நேபாளத்தில் கோர பூபாளம் !

This entry is part 6 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

 

இமயத் தொட்டிலில் ஆட்டமடா !

இயற்கை அன்னை சீற்றமடா  !

பூமாதேவி சற்று தோள சைத்தாள் !

பொத்தென வீழும் மாளிகைகள்

பொடி ஆயின குடி வீடுகள் !

செத்து மாண்டவர் எத்தனை பேர் ?

இமைப் பொழுதில்

எல்லாம் இழந்தவர் எத்தனை பேர் ?

கட்டிய இல்லம், சேமித்த செல்வம்

பெட்டி, படுக்கை, உடுப்பு,

உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !

அந்தோ !

வசந்த கால வாடைக் காற்றில்,

அழும் சேய்க ளோடு

தெரு மேடையில் தூங்குகிறார் !

வானமே கூரை !

சுவரில்லை ! கதவில்லை !

போர்த்திக் கொள்ள

துணி யில்லை !

மானம் போனது, மதிப்பு போனது !

தானம், தர்மம் நாடி

வானம் நோக்கித் துதிக்கிறார் !

கடவுளுக்கு

கண்ணில்லை ; காதில்லை !

கருணையும் இல்லை !

எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்

உயிரொடு !

இடிந்த வீடுகள் புதை காடாயின ! 

எங்கெங்கு வாழினும் 

இன்னலடா!

ஏழு பிறப்பிலும் தொல்லையடா !

சூழ்வெளி மட்டும் 

பாழாக வில்லை யடா!

ஆழ் பூமிக் குள்ளும் 

புற்று நோய் தொற்றுமடா !

  

++++++++++++++

Series Navigationதாய்மொழி வழிக்கல்விஇமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *