திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

author
127
0 minutes, 2 seconds Read
This entry is part 19 of 19 in the series 28 ஜூன் 2015

ஆர். அம்பலவாணன்

imagesதிருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு.
திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

“….. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு அப்புறம்தான் மணக்குடவரின் உரையின் காலம். இடைப்பட்ட காலத்தில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தும் பொதுவாக எல்ல்லாக் குறட்பாக்களையும் கவனிக்கும் போது அத்தனை இடைச்செருகல்கள் இருப்பதாக எண்ண இடமில்லை. என் நண்பர்கள் சிலர் திருக்குறள் ஒரே நபரால்தான் எழுதப்பட்டதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். என் கருத்தில் அந்த சந்தேகத்திற்கு இடமில்லை. குறளில் முழுமையான அமைப்பும் சில இலக்கணப் பிரயோகங்களும் ………..சொற் சிக்கனமும் வள்ளுவருக்கு என்று ஓர் அடையாளம், ஒரு ‘நடை’ இருப்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.”

சுஜாதாவின் கருத்து ஒருபுறமிருக்க, இடைச்செருகல்கள் சாதாரணர்களால் செய்யப்பட்டிருக்க சாத்தியமில்லை. நன்கு கற்றறிந்த புலவர்களே செய்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அவர்கள் வள்ளுவரின் சொற் சிக்கனம், நடை இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே ‘புதிய’ குற்ட்பாக்களை இயற்றி இணைத்திருக்க முடியும்.

இந்தப் பின்னணியில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தைப் படிக்கலாம்.

முழு நூலாக எழுதப்பட்ட பல இலக்கியங்கள், முன்னுரை போல கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது மரபாக இருந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் முழு நூலாக உருவாக்கம் செய்யப்பட்ட திருக்குறளில் கடவுள் வாழ்த்து வள்ளுவரால் இயற்றப்பட்ட பாக்களா என்ற ஐயம் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. அது அவராலேயே இயற்றப்பட்டிருந்தாலும், அது கடவுள் வாழ்த்தாக இல்லாமல், வேறொரு கருத்தை சொல்ல வந்த பாக்களாக இருக்கலாம். அது பின்னால் வந்தவர்களாலோ, அல்லது தொகுப்பாளர்களாலோ, அல்லது மாணாக்கர்களாலோ அது கடவுள் வாழ்த்து அதிகாரம் உருவாக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம்.

“உலகெலாம் உணர்ந்து ……… மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானும், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ….. அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று ராமாயணத்தில் கம்பரும் கடவுளைத் தன்மையில் (in firstperson) வாழ்த்தித் தொடங்கியுள்ளதைக் காணலாம். இவ்வாறு ஒன்றிரண்டு செய்யுளில் எழுதப்பட வேண்டிய ஒன்றை திருக்குறளில் பத்து பாக்களாக உள்ளதை நோக்கவும். மேலும், இப்பாக்கள், மற்ற குறட்பாக்களைப்போலவே படர்க்கையில் (in third person) எழுதப்பட்டுள்ளன.

கடவுளைத்தொழுது தொடங்குவதன் நோக்கம் தான் மேற்கொள்ளும் (நூல் எழுதும்) செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்பதே. கடவுள் வாழ்த்தில் உள்ள பாக்களைப் பாருங்கள். மற்ற அதிகாரங்களைப்போலவே ஒரு வரையறை, சாதக பாதகங்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. “அகர முதல” என்ற முதல் குறள் ஒரு வரையறை(definition). “கற்றதனால்” என்ற இரண்டாவது குறளும், “கோளில்” என்ற ஒன்பதாவது குறளும் கடவுளை வணங்குதலே தலையாய கடமை என்ற அறிவிக்கைகள் (statements). மற்ற ஏழு குறட்பாக்களில், மனித குலத்தின் மூன்று முக்கிய வரையறுப்புகளான சோகம் அல்லது மனக்கவலை (4,7), காலம் அல்லது அநித்யம் (3,6,8,10), அறியாமை (5) ஆகியவற்றை நீக்கும் உபாயம் இறைவணக்கமே என்று கூறப்பட்டுள்ளது.

சொன்னதையே திரும்பச்சொல்லுதல் இலக்கியத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பர். நான்காவது, ஏழாவது பாக்கள் கவலையறுத்தல் என்ற ஒரே கருத்தையும், எட்டாவது, பத்தாவது பாக்கள் பிறவியறுத்தல் என்ற ஒரே கருத்தையும், மூன்றாவது, ஆறாவது பாக்கள் நெடிய வாழ்வு என்ற ஒரே கருத்தையும் சொல்வதைக் கவனிக்கவும்.

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி … எழுமைக்கும் ஏமாப்புடைத்து” (398) என்ற குறளையும் இரண்டாவது குறளையும் ஒப்பிட்டு நோக்கினால், இக்குறளும் பிறவியறுத்தல் என்ற கருத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம். வலியுறுத்தல் (tautology) என்று எடுத்துக்கொண்டாலும்கூட பத்து எண்ணிக்கை நிரப்பும் இடைச்செருகலாக இருக்கலாமோ என்ற எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஐந்தாவது அதிகாரமான இல்வாழ்க்கையில் “தென்புலத்தார் தெய்வம்…..ஓம்பல் தலை” (43) என்றும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் …….. தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என்று குறிப்பிட்டிருப்பதையும், ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத்துணை நலனில் “தெய்வம் தொழாஅள் …. பெய் எனப் பெய்யும் மழை” என்ற குறளையும், ஆள்வினை உடைமை(62) அதிகாரத்தில் “தெய்வத்தான் ஆகாது ….. கூலி தரும்” என்ற குறளையும் கவனித்தால் வள்ளுவரின் தெய்வம் (கடவுள்) பற்றிய சிந்தனை ஓரளவுக்குப் புலப்படும்.

தவம் (27) அதிகாரத்தில் “கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றம் தலைப்பட்டவர்க்கு (269) என்ற குறட்பாவில் நற்றவமே நீடு வாழ்தலின் காரணம் என்ற மாற்றுக்கருத்தொன்றை வைக்கிறார்.

இது போன்றே மெய்யுணர்தல் அதிகாரத்தில் “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” என்ற குறட்பாவிலும் மற்றும் இரண்டு பாக்களிலும் பிறவி மற்றும் துன்பத்திலிருந்து விடுபட மெய்யறிவு பெறுதலே வழி என நிறுவுகிறார். மெய்யுணர்வு பெற மெய்ஞானியர்களை நாடுவதே ஆன்மீக மரபு. மெய்யுணர்வு பெற்ற மனிதன் தெய்வீக நிலை எய்துகிறான் (50). தெய்வம் பற்றிய அவரது குறள்களின் மூலம் இதனையே வலியுறுத்துகிறார்.

இந்த பின்னணியில் பார்த்தால், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் என்னும் சொற்கள் கடவுளைக் குறிப்பதாகக் கருதுவதை விட முற்றும் துறந்த ஞானியர்களையே குறிப்பதாகக் கொள்ளலாம். துறவு (35) அதிகாரத்தில் “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (350) என்ற வழிகாட்டு நெறியையும், குறட்பாக்கள் 25,30 மற்றும் 348 இவைகளில் அமைந்த சொற்களையும் காண்க. எனவே, இச்சொற்கள் இடம் பெற்றுள்ள பாக்கள் நீத்தார் பெருமையின்பால் அமைவதே பொருத்தம் எனக்கருத இடமுண்டு. மேலும், தாள், அடி என்ற சொற்கள் உருவம் அற்ற இறைக்குச் சற்றும் பொருந்தாதவை. மெய்ஞானிகளான துறவியர்களின் தாள் அல்லது அடி சேர்தல் என்பதே பொருத்தமானதாகத் தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணிப்பார்த்தால், திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் இடைச்செருகல்கள் மூலமாக சீரமைக்கப்பட்டிருக்கலாம்(?) என்றே கருதத்தோன்றுகிறது.

Series Navigationஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
author

Similar Posts

127 Comments

  1. Avatar
    SUNDAR says:

    சுஜாதா அவர் முன்னுரையிலே சில அதிகாரத்தில் ஒரே கருத்தை கூறும் இருவேறு குறள்கள் இருப்பத்தையும் சில குறள்கள் அந்தந்த அதிகாரத்தின் பொருளை தவிர்த்து தனித்து நிர்ப்பதையும் கூறியுள்ளார்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    வள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் எந்தவொரு இந்து கடவுளரின் பெயரையும் குறிக்காமல், ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான்,இறைவன் என்று ஒவ்வொரு குறளிலும் இறைவனின் பண்புகளை மட்டுமே சொல்லி, இத்தனைப் பண்புகளையும் கொண்டவர் ஒரே கடவுள்தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். இதனால்தான் திருக்குறளை நாம் பொதுமறை என்று போற்றுகிறோம். கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்த நான் இதுபோன்ற ஒரே கடவுள் தத்துவத்தைப் போற்றுகிறேன். இந்த அருமையான கடவுள் வாழ்த்து இடைச் செருகல் என்றால் நிச்சயமாக இதில் இந்துக் கடவுளின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். இடைச் செருகல் செய்தவர்கள் வள்ளுவரைப்போன்று பகுத்தறிவாளராக இருக்க வாய்ப்பில்லை…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    BS says:

    //இருந்தும் பொதுவாக எல்ல்லாக் குறட்பாக்களையும் கவனிக்கும் போது அத்தனை இடைச்செருகல்கள் இருப்பதாக எண்ண இடமில்லை. என் நண்பர்கள் சிலர் திருக்குறள் ஒரே நபரால்தான் எழுதப்பட்டதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். என் கருத்தில் அந்த சந்தேகத்திற்கு இடமில்லை. குறளில் முழுமையான அமைப்பும் சில இலக்கணப் பிரயோகங்களும் ………..சொற் சிக்கனமும் வள்ளுவருக்கு என்று ஓர் அடையாளம், ஒரு ‘நடை’ இருப்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.”
    சுஜாதாவின் கருத்து ஒருபுறமிருக்க, இடைச்செருகல்கள் சாதாரணர்களால் செய்யப்பட்டிருக்க சாத்தியமில்லை. நன்கு கற்றறிந்த புலவர்களே செய்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அவர்கள் வள்ளுவரின் சொற் சிக்கனம், நடை இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே ‘புதிய’ குற்ட்பாக்களை இயற்றி இணைத்திருக்க முடியும்.//

    கடவுள் வாழ்த்து அதிகாரத்தைப்பற்றி நான் பேசவில்லை. இடைச்செருகல்களைப்பற்றி மட்டுமே.

    வள்ளுவருக்கென்று ஒரு நடை இருக்கிறது….கற்றறிந்த புலவர்களே செய்திருக்கவேண்டும். அந்நடையைப்புரிந்தவர்கள் இடைச்செருகல்கள் பண்ணினார்கள். இல்லையா?

    திருக்குறள் பொதுவாக ஒரு எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சங்கப்பாடல்களைப்படித்தபின், இந்நூலைப்படித்தால் மிஞ்சுவது வியப்பே. காரணம், இரு நடைகளுக்கும் இருப்பது ஒரு நீண்ட இடைவெளி. இஃதொரு பதினெண்கணக்கு நூல்தானா என்ற வியப்பு மேலிட்டால் வியப்பன்று. அப்படிப்பட்ட மாடர்ன் தமிழ்.

    வள்ளுவரின் நடையை இலகுவாகக் கற்று அவரைப்போல மிமிக்ரி இலகுவாகப் பண்ணலாம். ஈரடி மட்டுமே. பள்ளிக்கூடத்துப்பையன்கள் கிண்டலடித்து லவ் குறள்கள், வாத்தியாரைக்கிண்டலடிக்கும் குறள்கள், செக்ஸ் குறள்கள் பள்ளிக்கூடத்து டாய்லெட் சுவரில் எல்லாம் போடுவார்கள். பலரும் வள்ளுவரைப்போல குறள்கள் எழுதுவது உண்டு. இவர்களே இப்படியென்றால், கற்றறிந்த புலவர்கள் ஒரு மாற்றுக் திருக்குறளை இலகுவாக படைக்கலாம். காமத்துப் பால் முழுவதுமே இடைச்செருகள் என்பாரும் உள்ளனர்.

    பெரும்புலவர்களாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. வெறும்புலவர்கள் போதும். அதே சமயம் சங்கப்பாடல் தமிழை அவ்வளவு எளிதாக மிமிக்ரி பண்ணமுடியாது. உண்மையான பழந்தமிழ் அதுவே.

    இடைச்செருகல்கள் நிறைய இருக்கலாமென்பதை உறுதியாகக்கூட சொல்லலாம். அவற்றைச்செய்தோர் உள்ளோக்கம் ஊரை ஏமாற்றச்செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

    அய்யோ பாவம். எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டார். அவர் பிறப்பு, ஜாதி, தொழில், மதம், மணம் (துறவியா இல்லை மணமானவரா? – என்று எல்லாமே ஊகங்களாகப் போனதுவே !

  4. Avatar
    ஷாலி says:

    // மேற்குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணிப்பார்த்தால், திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் இடைச்செருகல்கள் மூலமாக சீரமைக்கப்பட்டிருக்கலாம்(?) என்றே கருதத்தோன்றுகிறது.///

    சிலர் கூறுகின்றனர் ‘குறளில் முதல் அத்தியாயத்தில், இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச்செருகல் என்று, சிலர் அப்படியெல்லாம் இல்லை, கடவுள் வாழ்த்து வள்ளுவர் பாடியதுதான்’ என்று கூறுகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில் கடவுள் வாழ்த்துப் பாக்கள் வள்ளுவரே பாடியதாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுளுக்கா வள்ளுவர் வாழ்த்து கூறினார்? இல்லை கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப்பாட்டிலும் ஒரு பாட்டிலாவது வள்ளுவர், ‘கடவுள்’ என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு ‘எல்லாம் வல்ல’ ‘எங்கும் நிறைந்த’ என்பதாகக் கடவுளை குறிக்க ‘கடவுள் என்ற சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது.
    கடவுள் வாழ்த்து என்பது கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதியாகும். ‘சர்வ வல்லமையும்’ படைத்த நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு ‘கடவுள் வாழ்த்து’ என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா? வள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி என்று கூறுகின்றோம். அதற்குத் தக்க ஆதாரம் உள்ளது. அவர் போய் கடவுள் வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா? வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடி இருப்பது எல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அப்படி நடக்க வேண்டும் என்பதற்காகவே பத்துப்பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறுகின்றார்.
    பத்துப்பாட்டிலும் நற்குணங்களைப் போதித்து உள்ளார் என்றால் என்ன பொருள்? மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகத்தான் பத்துப் பாடல்களிலும் நற்குணக் கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்து கூறியிருக்கின்றார் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், ப.1262)

    திருக்குறளும் தந்தை பெரியாரும். -http://puthu.thinnai.com/?p=24239

  5. Avatar
    BS says:

    கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் மட்டுமல்ல, திருக்குறள் முழவதிலுமே இடைச்செருகல்கள் இருக்கின்றன எனப்தை வள்ளுவர் கருத்துக்களிலிலேயே முரண்பாடுகள் இருப்பதிலிருந்து தெரியலாம். வள்ளுவர் சமணர். நாலவகை வருணக்கொள்கைக்கும் வைதீக பிறக்கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் சமணர்கள். அப்படிப்பட்ட வள்ளுவர் ஓரிடத்தில் பிற்ப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்றுசொல்லிவிட்டு பிறிதோரொடத்தில் பார்ப்பான குலவொழுக்கம் கெடும் என்று அவர்களைப்பற்றி கவலைப்படுகிறார்.

    முயற்சி திருவினையாக்கும் என்று ஓரிடத்தில் போதித்துவிட்டு

    ஊழிற் பெருவலி யாவுள; மற்றொன்று
    சூழினு தான் முந்துறும்

    என்று முற்பிறப் பின் நல்விலை-தீ வினைகள் முதன்மைப்படுத்துவது ஏன்? பலே பாண்டியர்கள் உட்புகுந்து வள்ளுவரை வசதியாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் எனலாம். முரண்பாட்டை நீக்க தங்கள் குறள்களை வைத்துவிட்டு அவர் குறளை அழித்தாவது செய்திருக்கலாமேஏ? செய்வன திருந்தச்செய் என்று கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

  6. Avatar
    முத்து says:

    திருக்குறளில் இடைச்செருகல்கள் இல்லை என்பதே அறிஞர்களின் முடிந்த முடிவு! திருவள்ளுவர் ஒவ்வோர் இடத்திலும் ஏழு என்னும் நிலையை (ஏழு சொற்கள், 1+3+3 = 7) என அமைத்திருப்பதில் இருந்தே அதை அறியலாம். கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு,நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களையும் ‘சிவன், சக்தி, குமரன்’ நிலை கொண்டு பார்க்க வேண்டும் என்னும் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்து ஆழ்ந்து நோக்கத்தக்கது.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    வள்ளுவர் கடவுள் வாழ்த்திலோ, வான் சிறப்பிலோ அல்லது நீத்தார் பெருமையிலோ சிவன், சக்தி அல்லது குமரன் என்ற பெயர்களை பயன்படுத்தவில்லை. இடைச்செருகல் செய்தவர்களும் ( ஒருவேளை ) இந்த பெயர்களைப் பயன்படுத்தவில்லை. சங்க காலத்தில் திராவிடர்கள் இந்த கடவுள்களை வழிபட்டிருந்தால் வள்ளுவர் ஏன் மிகவும் கவனமாக எந்த இந்துக் கடவுள் பெயரையும் பயன்படுத்தவில்லை? அவர் சமணராக இருந்திருந்தால் புத்தர் பெயரையாவது பயன்படுதியிருக்கலாமே? அதுவும் இல்லையே? ஒருவேளை இடைச்செருகல் செய்தவர்கள் பகுத்தறிவாளர்களா? அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  8. Avatar
    ஷாலி says:

    BS says: // பலரும் வள்ளுவரைப்போல குறள்கள் எழுதுவது உண்டு. இவர்களே இப்படியென்றால், கற்றறிந்த புலவர்கள் ஒரு மாற்றுக் திருக்குறளை இலகுவாக படைக்கலாம்..//

    பாரதிதாசனின் திருக்குறள் அவரது குயில் வாரஇதழில் 1960 ம் ஆண்டுகளில் எழுதியது.இடைச்செருகலுக்கு அவர் குறளிலே பதிலளிக்கிறார்.

    1.எந்தற் பொருள்கட்டும் ஏங்கா தொருவயின்
    மன்னலே ஆகும் மனம்.

    2.ஒருவன் புகழ்வான் ஒருவன் இகழ்வான்
    இரண்டுக்கும் அப்பால் இரு.

    3.இடைச்செருகல் வள்ளுவரில் இல்லை படைத்தமிழ்
    யாவினும் உன்டென்பன் நான்.

    4.இருந்தாள் இருக்கின்றாள் என்றும் இருப்பாள்
    வருந்தாள் மறத்தமிழ் தாய்.

    5.அவன் செயலாலவன் செல்வம் அடைந்தான்
    எவன் செயலால் ஏந்துகின்றான் கை.

  9. Avatar
    ஷாலி says:

    // வள்ளுவர் சமணர். நாலவகை வருணக்கொள்கைக்கும் வைதீக பிறக்கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் சமணர்கள்…..// BS says

    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்-குறள்167.

    ‘அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்’ என்று சொல்லிவிட்டு அடுத்து இன்னொரு வரியை இடுகிறார். ‘இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று’. நல்குரவு என்றால் வறுமை. இந்தக் குறள் செல்வத்திற்கு காரணமாக அழுக்காறின்மையையும் வறுமைக்குக் காரணமாக அழுக்காறுடைமையையும் கூறியதாக மணக்குடவர் விளக்கம் தருகிறார்.

    திராவிடக் கலைஞர் கருணாநிதி தன் விளக்க உரையில், ‘செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்’ என்று சொல்கிறார்.

    திருவள்ளுவர் சமணர் என்றால் இந்து மத தொன்மங்களை ஏன் குறளில் மேற்கோள் காட்டவேண்டும்.?

    ‘பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்’ போன்ற சொற்கள் சமணருக்கு மட்டும் சொந்தமானதல்ல.

    பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
    மறவா அருள்தந்த மாதவன் நந்தி
    *அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
    உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
    திருமந்திரம் – 1803

    பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
    நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
    செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
    அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
    திருமந்திரம் – 2533

    கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
    நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
    வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
    இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
    திருமந்திரம் – 554

  10. Avatar
    ஷாலி says:

    சமணச் சமயம் கடவுளை ஏற்பதில்லை. உயிர்களுக்குக் கர்ம பலன்களைப் (வினைகளை) நுகர வைக்கக் கடவுள் தேவையில்லை என்றும், கர்மங்கள் தாமாகவே தத்தம் பலன்களைத் தரும் என்றும் சமணம் கூறுகிறது. ஆனால் வள்ளுவம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மக்கள் இறைநெறியில் நின்றால் தான் துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அது வலியுறுத்துகிறது. உயிர்களுக்குக் கர்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.

    ‘வகுத்தான் வகுத்த வகையல்லர்’

    என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான் என்பது ஊழைக் குறிப்பதாயினும் அதற்க்கு இங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடையது.

    மேலும், ஊழைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்று இல்லையென்றும், வினைப்பயனை யாராலும் தவிர்க்க முடியாது என்று வலியுறுத்துவது சமணம். ஆனால், வள்ளுவம் ஊழை ஏற்றுக் கொண்டாலும் அதனை உழைப்பினால் புறம் தள்ளலாம் என்பது வள்ளுவத்தின் சிறப்பு.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் (குறள்.619) என்றும்,

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர் -(குறள் 620) ; என்றும்

    மெய் வருத்த கூலி என்னும் உழைப்பு என்பது இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதின் மூலம் இறைவன் விதித்த விதியை இறை பிரார்த்தனை மூலம் வெல்லலாம்.

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
    இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,
    அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால் – 8 என்றும்,
    பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,
    பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,

    திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் என்றே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கொள்ளுதல்தான் சரியானது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது சமணத்துக்கு நேர்மாறானது. இறைவனை மறுக்கும் சமணம் எங்கே? இறைவனை ஏற்கும் வள்ளுவம் எங்கே?

    ஆக திருவள்ளுவர் ஓர் இறைவனை ஏற்றுக்கொண்ட உத்தமர்.அனைத்து இறைத்தூதர்களும் மக்களுக்கு போதித்த ஒரே இறைவனையே வள்ளுவரும் வணங்கச் சொல்கிறார்.ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! வள்ளுவர் வழி செல்வோம்! வான் புகழ் அடைவோம்!!

  11. Avatar
    ஒரு அரிசோனன் says:

    ஷாலி அவர்களே,

    தாங்கள் திருவள்ளுவர் சமணர் அல்லர், இந்துமததுச் சேர்ந்தவர், அச்சமயக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர் என்பதைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி, ஐயா!

    1. Avatar
      BS says:

      அப்படியென்றால் சைவரா வைணவரா? தொல்தமிழரின் மதமா, என்று ஷாலி விளக்குவார்.

      வைதீகரென்றால், வருணாஷ்ரமத்தை ஏற்றவராவார் வள்ளுவர். அப்படியென்றால், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும், சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்ற குறள் இடைச்செருகலே. பாப்பான் குலவொழுக்கம் கெடும் என்று எழுதியது இடைச்செருகலாக இருக்கமுடியாது.

      தீண்டாமையக்கைக்கொண்டு, தீண்டப்படாதோரை இழிசினர்கள் என்று எழுதியிருப்பார். கண்டிப்பாக உயர்ஜாதியினருள் ஒருவராக இருப்பார். தீண்டத்தகாதோர் அவ்வருணக்கொள்கையை ஏசுவர். அவர்களை விலங்குகளும் கீழான மக்களாக நடத்தியதனால்.

      இந்துவோ, இசுலாமியரோ, கிருத்துவரோ சமணராகவோர் அவர் இருந்தால், அவர் நடுநிலையானராக இருக்கவாய்ப்பில்லை. ஏனென்றால் எதையாவது அவரேற்றி, பிறிதொன்றைத்தூற்றித்தான் ஆக வேண்டும். அவர் எழுதிய நூலும் நீதிநூலன்று. சைவ சிந்தாந்த நூல் வரிசையில் திருக்குறளை வைத்து அண்ணாமலையாரைப்பூசிக்க உதவுமே. வைணவரென்றால், 13 வது ஆழ்வார். சைவரென்றால் 64 வது நாயன்மாராக வள்ளுவரை மாற்றலாம்.

      மற்ற மதத்தினரும் பிறரும் அந்நூலைச்சீந்த வேண்டியதில்லை.

      பெருமதிப்பிற்குரிய ஓர் அரிசோனன் அவர்கள் ஏன் ஷாலியின் தீர்ப்பை எதிர்நோக்கி ஏங்குகிறாரென்று தெரியவில்லை. பரிமேழகர் வள்ளுவர் ஒரு வைதீகப்பார்பனரே என்று நிலைநாட்டி விட்டாரே? அவர் உரை தமிழகத்தில் பரவலாக பாரட்டப்படுகிறதே? ஏனதை எடுத்துப்பேசி மனமகிழக்கூடாது வைதீகப்பார்ப்பனர்கள்?

      நால்வகை சாதி நிலைகொண்ட சமூகத்தை ஏற்று அதற்கே குறளை எழுதினார் என்று பரிமேலழகர் கொடுக்கும் விளக்கங்க்ள் நிலைநாட்டுகின்றன. ஏன் ஷாலி சொல்வாரென்று காத்துக்கிடக்கிறீர்கள். பரிமேலழகரே சொல்லிவ்ட்டரென்று ஒரே போடா போட்டுவிடலாமே? பரிமேலழகருக்கில்லா மதிப்பு வேறெந்த உரைக்கும் தமிழர்கள் கொடுக்கவில்லையென்று தெரிந்துமா தயக்கம்?

    2. Avatar
      தமிழாறு says:

      அவர் சொல்வது வரி யை தமிழர் மெய்யியல் நீங்கள் வெள்ளையரால் திணிக்கப்பட்ட பாரசீக இழிபெயரை தொன்மையில் நுழைக்க முயல்வது கயமை

  12. Avatar
    BS says:

    மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    (குறள் 134)

    கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக்கற்றுக் கொள்ள முடியும். ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுங்கங்குன்றினால் கெடும். (மு. வரதராசன்)

    133 வது குறளின் விளக்கம் – ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகும் (மு வரதராசன்)

    ஆக, ஓர் அரிசோனன் அவர்களே, கவலையேப் படவேண்டாம். வள்ளுவர் நம்ம ஆளு.

  13. Avatar
    ஷாலி says:

    //ஷாலி அவர்களே,
    தாங்கள் திருவள்ளுவர் சமணர் அல்லர், இந்துமததுச் சேர்ந்தவர், அச்சமயக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர் என்பதைச்……. ஒரு அரிசோனன் says://

    அய்யா! அரிசோனரே… இந்து மதம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
    பிரம்மா, சிவன்,விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிகள், அஷ்ட வசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகந்தர்வர், சித்தவித்யாதரர், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புரு நாரதர், மாற்றுமுண்டான தேவரிஷிகளை கும்பிடுகின்ற மதம்.
    முக்கோடி தேவர்கள் என்பதற்கு- தமிழ் எண்கள் வரிசைப்படி ஒன்று, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கற்பம், நிகர்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நிலம், அர்ட்டம், பரர்ட்டம், ஊரியம், முக்கோடி, மகாயுகம் என்று போகிறது. இதில் நமக்குத் தேவையான முக்கோடி, பத்தொன்பதாவது வரிசையில் வருகிறது.
    இதை எப்படி எழுதுவது. அதாவது முக்கோடி, முப்பதுக்குப் பின்னால் 21 சுழியம் எழுத வேண்டும். இதைத்தான் முக்கோடி என்று சொல்வது. அல்லது கோடி கோடி கோடி என்றும் சொல்லலாம்.
    இன்றைய இந்துக்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி.
    அப்படி என்றால்?
    முப்பத்து முக்கோடியை, இந்துக்களின் எண்ணிக்கையான 90 கோடியில் வகுத்தால் வரும் விடையென்ன?
    அதாவது
    = 3.3 லட்சம் கோடி
    ஆக, ஒரு இந்துவுக்கு, 3.3 லட்சம் கோடி கடவுள்கள்???
    இவர்களெல்லாம் போதாது என்று நண்பர் அரிசோனர் திருவள்ளுவருக்கு பட்டையும் உத்திராட்ச கொட்டையும் அணிவித்து சைவச்சாரியார் ஆக்கி அழகு பார்க்க விரும்புகிறார்.

    அரிசோனருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்.திருச்சிற்றம்பலத்தில் பெரிய புராணத்திற்கு, சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” முதலடி எடுத்துக்கொடுக்க, தில்லை அம்பல அந்தணர்களை ஓரங்கட்டி, பாலகிருஷ்ண சிவாச்சாரியார் என்ற கற்பனை சைவரை உருவாக்கி சேக்கிழார் பெருமானையே ஓய்! என்று விளித்து உரையாட விட்டவர். திருவள்ளுவர் மாட்டினால் விடுவாரா?
    http://www.tamilhindu.com/2014/06/35472/

    திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சாரவில்லை.அன்று சமணம்,சைவ வழக்கில் இருந்த வார்த்தைகளை போட்டு ஓரிறைக் கொள்கை உள்ள குறளை எழுதினார்.வள்ளுவம் உரைப்பது ஒன்றேகுலம்! ஒருவனே தேவன்!! இந்த உருவமில்லா ஓரிறைக் கொள்கையை சிவவாக்கிய சித்தர்கள்,வால்மீகி சித்தர்கள் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
    “ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
    அவரவர் கண்டதையெல்லாம் சரிதை என்பார்
    ஓமப்பா கல் செம்பைத் தெய்வமேன்றே
    உருகுவார் பூசிப்பார் கிரியையென்பார்…
    வால்மீகி சித்தர்.-சூத்திர ஞானம்.16.

    1. Avatar
      paandiyan says:

      திருவள்ளுவரை கிறிஸ்துவாக மாற்ற முயற்சி எல்லாம் வீனகபோனது . அவரை முஸ்லிம் ஆக மாற்ற வழியெ இல்லை . ஐயோ பாவம் இந்த ஜால்ராக்கள் ……..

  14. Avatar
    BS says:

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து அரசு செயல்களுக்கு லோகோவாக வைக்க விரும்பியது. ஓவியர் வரைந்து கொடுத்தார். வள்ளுவரைப் பார்ப்பனராக்கிவிட்டார் ஓவியர். பூணூல் போட்டு. திமுக அரசு இது சரியில்லை; சாமிகளுக்குத்தான் சாதி கொடுக்கிறீர்கள்; எங்களால் தடுக்க முடியாது. வள்ளுவரை பார்ப்ப்னராக்க வேண்டாமென்றவுடன் ஓவியர் திருவல்லிக்கேணி சாமிநாத சர்மா பூணூலை எடுத்து விட்டார். இப்போது பூணுலில்லா வள்ளுவரின் ஓவியம்தான் அரசு அங்கீகாரம் செய்து பயன்படுத்துகிறது. இப்போது பூணுலில்லா வள்ளுவரின் ஓவியம்தான் அரசு அங்கீகாரம் செய்து பயன்படுத்துகிறது.

    1. Avatar
      Rama says:

      Poonul was for all Varnas but is now being worn and the customs follwed only by Brhamins and few Chettiars. More than likely, Thiruvulluvar would have worn the poonul.

  15. Avatar
    ramu says:

    அப்போது ” தாம் வீழ்வார் மென் தாழ் துயிலின் இனிது கொல்
    தாமரைக்கண்ணான் உலகு”

    இடைச்செருகலா

  16. Avatar
    ramu says:

    பாண்டியன் நன்று சொன்னீகள் சில ஆண்டுகளுக்குமுன் சென்னை பேராயர் ராயப்பா அருளப்பா வை ஏமாற்றி ” வள்ளுவர் கிருஸ்துவர் தான் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று சொல்லி ரூபாய் 50000 பறித்த kathai நினைவ வருகிறது

  17. Avatar
    Dr.G.Johnson says:

    திருக்குறளின் கடவுள் வாழ்த்தைப் பற்றி இவ்வளவு சர்ச்சைகள் தேவையில்லை.அதில் கூறப்பட்டுள்ள பொதுவான ஒரே கடவுளின் தன்மைகளை இந்துக்களும், இஸ்லாமியரும், கிறிஸ்துவர்களும், பகுத்தறிவாளர்களும் ஏகமனதாக ஏற்பது தெரிகிறது. வள்ளுவரை அனைத்து மதத்தினரும் ஏற்று கொண்டாடுவது அவருக்கு பெருமைதான். அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்வதில் பலனில்லை.அவர் கூறியுள்ள பத்து விதமான கடவுளின் பண்புகளை நாம் ஏற்றாலே போதுமானது. அவர் வலியுறித்தியுள்ளது ஒரே கடவுள்தான். அதனால்தான் அவர் எந்த இந்து கடவுளின் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறவில்லை. நாம் என்னதான் கற்றறிந்த அறிவு ஜீவிகளாக இருந்தாலும் அந்த ஒரு கடவுளை வழிபடாவிடில் நாம் கற்றதெல்லாம் வீண் என்பதை இரண்டாம் குறளிலேயே கூறிவிட்டார்.
    ” கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.”
    ஆகவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை நம்பி, எம்மதமும் சம்மதமே என்பதை ஏற்று .ஒற்றுமையுடன் செயல்படுவோம் நண்பர்களே…….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  18. Avatar
    BS says:

    ஒரு வடமாநிலத்துக்காரர் ஹிந்தியைத் தாய்மொழியாகக்கொண்டிருப்பவரான தருண் விஜய் ஒரு பி ஜே பி எம் பி. ஆர் எஸ் எஸ் பத்திரிக்கையான அபசர்வை பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர். இவர் தமிழைப்படித்திருக்கிறார். எல்லாரிடமும் வள்ளுவர் இந்து என்றும் தமிழரின் தாய்மதம் இந்துவே என்றும் பரப்புரை செய்து வருகிறார்.இராஜ இராஜ சோழன் வைதீகமதத்தை தழைக்கச்செய்தவன் என்று ஆர் எஸ் எஸ்காரர்கள் விழா எடுக்கிறார்கள்.

    எனவே வள்ளுவர் இந்து என்று நிலைநாட்டுவது இன்றைய இந்துத்வாக் கொள்கையாகும். எனவே ஓர் அரிசோனன், இராமா பாண்டியன் போன்றோர் வள்ளுவரை ஓரிறைக்கொள்கையுடையோராக காட்டினால் இசுலாமியர் போலிருக்கிறதே என்று பயப்படுகிறார்கள். தமிழர்களில் இந்துக்களுக்கே அதுவும் வைதீக இந்துக்களுக்கே வள்ளுவர் என்பதே இவர்கள் கொள்கை.

    பாவம் வள்ளுவரின் நிலைமை அரசியல் பகடைகாயாகிவிட்டது.

    1. Avatar
      paandiyan says:

      இந்த விசயத்தில் எங்களுக்குல் இரூக்கும் ஒற்றுமை பரவாயில்லை .ஐயோ பாவம் அவரை எப்படி வைத்து எமாறுவது என்று நீங்கள் பண்ணும் காமெடி உட்சகட்டம் ! சிரிப்பை அடக்க முடியவில்லை

      1. Avatar
        BS says:

        தமிழன் எதையும் செய்து சிரிப்பு மூட்டட்டும். மாலை போடட்டும் இல்லை மாலையை எடுக்கட்டும்.

        ஆனால் வள்ளுவரை ஏன் வடவனுக்கு கொடுத்து இந்துத்வா சிறைக்கூண்டில் அடைக்க வேண்டும். நாளை இந்து என்று மட்டும் சொல்லி நிற்கமாட்டான் அவன். நாங்கதான் தமிழனுக்கு எல்லாமே சொல்லித்தந்தோம். கூமுட்டைப்பயலுக என்றால் சிரிக்கலாமே! இந்துத்வாவுக்கு மானத்தை இழக்கக்கூடாது. என்னவென்றாலும் இங்கேயே அடித்துக்கொள்ளுங்கள்.ஒன்றும் குடிமுழுகாது. ஆனால், மூன்றாம் நபரை உள்ளே விடாதீர்கள். வள்ளுவர் உங்கள் சொத்து. மற்றவனுக்குக் கோட்டை விடாதீர்கள். இன்றைக்கு வள்ளூவர் இந்து என்பான். நாளை அவர் ஹிந்திக்காரர் என்பான். போதுமா?

    2. Avatar
      paandiyan says:

      வள்ளுவரின் சிலைக்கு இருந்த மாலையை கழற்றி வேறு போட்டு பார்க்கும் தமிழனின் நிலை அந்தோ பரிதாபம்

  19. Avatar
    sanjay says:

    மேற்குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணிப்பார்த்தால், திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் இடைச்செருகல்கள் மூலமாக சீரமைக்கப்பட்டிருக்கலாம்(?) என்றே கருதத்தோன்றுகிறது

    Ambalavanan,

    Does anyone know his history? Thiruvalluvar is one person or many perosns? No one knows. I do not know why you get so worked up on his reference to God.

    The word “kadavul” is not mentioned anywhere in the Thirukural. Also, it is not considered as a religious text.

    So, even if the verses on God was added later, who cares?

    Go ahead & say he was an atheist.

    Theists will not worry.

    1. Avatar
      BS says:

      No he is not an atheist. அவர் நாத்திகரென்று சொல்ல அவர் கடவுள் மறுப்பு என்று எதையும் எழுதவில்லை.அவர் என்னைப்போல என்று நான் நினைக்கிறேன். அதாவது கடவுள் நம்பிக்கை உடைய நாங்கள், கடவுள் பெயரால் அரங்கேறும் அயோக்கியத்தனங்களை எதிர்க்கிறோம். மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்கிறோம். மததத்தைக்காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சண்டாளர்களைக்கண்டு கொதிக்கிறோம். இந்தசண்டாளர்களை வளரவிட்டு உழைப்போரின் உணவைப்பறிக்கும் கூட்டத்தை ஒன்று செய்யாமல் இருக்கிறாயா என்று இறைவனுக்கே சாபம் விடுகிறோம். இப்படி மக்களை அலையவிட்ட நீயும் அலைந்து கெடுவாய என்று இறைவனைப்பழிக்கிறோம் (இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.)

      மக்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர் தீண்ட்படாதார் என்று பிறப்பிலேயே எல்லாம் இருக்கிறது. அதைச்செய்தவன் ஆண்டவன் என்று ஊத்தக்கதை விட்டு ஊரை ஏமாற்றுவோரைப்பார்த்து. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்கிறோம். மனந்ந்தூயமை செயல் தூய்மையிருந்தால் போதும் இறைவன் வேறெதையும் விரும்புவதில்லை என்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல் நீர பெற என்கிறோம். அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்று டுபாக்கூர் ஆசாமிகளை எச்சரிக்கிறோம் ;அதே சமயம், இறைவன் உண்டு. கற்றதாலாய பயன் அவனின் திருவடி தொழுதலே என்கிறோம்.

      ஆக, வள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். ஆனால் அந்நம்பிக்கை மக்களுக்குப் பலனைத் தரவேண்டுமென்று நம்புகிறவர். மக்களுக்கு நன்மையில் என்றால் அவ்விறை நம்பிக்கை தேவையில்லை.

  20. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //ஓர் அரிசோனன், இராமா பாண்டியன் போன்றோர் வள்ளுவரை ஓரிறைக்கொள்கையுடையோராக காட்டினால் இசுலாமியர் போலிருக்கிறதே என்று பயப்படுகிறார்கள். //

    திருவள்ளுவர் இறைதூதர் முகம்மது நபிக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே வாழ்ந்து மறைந்தவர். எனவே, யாரும் அவரை முகமதியர் என்று கூற இயலாது. அவர் ஏசு பிரானுக்கும் முந்தியவர். ஆகவே, அவர் ஒரு கிறித்தவராகவும் இருக்க இயலாது. எனவே எதற்காக நாங்கள் அச்சப்படவேண்டும்?

    அப்படியே அவர் ஒரு முகம்மதியராகவோ, கிறித்தவராகவோ, இன்னும் வேறு எந்த சமயத்தவராவோ இருந்தாலுமே நான் ஏன் அச்சப்படவேண்டும்? தன் மனதில் அச்சம் உள்ளவர்கள்தான் மற்றவர்கள்மீது அவ்வச்ச உணர்வைச் சுமத்தித் தங்களைத் துணிச்சல்காரர்களாகக் காட்ட முனைவார்கள்.

    முகமதியரான ஷீரடி சாயிபாபாவின் நன்னெறிக்காக அவருக்கு உலகம் முழுவதும் கோவில் எழுப்பி அவரை வணங்குபவர்கள் இந்துக்களே! அதற்காக அவர்கள் சமயம் மாறுகிறார்களா, அல்லது சாயிபாபா முகமதியர் அல்ல என்று கூறுகிறார்களா?

    திருவள்ளுவர் ஆதி, பகவன் என்று தனித்தனியாக உரைத்திருக்கும்போதே, ஆதி பராசக்தி என்றும், இறைவனான சிவபெருமான் என்றும் உள்ளி உணரலாமே!

    எனவே, அவர் ஓரிறை நம்பிக்கை உள்ளவர் என்று திரும்பத் திரும்ப எழுதுவது எனக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

    அறநெறிகளை உரைப்பவர்கள் யாராக இருப்பினும், திருவள்ளுவரோ, சைவ, வைணவப் பெரியார்களோ, எசுபிரானோ, முகம்மது நபியோ, அந்த அறநெறிகளில் நம்மால் முடிந்ததைப் பின்பற்றுவோம்.

    அதை விடுத்து, Dr. ஜான்சன் சொல்வதுபோல வீண்வாதம் எதற்கு?

    காந்தி, “ஈஸ்வர், அல்லா தேரே நாம், சப்கோ நன்மதி தே பகவான்!” என்று கூறினார். அதற்காக அவர் ஒரு முகமதியர் என்று சொல்வோமா? அவர் ஒரு உண்மையான இந்து என்பதை உலகறியும். அவரின் நன்நெறிக்காக எத்தனை சமயத்தார் அவரை தேசத் தந்தை என்று போற்றினார்கள். அப்போது சமயம் அவர்கள் கண்ணில் படவில்லை.

    உடனே, “காந்தியை ஒரு இந்து கொன்றான்!” என்றுசொல்பவர்களுக்கு நான் இதைத்தான் கூறுவேன்: “ஏசுபிரானை சிலுவையில் அறையச் சொன்னது, அவரது சமயத்தைச் சேர்ந்த யூதர்களே அன்றி, ரோமானியர்கள் அல்ல!”

    1. Avatar
      BS says:

      நீங்கள் திருவள்ளுவரை இந்து என்று சொல்கிறீர்கள். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இசுலாமும் கிருத்துவமும் தமிழ்நாட்டில் நுழையவில்லை. உண்மைதான். ஆனால், இவ்விரு மதத்தவரும் கிருத்துவ மதக்கொள்கைகள் காணப்படுவதாகச் சொல்லலாம். அல்லது ஓரிறைக் கொள்கையைக் காட்டலாம்.

      அதே சமயம், நீங்கள் வள்ளுவரை இந்துவாக்க முனைவது அவரைச் சமணர்கள் தங்கள் ஆச்சாரியராகக் கொண்டு வழிபடுவது பொய் என்று சொல்லத்தான். வள்ளுவர் கொந்தகொந்த சமணாச்சாரியாராக வழிபடப்ப‌டுகிறார் தமிழ்நாட்டில் என்பது உண்மை என்று நன்கு உங்களுக்குத் தெரியும். சமணர்கள் கூற்றுப்படி அவர் யாத்த நூல்களுள் ஒன்றேயொன்றுதான் தமிழ்நூல் – அது திருக்குறள். மற்றவை வடமொழி சமண சமய நூல்கள் என்றும் அந்நூல்கள் பெயரகளையும் குறிப்பிடுகிறார்கள் சமணர்கள்.

      சமண வாதத்தை எதிர்க்க வைக்கப்பட்டதே வள்ளுவர் ஓர் இந்து என்ற இந்துத்வா பிரச்சாரமாகும். இசுலாமியருக்கும் கிருத்துவருக்கும் எதிராக அன்று. உங்கள் பிரச்சாரம் இங்கே அதுதான். ஆதி பகவன் என்பதற்கு ஆதி பராசக்தி + சிவன் என்று விளக்கம் நீங்கள் கொடுக்கலாம. உஙகளாசை. சமணர்கள் ஏற்கவில்லை. மற்றவரகள் அச்சொல் அனைத்தையும் கடந்த உள் (கடவுள்) எனபதையே குறிக்கிறதென்கிறார்கள். ஆதி என்பது தொடக்கம். தொடக்கத்திலிருந்து வந்தது என்றுதான் பொருள் படும். ஆதி என்றால் ஆதிபராசக்தி என்று சொல்ல ஆதிக்குப்பின் ஒரு சொல் பராசக்தி என்று குறிக்க வேண்டும். ஆதி என்பது அட்ஜக்டிவ் – பண்புப்பெயர். நவுன் கிடையாது. பகவன் என்பது நவுன் – பெயர்ச்சொல். அதாவது காமன் நவுன். பொதுப் பெயர். எக்கடவுளையுமே குறிக்கும். ஈஸ்வர், இறைவன், கடவுள் என்பன போல.

      நன்னெறி பற்றியெல்லாம் பேசாதீர்கள். அஃதெல்லோருக்குமே தெரியும். நன்னெறி என்று போனால் மருத்துவர் ஜாண்சன் சொன்னதைத்தான் ஏற்க வேண்டும். இந்த சச்சரவெல்லாம் ஏன்? கடவுள் வாழ்த்து கடவுளைப்பற்றி; எக்கடவுள் என்று அவர் சொல்லவில்லை என்று மருத்துவர் முடித்துவிட, நீங்களோ, அது சிவ பார்வதியைக்குறிக்குமென்று வள்ளுவரை இந்து என்று மீண்டும் நிலைநாட்டுகிறீர்கள். நன்னெறி என்று விட்டீர்களா? வீண்வாதம் உங்களிடமிருந்தும் வருகிறது. ஓரிறைக்கொள்கையை வள்ளுவர் கொள்கை என்று முடித்துவிட தயக்கமேன்?

      ஓரிறைக்கொள்கை இந்து சமயத்துக்குப் புதியன்று. ஓகே. அதே சமயம், அக்கொள்கையுடனே ஷாலி சொன்ன முப்பது முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒன்றையே பலவற்றையோ தொழலாமென்றும் இந்துமதம் சொல்கிறது. அப்படியே மக்களும் செய்கிறார்கள். நீங்கள் அண்ணாமலையாரையும் முருகனையும் வெங்கடாஜலபதியையும் தொழுகிறீர்கள். வைணவர்கள் உங்கள் சிவ பாரவதி, முருகன் எனறு தொழவதில்லை. ஆக, என்ன புலனாகிறது இதில்? இந்துமதத்தில் ஓரிறைக்கொள்கை உண்டு; அதே சமயம், இன்னொரு கொள்கையாக பலகடவுளர் வணக்கமும் இருக்கிறது. இல்லையா?

      இசுலாமில் அப்படி இல்லவே இல்லை.
      //இறைவன் ஒருவனே; அவன் நாமம் அல்லா. அவனைத்தவிர இறையேதும் இல்லை//. God is Only One. His name is Allah. There is no God but Allah//

      இதைத்தான் அவர்கள் நித்தம்நித்தம் ஓதுகிறார்கள். தொழுகைக்கு அழைப்பாகவும் விடுக்கிறார்கள். அதாவது அவர்கள் கொள்கை ஒன்றே.

      எனவே ஓரிறைக்கொள்கையென்றால் இசுலாமே. ஒருவர் ஓரிறைக்கொள்கையைப்பற்றி சிலாகித்து எழுதுகிறரென்றால், இன்று அவரைக் கண்டிப்பாக இசுலாமியர் எனலாம். வள்ளுவர் காலத்தில் அக்கொள்கையைக் கொண்டு வாழ்பவர் எனலாம். வள்ளுவர் அப்படி வருவார். இல்லையா?

  21. Avatar
    ஒரு அரிசோனன் says:

    இன்னும் ஒன்று, இந்து சமயத்தின் தத்துவத்தை ஆழ்ந்து நோக்கினால் அதுவும் பரம்போரும் ஒன்றே, அண்டமே அவனுள் அடக்கம் என்பாதும் விளங்கும். அதுமட்டுமன்றி, எங்கு பெய்யும் மழையும் கடலிச் சென்றடைவதுபோல, எப்பெயர் சொல்லித் துதித்தாலும், அத்துதி ஒரே பரம்பொருளை அடைகிறது என்றும் உரைக்கிறது.
    எனவே, ஓரிறைவன், ஒரே பரம்பொருள் என்பது இந்து சமயத்திற்குப் புதிதல்ல.

  22. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //வள்ளுவர் ஏன் மிகவும் கவனமாக எந்த இந்துக் கடவுள் பெயரையும் பயன்படுத்தவில்லை?//

    உயர்திரு ஜான்சன் அவர்களே,

    கம்பரும் அவரின் இராமகாதையின் துவக்கத்தில்,
    “உலகம் யாவையும், தாமுள வாக்கலும்,
    நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்களோ
    அலகிலாவிளை யாட்டுடையாரவர்
    தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”

    என்றே கடவுள் வாழ்த்தை எழுதி உள்ளார். இதில் எந்த இந்துக் கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? இன்னும் இப்படிப்பட்ட சான்றுகளை நான் காட்டலாம்.

    உங்களை ஒன்று கேட்கிறேன். ஒரு இந்து நன்னெறி கூறினால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இருக்கிறதா? அப்படிக் கிர்த்தவம் கூறுகிறதா? ஏன் பொதுநெறி, ஒரே கடவுள் கொள்கை உடையவன் என்று திருவள்ளுவரை அழைத்தபின்னரே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    ஏசு பிரான் கிறித்தவரா? இல்லையே! அவர் ஒரு யூதர்தானே! யூதராகத்தானே சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தார்! அவர் காட்டிய நன்னெறியைப் பின்பற்றுபவர்கள்தானே தங்களைக் கிறித்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்!

    சொல்லுபவரி நெறி நன்னெறியா என்பதே முக்கியம். அவர் சொல்வதைப் பின்பற்ற அவர் இன்ன சமயத்தராக இருக்கமுடியாது என்பது வீண் ஆராய்ச்சி!
    ஒரு இந்துவாகப்பட்டவர், எச்சமயத்தவர் கருத்தையும் — அது உகந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வார். சமயத்தை நோக்கமாட்டார். அவரைப் பொதுச்சமயத்தார் என்று முலாம் பூசவும் மாட்டார். அப்படி நோக்கினால் —

    — வேளாங்கண்ணிக்கோ, நாகூர் தர்க்காவுக்கோ இந்துக்கள் செல்ல மாட்டார்கள்.

    — சந்த கபீர், ஷீரடி சாயிபாபா போன்றவர்கள் இந்துக்களால் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

  23. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //திருச்சிற்றம்பலத்தில் பெரிய புராணத்திற்கு, சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்” முதலடி எடுத்துக்கொடுக்க, தில்லை அம்பல அந்தணர்களை ஓரங்கட்டி, பாலகிருஷ்ண சிவாச்சாரியார் என்ற கற்பனை சைவரை உருவாக்கி சேக்கிழார் பெருமானையே ஓய்! என்று விளித்து உரையாட விட்டவர். திருவள்ளுவர் மாட்டினால் விடுவாரா?//

    உயர்திரு ஷாலி அவர்களே,

    எனது படைப்புகளை ஒன்று விடாமல் ப்டித்துவருவதற்கு மிக்க நன்றி!

  24. Avatar
    BS says:

    //கம்பரும் அவரின் இராமகாதையின் துவக்கத்தில்,
    “உலகம் யாவையும், தாமுள வாக்கலும்,
    நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்களோ
    அலகிலாவிளை யாட்டுடையாரவர்
    தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”
    என்றே கடவுள் வாழ்த்தை எழுதி உள்ளார். இதில் எந்த இந்துக் கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? இன்னும் இப்படிப்பட்ட சான்றுகளை நான் காட்டலாம்.//

    இது சரியாகப் படவில்லை. கம்பரையும் வள்ளுவரையும் ஒப்பிட முடியாது. ஏன் விட்டுவிட்டீர்கள் நம்மாழ்வாரை? திருவாய்மொழியின் தொடக்கமே

    உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
    மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
    துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.

    இங்கு எக்கடவுளையும் அவர் குறிப்பிடவில்லை. அதே போல, திருமூலர் ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற போதும் எக்கடவுள் பெயரும் குறிப்பிடவில்லை.

    ஆனால், கம்பர், நம்மாழ்வார், திருமூலர், முறையே திருமால் வழிபாடு, சிவன் வழிபாடு செய்தவர்கள். இம்முதற்பாடல்களுக்குப் பின் அவர் சொன்ன பாடிய‌ போற்றிப்பரவிய நூற்றுக்கணக்கான பாடல்கள் அதே நூலில் தங்கள்தங்கள் கடவுளைப்பற்றியே.

    எனவே கம்பராமாயாணம், திருவாய்மொழி, திருமந்திரம் என்று வாசிக்கப் போகுபவர்க்கு எட்டுணையும் ஐயமில் எக்கடவுளைப்பற்றி இக்கடவுள் வாழ்த்தென்று. உங்களைத்தவிர எவருமே சொல்லமாட்டார் உயர்வற் உயர்நல முடையவன் என்பது திருமால் இல்லை; அலகிலா விளையாட்டுடையவர் திருமால் இல்லை; தேவன் ஒருவனே அத்தேவன் சிவன் இல்லை என்று.

    அப்படி நம்மாழ்வார் திருவாய்மொழி தொடக்கத்தில் திருமாலைச்சொல்லவில்லையென்றால் அவரேன் ஆழ்வார் ?; பிறகென்ன வைணவமேயில்லையே?பிறகென்ன கம்பராமாயாணம் வாழ்கிறது? பிறகென்ன திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் வைத்து சைவர்கள் ஓத வேண்டும்? இசுலாமியருக்கு இம்மூவரையும் தாரை வார்த்துவிட்டு நம் வேலையைப்பார்க்க போகலாம்.

    அதே சமயம், வள்ளுவர் எழுதியது ஒரு பக்தி நூலன்று; அது எத்தெய்வத்தின் மேலும் பாடப்படவில்லை.நீதி நூல் மட்டுமே. எனவே அவர் குறிப்பிட்டதே ஓரிறை பெயரிடப்படாத ஓரிறை; அனைவருக்கும் பொதுவான ஓரிறை; அதுவே 1330 பாக்களிலும் பரவப்படுகிறது அவரால் என்று திண்ணமாகப் பறையலாம்.

  25. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //திருமூலர் ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற போதும் எக்கடவுள் பெயரும் குறிப்பிடவில்லை.//

    பலமுறை சிவபெருமான் பெயர் குறிப்பிடப்படும் திருமந்திரத்தில் கடவுள் பெயர், குறிப்பிடப்படவில்லை என்னும் நீங்கள் திருமந்திரத்தையே படிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

    1. Avatar
      BS says:

      இதற்கு நான் எழுதிய பதில் போடப்படவில்லை. அது மீண்டும்:

      திருமந்திரம் கடவுட்பெயரைக்குறிப்பிடவில்லையென்றால், திருமூலர் சிவனைப்பற்றியே திருமந்திரம் எழுதவில்லை. என்றாகிறது.

      அப்படிப்பட்ட நூலை பன்னிரு திருமறைகளில் ஒன்றாக ஏன் வைத்தார் சைவர்/ ?

      தமிழ்நாட்டுச்சைவர்: தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற கொளகை கொண்டு, சிவனே முடிந்த பொருள்; பரம்பொருள். சிவனைத்தவிர வேறொரு பரம்பொருள் இல்லையென்று சிவனையே குறிப்பிட்டோர்

      கடவுட்பெயரையே குறிப்பிடாத திருமந்திரத்தை ஏன் பன்னிரு திருமுறைகள் ஓருயரிய இடத்தில் வைத்து ஓதுகிறார். திருமுறைகள் ஓதல் சிவ வழிபாடு என்றறிக. அவ்வழிபாட்ட்டில் திருமந்திரம் ஓதப்பட்டால், சிவனையே வழிபடுகிறார்கள் என்பதில் எவருக்கேனும் ஐயமுண்டா?

      உண்டு. திருவாளர் அரிசோனனனுக்கு.

  26. Avatar
    ஷாலி says:

    //பலமுறை சிவபெருமான் பெயர் குறிப்பிடப்படும் திருமந்திரத்தில் கடவுள் பெயர், குறிப்பிடப்படவில்லை என்னும் நீங்கள் திருமந்திரத்தையே படிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.//

    அய்யா அரிசோனரே! தாங்கள் சைவம் என்ற ஒரு சமயத்தை திருமூலர் பேசுவதாக கூறுகிறீர்கள்.ஆனால் திருமூலர் ஒரு சமயம் நன்று மற்றது தீது என்கிற வாதத்தை “மாய மனிதர் மயக்க மதுமொழி” என்கிறார். சமயங்களின் அடிப்படையில் பேசுபவர்கள் இறைவனை உள்ளவாறு உணர்ந்தவர் அல்லர். இறைவன் சமயங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அறுசமயங்களால் முடிவான பொருள் என்று கூறப்படும் தன்மை இல்லாதவன், இதைப்பற்றி நாம் ஆராயும்பொழுது கிடைக்கும் தெளிவு நமக்கு, நிலையான வீட்டின்பத்தை அளிக்கும்.

    “ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
    ஆறு சமயப் பொருளும் அவனலன்
    தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
    மாறுதல் இன்றி மனைபுக லாமே” (திருமந்திரம் – 1533)

    சமயங்களின் நோக்கம் முடிவான பரம்பொருளை அடையும் வழியைத் தொட்டுக் காட்டுவதுதான். அதற்கு மாறாக சமயவாதிகள் தத்தம், சமயங்களே சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் கூறுவார்களேயானால் அவர்கள் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயைப் போல் இருப்பர் என்று கூறுகிறது நீங்கள் படித்த திருமந்திரம்.

    “ஒன்றது பேரூர் வழியா றதற்குள
    என்றது போல இருமுச் சமயமும்
    நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
    குன்று குரைத்தெழு நாயையத் தார்களே”. (திருமந்திரம் – 1558)

    ஆகவே,திருமூலரை சைவராக்கி நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.

  27. Avatar
    ஷாலி says:

    // வேளாங்கண்ணிக்கோ, நாகூர் தர்க்காவுக்கோ இந்துக்கள் செல்ல மாட்டார்கள்.
    — சந்த கபீர், ஷீரடி சாயிபாபா போன்றவர்கள் இந்துக்களால் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.//

    அய்யா அரிசோனரே! இந்துக்களாகிய உங்களுக்கு ஒரு தீர்க்கமான கடவுள் கொள்கை இல்லாததால் கண்ட இடத்திலும் கையை தூக்கி கும்பிட்டுச் செல்கிறீர்கள்.தாங்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த கல்வி என்னும் பகுத்தறிவை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.சரியான உண்மையானா ஒரே கடவுளை அடையாளம் காண உங்கள் பகுத்தறிவு தவறியதால், வேளாங்கன்னி,நாகூர் என்று ஓடுகிறீர்கள்.எம்மதமும் சம்மதம்,எல்லா நதிகளும் முடிவில் கடலுக்கே செல்கின்றன என்ற முரண்பாடான கொள்கைகளை சரி காண்கிறீர்கள்.

    ஓர் இறைவனை வணங்குவதும் இந்துமதம், பல தெய்வங்களை வணங்குவதும் இந்து மதம்,உருவத்தை வணங்குவதும்,அருவத்தை வணங்குவதும் இந்து மதம்.தெய்வமே இல்லை எனும் நாஸ்திகனும் இந்துதான்.அழியக்கூடிய பலவீனமான மனிதர்களுக்கு தேவைப்படும் மனைவி,குடும்ப சுகம்,மக்கள் செல்வம் அனைத்தையும் எல்லாம் வல்ல கடவுள்களிடமும் காண முடிகிறது.படைத்தவனுக்கும் படைப்பினங்களும் எந்த வேறுபாடும் இல்லை.செத்து மடியும் ஜென்மங்களும் ,என்றும் நித்திய ஜீவிதமாக இருக்கக்கூடிய சிருஷ்டி கர்த்தாவும் ஒன்றாக இருக்க முடியுமா?உங்களுக்கு எல்லாமே ஒன்று.ஆம்! பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் இது சாத்தியமே!

  28. Avatar
    Dr.G.Johnson says:

    நண்பர் BS அவர்களே, நாங்கள் யாரும் வள்ளுவரை கிறிஸ்த்துவர் என்று கொண்டாடவில்லை. என்னைப்போன்றவர்கள் பள்ளி பருவத்திலிருந்தே திருக்குறளைப் படித்து வருகிறோம். அதை எழுதியவர் ஒரு இந்துவோ அல்லது புத்த மதத்தினரோ என்று எண்ணிப்பார்த்ததில்லை. இப்போது நீங்கள் சொல்லித்தான் வள்ளுவர் ஒரு இந்து என்பதும், ஒரு இந்துவை ஏன் பொதுவானவர் என்று சொல்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை உணர முடிகிறது. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஒரு இந்து எழுதிய திருக்குறளை கிறிஸ்துவரும் இஸ்லாமியரும் ஏன் படிக்கிறீர்கள் அவர் எழுதியுள்ள குறள்கள் பற்றி கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்பது போன்று உள்ளது.
    திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் எந்த ஒரு இந்துக் கடவுளையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்று நான் சொன்னதற்கு நீங்கள் திருமந்திரத்தையும் இராமயணத்தையும் மகாபாரத்தையும் உதாரணம் கூறுகிறீர்கள்.திருக்குறள் அவை போன்று ஒரு இதிகாச காவியமா? அவற்றிலும் கடவுள் வாழ்த்து பொதுவாக இருந்தாலும் அவற்றினுள் உள்ளதெல்லாம் இந்து மத இதிகாசகங்கள்தானே? திருக்குறள் ஒரு நீதி நூல் என்பதக்காகவே அவர் கூறும் நீதி நெறிமுறைகளை விரும்பி நாங்கள் படிக்கிறோம். நாங்கள் என்று கூறும்போது என்னைப்போன்ற தமிழ் மீது பற்று கொண்ட கிறிஸ்த்துவர்களைக் குறிப்பிடுகிறேன். திருக்குறளை வேதாகமத்தைப் படிப்பதைப்போன்று படிக்கும் உலக தமிழ் கிறிஸ்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களையும் படிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களா? இதுபோன்றே எத்தனை இஸ்லாமிய அன்பர்கள் புனித குரானைப் படிப்பதுபோல் திருக்குறளை படிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே! என் இவ்வளவு தூரம்? திருவள்ளுவர் ஒரு பழுத்த இந்து முனிவர் என்று உரிமைகொண்டாடும் தமிழ் நாட்டு வெளி நாட்டு தமிழ் இந்துக்களில் எத்தனை பேர்களின் இல்லங்களில் திருக்குறள் நூல் உள்ளது? எத்தனை இந்து பிள்ளைகளுக்கு வள்ளுவர் கூறும் குறள்கள் போதிக்கப்படுகிறது? திருக்குறள் பற்றி பேசும் பலரது இல்லங்களில் திருக்குறள் இருக்காது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிக்கை விற்கும் கடையில் ” இங்கு திருக்குறள் கிடைக்குமா? ” என்று கேட்டேன். அங்கு அமர்ந்திருந்த நவநாகரிக தமிழ்ப் பெண், ” அப்படீனா என்னாங்க? ” என்று கேட்டார்! இது கற்பனையல்ல! உண்மை அனுபவம்! மறக்க முடியாத அனுபவம்!

    ஆகவே வள்ளுவர் ஈடு இணையற்ற ஓர் தமிழ்ப் புலவர் என்பதை தமிழர்களாகிய நாம் ஏற்று, திருக்குறள் கூறும் நன்நெறிகள் எல்லாருக்கும் ( எல்லாருக்கும் என்பது மதம், ஜாதி , அரசியல் கட்சி வேற்றுமைகள் உட்பட ) பொதுவானது என்பதை உணர்ந்து ஒன்றுபடுவோம் வாருங்கள்! .அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      BS says:

      நான் திருக்குறளை மதசார்பற்ற நூலென்றும் அதை இந்து மத நூலாக்கி பிறமத்தவரை அண்டவிடாமல் செய்வது இந்துத்வாவினரின் முயற்சியென்றும் (அஜண்டா) எழுதிவருகிறேன் இத்தலைப்பில். நீங்கள் என்னைச்சரியாகப்படிக்கவில்லை போலும். நீங்கள் தற்போது எழுதியவை திருவாளர் அரிசோனனுக்கே பொருந்தும். அவர்தான் அந்த அஜன்டாவைக் கையில்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறாரிங்கே.

  29. Avatar
    ஒரு அரிசோனன் says:

    // நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.//

    இணையப் பண்பாடற்று தனிமனிதத் தாக்குதலில் இறங்கும் உங்களுடன் மடலாட எனக்கு விருப்பம் இல்லை.

    “வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்தனையது உயர்வு.”

    –குறள்

  30. Avatar
    ஒரு அரிசோனன் says:

    திருமந்திரம் சைவ நூல் இல்லை என்று இயம்புவோருக்கு திருமந்திரத்தில் இருந்து சான்றுகள்:

    முதலில் சிவனைப்பற்றியே அது பேசுகிறது என்பதற்கு ஒரு சில சான்றுகள்:

    “சிவனொடக் குந்தெய்வம் தேடினும் இல்லை; — 5

    “சினம் செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்… — 41

    “அந்திவண்ணா அரனே சிவனே என்று… — 46

    “அண்ணல் அருளலால் அருளும் சிவாகமம்… — 58

    “சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
    உவமா மகேசர் உருத்திர தேவர்
    தவமால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
    நவஆகாமம் எங்கள் நந்தி பெற்றானே. — 62

    “செப்பு சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்… — 74

    சைவ விளக்கம் ளிழிப்பதைப்பற்றிய சில சான்றுகள்:

    “ஊரு முலகமும் ஒக்கப் படைக்கின்ற
    பேரறி வாளன் பெருமை குறித்திடின்
    மேருவு மூவுல காளியி லங்கெழுத்
    தாரணி நால்வகைச் சைவமு மாமே. — 1419

    ஆக, நான்கு விதமான சைவங்கள் உள என்கிறார் திருமூலர்.

    “…சுத்த மசுத்தமுந் தோய்வுறா மேநின்று
    நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. — 1420

    “…கண்டங்க ளோன்பதும் கண்டவர் கண்டமாம்
    கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. — 1425

    “…வேகம் இல் வேதாந்த தித்தாந்த மெய்ம்மை ஒன்று
    ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே. — 1429

    இன்னும் நூற்றுக்கணக்கான சான்றுகள் கொடுக்கலாம்.

    ஏதோ ஒன்று வேதத்தை ஓதுவது போல குறிப்புக் கொடுத்து திருமூலர் சிவனைப் பாடவில்லை, அது சைவ நூல் இல்லை என்பது எளிது. திருமந்திரம் படிக்காதவரின் கண்முன் திரையிடும் செய்கை அது.

    பத்தாம் சைவத் திருமுறையான திருமந்திரத்திலிருந்து ஓரிரு குறிப்புக்கொடுத்து, திருமந்திரம் சிவனைப் பற்றிப் பாடவில்லை, அது சைவநூல் இல்லை என்பது குருடர் முன்பு கண்கட்டு வித்தை செய்ய முற்படுவதற்கு ஒப்பாகுமே தவிர உண்மையாகாது.

  31. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //அய்யா அரிசோனரே! இந்துக்களாகிய உங்களுக்கு ஒரு தீர்க்கமான கடவுள் கொள்கை இல்லாததால் கண்ட இடத்திலும் கையை தூக்கி கும்பிட்டுச் செல்கிறீர்கள்.தாங்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த கல்வி என்னும் பகுத்தறிவை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.சரியான உண்மையானா ஒரே கடவுளை அடையாளம் காண உங்கள் பகுத்தறிவு தவறியதால், வேளாங்கன்னி,நாகூர் என்று ஓடுகிறீர்கள்.எம்மதமும் சம்மதம்,எல்லா நதிகளும் முடிவில் கடலுக்கே செல்கின்றன என்ற முரண்பாடான கொள்கைகளை சரி காண்கிறீர்கள்.//

    நான் இஸ்லாமையோ, கிரித்தவத்தையோ, இன்னும் எந்த சமயத்தையோ பழிக்காமல் எனது கருத்துக்களைக் கூறுகிறேன். இந்துக்களின் நம்பிக்கையைப் பழிக்காமல் ஒருவரால் தனது சமயக் கருத்துக்களைக் கூற இயலவில்லை என்றால் அவருக்குத் தனது சமயத்தின்மீது ஆழ்ந்த பற்றோ, நம்பிக்கையோ இல்லை என்றுதான் முடிவுகட்டவேண்டியிருக்கிறது.

    அடுத்தவர் வீட்டுக் குழந்தை நன்றாகப் படிக்கிறது, அழகாக இருக்கிறது என்றால், தனது குழந்தை குழந்தைமேல் அன்பு இல்லை என்ற பொருள் இல்லை. அனைத்துக் குழந்தைகளையும் அன்புடன் நோக்கும் சிறந்த பண்பு இருக்கிறது என்றே பொருள்.

    இதைக் கொள்கைப் பிடிப்பு இல்லை என்று எள்ளி நகையாடினால், சாதி மத நல்லிணக்கம் தோன்றுவது எங்ஙனம்? உலகில் அமைதி நிலவுவது எங்ஙனம்?

  32. Avatar
    ஷாலி says:

    அறியார் சமணம் அயர்த்தார் பௌத்தர்
    சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய்
    மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
    ஈனவரே ஆதலால் இன்று.

    அய்யா அரிசோனரே! வைணவர்கள் எவ்வாறு சமணர்களையும், பௌத்தர்களையும் வெறுத்தனரொ அவ்வாறே சைவர்களையும் வெறுத்தனர் என்பது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் என்பவரின் வரிகள் நமக்கு உணத்துகின்றன:

    நீங்கள் சிவ சமயத்தை கவ்விக்கொண்டு குன்றேறி குரையுங்கள்.வைணவர் திருமிழிசை ஆழ்வார் வைணவ மாலவனை தூக்கி வைத்து உங்களை ஈனவர் என்று உங்களை குத்தி குதரட்டும்.உங்களுடைய சமய பெருமை விளையாட்டெல்லாம் திருமூலரிடம் கிடையாது.சமயச்சண்டையை விட்டு விலகி ஒரு கடவுள் உண்மையை உரைக்கிறார்.உங்கள் பார்வை சிவன் வேறு.திருமூலர் பார்க்கும் ஒரு கடவுள் சிவன் வேறு.நீங்கள் முப்பது முக்கோடி கடவுளோடு சிவனையும் சேர்த்து வணங்குகிறீர்.திருமூலர் ஒரே ஒரு கடவுளைத்தான் வணங்கவேண்டும் என்கிறார்.அக்கடவுளுக்கு பெயர்,சிவனோ,தேவனோ,கர்த்தரோ,அல்லாஹ்வோ எதுவாயிருந்தாலும் பிரச்சினை இல்லை.இதையே,

    ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள்
    என்றதுபோல இருமுச் சமயமும்
    நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
    குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே

    உரை:

    ஓர் பேரூரைச் சென்றடைய வழிகள் ஆறு அதாவது பொதுவாக பல வழிகள் உள்ளன. அதேப் போலத்தான் இறைவன் ஒருவன் தான், அவனை அடைய இந்த ஆறு சமயங்கள் அதாவது பலவகையான சமயங்கள் இருக்கின்றன. இவற்றின் முடிவு எல்லாம் ஒன்றென அறியாது சமயவாதிகள் இந்த சமயமே நல்லது அது தீங்கான என்று கூறி வெறியாடுகின்றனர். அவர்கள் குன்றினைப் பார்த்துக் குரைக்கும் நாய்களாகக் குரைத்து கலகம் விளைவிக்கின்றவர்கள் ஆகும்.

  33. Avatar
    ஷாலி says:

    // நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.//
    இணையப் பண்பாடற்று தனிமனிதத் தாக்குதலில் இறங்கும் உங்களுடன் மடலாட எனக்கு விருப்பம் இல்லை.//

    அய்யா! நாய் உதாரணத்தை நான் சொல்லவில்லை உங்கள் திருமந்திர திருமூலர் சொல்வது. நாயோட்டும் மந்திரம் உங்களுக்கு தெரியுமா?

    சீ…என நாயை விரட்டுவதை நாய் விரட்டு மந்திரம் என்கிறார் திரு மூலர்.

    2672. நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
    நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
    நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
    நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.
    (ப. இ.) நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். ‘சீ’ என்பதாகும்.
    இதனையே நாயோட்டு மந்திரம் என கூறுகின்றனர்.. நாயோட்டு மந்திரமாகிய சிகரத்தின்கண் நான்மறைவேதங்கள் அடங்கும். அச் சிகரமே நாதன் இருப்பிடமாகும். அச் சிகரமே அருஞ்சைவர் மெய் ஆறாறுக்கு அப்பாலுள்ள இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளியாகும். இவ்வுண்மையை அல்லாமல் வெளிப்படையாகக் கூறும் ‘சீ’ என்பதே நாயோட்டு மந்திரம் எனக்கொண்டு பொருள் காணலுறின் அப்பொருளை நாமறியோம் என்க.

    நாய் என்பது உங்கள் கண்களுக்கு இழிவாகத் தெரிகிறதா?அதுவும் நம்மைப்போல ஒரு உயிர் ஜீவன்தானே.இன்னும் சொல்லப்போனால் நம்மையெல்லாம் விட விசுவாசமான ஜீவன்.அதனால்தான் தன்னோடு மேருமலை வந்த நாயுக்கும் சொர்க்கம் வேண்டும் நாய்க்கு இல்லாத சொர்க்கம் எனக்கும் வேண்டாம் என்று தர்மன் சொல்வது தாங்கள் எழுதியது தானே!

    தாங்கள் வணங்கும் சிவபிரானின் திரு அவதாரங்களுள் ஸ்ரீ பைரவர் அவதாரம் ஒன்று என்பது தங்களுக்கு தெரியும்தானே?

    கதி மோட்சம் வழங்கும் காலபைரவரோடு உங்களை இணைத்துச் உதாரணம் காட்டினால் இது பண்பாடற்ற தாக்குதலா? தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.

    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பயநாசகனே போற்றி
    ஓம் அஷ்டரூபனே போற்றி…
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி….

  34. Avatar
    ஒரு அரிசோனன் says:

    திருமூலர் இந்துத் தெய்வங்கள் குறித்து எழுதவில்லை என்று ஒரு சாரார் பதிந்துள்ளனர். அதற்கு மறுமொழி, இதோ:

    அறி பிரமன் தக்கன் அருக்கனுடனே
    வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
    சிரம் முகம் நாசி சிறந்தகை தோள்தான்
    அரண் அருளின்றி அழிந்த நல்லோரே — திருமந்திரம் 358

    அரனாகிய சிவனின் அருள் இல்லாதுபோன காரணத்தால் திருமால், பிரம்மா, தட்சன், சூரியன், சந்திரன், சரஸ்வதி, இந்திரன் முதலானோர் தலை, முகம், மூக்கு, கை, தோள் போன்றவற்றைஇழந்து பின்னால் நல்லவர்களாய் மாறியவர்களே!

    இதைவிட வேறு விவரமாகச் சொல்லவேண்டுமா?

  35. Avatar
    ஷாலி says:

    //திருமூலர் இந்துத் தெய்வங்கள் குறித்து எழுதவில்லை என்று ஒரு சாரார் பதிந்துள்ளனர். அதற்கு மறுமொழி, இதோ:/

    /

    அடடா என்னே அறிவு! திருமூலர் இந்து தெய்வங்களைக் குறித்து எழுதியுள்ளாராம்…தமிழில் உள்ள தெய்வப்பெயர்களை எழுதாமல் மார்க்,லூக்கா,மத்தேயு,யோவான் என்று அப்போஸ்தலர் நடபடிகள், ஹதீஸ் என்று ஆபிரகாமிய செயின்ட்களையா எழுதுவார்.? என்னே வெளக்கம்!!

    0005: சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

    0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

    0007: பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவனும், பழமையாகவே சமமாக வைத்து எண்ணப்படும் பிரமனாதி மூவருக்கும் பழமையானவனும், தனக்கு ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைமகனும் ஆகிய இறைவனை யாரேனும் “அப்பனே” என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான். 1 – 538 திருமந்திர விளக்கம்.

    மேலே உள்ள திருமந்திர விளக்கத்தில் சிவபெருமானைத் ஒப்பாக உலகில் ஒருகடவுளும் இல்லை என்று திருமூலர் நெத்தியடி அடிக்கிறார்.இந்துமத மற்ற கடவுள்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை என்கிறார்.இதுதான் திரு மூலர் காட்டும் ஓர் இறை சைவ சமயம்.

    நண்பர் திரு.அரிசோனர் திருமூலர் வழி சென்று, சிவனைத்தவிர மற்ற தெய்வங்களான பிரம்மன்,விஷ்ணு,உருத்திரனால் ஒரு பயனும் இல்லை என்று சொல்லத் தயாரா? முடியாது! முப்பது முக்கோடியை வணங்கி விட்டு ஒன்னுக்கு வர முடியாது.சாமிகள் கண்ணை குத்திவிடும்.மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.திருமூலர் கூறும் சைவம் ஓர் இறை கொள்கை.

    நண்பர் அரிசோனார் கூறும் சைவ சமயம் பல கடவுளை வணங்கும் மாமூல் இந்து சைவக் கொள்கை.திருமூலர் ஓர் கடவுள் கொள்கையைச் சொல்லி தன் பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டார்.திரு.அரிசோனர் அனைத்து கடவுளையும் அரவணைத்து அனுசரித்து பிறவிப் பெருங்கடலை கடப்பது அவர் விருப்பம்.ஆனால் திருமூலரை தன் விருப்பப்படி பல கடவுளை வணங்கும் சைவராக்குவது சரியல்ல.

  36. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    அன்புள்ள ஷாலி
    உங்கள் மடமை அதிசயிக்கத்தக்கதல்ல.
    இஸ்லாம் கூறும் ஓர் கடவுள் கொள்கை வேறு, இந்து மதத்தின் முழுமுதல் ஆண்டவன் என்பது வேறு. இரண்டையும் குழப்பிகொள்ள காரணம் உங்களது இஸ்லாமிய படிப்பாக இருக்கலாம்.
    கையில் சுத்தியல் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணியாக தெரியும் என்பார்கள்.
    இந்து மதத்தில் முழுமுதல் ஆண்டவன் என்பது மற்ற தெய்வங்களின் இருப்பை மறுத்தது அல்ல. அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கத்தகுந்தவர்கள். ஆனால், நான் முழுமுதல் ஆண்டவனாக வரிப்பது இந்த வடிவத்தில், அதாவது சிவன் என்ற வடிவத்தில் அல்லது விஷ்ணு என்ற வடிவத்தில் அல்லது முருகன் என்ற வடிவத்தில்.. இதுவே ஷண்மதம் என்று அழைக்கப்படுகிறது.
    சக்தியை முழுமுதல் இறையாக வடித்து வணங்குபவர்கள் சாக்தர்கள். அவ்வளவுதான்.

    வேண்டுமானால் லாயிலாஹா இல்லல்லாஹ் என்பதும் இதே மாதிரிதான். அதாவது அல்லாவை தவிர வேறொரு தெய்வமில்லை என்பதும் இதே மாதிரியான வழிபாடுதான் என்று சொல்லிகொள்ளுங்கள். எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், உங்களுக்கு கொஞ்சமும் புரியாத இந்துமதத்துக்கு விளக்கம் அளிக்க வரவேண்டாம்.

  37. Avatar
    ஷாலி says:

    //அன்புள்ள ஷாலி
    உங்கள் மடமை அதிசயிக்கத்தக்கதல்ல.
    இஸ்லாம் கூறும் ஓர் கடவுள் கொள்கை வேறு, இந்து மதத்தின் முழுமுதல் ஆண்டவன் என்பது வேறு. இரண்டையும் குழப்பிகொள்ள காரணம் உங்களது இஸ்லாமிய படிப்பாக இருக்கலாம்.//

    அய்யா அறிவுஜீவி திருச்சிற்றம்பலம்பனாரே! என் மடமை அதிசயம் இல்லைதான் ஆனாலும் உங்கள் அறிவு வியக்க வைக்கிறதே! இங்கு யாரும் இந்து மத ஓர் இறை கொள்கைக்கும் இஸ்லாமிய ஓர் இறை கொள்கைக்கும் உள்ள “ஆறு வித்தியாசங்களைப் பற்றி” அலச வில்லை.திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தின் கண்ணோட்டம் ஒரு கடவுள் கொள்கையை சொல்கிறதா அல்லது பல கடவுள் கொள்கையைச் சொல்கிறதா என்பதே விவாதம்.

    ஒரு கடவுள் கொள்கையை சொல்கிறது என்று எனது கருத்துக்கு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரை உதாரணம் காட்டினேன்.திருமூலர் இந்து சைவர் என்றார் அன்பர் அரிசோனர்.ஆனால் பல கடவுள்களை வணங்கும் அரிசோனர் போன்றவர் அல்ல திருமூலர்.சிவ பெருமான் என்ற ஒரு கடவுளை மட்டுமே வணங்குபவர் என்று நான் கூறினேன்.

    (0006: சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.-திருமந்திர விளக்கம் )

    திரு மூலருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து கத்னா பண்ணி இங்கு யாரும் அவரை முஸ்லிமாக்க வில்லை.இடையில் வந்து குறுக்கு சால் ஓட்டாமல் முழுமையாகாப் படித்து பின்னூட்டமிடுங்கள்.இந்து மதத்தின் அறு சமயமான சைவம்,வைணவம்,சாக்தேயம்,காண பத்தியம்,செளரம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.பாவம்! நீங்கள் சிரமப்பட்டு வெளக்க வேண்டாம்.முறையான வாதம் இருந்தால் வையுங்கள்.திசை திருப்பும் வேலை வேண்டாம்.திரு மந்திரம் நன்றாக படியுங்கள்.புண்ணியமாகப் போகும்!

  38. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    சந்தில் சிந்துபாடும் வழக்கம் உங்களுக்கு நிறையவே உண்டு. நீங்கள் எழுதுவதையும் தங்கமணி, சவரப்பிரியன் போன்றோர் பதிலளித்ததும் காணாமல் போவதும், அவர்கள் இல்லையென்றால், திருவள்ளுவர் திருமூலர் ஆகியோருக்கும் இஸ்லாமிய பட்டம் வழங்க நீங்களும் பிஎஸும் ரெடியாக இருப்பதும் பார்த்துகொண்டிருக்கிறேன். அவர்கள் பதில் எழுதாததால் நான் எனக்கு தெரிந்ததை எழுதினேன்.

    உங்களுக்கும் சுவனப்பிரியனுக்கும் வித்தியாசமில்லை. வேதம், வேதாந்தம் முதற்கொண்டு இன்றுவரை இந்து மதத்தில் கடவுளை ஒன்றாக பார்த்துகொண்டே பலவாகவும் பார்க்கும் பார்வை உண்டு.
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்று வரையறுக்கமுடியாதது இறை. அது ஒன்றாக இருக்கவும் சக்தியுள்ளது பலவாக இருக்கவும் சக்தியுளது. அரபிய அல்லாவால் இரண்டாகவோ மூன்றாகவோ பலவாகவோ இருக்க சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்து தத்துவம் சொல்லும் இறை எதுவாகவும் இருக்க சக்தியுளது. உருவம் கொண்டதாகவும் உள்ளது அதுவே. உருவம் அற்றதாகவும் இருப்பதும் அதுவே.

    இந்து தத்துவங்களில் எங்காவது இறையை உருவமற்றதாக சொல்லியிருந்தால், ஆஹா இதோ பார். ஒரிஜினல் இந்துமதம் . இன்று கெட்டுப்போய் விட்டது என்று உங்கள் அறியாமையையும் பிரச்சாரத்தையும் காட்டிகொண்டிருக்கிறீர்கள். முன்னாள் இந்துக்களான உங்களது முன்னோர்கள் வாள்முனையில் மதம்மாற்றபப்ட்டிருக்கலாம். அதற்காக வருந்துகிறேன். உங்களது தியாகங்களினால்தான் நாங்கள் இன்றும் இந்துக்களாக இருக்கிறோம். ஆனால், உங்கள் மீது திணிக்கப்பட்ட கொள்கைக்கு நீங்கள் இப்படி தாலிகட்டிகொள்ளவேண்டும் என்று எந்த வித கட்டாயமும் இல்லை. இன்று சுதந்திர மனிதர். அரபிய சாமியாடிகளுக்கு நீங்கள் இன்று அஞ்சவேண்டியதில்லை.

  39. Avatar
    ஷாலி says:

    சந்தில் சிந்து பாடும் வழக்கம் இல்லாத திருசிற்றம்பலத்தாருக்கு…..இந்து மதத்தில் கடவுளை ஒன்றாக பார்த்துகொண்டே பலவாகவும் பார்க்கும் பார்வை உண்டு.என்று கூறி, உருவாய் அருவாய் உளதாய் இலதாய்..என்று அருணகிரியார் முருகனைப் பாடும் பாடலை எழுதி உள்ளீர்கள்.கௌமார சமயத்தில் தலைமை கடவுள் முருகன் மட்டுமே. காண பத்தியத்தில் கணபதி,செளரத்தில் சூரியன்,சாக்தத்தில் சக்தி,சைவத்தில் சிவன்,வைணவத்தில் விஷ்ணு.இப்படி ஆறு ஷண் மதமும் தனித் தனியாக தங்கள் தலைமை கடவுளை மட்டுமே வாழ்த்தி வணங்குகின்றன.எல்லா தெய்வங்களையும் ஏற்றி போற்றுவதில்லை.

    இந்து ஆறு சமயமும் தொகுக்கப்பட்டது வேத காலத்தில் அல்ல.கி.பி.8 ஆம் நூற்றாண்டு ஆதி சங்கரால்.இவர் ஸ்மார்த்த பிரிவை சார்ந்தவர்.இவரின் கடவுள் கொள்கையை மத்துவரும் இராமானுஜரும் ஏற்றுக்கொள்வதில்லை.அவர்கள் வழி தனி.. கூட்டுக் குடும்ப கடவுள்களை வணங்கும் சமயம் இங்கு ஏதுமில்லை. உங்களைப் போல் உள்ள பாமர இந்துக்கள் மட்டுமே
    கண்டதையும் கை குப்பி வருகிறார்கள்.இதில் ஆபிரஹாமிய அல்லா சாமிக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.

    மற்றபடி அரபிய அல்லா- வாள்முனையில் மதம்- தாலிகட்டிகொள்ளுதல்- அரபிய சாமியாடி போன்ற அர்ச்சனைகள் இங்கு பேசும் பொருளுக்கு சம்பந்தமற்றவை.ஆனாலும் திண்ணைத் தளத்தில் இது பற்றி பேச உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் எதிர் காலத்தில் கிடைக்கும்..அப்போது அந்த நல்வாய்ப்பை நண்பர்கள் தங்கமணி, சவரத்துடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அப்ப வரட்டா…..

  40. Avatar
    சவரப்பிரியன் says:

    என்னது!
    //இதில் ஆபிரஹாமிய அல்லா சாமிக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.//
    அல்லா சாமி உண்மையிலேயே முகம்மது மேல சாமியாடிச்சா இல்லையாங்கறது அப்புறம் இருக்கட்டும்.
    முகம்மது சொல்றபடி பாத்தா,
    /5.33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். //

    Quran (5:33) – “The punishment of those who wage war against Allah and His messenger and strive to make mischief in the land is only this, that they should be murdered or crucified or their hands and their feet should be cut off on opposite sides or they should be imprisoned; this shall be as a disgrace for them in this world, and in the hereafter they shall have a grievous chastisement”//
    (அதுசரி அல்லாவோட யாராவது போர் செய்யமுடியுமா? :-) செம லுலுலாயி!)
    ”கண்டதையும் கும்பிட்டு வருவது” முகம்மது கற்பனையில் கண்டுபிடித்த அல்லாசாமிக்கு பிரச்னை இல்லையா?
    தன்னோட அல்லாவை கும்பிடலைன்னா மாறு கை மாறுகால் வாங்கு, சிலுவையில் அறைந்து கொல்லுன்னு ஏற்கெனவே மிரட்டி மதம் மாற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு முகம்மது சொல்றாரே?
    நீங்க பிரச்னை இல்லைங்கறீங்களே.
    வர்ர்ட்டாஆ

  41. Avatar
    சவரப்பிரியன் says:

    அம்பலவாணன் அழகாக தன் சிந்தனையை முன் வைத்திருக்கும் இடத்திலும் இந்த சண்டை வருந்தத்தக்கது. அதனால் இதில் எழுதாமல் இருந்தேன். என் பெயர் இழுக்கப்பட்டதால் எழுதினேன். இனி இந்த திரியில் எழுதுவதில்லை.

  42. Avatar
    ஷாலி says:

    //தன்னோட அல்லாவை கும்பிடலைன்னா மாறு கை மாறுகால் வாங்கு, சிலுவையில் அறைந்து கொல்லுன்னு ஏற்கெனவே மிரட்டி மதம் மாற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு…..//

    சவரத்திடம் இதற்குமேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.வெட்டுங்கள்,கொல்லுங்கள் என்ற குர்ஆன் வசனத்தை எழுதியே பயங்கரவாத இரத்த சாயத்தை முஸ்லிம்களின் மீது பூசி விடுவார்.ஆனால் உண்மையில் முஸ்லிமான சுவனப்பிரியனை விட இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்கள் முஸ்லிம் அல்லாத திரு.தங்கமணி மற்றும் சவரப்பிரியன் போன்றவர்கள்தான்.

    இவர்கள் குர்ஆன் வசனங்களை அதன் எண்களுடன் எழுதுவதன் மூலம் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் குரானை திறந்து படித்துப்பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்துகிறார்கள்.தாங்கள் இருக்கும் இஸ்லாம் மார்க்கம், சத்திய மார்க்கம் என்று நம்பும் முஸ்லிம்கள்,இந்த சத்தியத்தை மாற்று மத சகோதரர்களிடம் எடுத்துச் சொல்வதே கிடையாது.

    பெரும்பான்மையான முஸ்லிம்கள் மூட முல்லாக்கள் காட்டும் மெளடீகமான மூட நம்பிக்கை வழியிலேயே செல்கின்றனர்.இந்த முல்லாக்களுக்கு வானத்திற்கு மேலேயும்.பூமிக்கு கீழே நடப்பதையும் மட்டுமே பேசுபவர்கள்.யதார்த்த உலக நடப்பு இவர்களுக்கு தெரியாது.காரணம் உலகியல் கல்வி பூஜ்யம்.

    இன்று புதிதாய் உருவான வஹாபிய தவ்ஹீது இயக்க கம்பெனிகள், சுவனப்பிரியன் போன்ற இளைஞர்களை ஈர்த்து இழுக்கிறது.இந்த இயக்கத்தின் தலைவர் மூன்றாம் கிளாஸ் மட்டுமே படித்த, படிக்காத மேதை.இவரின் மூன்றாம் கிளாஸ் அறிவுக்கு முரண்படும் இஸ்லாமிய ஹதீஸ் செய்திகளை அப்படியே குப்பையில் எறிந்து விடுவார்.ஓரளவு விஷய ஞானமுள்ள சுவனப்பிரியன் போன்றவர்களே இவரை குருட்டுத்தனமாக பின்பற்றும்போது மற்ற முஸ்லிம்களை குறை சொல்ல ஒன்றுமில்லை.இதுதான் இன்றைய தமிழ் முஸ்லிம்களின் நிலவரம்.

    இஸ்லாம் பிறரால் விமர்சிக்கப்படும் போதுதான் அது வளர்கிறது.இந்த வளர்ச்சிக்கு காரணமாகும் தங்கமணி,சவரப்பிரியன் வாழ்க!இங்கு சவரம் எடுத்தெழுதிய வசனத்தில் 5;33.பூமியில் வரம்பு கடந்து குழப்பம் செய்து போருக்கு வருபவர்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் பற்றிப் பேசுகிறது.உதாரணமாக,

    கடந்த ஒருவாரமாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தேவையில்லாத குழப்பம் செய்து கொண்டு அப்பாவி பொது மக்களின் மீது தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களை ஒடுக்க இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதை எவரும் தவறு என்று சொல்ல முடியுமா?

    இந்த பதிலடி நடவடிக்கையை இந்த வசனம் பேசுகிறது.குர்ஆனை திறந்து நடு நிலையுடன் படிப்பவர்கள் இதன் உண்மையை அறிவார்கள். குர் ஆனை திறந்து படிக்க ஆர்வமூட்டும் சவரப்பிரியனுக்கு இறைவன் நேர்வழிகாட்டி மேன்மைப்படுத்துவானாக!

  43. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    சவரப்பிரியன் எழுதியது எனக்கு நன்றாகவே புரிகிறது. ஷாலி செய்யும் ஏமாற்றுவேலையும் புரிகிறது.
    அல்லாவின் மார்க்கம் அதாவது முகம்மது சொல்லும் வழியை ஏற்காதவர்களை எல்லாம் தீர்த்துகட்ட சொல்லுவதுதான் திரும்ப திரும்ப முகம்மது குரான் என்ற பெயரில் சொல்லுகிறார். அதனை இந்தியா பாகிஸ்தான் சண்டை என்று சமாளிப்ஸ் செய்கிறார் ஷாலி.
    அப்போ இஸ்லாம் ஒரு அரசியல் கட்சி என்கிறார். அல்லது மாபியா என்கிறார். மாபியாவுக்கு கட்டுப்படவில்லை என்றால் தீர்த்துகட்டு. ஹஃப்தா கொடு. அதாவது ஜிஸியா. இது ஒரு மதமா அல்லது மாபியாவா? இதில் என்ன புண்ணாக்கு ஆன்மீகம் இருக்கிறது? இஸ்லாமை மதம் என்று சொல்வதே மற்ற மதங்களுக்கு இழுக்கு.

  44. Avatar
    ஷாலி says:

    //இது ஒரு மதமா அல்லது மாபியாவா? இதில் என்ன புண்ணாக்கு ஆன்மீகம் இருக்கிறது? இஸ்லாமை மதம் என்று சொல்வதே மற்ற மதங்களுக்கு இழுக்கு…..//

    அன்புச் சகோதரர் திருச்சிற்றம்பலத்தாருக்கு ஏன் இந்த கோபம்?மதக காழ்ப்பும் வன்மமும் நெஞ்சு நெடுகிலும் வழிந்து ஓடுகிறதே….இஸ்லாம் தன்னை மதமாக சொல்லவில்லை.ஒரு வாழ்கை நெறி ( Way of Life )என்றுதான் அறிமுகப்படுத்துகிறது. உலகில் 230 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இந்த புண்ணாக்கு ஆன்மீகத்தை கடைப்பிடித்து வாழ்கிறார்கள்.

    உலக ஜனத்தொகையில் சுமார் 23% கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் இந்த புண்ணாக்கு மதத்தை பின்பற்றுகிறார்கள்.2050 ம் ஆண்டுகளில் கிருஸ்துவ மக்களை விட முஸ்லிம்கள் ஜனத்தொகையில் முன்னணியில் இருப்பார்கள் என்று Pew research centre.2014 கூறுகிறது.

    அன்று வாளால் மிரட்டி மத மாற்றப்பட்ட முஸ்லிம்கள் ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள்? இந்தியாவில் தாய் மதமாம் இந்து மதத்திற்கு ஒரு நொண்டி பக்கிரி கூட திரும்ப வர விரும்பவில்லையே ஏன்? மாறாக இந்து மதத்திலிருந்துதான் தாழ்த்தப் பட்ட மக்கள் வெளியேறுகிறார்கள்.மதம் பிடித்த இந்த புண்ணாக்கு ஆன்மீகத்தில் அப்படி என்னதான் உள்ளது?இந்தக் கேள்விகளை உங்கள் உள்ளத்தில் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக பதில் கிடைக்கும்.

    சகோதரரே! வெறுப்பு அரசியல் வேண்டாமே! கருத்துக்கள் பரிமாறுவோம் கண்ணியமாக……உங்கள் வீட்டிற்கு அருகில்,அல்லது தெருவில் தாங்கள் பார்க்கும்,பழகும் முஸ்லிம்களில் கொலை வெறி முஸ்லிமோ, அல்லது தீவீர வாதி முஸ்லிமையோ தாங்கள் கண்டதுண்டா?

    1. Avatar
      திருச்சிற்றம்பலம் says:

      அய்யா ஷாலி
      இந்த “வாழ்க்கை நெறி”யிலிருந்து விலகினால் மரணதண்டனை என்று அனைத்து இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளும் அறிவிக்கின்றனவே? அதனால்தான் இந்த புண்ணாக்கு மதத்தை பின்பற்றுகிறார்கள் தானே? தாய்மதமாம் இந்து மதத்துக்கு நொண்டிபக்கிரி வந்தால் என்ன உங்களுக்கு? அல்லது நொண்டியாக இருப்பதில் என்ன பிரச்னை உங்களுக்கு? எத்தனை எத்தனையோ மக்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அப்படி இல்லாமலா இந்தியாவில் இன்னமும் இந்துக்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் அரசால் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டவர்கள் அந்த முஸ்லீம் அர சு தோற்கடிக்கப்பட்டதும் மீண்டும் இந்துக்களாக மதம் மாறிகொண்டது இந்த நாட்டின் வரலாற்றில் எத்தனையோ உண்டு.
      அப்படியே யாரேனும் இந்துமதத்திலிருந்து வெளியேறினாலும் அவர் தலையை வெட்ட வேண்டும் என்று எந்த இந்து குருவும் இந்துக்களும் சொல்லவில்லை. இஸ்லாமிலிருந்து வெளியேறுபவரை கொலை செய்யவேண்டும் என்று ஏராளமான இமாம்கள் பேசி யூட்யூப்களில் மிரட்டுகிறார்கள். மாபியா தலைவரை கிண்டல் செய்ததற்காக கொலை செய்ய வருகிறார்கள். இணையத்தின் அனானிமையில் அவரவர் பேசுவதால் ஓரளவுக்கு உண்மை வெளிவருகிறது. இல்லையா?
      வெறுப்பு அரசியலை கொலைவெறி அரசியல் அளவுக்கு தூக்கி சென்றுவிட்டு, ஒரு வார்த்தை விமர்சனம் வைத்ததும், “வெறுப்பு அரசியல் வேண்டாமே?” என்று பம்முவது ஏன்?
      சொல்லுங்கள். யாரேனும் இஸ்லாமை விட்டு சுயமாக வெளியேறினால், அவர்களை கொல்லமாட்டோம். ஒருவேளை அப்படி விவரம் தெரியாத முஸ்லீம்கள் இபப்டி வெளியேறுபவர்களை கொல்ல வந்தால் தடுப்போம். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று அறிவியுங்கள். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் இருக்கும் அபாஸ்டஸி மரணதண்டனையை நீக்குங்கள். பிறகு எத்தனை பேர் இஸ்லாமில் இருப்பார்கள் என்று பார்ப்போம்.

  45. Avatar
    suvanappiriyan says:

    //ஓரளவு விஷய ஞானமுள்ள சுவனப்பிரியன் போன்றவர்களே இவரை குருட்டுத்தனமாக பின்பற்றும்போது மற்ற முஸ்லிம்களை குறை சொல்ல ஒன்றுமில்லை.இதுதான் இன்றைய தமிழ் முஸ்லிம்களின் நிலவரம்.//

    குருட்டுத் தனமாகவெல்லாம் நான் யாரையும் பின்பற்றவில்லை. தமிழகத்தில் உள்ள அறிஞர்களில் பிஜே சற்று வித்தியாகமாக சிந்திக்கிறார். அதனால் அவரது பேச்சையும் எழுத்தையும் ரசிப்பதுண்டு. அதற்காக கண்ணை மூடிக் கொண்டெல்லாம் அவரை பின்பற்றவில்லை. குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு வார்த்தையை அவர் சொன்னாலும் அவரது சட்டை காலரை பிடித்து உலுக்கி எடுக்கும் தைரியமும் எங்களுக்கு உண்டு.

    இவர் மூலமாகத்தான் உண்மை இஸ்லாமை அறிந்து கொண்டேன் என்பதால் இவர் மீது என்றுமே ஒரு மதிப்பு உண்டு. அவ்வளவுதான்.

  46. Avatar
    ஷாலி says:

    மதம் மாறுதலுக்கு மரண தண்டனை எனும் கருத்து ஆபிரகாமிய யூத,கிருஸ்துவ,இஸ்லாத்தில் உள்ளது.( உபாகமம்.13:6-9,17:3-5.,ரோமன்.1:20-32.) ஆனால் இச்சட்டங்கள் ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவதில்லை.ஏனெனில் முழுமையான ஆபிரஹாமிய,இஸ்லாமிய சட்டத்தை எவரும் அமுல்படுத்துவதில்லை.முஸ்லிம்கள் ஆளாக்கூடிய நாடுகளை அரபு தேசீய இனக்குழு குடும்பங்களே ஆட்சி செலுத்துகின்றன.இவர்கள் தங்கள் வசதிப்படி சட்டத்தை வைத்துக்கொண்டுள்ளனர்.பஹ்ரீன்,துபாய் நாடுகள் முஸ்லிம்கள்தான் ஆட்சியாளர்கள்.ஆனால் லண்டன்,பாரிஸ் தோற்றுப்போய் விடும் அளவிற்கு எல்லா கருமாந்திரமும் உண்டு.

    இந்திய முஸ்லிம்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினால் யார் தடுக்க முடியும்?அபோஸ்ட்ஸி தண்டனையை ஒருவரும் கொடுக்க முடியாது.மாறாக,கர் வாபஸி ஆதரவு அமோகமாக இருக்கும்.ஆனால் ஒரு முஸ்லிமும் திரும்ப மாட்டேன் என்கிறார்களே!

    ///அப்படியே யாரேனும் இந்துமதத்திலிருந்து வெளியேறினாலும் அவர் தலையை வெட்ட வேண்டும் என்று எந்த இந்து குருவும் இந்துக்களும் சொல்லவில்லை.//

    வாஸ்தவம்தாம்! இந்து மதத்திலிருந்து தப்பித்து தாராளமாக ஓடுகாலிகள் பிற மதங்களுக்கு போகலாம்.ஒரு தண்டனையும் கிடையாது.ஏனெனில் கடவுளே இல்லை என்பவனும் இந்து தான்.ஆகவே இவன் இங்கிருந்தால் என்ன எங்கு ஓடினால் என்ன!
    அதேசமயம்,இந்து வர்ணத்திற்க்குள் இருந்து கொண்டு வேறு வர்ணம் மாறினால் கடும் தண்டனை உண்டு.வர்ணக்கலப்பு ஏற்ப்பட்டால் கலி முத்தி விடும்.சூத்திர சம்பூகன் வேதம் படித்து பிராமணனாக முயற்சி செய்ததால் திருச்சிற்றம்பலம் பாஷையில் ‘தீர்த்துகட்டு. ஹஃப்தா கொடு”.க்கப்பட்டான்.ஏகலைவன் கட்டை விரலை காணிக்கையாக்கினான்.

    இதுபோல் ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்தால் தலை தண்டாவாளத்தில் இருக்காது முண்டம் மட்டும் இருக்கும்.தருமபுரி இளவரசன்,சேலம் கோகுல்ராஜ் களுக்கு நடந்த கொடுமையே இதற்க்கு சாட்சி.”தலையை வெட்டச்சொல்லி எந்த இந்து குருவும் இந்துக்களும் சொல்ல வில்லை” என்று திருச்சிற்றம்பலம் முழுப் பூசணிக்காயை கபளச் சோற்றில் மறைக்கிறார்.

    நம்ம பாமாக காடுவெட்டி இந்து குரு மாமல்லபுர மாநாட்டில் பேசியது.,

    “ நம்ம ஜாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும், எவண்டா …ஜாதியை ஒழிச்சான்? யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்பு திருமணம் செய்து வைச்சா தொலைச்சுப்புடுவேன்! வன்னிய இனப்பெண்களை கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா…’’

    திருச்சிற்றம்பலத்தாரே! இதுக்குப் பயந்து கொண்டுதான் சூத்திரனும்,சண்டாளனும் ஆபிரஹாமிய மதத்திற்கு ஓடுகிறார்கள்.பேசாமே நீங்க ஜாதி சங்க மாநாட்டை கூட்டி அன்புமணியை முதல்வராக்கி அனைத்து ஆண்களும் ஜீன்ஸ்,கூலிங் கிளாஸ் மட்டுமே போடணும் என்ற சமத்துவ சட்டத்தை கொண்டு வாங்க!

    //எல்லா முஸ்லீம் நாடுகளிலும் இருக்கும் அபாஸ்டஸி மரணதண்டனையை நீக்குங்கள். பிறகு எத்தனை பேர் இஸ்லாமில் இருப்பார்கள் என்று பார்ப்போம்.//

    இதைத்தான் நானும் சொல்கிறேன்.நம்ம அய்யன் திருவள்ளுவர்,திருமூலர் சொல்லியபடி ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
    ஆதி பகவன் ஒரே தெய்வத்தை வணங்கி விட்டால், ஏற்றத்தாழ்வு ஒழிந்து அனைவரும் ஒன்றாகிவிடலாம்.பிறகு எத்தனை பேர்

  47. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    //மதம் மாறுதலுக்கு மரண தண்டனை எனும் கருத்து ஆபிரகாமிய யூத,கிருஸ்துவ,இஸ்லாத்தில் உள்ளது//
    ஒப்புகொண்டதற்கு நன்றி

    //இந்திய முஸ்லிம்கள் மீண்டும் தாய் மதம் திரும்பினால் யார் தடுக்க முடியும்?அபோஸ்ட்ஸி தண்டனையை ஒருவரும் கொடுக்க முடியாது.//
    ஷாலி ஒரு ஜோக்கர். இஸ்லாம் என்பது உலகளாவிய மாபியா. அதனால்தான் இங்கிலாந்தில் இருந்த சல்மான் ருஷ்டிக்கு ஈரானில் தண்டனைவிதிக்கப்பட்டு அவர் தலைமறைவு வாழ நேர்ந்தது.
    இந்தியாவிலேயே ஜாகிர் நாயக் போன்றவர்கள் மேடையிலேயே பேசியிருக்கிறார்கள். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் இந்தியாவிலேயே தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அந்த மாபியாத்தனத்துக்கு இந்திய அரசுகளே பயப்படுகின்றன.

    //ஆதி பகவன் ஒரே தெய்வத்தை வணங்கி விட்டால்,
    ஏற்றத்தாழ்வு ஒழிந்து அனைவரும் ஒன்றாகிவிடலாம்//

    அப்படீங்களா? அதாவது எல்லோரும் சுன்னியா ஆவணும். இல்லைன்னா வெட்டு குத்துதானா?.

    ஷியாவோ இருந்தாலோ, அஹ்மதியாவா இருந்தாலோ, சும்மா நாங்களும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குறோம்னு சொன்னாலோ உங்களுக்கு திருப்தி வராது. சுன்னியிலேயே வஹாபி சுன்னியா ஆவணும்.
    இன்னும் அந்த வஹாபிக்கும்பலேயே ஒருத்தர் தவ்ஹீத் ஜமாத்துகுள்ள இருந்தாத்தான் முஸ்லீம் என்பார். இன்னொருத்தர் இந்திய தவ்ஹீத் ஜமாத்துக்குள்ள இருந்தாத்தான் முஸ்லீம் என்பார். இல்லைன்னா காபிர் என்பார். நெறைய கும்பல் சுன்னத் வல்ஜமாத்தெல்லாம் காபிர் என்பார்கள்.
    மற்றவர்களிடம் மிரட்டுவதற்கு முன்னால், உங்களது அபாஸ்டஸி தண்டனையை நீக்குங்கள்.

    இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்வார்களாம். நாத்திகம் பேசுபவர்களுக்கு கசையடி கொடுப்பார்களாம். ஆனால், அது போகவேண்டுமென்றால், எல்லோரும் இஸ்லாமுக்குள்ளேயே இருந்துவிட வேண்டுமாம். என்ன மிரட்டல்! என்ன உளறல்!

    அந்த மிரட்டல் பின்னணியில் இருப்பதால்தானே சுவனப்பிரியனும் ஷாலியும் இஸ்லாமை விதந்தோதிகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அடிப்படையில் பயந்தாரிகள்.
    வெட்கம் கெட்ட பயந்தாரிகள். மூக்கு அறுபட்டவன், மூக்கறுத்தால் சொர்க்கம் தெரியும் என்று எல்லோரையும் மூக்கறுக்க சொன்ன கதைதான் உங்களுக்கு.

  48. Avatar
    Mahakavi says:

    Religion was once a noble word codified for some good purpose, viz., to instruct people to obey some natural law such as lead a good righteous life. ThirukkuRaL is one such all-purpose non-controversial instruction booklet.

    But the different religious heads have hijacked the natural law to suit their own devious purposes.

    My concept: There is one and only one superior being—mostly abstract— which is there to direct all lives to lead a virtuous life. My solution: Kill all those religious heads who denounce other religions and claim superiority of theirs over others.

    Not practical, you say. I agree. That is why I stay away from such polemics.

  49. Avatar
    ஷாலி says:

    //இஸ்லாமிலிருந்து வெளியேறினால் மரணதண்டனை என்று சொல்வார்களாம்…// வெட்கம் கெட்ட பயந்தாரிகள்.//

    வீர சைவர் திருச்சிற்றம்பலத்தாருக்கு ….முஸ்லிம்கள் பயந்தாரிகள்தான்.ஒரே ஒரு எஜமானின் அடிமைகள்.அவனுக்கு பயந்துதான் ஆகவேண்டும்.பொய்,புரட்டு.திருட்டு,லஞ்சம்,ஊழல்,மது,மாது,சூது,வட்டி,கொலை,கொள்ளை போன்ற நேர்மையான செயல்கள் எதுவும் செய்யாமல் பயந்துதான் இவ்வுலகில் வாழ வேண்டும்.உங்களுக்கு இதுமாதிரி சட்ட திட்டம் ஒன்றும் இல்லை.இந்த சாமி கொடுக்காட்ட அடுத்த சாமி,அடுத்தடுத்து ஏராளமான சாமிகள் இருப்பதால் ஆசாமிகள் செய்வதை எல்லாம் செய்துவிட்டு கொடுக்கவேண்டியதை சாமி உண்டியலில் போட்டால் பிரச்சனை முடிந்தது.

    மற்றபடி அப்போஸ்டசி தண்டனை ஆண்டவனின் அரசாங்கத்திடம் மட்டுமல்ல, அனைத்து நாட்டு அரசாங்கத்திடமும் உண்டு.

    உதாரணமாக….இந்தியக் குடிமகன் ஒருவன்.இந்திய சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று உளமார ஒப்புக்கொண்டபின்,திருட்டுத்தனமாக பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு கொண்டு உனக்கும் நான் விசுவாசமாக இருப்பேன்,என்று கூறி,இரண்டு நாட்டுக்கும் டபுள் ஏஜென்ட் வேலை பார்த்து பிடி பட்டால்,என்ன நடக்கும்!இந்திய அரசாங்கம் அவனுக்கு மெடல் குத்தி பாகிஸ்தானுக்கு அனுப்புமா? அல்லது கழுத்தில் கயிறு மாட்டி பரலோகத்திற்கு அனுப்புமா?இந்த பரலோக யாத்திரையை நம்ம வீர சைவர் சரிகாண்பார்தானே!

    சாதாரண மனிதர்கள் அரசாங்கமே இரண்டு இடத்தில் வேலை செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை என்னும்போது பிரபஞ்சத்தைப் படைத்த மாபெரும் எஜமானன் இந்த கேடுகெட்ட செய்கையை தண்டிக்கிறான்.உங்களுக்கு புரிகிறமாதிரி உதாரணம்…..ஒரு மகனுக்கு ஒரு தகப்பன் தான் இருக்க முடியும் ஆனால் ரோட்டில் போகிரவனைஎல்லாம் அப்பா என்று ஒரு மகன் அழைத்தால்,பெத்த அப்பன் மகனை ஓங்கி ஒரு அறை வைப்பான்.

    ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருக்கலாம்.ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தானே இருக்க முடியும்…ஊரில் உள்ளவனைஎல்லாம் எம்புருஷன் என்று ஒரு பெண் கூறினாள், அவளை கட்டின புருஷன் என்ன செய்வான்?மனிதர்களை விட கடவுள் அதிக ரோஷம் உள்ளவர்.தான் படைத்த மனிதன் தன்னை விட்டு கண்ட கழுதையையும் கடவுள் என்று கும்பிடும்போது கோபப்படத்தான் செய்வார்.

    வீரத்திருமகன் சிற்றம்பலத்தாருக்கு இதெல்லாம் வெளங்காது.”ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி “என்பவரிடம் என்னத்தெ சொல்ல. …// வெட்கம் கெட்ட பயந்தாரிகள்.//

    //அப்படீங்களா? அதாவது எல்லோரும் சுன்னியா ஆவணும். இல்லைன்னா வெட்டு குத்துதானா?.
    ஷியாவோ இருந்தாலோ, அஹ்மதியாவா இருந்தாலோ….//

    இது ஒன்னும் பிரச்சினை இல்லை.திருச்சிற்றம்பலத்தார் எதுலே வேணுமானாலும் சேரலாம்.சுன்னிதான் வேண்டும் என்றால் சுன்னியில் சேரலாம்.அல்லது ஷியா இப்படி எதுலே வேண்டுமானாலும் சேரலாம்.இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை.பின்னால் வந்தவர்கள் வைத்தது.

    இப்ப என்ன பிரச்சினை என்றால் ஒரு முஸ்லிம் இந்து மதம் மீண்டும் வந்தால் எந்த வர்ணத்தில்,எந்த ஜாதியில் சேர்வது.வர்ணப் பிரிவை உருவாக்கியவர் பகவான்,முதல் வர்ண பாரத்வாஜ் போன்ற சப்தரிஷி கோத்திரத்தில் சேர முடியுமா? இல்லை நாலாம் வர்ண சூத்திர,பஞ்சமன்,பள்ளன்,பறையன்,சக்கிலியன் கோட்டாவில் தான் இடம் கிடைக்குமா?தமிழ் நாட்டில் மட்டும் இந்து மதத்தில் 299 சாதிப்பிரிவுகள் உள்ளன.இந்துவாக பிறந்த அண்ணன் திருச்சிற்றம்பலமே விரும்பினாலும் ஜாதி மாறமுடியாது.புதுசா போறவனுக்கு சென்னையில் வீடு கிடைக்கிறதே கஷ்டம்.அப்போஸ்டசி தண்டனைக்கு நாங்கள் பயப்படவில்லை.நம்ம வலிமையான பிரதமர் மோடி அவர்கள் தீவிரவாதிகளை கவனித்துக்கொள்வார்.

    நீங்க நம்ம மனுவிடம் ஒரு மனு போட்டு இந்த வர்ண வேறுபாடுகளை நீக்க சொல்லி ஏற்பாடு செய்யுங்கள்.பிறகு உலகமே இந்து மயமாகிவிடும்.போங்க…போய்… முதலில் மனுவை பிடியுங்கோ…. அது முடியாட்ட நம்ம திருவள்ளுவர் வாழ்த்தும் ஒரு கடவுளுக்கும்,திருமூலர் கூறும் ஒன்றே குலம் ஒருவனே தேவன்! என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

  50. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    இறைவனை ஒரு அரசியல்வாதி தரத்துக்கு இறக்கிய ஷாலி அவர்களே,
    நீங்கள் மட்டுமல்ல, எல்லா ஆபிரஹாமிய மதங்களும் இறைவனை ஒரு வன்மம் மிகுந்த அரசியல்வாதியாகவே, மாபியா தலைவனாகவே கற்பிதம் செய்கின்றன.
    உங்களுக்கு தலைக்கு மேல் கோபம் வருகிறது. கோபம் இயலாமையின் அறிகுறி. உங்களது இயலாமை நன்றாகவே உங்கள் கோபத்தில் தெரிகிறது.
    //பொய்,புரட்டு.திருட்டு,லஞ்சம்,ஊழல்,மது,மாது,சூது,வட்டி,கொலை,கொள்ளை போன்ற நேர்மையான செயல்கள் எதுவும் செய்யாமல் பயந்துதான் இவ்வுலகில் வாழ வேண்டும்.உங்களுக்கு இதுமாதிரி சட்ட திட்டம் ஒன்றும் இல்லை//
    பரிதாபப்படத்தான் முடியும். கடவுள் கருத்தே இல்லாத பழங்குடியினரிடம் கூட திருட்டு, கொள்ளை, கொலை, போன்ற குற்றங்கள் குற்றங்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. உங்களது மதவெறியின் காரணமாக உங்கள் மதத்தில் மட்டுமே இவை தடுக்கப்படுவதாகவும் மற்றவர்கள் எல்லாம் மனம் போன போக்கில் வாழ்வதாகவும் பிரச்சாரம் செய்கிறீர்கள். பரிதாபம்.
    //தான் படைத்த மனிதன் தன்னை விட்டு கண்ட கழுதையையும் கடவுள் என்று கும்பிடும்போது கோபப்படத்தான் செய்வார்.//

    ஏன் அந்த கழுதையில் அல்லா இல்லையா? ஆக அல்லா இல்லாத இடமும் இருக்கிறதா? அல்லாவால் கழுதைக்குள் நுழைய முடியாதா? ஒருவன் சிற்பம் செய்தால், அந்த சிற்பத்துக்குள் அந்த சிற்பியும் ஒருவகையில் புகுந்துவிடுகிறானே? அப்போது அல்லா கழுதையை படைத்தால், அந்த கழுதைக்குள் அல்லாவின் ஒரு துளி இருக்கத்தானே செய்கிறது?

    //சாதாரண மனிதர்கள் அரசாங்கமே இரண்டு இடத்தில் வேலை செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை என்னும்போது பிரபஞ்சத்தைப் படைத்த மாபெரும் எஜமானன் இந்த கேடுகெட்ட செய்கையை தண்டிக்கிறான்.//

    ஒரு அரசாங்கம் தன் குடிமக்களுக்காகத்தான் இந்த வேலையை செய்கிறது. அரசாங்கம் குடிமக்களின் பிரதிநிதி, அந்த குடிமக்களுக்கு கேடு வரக்கூடிய விஷயங்களை தடுக்கிறது. அதற்கும் அந்த குற்றங்களை தீர விசாரிக்க நீதிமன்றம் அமைத்து, அந்த நீதிமன்றத்தில் குற்றவாளிக்கும் வக்கீல்களை நியமித்து அவர்களின் தரப்பு வாதங்களையும் கேட்டு குற்றங்களை தண்டிக்கிறது. சிலவேளைகளில் மன்னிப்பும் அளிக்கிறது.

    முகம்மது கற்பிதம் செய்யும் அல்லா கையாலாகாதவர். அவரால் செய்யமுடியாததை ஆட்களை வைத்து கொல்கிறார். முகம்மதுவின் அல்லா உண்மையிலேயே இந்த மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தவர் என்றால், ஒருத்தி அல்லது ஒருவன் இஸ்லாமிலிருந்து வெளியேறும்போதே, தானாக சாவும் படிக்கு செய்திருக்கலாமே? எதற்கு உங்களை மாதிரி அடியாட்களை அனுப்பவேண்டும்? கையாலாகாத கபோதியா முகம்மதின் அல்லா?

    //அப்போஸ்டசி தண்டனைக்கு நாங்கள் பயப்படவில்லை. இப்ப என்ன பிரச்சினை என்றால் ஒரு முஸ்லிம் இந்து மதம் மீண்டும் வந்தால் எந்த வர்ணத்தில்,எந்த ஜாதியில் சேர்வது.//

    இதுதான் உங்கள்பிரச்னை என்றால், ஆர்ய சமாஜம் சேருங்கள்.

  51. Avatar
    Mahakavi says:

    >>சாதாரண மனிதர்கள் அரசாங்கமே இரண்டு இடத்தில் வேலை செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை என்னும்போது பிரபஞ்சத்தைப் படைத்த மாபெரும் எஜமானன் இந்த கேடுகெட்ட செய்கையை தண்டிக்கிறான்<<

    மனிதன் தான் தனக்குப் பிடிக்காதவர்களைத் தண்டிக்கிறான்—தன்னிடம் அதிகாரம் இருந்தால். கடவுள் கூடவா? மனிதனைப் போல் நடக்கும் கடவுள் எனக்கு வேண்டவே வேண்டாம். கடவுள் மனிதனைக் காபி அடித்தால் அவன் கடவுள் அல்ல. சாமி கண்ணைக் குத்திடும் என்று யாராவது சொன்னால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

  52. Avatar
    Mahakavi says:

    சாமி என்றுமே பேசியதில்லை, பேசப்போவதுமில்லை. யாராவது ஒரு அஹங்காரம் கொண்ட மனிதன் கடவுள் என்னும் உருவம்/அருவம்–இதற்குப் பின் நின்று பேசுகிறான். கடவுள் பேசி விட்டார் என்று சொல்வான். மனிதனுக்கு எதிரி மனிதனே. கடவுள் என்றோ தன் காரியம் முடிந்ததும் கை கழுவி விட்டார். அதன் பிறகு தடி எடுத்தவன் தண்டல்காரன் தான். அவனே புதுக் கடவுள்.

  53. Avatar
    Mahakavi says:

    >>மனிதர்களை விட கடவுள் அதிக ரோஷம் உள்ளவர்.தான் படைத்த மனிதன் தன்னை விட்டு கண்ட கழுதையையும் கடவுள் என்று கும்பிடும்போது கோபப்படத்தான் செய்வார்.<<

    ஷாலி அவர்களே, அப்படி யார் சொன்னது? கடவுளே சொன்னாரா? அல்லது ஒரு மனிதனிடம் சொல்லி சொல்லச் சொன்னாரா? அல்லது ஒரு மனிதன் கடவுள் மாதிரி வேஷம் போட்டு சொன்னானா? Islam follows the Old Testament. In the Old Testament god says "I am a jealous god. Thou shalt have no god other than me". I don't like a jealous god, whichever religion he is affiliated with. The demi-gods (I mean the priests) act as proxy for god and impose their ideas on others. That is why I commented earlier that there should be no middlemen between god and man. Everybody—literate or illiterate, rich or poor, white or black, man or woman—can talk to god personally in his/her own language. If god requires a middleman I don't want that god.

  54. Avatar
    Rama says:

    Shali and Co
    The planet earth is a real tiny speck of dust in the galaxy and when you consider the whole Universe, the earth is almost invisible among billions of galaxies.I believe known Universe is about 98 billion light years all around. Someone can enlighten me on this.That is HUGE and pretty massive. We humans will be a very sub atomic tiny dust in the scheme of thing on speck of a planet Earth and your Apostates of Islam will make up still a tiny lot. The Islamic creator, your all knowing Allah, the creator of such a massive Universe, is so worried about these non entity humans leaving his pet cult Islam, thunders ” Kill the Apostates”. Can you seriously believe this? Who is this God with so much ego, a sane person might wonder. He is none other than ” The Allah, the merciful”!The funny part, you guys with bit of intelligence, DEFEND it also!மனிதர்களை விட கடவுள் அதிக ரோஷம் உள்ளவர்.தான் படைத்த மனிதன் தன்னை விட்டு கண்ட கழுதையையும் கடவுள் என்று கும்பிடும்போது கோபப்படத்தான் செய்”
    I close my arguments. Nothing much needed to say about this (!!) Merciful, jealous God. Thanks for clarifying it.

    1. Avatar
      BS says:

      பிரபஞ்சத்தில் மனிதர்கள் சப் அடாமிக் பார்ட்டிக்கில்ச் என்பது எல்லாருக்குமே தெரியும். ஆனால் தெரியாததது, பிரபஞ்சத்தில் மனிதனைப்போல் சிந்திக்கும் திறனுடைய வேறு உயிர்கள் உள்ளனவா இல்லையா? அப்படியே மனிதர்களைப்போல உயிர்கள், அல்லது மனிதர்களைவிட சிறப்பான உயிர்கள் இருந்தால், அவ்வுயிர்கள் அவர்கள் ஆன்மத் தொடர்பான வாழ்க்கையை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நாம் மனிதர்களைப் பற்றிப் பேசினால் போதும், மனிதர்கள் சப் அடாமிக் பார்ட்டிக்கில்ஸ் ஆக இருந்தாலும் பிரபஞ்சத்தில் நாம் வாழும் இப்பூவலகம் ஒரு சிறியதிலும் சிறியதாக இருந்தாலும், நம் ஆன்ம வாழ்க்கைச் சிந்தனையின் விளைவாகத் தோன்றியவை கடவுள் பற்றியவை. அக்கடவுளும் நமக்கும்தான் இங்கே பிரச்சினை. இதற்கும் நாம் பிரபஞ்சத்தில் மிகவும் சின்ன கிரஹம். அதில் நாம் ஒரு அடாமிக் பார்ட்டிக்கிள்ச் என்பதற்கு என்ன தொடர்பு?

      அக்கடவுள் அல்லாஹ என்ற இசுலாமியர்கள் அழைத்துக்கொண்டு அக்கடவுளுக்குத் தாம் விரும்பியபடி குணம் உள்ளவர் என வாழ்வதில் என்ன மற்றவருக்குப் பிரச்சினையென்றே புரியவில்லை.

      ஒவ்வொரு மதத்தவரும் தமதமது கடவுளை தாம் விரும்பியவாறு சித்தரித்துக் கொண்டு வாழ, ஏன் இசுலாமியரின் கடவுள் மட்டும் அவர்கள் விரும்பியவாறு இருக்ககூடாதென்கிறார் ராமா என்ற நபர்?

  55. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    ஷாலிக்கு சப்போர்ட் செய்வதற்காகவே அவதரித்திருக்கும் பிஎஸ் அவர்களே,
    //நம் ஆன்ம வாழ்க்கைச் சிந்தனையின் விளைவாகத் தோன்றியவை கடவுள் பற்றியவை.//
    இஸ்லாம் அப்படி சொல்லவில்லை. இஸ்லாமில் “நம்” கிடையாது. இது முகம்மது என்ற ஒரேஒரு அரபிய சாமியாடியின் சிந்தனையில் தோன்ற கருத்து மட்டுமே.
    அவர் அது தன்னுடைய கருத்து என்று மட்டுமே சொல்லவில்லை.

    உலகத்தில் உள்ள அனைவருமே அந்தகருத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்களை கொல்லு என்று அவர் கொடுத்திருக்கும் ஆணை பற்றியது.

    அவர் மற்றவர்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் வைத்துகொள்ளலாம் என்று சொல்லும்போதுதான், அவருக்கு தன்னுடைய கருத்தை தான் கொண்டு தான் விரும்பியவாறு கடவுள் பற்றிய கருத்தை வைத்துகொள்ள உரிமை உண்டு.

    //அக்கடவுள் அல்லாஹ என்ற இசுலாமியர்கள் அழைத்துக்கொண்டு அக்கடவுளுக்குத் தாம் விரும்பியபடி குணம் உள்ளவர் என வாழ்வதில் என்ன மற்றவருக்குப் பிரச்சினையென்றே புரியவில்லை. //
    இதே கேள்வியை திருப்பி கேட்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு புரிபடும்.

    >>அக்கடவுள் யாஜ்டான் என்று யாசிதிகள் அழைத்துக்கொண்டு அக்கடவுளுக்குத் தாம் விரும்பியபடி குணம் உள்ளவர் என வாழ்வதில் என்ன இஸ்லாமியருக்கு பிரச்சினையென்றே புரியவில்லை<<
    இஸ்லாமியரின் பிரச்னை மற்றவர்கள் எல்லோரும் அல்லா என்று முகம்மது சொன்ன கடவுளை மட்டுமே கும்பிடவேண்டும். இல்லையேல் கொல்லு என்று கிளம்புவதுதான்.
    அந்த கும்பலுக்குள் பிறந்துவிட்டவர்களும், வேறொரு கடவுளை வணங்கக்கூடாது, அவர்கள் அப்படி தன் கடவுளுக்கு முகம்மதுகொடுத்த கற்பிதம் தவிர்த்த வேறொரு கற்பிதத்தை கற்பித்துகொண்டு வணங்கினால் அவனுக்கும் மரணதண்டனை கொடு என்று கிளம்புவதுதான் பிரச்னை.

    தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது.

    1. Avatar
      BS says:

      நம் வாழ்க்கைச் சிந்தனை…என்ற என் சொற்களிலிருந்து ‘நம்’மைப்பிடித்துக்கொண்டு வழிதவறிப் போய்விட்டீர்கள். நம் எனபதன் பொருள் மன்பதை. ஒரு மாக்ரோகோசமிக் வேர்ட் அது. ஒரு பிலாசிஃபி.

      அதன்படி, முஹமது ஒரு தனிநபர். அவர், தான் அல்லாஹிடமிருந்து ஒரு வேதத்தைப் பெற்று அதை மக்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னதும் – அடங்கும்.

      அதுவும் மதமே. எல்லாமதங்களும் ஆன்மிகத்தளத்தை அடிப்படையாகக்கொண்டன‌வே. அவ்வடிப்படைக்குப் பின்னர் மற்றவை தோன்றலாம். மடங்கள், தலைவர்கள், சொத்துக்கள், மதவரசியல் என்று ஒவ்வொன்றாக.

      அப்படி முகமது தான் பெற்ற வேதத்தைப் பொய்யென்று சொல்லவேண்டும் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்? எப்படி ஒரு தனிநபர் அப்படி வரக்கூடதென்று சொல்கிறீர்கள்? எல்லாமே டீம் வர்க் ஆக இருக்கவேண்டுமென்று எப்படி நீங்கள் உங்கள் கருத்தைத் திணிக்கலாம்?

      மதங்கள் எப்படியும் தோன்றலாம். நான் விரும்பியபடிதான் இருக்கவேண்டுமென்ற அகங்காரம் உங்கள் மடல்கள் எல்லாவற்றிலுமே காணப்படுகிறது. அதாவது எந்த குற்றச்சாட்டை இசுலாமியர் மீது வைக்கின்றீர்களே அதையே நீங்களும் செய்கின்றீர்கள்? இந்துமதம் இப்படி. இப்படித்தான் இசுலாமும் கிருத்துவமும் இருக்கவேண்டுமென்ற கருத்துள் காணப்படுகிறது.

      அனைத்து மக்களும் இவ்வேதத்தை நம்பவேண்டும். இதுவே உணமை என்பதை முஹமது மட்டுமா சொன்னார்? எல்லாமதங்களும் அப்படித்தானே சொல்கிறது? அப்படி நம்பலாம், சொல்லவும் செய்யலாம். ஆனால், நம்பாதவர்களை, நமப விரும்பாதவர்களை அழிக்கக் கட்டளையிடக்கூடாது என்பது சரி. இந்துமதத்திலும் உண்டு.

      ஆழ்வார் அரங்கனிடம் கேட்கிறார்: சமணர்கள், புத்தர்கள், சாக்கியர்கள் தலைகளைக் கொய்ய அருள் வேண்டும்.

      எngகிருந்தாலும் சரியன்று.

      1. Avatar
        திருச்சிற்றம்பலம் says:

        உளறியதை சமாளிக்க மேலும் உளறும் பிஎஸ் அவர்களே,
        //அப்படி முகமது தான் பெற்ற வேதத்தைப் பொய்யென்று சொல்லவேண்டும் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்? //
        முகம்மது சொல்லவேண்டியதில்லை. முகம்மதின் கல்டில்பிறந்துவிட்டவர்கள், அதனை பொய் என்று சொல்ல உரிமை பெற்றிருக்கவேண்டும் என்றுதான் கூறுகிறேன்.
        //ஆனால், நம்பாதவர்களை, நமப விரும்பாதவர்களை அழிக்கக் கட்டளையிடக்கூடாது என்பது சரி.//
        மிகச்சரியானது.
        அழிக்க கட்டளையிடுவதை ஆதரிக்கும் ஷாலிக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
        //ஆழ்வார் அரங்கனிடம் கேட்கிறார்: சமணர்கள், புத்தர்கள், சாக்கியர்கள் தலைகளைக் கொய்ய அருள் வேண்டும். //
        ஆழ்வார் கேட்டிருக்கலாம். ஆனால் அரங்கன் சொன்னானா?
        இஸ்லாமில் அல்லாவே சொல்வதாகத்தான் சொல்லப்படுகிறது. அப்போது கையலாகாத அல்லா என்றுதானே பொருள்?
        ஒருவன் முகம்மதின் மதத்திலிருந்து விலகினால், அவன் தலையை எடு என்று அல்லா சொல்வதாக முகம்மது சொல்வது பற்றியதுதான் கேள்வி.
        அப்படி அல்லா சொல்லியிருந்தால், அல்லாவால் அந்த மனிதரின் தலையை எடுக்கமுடியவில்லை என்று பொருள்.
        முகம்மது சொல்லியிருந்தால், அந்த மதமே டுபாக்கூர் என்று பொருள்.
        எது உண்மை என்று முஸ்லீம்களால் ஆராயமுடியுமா?
        அப்படி ஆராய முகம்மதின் கல்டில் பிறந்தவர்கள் அதே கல்டில் பிறந்த ஒருவரை விட்டுவிடுவார்களா?

        1. Avatar
          BS says:

          என் கருத்துக்கள் ஒரிஜனல்ஸ். அது எனக்காவே என் எண்ணங்களை வெளியிடவே இங்கு போடப்படுகிறது. எந்த …தாவுக்கு, இசத்துக்கும் ஊதுகுழல்களாக அல்ல.

          ஆழ்வார்களையே அரங்கந்தான் (திருமாலே) இவ்வுலக்குக்கு அனுப்பினானென்பதும் அவர்கள் திருமாலில் திருமேனியிலிருந்து வந்தவரகள் என்பதும் ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அவதாரமெனபதுமே இந்துமதம். எனவே சமணர்கள், புத்தர்கள், சாக்கியர்கள் தலைகளைக் கொய்ய வேண்டுமென்ற ஆழ்வாரின் அவா, அரங்கனின் கட்டளையே. இதில் என்ன ஐயம் இருக்கமுடியும்?

          இந்துமதத்தில் ஏராளமானச்சான்றுகள் கடவுளே இறங்கி வந்து கொன்றாரென்றும் ஆட்களை அனுப்பிக்கொன்றாரென்றும் இருக்க ஆண்டவனுக்கும் வன்முறைக்கும் தொடர்பே கிடையாதென்று எப்படி வாதிட முடியும்? கடவுள் சாந்தமாகவும் இருப்பார். எப்போது கோபமாகி வன்முறையில் இறங்கி மனிதர்களை அழிக்கவேண்டுமோ அப்போது நான் வந்து அழிப்பேன் என்றும் சொல்லப்பட்டிருக்க, எப்படி வன்முறை இல்லையென்பது.

          நரசிம்ம அவதாரமென்றால் என்ன? தான் மட்டுமே கடவுள்; எவரும் தன்னைக்கடவுள் என்று சொன்னால் அழிப்பேனென்று கம்சனை அழித்த கதைதானே அது?

          இறைவனே இறங்கி வந்து அழிப்பான். இல்லாவிடில் ஆணையிட்டு அழிக்கச்சொல்வான். அப்படியென்றால், இங்குள்ள இறைவனும் கையாலாகவன்தானே?

          கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு கல்லெறிகிறீர்கள்.

          ஆனால், நான் எறிவதில்லை. என் நிலை: நம்புவர்களுக்கே நாராயணன். அதைப்போலவே நம்புவர்களுக்கே அல்லாஹ்.

          நம்பாதவர்களுக்கு எல்லாமே டுபாக்கூர்தான். ஆனால் உங்கள் நிலையே, எங்கள் மதத்தில் என்ன சொன்னாலும் நம்புவோம். அதே மத்தவா சொன்னா டுபாக்க்கூர்!

  56. Avatar
    சல்லுபுல்லு says:

    நேற்று ராத்திரி கடவுள் என்னிடம் வந்து சில விஷயங்களை சொன்னார். அதனை வைத்து ஒரு மதத்தை உருவாக்கியிருக்கிறேன்.
    முக்கியமான கட்டளை பி.எஸ் அவர்களை எங்கே பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும். பி.எஸ் அவர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினரையும் அடிக்க வேண்டும். அவர்கள் என்னை ஒப்புகொண்டால் உடனே பாதுகாப்பாக அனுப்பிவிட வேண்டும் என்று என்னுடைய கடவுள் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
    இந்த கடவுளை நாங்கள் கடவுள் என்று அழைத்துகொண்டு அக்கடவுளுக்குத் தாம் விரும்பியபடி குணம் உள்ளவர் என வாழ்வதில் பி.எஸ் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

    இதில் மற்றவருக்கும் பிஎஸ்ஸுக்கும் பிரச்சினையென்றே புரியவில்லை.


    பிஎஸ் இது சும்மா கற்பனை எக்ஸ்பரிமண்ட் தான். உண்மையிலேயே யாராவது ஒரு லூசுக்கு இப்படி தோன்றினால் நான் ஜவாப்தாரி அல்ல. அந்த லூசை மற்றவர்கள் நம்பி உங்களை அடிக்க வந்தாலும் நான் ஜவாப்தாரி அல்ல.
    ;-)

    1. Avatar
      BS says:

      இதை எழுதுவதற்கு ஏன் பயப்படவேண்டும்? சல்லுபுல்லு என்று ஒரு புதுப்பெயர் ! எதையுமே நான் உணர்வுப்பூர்வமாக எடுப்பதே இல்லை. காரணம், எம்மதத்திலும் எச்சாதியிலும் எவ்வினத்திலுமே, எந்த அடையாளத்துடனும் எந்த மொழியுடனும் நான் என்னை இணப்பதில்லை. எவரைப்போட்டு மாங்குமாங்கு என்று போட்டு நீங்கள் தாக்கினாலும்,, அது நானாகவே இருந்தாலும் – செருப்பாலடிப்பேன் என்பதைப்போல – எனக்கு உணர்ச்சிப்பூர்வமான சிந்தனையே தோனாது. I have crossed the Rubicon.

      இச்சுயபுராணம் போகட்டும். உங்கள் கருத்துக்கே வருவோம்.

      ஒவ்வொரு மதமும் தமக்கென்று கொள்கை வைத்திருக்கிறது. அக்கொள்கையை அம்மதம் நம்புவதால் பிறகொள்கை பொய்யென்றே அது நினைக்கிறது. ஏனென்றால், ஒருவனுக்கு இரு முதலாளிகள் இருக்க முடியா. இருந்தால், அவர்கள் இருவருமே மாற்றுக்கருத்துக்கள் உடையவராயின் எவருக்கு அவன் உண்மை ஊழியனாக இருக்கமுடியும்? முடியாது. எனவேதான், ஒருவனுக்கு ஒரு முதலாளி. ஒருவனுக்கு ஒருத்தியே பெண்டாட்டி. மற்றவளெல்லாம் வைப்பாட்டி என்று சொல்லிக்கொள்ளலாம். அதாவது ஐடன்ட்டிட்டி மாறினால் சரி.

      பிறகொள்கை பொய் என்றால், அதாவது உங்கள் மதக்கொளகை “”உங்கள் மதம் பொய்”” யென்றால், நானென்ன செய்ய முடியும்? அதைப்போல “”உங்கள் மதம் பொய்””யென்று எனமதம் சொன்னால், நீங்களென்ன செய்ய முடியும்? இருவரும் ஓரிடத்தில் வாழவேண்டிய கட்டாயம் வந்தால், அவரவர் மதம் அவரவரிடமே இருந்துவிடவேண்டும் பொதுவெளியில் வாழ வரும்போது. அது போதும்.

      இசுலாமியர்களுடன் இந்துக்களும் இந்துக்களுடன் இசுலாமியர்களும் தமிழகத்தில் வாழ்கிறார்கள். அவனைச்செருப்பாலடி, இவனைச்செருப்பாலடி என்று இருவருமே மோதிக் கொள்ளவில்லை. ஆனால், தூண்டுபவர் இருந்தால் அமைதியைக்குலைக்க முடியும் என்பதை வாழ்க்கை காட்டும்.

      இசுலாம் என்ன சொன்னாலும் எனக்குப்பிரச்சினையே இல்லை. ISIS, Taliban, Al Queda, Boko Haram இவைகளை இசுலாமியக் குழுக்களாக நானெடுப்பதில்லை. திருப்பதி கோயிலில் எல்லாருமே உண்டியல் போடலாம். எவன் பணம் கொள்ளையடித்த பணம், எவன் பணம் உழைத்த காசு என்று எவருமே பார்ப்பதில்லை. அதைப்போல ஒரு மதத்தை எவரும் சீண்டிக்கொண்டு வாழலாம். அவர்களைப்பற்றி எனக்குப் பிரச்சினை இல்லை.

      உங்களுக்குத்தான் என்பதே நான் புரிந்தது உங்கள் எழுத்துக்களிடமிருந்து.

  57. Avatar
    ஷாலி says:

    //ஒருவன் சிற்பம் செய்தால், அந்த சிற்பத்துக்குள் அந்த சிற்பியும் ஒருவகையில் புகுந்துவிடுகிறானே? அப்போது அல்லா கழுதையை படைத்தால், அந்த கழுதைக்குள் அல்லாவின் ஒரு துளி இருக்கத்தானே செய்கிறது?//

    இந்து மதம் என்ற கூட்டுச் சரக்குக்கு சங்கர பீடத்தின் ஸ்மார்த்த அத் வைத கொள்கையை உருவாக்கிய ஆதி சங்கரர் சிந்தனையே தாங்கள் குறிப்பிடும் //அந்தக்கழுதைக்குள் ஒரு துளி…//.இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.எங்கும் இருப்பவன்.உன்னிலும் இருப்பான்,என்னிலும் இருப்பான்;ஆகவே நீயும் கடவுள் நானும் கடவுள்.என்னும். அகம் பிரஹ்ம்சாமி.இந்த “நான் கடவுள் கொள்கையால்” கல்கி,பிரேமானந்தா…. போன்ற ஏராளமான போலிச்சாமிகள் ஆன்மீக கொள்ளையடிக்க புறப்பட்டு விட்டனர்.

    தங்களின் சைவ சமயம் இந்த ஸ்மார்த்த கொள்கையை ஏற்கவில்லை.அத்வைதத்தை ஸ்தாபித்த ஆதி சங்கரரை சிவனென்று கதையளந்து பார்த்தனர் பலிக்கவில்லை.சிவனுக்கு,இரத்தமும் சதையும் சேர்ந்து கருவறையில் பிறத்தல் நிலை என்பது ஒருக்காலும் இல்லை.ஆதி சங்கரரை சிவனாக்க முயன்று தோற்றபின்,கண்டவரை எல்லாம் கடவுளாக்க துணிந்து விட்டனர்.

    பிறப்பிலி பிஞ்ஞகன் பேரருளாளன்
    இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் (25)

    பிறப்பிலி இறப்பிலி என்று சிவனைப்போற்றிருக்க, பிறந்து மூப்பு,நரை,திரை,இரத்தமும்,தசையும் கூடிய உடலை,அந்த உடலில் உள்ள குடலினுள் உள்ள புழுக்களை எல்லாம் சுமக்கும் உடலை,மல ஜலம் கழித்து,பிறந்து மக்கும் கழுதைக்குள்ளும் கடவுளா சிவன்? என்னே அறியாமை?

    சைவ சித்தாந்த அத்துவிதம் ஆன்மாவுக்குள் இறைவன் இருக்கின்றான் என்கிறது.ஆனால் ஆன்மா கடவுளில்லை.நான் கடவுள் என்னும் கேவலாத்துவிதம் ஆன்மாவே கடவுள் என்னும் சங்கரரின் கருதத்து.

    அன்பர் திருச்சிற்றம்பலத்தார் அவர்களுக்கு இந்து சைவமே புரியவில்லை..இதில் இஸ்லாம் எங்கே வெளங்கப்போகிறது..கூடுதல் குழப்பத்திற்கு ஜெயமோகனின் ஆறு தரிசனங்களைப் பாருங்கள்.

  58. Avatar
    ஷாலி says:

    //மனிதன் தான் தனக்குப் பிடிக்காதவர்களைத் தண்டிக்கிறான்—தன்னிடம் அதிகாரம் இருந்தால். கடவுள் கூடவா? மனிதனைப் போல் நடக்கும் கடவுள் எனக்கு வேண்டவே வேண்டாம். கடவுள் மனிதனைக் காபி அடித்தால் அவன் கடவுள் அல்ல…//

    அய்யா!…அம்மா!….மகாகவி, மனிதன் புரிந்து கொள்வதற்கு அவனுக்கு புரியும் உதாரணங்களைத்தான் கொடுக்க வேண்டும்.தேவ தூதர்கள் ,கந்தர்வர்களுக்கு மனித உதாரணம் காட்ட முடியாது.ஆடு,மாடுகளுக்கு புரியவைக்க,இலை தழைகளை காட்டித்தான் புரிய வைக்க முடியும்.மனிதர்களுக்கு மனிதர்களை உதாரணம் காட்டினால் கடவுள் கையாலதவனாக ஆகிவிட மாட்டான். ஒரு சின்ன உதாரணம் தங்கள் புரிதலுக்கு,

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்! தாயிற்சிறந்த கோயிலுமில்லை! போன்ற வாக்கியங்கள் தாய் தந்தையை தெய்வமாக சிறப்பிக்கிறது. நீங்கள் ஏதேனும் தவறு செய்தால் உங்கள் தாய் தந்தை உங்களை,கண்டித்தால்,தண்டித்தால்,இவர்கள் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்வீர்களா?அல்லது நீ…தாயா? என்று கேட்பீர்களா?

    //கடவுள் என்றோ தன் காரியம் முடிந்ததும் கை கழுவி விட்டார். அதன் பிறகு தடி எடுத்தவன் தண்டல்காரன் தான். அவனே புதுக் கடவுள்.//

    மனிதர்கள் செய்யும் குற்றம் குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைக்க மாட்டான்; எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்ப்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு விநாடியும் பின்தவும் மாட்டார்கள்;முந்தவும் மாட்டார்கள் –அல் குர்ஆன்.16:61.

    //Everybody—literate or illiterate, rich or poor, white or black, man or woman—can talk to god personally in his/her own language. If god requires a middleman I don’t want that god..//

    திரு.மகாகவி! மிகச்சரியாக சொன்னார்.ஆம்! கடவுளை வணங்க இடைத்தரகர்,புரோகிதர்கள் தேவையில்லை.சிபாரிசும் தேவையில்லை.படைத்தவனோடு எவரும் நேரடியாக தங்கள் தேவையைக் கேட்கலாம்.அக்கடவுள் பக்தர்களிடம் வாங்கித்தின்னும் உண்டியல் கடவுளாக இருக்கக்கூடாது.கொடுக்கக்கூடிய கடவுளாக இருக்க வேண்டும்..எந்நேரத்திலும் கேட்கக்கூடிய கடவுளாக இருக்க வேண்டும்.அர்த்த ஜாம பூஜை முடிந்த பின் நடை சாத்தியபின் தன் தேவியோடு அனந்தசயனம் பண்ணக்கூடிய கடவுளாக இருக்கக்கூடாது.கடவுளுக்கு குடும்பம்,மாணவி,மக்கள்,உறவு,பிள்ளை குட்டி,போன்ற ஆசாபாசங்கள் இருக்ககூடாது.
    இதுபோல் இலக்கணம் உள்ளவரே உண்மையான கடவுளாக இருக்க வேண்டும்.மகாகவி! இப்படியான ஒரு கடவுள் இன்றும் இருக்கிறார்,என்றும் இருப்பார்.தேடுங்கள்.கண்ணுக்கு தென்படுவார். “உனது செருப்பு வார் அறுந்தாலும் உன் இறைவனிடம் உதவி தேடு!-என்பது நபிகள் நாயகம் வாக்கு.கடவுள் எங்கோ இல்லை.சமீபத்தில் இருக்கிறார்.

    நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்! அன்றியும்;அவன் அவன் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.-குர் ஆன்.50:16.

    ‘அழைத்தவன் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்,பார்த்தவன் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்!-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கிடைக்குமென்றார்.இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்!”-“இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிசத்தை மூடுவதில்லை!”

  59. Avatar
    திருச்சிற்றம்பலம் says:

    திருமந்திரம் சொன்னால் ஒப்புகொள்வீர்களா?

    உடம்பினை முன்னும் இழுக் கென்றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்
    றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.
    திருமந்திரம் -72

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலாயம்
    வள்ளற் பெருமாற்கு‍ வாய்கோ புரவாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
    – திருமந்திரம் பாடல் 821

    குலைக்கின்ற நீரில் குவலயம் நீரும்
    அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
    நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை
    வரைத்து வலம் செயுமாறு அறியேனே
    (திருமந்திரம்-2836)

    பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவனாக திருமந்திரம் சொல்கிறது. ஒவ்வொரு உடலிலும் உயிராகவே இணைந்திருப்பவனாகவும் திருமந்திரம் சொல்கிறது.

    அது சரி,

    முகம்மது சொன்ன அல்லாவை கும்பிடவில்லை என்றால், தலையை சீவு என்று எங்கே திருமந்திரம் சொல்கிறது?

  60. Avatar
    Mahakavi says:

    Shali is trying to distort my statement about middlemen. It applies to all religions—including Islam.
    Regarding god punishing people, shali is giving a bad example of father/mother disciplining children. No we don’t disown our parents for disciplining us. But I don’t expect god to discipline us at all—in the human fashion. Get it? If god behaves like a human he is not god. Period.

    1. Avatar
      BS says:

      அப்படியென்றால் எந்த மதத்தையுமே ஏற்றுக்கொள்ள முடியாது உங்களால்.

      மதங்கள் மக்களுக்கு. அவர்களெல்லாரும் ஞானிகள் அல்ல. ஞானிகளுக்கு நீங்கள் சொன்னமாதிரி கடவுள் கான்சப்ட் சரி.

      எப்போதுமோ ஒன்றை நாம் புரிவது நன்று. குறிப்பாக இந்துமதத்தில். ஞானிகளுக்கொ ஒருவிதமாகவும் பாமரமக்களுக்கு இன்னொரு விதமாகவும் மதம் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. ஞானிகள் நிலைக்கு உயர்வதுதான் நோக்கமென்றாலும்,
      அந்நிலையை விரும்பாமல், அல்லது
      அடையமுடியாமல்,
      அல்லது அப்படியொரு நிலையிருக்கிறதென்றேஏ தெரியாமல்,

      காலம்காலமாக கோடானும் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கான மதத்தை நீங்கள் ஆராய்ந்தால், நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளும் நிலைக்குத்தள்ளப்படுவீர்கள். You are living in an ivory tower.

  61. Avatar
    சல்லுபுல்லு says:

    If god requires a middleman I don’t want that god..//

    திரு.மகாகவி! மிகச்சரியாக சொன்னார்.ஆம்! கடவுளை வணங்க இடைத்தரகர்,புரோகிதர்கள் தேவையில்லை.

    ஆ அப்படியா? முகம்மது middleman இல்லையா? ஓ நேரடியா அவரேதான் கடவுளா? அட!

    1. Avatar
      BS says:

      புரோஹிதர்களையும் கோயில் பூஜாரிகளையும் புரட்டு என்று ஒழித்து விடலாமா?

  62. Avatar
    Mahakavi says:

    sallupullu:
    You said it! If you read my post again, I said there is no need for middlemen “–including Islam”. Mohammed was human and was a middleman. He claimed god spoke to him. Islam worships a god who is without form (remember idol breakage).

    1. Avatar
      BS says:

      There is no need for middlemen – is your personal like.

      கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் எதுவும் எவருமில்லாமல் நேரே நாம் கடவுளைத்தொழுதேத்த வேண்டுமென்றால், நாம் சாதாரண மனிதர்களாக இருக்கமுடியாது. மஹாகவியைப்போல இருக்கவேண்டும். எல்லாரும் மஹாகவிகளா? கோயில்கள் எதற்காக? சடங்குகள், நூல்கள், புராணங்கள், புரோஹிதர்கள், மந்திரங்கள் இவையெல்லாம் எதற்காக? கண்டிப்பாக மஹாகவிகளுக்கில்லை. சாதாரண மக்களுக்குத்தான்.

      பள்ளிப்பாடநூலுக்கும் மாணவனுக்கும் இடையில் ஆசிரியர் எதற்கு? வேண்டாமே? மாணவனே நேரடியாகப்படித்துக்கொண்டு விடலாமே? பள்ளிதான் எதற்கு? நூலகளை வாங்கி வீட்டில்வைத்துப் படித்துவிட்டு நேரடியாகவே தேர்வை எழுதிவிடலாமே?

      எங்கோ ஒருவருக்கு இது சாத்தியாமாகும். ஒருவர் அல்லது இருவர் இருக்கமுடியும். கோடானுகோடி மாணாக்கருக்குப் பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாமல் முடியாது.

      புரிந்துவிட்டிருக்கும் என நினைக்கிறேன். கடவுள் எனபது மஹாகவி கனவு காண்பது போல ரொம்ப ஈசியான கான்செப்ட் இல்லை. அக்கான்செப்டை விளக்கி அதை இன்டலக்சுவல் தளத்திலிருந்து ஆன்மிக தளத்துக்குக் கொண்டு போக, பொதுமக்களே – நமக்கு நாமே – திட்டம் போட்டு வெற்றியடைய முடியாது. எவரால் முடியுமோ அவரக்ளே செய்தார்கள்.

      அவர்களை மிடில் மென் என்று சொல்லி அவர்கள் எல்லாரும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்லி, மக்களே நீங்களே சாமியை உங்கள் பூஜையறை வைத்துக் கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் ஏமாற்று வேலை. அல்லது, உலக இயறகையைப் புரியாத அறியாமை.

      மஹமதுவிடம் கடவுள் பேசினார் என்பதை நாம் நம்ப வேண்டியத்தேவையில்லை. நம்புவர்களுக்குத்தான் அது சொல்லப்பட்டது. எல்லா மதங்களிலும் இப்படி உண்டு. இந்துமதத்தில் ஏராளம். படித்த மஹாகவி இன்னும் படிக்கவேண்டும். இதை மனோதத்துவ ரீதியில் விளக்கப்பட்டிருக்கிற்து. வில்லியம் ஜேம்ஸின் varieties of religious experiences என்று பெரிய நூலைப்படிக்கவும். Many other psychologists as well as philsophers have analysed the claims of religious men and women – convincingly.

      திருமங்கையாழ்வார் தான் பெண் வேடத்தில் பெருமாளோடு புணர்ச்சியே செய்தேன் என்றும் நம்மாழ்வார் என்னுள் புகுந்து பெருமாளே அனைத்தையும் எழுதினாரென்றும், அரங்கனில் உடம்பில் காயங்கள் ஏற்பட்ட குருதி வழிந்ததாகவும், இன்னும் இதைப்போல இந்துமதம் முழுவதும் பல மஹாபுருஷர்களின் வாழ்க்கையில் இறையனுபவம் கூறப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் அப்படியே எடுப்பர். படித்தவர்கள் மனோதத்துவ ரீதியாக விளக்குவர்.

      ஒன்று, நம்பிக்கையாளர் பக்கமிருக்க வேண்டும்.
      இன்னொன்று: ஜேம்ஸின் பக்கம் இருக்கவேண்டும்.
      இரண்டுமே வேண்டாமென்றால், பெரியார் பக்கமாவது போக வேண்டும்.

      மஹாகவி எப்பக்கம் என்றே தெரியவில்லை.

  63. Avatar
    ஷாலி says:

    Mahakavi!
    முஹம்மத் நபி ஒரு இறைத்தூதர் தானெ தவிர இடத்தரகர், புரோகிதர் அல்ல. இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் இவரை இடையில் அழைக்க முடியாத து.Prophet middleman இன்றியே கடவுளை வனங்க வேன்டும். நீங்கள் குர் ஆனை த் திறந்த மனதுடன் குருட்டு நம்பிக்கை இன்றி ஆய்வு கண்ணோட்டத்துடன் படிக்க வேண்டும்..

  64. Avatar
    Mahakavi says:

    Shali:
    Who said Mohammed was a messiah? Did he proclaim or somebody else did so? Either way it depends on your belief. No proof, especially for incidents long gone into history. I am not questioning your belief. It is personal and inviolable. All I am saying is, do not impose your belief on others. Do not kill “non-believers”—be they atheists or who follow other beliefs. Let me repeat. If god told somebody to kill others, I do not need that god. If somebody, in the name of god, says to kill others, that man is a fake. Let us cast him aside. My point is clear on that issue.

  65. Avatar
    Mahakavi says:

    BS:
    Relationship with god has to be a personal matter. No need for a middleman—be that person a priest, religious scholar, or a sage. In reality no interpretation is needed for the common man. You cannot write complex religious texts (by vested interests, I may say) and offer to interpret them for the common man. If god is inscrutable one can leave him alone. The peasant in the village or the laborer in the town can look up at the sky and see god if they want. It can be a cloud or a bird. He recognizes a superior entity and that is enough. He does not need to get the meaning of sahasranAmam—all the 1000 names and the meanings of the words. All that is embellishment—-gilding the lilly, if you will. The middlemen employed themselves by devising a complex problem and offering to explain it. That is all.

  66. Avatar
    Mahakavi says:

    >>மஹாகவி எப்பக்கம் என்றே தெரியவில்லை.<<
    மஹாகவி ஒரு தனி மனிதத்வம். அவனுக்கு தரகர்கள் தேவையில்லை. All the religious conflicts in the world are the creation of மதகுருக்கள் who plant the seeds of dissension in the minds of the followers (especially those who preach hatred towards and advocate mayhem on other believers). I will concede the right of everyone to believe what they want. When they interfere with another's belief, we have to stop them. The rule of the road is: Your freedom stops where my nose begins.

    1. Avatar
      BS says:

      That’s all that I want from you: You are a loner. Being so is no problem if it doesn’t force itself upon that of others.

      1. Avatar
        BS says:

        எல்லா மதகுருமார்களும் மோசம் என்று ஒரே போடாகப்போடுவது எல்லாப்பெண்களுமே அப்படி என்று சொல்வதைப்போல. உண்மையா அது? பொய்யன்றோ? Don’t make sweeping statements please.

          1. Avatar
            BS says:

            It should make you happy, not me. Getting correct statements makes the writer happy, doesn’t it? Don’t orphan your words. You have fathered them :-)

            Most gurus என்பதும் தவறு. சிலர் என்பதே சரி.

            ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால் ஒரு நிரபராதி தூக்கிலடப்படக்கூடாதென்பது. நீதி பரிபாலனத்துக்கு மட்டுமன்று, பொது வாழ்க்கையிலும் அனுசரிக்கப்படவேண்டியது.

            போலி டாக்டர்கள், போலி டீச்சர்கள் என்று இருப்பதைப் போல போலிச்சாமியார்களும் இருப்பார்கள். ஏனென்றால், திறந்துவிட்டால் கயவர்கள் உள்ளுழைந்து கிடைத்ததைச்சுருட்டிக்கொள்ள பார்ப்பர். இல்லையா? அதனால், எல்லாச்சாமியார்களுமே அப்படித்தான் எனபதும். அப்படிச்சொல்லக்கூடாதென்று சுட்டிக்காட்டியவுடன், அனேகச்சாமியார்களும் அப்படித்தான் என்பதும் தவறு.

            Don’t make sweeping statements. I am sorry to point out such basics to you.

      2. Avatar
        Mahakavi says:

        I am not a loner. I am independent thinker not one in a herd like you. There is a difference between the two categories. An independent thinker has no bias to start with. You, on the other hand, have a preconceived notion from the feed you take in.

        1. Avatar
          BS says:

          Independent thinking is no guarantee against errors in thinking. So, an independent thinker cannot boast of being infallible. If one’s independent thinking says to him that the herd goes in the right direction, one should say it is right. I’m afraid you haven’t known the value of independent thinking. That’s why, you are appropriating correctness to one group; and denying it to other group. An independent thinker has no such bias like the one you suffer from, namely, herd is always going in the wrong direction.

          இந்துமதத்தை வேறெந்த மதத்துடனும் ஒப்பிடவே முடியாது என்பதே என் பார்வையும் அனுபவமும் ஆகும். இசுலாம் வேறு; கிருத்துவம் வேறு. இந்து மதம் வேறு. இந்துமதத்தின் தனித்துவம் அதன் பன்முகத்தன்மையே. நீங்கள் அதைப்புரியாமல் எல்லாரும் என் வழியையே கொள்ள வேண்டும் – கடவுளை எல்லாரும் நான் பார்க்கும் வகையாகத்தான் பார்க்கவேண்டுமெனப்து – இம்மதத்தைப்புரியாமல் பேசுவது. எனவேதான் சொன்னேன்: நாத்திகவாதிகள் ரொம்ப ரொம்ப பெட்டர். பன்முகமானால் என்ன? ஒரே முகமானால் என்ன? நம்மைப்பொறுத்தவரை எல்லாமே டூப்புதான். கடவுளே இல்லை. இவர்கள் இல்லாத ஊருக்கு ரூட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். Well said.

          1. Avatar
            Mahakavi says:

            BS: You are indulging in unnecessary polemics away from the main point. I answered your question about “mahakavi endha pakkam?” I am an independent thinker—I said. I did not say I am infallible. On the other hand herd mentality is lot weaker than independent thinking. When you are part of the herd (which you proved yourself) you cannot judge my stance.

            I did not say “everybody should follow me”. You are putting words into my mouth and then take a stand against what I did not say. Don’t take a devious approach to appear smart. I said my thinking is independent. Nothing more.

  67. Avatar
    Mahakavi says:

    Let me clarify one point here. In Hinduism, there are several gods. Other religionists think it is polytheism and per their concept it is a “no, no”. In reality Hinduism is “Monotheistic polylatry” (single god—multiple forms of worship). It is like a president and his cabinet colleagues. You don’t go the president if you have a transportation problem. You go to the transportation secretary who has access to the president if there is a need for that. Division of labor. This was conceived by the early religious guides. It is all in your mind. To analyze it is like splitting hair.

    1. Avatar
      BS says:

      Hierarchical structure of power, you mean. Division of labor is applicable here.

      Single God – Multiple forms of worship -is not correct description of what we see and read in the religion.

      வழிபாடு முறைகள் பின்னரே வருவன. முதலில் அந்த ஒரு கடவுள் யாரென்பதே கேள்வி. அக்கேள்விக்கே ஒரே விடையில்லையே! ஒவ்வொருவரும் ஒரு கடவுளைச்சொல்லி, அதற்கு குணஙக்ளும் சித்திரங்களும் கொடுத்து இதுதான் அக்கடவுள் என்று சொல்ல, நீங்களே எல்லாரும் ஒரே கடவுளையே ஏற்றுக்கொண்டதாகச் சொல்கிறீர்களே எப்படி?

      1. Avatar
        Mahakavi says:

        I said each god is a manifestation of the same single god —assigned different roles according to the individual’s wish. Everyone has a favorite god (kula deivam) like a favorite restaurant.

        1. Avatar
          BS says:

          But you ought to confront the situation where everyone who is said to have a favorite God, by you, doesn’t say it is just a favorite only. He or she believes that it is the only one God that is true. The gods of others are untrue. In Islam, they express or demonstrate it openly – and that creates problems for them in co-existing with other faiths. But others don’t say it openly. But they hold to their aforesaid belief. Confront this situation.

          1. Avatar
            Mahakavi says:

            Those who have a favorite god among Hindus do not necessarily badmouth other religions or gods. Only pseudo gurus do that. Common citizens who proclaim their faith towards one god keep to themselves.

    2. Avatar
      BS says:

      //On the other hand herd mentality is lot weaker than independent thinking. When you are part of the herd (which you proved yourself) you cannot judge my stance.//

      Dear Sir,

      I am NOT referring to herd mentality per se. I am referring to Independent thinking vis-a-vis herd mentality.

      தமிழில் பேசுவோமா? எல்லாருக்கும் புரியட்டும்.

      குழு மனப்பான்மையைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு சுதந்திர சிந்தனையாளன் குழு மனப்பான்மையை எப்படி பார்க்கவேண்டும்? எப்படிப் பார்த்தால் அவன் உண்மையில் சுதந்திர சிந்தனையாளன் என்றழைக்கத் தகுதியுடையவனாவான் எனபதுதான் நான் பேசுவது.

      சுதந்திர சிந்தனையாளன் முன் முடிபுகளோடு வருவதில்லை. குழுமனப்பான்மை எப்போதுமே இகழப்படவேண்டுமென்பது முன்முடிபு. உண்மை அப்படி கிடையாது.

      குழுமனப்பான்மை என்றால் அக்குழுவில் உள்ள அனைவரும் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருள். அஃதை அவர்கள் சிந்திக்காமல்தான் ஏற்றுக்கொண்டார்கள் என்பது முன் முடிபு.

      சாப்பிடுவதற்கு முன்பே சாப்பாடு மோசமாகத்தான் இருக்கும் எனபது போல. குற்றம் செய்தான் என்று சொல்லப்பட்டதை விசாரிக்கக்கூட பொறுமையில்லாமல் தூக்கிலிடுவதைப்போல. நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். செய்து விட்டு சுதந்திர சிந்தனையாளன் என பீற்றிக்கொள்கிறீர்கள்.

      ஒரு சிறு எறும்பிடம் இருந்து கூட நான் கற்றுக்கொள்ள விசயங்கள் உண்டு என்றார் சாக்கரடீசு. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. Everyone should be heard and judged on his/her own merits and demerits. இதுவே சுதந்திர சிந்தனை. Just because there is a group and they do things together, they must be definite idiots! according to you, isn’t it? You are giving a new definition for Independent thinking :-)

      குழு செல்லும் பாதை ஏற்கனவே அதற்கு காட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது சரி. ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. ஆனால், அவ்வழி கண்டிப்பாக முட்டாள்தனமாகத்தான் இருக்கும். அவர்கள் முட்டாள்கள் என்பது சுதந்திர சிந்தனையன்று நண்பரே. மூர்க்கத்தனம் சேர்ந்த முட்டாள்தனம்.

      எதையும் காய்தல் உவத்தல் இன்றி முதலில் உய்த்துணருங்கள். பின்னர் அது சரியா இல்லையா என்று சொல்லலாம். அப்படி பார்க்கும்போது, சில வேளைகளில் குழு செய்யும் விசயம் அறிவுப்பூர்வமாகவும் தனிநபர் செய்வது முட்டாள்தனமாகவும் இருக்கவும் பார்க்கலாம்.

      அப்படிச் செய்தால், உங்களை மற்றவர் அவர்களாகவே சுதந்திர சிந்தனையாளன் என்பார்கள்.

  68. Avatar
    Rama says:

    In fact Hinduism is not even Monotheism. It is Monism . Not only we have only one God but we have GOD ONLY. ( Swamy Dayanada Saraswathi Ji)
    I am at present reading the book ” Nomad” by Ayaan Hirshi Ali. My goodness, I know Islam is a cult of dubious repute but never I imagined it would be this savage and cruel, especially to it’s women. How could a religion portraying itself as peaceful treat it’s women so cruelly? I request all Muslims to read this book with an open mind.

    1. Avatar
      BS says:

      Treatment of women in all religions is bad. Maybe, you find it in Islam worse. But you want to condone it or overlook it in other religions, including yours. Therefore, your words lack credibility.

          1. Avatar
            Mahakavi says:

            BS: Are you deliberately playing hard to get? Rama penned only 4 lines. There was a one-line question there which I quote “How could a religion portraying itself as peaceful treat it’s women so cruelly?”. Can you understand it now and answer—now that you have gone to bat for Islam? I know you are going to go around that question again. Futile attempt!

      1. Avatar
        BS says:

        //Rama penned only 4 lines. There was a one-line question there which I quote “How could a religion portraying itself as peaceful treat it’s women so cruelly?”. Can you understand it now and answer—now that you have gone to bat for Islam? I know you are going to go around that question again. Futile attempt!//

        He posed the question saying he is reading a book. On reading the book, the question crops up in his mind. The question is based on the reading of the book. Neither you nor I have read the book. An independent thinker like you should first be sceptical, I mean, you shouldn’t jump to conclude the Question is valid. You must read the book and only then, you can see whether the same question rises in you also. So, it is premature to ask others to accept the Question and answer it.
        I was sceptical because I know the questioner. He is here to spew venom on the other religion in every word he has written and been writing here for years, as well as in other forums. Therefore, of all the people, the words of this person should be taken with abundant precaution. At least he is better than you. You want me to reply to the untested Question. He wants us to read the book ourselves :-)

        That’s why I reminded him that in every religion, treatment of women is bad. And he has found it worse in Islam. That’s all. Do you agree with my statement or not?

        Religion is a kind of philosophy. Theology is philosophy proper. It is on spiritual plane, not material plane. Men consigned women to material plane – even today. They aren’t encouraged to think, let alone philosophically. Religious thinking wasn’t allowed because they were not respected for their thinking by men. Men considered women to serve men physically only so that he can think about God and godly matters. He for God only. She for God in Him. He had to write religions to execute his agenda of subordinating women. He wanted women to follow his religious theory in letter and spirit. In other words, women had no role to play in creating the religion they have been following. They are mere second sex and have to play the role of Tamil masala film heroine as sidekick to the hero. Men wrote religions to suit them better for which they ought to make women subservient and subordinate. This has led to cruelty of women also just to keep his agenda in full steam. This is common to all religions – whether Islam, Hinduism, Xanity, Sikhism, Jainism, the story is the same. If women become philsophers, who is to care for the children? Who is to his playmate on the bed at night for sexual gratification?

        I hope you may be batting for some other religion. Please tell us whether that religion treats women on par with men! Or, the philosophy of that religion came from the thinking of women!

    2. Avatar
      BS says:

      //Not only we have only one God but we have GOD ONLY. ( Swamy Dayanada Saraswathi Ji)//

      யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

  69. Avatar
    Rama says:

    BS
    I am discussing about the personal opinion and experience of one Ms Ali, an ex Muslim in her book Nomad. She talks on Islam and her hardship she had undergone in the name of that particular religion.In that book she also writes about the savage treatment of women face in Islam including genital mutilation and being treated as a property. If you have any comment on this say so. Otherwise you are deflecting the criticism of Islam by Ms Ali. And doing another Islamic Taqqya (though you might be a non Muslim.)
    If you want to criticize other religions, especially Hinduism and it’s treatment of women, please pen an article and we will discuss it separately. Don’t take the criticism away from the subject matter.( Ah, the original discussion was about Thirukurral, you say. We know, but we have moved on to Islam due to portrayal of Thirukural as something secular. Adhi Bhagavan is is a Hindu concept, no denying on this)
    I am now reading Ms Ali’s next book ” Heretic” Hopefully, it will throw more light on Islam.

    1. Avatar
      BS says:

      If you want to criticize other religions, especially Hinduism and it’s treatment of women, please pen an article and we will discuss it separately. Don’t take the criticism away from the subject matter.(//

      You are wrong to conclude so. First and foremost, it is you, not I, who are interested in religion where you can find ill-treatment of women. Therefore, it is you who should complete your journey started from Islam to Hinduism and other religions. Why are you asking others to talk about Hinduism after reserving Islam for you – is the Question for you. You should pen an essay in Thinnai on cruelty to women in Hinduism, and other religions, week after week, one by one.

      If you want me to pen an essay, it will be a single line thus.

      //In my opinion, religions are anti-women and men authored them with the agenda to keep women down under him to serve.//

      My opinion is elaborated in my reply to Mahakavi. Broaden your minds by knowing all religions.

  70. Avatar
    Rama says:

    BS
    Thank you . No, Me not interested in analyzing misogyny of Hinduism, if it exists.Period.Plus I can’t write in Tamil. Last time I wrote in Tamil was close to fifty years ago. You are batting for Islam.So you need to provide evidence on your contrary views. Put money where your mouth is as they say.Plus come out of the hole and try not to defend the undefendable. See the reality around the world and see the atrocities against women in Islam. No amount of you shouting from the roof top against Hinduism is not going to change the ground reality of this savagery. For a starter read the book ” Heretic” by Ms Ali if you want to broaden your horizon. Or you can continue to stay inside the well.
    I realize it is waste of time to argue with BS and his ilk. So, I won’t bother replying again.

  71. Avatar
    BS says:

    Escaping the responsibility :-)

    Mine are general views on religion and religions. They aren’t not specific to any particular religion.

    Yours is specific attack on a single religion i.e. Islam. The one and only consistent point of argument I am having with you here is this:

    If you say Islam is anti-women while refusing to acknowledge that savagery against women (not mere misogyny – it is a mild word – tonsuring the head of a young widow, calling menstruating women unclean and untouchable and justifying all such stories which glorify such anti-women attitudes in the name of God – aren’t forms of mere misogyny, dear, but reprehensible Human rights violations!) – all these exist in your own religion, so you are being hypocritical.

    Start writing about the savagery wherever you find it – and that is being honest. You are a good reader – seem to have a lot of time to indulge in reading of all kinds of stuff, or selective stuff, to be precise, in your case! I am a poor reader – I have neither time nor inclination to chase points against a religion here, against another religion there. All that I write here are my own common observations.

    If you cannot have the courage to go hammer and tongs upon your religion, follow my method of calling all religions as falling abysmally short on female index. As you are, by your selective amnesia, you are losing your case.

    (I aplogise to the readers for writing in English. My August resolution will be: to meet English with Tamil.)

  72. Avatar
    Mahakavi says:

    >>If you say Islam is anti-women while refusing to acknowledge that savagery against women (not mere misogyny – it is a mild word – tonsuring the head of a young widow, calling menstruating women unclean and untouchable and justifying all such stories which glorify such anti-women attitudes in the name of God – aren’t forms of mere misogyny, dear, but reprehensible Human rights violations!) – all these exist in your own religion, so you are being hypocritical.<>I have neither time nor inclination to chase points against a religion here, against another religion there. All that I write here are my own common observations.<>If you cannot have the courage to go hammer and tongs upon your religion, follow my method of calling all religions as falling abysmally short on female index. As you are, by your selective amnesia, you are losing your case.<<

    BS: You are defending Islam without answering the question raised by Rama. Instead you are deflecting it. If you go to bat for another religion speak against its bad practices too while mentioning the redeeming features. Instead you are taking the negative approach saying"what good is your religion?"

    1. Avatar
      BS says:

      I would like to have a religion written by both sexes mutually. No male domination. Even if such a religion hits the woman this side, and hits the man that side, I don’t mind. All that I need equality in both suffering and happiness.

      The above is my criticism heaped on the heads of all religions, including Islam. If you single out Islam on this – as Rama is gleefully doing for his own purpose of denigrating Islam in the eyes of Thinnai readers as if they are children w/o the ability to think for themselves ! – it means you want to accept other religions which treat women shabbily. Islam, NO. Other religions, YES!

      I don’t want to do that. By supporting Rama, you seem to be doing exactly that: dagger against women in velvet gloves!

      Read me aright; if not, avoid reading me. Someone with better perspicuity, will understand me. Ok?

      1. Avatar
        Mahakavi says:

        BS: Avoiding reading you is easy. I thought you are amenable to reason. That is why I persisted here. No more. You can write blissful nothings here.

        One concluding remark: I am not defending any particular religion. All religions started with a good intention. Then in each case some people started hijacking it to put their own agenda . That is where things went haywire. All religions need “reformation” and “evolution”. So long as there are some hardcore fanatics holding to their narrow-minded beliefs it may not be possible since religion has become an inflammatory issue.

        1. Avatar
          BS says:

          இதே கருத்தை நான் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன்.

          படைத்தவன்மேல் பழியுமில்லை
          பசித்தவன்மேல் பாவமில்லை
          கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
          உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.

          இது மதங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

  73. Avatar
    Mahakavi says:

    Editor: I made three separate comments for 3 different quotes from BS’s comment. All of it appears as a mishmash. I guess I am wasting my time here.

  74. Avatar
    ஷாலி says:

    திண்ணை தள நிர்வாகிகளுக்கு,இத்தளத்தில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே திரு,ராமா,மஹாகவி போன்றவர்கள் தங்கள் கருத்தைப் பதிகிறார்கள்.சிறிது முயற்சி செய்தால் போதும் தமிழிலேயே எளிதாக தட்ட முடியும்.தங்கள் தாய் மொழியில் எழுத ஆர்வமோ,முயற்சியோ இன்றி இன்னும் வெள்ளையர்களிடம் அடிமையாகவே இருக்க ஆசைப்படுகின்றனர்.இவர்களே இப்படியென்றால் இவர்களின் சந்ததிகள் நிலவரம்…… கலவரம்தான்.

    மெல்லத் தமிழ் இனி…இவர்கள் மனம் குளிர மண்டையைப் போடும்?

    1. Avatar
      Mahakavi says:

      Shali:
      You have to watch your accusations. Your accusation pretty much follows your shallow thinking on religious views.
      I am a staunch Thamizh fan. I read lot of Thamizh poetry and literature. I write commentaries on Bharathi’s songs. But having been away from India for so long a time is an impediment to write in Thamizh. If I write in Thamizh, which I can, I want it to be decent style—not shallow like some others who do so here. But it takes lot of time which could be spent on countering shallow views. Writing in English does not mean இன்னும் வெள்ளையர்களிடம் அடிமையாகவே இருக்க ஆசைப்படுகின்றனர். To learn English and write better than an Englishman is something to be commended and not an item for எள்ளி நகையாடுதல்.

      1. Avatar
        BS says:

        //To learn English and write better than an Englishman is something to be commended and not an item for எள்ளி நகையாடுதல்.//

        சரிதான். ஆனால் அஃதை ஆங்கிலம் எங்கு எழுதப்படுகிறதோ அங்கு காட்டினால்தான் அதன் சிறப்பு தெரியும். ஆங்கிலேயரைப் போல, அவர்களை விடவும், சிறப்பாக ஆங்கிலம் எழுதுவோர் நம்மிடம் உண்டு. அவர்கள், ஆங்கிலேயரிடமும், ஆங்கிலத்தில் பேசுவோர், எழுதுவோரிடமும்தான். இச்சிறப்பைக் காட்டுவர். அல்லது இச்சிறப்பு மற்றவர்களால் உணாப்பட்டு பாராட்டப்படும். அண்ணா பாராளுமன்ற்த்தில்தான் ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுவார். தமிழக சட்டமன்றத்தில் இல்லை. எனினும் எவராவது இடக்காக ஆங்கிலத்தில் பேசி மடக்கும்போது மட்டும் ஆங்கிலத்தில் பதில் சொல்வார். ஓர் எ.கா:

        காங்கிரசு உறுப்பினர்: Your days are numbered! .
        அண்ணா: But our steps are counted.

        இது புலமை. தமிழ் பேசவேண்டிய இடத்திலும் ஒருவர் ஆங்கிலத்தில் மாட்டிவிட நினைத்தால் சொல்லிவிடலாம். மற்றபடி, திண்ணையில் அவசியமில்லை.

        நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி, உங்கள் ஆங்கிலமோ, ரமாவின் ஆங்கிலமோ எனக்குச் சிறப்பாகத் தெரியவில்லை. ரமாவின் ஆங்கிலத்தில் உண்டு.

        ஆனால் என்ன செய்ய? இருவரும் தமிழை எழுத, பேச இடம் பொருள் ஏவல் எமக்கில்லாதிருக்கிறன்றன என்று சொல்லிவிட்டீர்கள். ஓகே. சப் சலேகா !

      2. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        தமிழ் எழுத இயலும் எனும்போது ஆழமாக எழுத எது தடுக்கிறது ? இணையத்தில்தான் தமிழில் எழுத எத்தனையோ மென்பொருட்கள் உள்ளனவே ! பிறகும் என்ன பிரச்சினை ?

        ஆங்கிலம் என்றல்ல, வேறு எந்த மொழி பேசுவதும் பிழையற எழுதுவதும் பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால் அம்மொழி பயன்பாடு என்பது அம்மொழி பேசுவோர்களிடத்து மட்டும் இருந்தால்தான் சிறப்பு. அல்லாமல் தமிழ் பேசுவோரிடத்து தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்திலேயே உரையாடுவது தமது ஆங்கில மொழிப்புலமையை அலட்டிக்கொள்வதாகவே பொருள்படும்.

  75. Avatar
    ஷாலி says:

    //I write commentaries on Bharathi’s songs. But having been away from India for so long a time is an impediment…..//

    அம்மா மஹாகவி! பாரதியின் பாட்டுக்கு பதம் பிரித்ததெல்லாம் சரிதான்.உங்களைச் சொல்லி ஒரு குற்றமுமில்லை.பாரதியின் கொள்ளுப்பேத்திக்கே தமிழ் எழுத வரும்…ஆனா வராது.பாவம் நீங்க என்ன செய்வீங்க…

    //I want it to be decent style—not shallow…//

    நான் தட்டையாக எழுதுகிறேன்.நீங்க Decent டாக எழுதுங்கோ…ஒரு தமிழ் சினிமா பாட்டு நினைவுக்கு வருகிறது.

    அக்கா படிக்கிறது பிஎஸ்ஸி..ஆனா தெரியாது ஏ பி ஸி…..

    //To learn English and write better than an Englishman is something to be commended and not.//

    அதற்குத்தானே அம்மா.. மூலை முடுக்கு எல்லாம் நர்சரி வைத்து “பாபா ப்ளாக் ஷீப்” என்று ரைமிங் சொல்லிகொடுத்து தமிழ் நாட்டு கருப்பு ஆடுகளை வெள்ளை ஆடுகளை மாற்றி மேனாட்டிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றோம்.

    தனது தாய்மொழியை தொலைத்த தமிழன் தனது மதம், ஜாதிக் கடவுளை மட்டும் மறக்காமல் கப்பலேற்றி கோயில் கொண்டு விட்டான்.
    To learn Tamil and write better than tamizhian…..

  76. Avatar
    ஷாலி says:

    //I shall not glorify such shallow remarks by Shali and BS with further comments.//

    எப்பவும் Deep எனும் ஆழ்கடல் “மஹா” சமுத்திரத்தில் Decent டாகச் செல்லும் ‘கவி”ன் மிகு கப்பல்கள் ஷாலியின் Shallow water ல் பயணித்தால் கண்டிப்பாக தரை தட்டி நிற்கத்தான் செய்யும்.தொடர்ந்து பயணிக்க முடியாமல்,கரையில் உள்ளவர்களுக்கு காட்சிப்பொருளாக மாறும்.இறுதியில் எந்தப் பயனுமின்றி காயலான் கடைக்கு உடைத்து விற்கப்படும்.

    இக்கட்டுரையின் கதாநாயகன் அய்யன் வள்ளுவன் கூறிய குறளைக் கூறி என் பின்னூட்டத்தை முடித்துக்கொள்கிறேன்.

    பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.”

  77. Avatar
    R. Venkatachalam says:

    நண்பர்களே மன்னியுங்கள். அனைவரும் எழுதி இருப்பதைப்பற்றி படிக்க இயலவில்லை. முதல் அதிகாரத்தில் கூறியது கூறல் குற்றம் உள்ளதென்ற பதிவைமட்டும் படித்தேன். அவ்வாறு இல்லை என்பதைக் கூறுவதே என் நோக்கம். முதல் எட்டு குறட்பாக்களில் கடவுளின் எட்டு குணங்கள் அல்லது விவரனைகள் உள்ளன. பரிமேலழகர் கூறி இருப்பது வெளிக்கருத்தைத் திருக்குறள் மீது திணிப்பதாகும். ஆகவே கூறியது கூறல் என்று கூறுவது தவறு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து ஆகும்.

Leave a Reply to ஒரு அரிசோனன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *