தொடுவானம் 86. கருவாட்டுச் சந்தையான கலைக்கூடம்.

This entry is part 16 of 16 in the series 20 செப்டம்பர் 2015
                   பூம்புகார் கலைக்கூடம் எழுப்பிய கலைஞரைப் பாராட்டியாகவேண்டும். கோவலன் கண்ணகி கதை பாமரத் தமிழ் மக்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் அதைப் ” பூம்புகார் ” திரைப்படம் மூலமாக பிரபலமாக்கியவர் கலைஞர். அதுபோன்ற கிரேக்க நாட்டின் தத்துவ ஞானியான சாக்ரட்டீஸ் பற்றி தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் அறிந்து கொள்ளும் வகையில் ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் உருக்கமான குரலில் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேச வைத்தவர் கலைஞர். சாம்ராட் அசோகன் நாடகத்தின் மூலம் அசோக சக்ரவர்த்தியை நமக்கு அறிமுகம் செய்தவரும் கலைஞர்தான். அதுபோலவேதான்  சேரன் செங்குட்டுவனையும், அனார்க்கலி சலீமையும் நமக்கு அறிமுகம் செய்தார் கலைஞர்.

இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கலைஞரைப் பிடிக்காதவர்களும், திராவிட இயக்கத்தின் மீது பற்று இல்லாதவர்களும் கலைஞரை பலவாறு விமர்சனம் செய்வது கண்கூடு. இது அரசியல். ஆனால் அதற்காக அவருடைய சாதனைகளை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்? அவர் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகளை யாராவது மறுக்க முடியுமா?  அப்படியே மறுத்தாலும் அவரால் எழுதப்பட்ட நூல்களை நாம் மறந்துபோக முடியுமா? அல்லது அவற்றை தடைசெய்துவிட  முடியுமா?

நான் இப்படி ஏன் எழுதுகிறேன் என்றால் ஒருவரால் செய்யப்பட்ட நல்ல காரியங்களை நாம் பாராட்டும் பண்புமிக்கவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக. அதை விடுத்து அவற்றைக் காழ்ப்புணர்ச்சியில் அழிக்க முற்படுவது மனிதத்தன்மையற்ற அரக்கத்தணாமான செயலாகும்.

பூம்புகார் பற்றி எழுதும்போது ஏன் இந்த ஆவேசம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சமீபத்தில் பூம்புகார் சென்று அங்கு கண்ட அவலங்கலால்தான் மனம் வெதும்பிய நிலையில் இதை எழுதுகிறேன்.

அவலங்கள் என்பதோடு அலங்கோலம் என்பதுதான் பொருந்தும். நுழைவாயிலிலேயே ஓர் ஒழுங்கில்லை. சுத்தம் சுகாதாரம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. உள்ளே நுழைந்ததும் எதுவுமே பராமரிக்கப்படாத நிலை. மக்கள் கூட்டமோ, சுற்றுலா பயணிகள் கூட்டமோ அதிகம் இல்லாத வெறிச்சோடிய பரிதாப நிலை.

போகும் வழியில் குப்பைகள். கூட்டி பலநாட்கள் ஆகியிருக்கலாம். சாயம் அடிக்காமல் மங்கிப்போன நிலையில் நினைவுச் சின்னங்கள். தனியே விடப்பட்ட கலைக்கூடம். நான் முன்பே அது பொலிவுடன் திகழ்ந்த காலத்தில் பார்த்திருந்ததால் இத்தகைய பொலிவற்ற நிலையில் காண உள்ளே செல்லவில்லை. அதற்கு மாறாக சுற்றுமுற்றும் பார்த்தவண்ணம் கடலை நோக்கி நடந்தேன்.

குளிர்ந்த கடல் காற்று வீசும் என்று சென்றபோது குடலைக் கலக்கும் துர்நாற்ற வாடையே என்னைத் தாக்கியது! எப்போது பூம்புகார் கடற்கரை இப்படி நாற்றமெடுக்கும் சாக்கடையானது என்ற கவலையுடன்  கண்ணகி கோட்டம் நோக்கிச சென்றேன அங்கு போகும் அலங்கோல வீதியின் இருபுறமும் கருவாடு விற்பனைக் கடைகள் நிறைந்திருந்தன! எனக்கு  ஆச்சரியம்!

உலகில் இதுபோன்ற நினைவுச் சின்னம் எழுப்பியுள்ள எந்த நாட்டிலும் இத்தகைய கேவலமான நிலையைக் காண முடியாது! அதை இங்குதான் காணமுடிந்தது. அதிலும் தமிழகத்தில் கரிகால் மன்னன்கூட ஆண்டதாகக் கூறப்படும் சோழநாட்டின் துறைமுகப் பட்டினம் இருந்ததாகக் கூறப்படும் பூம்புகாரில்தான் காணமுடிந்தது.உலகப் புகழ் பெற்றுவிட்ட சிலப்பதிகாரம் வர்ணித்துள்ள பூம்புகாரில்தான் இதைக் காணமுடிந்தது!

துர்நாற்றம் மூக்கைத் துளைத்த நிலையில் கைக்குட்டையால் மூடிக்கொண்டு கண்ணகிக் கோட்டம் சென்றேன். அதுகூட பராமரிக்கப்படாமல் பார்பதற்கு ஆட்கள் வராத நிலையில் வெறிச்சோடிதான் நின்றது. அங்கெ ஓர் இளம் காதல் ஜோடிகள் அந்த ” மனோகரமான ” மணக்கும் சூழலில் காதல் மொழி பேசி கொஞ்சிக்கொண்டிருப்பது தெரிந்தது! காதலுக்குக் கண்ணில்லை, காதில்லை என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். காதலுக்கு மூக்கும் இல்லை என்பதை அங்குதான் நான் தெரிந்துகொண்டேன்!

அங்கு காணப்பட்ட ஒருசிலரிடம் ஏன் அந்த இடம் அப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வினவினேன். அதற்கு அவர்கள் அந்த பூம்புகார் கடற்கரைப் பகுதியை இன்றைய தமிழக அரசு கருவாடு வியாபாரிகளுக்கு குத்தகை விட்டுவிட்டதாகக் கூறினார்கள். அது கலைஞர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதால் தற்போதைய ஆட்சி அப்படி செய்துவிட்டது என்றும் கூறினார்கள்! அதோடு அங்கு அதிக நேரம் கழிக்கமுடியாத நிலையில் வெளியேறினேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எல்லை கிடையாதா? இந்த அவலத்துக்கு அடிமையானது பூம்புகார் மட்டுமல்ல.  கன்னியாகுமரிக் கடலில் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கும் இதே நிலைதானாம். அங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லையாம். இதே நிலைதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கும், கலைஞர் ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடத்துக்கும் உண்டாகியுள்ளது.

இதுபோன்ற கொடுங்கோல்தனமாக, ஆட்சிக்கு வருவோரெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் கலையும் கலாச்சாரமும் என்னாவது?

சர்வாதிகாரி ஹிட்லரைவிடவா இவர்கள் கொடுங்கோலர்கள்? இவர்களைப் பார்க்கும்போது அந்த ஹிட்லர்  எவ்வளவோ மேல் என்று எண்ணத்தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரின் உற்ச கட்டத்தின்போது ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரைக் கைப்பற்றி அதனுள் புகுந்துகொண்டிருந்த வேளை. நகரம் குண்டு வீச்சால் தாக்கப்படுவதற்கு  முன்னர் ஹிட்லர் அவகளுக்கு இட்ட அவசரக் கட்டளை என்ன தெரியுமா? ” பாரிஸ் நகரின் எழில்மிகு கட்டிடங்களுக்கும், கலைக்கூடங்களுக்கும் எவ்வித சேதமும் உண்டாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ” என்பதே!

          அவன் மட்டும் அரக்கத்தனமாகச் செயல்பட்டிருந்தால்,  பாரிஸ் நகரத்து கண்கவர் மாட மாளிகைகளையும், வானுயர்ந்த அழகிய தேவாலய கோபுரங்களையும் விமான குண்டு வீச்சால் தரைமட்டமாக்கியதோடு, கலைக்கூடங்களையெல்லாம் சூறையாடி சின்னாபின்னமக்கியிருக்கலாம்! அவன் அவ்வாறு  செய்யவில்லை? அதற்குக் காரணம் அவன் ஒரு கலைஞன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationவானம்பாடிகளும் ஞானியும் (2)
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

40 Comments

  1. Avatar
    nallavan says:

    கருணாநிதிக்கு முன் தமிழன் காட்டுமிராண்டியாக இருந்து உள்ளான் ??? அய்யகோ என்ன கொடுமை . சினிமா வந்து பார்த்து மனிதனாக மாறி உள்ளான் . இது அல்லவோ பகுததறிவு !!!

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓர் எல்லை கிடையாதா? இந்த அவலத்துக்கு அடிமையானது பூம்புகார் மட்டுமல்ல. கன்னியாகுமரிக் கடலில் கலைஞரால் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கும் இதே நிலைதானாம். அங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லையாம். இதே நிலைதான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கும், கலைஞர் ஆட்சியின்போது கட்டப்பட்ட புதிய சட்டமன்ற கட்டிடத்துக்கும் உண்டாகியுள்ளது. //

    எனக்கு திரு.மு.க மீது பெரும் அபிமானமோ செல்வி.ஜெ மீது பெரும் வெறுப்போ இல்லை. ஆனாலும் ஜெ, தனது தனிப்பட்ட பகைக்கு மாநிலத்தை – அதன் அடையாளங்களாக விளங்கக்கூடிய கலைச்சின்னங்களை பலியாக்குவது அவரது உளவியல் வக்கிரம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

    ஆனாலும், மு.க ஆட்சியின்போது பூம்புகார் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருந்ததா என்றும் அறிய ஆவல்.

  3. Avatar
    Mahakavi says:

    Dr. Johnson:
    Your agony regarding the current status (as described by you) of PoompuhAr is understandable. I myself visited the Kannagi memorial during its heydays. It was impressive. The current government and the Karunanidhi organization are always at loggerheads. When each party comes to power they undo what the other party did. Landslide election victories pave the way for this.This is the fate of Thamizh folks in their own land. Let those of us who have settled abroad try to do our mite to keep the Thamizh glory. Please read one of my articles on iLango adigaL/M S Subbulakshmi here. http://periscope-narada.blogspot.com/2008/03/verses.html

    1. Avatar
      BS says:

      //When each party comes to power they undo what the other party did//

      The parties can undo in other matters, but why in matters relating to cultural achievements is the question raised by Dr Johnson. As far as I know, Karunanidhi didn’t undo any cultural achievements of earlier governments.

      1. Avatar
        Mahakavi says:

        It is common knowledge that the two leaders —DMK & ADMK–are not the best of friends. Whatever suits the whims of these two leaders they will go for it—be the issues politiacl, cultural, econnomic—you name it they will do it. If KaNNagi was near to Krunanidhi’s heart Jeyalalitha does not have to follow it. She is more concerned about raising money for her programs to keep her in power. I am not defending J over K.Both of them are devils—எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

  4. Avatar
    BS says:

    //அது கலைஞர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதால் தற்போதைய ஆட்சி அப்படி செய்துவிட்டது என்றும் கூறினார்கள்//

    தமிழகத்தைப் பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சிகளுக்கு எல்லை கிடையாது. ஆனாலும், ஒரு தமிழ் ஆர்வலரோ, தமிழ் மொழி, கலாசார உணர்வாளரோ, பதவிக்கு வந்தால், கண்டிப்பாக இப்படிப்பட்ட செயல்கள் – தமக்குப் பிடிக்காதவர் செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக – செய்ய மாட்டார். ஒருவேளை, தம் பெயரில் மென்மேலும் செய்து முன்னவர் பெற்றதைவிட மேலும் பெற்ற முன்னவரின் செயலை மங்கச்செய்வாரேயொழிய அழிப்பதோ, கிடப்பில் போடுவதே கிடையாது.

  5. Avatar
    ஷாலி says:

    // பூம்புகார் பற்றி எழுதும்போது ஏன் இந்த ஆவேசம் என்று நீங்கள் கேட்கலாம். நான் சமீபத்தில் பூம்புகார் சென்று அங்கு கண்ட அவலங்கலால்தான் மனம் வெதும்பிய நிலையில் இதை எழுதுகிறேன்.//

    டாக்டர் ஸார்! பூம்புகாரை விடுங்கள்….கட்டுரைத் தலைப்பில் தங்களது புகைப்படம் துணை(வி) யோடு அட்டகாசமாக அமைந்து விட்டதே! ஜிம்முக்கு போயிட்டு வந்த மாதிரி… சும்மா ஜம்முன்னு இருக்கு… வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!

  6. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பொன். முத்துக்குமார் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். எனக்கு கலைஞர் மீது அதிக மரியாதையும் மதிப்பும் உண்டு. அதுபோன்றே எம். ஜி. ஆர். மீதும் மரியாதை உண்டு. இந்த இருவரும் திரைப்படங்களின் வாயிலாக பெரும் புரட்சியை உண்டுபண்ணி பகுத்தறிவுப் பிரச்சாரம் வழியாக தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்ந்து அரசியல் மாற்றத்தை உண்டுபண்ணியவர்கள். இந்த இருவரும் பிரிய நேர்ந்தாலும், அவர்களைச் சார்ந்த இயக்கங்களே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்து இப்போது ஆட்சி புரிந்தால் அவர் பூம்புகார், வள்ளுவர் சிலை, அண்ணா நூலகம், புதிய சட்டமன்றம் போன்றவற்றைக் கெடுக்கும் நோக்குடன் செயல்பட்டிருக்கமாட்டார். அவர் பொன்மனச் செம்மல். இதுபோன்ற சில்லரைத்தனமான செயல்களில் ஈடுபடக்கூடிய ஒருவரை அவர் தெரியாமல் தன்னுடைய வாரிசாக நியமித்துவிட்டுச் சென்றது நம் துரதிர்ஷ்டமே. இது பற்றி பேசி பயனில்லை.
    பூம்புகார் கலைக்கூடம் கட்டி முடித்த புதிதில் நான் அங்கு சென்று இரசித்து பெருமைகொண்டு வியந்துபோனேன். அதன்பின்பு அது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டதா இல்லையா என்பதை என்னால் கூற இயலவில்லை.
    யுனஸ்கோ நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டுவரும் மகாபலிபுரம் கடற்கோவில் அழகை சென்ற மாதம் கண்டு வியந்துபோனேன். அதுபோன்று இப்போது பூம்புகார் கலைக்கூடத்தையும் அவர்களிடமே விடுவதே சாலச் சிறந்தது என்பதே என்னுடைய கருத்து…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mr.Mahakavi Greetings. Glad to learn that you are a scientist from States. I am much impressed by your love for Tamil, though you can very easily forget it in U.S.A. Furthermore you are also engaged in exemplary service rendering the propagation of our Sangam Literature for the English readers. I went through your link ” Looking through my Periscope ” and read your beautiful explanation on Silappathikaaram verses and the interesting introductory information on M.S. Subulakshmi.
    Thank you for following Thoduvanam in Thinnai.I am just relating my observations and impressions I have witnessed in my life journey. Glad you are following it closely. Of course we cannot bring any change in Tami Nadu politics in the near future. But we can create an awareness through our writings……With Regards…Dr.G.ohnson.

    1. Avatar
      Mahakavi says:

      Dr. Johnson: Since I can’t send you a personal message I am giving you the URLs for my blogs where you can read my articles on religion, philosophy, music, poetry (especially Bharathi). In the religion segment I am writing about divya dEsams—vaishnava temples in India—but they are just narratives and not preachings (they are just like your narratives.) I make it a point to write about AzhwAr pAsurams about each temple—the beauty and crispness of those pAsurams. Here are the URLs. http://periscope-narada.blogspot.com http://narada-therealmofreligion.blogspot.com If you are interested you can visit them.

  8. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு ஜான்சன் அவர்களே,

    தமிழ்நாட்டில் எல்லாக்கட்டுமானங்களையும் நன்றாகவே செய்கிறார்கள். ஆனால், பராமரிப்பு என்பது பெருங்குறைதான். இது நினைவுச் சின்னங்களுக்கு மட்டுமல்ல, பூங்காக்கள், வீடுகள், தாங்கும் ஓட்டல்கள், உணவு விடுதிகள, கோவில்கள் அனைத்துக்குமே பொருந்தும்.

    சுற்றச் சூழலை மிகவும் மோசமாக வைத்திருப்பவர்கள் நாம் என்று நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

  9. Avatar
    paandiyan says:

    தமிழக அரசியலில் அநாகரிகத்தை அரங்கேற்றியவரே கருணாநிதி தான். “தனி நபர் விமர்சனம்’ தழைத்தோங்க, பிள்ளையார் சுழி போட்டவரும் சாட்சாத் கருணாநிதி தான். தனி நபர் விமர்சனம் என்றால் கிஸ்மிஸ் பழம் உண்ட உவகை கொள்வார் கருணாநிதி.

    தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் தான் கருணாநிதி. அப்படி கருணாநிதியால் “தனி நபர் விமர்சனம்’ பெற்றவர்களை ரத்தினச் சுருக்கமாக பார்ப்போம். எத்தனையோ பேர் உண்டு. இடப் பற்றாக்குறையால் இரண்டே இரண்டு டஜன் மட்டும் இதோ:

    மூதறிஞர் ராஜாஜியை “குல்லுகபட்டர்’ (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை “அண்டங் காக்கா’ என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை “கக்கன் என்ன கொக்கா’ என்று நஞ்சைக் கக்கினார்… ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை “வழிப்போக்கன்’ என்றார்; மூப்பனாரை “காவேரி, தென்பெண்ணைப் பாலாறு… மூப்பனார் மூளையில் கோளாறு’ என்றார்; எம்.ஜி.ஆரை “மலையாளி, கூத்தாடி, கோமாளி’ என்றார்; நாவலரை “நெடுமரம்’ என்றார்; நாஞ்சிலாரை “மந்திரக் கோல் மைனர்’ என்றார்; ஆர்.வி.,யை “கைபர் கணவாய் வழி வந்தவரே’ என்றார்; ஹிந்து பத்திரிகையை “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்றார்…

    துக்ளக் சோவை “சொட்டைத் தலையர், பபூன்’ என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை “குள்ள நரி’ என்றார்; ப.சிதம்பரத்தை “செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி’ மற்றும் சமீபத்தில் “ஈ, எறும்பு, கொசு’ என்றார்; பேராசிரியரை “வெறும் உதவி விரிவுரையாளர் தான்’ என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை “ஈனப்பிறவி’ என்றார்; வைகோவை “கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்’ என்றார்; பா.ஜ.,வை “தீண்டத்தகாத கட்சி’ என்றார்…

    வாஜ்பாய், அத்வானியை “விஷ ஜந்துக்கள்’ என்றார்; பா.ஜ., தலைவர்களை “பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்’ என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை “கூஜா’ என்றார்; முதல்வர் ஜெ.,யை “பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி’ என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை “திருடன்’ என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை “பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்’ என்றார்.

    இப்படி நா கூசாமல் குழாயடிச் சண்டையைப் போல் தனி நபர் அர்ச்சனை செய்து, தமிழக அரசியலை தரங்கெட்டுப் போக வழி அமைத்தவர் கருணாநிதி

    1. Avatar
      ஷாலி says:

      //paandiyan says:
      September 24, 2015 at 3:15 am

      தமிழக அரசியலில் அநாகரிகத்தை அரங்கேற்றியவரே கருணாநிதி தான். “தனி நபர் விமர்சனம்’ தழைத்தோங்க, பிள்ளையார் சுழி போட்டவரும் சாட்சாத் கருணாநிதி தான்.//

      “தமிழக அரசியலில் அநாகரிகத்தை அரங்கேற்றியவரே கருணாநிதி தான். ‘தனி நபர் விமர்சனம்’ தழைத்தோங்க, பிள்ளையார் சுழி போட்டவரும் சாட்சாத் கருணாநிதி தான். தனி நபர் விமர்சனம் என்றால் கிஸ்மிஸ் பழம் உண்ட உவகை கொள்வார் கருணநிதி.

      தனி நபர் விமர்சனத்தின் தாளாளர் தன் கருணாநிதி. அப்படி கருணநிதியால், ‘தனி நபர் விமர்சனம்’ பெற்றவர்களை ரத்தினச் சுருக்கமார பார்ப்போம். எத்தனையோ பேர் உண்டு. இடப் பற்றாக்குறையால் இரண்டே இரண்டு டஜன் மட்டும் இதோ:

      மூதறிஞர் ராஜாஜியை ‘குல்லுக பட்டர்’ (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை ‘அண்டங் காக்கா’ என்று அர்ச்சித்தார்; கக்கன் – ஜியை ”கக்கன் என்ன கொக்கா’ என்று நஞ்சைக் கக்கினார்… ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை ‘வழிப்போக்கன்’ என்றார்; மூப்பனாரை ‘காவேரி, தென்பெண்ணைப் பாலாறு… மூப்பனார் மூளையில் கோளாறு’ என்றார்; எம்.ஜி.ஆரை ‘மலையாளி, கூத்தாடி, கோமாளி’ என்றார்; நாவலரை ‘நெடுமரம்’ என்றார்; நாஞ்சிலாரை ‘மந்திரக் கோல் மைனர்’ என்றார்; ஆர்.வி.,யை ‘கைபர் கணவாய் வழி வந்தவரே’ என்றார்; ஹிந்து பத்திரிகையை ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ என்றார்…

      துக்ளக் சோவை ‘சொட்டைத் தலையர், பபூன்’ என்றார்: குமுதம் எஸ்.ஏ.பி.,யை ‘குள்ள நரி’ என்றார்: ப.சிதம்பரத்தை செட்டி நாட்டு சின்னப்பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி’ மற்றும் சமீபத்தில் ‘ஈ, எறும்பு, கொசு’ என்றார்: பேராசிரியரை ‘வெறும் உதவி விரிவுரையாளர் தான்’ என்றார்: அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை ‘ஈனப் பிறவி’ என்றார்: வைகோவை ‘கள்ளத்தோணி, கலிங்கப்பட்டி களிமண்’ என்றார்: பா.ஜ.,வை ‘தீண்டத்தகாத கட்சி’ என்றார்… வாஜ்பாய், அத்வானியை ‘விஷ ஜந்துக்கள் என்றார்;

      பா.ஜ.,தலைவர்களை பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்’ என்றார்; பா.ஜ.,பொதுச் செயளார் எச்.ராஜாவை ‘கூஜா’ என்றார்; முதல்வர் ஜெ.,யை ‘பாப்பாத்தி, பத்ரக்காளி, காந்தாரி’ என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை ‘திருடன்’ என்று திட்டினார்;”

      நன்றி : தினமலர் –சென்னை. 16.04.2004 தேதி இதழிலிருந்து.

  10. Avatar
    paandiyan says:

    கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்!’

    1. Avatar
      ஷாலி says:

      //..paandiyan says:
      September 24, 2015 at 3:18 am

      கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்!’//

      திமுகவை வெறுத்த கண்ணதாசனுக்கு திமுகவில் இரண்டு பேர் மேல் மட்டும் பாசம் கடைசிவரை இருந்தது. ஒருவர் கருணாநிதி! இன்னொருவர் அன்பில் தர்மலிங்கம்! ஆமாம்.கண்ணதாசனே இப்படிச் சொன்னார்.
      கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் ஒருவிதமான Love and Hate relationship!ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமோ என்னவோ! முதல் முறையாக 1940களில் எம்.ஜி.சக்கரபாணி கண்ணதாசனை அழைத்துப் போய் கருணாநிதியை அறிமுகப்படுத்திய போது தனக்கு
      ‘ காதலியை ப்பார்த்த உணர்வு’ ஏற்பட்டதாகவே கவிஞர் குறிப்பிட்டுள்ளார். கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி

      “ தென்றலாய் தீண்டியவனும் நீ! நெருப்பாய் சுட்டவ்னும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்தபோதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” என்று இரங்கல் எழுதினார்.

      தாக்குதல் என்றால் சாதாரண தாக்குதல் அல்ல. வனவாசத்தில் எழுதியவை மட்டுமல்ல. மேடையிலும். கருணாநிதி ‘ காமராஜரின் தாயார் கருவாடு விற்றவர்’ என்று சொன்னதற்காக கண்ணதாசனின் பதிலடி’ ஆமாம். என் தலைவனின் தாய் கருவாடு தான் விற்றார். கருவாடு மட்டும் தான் விற்றார்!’

      கண்ணதாசன் பெத்தடின் இஞ்சக்சன் போதையில் அளவுக்கு மீறி மூழ்கிய போது கண்ணதாசனின் பிள்ளைகள் கருணாநிதியிடம் போய் அழுதார்கள். அப்போது கருணாநிதி கவிஞரிடம் கேட்ட வார்த்தைகள்: ’எங்களையெல்லாம் அழ வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறாயா?’
      https://groups.yahoo.com/neo/groups/rotarycluboftinnevelly/conversations/messages/5855

  11. Avatar
    Dr.G.Johnson says:

    Dear Mahakavi, BS and Oru Arisonan, I endorse your views on our Tamil Nadu political leaders who are supposed to preserve our cultural heritage both ancient and recent. Any leader who honors our classical language, our glorious Sangam literature, and our unique culture, irrespective of his political affinity, would not even imagine or think of neglecting or destroying any of our monuments related to language and history. It goes without saying that only a person without culture or honor or basic human instinct would resort to such destructive acts, as a sort of revenge on his or her political adversary. Hence nothing could be done to such people who are popular among our Tamil masses……With regards……Dr.G.Johnson.

  12. Avatar
    BS says:

    செகப்பிரியர் (Shakespeare) சொல்வார்: “Physician, heal thyself!”

    படத்திலே வீக்கா இருக்கிற மாதிரி தெரியுதே?
    பயணக்களைப்பா? இல்லை…தமிழ்நாட்டில் நடக்கிறவைகளைப்பார்த்து மன உலைச்சலா?

  13. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் சகலகலாவல்ல ஷாலிக்கு வணக்கம். பூம்புகார் கலைக்கூடம் கருவாடு விற்கும் சந்தையாக மாறிவருவதை நான் எழுதியபோதிலும் அதையும் படித்துவிட்டு, எங்கள் படத்தைப் புகழ்ந்து வாழ்த்து கூறியுள்ளதற்கு நன்றி.
    கண்ணகி கோட்டம் அருகே கடற்கரையில் பாறைகள் குவிந்து கிடந்தன. சுனாமி வந்தால் அலைகளைத் தடுக்க போடப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன். அங்கிருந்து கடல் அழகாக காட்சி தந்தது. அதன் அடியில் பூம்புகார் மறைந்துள்ளது என்னுடைய மனக்கண்ணில் தெரிந்தது. அதன் நினைவாக உடன் இருந்த மனைவியுடன் படம் எடுத்துக்கொண்டேன். அது மிகவும் அழகாக அமைந்து விட்டது. அதை திண்ணையில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கும் நன்றி. தொடுவானத்தை தொடர்ந்து படித்து உங்கள் மேலான கருத்துகளை எழுதுமாறு இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகிறேன். நன்றி….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  14. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஒரு அரிசோனன் அவர்களுக்கு வணக்கம்.சுற்றுச் சூழல் பற்றியும் பராமரிப்பு பற்றியும் எழுதியுள்ளீர்கள். உண்மைதான்.இந்த கருத்தை எதிர்த்து வாதிட நம் நண்பர் ஷாலியாலும் முடியாது.
    என்ன செய்வது? இது நமக்கு சாபக்கேடு! சுற்றுச் சூழல் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். படித்தவர்களும் பாமர மக்களும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளனர்.இவர்களிடையே விழிப்புணர்வை எவ்வாறு பரப்புவது? தொலைக்காட்சிகளின் மூலம் செய்யலாம்.அனால் அவர்கள் சீரியல் போடுவதில் கவனம் செலுத்துவதால் இதுபற்றியெல்லாம் நினைத்துப் பார்க்க நேரம் இல்லை.
    அரசு அதிகாரிகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்களால் ஏதும் செய்ய முடியாத நிலை.ஒவ்வொரு தெருவாக அவர்கள் சென்று கண்காணிக்கவா முடியும்? நிச்சயம் முடியாது.
    சிங்கப்பூர் மாதிரி சட்டத்தால் கடும் தண்டனை தந்தால் மக்கள் பயந்துவிடுவர்களா என்றால் அதுவும் கிடையாது. சிங்கப்பூர் மிகவும் சிறிய தீவு. தமிழ் நாடு அதைவிட எவ்வளவோ பெரிய நாடு.இங்கு ஜனத்தொகையும் பெருகிவருகிறது.
    ஆகவே இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் மாறவேண்டும். அதற்கான போதிய விழிப்புணர்வு தேவை. இதை மக்களிடம் சென்று சேர ஊடகங்கள் உதவவேண்டும். செய்வார்களா?
    சுற்றுச் சூழல் அமைச்சு ஒன்று இயங்கவேண்டும். அதுவே இத்தகைய விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் சேவையில் முழு கவனம் செலுத்த வேண்டும். இது நடக்குமா என்பதும் பெரும் கேள்விக்குறியே! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன், ஸ்தோத்திரம்.

    தசாப்தங்களுக்கு முன் பார்த்த பூம்புகார் தான் நினைவில் உள்ளது. கலைக்கூடங்களுக்கு ஊடே நடக்கையில் காலை வருடும் கடல் மணல். அழகழகான சிற்பங்கள். வித விதமான யாழ்கள். மங்கலான நினைவில் இவை பசுமையாக உள்ளன.

    புரட்சித்தலைவர் ஸ்ரீ எம் ஜி ராமசந்த்ரன் அவர்கள் கட்சிகளை மொழிகளை மதங்களை மீறி தமிழக மக்களது ஹ்ருதயத்தில் ஆழப்பதிந்திருக்கும் உன்னதமான மனிதர். ஏழை மக்களது தேவைகளை இயன்ற வரை பூர்த்தி செய்ய நாணயமாகப் பாடுபட்டார். public distributin, primary health போன்ற அடிப்படை விஷயங்களில் ஊழல்கள் அதிகம் இல்லாமல் பொதுமக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என்றபடிக்கு கவனம் செலுத்தினார்.

    அன்பர் கருணாநிதி அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட பூம்புகார் மற்றும் வள்ளுவர் கோட்டம் போன்றவை தமிழர்களுக்கு அவச்யமானவையே. செல்வி ஜெயலலிதா அவர்கள் இது போன்ற கலைக்கூடங்களை முறையாகப் பராமரிக்காதது முறையல்ல.

    கன்யாகுமரியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை அப்படி மனதைக்கொள்ளை கொள்ளவில்லை. அன்பர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே கூட அங்கு சென்றிருக்கிறேன். அவர்காலத்திலேயே இந்த சிலையைப் பராமரிப்பது சொல்லிக்கொள்ளும் படிக்கில்லை. மயிலையில் காணப்படும் சாஸ்த்ரக்ஞரான ஸ்ரீ திருவள்ளுவர் பெருமானின் ஆலயத்தில் தர்சனம் செய்தவர்களுக்கு குமரிமுனையில் சமுத்ரத்து பக்ஷிகளின் விஷ்டைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு பரிதாபமாக நிற்கும் வள்ளுவர் சிலையைக் கண்டால் கண்களில் உதிரம் தான் கொட்டும்.

    ஆனால் தமிழகத்தில் தமிழரல்லாதவர்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள இரண்டு தீராவிடக்கட்சிகளுமே பாம்பும் கீரிப்பிள்ளையுமாக இருக்கையில் ஒருவரை ஒருவர் நிர்மூலம் செய்வது தானே லக்ஷ்யமாக இருக்கிறது.

    பூம்புகாரும் வள்ளுவர் கோட்டமும் மட்டும் தானா தீராவிடத்தின் கைங்கர்யங்கள்.

    அன்பர் கருணாநிதியின் மேற்கண்ட கைங்கர்யங்களையும் தூயதமிழின் திசையில் தமிழை வளர்த்தெடுக்க இந்த தீராவிட இயக்கங்கள் ப்ரயத்னம் செய்ததையும் நிச்சயமாக ச்லாகிக்கிறேன்.

    ஆனால் நான் கீழே பட்டியலிட்டுள்ள அவலத்திற்கும் கூட அன்பர் கருணாநிதியும் மற்றும் அவருக்கெதிரான இன்னொரு கழகமும் ஜவாப்தாரிகள் என்பதை மறைக்க முடியாது. இவை அரசியல் காழ்ப்பைச் சார்ந்தவை இல்லை. தமிழகத்தின் பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள் ஜாதி, மதம், மொழி பேதம் இல்லாது அவதானிக்க வேண்டிய விஷயங்கள்.

    தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் எண்ணிறந்த கோவில்களைச் சீரமைக்கிறேன் பேர்வழி என்ற வ்யாஜத்தில் மணல்வீச்சடித்து கோவிலின் சிற்பங்களை சிதைத்து……………சரித்ரத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்களை உருக்குலைத்து………….மன்னர்கள் பரிச்ரமப்பட்டு செய்த கற்றளிகளை லபேஸ் செய்து தமிழகத்துக் கற்றளிகளில் ராஜஸ்தானத்து மார்பிள்களை இழைத்த கொடுமை……….தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளான ஏரிகள் மற்றும் குளங்களை பணம் காய்ச்சிமரமாக்க இவற்றில் குடியிருப்பு காலோனிகள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் இத்யாதி சிமெண்டு ஜல்லிக்காடுகளாக மாற்றிய அவலம்……………. தமிழகத்தின் ஒவ்வொரு ஆற்றிலும் மணல்வாரி குண்டர்படையைப் போஷித்து ஒவ்வொரு ஆற்றினுடைய ஜீவனையும் உருக்குலைத்து ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிய சிறுமை…………..நமது தமிழகத்துச் சஹோதர சஹோரிகளுக்கு தமிழக சர்க்காரே தயார் செய்யும் சாராயத்தை மலிவு விலையில் விக்ரயம் செய்து தமிழகத்து குடிமக்களை மொடாக்குடியர்களாக மாற்றிய கந்தறகோளம்………….தமிழகத்து ஏழை மக்களை தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளால் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்காது தொடர்ந்து இலவசங்களை மட்டிலும் போட்டு இழிவு செய்தமை……………………..ஈழத்தமிழர்களுக்காக காலை நாஷ்டாவுக்கும் மதியம் போஜனத்துக்கும் இடையே அன்பர் கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட உண்ணாவ்ரதமும்………….முள்ளிவாய்க்காலில் தமிழ்ச்சஹோதரர்கள் செத்துக்கொண்டிருக்கையில் தீராவிடக் கழகத்தினர் தமது பதவியைப் பாதுகாத்துக்கொண்ட மேன்மையும் தமிழகமோ தமிழர்களோ மறக்கவா செய்வார்கள்?

    களப்பிரர் காலம் மட்டிலும் தமிழகத்தின் இருண்டகாலம் இல்லை………… தமிழகத்தை தமிழகத்து கலைச்சினங்களை தமிழகத்து இயற்கை வளங்களை உருக்குலைத்து சின்னாபின்னமாக்கிய தீராவிடக்கட்சிகள் தமிழகத்தை ஆண்ட காலமும் இருண்ட காலமே என்றால் மிகையாகாது.

    தெலெகு மற்றும் கன்னட நாஸ்திக கும்பல்களால் சூழப்பட்டுள்ள இந்த தீராவிடக் கும்பல்களைத் தகர்த்தெறிய வேண்டும் என்று ஆர்வமுள்ள தமிழ் மொழி பேசும் தமிழர்கள் பெருகி வருதலும் ……………….. குடும்ப சொத்தாக மாறிப்போயுள்ள தீராவிடக் கழகங்கள் குடும்ப சண்டை சச்சரவுகளில் தொலைந்து போக ஆரம்பித்துள்ளதும்………….. தீராவிடத்தின் அந்த்யேஷ்டிக்கான ப்ராரம்பம் தெளிவாகத் தெரிகிறது.

  16. Avatar
    paandiyan says:

    /செகப்பிரியர் (Shakespeare) சொல்வார்: //

    ஸ்டாலின் யை சடாலின் என்று எழுத யாருக்கும் துணிவு இல்லை . இப்படி தமிழ் படுதுகின்றார்கலாம் . கேவலம்

  17. Avatar
    BS says:

    பெரியவர் திரு கிருட்டிணக்குமார் அவர்களே!

    இரு திராவிடக்கட்சிகளில் ஒன்றுமாறி மற்றொன்றுதான் ஆட்சிக்கு வரும் 2017. செயலலிதா வர வாய்ப்புண்டு. ஆனால் கண்டிபபக திராவிடக்கட்சிகளுக்கு மாற்று தற்போது இல்லை. தமிழ்மக்கள் உஷாராகி விட்டார்கள் என்று உதார்விட முடியாது. அவர்கள் மீண்டும் இக்கட்சிகளில் ஒன்றையேத் தேர்ந்தெடுக்க 2017ள் தேர்தல் முடிவுகள் வெளியானபின், நீங்கள் மணிப்பிரவாளத்தில் மண்டையைப்பிளக்கும் வகையில் திட்டித்தீர்க்கலாம். திண்ணை உங்கள் மணிப்பிரவாள பிரவாகத்துக்கு மடை திறந்து காத்திருக்கும்.

    வாழ்த்துகள்.

  18. Avatar
    Mahakavi says:

    தமிழ்நாடு தமிழர்களுக்கு அல்ல. அயல் நாடுகளில் தான் தமிழன் முன்னேற முடியும். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வட அமெரிக்கா இவை தான் தமிழனுக்குத் தஞ்சம். Fetna சொல்வது போல் தமிழால் உயர்வோம், தமிழை வளர்ப்போம் —-ஆனால் அயல் நாடுகளில் மட்டுமே இது சாத்தியம் இன்றைய நிலையில்.

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்புடையீர்

    நான் பட்டியலிட்ட தமிழகத்து அவல நிலைகள் கடந்த நாலைந்து தசாப்தங்களில் நிகழ்ந்த சர்க்காரி மெத்தனம் மற்றும் சர்க்காரி ஊழல் ஆகியவற்றின் விளைவுகள். இதற்குக் காரணம் தீராவிடக் கட்சிகள் அல்ல. மாறாக அமேரிக்க ரிபப்ளிகன் கட்சி அல்லது டெமாக்ரடிக் கட்சி என்று நீங்கள் நினைத்தால் அதைப் பகிரலாம்.

    \\ தமிழ்மக்கள் உஷாராகி விட்டார்கள் என்று உதார்விட முடியாது. அவர்கள் மீண்டும் இக்கட்சிகளில் ஒன்றையேத் தேர்ந்தெடுக்க 2017ள் \\

    2017ல் யார் ஆட்சிக்கு வருவார் என்பது என் ஹேஷ்யம் இல்லை. இந்த தீராவிட தீய சக்திகளுடைய அந்த்யேஷ்டி ப்ராரம்பம் ஆகி விட்டது என்பதன் குறிப்பு தமிழர்கள் இந்த போலி நாஸ்திக வடுகர் கும்பலின் பித்தலாட்டங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து தமிழகத்தைக் காக்க ஒன்றிணைய ஆரம்பித்து விட்டார்கள் என்பது. இது நிதர்சனம். வெறுப்பையும் காழ்ப்பையுமே சித்தாந்தங்கள் என்ற போர்வையில் தமிழக மண்ணில் விதைத்து தமிழகத்தைச் சின்னாபின்னமாக்கியவர்கள் அதே வெறுப்புக் கணைகளால் தமிழகத்துத் தமிழர்களால் ஒருக்காலம் தாக்கப்படக்கூடும் என்று நினைத்துப்பார்த்திருக்க முடியாது.

    \\ நீங்கள் மணிப்பிரவாளத்தில் மண்டையைப்பிளக்கும் வகையில் திட்டித்தீர்க்கலாம். \\

    ம்……..தங்க்லீஷ் ப்ரேமியாகிய தாங்கள் கூட அவ்வப்போது செயலலிதா என்று எழுதுவதை கவனிக்கிறேன். எப்போதாவது தப்பித்தவறி இசுடாலின் என்று இந்த அவதாரத்திலேயோ அல்லது பூர்வ அவதாரங்களிலேயோ எழுதியிருந்தால் சுட்டுங்களேன். வாரு மீருக்கு மனவாள்ளா?

    மணிப்ரவாளம் என்ற மொழிநடையில் உர்தூ இருக்காது என்பது உங்களுக்குத் தெரியாது போலும். என் இயல்பான மொழிநடையில் உர்தூவும் உண்டு.

    தமிழகத்தைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிய தீய சக்திகளான தீராவிடத்தினரின் வீர தீர ப்ரதாபங்களும் அதனால் தமிழகம் அடைந்த சீர்கேடும் விளக்கப்படுதல் எப்படி வசவாகும். வசவுகள் என்பது என்ன என்பதனை தீரா விட சக்திகள் தங்களுள் ஒருவரையொருவர் விமர்சிக்க என்னென்ன வாசகங்களை ப்ரயோகித்தனர் என்று வாசித்தீர்களானால் தெளிவாகப் புலனாகுமே!!!!

  20. Avatar
    ஷாலி says:

    //..தமிழர்கள் இந்த போலி நாஸ்திக வடுகர் கும்பலின் பித்தலாட்டங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து தமிழகத்தைக் காக்க ஒன்றிணைய ஆரம்பித்து விட்டார்கள் என்பது. இது நிதர்சனம். வெறுப்பையும் காழ்ப்பையுமே சித்தாந்தங்கள் என்ற போர்வையில் தமிழக மண்ணில் விதைத்து தமிழகத்தைச் சின்னாபின்னமாக்கியவர்கள்…//

    “சங் பரிவார்” குடும்பத்தைச் சேர்ந்த க்ரிஷ்ணாஜி அவர்களுக்கு பெரியார்,அண்ணா,கருணாநிதி போன்ற “த்ராவிட டம்ளர்” கழக கட்சித் தலைவர்கள் மீது காழ்ப்பும்,வெறுப்பும் திண்ணை அறிந்த ஒன்றுதான்.திக,திமுக,அதிமுக,கட்சி தலைவர்களின் ஆட்சியை விமர்சிப்பதை நாம் தவறு என்று சொல்லவில்லை.தாராளமாக அர்ச்சனை செய்யலாம்.

    ஆனால் எப்போதும் இவர் அவர்களை “வடுக கும்பல்” என்று குறிப்பிட்டு ஒட்டு மொத்த தெலுங்கு மக்களையும் வசை பாடுவது அநாகரிகமானது. உண்மையில் தமிழகத்தை இருபது நுற்றாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே.தமிழக வரலாற்றில் தமிழ் மன்னர்கள் ஆண்ட காலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் கூட இருக்காது.வடுக நாயக்க மன்னர்கள் ஆட்சியில்தான் தஞ்சை,மதுரையில் கலைகள்,சிற்பம்,கோயில்கள் வளர்ச்சியுற்றது.

    அன்று நாட்டை ஆண்ட வடுகர்கள் இன்று, தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள் தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த சைவத் தமிழர்கள் முன்வருவார்களா? அகண்ட பாரதத்து ஆசையுள்ள க்ருஷ்ணகுமார்,அதன் அங்கமான தெலுங்கு மக்களை வடுகர் என இழிவு படுத்தும் நோக்கோடு விளிப்பது முறையல்ல.

    இந்த சுத்த சைவர் வணங்கும் சிவ பெருமானுக்கும் வடுகநாதர் எனும் திருப்பெயர் உண்டு. காலபைரவரின் சொரூபமாகிய சிவபெருமானை வடுகநாதன் என்று அழைக்கிறார்கள்,புதுச்சேரி வடுகூரில் அருள்மிகு வடுகீஸ்வரர் மற்றும் அம்பாள் திரிபுரசுந்தரி லட்சுமி அம்சத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு “வடுகர் நாயகி’ என்றும் பெயர் உண்டு. பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அஷ்டமி தினங்களில் சுவாமி மற்றும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதனால் தோஷங்கள், பிணிகள் நீங்குவதாக ஐதீகம்.

    கால பைரவருக்கும்,சிவனுக்கும்,வடுகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது சங்கப் பாடல் நற்றிணை மூலம் அறியலாம். இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது உண்டு. குண்டடம், திருப்பூர் மாவட்டத்தில் அருள்மிகு காலபைரவ வடுகநாதர் என்ற கோவிலுள்ளது. சங்க இலக்கியம் வடுகரை ‘கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்’ (அகம் _ களிற்றியானை. பாடல் 107) (கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகர் என்று குறிப்பிடுகிறது.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பர் ஷாலி

    கருத்துத் திரிபு செய்வது வாதம் ஆகாது. அதன் பெயர் விதண்டாவாதம்.

    அகண்ட பாரதத்தில் நாட்டமுள்ள யாரும் எந்த பாஷையையோ அல்லது எந்த மதத்தினரையோ அவரவரது பாஷைக்காகவோ அல்லது மதத்திற்காகவோ குறை சொல்லுதல் என்பது ஏற்புடையதன்று. யாரைக் குற்றம் சொன்னாலும் அதற்குக் காரண காரியம் அவச்யம். மேலும் ஒட்டு மொத்தமாக ஒரு குழுவினரை இழித்துப்பழிப்பது என்பது தீராவிடத்திற்கேயான செயல்பாடு. அது நாடகமாடும் தீராவிட டம்ளர் வசமே இருக்கட்டும்.

    ஒட்டு மொத்த தெலெகு சஹோதரர்களையும் நான் குறை சொல்கிறேன் என்பது தங்கள் கருத்துத் திரிபு.

    நான் மிகத்தெளிவாக பிரித்தெடுத்து சுட்டிக்காட்டுவது தமிழர்கள் போல நாடகமாடும் நாஸ்திகர்கள் போல நாடகமாடும் தீராவிடத்தைச் சார்ந்த வடுகக் கும்பலை. ஒட்டுமொத்த வடுகர்களையும் யாரும் இங்கோ அல்லது எங்குமோ குறை சொல்வதில்லை என்பதறியக்கடவீர். ஆனால் வடுகர் வடுகரே தமிழர் தமிழரே. தெலெகு ப்ராந்தியங்களை தெலெகுக் காரர்கள் ஆள்கையில் தமிழ்ப்ராந்தியத்தை தமிழர் ஆண்டால் அதில் வைஷம்யம் என்ன?

    தமிழர் போல நாடகமாடும் தீராவிட தீய சக்தி வடுகர்கள் (ஒட்டு மொத்த வடுகர்கள் இல்லை) வஇவர்கள் தமிழகத்திற்கு செய்த அநீதி தமிழகத்தைச் சின்னாபின்னம் செய்தமை இவை தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதி சாமர்த்யமாக தாங்கள் அதை மடை மாற்றுவது தெரிகிறது.

    தெலெகு பாஷாக்காரர்களில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் கொள்ளை பேர். ஆனால் பாருங்கள் அவர்களில் ஒருவர் கூட தீராவிட தீய சக்திகளில் இல்லை. தீராவிட தீய சக்தியின் பங்களிப்பு பரங்கிய ஆப்ரஹாமியக் காசில் தமிழகத்து கலைச்செல்வங்களை சீரழித்து தமிழகத்து நதிகளை பாழ் செய்து தமிழர்களை மொடாக்குடியர்களாக்கியதே.

    தமிழகத்திற்கு நன்மை செய்த தெலெகுவாள்ளு அந்தரு மனவாள்ளே. இப்புடு சால சந்தோஷம்வ் காதா.

  22. Avatar
    BS says:

    விஜய நகரப்பேரரசை அமைத்து இந்துமதத்தை வளர்த்து கோயில் கோபுரங்களென திராவிடக்கட்டடக்கலையை உருவாக்கிய வடுகர்களில்லாவிட்டால் இந்துமதமே இல்லை. மதுரை மீனாட்சிக்கு அக்கலையில் கோபுரங்களைக்கட்டி அவளுக்கு விமரிசையாக திருமண விழாவை நடாத்தி கள்ளழகரை ஊருக்குவ்ரவழைத்து ஆற்றில் இறங்கும் ஆரவார விழாவை நிறுவி நடாத்திய திருமலை நாயக்கர் வடுகரே. இந்துமத இரட்சகன் எனத்தன்னை நினைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் திட்டிக்கொண்டிருக்கும் பெரியவர் திரு கிருட்டிணக்குமார், ஏன் இந்துமதத்தைத் தமிழகத்தில் வளர்த்த வடுகரைக் கண்டு கொதிக்கிறார் என்ற மர்மம் எனக்கு விளங்கவில்லை.

  23. Avatar
    ஷாலி says:

    //ஆனால் வடுகர் வடுகரே தமிழர் தமிழரே. தெலெகு ப்ராந்தியங்களை தெலெகுக் காரர்கள் ஆள்கையில் தமிழ்ப்ராந்தியத்தை தமிழர் ஆண்டால் அதில் வைஷம்யம் என்ன?//

    சபாஷ்! இதைத்தான் எதிர்பார்த்தேன்.அயலார் நம்மை ஆண்ட காலத்தில் தமிழ் வீழத்துவங்கியது.தமிழரும் வீழ்ந்தனர்.வர்ணாசிரமம் தமிழனை ஆண்டது.கல்வி தமிழனிடமிருந்து பிடுங்கப்பட்டது.இறைவனும் தமிழனிடமிருந்து தள்ளிவைக்கப்பட்டான்.தமிழ் மண்ணை தமிழன் ஆண்டால்தானே இதை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும்?

    வருணாசிரம இருள் மூடி இருந்த தமிழகத்தில், செங்கதிரோன் உதித்ததுபோல் ஈரோட்டில் பிறந்தவர்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.அடிமைச் சங்கிலியினால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழனை,தனது உன்னதமான,எதற்கும் அஞ்சாத,தன்னலமற்ற உழைப்பினால் மீட்டு,உறங்கிக்கிடந்த தமிழனை தட்டி எழுப்பினார்.தமிழும் முன்னேறியது.தமிழனும் முன்னேறினான்.

    அதுவரை மேட்டுக்குடியிலிருந்த தமிழ் அரசியல் மேடைதமிழாகவும்,திருமண மண மேடைத் தமிழாகவும்,பட்டிதொட்டி எங்கும் பரவியது.இந்த மாற்றத்திற்கான காரணம் திராவிட இயக்கம்.
    தேவபாஷையை ஒழித்து நீஷபாஷையை நிலைநிறுத்தியதின் காரணமாகவே க்ருஷ்ணகுமார் வகையாறாக்களுக்கு திராவிட இயக்கத்தை ஜீரணிக்க முடியாத ஒவ்வாமை ஏற்ப்பட்டது.

    பெரியார்,திராவிட இயக்கம் இல்லையென்றால்,தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் இன்றும் க்ருஷ்ணகுமாரின் தமிஸ்கிருதத்தையே கக்கிக்கொண்டிருப்பார்கள்.”வடுக பேதம்” காட்டி திராவிடப் பெரியாரை தமிழனிடமிருந்து பிரிக்கும் சூழ்ச்சி இங்கு பலிக்காது.அய்யா! க்ருஷ்ணாஜி!
    சுமார் 45 வருடங்களுக்கு முன்பு வந்த தினமணி ஏட்டையும் இன்று வரும் தினமணியும் படித்துப்பாருங்கள்,திராவிட இயக்கத்தின் வெற்றி புரியும்.

  24. Avatar
    ஷாலி says:

    //தீராவிட டம்ளர்….. தீராவிட தீய சக்தி வடுகர்கள்……//.

    க்ருஷ்ண குமாருக்கு திராவிடம் என்றாலே தீரா..விடம் எனும் நஞ்சாக தெரிகிறது.ஆனால் அவர் ஏற்றிப் போற்றும் மகாபாரதத்தில் சோழ,பாண்டிய அரசுகளை “திராவிட” எனப் பொதுவாக குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.தமிழ்-தமிழ-த்ரமிள (திரை+இமிழ்)-த்ரமிட-த்ரவிட-த்ராவிட என்று வடமொழியில் திரிந்ததாகக் கூறப்படும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாகவே தமிழர்களை திராவிடர் என்று மகாபாரதம் கூறுகிறது.
    தமிள-தொமிள-தமெட-என்று பாலி மொழி தமிழர்களைக் குறிப்பிடுவதுடன் ஒப்பு நோக்கும்போது,தமிழர் என்பதையே வட மொழியில் ‘திராவிடர்’ என்கின்றனர் என்பது தெளிவு.
    ஆதி சங்கரர் தனது சௌந்தர்யா லஹரியில் தமிழரையே “திராவிட சிசு”என்கிறார்.

    நாலாயிர திவ்ய பிரபந்தம் ‘திராவிட வேதம்” என்று போற்றப்படுவது தேவ பாஷை சமஸ்கிருதத்திற்காகவா அல்லது நீஷ பாஷை தமிழுக்கா?

    சம்ஸ்கிருத வேதபாராயணங்கள் முடிந்த பின்னரே, ஓதுவார்கள் பஞ்சபுராணம் பாட அனுமதிக்கப்படுகிறார்கள்.இதைச் சிவனுக்கு அறிவிக்குமுகமாக, “திராவிட வேதப்ரியா’,”திராவிட கானப்ரியா”, “திராவிட வேதம் சமர்ப்பயாமி” என்று சிவாச்சாரியார்கள் கூறுகிறார்கள்.
    இங்கேயும் திராவிட வேதம் என்று கூறப்படுபவை பன்னிரு திருமுறைகளே.இவை யாவும் வட மொழியிலோ,அல்லது,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு உள்ளிட்ட மொழிகளில் அல்ல.

    ஆகவே,க்ருஷ்ண குமார் அவர்களின் வருணாஸ்வர ஆசானாகிய ஆரியர்கள், திராவிடர்கள் என்று குறிப்பிடுவது தமிழர்களையே.எனவே ஆசான்கள் போற்றிய திராவிடத்தை சீடர், ‘தீராவிட”மாகப் பார்ப்பது முறையல்ல.தமிழகத்தில் க்ருஷ்ண குமார் அவர்களுக்கு நல்ல எதிகாலம் உள்ளது.ஏனெனில் திராவிடத்தை இழித்துப் பழிக்கும் திரையுலக சீமான் அவர்கள் தனது முப்பாட்டனாக முருகப்பெருமானை கூறுவதால் திருப்புகழ் அடியார் க்ருஷ்ணகுமாரும் அவரோடு ஒன்றிணைந்து தமிழ் அகண்ட (இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்) தேசியம் பேசலாம்.
    உஞ்சவிருத்தி அரசுப்பணி முடிந்தாலும்,அடுத்த முதல்வர் சீமான் மூலம் ஆட்சிப் பணி கிடைக்கும்.

    1. Avatar
      BS says:

      எந்தத் துறைக்கு திரு கிருட்டிணக்குமாரை அமைச்சராக்குவது என்ற பிரச்சினையே முதல்வர் சீமானுக்கு வராது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சர் பதவி திரு கிருட்டிணக்குமாருக்கு அமைச்சரவை தொண்டர்களின் ஏகோபித்த முடிவால் ஒதுக்கப்படும்.

  25. Avatar
    BS says:

    //தெலெகு மற்றும் கன்னட நாஸ்திக கும்பல்களால் சூழப்பட்டுள்ள இந்த தீராவிடக் கும்பல்களைத் தகர்த்தெறிய வேண்டும் என்று ஆர்வமுள்ள தமிழ் மொழி பேசும் தமிழர்கள் பெருகி வருதலும் ……………….. //

    பெரியவர் திரு கிருட்டிணக்குமார் அவர்களே!

    மேலேயுள்ளதை எழுதியவர் நீங்கள்.

    கருநாநிதியோ, அல்லது நீங்கள் வெறுப்புமிழும் திராவிட இயக்கக் கும்பலோ, தமிழகத்தைக் கெடுத்தது என்று நீங்கள் நினைத்தால் அவர்களை அப்படியே குறிப்பிட வேண்டும். அவர்களை வடுகர், தெலுங்குமொழி, கன்னட மொழி என்று இணைத்துவிட்டு ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோரைச் சாடிவிட்டு, இல்லை என்கிறீர்கள். அது கூட பரவாயில்லை. தமிழர்கள் என்று உங்களைச் சேர்த்துக்கொண்டு எழுதுகிறீர்கள்.

    தமிழ் மொழியையே வெறுத்து சமற்கிருதத்தைத் திண்ணையில் திணித்துக் கொண்டுவரும் நீங்கள் சங்கநூல்களிலேயே பேசப்படும் வடுகர்களையும் தமிழ்மொழி தமிழ்க்கலாச்சாரம் இவற்றுக்கு பெரும் அளிப்பைச் செய்தவர்களையும் பிரித்துப்பேச உங்களுக்கு என்ன அருகதை? திரு என்று எழுதினால் கேவலம் என நினைக்கும் கூட்டத்திலிருந்து கொண்டு, மணிப்பிரவாளத்தில்தான் எழுதுவேன் என்றடம்பிடித்துக்கொண்டு எழுதும் திரு கிருட்டிணக்குமார், தமிழ் பேசும் தமிழராம்!

    என்ன வேடிக்கை!

  26. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்புடையீர்

    கருத்துத் திரிபு செய்ய ஏன் விழைகிறீர்.

    தெலெகு பாஷாக்காரர்களில் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் கொள்ளை பேர். ஆனால் பாருங்கள் அவர்களில் ஒருவர் கூட தீராவிட தீய சக்திகளில் இல்லை. தமிழகத்திற்கு நன்மை செய்த தெலெகுவாள்ளு அந்தரு மனவாள்ளே. ………… இது நான் தெளிவாகப் பகிர்ந்த கருத்து

    இங்கு விமர்சிக்கப்படுவது தமிழகத்திற்கு தீங்குசெய்த தீராவிட………. போலி நாஸ்திக………… ஆப்ரஹாமியத்துக்கு விலைபோயுள்ள………. வடுகக் கும்பலே. அதுவும் தமிழர்கள் போல நடித்துக்கொண்டு தமிழகத்தைச் சூறையாடிய தீராவிட இயக்கங்களைச் சேர்ந்த வடுக கும்பல்.

    தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தது மதுரையைச் சார்ந்த நாயக்க மன்னர்கள் மட்டுமல்லர் இன்னும் பலப்பல வடுகர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள். அவர்கள் மீதும் மற்றும் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள சேவை செய்துள்ள அனைத்து பாஷையைப் பேசும் மற்றும் மதங்களைக் கடந்து அனைத்து மதங்களைச் சார்ந்த அன்பர்களின் மீதும் எனக்கும் தமிழகத்துத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பும் மரியாதையும் உண்டு.

    மதுரை நாயக்க மன்னர்களையோ அல்லது தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து தமிழகத்திற்கு சேவை செய்த எந்த பாஷைக்காரர்களையோ மதத்தினரையோ க்ருஷ்ணகுமாரோ அல்லது வேறு யாருமோ இடித்துறைக்கவில்லை. இடித்துறைக்கப்படாதவர்களை வசைக்கு ஆளானவர்களாக ஏன் பொய்யாக சித்தரிக்கிறீர்கள்.

    தமிழகத்திற்கு தீங்கு செய்த தீரா விட வடுகர்களின் செயல்பாடுகள் தெளிவாக பட்டியலிடப்பட்டும் இருக்கிறது. அதை அப்படியே ஏன் கபள சோற்றில் முழுப்பூஷணிக்காயாக மறைக்க விழைகிறீர்கள். நீங்கள் அப்படியே மறைக்க விழைந்தாலும் விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் மறந்து விடவோ தங்கள் உரிமைகளை காலகாலத்துக்கும் இந்த போலி நாஸ்திக தீரா விட வடுகர்களிடம் இழக்கத் தயாராகவோ இல்லை.

  27. Avatar
    BS says:

    //இங்கு விமர்சிக்கப்படுவது தமிழகத்திற்கு தீங்குசெய்த தீராவிட………. போலி நாஸ்திக………… ஆப்ரஹாமியத்துக்கு விலைபோயுள்ள………. வடுகக் கும்பலே. அதுவும் தமிழர்கள் போல நடித்துக்கொண்டு தமிழகத்தைச் சூறையாடிய தீராவிட இயக்கங்களைச் சேர்ந்த வடுக கும்பல்.//

    செய்த தவறையே திரும்பச்செய்யாதீர்கள் பெரியவரே.

    திராவிட இயக்கத்தலைவர்கள் அனைவருமே தெலுங்கைத்தாய்மொழியாகவோ, கன்னடத்தைத் தாய்மொழியாகவோ கொண்டவர்கள் அல்ல. அவர்களை இன, மொழி, வாரியாகப் பிரித்துப் பார்த்துப் பேசுவது உங்கள் மனோவிஹாரத்தையே காட்டும்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சகணக்கான மக்கள் கிருத்துவர்களாகவும் இசுலாமியரகளாகவும் தமிழகத்தில் இருக்க தெலுங்கைத்தாய்மொழியாகக்கொண்டோர் மட்டுமே இவ்விரு மதத்தவராகவும் இருக்கின்றார்கள் என்று எப்படி கற்பனை பண்ணுகிறீர்கள்? கண்களைத் திறந்து சமூகத்தைப் பாருங்கள்.

    வடுகர்கள் என்ற சொல்லாடலே ஆபத்தானது. அதுவும் உங்களிடமிருந்து வருவதுதான் வேடிக்கை. பிராமணாள் வந்தேறிகள். கைபர் கணவாய் என்றால் எப்படி கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. மட சேனா தவறென்றால், எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறீர்கள். அதே உணர்வுதான் மற்றவாளுக்கும் வரும என்று சொல்லித் தெரியவேண்டுமா?

    தமிழரைப் பிளவுபடுத்தும் குரங்குச்சேட்டையை விட்டு விட்டு, நான் ஏன் திராவிட இயக்கத்தையும் அதன் முன்னாள் இன்னாள் தலைவர்களையும் வெறுக்கிறேன் என்று ஒரு நீண்ட கட்டுரையை மாபெரும தமிழரான நீங்கள் மண்டையைப்பிளக்கும் மணிப்பிரவாளத்தில் எழுதி அனுப்புங்கள். அதுவே சரியான வழி. திராவிட இயக்கம் என்பது ஒரு சமூகவியல் பொருள்; அதைப்பற்றி வெட்டியும் ஒட்டியும் எழுத எவருக்குமே உரிமையுண்டு. எனவே எவரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை. சேர, சோழ, பாண்டியர்கள் வாசிக்கக் காத்திருக்கிறார்கள். ஜமாயுங்கள்.

    மாறாக, வடுக வந்தேறிகள், கன்னடர்கள் என்று சொல்வதெல்லாம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதாகும்.

  28. Avatar
    ஷாலி says:

    அன்பு நண்பர் திரு.BS அவர்களே! திருவாளர் க்ருஷ்ணகுமார் அவர்கள் சம்பந்தமில்லாமல் தொடர்ந்து “திரா விடத்”தை தாக்கும் மர்மம் என்ன?
    இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் மிகக்குறைந்த அளவில் ஆரியத்தின் தாக்கம் உள்ள மாநிலம் தமிழ்நாடு.

    தமிழர்கள்.மொழி ரீதியாகவும்,பண்பாட்டு ரீதியாகவும் ஆரியத்தின் வன் கொடுமை தமிழகத்தில் குறைவாக உள்ளதற்கு காரணம் திராவிடப் பெரியாரின் இடைவிடா இனமானத் தொண்டு.வட மாநிலங்களில் மாட்டிறைச்சியை வைத்து மக்களுக்கு சங்கு ஊதும் ‘சங்’குகளால் தமிழகத்தில் வன்முறையை தூண்ட முடியவில்லை.காரணம் பெரியாரின் ஆரியத்திற்கெதிரான திராவிட பகுத்தறிவு சிந்தனை.

    தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆட்சியைக்குறித்து முதலில் மக்கள் மனதில் வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட, காவி மேலிடம் கட்டளை இட்டுள்ளது.முக்கியமாக,தற்போது முதல் குறி திராவிட சிந்தனையின் மீது பழி தூற்றும் வகையில் பல்வேறு கருத்துக்களை மக்கள் முன் பரப்புரை செய்ய வேண்டும்.தலைமை இட்ட அம்பாக, நம் அன்பர் இங்கு களமாடுகிறார். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.தமிழனை வைத்துத்தான் தமிழை ஒழிக்க வேண்டும்.

    சரி,திராவிட ஆட்சி சரியில்லை,முன்பிருந்த ஆரிய ஆட்சி தமிழனுக்கு என்ன கொடுத்தது.

    வடமொழியைத் தேவ மொழி என்றும்,பிராமணரை ‘நிலத்தேவர்’ (பூசுரர்) என்று உயர்த்தி, ஏனையோரை சூத்திரர் எனத் தாழ்த்தியது வருணாசிரமம்.

    பெண் ஒருத்தி கணவர் பலருக்கு மனைவியாதல், அதனை கற்பறம் என்று போற்றி புகழ்ந்து, ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ என்று சான்று வழங்கியது.

    கட்டிய கணவன் பாலிய வயதிலேயே பரலோகம் போனால்,கூடவே கன்னி கழியா இளம் விதவையை அக்கினியில் குளிப்பாட்டி அந்தர லோகம் அனுப்புவது.

    இதல்லாமல் “மதனோற்சவம்” பற்றி காளிதாசனின் படைப்புகள்,மற்றும் பழைய சம்ஸ்கிருத புராண இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.இந்த ”மதன உற்சவ” நாளில் எந்த ஆண்மகனும்,எந்த பெண் மகளும் அயலார் உள்பட எவரையும் புணர்ச்சி இன்பத்திற்காக அழைப்பு விடுக்கலாம்.இது ஒருவகையான சுதந்திரமான காதல் நாள் ஆகும்.என்று இது குறித்து எழுதுகிறார்.சிதானந்த தாஸ் குப்தா.
    Lust of Life-Ilustrated weekly Of India.3,9,may-1987.p.39.

  29. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்புடையீர்

    அது எப்படி கருத்தைத் திரித்து காமா சோமா என்று மட்டிலுமே சம்பந்தமே இல்லாமல் உங்களால் பேச முடியும்?

    என்னால் இடித்துரைக்கப்பட்டவர்கள் தீரா விட இயக்கத்தைச் சார்ந்த வடுகர்கள். அவர்கள் தமிழகத்திற்குச் செய்த தீங்கு என்னென்ன என்று தெளிவாகப் பட்டியலிட்டிருக்கிறேன். அதுவும் மிகக் குறிப்பான நிகழ்வுகளை. அது எப்படி அதில் ஒரு விஷயத்தையும் கண்டும் காணாமல்………. கடந்த ஆறு தசாப்தங்களில் தமிழகம் சீரழிந்தது இந்தத் தீராவிட வடுகர்களால் இல்லாமல் அமேரிக்கர்களால் அல்லது அராபியர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதை முறையாக விவாதிக்கலாமே.

    தமிழகம் சீரழிக்கப்படுவது தமிழர்களுக்கும் தமிழகத்தின் நலனில் ஈடுபாடுள்ளவர்களுக்கும் நிச்சயமாக விசனம் தரும். தமிழகம் சீரழிக்கப்படுவதில்……….. தீராவிட சக்திகளால் சீரழிக்கப்படுவதில்……………… உங்களுக்கு உகப்பு இருக்கிறது என்றால் அதை வெளிப்படையாக ஏன் சொல்ல தயங்குகிறீர்கள்.

    அதை அப்படியே மறைத்து சம்பந்தமே இல்லாமல் காமா சோமா என்று ஏன் கதைக்க முனைகிறீர்கள்?

    தீரா விட இயக்கத்தில் ஏமாளிகளான தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களுக்கும் தெரியும். அதனால் தானே விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் தமிழர்களைப் போல நடித்து தமிழகத்தைத் தொடர்ந்து சீரழித்து வரும் தீரா விட வடுகர்களை எதிர்த்து அதில் உள்ள தமிழர்களை தீரா விட ஊழல் சமுத்ரத்திலிருந்து மீட்க முனைகிறார்கள்.

    நீங்கள் நூறு முறை திரும்பத் திரும்ப பொய் சொன்னாலும் யாரும் இங்கு ஒட்டு மொத்த வடுகர்களை எதிர்க்கவில்லை என்று இங்கு கருத்து வாசிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். எதிர்க்கப்படுபவர்கள் தீரா விட இயக்கத்தைச் சார்ந்து தமிழர்களை ஆளத்துடிக்கும்……….. தமிழர்களைப் போல நடிக்க முனையும் வடுகர்கள் என்று வாசிப்பவருக்குத் தெளிவாகத் தெரியும்.

    தமிழகத்தின் நலனில் ஆர்ஜவம் உள்ள தமிழர்கள் வடுகர்கள் மார்வாடிகள் கன்னடிகர்கள் …………. இவர்களில் உள்ள ஹிந்துக்கள் இஸ்லாமியர் க்றைஸ்தவர் ………….. ஆகிய அனைவரும் தமிழகத்து நலனுக்காக நிச்சயம் பாடுபடுகையில் அவர்களது சேவை தமிழர்களால் நிச்சயம் பாராட்டவும் படும்.

    ஆனால் தமிழகத்தை தமிழர் மட்டிலும் ஆளவே கூடாது என்று நீங்கள் அடாவடி செய்வது ஏன் என்று பகிரலாமே. தமிழர்கள் தமிழகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக மட்டிலும் இருக்க வேண்டும் என்று நீங்கள் மனப்பால் குடிப்பது ஏன் என்று பகிரலாமே. தமிழர்கள் தீரா விட வடுக கும்பலுக்கும் …………… அதன் ஊழலுக்கும்……………. அதன் போலி நாஸ்திக வாதத்துக்கும் சாமரம் வீசி அந்த தீய சக்திக்குத் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்று பகிரலாமே

    மடசேனா…………வந்தேறி………… இஸ்லாம்………….க்றைஸ்தவம்…………. என்று விவாதத்தை மடை மாற்றாமல்……………

    கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழகம் சீரழிக்கப்பட்டு வருவதில் தீரா விட இயக்கத்தைச் சார்ந்த தமிழர்களைப் போல நடிக்கும் வடுகர்களுக்குப் பங்குண்டா இல்லையா என்று ஃபோகஸ்டாக விவாதிக்க விழையலாமே. தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருளை மடைமாற்றி சலிப்படைய வைக்கிறீர்கள்.

    தமிழர்களை தீரா விட போலி நாஸ்திக வடுகர்களுடைய சேவகர்களாக மாற்ற முயலும் குரங்கு சேட்டையை விட்டு விட்டு தமிழகம் சீரழிவதைப்பற்றியும் அதை தடுத்து நிறுத்தி தமிழகத்தை உண்மையான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல ஆக்க பூர்வமாக விதிவிலக்காக சிந்திக்க முனையுங்கள்.

    1. Avatar
      BS says:

      //தீரா விட இயக்கத்தில் ஏமாளிகளான தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களுக்கும் தெரியும். அதனால் தானே விழிப்புணர்வு பெற்ற தமிழர்கள் தமிழர்களைப் போல நடித்து தமிழகத்தைத் தொடர்ந்து சீரழித்து வரும் தீரா விட வடுகர்களை எதிர்த்து அதில் உள்ள தமிழர்களை தீரா விட ஊழல் சமுத்ரத்திலிருந்து மீட்க முனைகிறார்கள்.//

      யாரந்த தமிழர்கள்? நீங்களா? இல்லை…உங்களோடு சேர்ந்து சமற்கிருதத்தையும் ஹிந்தியையும் தமிழகத்தில் திணிக்கும் இந்துத்வாவினரா? தமிழக கிராமங்களில் கிராமிய வழிபாடுகளை அழித்து குத்துவிளக்குப்பூஜையையும் வேதமந்திரங்களையும் ஹோமங்களை பரப்பும் நீங்களா அத்தமிழர்? யாரவர்கள்?

      வடுகர்கள் வந்தேறிகள் என்பது தற்போதையை உபாயம். முன்பு தோன்றவில்லை. நீரில் மூழ்கிக்கொண்டிருப்பவன் எதையாவது பிடித்துக் கரையேறப்பார்ப்பான். அதைப்போல இதுவாவது பலிக்காதா என்று எடுக்கப்பட்ட ஆயுதம்.

      அச்சொல்லாடலே கேடானது என்று விளக்கி விட்டேன் வடுகர்கள் என்று நீங்கள் எவரைக்குறிப்பிட்டாலும் அஃது எல்லாரையுமே குறிக்கும். இவரைத்தான் சொன்னேன்; அவர்களைச்சொல்லவில்லை என்று சொல்ல முடியாது.

      தமிழ் என்பது அளவுகோல் என்றால், திரு கிருட்டிணக்குமாரும் அவர் இந்துத்வா சகாக்களும் அவுட். ஏனென்றால், சமற்கிருதத்துக்கு வால்பிடிக்கும் கூட்டம் எப்படித் தமிழர்? ஆக, தமிழர் என்ற நாடகம் போட்டாலும் நம்பும்படி போடுங்கள் கிருட்டிணக்குமார். திருப்புகழைத்தவிர வேறேந்த தமிழ் நூலாவது படித்ததுண்டா? திருப்புகழ் என்ற சொல்லில் வரும் திரு வை மதித்ததுண்டா? தமிழை ஒழுங்காக எழுத முடியுமா?

      ஆனால், வடுகர்கள் என போலி நகையாடப்படுபவர்கள் தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு இவற்றிலெல்லாம் அக்கறை வைத்தவர்கள் என்பது பொய்யில்லை என்று டாக்டரின் இக்கட்டுரையைப்படித்தாலே தெரியும்.

  30. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ தமிழரைப் பிளவுபடுத்தும் குரங்குச்சேட்டையை விட்டு விட்டு, \\

    ஹா ஹா ஹா………… என்ன தீரா விட குரங்கு சேட்டை

    தமிழர்களிடையே தமிழர்கள் போல நடித்து தமிழர்களை ஏமாளிகளாக்கி அவர்களை ஆட்சி செய்து தமிழகத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கிய தீரா விட வடுகர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிக் காண்பிப்பது எப்படி தமிழரைப் பிளவுபடுத்துதல் ஆகும். கடலையையும் களிமண்ணையும் பிரித்து எடுப்பது எப்படி கடலையைப் பிளப்பது ஆகும்?

    தமிழகத்தில் மார்வாடிகளை மார்வாடிகள் என்று சொல்கிறோம் மலையாளிகளை மலையாளிகள் என்று சொல்கிறோம் பஞ்சாபிகளை பஞ்சாபிகள் என்று சொல்கிறோம்…………….தீரா விட தீய சக்தியின் ஆணி வேராக இருக்கும் ……….தமிழகத்தைச் சீரழித்த தீரா விட வடுகர்களை வடுகர்கள் என்று சொன்னால் அதில் என்ன தப்பு.

    தமிழகத்தில் வாழ்ந்து தமிழகத்தை வளம் செய்யும் மார்வாடிகளோ மலையாளிகளோ பஞ்சாபிகளோ தமிழகத்துக்குச் சேவை செய்தாலும் தாங்கள் தமிழர்கள் என்று நாடகமாடுவதில்லையே. அப்படியிருக்கையில் வாஸ்தவத்தில் வடுகர்களாகிய தீரா விடத்தைச் சார்ந்த வடுகர்கள் தமிழர்களாக நாடகமாடி தமிழனை அடிமை செய்து வருவதை ………….. தமிழர்கள் அடையாளம் கண்டு…………தமிழகத்தைத் தமிழர்களே ஆள வேண்டும் என்று சொல்வது தீரா விட சக்திகளுக்கு ஏன் கசக்கிறது.

    தமிழகத்தைத் தமிழர் ஏன் ஆளக்கூடாது?

    தமிழர்கள் எதற்காக பரங்கிய ஆப்ரஹாமிய காசுக்கு விலை போகிய போலி நாஸ்திக தீரா விட தீய சக்தியாகிய வடுகர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்?

  31. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ தமிழனை வைத்துத்தான் தமிழை ஒழிக்க வேண்டும். \\

    டட்டடா டட்டடா டட்டடா………….

    அன்பர் ஷாலி அவர்களே!!!!!!!!தீரா விட தீய சக்திகளாகிய வடுகர்களால் தமிழர்கள் இது வரை சீரழிக்கப்பட்டு வந்துள்ளார்கள். அதைத் தமிழர்கள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார்கள்.

    காசுக்கு விலை போகிய தீரா விட தீய சக்தியாகிய வடுகர்களை தமிழர்கள் ஒதுக்க முனைவது என்பது எப்படி தமிழனை வைத்துத் தான் தமிழை ஒழிப்பது ஆகும்.

    தமிழகத்தில் ஆறு ஏரி குளம் குட்டை இதையெல்லாம் காலி செய்து மணல் கொள்ளை அடித்து தமிழகத்தைப் பாலை வனம் ஆக்கியவர்கள் யார்?

    தமிழனை மொடாக்குடியனாக்கி தமிழக சர்கார் விக்ரயம் செய்யும் சாராயப்பணத்தால் தமிழ்ச்சமுதாயத்தை சாராயத்தால் அடித்த பிண்டமாக மாற்றியது யார்?

    தமிழனின் கட்டுமானத் திறமையைப் பறைசாற்றும் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்று மணல் வீச்சடித்து அதில் உள்ள கலை நுட்பம் வாய்ந்த காலத்தால் அழியாத சிற்பங்களை சிதைத்து நொறுக்கும் ஈனத்தனத்தைச் செய்து வருவது யார்?

    கோவில்களில் மணல்வீச்சின் மூலம் அதில் உள்ள காலத்தால் அழியாத கல்வெட்டுக்களை சிதைத்து அழித்தொழிக்கும் ஈனத்தனத்தையும் காலத்தால் அழியா கற்றளிகளை காசுக்காக அழித்தொழித்து மார்பிள் தரைகளை செதுக்கும் ஈனத்தனத்தைச் செய்யும் அற்பர்கள் யார்?

    தன் வாழ்நாள் முழுதும் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று வசவிட்டு……….. தமிழ்ப்புலவர்களை இழித்துப்பழித்து……… தமிழர்களை முட்டாள்கள் என்று அவமதித்து…….திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்று ஒரு தமிழிலக்கியம் விடாது அனைத்து தமிழிலக்கியங்களையும் இழித்துப்பழித்த ………..ஆதிக்க ஜாதி இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அடிப்பொடிகளே இத்தனை ஈனத்தனங்களையும் தொடர்ந்து செய்து தமிழகத்தைச் சின்னாபின்னம் செய்து வருகின்றனர் என்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.

    ஆகையால் தீரா விட தீய சக்திகளைத் தமிழர்கள் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதனை அறியக்கடவீர்.

  32. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \\ சரி,திராவிட ஆட்சி சரியில்லை,முன்பிருந்த ஆரிய ஆட்சி தமிழனுக்கு என்ன கொடுத்தது. \\

    அன்பர் ஷாலி, சரி தீரா விட ஆட்சி சரியில்லை. சரி தமிழகத்தில் எப்போது ஆரிய ஆட்சி இருந்தது என்று விளக்கலாமோ?

    தீரா விடமும் வேண்டாம். ஆரியமும் வேண்டாம்.

    சரி தமிழகத்தை தமிழர் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதனை ஏன் உங்கள் தோஸ்துக்கு கசக்கிறது.

    தமிழகத்தைத் தமிழன் ஆள்வதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?

  33. Avatar
    ஷாலி says:

    //கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழகம் சீரழிக்கப்பட்டு வருவதில் தீரா விட இயக்கத்தைச் சார்ந்த தமிழர்களைப் போல நடிக்கும் வடுகர்களுக்குப் பங்குண்டா இல்லையா என்று ஃபோகஸ்டாக விவாதிக்க விழையலாமே.//

    விழையலாம்! கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகம் திராவிடத்தால் சீரழிக்கப்பட்டு வருவதாக ஆரிய அண்ணன் கூறுகிறார்.அதையும் பார்ப்போம்.நமது நாட்டில் 29 மாநிலங்களும்,7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.இந்த மாநிலங்களை பாஜக உள்பட பல கட்சிகள் ஆட்சி செய்கின்றன.தொடர்ந்து அறுபது ஆண்டுகள் சீரழிவு ஆட்சி நடத்தியிருந்தால்,மக்கள் வளர்ச்சி,மாநில வளர்ச்சி விகிதங்களில் தமிழ் நாடு கடைசி மாநிலமாகவே பின் தள்ளப்பட்டு இருக்கும்.ஆனால் உண்மைகள் ஆரிய அண்ணன் சொல்வது போல் இல்லை.

    1.States of India ranked according to economic freedom as of 2013.TAMIL NADU –0.54=1 st Rank.
    2.Second largest economy in india with a GDDP 9767 billion (US$150 billion) in 2014–15=2 nd Rank.
    3.Indian states ranking by household size.Tamil nadu 3.5.=1 st.Rank.
    4.Indian states ranked by number of vehicles.Tamil nadu.257 per Thousand.= 3 rd.Rank.
    5.Indian states ranking by television ownership percentage of household.87 =3 rd.Rank
    6.Indian states ranking by institutional delivery of children in Hospitals.90 =3 rd.Rank
    7 States of India by tax revenues in Tamil nadu Rs.2734 billion (US$41 billion).4 th Rank.
    8.Indian states ranking by media exposure.Tamil nadu,Male.96.Female.92. = 4 & 5 Rank.
    9.List of Indian states by life expectancy at birth.Tamil nadu.66.2 = 5 th Rank.
    10.Indian states ranking by Safe drinking water.Tamil nadu.92.5% = 6 th Rank.
    11.Indian states ranking by families owning house.Tamil nadu.58.5% = 7 th Rank.
    12.List of Indian states by Child Nutrition in Tamil nadu.63.7 = 7 th Rank.
    13.Indian states ranked by unemployment in Tamil nadu.32/Thousand. = 8 th Rank.
    14.Indian states and territories ranked by poverty.Tamil nadu.11.28% = 9 th Rank.
    15.Indian states and territories ranked by safety of women.Tamil nadu.4.41 = 10 th Rank.

    இது ஒரு சிறிய உதாரணம்தான்.மற்றபடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆட்சியாளர்களை விட அதிகமான மக்கள் நல பணி செய்து மக்கள் நல அரசாக விளங்குவது கழக ஆட்சிகள் மட்டுமே.ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து மரணம் வரை தொடர்ந்து அரசு துணையாக வருகிறது..பால்வாடி இலவசம்,பள்ளி இலவச புத்தகம்,பஸ் பாஸ் இலவசம்,சைக்கிள் இலவசம்,கணினி இலவசம்,முதல் பட்டதாரிக்கு மேற்படிப்பு இலவசம்,திருமண பெண் படித்திருந்தால் திருமண உதவித் தொகை,பட்டதாரிப் பெண்ணுக்கு கூடுதல் உதவித் தொகை.

    தங்கத்தாலி,கர்ப்பிணிப்பெண்ணுக்கு இலவச மருத்துவம் மற்றும் உதவித்தொகை,இலவச காப்பீட்டு மருத்துவம் மற்றும்108 இலவச ஆம்புலன்ஸ் சேவை. அனைத்து ஏழைகளுக்கும் இலவச அரிசி, மலிவு விலை உணவுப்பொருட்கள்.மற்றும் விலையில்லா ஆடு,மாடு,தொலைக்காட்சி,மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி,முதியோர் ஊதியம்.இப்படி ஏராளமான மக்கள் நல சேவை செய்வது மக்களுக்கான மக்கள் அரசாக விளங்குவது கழக ஆட்சிகளே.

    கழக ஆட்சிகளுக்கு கறையாக உள்ளது மது.வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்பு எந்த கழக ஆட்சி அமைந்தாலும் மது அரக்கனுக்கு பூட்டு போடப்படும் என்பது உறுதி.

Leave a Reply to BS Cancel reply

Your email address will not be published. Required fields are marked *