிட இயக்கம் தன்னைப் பற்றி தானே எழுதும் எந்த ஒரு எழுத்தும் இதே போல அவநம்பிக்கையுடன் திராவிட இயக்க ஆதரவாளர்களால்பார்க்கப்படுகிறதா? அல்லது காவ்யாவால் பார்க்கப்படுகிறதா?//
      இன்றைக்கு வரலாறு என்பதே திராவிட இயக்கத்தினர் எழுதிய வரலாறாகவே இருக்கும் போது, அதனை பற்றி எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்காத காவ்யா போன்றவர்கள், மறுதரப்பு வாதத்தை இப்படி அமுக்க நினைப்பது அவலமானது.

      பதில்: அவர்களுள் ஒருவர் இங்கு எழுதட்டும். அப்புறம்தானே காவ்யா எழுதுவதா இல்லையா என்று தெரியும். ஹைப்போதட்டிக்கல் இமாஜினேஷன். அவர்களுள் ஒருவர் இங்கு வந்து எழுத மாட்டார் என்பதையும் நான் சொல்லிவிட்டேன். திண்ணை அவர்களால் படிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆர்? திமுக ஸ்போன்ஸோர்டு திராவிட இயக்க வரலாற்றை எழுதியவர்களதான்.

      //இதுவரை திராவிட இயக்க வாதங்கள்தானே படி ஏறி இருந்தன. இனிமேலாவது அவமதிக்கப்பட்ட பிராம்மணர்கள் தங்கள் வாதத்தை தங்களது வரலாற்றை வைக்கட்டும்.//

      பதில்: கண்டிப்பாக. அதே சமயம் அஃது அவர்களுக்குச்சாதகமாகத்தான் இருக்கும். அதை நேர்மையான வரலாறாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதும் உண்மை. இதை மறுக்கிறீர்களா? முடிந்தால் செய்யுங்கள்.

      //மேலும் பிராம்மணரல்லாதவர்கள் மத்தியிலும் ஏராளமானவர்கள் திராவிட இயக்க கொள்கைகளை ஒப்புகொள்ளவில்லை என்பது உண்மை.அதே போல பிராம்மணர்கள் மத்தியிலும் திராவிட இயக்க கொள்கைகளை ஒப்புகொண்டவர்கள் உண்டு என்பதும் உண்மை.//

      பதில்: எக்ஸாட்லி. நானும்தான் அக்கொள்கைகளில் பலபல ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு என்னால் சொல்லப்படுவது யாதெனில் அக்கொள்கைகள் என்னென்ன? அவற்றால் தமிழ்ப்பார்ப்பனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பதும், அப்பார்ப்னர்களில் அவலக்குரலாகவே இக்கட்டுரை அவர்களுள் ஒருவரால் போடப்பட்டிருக்கிறதென்பதும் மலர்மன்னன் எழுதப்போகும் வரலாறு அதே அவலத்தில் வெளிப்பாடாக இருக்குமெனபதுமே.

      பெரியாரையும் திமுகவையும் பற்றி எழுதிவிட்டால், அவர்களை ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் பண்ணுகிறேன் என்று நினைத்தெழுவது மயோப்பிக் பார்வையாகும்.

      //இருபுறத்திலும் இவைகளுக்கு அப்பால் நின்று அகடமிக்காக ஆய்ந்தவர்களும் உண்டு.//

      பதில்: ஃபாண்டாஸ்டிக். அவர்களுள் சிலரை நான் படித்திருக்கிறேன். லிவர்பூல் ஃப்ரொபஸர் கிருஸ்ணமூர்த்தி (தமிழ்ப்பார்ப்ப்னர்); கொலம்பியா பேராசிரியர் நிகோலஸ் டிர்க. இந்திய சமூகவியல் பேராசிரியர் கொல்முட்டி போன்றவர்கள்.

      என் ஒரே கருத்து ஒரு ஆவ்ரேஜ் தமிழ்பார்ப்பனரோ ஒரு ஆவரேஜ் திராவிட சார்பாளரோ இவ்வரலாறை எழுத தகுதியில்லாதவர் என்பதே. ஆனால் அவர்கள் எழுதலாம் அவலக்குரலும் நமக்குக் கேட்க வேண்டாவா?

      //அமெரிக்க வரலாற்றை கருப்பினத்தவரோ வெள்ளையரோ எழுத முடியாது. அதனை வேறொருவர்தான் வந்து எழுத வேண்டும் என்பது போன்ற அபத்தமே மேலே காணும் காவியாவின் எழுத்து.”

      பதில்: மேலே சொன்ன பதிலை மீண்டும் படிக்கவும். அந்த கருப்பர் அந்த வெள்ளையர் ஆவ்ரேஜ ஆக இருந்தால் அதில் நேர்மையிருக்காது என்பதே வாதம்.

      ஒரு குறிப்பு: ஆவ்ரேஜ அல்லாதவர்கள் நன்கு கற்றறிந்தவர். உண்மையை காய்தல் உவத்தல் இல்லாமல் சொல்வோரே. தங்கமணி, தமிழ்பார்ப்பனர்களுள் பலர் அப்படி உண்டு. அவர்களை நீங்கள் படித்தால் பெரியாரை விட கடுமையாக வெறுக்கவேண்டும்.; எ.கா. தீக்கதிர் ஆசிரியர் முத்தையா (ஐயர் பிறப்பால்), ராமாயண ஆராய்ச்சி எழுதி அமிர்தலிங்க ஐயர், மற்றும் பல கம்யூனிஸ்டுகள்.

  10. Avatar
    தங்கமணி says:

    இங்கே எழுதும் மலர்மன்னன், வெசா போன்றவர்களை ஆவரேஜ் என்று சொல்கிறீர்களா?
    அப்படியென்றால், தீக்கதிர் ஆசிரியர், அமிர்தலிங்க அய்யர் போன்றோரையும் பலர் ஆவரேஜ் என்றும் சொல்லலாம்.
    இவை உங்கள் பார்வை. ஏனெனில் நீங்களும் ஆவரேஜ் திக கொள்கை ஆதரவாளராகத்தான் எனக்கு தோன்றுகிறீர்கள்.

  11. Avatar
    paandiyan says:

    now this article goes Bhramin VS non-Bhramin only. admin should take some action otherwise all article goes this way only in thinnai. X people everywhere to divide hindu community and they are happily doing this job past few hundred years…

  12. Avatar
    Ram says:

    dr. Sathyavaani Muthu one of rhe DMK leaders remarked” can you find case in which a brahmin had killed a Dalit? All these atrocities against the Dalits were done / are done only by non Brahmin caste Hindus”. For making these remarks she was un ceremoniously sent out of DMK Because truth is a bitter pill

    1. Avatar
      K A V Y A says:

      A dekko at the life and times of Sattavani Muthu reveals the following vignettes:

      In the opposite side of Cong, it was she who first emerged as the hope of Dalit masses of TN. She was patronized as such by Annathurai. She initially lived upto that reputation or expectaton. But soon she was understood as an empty woman with no ken of her own. She could at best be a toady to someone; no wonder she attached herself to the rising star of DMK and won a lot of power and pelf too. Later on, when the star began to diminsih, she quickly hittched onto the wagon of MGR; and rose enough to become a Union Minsiter.

      Dalits understood her selfishness. When she was with the initial DMK, dalits looked upto her as their savior. She let them all as her hidden agenda was only to taste power using dalit card in politics.

      Truth to tell, she cleverly exploited the slot for a dalit leader lying vacant in DMK just as Kakkan did under Cong. All these self styled dalit leaders had only the aim of their own success at the expense of all dalit masses of TN.

      Thirumaavalavan may be said to have emerged as a good dalit leader in his own stride, with enormous self respect. It is good to see him getting adorned by them, although he is still yet to mature as a good leader as some of his actions r immature.

      Ram, please note! For dalits to hate Brahmins is to hate a principle, not persons. Practice wise, they don’t hate them.

      If a dalit leader says he likes brahmins as they don’t kill them, he is not being true to his salt. He may be true to realities of current society. Because their forefathers for generations were wronged by the use of religious theory devised by brahmins. For that historical wrong, dalits shd hate the brahmin. The wrong is yet to go.

      If satyavnai muthu said brahmins did not kill dalits, it is only others who r doing, she hates the practice, not the principle. Thus, she was being undalitistic.

      Well, Thirumavalavan shd hate both practice as well as the principle. If a choice s given to him to pick up only one, then he will pick up the principle only. For, practice can be tamed as is being done in Madurai and Ramnad district by pallars; but principle cannot be overcome unless one quits Hindu religion.

      An example is pertinent to point out to you here. Instead of elaborating on it for fear of encroaching space, I invite you to go to TOI today to read the news about dalit priest in Kallukkudi Madurai dist. Google it, if u desire.

  13. Avatar
    Rajan says:

    The problem with people like Kavya and the DK group in general is that they are treating Brahmins as authorities of Hinduism just akin to the Pope in Christianity. This very idea itself is severely flawed. It was a concocted one by morons like Monier Williams who said the following:

    “When the walls of the mighty fortress of Brahmanism are encircled, undermined and finally stormed by the soldiers of the cross, the victory of Christianity must be signal and complete”

    The very idea of targeting Brahmins for the DK group came from the missionaries and colonialists. I’m not saying that the Brahmins are perfect. In fact the biggest blunder they did in the past was leaving their vaideeha dharma and went on the lookout for government jobs under the British during the 18th century. They did this out of poverty deliberately introduced by the British at that time in India. Since they had good memory power (a skill obtained via the chanting of Veda mantras) it attracted the British and they started recruiting them in large numbers. Once they established themselves strongly in govt sector, they gathered money and power and eventually started dominating which is quiet natural. (Aren’t our politicians doing the same today?)

    But the ancient Brahmins neither had money nor power. How could they (such a small percentage of people; without money and power) have dominated all other castes for thousands of years? It’s simply illogical. Has anyone ever studied about the life style of an ancient Brahmin? Do you know how simple and terrible it was? He was not allowed to earn or save even food for the next day. Everything from land, food, to clothing and shelter etc were donated to him by the Kings and other castes. His only job was to chant the Vedas. Modern day community Brahmins can’t even come close to the lifestyle of traditional Vedic Brahmins.

    I do accept the faults with modern Brahmins, but putting the entire blame on them for everything worse that happened in the country is completely unjustified. People who do so are doing it just out of vested interests.

    Let’s stop doing such atrocities and put more efforts in understanding our real history. Let’s study history from the perspective of an Indian and not from the point of view of a Western elite. Only then we’ll be in a better position to understand our history. The DK has largely been a British mouthpiece for the past century or so. They are ideologically western in their thought process and they can never understand our history properly. The DK will continue to target the Brahmins and I don’t have an inch of a doubt about the same. The day they stop doing it, they’ll cease to exist.

  14. Avatar
    Kavya says:

    Not only DK, the communists too have piled charges against the Brahmins and Brahminism. Your thinking that only it is only DK, is wrong. The criticism is not a century old; but millenna old.

    The motives behind DK are questionable as u said. But v cant question the Communists and others. Apart from western scholars, and apart from recent writings, the Brahmins were criticised for their blind and fanatical orthodoxy from ancient times by eastern scholars or citics, who include the Brahmins as well. The sharp criticism helped Brahmins give up many of their perverse practices. Dont ask me what they are, please. You can scourge libraries and read them yourself.

    U shd delink the criticism of Brahmins and Brahminism from DK and like minded crtics and see it beyond them.

    DK may put all the blame on the Brahmins. Others don’t. Others are able to differentiate between the ism, the hard core practitioners of the ism; and the common folk from the caste.

    How the ancient brahmins actually lived we dont know. U think you know. I am bemused at this cocksureness.

    As I have written to Ram regarding Satyavani Muthu, there is practice as well as principle. Principle may be holy; practice is ugly oftentimes. So far as brahminism is concerned, the charge that the principle itself at many places are ugly. Not only Manu, but in other places too, the Brahminism hurt ppl. The ancient Tamil brahmins didn’t even spare the saints from their barbs of their orthodoxy. History, not authored by DK, pl mind, but by others, including the saints, say it all much to our horro.

    For such unacceptable ‘ism’, criticism has been levelled; that appears to be against the whole community itself for a person like you who are rooted in his caste fanatically. DK might have used such words as to make you feel that way; for which you should take them to task.
    Just print what you have written here in English; may be a Tamil version of it is ideal- and send it by speeed post to K Veeramani, the DK leader, or to Karunanidhi if you think it fit. It is they who should answer you. If you dont like to do that, take it up through Tamil Brahmins Organisation, or thorugh your Hindutva organisations which has members from your caste some of whom may sympathise with you. With them, you can ghero karunanithi and Veermani.

    1. Avatar
      Rajan says:

      I never mentioned about communists because that discussion never came. That doesn’t mean I’ve not read about them. The communists are hidden christians and want to create a Russia out of India. Karl Marx is their God. They may have attacked the Brahmins but that’s not their end goal. Both DK and the communists want to destroy and distort the Hindu culture but in different ways. Communists are alien destructive forces while DK is a local destructive force, but both of their ideologies are inspired from the West. “இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறின இரு வெவ்வேறு மட்டைகள் தான்”.

      The whole point that I’m trying to convey is about targeting Brahmins alone. You talk bad about extreme rituals by Brahmins in past days, why don’t you criticize the Muslims on how the muslim women are being oppressed? They are not even allowed to dress according to their wish. The muslims commit so many crimes in the name of religion. Why is no one condemning that? There are so many crimes committed by the christian padris and imams which goes unnoticed but if there is a crime committed by a Hindu saint, the media goes gaga about it. Is this not a sign of vengeance against the Hinduism? Do we really take pains to analyze such things? Or are we at least aware of such things? Have we ever bothered about inculturization techniques deployed by the Christians? Look at the modern churches in metro cities. They have the dwajastambhas (kodi maram), they build churches in hills like temples, go for padayatras as Hindus do, call the Bible as Vedas etc. Has anyone even bothered to ask why or what’s the intention behind the same? We never care about such things.

      //Apart from western scholars, and apart from recent writings, the Brahmins were criticised for their blind and fanatical orthodoxy from ancient times by eastern scholars or citics, who include the Brahmins as well. //

      Are the Brahmins only ones who follow such blind rituals? Are the muslims not doing it? They have been doing it for the past several centuries. Why target only the Brahmins is my question. Even the non-brahmin Hindus follow such rituals until today. Why are they not being targeted? This is why I repeat, there is clear cut motive behind all this. That motive is what is being discussed in the book “Breaking India” by Rajiv Malhotra. Every Indian needs to understand the same is my wish. In the name of secularism, Christians and Muslims are doing atrocities but no one seems to bother. The DK and the communist group know this very well, but they’ll not do anything about it as they are playing vote bank politics.

      //For such unacceptable ‘ism’, criticism has been levelled; that appears to be against the whole community itself for a person like you who are rooted in his caste fanatically//

      Funny. Don’t you think this type of language is abusive? You were the one who criticized my comments as being offensive in another post of yours, but now you are doing the same.

      //Just print what you have written here in English; may be a Tamil version of it is ideal- and send it by speeed post to K Veeramani, the DK leader, or to Karunanidhi if you think it fit. It is they who should answer you. If you dont like to do that, take it up through Tamil Brahmins Organisation, or thorugh your Hindutva organisations which has members from your caste some of whom may sympathise with you. With them, you can ghero karunanithi and Veermani.//

      The discussion is between you and me and not with the DK leaders. You have no business to ask me to contact them. If you don’t want to respond to my comments, you have every right to ignore or reject me. I’m only voicing my concerns on this blog which I think is contradictory to your view point. I’m always open to a healthy debate, but it is you I think who is not.

  15. Avatar
    smitha says:

    Kavya,

    Thirumaavalavan may be said to have emerged as a good dalit leader in his own stride, with enormous self respect.

    Thirumalavan & self respect? U must be kidding.

    He ranted against the congress for abetting Sri lanka in the war against LTTE, but is still an MP & a member of that alliance. He went & met Rajpakse & accepted gifts from him.

    U call these self respect?

  16. Avatar
    Kavya says:

    Thirumaavalavan (by the way, what a great name he has ! Hats off to his parents for naming him such! It is the name of the holy father of Thirumazhiyisai alwar), is seen here from the perspective of Tamil dalits. Vaarathu vantha maamani may be a good description from their view. So, there s a concerted campaign going on to project him as the sole leader.

    By becoming their sole leader, it is self respect for dalits. By acceping other party leaders who have their own caste affiliation + liabilities, the dalits have to abdicate their self respect. The word self respect shd be understood in that perspective only.

    I have already referred to some of his acts being immature. Havnt u noticed that? It means he is taking up causes which are not necessary for him right now. If he does, he will be ‘used’!

  17. Avatar
    Rajan says:

    காவ்யா,

    //கடைசி வரியில் இருக்கிறது முறைகேடான ஆங்கிலம் என்று நானெழுதியதைப்படிக்கவில்லை ? அதே முறைகேடாவே மீண்டும் எழுதுகிறீர்கள்:
    Go and read the recent interview by Ganesh Iyer himself in “The Hindu”
    இதைத் தமிழில் மொழி பெயர்த்தால், போய்படித்துக்கொள் இந்துவில் கணேச ஐயர் என்ன சொன்னாரென்றுதான் வரும். இல்லை: ஹிந்துவில் போய் படியுங்கள் என்றுவருமா?
    கீழ்க்காண்பதும் கண்ணியமில்லாச் சொற்கள்://

    முதலில் ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழிப்பெயர்ப்பது தவறு. அதன் அர்த்தம் புரிந்துகொண்டு பிறகு அதை தமிழாக்கம் செய்ய வேண்டும். ஆங்கிலம் ஒரு மரியாதை கெட்ட மொழி. நீ என்ற வார்த்தைக்கும் நீங்கள் என்ற வார்த்தைக்கும் “You” என்று தான் சொல்வார்கள். நான் ஒழுங்காக தமிழில் தான் எழுதி வந்தேன், என்னை ஆங்கிலத்தில் எழுத சொன்னதே நீங்கள் தான். சரி இப்பொழுது உங்கள் வாதத்துக்கு வருவோம். நான் எந்த விதத்தில் கண்ணியக்குறைவாக எழுதினேன்? கணேச ஐயர் ஹிந்து பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலை தானே படிக்க சொன்னேன். அதில் என்ன தவறு இருக்கின்றது? அதுவும் எதற்காக சொன்னேன்? நீங்கள் அந்த சம்பவத்தை ஒருபக்கமாக மட்டும் பார்த்துவிட்டு கணேச ஐயர் ஐ மட்டும் குற்றம் சாட்டினீர்கள். அதை தான் நான் விமர்சித்து உங்களை அந்த நேர்காணலை படிக்க சொன்னேன்.

    //முதலில் நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை உங்களுக்கு.. கணேச ஐயரையும் திருச்சி பிஷப்பையும் பற்றிச் சொன்னது. கிருத்துவர்கள் எந்த லெவலுக்கும் கீழே இறங்குவார்கள் என்பதைக் காட்டவும், இதைப்போல இந்துத்வாவினரும் இறங்குவார்கள் எனவும் இருவரிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்றும், அதாவது அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் நன்றன்று என்பதைச் சொல்லவே கணேச ஐயரின் கதை சொல்லப்பட்டது. ஆனால், உங்கள் ஜாதிப்பற்று உங்களை அப்படிப்பார்க்கவிடாமல் உங்கள் ஜாதிக்காரர் ஒருவர் செய்த ஏமாற்றைச்சுட்டிக்காட்டி உங்கள் ஜாதியையே இழிவுபடுத்துகிறேன் என்று எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். கால்டுவெல், தேவநாயகம், போப் எல்லாரையும் உங்கள் எதிர்க்கட்சியினர்கள் படித்துக்கொள்வார்கள். ராஜீவ் மல்ஹோத்ரா, தரம்பால் இவர்களை இந்துவாவினர் படித்துக்கொள்வார்கள். மற்றவர்கள் ஏன் சந்தர்ப்ப சுயநலவாதம் வரலாற்றாய்ச்சியாக வேடம் போடுவதைப்படிக்க வேண்டும்? தயவுசெய்து, மல்ஹோத்ராவைப்படி,, அரவிந்தன் நீலகண்டனைப்படி, தரம்பாலைப்படி, என்றெல்லாம் திண்ணைவாசகர்களிடம் சொல்லாதீர்கள். எவர் உங்களைக் கால்டுவெல்லைப்படி, போப்பைப்படி, தேவநாயப்பாவாணரைப்படி என்கிறார்களோ அவர்களிடம் போய் சொல்லிக்கொள்ளுங்கள்.//

    சபாஷ் என்ன ஒரு வேடிக்கை. பிராமணர்களை ஆதரிப்போர் எல்லோரும் பிராமணர்களா? நீங்கள் கூட தான் பிராமன சம்பிரதாயங்களை எதிர்க்குரீர்கள், அதற்காக நான் உங்களை தலித் என்று சொல்ல முடியுமா அல்ல பிராமன எதிப்பாளர் என்று தான் சொல்லி விடமுடியுமா? நான் எப்பொழுதுமே கணேச ஐயர்ஐ ஆதரித்து பேசவே இல்லை. அவர் ஒரு “fraud”. வேறு ஒருவரின் பாதகமான செயலுக்கு துணை போனவர். அந்த வேறொருவர் (பிஷப் அருளப்பா) சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்ததால் இதில் மாட்டிகொள்ளாமல் தப்பித்து விட்டார். நீங்கள் என்னவோ கணேச ஐயர் தான் பிஷப்பை ஏமாற்றிவிட்டார் என்பது போல் எழுதி இருந்தீர்கள், அதை தான் நான் வன்மையாக கண்டித்து உங்களுக்கு ஒரு ஆதாரப்பூர்வமான தளத்தை சுட்டி காட்டினேன். இது ஏன் உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்கு இன்னும் கிறிஸ்துவ மிச்ஷனரிகளின் நிலைப்பாடு சரியாக புரியவில்லை. அதற்காக தான் உங்களை சில நூல்களை படிக்க சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

    //முதலில் நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை உங்களுக்கு.. கணேச ஐயரையும் திருச்சி பிஷப்பையும் பற்றிச் சொன்னது. கிருத்துவர்கள் எந்த லெவலுக்கும் கீழே இறங்குவார்கள் என்பதைக் காட்டவும்,//

    இதை நன்கு புரிந்து கொடுஇருக்கீர்கள், மிக்க மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் சொன்ன முதல் கருத்து (“I have already written in this forum about Trichy Bishop who was cheated by one Ganesh Iyer of Srirangam and reported it to police. Later, there was an Out of court settlement “) கணேஷ் ஐயர் தான் பிஷப்பை ஏமாற்றினார் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னீர்கள். அதைதான் நான் கண்டித்து உங்களை அந்த வலைத்தளத்தில் உண்மையை அறிந்துகொள்ள சொன்னேன்.

    //இதைப்போல இந்துத்வாவினரும் இறங்குவார்கள் எனவும் இருவரிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்றும், அதாவது அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் நன்றன்று என்பதைச் சொல்லவே கணேச ஐயரின் கதை சொல்லப்பட்டது//

    முதலில் நீங்கள் ஹிந்துத்வா ப்றேச்சனையும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய ப்றேச்சனையும் ஒப்பிடவே முடியாது. ஹிந்துத்வா குழுவை சேர்ந்தவர்கள் கிளப்பும் ப்றேச்சனைகளில் அந்நிய நாட்டின் சதி கிடையவே கிடையாது. ஆனால் மற்ற இரு மதத்தினர் செய்யும் ப்றேச்சனையில் அந்நிய நாட்டு சதி இருக்கிறது. இதை தான் நான் சொன்ன புத்தகங்களில் அந்த ஆசிரியர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஹிந்துத்வா வாதிகள் அதிகளவில் வன்முறையில் இறங்குவதற்கு ஒரு முக்கிய காரணமே மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் செய்யும் மதமாற்றமே. மதமாற்றம் என்றால் ஏதோ ஒரு சில பேர் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு செல்வது என்று சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. அதற்க்கு பின்னால் ஒரு பெரிய சதியே இருக்கிறது. இதை தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுரிதினேன்.

    //You must do your homework first before condemning others. Here are some books I recommend . ஆங்கிலம் எழுதத்தெரியும் என்றால் இதுவா அந்த ஆங்கிலம்? தெரியாமலே இருந்திருக்கலாமே? முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எப்படி கண்ணியமாக பொதுமேடையில் எழுத வேண்டும் எனப்படித்துக்கொண்டுவாருங்கள்.//

    நான் இந்த வாக்கியத்தை எழுதியதில் என்ன தவறு? இதில் என்ன கண்ணியக்குறைவை நீங்கள் கண்டு விட்டீர்கள்? ஒரு விடயத்தை முன் வைக்கும்முன் அதை ஆழமாக புரிந்து கொண்டு பிறகு அதை முன்மொழியுங்கள் என்று தானே சொன்னேன்? அதை தானே “do your homework first” என்று ஆங்கிலத்தில் சொன்னேன். இதைவிட எப்படி கண்ணியமாக எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்களை எப்போதுமே பாராட்டி சீராட்டி பேச இது ஒன்றும் அரசியல் மேடையல்ல. வேண்டுமானால் எதாவது “spoken english” கோர்சை ரெகமன்ட் செய்யுங்கள், இன்னும் கண்ணியமாக எழுத முடியுமா என்று முயற்சித்து பார்க்கிறேன் :-)

    1. Avatar
      K A V Y A says:

      //உங்களை எப்போதுமே பாராட்டி சீராட்டி பேச இது ஒன்றும் அரசியல் மேடையல்ல//

      ஆனால் பொது மேடை. குறைந்த பட்சம் நாகரிகம் எதிர்ப்பார்க்கப்படும் மேடை.

      1. Avatar
        Rajan says:

        அதைத்தான் திரும்ப திரும்ப கேட்க்கிறேன். என் பேச்சில் அப்படி என்ன அநாகரீகம் கண்டுவிட்டீர்கள்? இப்படி வடிவேலு மாதிரியே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி?

        1. Avatar
          K A V Y A says:

          கண்ணியமாக எழுத முயற்சித்துப்பார்க்கிறேன் என்றெழுதிவிட்டீர்களே போதும்.

          என்ன அநாகரீகத்தைக்கண்டுவிட்டீர்கள் என்பதை இப்படி விளக்குகிறேன்.

          ஹோம் வொர்க் பண்ணிவிட்டு வந்து எழுதுங்கள் என்ன ஹோம் வொர்க்? தரம்பாலையும் அரவிந்தன் நீலகண்டனையும் மல்ஹோத்ராவையும் படித்துவிட்டு வந்துவிட்டு எழுதனும். இதுதானே ஹோம் வொர்க்?
          இவர்களுக்கு அந்த பிஷப்புக்கும் என்ன வேறுபாடு? அவர் திருவள்ளுவர் கிருத்துவர் என்ற முடிவோடு வாரும் ஐயரே அதற்காக பிடியும் ஒரு லட்ச உருபா” என்றாதாக செய்தி.

          இவர்கள் தன் முடிபுகளை முதலில் எடுத்துக்கொண்டு பின்னர் வரலாறு எழுதுகிறார்கள். முன்முடிபுகளோடு வரலாறு எழுதுவார். படித்துக்கொண்டு வா ஹோம் வர்க் பண்ணிக்கொண்டுவா என்று ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்.
          போப்பை படித்துக்கொண்டுவா, கால்டுவெல்லையும் படித்துக்கொண்டுவா என்று நான் ஆங்கிலத்தில் எழுதினால் அநாகரிகம் தெரிகிறதா இல்லை கண்ணியம் தெரிகிறதா?

          தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் கற்றவன் பேச்சன்று இது. இது அடாவடித்தனாமான பேச்சாகும். Go and read. எனபது பேட்டைத்தாதாத்தனம். அதை இங்கு பேசாதீர்கள்; என்றால் திண்ணையில் என்ன சொற்பொழிவா ஆற்றுகிறார்கள்? திண்ணை என்ன அரசியல் மேடையா என்று கேட்கிறீர்கள். கருத்தைச் சொல்லுங்கள். அடாவடித்தனமான பேச்சு வேண்டாம். கோ அண்ட் ரீட் என்று இன்னொரு பின்னூட்டக்காரரிடம் சொல்வது அடாவடித்தனம். ஜாதிக்காகவும் மதத்துக்காகவும் எழுத இங்கு வந்திருக்கிறீர்கள். சரி. செய்யுங்கள். அதை கண்ணியமாகச்செய்தால் படிக்க விருப்பம் வரும். பிறர் படிக்கத்தானே எழுதுகிறோம்?

          அடுத்த மடலில் ஒரு கருத்தை வைக்கிறேன். பதில் சொல்லுங்கள்.

  18. Avatar
    பூவண்ணன் says:

    தமிழ் ஹிந்துவில் வந்த இதே கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டங்கள்

    எண்ணிக்கை அதிகமாக யார் இருந்தாலும்/அதிகாரத்திலும் பங்கோடு இருக்கும் போது அவர்கள் ஆதிக்கம் செய்வது தான் எங்கும் நடக்கிறது.அதை தடுப்பது தான் இட ஒதுக்கீடு
    உத்தர் ப்ரதேச மாநிலத்தில் பிராமணர்கள் நம்ம ஊரில் உள்ள முக்குலத்தோர்,வன்னியர்,நாடார் போல குறிபிடத்தக்க சதவீதத்தில் உள்ளனர்.அங்க சும்மா அடிச்சு விளையாடுவாங்க
    முக்கால்வாசி தாதா,கொலை கொள்ளை எல்லாவற்றிலும் திவாரி,ஷர்மா,திரிபாதி என்று தான் பெயர்கள் இருக்கும்
    செல்வி மாயாவதியின் ஆட்சியில் ஒரு குப்தா என்ற பொறியியல் இன்ஜிநீரை அடித்து கொன்ற எம் எல் ஏ ஒரு திவாரி

    http://articles.economictimes.indiatimes.com/2008-12-24/news/28465674_1_pwd-engineer-m-k-gupta-bsp-mla-shekhar-tiwari

    இப்ப அகிலாஷ் யாதவ் ஆட்சிக்கு வந்தவுடன் கூண்டாஇசம் ,ஆட்டோ டிரைவர் அடித்து கொலை என்று செய்தி .பார்த்தல் ஒரு திவாரி யாதவ் என்பரை அடித்து கொலை செய்கிறார்

    http://www.dnaindia.com/india/report_sp-worker-beats-auto-driver-to-death-in-kanpur_1665118

    இடைநிலை மற்றும் மற்ற உயர்சாதியினரையே இந்த அடி அடிகிறார்கள் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
    பார்சிகள் ஒன்றும் செய்வதில்லை மற்ற சிறுபான்மையினரான இஸ்லாமியர்களை போல என்றால் காரணம் எண்ணிக்கை. அவர்களின் பாதி எண்ணிகையில் பார்சிகள் இருந்தால் அவர்களும் புகுந்து விளையாடுவார்கள்
    http://zeenews.india.com/news/uttar-pradesh/amarmani-tripathi-out-of-jail-for-2-months_729950.html

    http://news.worldsnap.com/states/bihar/behind-bars-but-jd-u-legislator-munna-shukla-still-enjoys-minister-status-88475.html
    வேறு மாநிலத்தில் மும்பையில் வசித்தாலும் தன் தங்கை கேரளாவை சேர்ந்த கீழ்சாதியை சார்ந்தவனை மணந்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தையே அழித்த திவாரி சகோதரர்களின் வழக்கில் நீதிபதியும் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்று தீர்ப்பு தந்ததும் இங்கு உண்டு

    http://www.indlaw.com/guest/DisplayNews.aspx?8B2609C9-2E84-46DB-92F8-F2FDB42A0616

  19. Avatar
    பூவண்ணன் says:

    ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல தான் திராவிட இயக்கமும்.அந்த இயக்கத்தை பெருமளவில் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் சுவீகரித்து கொண்டதால் அவர்கள் நன்றாகவே பலன் பெற்றார்கள்.மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தான் அதன் பலன்கள் புரியும்.
    ஹிந்துத்வம் மற்றும் காங்கிரஸ் கோலோச்சிய/கோலோச்சும் ராஜஸ்தான்,உத்தர் பிரதேசம்,மத்திய பிரதேசம் ,பீகார் ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிகளுக்கு இடையே ஆன நிலையோடு தமிழகத்தை ஒப்பிட்டால் நம் நிலை புரியும்.
    திருப்பி அடிக்கலாம்/சாதி கடந்து திருமணம் செய்யலாம்,பிறப்பால் எவனும் உயர்ந்தவன் கிடையாது என்ற சிந்தனையே அங்கு பின்தங்கிய சாதிகளுக்கு இன்னும் வரவில்லை.
    மதரீதியாக சாதிகள் இல்லை என்று சொல்லும் சீக்கிய மதத்தை ஏற்ற பஞ்சாபில் கூட சாதிபிரிவினைகள் வெகு அதிகம்.முப்பது சதவீதத்திற்கு மேல் இருந்தாலும்/பொருளாதார ரீதியாக முன்னேறி இருந்தாலும் தலித் சீக்கியர்களுக்கும் உயர்சாதி சீக்கியர்களுக்கும் பிளவுகள் மிக அதிகம்.இப்போது கூட கீழ் சாதி சீக்கியரை மணந்த குற்றத்திற்காக சொந்த மகளை கொலை செய்த/வலுகட்டாயமாக கரு கலைப்பு செய்து இறப்புக்கு காரணமான குற்றத்திற்காக மந்திரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
    சாதி வேண்டாம் என்பவர்களை கிண்டலாக /வெறுப்பாக பார்க்கும்,சாதிரீதியான பெருமைகள் /இழிவுகள் சரி தான் என்ற எண்ணமே அங்கு மிகவும் பெரும்பாலோருக்கு இன்றும் உண்டு(பாரதியின் மறைவிற்கு கூட போகாத,அவரை சபித்த நம் தமிழகத்தின் 90 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிலை தான் ).இங்கே போலித்தனமாக இருந்தாலும் சாதி வேண்டாம் ,ஒழியனும் என்று பேசுபவர்கள் பலர் உண்டு.தலைவர்களும் அதில் அடக்கம்.அதில் ஓரிரு சதவீதம் சொல்வதற்கு ஏற்ப உண்மையானவர்களாக இருந்தால் கூட அதுவே மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிகம் தான்.
    24 ஆண்டுகளுக்கு முன்னே கலைஞர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு செய்தார்.ஜெயலலிதா அனைத்து பெண்கள் காவல் நிலையம்,பெண் கமாண்டோ என்று பெண்கள் அனைத்து துறைகளிலும் மிளிர நடவடிக்கைகள் எடுத்தார்.

    தமிழகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகமாக வேலைக்கு போவது,பெரிய பதவிகளில் சிறந்து விளங்குவது ,சாதி மறுப்பு திருமணங்களில் ஈடுபடுவது போன்றவற்றில் முன்னோடியாக உள்ளனர்.
    மத்திய அரசு பணிகளில்,விளையாட்டு,கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மற்றும் ஒதுக்கீட்டு வகுப்பினர் பெரும்பாலும் தென் மாநிலங்களை சார்ந்தவர்களே
    தமிழகத்தில் சாதிகளுக்கு இடையே ஆன இடைவெளி குறுகி கொண்டே தான் வருகிறது.அதற்க்கு திராவிட இயக்கம் முக்கிய காரணம்

  20. Avatar
    பூவண்ணன் says:

    திராவிட எதிர்ப்பு தங்கங்களே

    http://articles.timesofindia.indiatimes.com/2012-05-06/india/31597294_1_upper-castes-scs-durables
    Three states however buck this trend; across caste groupings in Punjab, Kerala and Tamil Nadu, the rate of ownership of basic consumer durables is high. In fact, the asset ownership rate for scheduled castes in these three states is better than that of OBCs and upper castes in all other states.
    Tamil Nadu and Punjab are the only states where the proportion of SCs who do not own basic assets is around 10% or lower, lowest of all in Tamil Nadu. Asset ownership among SCs in these three states is higher than that among “others” in all other states.
    the key determinant of each of these states’ human development situation is not its caste composition, but its politics and governance, Mehrotra says.
    அதாகப்பட்டது தமிழகத்தில்/கேரளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஹிந்டுத்வர்கள் வலுவான நிலையில் உள்ள மாநிலங்களில் உள்ள முற்பட்ட பிரிவினரை விட மேலாம்.அதற்க்கு இங்கு நடந்த நல்லாட்சிகள் தான் காரணமாம்
    இப்ப என்னா சொல்வீங்க
    இப்ப என்னா சொல்வீங்க

  21. Avatar
    பூவண்ணன் says:

    அதிக எண்ணிகையில் அனைத்து பதவிகளிலும் தலித்கள் ,பெண்கள் இருப்பது தமிழகத்தில் தான்.மத்திய அரசு பணிகளில் ,அரசு அதிகாரிகளாக குஜராத்திலோ இல்லை உட்டர்ப்ரதேசதிலோ கூட மத்திய அரசு பணிகளின் கீழ் ஒதுக்கீட்டு இடங்களை பிடிப்பது தமிழர்கள் தான்
    முதல்வர் ஆவது நல்லது தான்.ஆனால் அது ஒன்று மட்டும் பெரிய மாற்றம் அல்ல.சில ஆயிரம் பேர் உள்ள தேவதாசி முறைக்கு பெண்களை விட வைக்கப்பட்ட கருணாநிதி /அண்ணாதுரை திராவிட இயக்கத்தால் முதல்வர் ஆனது எந்த விதத்திலும் குறைந்த சாதனை அல்ல.
    ஆந்திராவில் காங்கிரஸ் தலித் ஒருவரை முதல்வர் ஆக்கியதாலோ /இல்லை பா ஜ கா மத்தியில் பங்காரு தமிழகத்தில் கிருபாநிதி (அவரும் தி மு க வில் ஐக்கியமாகி விட்டார்)என்ன பெரிய மாற்றம் வந்தது.அவர்களுக்கு ஏதாவது சக்தி இருந்ததா.
    ஒதுக்கீட்டு பிரிவினர் ஒட்டுமொத்தமாக முன்னேறி வருவதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா
    உத்தர் பிரதேசத்தில் ,குஜராத்தில் தமிழகத்தை விட அதிக அளவில் தலித்கள் மருத்துவராக,பொறியாளராக,வங்கி அதிகாரிகளாக,நீதிபதிகளாக,ஆட்சி பணி அதிகாரிகளாக வருகிறார்கள் என்று கூற முடியுமா.இதையும் கொஞ்சம் பாருங்கள்
    http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3384834.ece
    On the other hand, when it came to the Backward Classes – other than Muslims for whom 49 posts were reserved, a total of 3,096 candidates (46.2 per cent), including 2,035 male and 1,061 female, participated in the examinations and 220 of them, equal to 47.83 per cent within the category, cleared all the four papers.

    The next big success was achieved by Scheduled Caste candidates. About 1,341 (20.01 per cent) of them, including 977 male and 364 female, wrote the examinations and 111 got selected for the viva voce taking the percentage of successful candidates in their category to 24.13 per cent.

  22. Avatar
    K A V Y A says:

    இறுதி வரி நல்ல கன்ஃபெஷன். ஆங்கிலத்தில் கண்ணியமாக எழுத முடியவில்லை; அல்லது தெரியவில்லையென்றால் படித்துக்கொள்வது. அதை நான் சொல்லித்தர முடியாது. ஆங்கிலம் மரியாதை கெட்ட மொழி; ஏனென்றால் ”நீங்கள்” என்பதைச் சொல்ல சொல்லில்லையென்பது சிறுபிள்ளைத்தனம். சொல்லில்லையென்றால் மரியாதையில்லாமல்தான் பேசவேண்டுமென்பதில்லை. அப்படிப்பார்த்தால் அனைத்து ஆங்கிலேயரும் ஆங்கிலம் தெரிந்தோரும் மரியாதைக்குறைவாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்; பேசமுடியும் என்றாகி விடும். உண்மை அப்படியன்று. இந்துத்வா வாதிகள் ஆங்கிலத்தை வெறுப்பர். அதுதான் வெளிவருகிறது இங்கே.. ஆங்கிலத்தில் எழுத உங்களுக்கு வரவில்லையென்றால் விட்டு விடுங்கள். தமிழ் இருக்கவே இருக்கிறது. தமிழும் பிடிக்கவில்லையென்றால் ஹிந்தியில் எழுதுங்கள் படிக்க நானிருக்கிறேன். ஹிந்தியிலே பதிலும் போடுகிறேன்.

    கணேச ஐயரைப்பற்றி ஆரும் இங்கு குறைச்சோ கூட்டியோ பேசவில்லை. அப்படியே அவர் ஏமாற்றினார் என்று என் எழுத்தில் இருந்தாலும் என் நோக்கம் பிஷப் தன் மதத்தைப்பெருக்க எவ்வழியையும் தேடுவார் என்பதே என் கருத்து. அதே போல இந்துத்வாவினரும் செய்வார்கள் என்பது என் கருத்து. இருவரும் சண்டையிடுகிறார்கள். அதற்காக எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்துவார்கள் எனவே இருவரின் நூல்கள் கருத்துக்களைப் படிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதே என் வாதம்.

    கணேச ஐயரைப்பற்றி எழுதி நேரத்தை விரயமாக்குகிறீர்களே ஏன்? வன்மையாகவும் கண்டிக்க வேண்டாம். வெறுமையாகவும் கண்டிக்க வேண்டாம். ஏனென்றால் கணேச ஐயர் பேசுபடு பொருள் இங்கில்லை. அவர் நல்லவரா கெட்டவரா நாலும் தெரிந்த வல்லவரா என்று நீங்கள் தனி ஆராய்ச்சி பண்ணிக்கொள்ளுங்கள். இங்கு ஏன் ஆரோ ஒருவரைப்பற்றிய ஆராய்ச்சி? அவர் பெயரில் ‘ஐயர்’ இருக்கிறது. அவர் பெயரோடு செட்டியார் என்றிருந்தாலும் – ஒரு பேச்சுக்கு – என் கருத்து அப்படியேதான் இருக்கும். நீங்கள் மாறியிருப்பீர்கள். ஏனென்றால், ‘செட்டியார்’ தானே? ஐயரில்லையே?

    இந்துத்வத்தைப்பற்றி என்னவேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ளுங்கள்; எழதிக்கொள்ளுங்கள். அவர்களத் தெரிந்து கொள்வதிலும் பேசிக்கொளவதிலும் எனக்கு ஒரு பிரயோசனம் கிடையாது.

  23. Avatar
    Rajan says:

    //இறுதி வரி நல்ல கன்ஃபெஷன். ஆங்கிலத்தில் கண்ணியமாக எழுத முடியவில்லை; அல்லது தெரியவில்லையென்றால் படித்துக்கொள்வது. அதை நான் சொல்லித்தர முடியாது. ஆங்கிலம் மரியாதை கெட்ட மொழி; ஏனென்றால் ”நீங்கள்” என்பதைச் சொல்ல சொல்லில்லையென்பது சிறுபிள்ளைத்தனம். சொல்லில்லையென்றால் மரியாதையில்லாமல்தான் பேசவேண்டுமென்பதில்லை. அப்படிப்பார்த்தால் அனைத்து ஆங்கிலேயரும் ஆங்கிலம் தெரிந்தோரும் மரியாதைக்குறைவாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்; பேசமுடியும் என்றாகி விடும். உண்மை அப்படியன்று.//

    இன்னும் நீங்கள் நான் எழுதியதில் என்ன கண்ணியக்குறைவு இருக்கிறது என்று சுட்டிக்காட்டவே இல்லை. நீங்கள் என்னை விமர்சித்தது போல, நான் என்ன உங்களை fanatic என்றா அழைத்தேன்? இதிலிருந்தே உங்கள் உள்நோக்கம் புரிகிறது. நீங்கள் எப்பொழுது ஆங்கிலத்துக்கு டிக்டேடர் ஆனீர்கள்? நான் எதிர்ப்பர்க்கிற ஆங்கிலம் தான் எல்லோரும் எழுதவேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் (unless one uses extremely abusive language which i did not ) . இது ஒரு internet forum அவ்வளவுதான். இதற்க்கு இந்தளவு ஆங்கிலம் போதுமானது என்று நான் நினைக்கிறேன். நாம் ஒன்றும் இங்கே ஆங்கில சொற்பொழிவு நடத்தவில்லையே. விட்டால் shakespeare கல்லறையில் இருந்து எழுந்து வந்து ஆங்கிலம் எழுதி அதை Robert Frost ஐ வைத்து பிரூப் ரீட் பார்த்தால் தான் ஒத்துகொள்வேன் என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.

    // இந்துத்வா வாதிகள் ஆங்கிலத்தை வெறுப்பர். அதுதான் வெளிவருகிறது இங்கே//

    நீங்கள் சொல்வது தான் மிகப்பெரிய காமெடி. ஆங்கிலத்தை வெறுப்போர் அத்துணை பேரும் ஹிந்துத்வா வாதிகளா? அப்படிஎன்றால் ஆங்கிலத்தை ஆதரிக்கும் நீங்கள் என்ன ஆங்கிலேயரா? என்ன ஒரு அபத்தம். நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சீமான் ஆங்கிலத்தை அறவே வெறுப்பவர். அவர் என்ன ஹிந்துத்வாவாதியா? கலைஞர் கருணாநிதிக்கு இன்றளவும் சரியாக ஆங்கிலம் பேச வராது, அதை பத்தி அவர் கொஞ்சம் கூட கவலை படுவதில்லை.அவரும் ஹிந்துத்வாவாதியா? இன்னும் சொல்லப்போனால் பிரெஞ்ச் காரர்கள், சீனர்கள, மற்றும் ஜப்பானியர்களுக்கு ஆங்கிலமே தெரியாது. அவர்கள் நாட்டிலும் ஒருக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தான் ஆட்சி புரிந்தார்கள். ஆனால் அவர்கள், ஆங்கிலத்தை அறவே அனுமதிப்பது கிடையாது. உங்கள் கணக்குபடி பார்த்தால் அவர்களும் ஹிந்துத்வாவாதிகளோ? என் இந்திய மக்களை சுமார் 250 ஆண்டு காலம் அடிமைப்படுத்தியது இந்த ஆங்கில கலாச்சாரமும், ஆங்கில கல்வியும் தான். அதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன். அதில் என்ன தவறு இருக்க முடியும்? என்னைப்பொருத்தமட்டில் ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும், பின்பு ஒரு இந்திய மொழியை இணைப்பு மொழியாக கற்க்கவேண்டும். இதெல்லாம் அடிப்படையாக செய்து விட்டு வேண்டுமானால் மூன்றாவது மொழியாக ஆங்கிலமோ, பிரெஞ்சோ, ஜெர்மனோ, வேறு எது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளட்டும்.

    //கணேச ஐயரைப்பற்றி ஆரும் இங்கு குறைச்சோ கூட்டியோ பேசவில்லை. அப்படியே அவர் ஏமாற்றினார் என்று என் எழுத்தில் இருந்தாலும் என் நோக்கம் பிஷப் தன் மதத்தைப்பெருக்க எவ்வழியையும் தேடுவார் என்பதே என் கருத்து. அதே போல இந்துத்வாவினரும் செய்வார்கள் என்பது என் கருத்து. இருவரும் சண்டையிடுகிறார்கள். அதற்காக எந்த அஸ்திரத்தையும் பயன்படுத்துவார்கள் எனவே இருவரின் நூல்கள் கருத்துக்களைப் படிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதே என் வாதம்.//

    பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகுரீர்கள். கணேச ஐயர்ரை பற்றி பேச ஆரம்பித்ததே நீங்கள் தான். அதில் நீங்கள் தவறாக கூறிய ஒரு கருத்தைத்தான் நான் விமர்சித்தேன். அதற்க்கான ஆதாரங்களையும் கொண்டுத்தேன். இவ்வளவு தான் நான் செய்தது. ஆனால் இதற்க்கு நீங்கள் என்னை ஜாதி வெறி பிடித்தவன் என்றெல்லாம் பட்டம் கட்டினீர்கள். அதை பத்தி எல்லாம் கவலைப்பட்டால் உங்களை போன்றவர்களோடு நான் இப்படி உரையாடி கொண்டிருக்கமுடியாது.

    //கணேச ஐயரைப்பற்றி எழுதி நேரத்தை விரயமாக்குகிறீர்களே ஏன்? //

    கணேச ஐயரைப்பற்றி திரும்ப திரும்ப எழுத வேண்டும் என்று எனக்கென்ன வேண்டுதலா? நீங்கள் ஆரம்பித்தீர்கள் அதற்க்கு நான் பதில் அளித்தேன். அவ்வளவு தான். நீங்கள் நிறுத்தினால் நானும் நிறுத்திவிடுவேன்.

  24. Avatar
    K A V Y A says:

    இண்டெர்னெட் ஃபோரத்தில் எப்படிவேண்டுமானாலும் கண்ணியக்குறைவாகப்பேசலாம் சரி. ஆனால் அது ஃபோரத்தைப் பொறுத்தது. பல ஃபோரஙகள், குறிப்பாக, ஒரு மதத்துக்காக, ஜாதிக்காக நடாத்தப்படுபவை, இன்னொரு மதத்தவரை, ஜாதியை எதிர்த்து வெளியிடும் கருத்துக்களை, அப்படியே வெளியிடுகின்றன.

    திண்ணை, ஒரு மதத்துக்காகவோ, ஜாதிக்காகவோ இல்லையென்பது திண்ணம். எனவே நீங்கள் மரியாதையுடன் கூடிய சொற்களைத்தான் இங்கு எழுதவேண்டும்.இங்கே ஆங்கிலச்சொற்பொழிவு நடத்தவில்லை. பேசுகிறோம். பேச்சினிலே கண்ணியம் கொண்டுவாருங்கள் என்கிறேன். இதற்கு மேல் உங்களிடம் என்ன சொல்வது?

    கணேச ஐயரைப்பற்றி எழுதியது ஒரு கருத்தை நிலைநாட்ட.. அவரைப்பற்றிய கருத்தன்று கிருத்துவர்களின் சூழ்ச்சியைப்பற்றியது அது. இதைப்புரிந்து கொள்ளாமல் அவர் ஹிந்துவில் பேட்டி கொடுத்திருக்கிறார்; போ படி Go and Read என்றால்?

    உங்கள் ஜாதிப்பற்று மிகவும் தெரிகிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டாம். படிப்பவர் புரிந்து கொள்வர். அது கணேச ஐயரைப்பற்றி தேவையில்லாமல் எழுதியதிலிருந்து தெரிகிறது. கணேச செட்டியார், கணேச முதலியார் என்றால் நீங்கள் கண்டேயிருந்திக்க மாட்டீர்கள். விட்டால் தான் இந்துத்த்வாக்காரன் என்று கூட மறுப்பீர்கள். மறுப்பது வேறு; தெரிவது வேறு. மறுப்பது நீங்கள்; தெரியவருவது மற்றவருக்கு, நீங்கள் என்னை எதிர்க்கவில்லை. உங்கள் ஜாதிக்காக என்னை எதிர்க்கிறீர்கள். தொடர்ந்து பின்னூட்டங்களில் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தால் முழுப்பூனையும் வெளிவந்து விடும்.

    ஆங்கிலத்தை நானும்தான் எதிர்க்கிறேன். இந்துத்வாவினரல்லாதவரும் எதிர்ப்பார்கள். இவ்வெதிர்ப்புக்குக்காரணம் ஆங்கில மோஹம் தமிழைச்சாய்த்து விடக்கூடாதென்பதற்காக மட்டுமே. உங்களைப்போன்ற இந்துத்வாவினர் மறுப்பது தமிழுக்காகன்று. மதத்திற்காக.

    ’அவனை நிறுத்தச்சொல், நான் நிறுத்துகிறேன்’ என்ற வசனம் நாயகன் படத்தில். அதாவது வன்முறையை நியாயப்படுத்தும் வசனமது. உங்கள் இறுதி வரிகள் நாயகனைத்தான் நினைவுபடுத்துக்கின்றன. ஆங்கிலத்தில் கண்ணியமாக எழுதவும்.

    1. Avatar
      Rajan says:

      //இண்டெர்னெட் ஃபோரத்தில் எப்படிவேண்டுமானாலும் கண்ணியக்குறைவாகப்பேசலாம் சரி. ஆனால் அது ஃபோரத்தைப் பொறுத்தது. பல ஃபோரஙகள், குறிப்பாக, ஒரு மதத்துக்காக, ஜாதிக்காக நடாத்தப்படுபவை, இன்னொரு மதத்தவரை, ஜாதியை எதிர்த்து வெளியிடும் கருத்துக்களை, அப்படியே வெளியிடுகின்றன.//

      நீங்கள் என்னை பற்றி எதுவுமே தெரியாமல் என்னை “fanatic Hindutva” என்று விமர்சித்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அதாவது என்னை ஒரு ஹிந்து மத வெறியன் என்று சொல்குரீர்கள் அல்லவா? இது எந்த விதத்தில் கண்ணியமாகும்? இதற்க்கு நான் சொன்ன “go and read” எவ்வளவோ மேல். என்னை கண்ணியக்குறைவாக எழுதிகிறேன் என்று விமர்சிக்கும் நீங்கள் இவ்வளவு கீழ்த்தனமாக எழுதுகுரீர்களே? இது எந்த விதத்தில் ஞாயம்?

      //திண்ணை, ஒரு மதத்துக்காகவோ, ஜாதிக்காகவோ இல்லையென்பது திண்ணம். எனவே நீங்கள் மரியாதையுடன் கூடிய சொற்களைத்தான் இங்கு எழுதவேண்டும்.இங்கே ஆங்கிலச்சொற்பொழிவு நடத்தவில்லை. பேசுகிறோம். பேச்சினிலே கண்ணியம் கொண்டுவாருங்கள் என்கிறேன். இதற்கு மேல் உங்களிடம் என்ன சொல்வது கணேச ஐயரைப்பற்றி எழுதியது ஒரு கருத்தை நிலைநாட்ட.. அவரைப்பற்றிய கருத்தன்று கிருத்துவர்களின் சூழ்ச்சியைப்பற்றியது அது. இதைப்புரிந்து கொள்ளாமல் அவர் ஹிந்துவில் பேட்டி கொடுத்திருக்கிறார்; போ படி Go and Read என்றால்?//

      “Go and read” மரியாதையற்ற சொல்லா? போய் படியுங்கள் என்று தானே சொன்னேன். இதில் என்ன மரியாதைகுறைவை கண்டு பிடித்துவிட்டீர்கள்? நீங்கள் சொன்ன ஒரு கருத்து எனக்கு முரணாக பட்டது. அதற்காகத்தானே உங்களை சில வற்றை படிக்கசொன்னேன்? வேண்டுமானால் இனிமேல் “Your highness please go and read” என்று எழுதட்டுமா?

      //உங்கள் ஜாதிப்பற்று மிகவும் தெரிகிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டாம். படிப்பவர் புரிந்து கொள்வர். அது கணேச ஐயரைப்பற்றி தேவையில்லாமல் எழுதியதிலிருந்து தெரிகிறது. கணேச செட்டியார், கணேச முதலியார் என்றால் நீங்கள் கண்டேயிருந்திக்க மாட்டீர்கள். விட்டால் தான் இந்துத்த்வாக்காரன் என்று கூட மறுப்பீர்கள். மறுப்பது வேறு; தெரிவது வேறு. மறுப்பது நீங்கள்; தெரியவருவது மற்றவருக்கு, நீங்கள் என்னை எதிர்க்கவில்லை. உங்கள் ஜாதிக்காக என்னை எதிர்க்கிறீர்கள். தொடர்ந்து பின்னூட்டங்களில் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தால் முழுப்பூனையும் வெளிவந்து விடும்.//

      இது உங்கள் கீழ்த்தனமான சிந்தனையே காட்டுகிறது. நீங்கள் கணேச ஐயர் என்று சொன்னாலும், கணேச செட்டியார் என்று சொன்னாலும், என் கருத்து ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். சொல்லப்போனால் இந்த தளத்திலேயே பிராமணர்களை சில விடயங்களுக்காக வன்மையாக கண்டித்திருக்கிறேன். உங்களால் முடிந்தால் இண்டேல்லேச்சுவலாக பதில் அளியுங்கள். அதை விட்டு விட்டு தேவையில்லாமல் வாதத்தை திசை திருப்பி எனக்கு ஜாதி வெறி பட்டம் கட்ட முயற்சிக்காதீர்கள்.

      //ஆங்கிலத்தை நானும்தான் எதிர்க்கிறேன். இந்துத்வாவினரல்லாதவரும் எதிர்ப்பார்கள். இவ்வெதிர்ப்புக்குக்காரணம் ஆங்கில மோஹம் தமிழைச்சாய்த்து விடக்கூடாதென்பதற்காக மட்டுமே. உங்களைப்போன்ற இந்துத்வாவினர் மறுப்பது தமிழுக்காகன்று. மதத்திற்காக. //

      உங்களை போன்றோருக்கு ஆங்கிலம் தமிழை விழிங்கிவிடுமோ என்று மட்டும் தான் கவலை. ஆனால் நான் ஆங்கிலத்தை எதிர்க்கும்போது ஒட்டு மொத்த நாடும் அதன் கலாச்சாரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தான் எதிர்க்கிறேன். உங்களைப்போல் நான் ஒன்றும் தமிழ் வெறியர் இல்லை.

      //’அவனை நிறுத்தச்சொல், நான் நிறுத்துகிறேன்’ என்ற வசனம் நாயகன் படத்தில். அதாவது வன்முறையை நியாயப்படுத்தும் வசனமது. உங்கள் இறுதி வரிகள் நாயகனைத்தான் நினைவுபடுத்துக்கின்றன. ஆங்கிலத்தில் கண்ணியமாக எழுதவும்.//

      உதாரணம் மிகவும் கேவலமாக உள்ளது. எதை எதோடு ஒப்பிடுவது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையே உங்களுக்கு?

  25. Avatar
    A.K.Chandramouli says:

    ஐயா ராஜன் அவர்களே காவ்யா அவர்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்வார். பிறர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது சம்பந்தம் இல்லாத விஷயங்களை பின்னூட்டமாக போடுவார். அவருக்கு அது கைவந்த கலை. அதைக் கேட்க நீங்கள் யார்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜாதி முறையை பற்றியும் வர்ணாஸ்ரமத்தைப் பற்றியும் பிதற்றி விஷத்தைக் கக்குவார். இன்று எல்லாம் மாறிக்கொண்டு வருகிறது.மக்களை ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான வழிகள் எதையும் சொல்லத்தெரியாது.அவருக்கு பதில் சொல்லி நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.

  26. Avatar
    K A V Y A says:

    For Rajan to answer

    வரலாறு எவருமே எழுதிவிடலாமா? இல்லை எவருமே எழுதிக்கொண்டு அஃதை உண்மை வரலாறு என்று சொல்லி விடலாமா? ஏன் இந்திய வரலாற்றை வரலாற்று அறிஞர்கள் எழுதிய நூல்களிலிருந்து நீங்கள் பெறக்கூடாது? தென்னிந்திய வரலாறு, சோழர்கள் என்று நூல்களை எழுதிய நீலகண்ட சாஸ்திரி என்ன தான் எழுதிய வரலாறுகளை உண்மை வரலாறு என்றா பிரகடனம் பண்ணினார்?

    இதோ இன்றொரு நூல் படித்தேன். அதில் சொல்கிறார் அதன் ஆசிரியர்:

    குலசேகராழ்வாரின் காலத்தை எம் சீனிவாச ஐயங்கார் கி பி 780 லிருந்து 890 க்குள்ளும், என் கிருஷ்ணசாமி ஐயங்கார் கி பி 6 ம் நூற்றாண்டெனறும் ரா ராகவையங்கார் கி பி 8ம் நூற்றாண்டில் தத்தம் ஆராய்ச்சிகளின் முடிவுகளாகக் கொள்கின்றனர்.

    இவர்கள் ஒருவரையொருவர் அடாவடித்தனமானத் தமிழில் திட்டிக்கொண்டனரா? இல்லை, தான் எழுதிய வரலாறு மட்டுமே உண்மை வரலாறு என்று பீற்றினரா? இல்லை அந்த நூற்றாண்டைத்தான் தான் இறுதியில் சொல்லவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு ஆராய்ச்சியென்ற கோதாவில் இறங்கினரா?

    கிடையாது. இவரைப்போன்றே வர்லாற்றாய்வாளர்கள் இருப்பார்கள். இருக்க வேண்டும்.

    பிறரைக்கொச்சைப்படுத்த, முன் முடிபுகளோடும் உண்மை வரலாறு என்று தன்னையோ விதந்தோதிக்கொண்டும் எழுதுபவர்களைப் படிப்பவர்கள் அவர்களை மாதிரி அஜென்டாக்களைத் தூக்கிக்கொண்டு அலைபவர்கள். கோ அன் ரீட் தெம். அதுதான் ஹோம் வர்க் என்றால் நகைப்புவரத்தானே செய்யும்! விலை போகாத சரக்குகளை வியாபாரிகள் பொய் விளம்பரம் கொடுத்து விற்பார்கள். உண்மை வரலாறு என்று எழுதுபவர் சொன்னால், அல்லது அவருக்கு வேண்டியவர் சொன்னால் அதே.

    நீங்கள் சொல்லும் அந்த எழுத்தாளர்களுக்கு ஆதரவு எங்கிருந்து வருகிறது உங்களைப்போன்ற ஹிந்துத்வாவினரிடமிருந்தே. பிறரிடமிருந்தென்றால் நான் அவர்களைப் படிக்கத்தயார்.

    இதற்கான எதிர்க்கருத்தைக் கண்ணியமான சொற்களில் எழதினால் நன்று.

  27. Avatar
    K A V Y A says:

    கண்ணியமாக எழுத முயற்சித்துப்பார்க்கிறேன் என்றெழுதிவிட்டீர்களே போதும்.

    என்ன அநாகரீகத்தைக்கண்டுவிட்டீர்கள் என்பதை இப்படி விளக்குகிறேன்.

    ஹோம் வொர்க் பண்ணிவிட்டு வந்து எழுதுங்கள் என்ன ஹோம் வொர்க்? தரம்பாலையும் அரவிந்தன் நீலகண்டனையும் மல்ஹோத்ராவையும் படித்துவிட்டு வந்துவிட்டு எழுதனும். இதுதானே ஹோம் வொர்க்?
    இவர்களுக்கு அந்த பிஷப்புக்கும் என்ன வேறுபாடு? அவர் திருவள்ளுவர் கிருத்துவர் என்ற முடிவோடு வாரும் ஐயரே அதற்காக பிடியும் ஒரு லட்ச உருபா” என்றாதாக செய்தி.

    இவர்கள் தன் முடிபுகளை முதலில் எடுத்துக்கொண்டு பின்னர் வரலாறு எழுதுகிறார்கள். முன்முடிபுகளோடு வரலாறு எழுதுவார். படித்துக்கொண்டு வா ஹோம் வர்க் பண்ணிக்கொண்டுவா என்று ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்.
    போப்பை படித்துக்கொண்டுவா, கால்டுவெல்லையும் படித்துக்கொண்டுவா என்று நான் ஆங்கிலத்தில் எழுதினால் அநாகரிகம் தெரிகிறதா இல்லை கண்ணியம் தெரிகிறதா?

    தமிழில் சொன்னாலும் ஆங்கிலத்தில் சொன்னாலும் கற்றவன் பேச்சன்று இது. இது அடாவடித்தனாமான பேச்சாகும். Go and read. எனபது பேட்டைத்தாதாத்தனம். அதை இங்கு பேசாதீர்கள்; என்றால் திண்ணையில் என்ன சொற்பொழிவா ஆற்றுகிறார்கள்? திண்ணை என்ன அரசியல் மேடையா என்று கேட்கிறீர்கள். கருத்தைச் சொல்லுங்கள். அடாவடித்தனமான பேச்சு வேண்டாம். கோ அண்ட் ரீட் என்று இன்னொரு பின்னூட்டக்காரரிடம் சொல்வது அடாவடித்தனம். ஜாதிக்காகவும் மதத்துக்காகவும் எழுத இங்கு வந்திருக்கிறீர்கள். சரி. செய்யுங்கள். அதை கண்ணியமாகச்செய்தால் படிக்க விருப்பம் வரும். பிறர் படிக்கத்தானே எழுதுகிறோம்?

    இக்கட்டுரையை எழுதியவர் ஆர்? பார்ப்பனச்சாய்வு உள்ள எழுத்தாளர் என்று விமர்சிக்கப்படுபவர். தமிழ் ஹிந்து டாட் காமில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது பின்னூட்டங்களில் என்னாலன்ன? ஆர் வி என்பவரால். அவரும் ஒரு பார்ப்பனர் வ.ரா மாதிரி. அவரின் தந்தை எழுதிய கட்டுரையை அவரின் வலைபதிவில் போட அக்கட்டுரைக்கு நான் வைத்த கடும் விமர்சந்த்தை வெளியிட்டவர் அவர்.

    தன்னைச்மி என்று அழைக்கவில்லையே என்று ஏங்குபவர் நம் திண்ணைக்கட்டுரையாளர்.

    திராவிட இயக்க வரலாறு என்று இவர் எடுத்துக்கொள்ளுவது அவ்வியக்கத்தைப்பிடிக்காதவர் எழுதியது. இவர் இன்னொரு கட்டுரையும் இங்கெழுதியிருக்கிறார் அது பழ் கருப்பையா கருநாநிதி கடவுளன்று என்றெழுதியது. அதை விமர்சித்து ஆஹா ஒஹோ என்று புகழ்ந்தவர்.

    எல்லாரும் எழுதலாம். எழுதுபவரின் உள்ளோக்கம் அவ்வெழுத்தை நாசப்படுத்தும். இட் லூசஸ் இட்ஸ் கிரடிப்லிடி. கருநாநிதி வர்லாற்றை ஜெயலலிதாவும் ஜெயலலிதா வரலாற்றைக் கருநாநிதியும் எழுதினால்? அவர்கள் தொண்டர்கள் ஆஹோ ஓஹோ என்று புகழ்வாரகள்தானே?

    அதுதான் திண்ணைக்கட்டுரைகளிலும், தனக்குப்பிடித்தவர் தனக்குப் பிடித்தக் கருத்துக்கள் இருந்தால் அந்நூலை இங்கு விமர்சனம் என்ற போர்வையில் கட்டுரையாக வரையும் பழக்கம் அதிகமிங்கே.

    முரசொலி மாறனும் திராவிட இயக்க வரலாறு எழுதியிருக்கிறார். அதை விமர்சனம் செய்யச்சொல்லுங்கள். அண்டப்புழுகுகள் என்பார்கள். எல்லாமே புழுகுகள். ஆனால் இவர்களின் வரலாறு உண்மை வ்ரலாறு. அவரகளின் வரலாறு அண்டப்புழுகுகள்.

    நான் ஏற்கன்வே இங்கே சொல்லியிருக்கிறேன். திராவிட இயக்க வரலாறு, அதன் தாக்கம், என்பவனவற்றை எழுத இவ்விரு கூட்டத்தால் முடியாது. எதிர்களே எதிர்களைப்பற்றி எழுத முடியாது.

    காத்திருப்போம்.

Leave a Reply to பூவண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *