பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1

author
0 minutes, 19 seconds Read
This entry is part 4 of 8 in the series 24 மார்ச் 2019

மொழிபெயர்ப்பு ராஜசங்கர்

“மகா மனிதன்”.தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.இவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.மற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, இஸ்லாமியத்தின்படி கொல்லப்பட்டு அழிக்கப்படுவதே விதியாகிவிட்டதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு, குறிப்பாக தலித் தலைவர்களுக்கு, என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.
இவர் பற்றி மேலும் அறிய:
தமிழ் பேப்பர் தளத்தில்[1]||கூட்டாஞ்சோறு தளத்தில்[2]||விக்கிப்பீடியா தளத்தில்[3]கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே:
ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்[3]வரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுத் தெரிந்தவர்களிடம் பாடம் கற்றுக் கொள்வோம். இனியாவது.இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [குறள்: 822]


என் அன்பிக்குரிய [பாகிஸ்தான்] பிரதமர் அவர்களுக்கு,மிகுந்த வேதனை கொண்ட இதயத்தினாலும்  கிழக்கு வங்காளத்திலுள்ள [தற்போதைய பங்களாதேசம்] பின் தங்கிய இந்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் பணித்திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தினாலும் உங்களின் அமைச்சரவையில் இருந்து விலகவேண்டிய முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை எடுக்க இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் நிலவி வரும் சூழல் பற்றி விளங்கச் சொல்லுவதே சரியானதாக இருக்கும்.1. என்னுடைய பதவி விலகலின் சமீபத்திய மற்றும் நெடுநாள் காரணங்களைச் சொல்லுவதற்கு முன் முஸ்ஸீம் லீக் உடன் இணைந்து பணியாற்றிய வேளைகளில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுவது உபயோகமாக இருக்கும்.சில முக்கிய முஸ்ஸீம் லீக் பிரமுகர்கள் 1943 பிப்ரவரியில் என்னைச் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் வங்காள சட்டசபையில் மூஸ்லீம் லீக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டேன். 1943 மார்ச்சில் பஸல் ஹக் அமைச்சரவை கவிழ்ந்த பிறகு இருபத்தியோரு பட்டியல் வகுப்பு எம் எல் ஏ க்களுடன் நான் லீக்கின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக இருந்த காஜா நஜிமுதீன் அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டேன். காஜா நஜிமூதீன் தன்னுடைய அமைச்சரவையை 1943 ஏப்ரலில் அமைத்தார்.மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளை அமைச்சரவையில் சேர்ப்பது, வருடம் ஐந்து லட்சம் ரூபாயை பட்டியல் வகுப்பினரின் கல்விக்காக ஒதுக்குவது, பாகுபாடில்லாத மத பிரதிநிதித்துவத்தை அரசின் பணியிடங்களுக்கு அமல்படுத்துவது என்ற நிபந்தனைகளுடன் கூடியது எங்களுடைய ஒத்துழைப்பு ஆகும்.2. இந்த நிபந்தனைகளைத் தவிர, முஸ்ஸீம் லீக்குடனான ஒத்துழைப்புக்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன.முதலாவதாக வங்காள முஸ்லீம்களின் பொருளாதார நோக்கங்கள் பட்டியல் வகுப்புடன் பெரும்பாலும் ஒத்துப்போயின. முஸ்லீம்கள் பொதுவாக விவசாயிகளாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரும் இருந்தனர். முஸ்லீம்களின் ஒருபிரிவினர் மீனவர்களாக இருந்ததைப்  போலவே பட்டியல் வகுப்பினரின் ஒரு பகுதியினரும் இருந்தனர்.இரண்டாவதாக, பட்டியல் வகுப்பினரும் முஸ்ஸீம்களும் பொதுவாகவே கல்வியில் பின் தங்கி இருந்தனர். லீக்குடனும் அமைச்சரவையுடனும் என்னுடைய ஒத்துழைப்பு, மிகப்பெரிய அளவில் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதன் விளைவாக பெரும்பகுதி வங்காளர்களுக்கு இரண்டு தரப்பிலும் இருந்து பலனை கொண்டுவரும்.கூடவே சிறப்புச் சலுகைகள் பெற்ற சக்தி வாய்ந்தவர்களின் அதீத உரிமைகளையும் அளவற்ற வசதியையும் குறைப்பதுடன் மதரீதியான அமைதியையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் தான் காரணம்.இங்கு முதலமைச்சர் காஜா நஜிமுதீன், மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளைச் சேர்த்ததுடன் என்னுடைய சமூகத்தில் இருந்து மூன்று சட்டமன்றச் செயலர்களையும் சேர்த்துக்கொண்டார் என்பது சொல்லப்படவேண்டும்.
ஸுஹ்ரவார்தி அமைச்சரவை

direct_action_day_bangladesh_islam

[4]3. 1946 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு ஹெச். எஸ். ஸுஹ்ரவார்தி, லீக் சட்டமன்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பின் 1946 ஏப்ரலில் அமைச்சரவையை அமைத்தார். சட்டமன்றத்தின் ஒரே ஒரு பட்டியல் வகுப்பு உறுப்பினராக கூட்டுத் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.ஸுஹ்ரவார்தி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாள் தான் கல்கத்தாவில் லீக்கின் நேரடி நடவடிக்கை நாளாக (Direct Action Day[5])  அனுசரிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது யூதர்கள் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்ட் போன்ற கொடூரத்தில் முடிந்தது.லீக்கின் அமைச்சரவையில் இருந்து நான் விலகவேண்டும் என இந்துக்கள் கோரினார்கள். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. எனக்குத் தினமும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஆனால், நான் என்னுடைய நிலையில் உறுதியாக இருந்தேன். கூடவே எங்களுடைய பத்திரிக்கையான ஜாக்ரனில் பட்டியல் வகுப்பினரை காங்கிரஸுக்கும் முஸ்ஸீம் லீக்குக்கும் இடையில் நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையை என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் வெளியிட்டேன்.கடும் கோபத்தில் இருந்த இந்துக்கள் கூட்டத்தில் இருந்து என்னுடைய உயர்சாதி இந்து பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நான் காப்பாற்ற பட்டேன் என்பதையும் இந்த இடத்தில் தாழ்மையுடன் சொல்லவேண்டும்.[ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த] கல்கத்தா கொடூரம் 1946 அக்டோபரில் நாகோளி கலவரத்தால் தொடரப்பட்டது. அங்கு பட்டியல் வகுப்பு இந்துக்கள் உட்பட நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் பல இந்துக்கள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்பட்டனர். என்னுடைய வகுப்பைச் சேர்ந்த பலர் உயிரை இழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். இந்த கலவரங்கள் நிகழ்ந்த உடன் டிப்பேரியா மற்றும் பெனி பகுதிகளுக்குச் சென்று கலவரம் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டேன்.இந்துக்களின் சொல்லொணாத் துயரங்கள் என்னைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது; இருந்த போதிலும் முஸ்ஸீம் லீக்குடன் என்னுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்தேன். கல்கத்தா கலவரங்கள் நிகழ்ந்தவுடன் ஸுஹ்ரவார்தி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முயற்சியினால் மட்டுமே, நான்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மற்றும் நான்கு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களின் ஆதரவினாலும் காங்கிரஸ் வென்றிருக்கவேண்டிய சட்டமன்றம் காப்பாற்றபட்டது, இல்லையேல் முஸ்ஸீம் லீக் அமைச்சரவை தோற்கடிக்கப் பட்டிருக்கும்.4. 1946 அக்டோபரில் எதிர்பாராத விதமாக எனக்கு ஸுஹ்ரவார்தியிடம் இருந்து இந்திய இடைக்கால அமைச்சரவையில் பங்கு பெறும் அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகும், என்னுடைய முடிவைச் சொல்ல ஒரு மணிநேரமே தரப்பட்டதாலும், நான் அமைச்சரவையில் பங்கு பெறுவதை ஒப்புக்கொண்டேன், கூடவே என்னுடைய தலைவர் பி. ஆர். அம்பேத்கர் என்னுடைய முடிவை நிராகரித்தால் நான் அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். நல்லவேளையாக அம்பேத்கர் தன்னுடைய அனுமதியை லண்டனில் இருந்து தந்தி மூலம் அனுப்பினார்.தில்லிக்கு போய் சட்ட உறுப்பினராகப் பதவி ஏற்கப் போகும் முன் அப்போதைய கிழக்கு வங்காள முதல் அமைச்சரான ஸுஹ்ரவார்தியைச் சந்தித்து அமைச்சரவையில் என்னுடைய இடத்தில் இரண்டு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இரண்டு சட்டமன்றச் செயலர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நியமிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்தேன்.

direct_action_day_bangladesh_islam_02

5. 1946ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இடைக்கால அமைச்சரவையில் சேர்ந்தேன். ஒரு மாத காலத்திற்குப் பிறகு கல்கத்தாவிற்கு சென்றேன். ஸுஹ்ரவார்தி என்னிடம் கிழக்கு வங்காளத்தில் சில பகுதிகளில் மத மோதல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக பட்டியல் வகுப்பினரான நாம சூத்திரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கோபால்கன்ஜ் துணைப்பிரிவில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸுஹ்ரவார்தி என்னிடம் அந்த பகுதிகளுக்குச் சென்று முஸ்ஸீம்களுகளிடமும் நாமசூத்திரர்களிடமும் பேசுமாறு கூறினார்.உண்மை என்னவென்றால் திருப்பி தாக்க ஆயுத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் நாமசூத்திரர்கள் செய்திருந்தினர். நான் ஒரு டஜன் பெரிய கூட்டங்களில் பேசினேன். அதன் விளைவாக நாமசூத்திரர்கள் திருப்பிதாக்கும் எண்ணத்தை கைவிட்டனர். பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டது.6. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேய அரசு ஜூலை மூன்றாம் நாள் அறிக்கையின் மூலம் இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவுகளை வெளியிட்டார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறிப்பாக முஸ்ஸீம் அல்லாத பகுதிகள் அதிர்ந்தன.உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், நான் எப்போதுமே முஸ்ஸீம் லீக்கின் பாகிஸ்தானிய கோரிக்கையை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி வந்தேன். நேர்மையுடன் சொல்லவேண்டுமானால் இந்தியா முழுவதிலும் மேல்வர்க்க இந்துக்களின் ஆதிக்கத்தனத்திற்கு எதிரான முஸ்லீமகளின் வருத்தங்கள் நியாயமானவை என்று எண்ணிய போதிலும், என்னுடைய கருத்துப்படி பாகிஸ்தானின் உருவாக்கம் இந்த மதப் பிரச்சினையை எப்போதும் தீர்க்காது என நம்பினேன்.இந்தப் பிரிவினையின் தவிர்க்க முடியாத விளைவாக ஒட்டு மொத்த நாடும் தொடர்ந்த அல்லது முடிவேயிராத வறுமை, கல்வியின்மை, கூடவே கீழ்நிலையில் இருக்கும் இரு நாடுகளின் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவர்கள் என்று எண்ணினேன். கூடவே பாகிஸ்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பின் தங்கிய மற்றும் முன்னேற்றம் அடையாத நாடாகவும் மாறுவிடும் என நினைத்தேன்.

லாகூர் தீர்மானம்7. இப்போது பாகிஸ்தானை ஒரு தூய்மையான இஸ்ஸாமிய ஷரியத் சட்டத்தின் வழியும் இஸ்ஸாமிய வழிமுறைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யப்படும் நாடாக மாற்ற செய்யப்படும் முயற்சிகள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். முஸ்ஸீம் லீக், லாகூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்குப் பிறகு முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் செய்யும் செயல்களோடு இது ஒத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட பகுதிகள்,. நிலபரப்பு ரீதியாக தொடர்ச்சியாக முஸ்ஸீம் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுத்  தேவைப்பட்டால் நிலப்பரப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, தனி நாடுகளாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் அமையும்படி பிரிக்கப்படவேண்டும்.. அமல்படுத்த கண்டிப்பாகத் தேவைப்படும் உறுதிகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு அவர்களின் மத, பண்பாட்டு, அரசியல், நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான ஷரத்துகள் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தரப்படவேண்டும்.மேற்கண்ட இரண்டு ஷரத்துகளின்படி,அஅ. வடமேற்கு மற்றும் கிழக்கு முஸ்ஸீம் பகுதிகள் இரண்டு தனிநாடுகள் ஆக அமைக்கப்படும்.அஆ. அந்த இரண்டு நாடுகளும் சுதந்திரமாகவும் இறையாண்மை உடனும் இருக்கும்அஇ. அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு கூடவே வாழ்க்கையின் எல்லா நிலைகளில் இருக்கும் தேவைகள் மதிக்கப்படும்

jogendra-nath-mandal-and-dr_-ambedkar

[6]அஈ. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்குத் தெளிவான ஷரத்துகளும், சிறுபான்மையினரின் ஆலோசனையும் அளிக்கப்படும்என்பதை விளக்கின.இது என்னுடைய நம்பிக்கையை இந்தத் தீர்மானத்தின் மேலும் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் மேலும் உறுதிப்படுத்தியது. கூடவே முகம்மது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 தேதி அரசியல் நிர்ணைய சபை உறுப்பினர் என்ற வகையில் செய்த அறிவிப்பின் மூலம் இந்துக்களும் முஸ்ஸீம்களும் சரிசமாக மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எனவும் உறுதிப்படுத்தினார்.அப்போது மக்களை முழு உரிமை உடைய முஸ்ஸீம்கள் எனவும் இஸ்ஸாமிய நாட்டின் பாதுகாப்பிலும் முஸ்ஸீம்களின் பாதுகாப்பிலும் இருக்கும் திம்மிக்கள் எனவும் பிரிக்கவேண்டிய கேள்வியே ஏற்படவில்லை.இந்த எல்லா வாக்குறுதிகளும் எல்லா நிலைகளும் உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடைய அனுமதியுடனும் முகம்மது அலி ஜின்னாவின் விருப்பங்களுக்கும் எதிராகவும் சிறுபான்மையினர் [பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள்] கொடுமைகளும் அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்.
வங்காளப் பிரிவினை8. இந்த விஷயத்துடன் நான் வங்காளப் பிரிவினையை எதிர்த்தேன் என்பதும் இந்த இடத்தில் சொல்லப்படவேண்டும்.  இதன் தொடர்பாகப் பரப்புரையை தொடங்கிய போது எல்லா பக்கங்களில் இருந்தும் பெருவாரியான எதிர்ப்பை மட்டுமல்லாது சொல்லமுடியாத அவமானம், இழிசொற்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.மிகுந்த வேதனையோடு இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் இருந்த முப்பத்திரண்டு கோடி இந்துக்களும் என்னை புறக்கணித்து என்னை இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் எதிரி என்று சொல்லிய நாட்களை நினைவுகூர்கிறேன். ஆனால் என்னுடைய பாகிஸ்தானிய விசுவாசம் இவற்றால் பாதிக்கப்படவோ அல்லது மாறவோ இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று பதிலளித்த வங்காளத்தின் 70 லட்சம் பட்டியல் வகுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அவர்கள் எனக்கு மாறாத ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்கள்.

bangladesh-1971-hindu-circumcised

[2]
9. ஆகஸ்டு 14, 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு பின் நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சரவையை அமைத்தீர்கள். அதில் நான் ஓர் அமைச்சராக பதவியேற்றேன். அதே போல் காஜா நஜிமூதீன் மேற்கு வங்களாத்தில் தற்காலிக அமைச்சரவையை அமைத்தார். ஆகஸ்ட் 10 இல் நான், காஜா நஜிமூதீன் கராச்சியில் இருந்தபோது பேசி, அவருடைய அமைச்சரவையில் இரண்டு பட்டியல் வகுப்பினரை அமைச்சர்களாக சேர்க்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை இன்னும் சில காலங்களில் செய்து விடுவதாக உறுதியளித்தார். ஆனால், அதன்பின்பு நீங்கள், காஜா நஜிமூதீன், மற்றும் இப்போதைய முதல் அமைச்சர் நூருல் அமீன் ஆகியோருடன் இதன் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏமாற்றமளிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.எப்போது எனக்கு காஜா நஜிமூதீன் எதாவது ஒரு [வலுவற்ற] காரணத்தைச் சொல்லி இந்த விஷயத்தை தவிர்க்கிறார் என்று புரிந்ததோ அப்போது நான் பொறுமையிழந்து எரிச்சலடைந்தேன். மேலும் பாகிஸ்தானின் முஸ்ஸீம் லீக் தலைவருடனும் மேற்கு வங்களா முஸ்ஸீம் லீக்கின் தலைவருடனும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினேன். கடைசியாக இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
நீங்கள் இந்த விஷயத்தை காஜா நஜிமூதீனுடன் என் முன்னால் உங்களுடைய வீட்டில் பேசினீர்கள். காஜா நஜிமூதீன் ஒரு பட்டில் வகுப்பு உறுப்பினரை தனது அமைச்சரவையில், தான் டாக்கா திரும்பியவுடன் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இந்த விஷயத்தில் காஜா நஜிமுதீனின் உறுதிமொழி மீது எனக்கு சந்தேகம் இருந்ததால் ஒரு காலரீதியான வரையறை செய்யுமாறு கேட்டேன். ஒரு மாதத்திற்குள் காஜா நஜிமுதீன் இதில் செயல்படவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நான் பதவி விலகிவிடுவேன் என்று வலியுறுத்தினேன். நீங்கள் மற்றும் காஜா நஜிமுதீன் இருவரும் இதற்கு ஒப்புக்கொண்டீர்கள். ஆனால் கடவுளே, நீங்கள் உண்மையோடு அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.
காஜா நஜிமூதின் தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. நூருல் அமீன், கிழக்கு வங்காள முதலமைச்சர் ஆன பின்பு இன்னும் ஒரு முறை இந்த விஷயத்தை அவருடன் பேசினேன். அவரும் முன் போல் பழைய தவிர்க்கும் செயல்களையே செய்தார். அப்போது நான் மீண்டும் அந்த விஷயத்தை உங்களின் 1949 டாக்கா பயணத்திற்கு முன் உங்களிடம் கொண்டு வந்தேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக சிறுபான்மையினர் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என உறுதியளித்தீர்கள். கூடவே அந்தப் பதவிக்கு இரண்டு அல்லது மூன்று பெயர்களைக் கேட்டீர்கள்.உங்களுடைய சொல்லிற்கு மதிப்பளித்து நான் கிழக்கு வங்காளத்தில் பெடரேஷன் குழுமத்தில் இருந்து மூன்று பெயர்களை உங்களுக்கு அனுப்பினேன். பின்பு அதைப்பற்றி நீங்கள் டாக்காவில் இருந்து திரும்பிய பின்பு விசாரித்தபோது, நீங்கள் வெறுமனே “நூருல் அமின் தில்லியில் இருந்து வரட்டும்” என பதிலளித்தீர்கள். சில நாட்களுக்குப் பின்பு கேட்ட போதும் நீங்கள் அந்த விஷயத்தை தவிர்த்தீர்கள். நான் இந்த விஷயத்தில் நீங்களோ அல்லது நூருல் அமீனோ ஒரு பட்டியல் வகுப்பினரை அமைச்சவரையில் கொண்டுவர விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள தள்ளப்பட்டேன்.இது மட்டுமல்லாது நூருல் அமீன் மற்றும் பல கிழக்கு வங்காள லீக் தலைவர்கள் பட்டியல் வகுப்பு உறுப்பினர்களிடையே பிரிவினையை உண்டாக்க முயல்கிறார்கள் என்பதும் என் கவனத்திற்கு வந்தது. என்னுடைய தலைமையும் மிகப்பரவலான புகழும் தவறாக கருதப்படுகிறது என எனக்குத்  தோன்றியது. பயமின்றி பேசும் என்னுடைய திறன், கண்காணிப்பு, மற்றும் பொதுவாக பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் விருப்பங்களையும் பட்டியல் வகுப்பினருடைய விருப்பங்களையும் அதிக கவனத்துடன்  காப்பாற்றுவதில் காட்டும் நேர்மை சில மேற்கு வங்காள அரசுக்கும், லீக் தலைவர்களுக்கு கவலை அளித்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாகிஸ்தானின் சிறுபான்மையினரை காப்பாற்றுவதில் நான் உறுதி பூண்டேன்.
இந்துக்களுக்கு எதிரான கொள்கை10. வங்காளப்பிரிவினை பற்றிய கேள்வி எழுந்தபோது, பட்டியல் வகுப்பு மக்கள் பிரிவினையின் விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டனர். அவர்களின் சார்பாக அப்போதைய வங்காள அமைச்சர் ஸரஹ்ர்தியிடம் இந்த பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கு அவர் பட்டியல் வகுப்பினரின் எந்த உரிமைகளும் பிரிவினையினால் பாதிக்கப்படாது எனவும் அவர்கள் அந்த உரிமைகளை அனுபவிக்கவும் கூடவே சில உரிமைகளும் அவர்களுக்கு தரப்படும் என்ற அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.இந்த உறுதிமொழி, ஸூரஹர்தியின் தனிப்பட்ட தகுதியினாலும் வங்காளத்தின் லீக் அமைச்சரவையின் முதலமைச்சர் என்ற முறையிலும் தரப்பட்டது. ஆனால், கடும் வருத்ததுடன் சொல்லப்படவேண்டியது என்னவென்றால் பிரிவினைக்குப் பின் அதுவும் முகம்மது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்பு பட்டியல் வகுப்பினர் அவர்களுடைய உரிமைகளைப் பெறவில்லை.

bangladesh-muslims-kill-hindu-friday-prayer

உங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன், பட்டியல் வகுப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் அவ்வப்போது கொண்டு வந்தது. கிழக்கு வங்காள அரசின் திறமையற்ற நிர்வாகத் திறமைகளைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கியது நினைவு இருக்கும் என நம்புகிறேன். நான், காவல்துறைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் துறை எடுத்த கொடூர நடவடிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். கிழக்கு வங்காள அரசினால், குறிப்பாகக் காவல் துறையினாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களினாலும் கடைப்பிடிக்கப்படும் இந்துக்களுக்கு எதிரான கொள்கை பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது பற்றி எந்த தயக்கமும் நான் காட்டியதில்லை.
சில சம்பவங்கள்11. என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முதல் சம்பவம் கோபால்கஞ் அருகில் இருக்கும் டிக்காகுல் (Digharkul ) எனும் கிராமத்தில் நடைபெற்றது. அங்கு போலியான குற்றச்சாட்டின் பேரில் முஸ்ஸீம்களின் கொடுமைகள் உள்ளூர் நாமசூத்திரர்கள் மீது நடைபெற்றது.நடந்தது என்னவென்றால் ஒரு முஸ்ஸீம் படகில் சென்று மீன் பிடிக்க வலை வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த நாமசூத்திரர் ஒருவரும் அதே இடத்தில் வலை வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த முஸ்ஸீம், அருகில் இருக்கும் முஸ்ஸீம் கிராமத்திற்கு சென்று அவரும் அவருடன் வந்த பெண் ஒருவரும் நாமசூத்திரர்களின் கும்பலால் தாக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார்.

hindu-women-raped-by-muslims-islam-jihad

சமீபத்தில் வன்புணரப்பட்ட பங்களாதேச இந்துப் பெண்
அப்போது கோபால்கஞ் கால்வாய் வழியாக வந்த கோபால்கஞ் சப் டிவினசல் ஆபீசர் எந்த விசாரணையும் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை உண்மை என ஒப்புக்கொண்டு ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அந்த நாம சூத்திரர்களை தண்டிப்பதற்காக அனுப்பினார். ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் வந்தபோது உள்ளூர் முஸ்ஸீம்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.முஸ்ஸீம்கள், நாம சூத்திரர்களின் வீடுகளை கொள்ளையிட்டது போதாமல் ஆண்களையும் பெண்களையும் கடுமையாக தாக்கி, வீடுகளை சேதப்படுத்தினார்கள். இவர்களின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் ஒரு கர்ப்பிணி பெண் அந்த இடத்திலேயே கரு கலைந்தாள்.உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதல் அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
12. இரண்டாவது சம்பவம், 1949 ஆம் ஆண்டின் முதல் பகுதியில், பாரிசால் மாவட்டத்தில் இருக்கும் பி எஸ் கோர்னாடி (P.S. Gournadi) எனும் இடத்தில் நடைபெற்றது. அங்கு யூனியன் போர்டில் (உள்ளூர் பஞ்சாயத்து போன்ற அமைப்பு) இருந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருந்தது. இதிலே ஒரு குழு உள்ளூர் காவல் துறை அதிகாரிகளின் நல்லெண்ணத்தை பெற்று இருந்ததால் அவர்களின் எதிரிகளைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி ஒழிக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.இந்தக் குழு தந்த போலியான தகவலான, உள்ளூர் காவல் நிலையம் தாக்கப்படும் என்பதின் அடிப்படையில், கோர்னாடி காவல் தலைவர் ஆயுதம் தாங்கிய படையை அனுப்புமாறு தலமையகத்தை கேட்டுக்கொண்டார்.  காவலர்கள், ஆயுதம் தாங்கிய படையுடன் உதவியோடு நிறைய வீடுகளை சோதனையிட்டு விலையுர்ந்த பொருள்களை கொள்ளையிட்டனர், இந்த வீடுகளில் இருந்தவர்கள் அரசியலிலேயே ஈடுபட்டதில்லையாதலால் கம்யூனிஸ்டுகளாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. பெருவாரியான மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆங்கில பள்ளிகளில் படித்த மாணவர்களும் வேலை செய்த ஆசிரியர்களும் அவர்கள் கம்யூனிஸ்டாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டனர். அந்த பகுதி என்னுடைய பூர்வீக கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் எனக்கு இந்த சம்பவம் தகவல் சொல்லப்பட்டது. மாவட்ட நீதிபதிக்கும் காவல்துறை கண்கானிப்பாளருக்கும் இந்த நிகழ்வு பற்றி விசாரணை தேவை என கடிதம் எழுதினேன்.அங்கிருக்கும் உள்ளூர் மக்களில் பலரும் சப் டிவிசனல் ஆபிசருக்கு விசாரணை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாவட்ட தலமையகத்திற்கு என்னால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு கூட பதில் இல்லை. இந்த விஷயத்தை நீங்கள் உட்பட பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்களிடம் கொண்டு வந்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை.
இரவு முழுவதும் இழிவுக்குள்ளான இந்துப் பெண்கள்13. ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரால் அப்பாவி இந்துக்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மீது ஷில்ஹெட் மாவட்டத்தில் இருக்கும் ஹபிப்கார் எனும் ஊரில் நடத்தப்பெற்ற கொடூரங்களை பற்றி சொல்லியாகவேண்டும். அப்பாவி ஆண்களும் பெண்களும் கொடூரமாக தாக்கப்பட்டனர், பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், முஸ்ஸீம்களாலும் காவல் துறையினராலும் வீடுகள் தாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ராணுவத்தினர் உள்ளூர் மக்களை கொடுமை படுத்துதல், இந்துக்கள் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் போனற கொடூரங்களுடன் இந்துக்களை துன்புறுத்தி இந்து பெண்களை இரவு ராணுவ முகாமுக்கு வரவைத்து அவர்களின் ஆசையை தீர்த்துக்கொண்டார்கள். இந்த உண்மையும் கூட உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தீர்கள், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.
14. அதன் பின்பு, ராஜ்சாஷி மாவட்டத்தில் இருக்கும் நாச்சோல் (Nachole) எனும் இடத்தில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் காவல் துறையும் உள்ளூர் முஸ்ஸீம்களும் இணைந்து இந்துக்களை துன்புறுத்தி அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தார்கள். அந்த சந்தால்கள் எல்லையை தாண்டி மேற்கு வங்காளத்திற்கு வந்தார்கள். அவர்கள் முஸ்ஸீம்களும் காவல்துறையும் இணைந்து நடத்திய கொடுமைகளை விவரித்தார்கள்.
15. கொடும் கோரமான அடக்குமுறைகள் டிசம்பர் 20, 1949 இல் காகுலானா (Khulna) மாவட்டத்தில் பி.எஸ், மோல்ஹாரட் (P.S. Mollarhat ) கீழிருக்கும் கால்ஷிரா (Kalshira ) கிராமத்தில் நடந்தன. நடந்தது என்னவென்றால், ஜோய்தேவ் பிராஹ்மனா எனபவரின் வீட்டில் சில தேடப்படும் கம்யூனிச குற்றவாளிகள் இருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையில்  பின்னிரவு வேளையில் நான்கு காவலர்கள் ஈடுபட்டார்கள். காவலர்கள் வரும் அறிகுறியில் கம்யூனிஸ்டுகளாகச் சொல்லப்படும் சில இளைஞர்கள் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்கள்.ஒரு காவலர் ஜோய்தேவ் இன் வீட்டில் நுழைந்து அவருடைய மனைவியை தாக்கியுள்ளார், அவருடைய சத்தம் கேட்டு ஜோய்தேவும் அவருடன் தப்பித்த இளைஞர்களும் திரும்பி வந்தார்கள். அவர்கள் அவரசத்திலும் வேறு வழியில்லாததாலும் வீட்டினுள் நுழைந்த போது அங்கு துப்பாக்கியுடன் இருந்த நான்கு காவலர்களைக் கண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் உந்தப்பட்டவர்களாக அந்த காவலரை அடித்தார்கள். அந்த அடியில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இளைஞர்கள் அடுத்த காவலரை தாக்கும் போது மற்ற இருவரும் தப்பித்து ஓடி அருகில் இருக்கும் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து வந்தார்கள். இது சூரிய உதயத்திற்கு முன்பு நடந்ததால் இளைஞர்கள், இறந்தவரின் உடலோடு தப்பித்து விட்டார்கள்.

hindu-women-raped-by-muslims-bangladesh

[3]
காலானா வின் காவல்துறை கண்காணிப்பாளர், அன்று மதியம் அந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரோடு வந்தார். இடைப்பட்ட வேளையில் அந்த தாக்குதல் நடத்தியவர்களும் பக்கத்து வீட்டினரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் பெரும்பான்மையான கிராமத்தினர் நடந்த சம்பவத்தின் விளைவுகள் பற்றி அறியாமல் வீட்டிலே தங்கியிருந்தார்கள். தொடர்ந்து,  ராணுவம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழுள்ள காவல்துறையினர் இணைந்து அப்பாவி இந்து கிராம மக்களை அடித்துத் துன்புறுத்த தொடங்கினார்கள்.கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்த வீடுகளை கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள், ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.இப்படி, நரகக் கொடூரங்கள், ஒன்றில் இருந்து ஒன்றரை மைல் நீளம் இருக்கும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட கால்ஷீரா கிராமத்தில் மட்டுமல்லாது அருகில் இருக்கும் பல கிராமங்களிலும் கட்டவிழக்கப்பட்டது. இந்த கால்ஷிரா கிராமம் ஆனது ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் இருந்ததாக சந்தேகப்படாத கிராமம் ஆகும்.
இன்னோரு கிராமம் ஆன ஜலார்தண்கா (Jhalardanga). கால்ஷிரா கிராமத்தில் இருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது, அது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனது ஆகும். ஒரு தடவை காவல்துறையினரின் பெரும் படை கம்யூனிஸ்டுகளை தேடும் வேட்டையில் வந்தபோது ஜலார்தண்கா கிராம மக்கள் இந்த கால்ஷீரா கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார்கள், ஏனென்றால், இந்த கால்ஷீரா கிராமம் பாதுகாப்பான கிராமம் ஆகும்.
16. நான் அந்த கால்ஷிரா கிராமத்திற்கும் அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களுக்கும் பிப்ரவரி 28, 1950 இல் சென்றேன். குலானாவின் காவல்துறை கண்காணிப்பாளரும் முஸ்ஸீம் லீக்கின் சில தலைவர்களும் என்னுடன் இருந்தனர். எப்போது அந்த கால்ஷீரா கிராமத்திற்கு போன போது அந்த கிராமம் உருக்குலைந்து இடிபாடுகளாக இருந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அந்த கிராமத்தில் 350 குடும்பங்கள் இருந்ததாகவும் ஆனால் இப்போது மூன்று வீடுகளைத் தவிர மற்றவை இடிக்கப்பட்டதாகவும் என்னிடம் சொல்லப்பட்டது. நாம சூத்திரர்களுக்கு சொந்தமான படகுகளும் கால்நடைகள் எல்லாமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நான் இந்த உண்மைகளை முதலமைச்சர், முதன்மை செயலாளர், தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் உங்களுக்கும் எழுதினேன்.17. இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லப்படவேண்டும். இந்த சம்பவங்கள் மேற்கு வங்காள பத்திரிக்கைகளில் வெளிவந்து அங்கிருந்த இந்துக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கால்ஷீராவில் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என அனைவரும் கல்கத்தாவுக்கு வந்து அவர்களின் கொடுமைகளைச் சொல்லினர். அதனால் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது.
பிப்ரவரி தொந்தரவின் காரணங்கள்18. இந்த இடத்தில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் கால்ஷீரா மற்றும் அதன் தொடர்புடைய சம்பவங்களுக்குப்  பதிலடியாக சில மதக்கலவரங்கள் நடந்த செய்திகள் கிழக்கு வங்காள பத்திரிக்கைகளில் உருப்பெருக்கி சொல்லப்பட்டன. 1950 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் கிழக்கு வங்காள சட்டமன்றத்தின் நிதிநிலை கூடுகை ஆரம்பித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், கால்ஷீரா மற்றும் நச்சோலி பற்றி விவாதிக்க இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வர அனுமதி கேட்டார்கள். ஆனால், அந்தத் தீர்மானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

bangladeshgenocide-islam-jihad

[4]
அப்பாவி ரிக்‌ஷாக்காரர்களையும் அழித்த அமைதி மார்க்கம்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள். இந்து உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அமைச்சர்களை மட்டுமல்லாது மாநிலத்தின் முஸ்ஸீம் தலைவர்களையும் அதிகாரிகளையும் எரிச்சலடையச் செய்தது. இதுதான் ஒருவேளை பிப்ரவரி 1950 இல் நடந்த டாக்கா மற்றும் கிழக்கு வங்காள கலவரங்களின் முதன்மை காரணமாக இருக்கலாம்.
19. பிப்ரவரி 10, 1950 ஆம் திகதி காலை பத்துமணிக்கு ஒரு பெண் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டதாகக் காண்பிக்க சிகப்பு நிற மையால் வண்ணம் தீட்டப்பட்டு கிழக்கு வங்காள தலைமைச் செயலகம் முன்பு கொண்டு வரப்பட்டாள். உடனே செயலகத்தில் இருந்த அரசு அதிகாரிகள் வேலையை நிறுத்தி விட்டு வெளியேறி ஊர்வலமாக புறப்பட்டு இந்துக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பழிவாங்க கோரினார்கள். இந்த ஊர்வலம் ஒரு மைல் தூரம் போன போது கூட்டம் சேர ஆரம்பித்தது.அது 12 மணிக்கு விக்டோரியா பூங்காவில் சேர்ந்தது, அங்கு இந்துக்களுக்கு எதிரான இன்னும் மோசமான பேச்சுக்கள் பல தலைவர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பேசப்பட்டன. இந்த இடத்தில் சிரிப்பான செயல் என்னவென்றால் இந்த முழு நாடகம் செயலகத்தின் ஊழியர்களால் நடத்தப்படும் போது கிழக்கு வங்காளத்தின் தலைமைச் செயலர், மேற்கு வங்காள தலைமைச் செயலருடன் எவ்வாறு இரண்டு வங்காளங்களிலும் மதக்கலவரங்களை ஒழிப்பது என்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
அரசு அதிகாரிகள் கொள்ளையர்களுக்கு உதவினர்.20. கலவரம் மதியம் ஒரு மணிக்கு நகரத்தின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. முழு மூச்சில் நகரத்தின் எல்லா இடங்களிலும் தீ வைத்தல், இந்து கடைகள், மற்றும் வீடுகளைக் கொள்ளையிடுதல், மற்றும் இந்துக்களைக் கொல்லுதல் என்பவை இந்துக்களைக் கண்ட இடத்திலே செய்யப்பட்டன. இந்தக் கொலை, கொள்ளை போன்றவை காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையிலே நடைபெற்றதற்கான ஆதாரம் எனக்கு முஸ்ஸீம்களிடம் இருந்தும் கூட கிடைத்தன.

எம்மதமும் சம்மதம் என்றோமே….
 இந்துக்களுக்குச் சொந்தமான நகைக்கடைகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே கொள்ளையிடப்பட்டன. அந்தக் காவலர்கள், கொள்ளையை தடுக்கத் தவறியது மட்டுமல்லாது கொள்ளையடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி உதவினர். என்னுடைய துரதிர்ஷ்டவசமாக நான் அதே நாள் 5 மணிக்கு டாக்காவிற்கு சென்றேன். என்னுடைய கடும் வருத்ததிற்கு காரணமாக இந்த சம்பவங்களை அருகில் இருந்து பார்க்கும் துர்ப்பாக்கியத்தை பெற்றேன். நான் அங்கு பார்த்ததும் அருகில் இருந்தவர்களிடம் கேட்டதும் இதயத்தில் வலியை உண்டாக்குவதும் நம்பமுடியாததும் ஆகும்.

(தொடரும்)

மொழிபெயர்ப்பு: ராஜசங்கர்

Series Navigationஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *