பாரத அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா (Revised -2)

This entry is part 20 of 30 in the series 22 ஜனவரி 2012

 

Dr. Homi J. Bhabha

(1909 – 1966)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா

 


“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

“விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”

ஜவஹர்லால் நேரு.

“இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும், இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது!  முற்போக்கு நாடுகளின் கண்முன் தொழிற் துறைகளில் பிற்போக்கு அடைவதை வேண்டாதிருந்தால், பாரதம் அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் முற்பட வேண்டும்”.

டாக்டர் ஹோமி பாபா [1948]



 

“சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது”

டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]

“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுதச் சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)




இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள்

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு.  இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ஆராய்ச்சி உலைகள் [Atomic Research Reactors] முளைத் தெழுந்தன.  மேலை நாடுகளில் அதற்குப் பிறகு 1950-1960 ஆண்டுகளில் அணுசக்தியை ஆக்க வினைகளுக்குப் பயன்படுத்தச், சோதனை அணு மின்சக்தி உலைகள் [Test Atomic Power Reactors] கட்டப் பட்டன.  அவை வெற்றிகரமாய் இயங்கி, வாணிபத்துறை அணுசக்தி நிலையங்கள் [Commercial Atomic Power Stations] தலை தூக்கத் தொடங்கின.

இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் பண்டித நேரு வேட்கை கொண்டு அப்பணிகளைச் செய்ய ஓர் உன்னத விஞ்ஞானியைத் தேடினார்.  அப்போதுதான் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் மொம்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார்.

1958 மார்ச் 14 இல் நேரு இந்திய அணுசக்தி ஆணையகத்தை [Indian Atomic Energy Commission] நிறுவனம் செய்து ஹோமி பாபாவுக்குத் தலைவர் [Chairman] பதவியை அளித்தார்.  நேருவைப் போன்று டாக்டர் ஹோமி பாபாவும் ஓர் தீர்க்க தரிசியே.

நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார்.  இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது.  அணுசக்தி நிலையத்தை நிறுவனம் செய்ய ஏறக் குறைய எல்லாச் சாதனங்களும் இந்தியாவிலே இப்போது உற்பத்தி யாகின்றன!  அதுபோல் அண்டவெளி ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  1974 இல் பாரதம் தனது முதல் அடித்தள அணுகுண்டு வெடிப்பைச் [Underground Atomic Implosion] செய்து, உலகில் அணுகுண்டு வல்லமை யுள்ள ஆறாவது நாடாகப் பெயர் பெற்றது!  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! அப்புதிய பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர், டாக்டர் பாபா.

 

பாரத நாட்டு அணுவியல் துறைகளின் பிதா

டாக்டர் பாபா ஓர் உயர்ந்த நியதிப் பௌதிக விஞ்ஞானி [Theoretical Physicist].  விஞ்ஞான மேதமையுடன் தொழில் நுட்பப் பொறியியல் திறமும் [Engineering Skill] பெற்றவர்.  மேலும் அவர் ஓர் கட்டடக் கலைஞர் [Architect].  கலைத்துவ ஞானமும், இசையில் ஈடுபாடும் உள்ளவர்.  மொம்பையில்  பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தை [Bhabha Atomic Research Centre] நேரில் பார்ப்பவர், பாபாவின் கலைத்துவக் கட்டட ஞானத்தை அறிந்து கொள்வர்.  விஞ்ஞானத்தில் அகிலக் கதிர்களைப் [Cosmic Rays] பற்றி ஆய்வுகள் செய்தவர்.  பரமாணுக்களின் இயக்க ஒழுக்கங்களை [Behaviour of Sub-atomic Particles] நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு அநேக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துத் தெளிவாக்கியவர்.  இந்தியாவில் முற்போக்குப் பௌதிகக் [Advanced Physics] கல்விக்கு விதையிட்டு, அதன் விருத்திக்கும், ஆராய்ச்சிக்கும் ஆய்வுக் கூடங்கள் அமைத்தவர்.  பாரதத்தில் அணுவியல் விஞ்ஞான ஆய்வுக்கும், அணுசக்தி நிலையங்கள் அமைப்புக்கும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்ற ஆராய்ச்சிக் கூடங்கள், இரசாயனத் தொழிற் சாலைகள் ஆகியவற்றைப் பக்க பலமாக நிறுவனம் செய்தவர். அவரது விஞ்ஞான ஆக்கத்திற்கும், நிறுவன ஆட்சித் திறமைக்கும், அகில நாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பைப் பெற்றவர்.  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானப் பேரவைகளில் பொறுப்பான பெரிய பதவிகள் ஏற்றவர்.  குறிப்பாக ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன் படுத்தும் அகிலச் சபைகளில் [Organizations for the Peaceful Uses of Atomic Energy] உயர்ந்த பதவி வகித்தவர்.  இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] கௌரவ அங்கிகரிப்பையும் பெற்றவர்.  எந்த ஆசிய நாட்டிலும் இல்லாத மாபெரும் அணுசக்தித் துறைகளை இந்தியாவில் நிறுவி, பாரத நாட்டை முன்னணியில் நிறுத்திய டாக்டர் பாபா, பாரதத்தின் அணுவியல் துறைப் பிதாவாகப் போற்றப்படுகிறார்.


ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார்.  அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார்.  அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)].  பால் டிராக் கணிதத்திலும் நியதிப் பௌதிகத்திலும் [Theoretical Physics] வல்லுநர்.  அவர்தான் முதன் முதலில் ஒப்புமை மின்னியல் நியதியைப் [Relativistic Electron Theory] படைத்தவர்.  அந்த நியதி எதிர்த்-துகள்களின் [Anti-Particles] இருப்பை முன்னறிவித்துப் பின்னால் பாஸிடிரான் [Positron] கண்டு பிடிக்க உதவியது. 1933 இல் அலை யந்திரவியல் [Wave Mechanics] துறைக்கு ஆக்கம் அளித்தற்கு இன்னொரு விஞ்ஞானியுடன், டிராக் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.  அவரது கல்விப் பயிற்சி பாபாவைக் கணிதத்திலும், நியதிப் பௌதிகத்திலும் தள்ளி, விஞ்ஞானத்தில் வேட்கை மிகுந்திடச் செய்தது.

1930 இல் யந்திரப் பொறியியலில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிடிஜ் காவென்டிஷ் ஆய்வகத்தில் [Cavendish Laboratories] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.  அப்போது ஈரோப்புக்கு விஜயம் செய்து, உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], அணுவியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi], அணுவின் அமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr], பளு சக்திச் சமன்பாடு [Mass Energy Equation] படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein] போன்ற ஒப்பற்ற விஞ்ஞான மேதைகளைக் கண்டு உரையாடி, அவர்களது நட்பைத் தேடிக் கொண்டார்.  பாலி, ஃபெர்மி, போஹ்ர், ஐன்ஸ்டைன் அத்தனை பேரும் பௌதிகப் படைப்புகளுக்காக நோபெல் பரிசு பெற்றவர்.

1935 ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் டாக்டர் ஆஃப் ஃபிளாஸ்ஃபி [Ph.D.] பட்டம் பெற்று, 1939 ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.  அப்போது இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] அங்கிகரிப்பும் பாபா பெற்றார்.  அதே சமயத்தில் F.R.S. பெற்ற கனடாவின் அணுவியல் மேதை, டாக்டர் W.B. லூயிஸ் [Dr. W. B. Lewis], பாபாவின் நெருங்கிய நண்பர்.  1957 இல் கனடா இந்திய அணு உலை, சைரஸ் [Canada India Reactor, CIRUS] மொம்பையில் நிறுவனம் செய்யவும், ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு [CANDU] அணுசக்தி மின்சார நிலையங்கள் தோன்றுவதற்கும், பாபா-லூயிஸ் கல்லூரி நட்பு அடிகோலியது.

அகிலக்கதிர் பற்றிய அடிப்படை விஞ்ஞானச் சாதனைகள்

உயர் சக்தி பௌதிகத்தின் [High Energy Physics] பாகமான குவாண்டம் மின்னியல் கொந்தளிப்பின் [Quantum Electrodynamics] ஆரம்ப விருத்திக்கு, டாக்டர் பாபா மிகுந்த படைப்புகளை அளித்துள்ளார்.  அவரது முதல் விஞ்ஞான வெளியீடு, பிண்டத்தில் உயர் சக்திக் காமாக்கதிர்கள் விழுங்கப் படுவதைப் [Absorption of High Energy Gamma Rays in Matter] பற்றியது.  ஒரு பிரதமக் காமாக்கதிர் எலக்டிரான் பொழிவாக [Electron Showers] மாறித் தன் சக்தியை வெளியேற்றுகிறது.  பாஸிடிரானைச் [Positron] சிதறும் எலக்டிரானின் முகப் பரப்பை [Cross Section], 1935 இல் முதன் முதல் கணக்கிட்ட விஞ்ஞானி, டாக்டர் பாபா.  [முகப் பரப்பு என்பது மிகச் சிறிய அணுக்கருப் பரப்பளவு. அந்தப் பரப்பளவு ஓர் அணுக்கரு இயக்கம் நிகழக் கூடும் எதிர்பார்ப்பைக் (Probabilty) கணிக்கிறது].  அந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பு “பாபாச் சிதறல்” [Bhabha Scattering] என்று இப்போது பௌதிக விஞ்ஞானத்தில் அழைக்கப் படுகிறது.

டாக்டர் பாபா அகிலக் கதிர்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பூமியின் மட்டத்திலும், தரைக்குக் கீழும் காணப்படும் ஆழத்தில் ஊடுறுவும் துகள்கள் [Highly Penetrating Particles] எலக்டிரான்கள் அல்ல, என்று 1937 இல் பாபா எடுத்துக் கூறினார்.  ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1946 இல் அக்கூற்று மெய்யானது என்று நிரூபிக்கப் பட்டது.  ஆழமாய் ஊடுறுவும் அந்தத் துகள்கள் மியூ-மேஸான் [Mu-Meson] என்று பின்னால் கண்டு பிடிக்கப் பட்டன.  வெக்டர் மேஸான் [Vector Meson] இருப்பதை, டாக்டர் பாபா ஒரு நியதி மூலம் எடுத்துரைத்தார்.

1938 இல் பூமியின் வாயு மண்டலத்தை அதி வேகமாய்த் தாக்கும், அகிலக் கதிர்களின் ஆயுளைக் கணித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுத்த “சிறப்பு ஒப்புமை நியதியின்” [Special Theory of Relativity] காலக் கொள்ளளவு மாறுபாட்டை [Time Dilation Effect] உறுதிப் படுத்தினார். அந்த முறைக்கு ஒரு பூர்வீக வழியையும் வகுத்தார்.  ஒப்புமை நியதி உரைத்தது போல் அதே துள்ளிய அளவு அகிலக் கதிர்களின் ஆயுட் காலம் நீடிப்பதாகக் காணப் பட்டது.

பாரத தேசத்தில் பாபா தோற்றுவித்த விஞ்ஞான ஆய்வகங்கள்

1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த பாபா, யுத்தம் நடந்த காரணத்தால், மீண்டும் இங்கிலாந்துக்குப் போக முடியவில்லை.  டாக்டர் பாபாவுக்குப் பெங்களூர், இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Bangalore, Indian Institute of Science] அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஓரிடம் காத்திருந்தது.  அப்போது அதன் ஆணையாளர், நோபெல் பரிசு பெற்ற பாரத விஞ்ஞான மேதை, டாக்டர் சி. வி. ராமன் [Director Dr. C.V. Raman (1888-1970)].  டாக்டர் ராமன் மீது டாக்டர் பாபாவுக்கு அளவு கடந்த மதிப்பு.  அவரது விஞ்ஞான மேதமை, ஆழ்ந்த முறையில் பாபாவை ஊக்கியது.  பாபா பாரதத்திலே தங்க முடிவு செய்து விஞ்ஞான முற்போக்கிற்கும், பொறியியல் தொழில் விருத்திக்கும் பணிசெய்ய முற்பட்டார்.

1944 இல் தொழிற்துறை வளர்ச்சி அடைய விஞ்ஞானிகளுக்கு முற்போக்கான பௌதிகப் பயிற்சி அளிக்க ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டார்.  அதைப் பின்பற்றி டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் [The Tata Institute of Fundamental Research] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார்.  ஆசியாவிலே அதி உன்னத விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடம் அது.  1952 ஆம் ஆண்டில் அடிப்படைத் துகள் மேஸான்களில் [Fundamental Particle, Mason] ஒன்றைக் கண்டு பிடித்து “மேனன் மேஸான்” [Menon Mason] என்று பெயரிட்ட பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், இந்தியப் படைத்துறை ஆலோசகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியது, டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்.

இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி

டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு.  அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் , கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங் களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன.  அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.

இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன.  அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை.  1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது!  சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா.  இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!

பாரதத்தில் அணுசக்தி மின்சார நிலையங்கள் அமைப்பு

டாக்டர் பாபா முதலில் ஆராய்ச்சிகள் புரிய ஆய்வு அணு உலைகளை [Research Reactors] நிறுவினார்.  இந்திய விஞ்ஞானிகள் அமைத்த “அப்ஸரா” நீச்சல் தொட்டி அணு உலையும் [Swimming Pool Reactor, Apsara], கனடா இந்தியக் கூட்டுறவில் கட்டப் பட்ட “ஸைரஸ்” வெப்ப அணு உலையும் [Canada India Reactor Utility & Service, Cirus] டிராம்பே அணுசக்திக் கூடத்தில் [Atomic Energy Establishment, Trombay, Now Bhabha Atomic Research Centre] அமைக்கப் பட்டன.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையை இயக்க 1957 இல் பல எஞ்சினியர்கள், விஞ்ஞானிகள் கனடாவில் உள்ள NRX ஆய்வு உலையில் பயிற்சி பெற அனுப்பட்டார்கள்.  1960 இல் இயங்க ஆரம்பித்த ஸைரஸ் அணு உலையை, பிரதமர் நேரு திறந்து வைத்தார். துவக்க விழாவிற்கு அகில நாட்டு விஞ்ஞானிகள் பலர் (குறிப்பாக அணுவின் உள்ளமைப் விளக்கி நோபெல் பரிசு பெற்ற நீல்ஸ் போஹ்ர், Niels Bohr) வந்திருந்தனர்.

அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இரண்டாவது அணுவியல் ஆய்வுக் கூடம் [Indira Gandhi Atomic Research Centre] தோன்றியது.  அங்கு வேகப் பெருக்கிச் சோதனை அணு உலையும் [Fast Breeder Test Reactor], காமினி அணு உலையும் [Kamini Reactor], இரட்டை அணுசக்தி மின்சார நிலையமும் [CANDU Model] உள்ளன.  அணுசக்தி ஆராய்ச்சிக் கூடங்கள், மற்றும் அணுவியல் துணைத் தொழிற்சாலைகள் எல்லாம் அணுசக்தித் துறையகத்தின் [Dept of Atomic Energy] கீழ்ப் பணி புரிகின்றன.

அடுத்து பாபா அணுமின் சக்தி நிலையங்களை [Atomic Power Station] அமைக்க அடிகோலினார்.  முதலில் அமெரிக்காவின் ஆதரவில், தாராப்பூரில் கொதிநீர் அணுசக்தி மின்சார நிலையம் [Boiling Water Reactor, BWR] இரண்டை, ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி கட்டியது.  ஒப்பந்தப்படி இதற்கு வேண்டிய செழிப்பு யுரேனிய [Enriched Uranium] மூலத் தாது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஹைதராபாத் எரிக்கோல் தயாரிப்புத் தொழிற்சாலையில் [Fuel Fabrication Plant] உருவானது.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் தீவிரக் கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] உண்டாவதால், அம்மாடல்கள் பிறகு இந்தியாவில் பெருகவில்லை.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் பயிற்சி பெற பல எஞ்சினியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள்.

அடுத்து கனடாவின் கூட்டுறவில், கனடாவின் கான்டு [Canadian Deuterium Uranium, CANDU] மாடலில் இரட்டை அணுசக்தி மின்சார நிலையங்கள் ராஜஸ்தானில் கோட்டாவுக்கு அருகிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  அவற்றுக்குத் தேவையான இயற்கை யுரேனியம் [Natural Uranium] பாரதத்தில், மிஞ்சிய அளவில் கிடைக்கிறது. கனடா இந்திய ஒப்பந்தத்தின் போது, டாக்டர் பாபா இந்தியாவிலே கான்டு எரிக்கோல் [CANDU Fuel Bundles] தயாரிக்கவும், கான்டு அணு உலைக் கலன்களைப் புதிதாய் உற்பத்தி செய்யவும், அந்த மாடல் நிலையங்களைப் பெருக்கும் உரிமைகளையும் கனடாவிட மிருந்து முதலிலேயே வாங்கிக் கொண்டார்.

அணுமின் சக்தி உற்பத்திக்கு ஆதரவான தொழிற்சாலைகள்

2002 இல் தற்போது புதிதாக எட்டு கான்டு அணுசக்தி நிலையங்கள் இந்தியரால் கட்டப் பட்டு, அவை இயங்க ஆரம்பித்து மின்சாரத்தை பரிமாறிக் கொண்டு வருகின்றன.  மேலும் புதிதாக ஆறு கான்டு அணுசக்தி நிலையங்கள் நிறுவனமாகிக் கொண்டிருக்கின்றன.  மொத்தம் 13 அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  முதல் ராஜஸ்தான் கான்டு நிலையத்தில் பக்கப் பாதுகாப்புறை [End Shields] ஒன்றில் கதிரியக்க நீர் தொடர்ந்து கசிவதால், அணுஉலை இயக்கம் நிரந்தரகாக நிறுத்தப் பட்டுள்ளது.

அணு உலைகளுக்குத் தேவையான மூலத் தாதுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], [Uranium Corporation of India Ltd], எரிக்கோல் தயாரிக்கும் கூடங்கள் [Nuclear Fuel Complex], கழிவு எருக்களைச் சுத்தீகரிக்கும் தொழிற்சாலைகள் [Fuel Reprocessing Plants], கனநீர் உற்பத்திச் சாலைகள் , உலைக்கலன், உலைச் சாதனங்கள் உற்பத்திக்கு கன மின்சாரச் சாதனத் தொழிற்கூடம் [Bharath Heavy Electricals, Bhopal], [Larson & Tubro], [KSP Poona], அணுஉலை இயக்கக் கருவிகள், கதிரியக்க மானிகள் தயாரிக்கும் கூடங்கள் [Electronic Corporation of India Ltd] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.

1955 இல் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவைக்கு [United Nations Conference on the Peaceful Uses of Atomic Energy] டாக்டர் பாபா தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டார்.  1960 முதல் 1963 வரை அகில நாடுகளின் தூய & பயன்படும் பௌதிக ஐக்கிய அவைக்குத் [International Union of Pure & Applied Physics] தலைவராகப் பணியாற்றினார்.  1964 இல் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவையில், முன்னேறும் நாடுகளைப் பார்த்து, “மின்சக்தி இல்லாமைப் போல் செலவு மிக்க எந்த மின்சக்தியும் இல்லை” [No power is as costly as no power] என்று பாபா கூறிய ஒரு பொன்மொழியை உலக நாடுகள் எடுத்துப் பறைசாற்றின.

பாரதத்தின் அணுவியல் மேதை பாபாவின் மரணம்

1962 அக்டோபர் 26 இல் சைனா இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கே சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது.  பாரதம் எதிர்க்க வலுவற்றுத் தோல்வி யுற்றுக் தலை குனிய நேரிட்டது!  பண்டித நேரு 1964 மே 27 இல் காலமாகி, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.  அடுத்து சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தியது!

டாக்டர் பாபா, பாரதம் வலுவடைய பிரதமரை ஒப்ப வைத்து, அணு ஆயுதம் உண்டாக்க அடிகோலினார்.  பின்னால் ஹோமி சேத்னா [Homi Sethna] காலத்தில் அணுகுண்டு தயாரிக்கப் பட்டு கீழ்த்தள வெடிப்புச் [Underground Implosion] சோதனை 1974 மே மாதம் 18 இல் ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் நிறைவேறியது.

1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடர் மான்ட் பிளாங்கில் [Mont Blanc] விமானம் மோதி, டாக்டர் பாபா தனது 57 ஆம் வயதில் அகால மரணம் எய்தினார்.  பாரதம் ஓர் அரிய விஞ்ஞான மேதையை இழந்தது.  அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இந்திய அணுசக்தித் துறையின் மாபெரும் புதிய காண்டு 540 MWe அணுமின் நிலையம் தாராப்பூரில் “பூரணம்” [Criticality] அடைந்துள்ளது, மகத்தான சாதனை யாகக் கருதப்படுகிறது.

தற்போது 17 அணுமின் நிலையங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  தாராப்பூரின் இரட்டைப் புதிய நிலையங்கள் (2 x 500 MWe) மின்னாற்றல் இன்னும் சில மாதங்களில் பரிமாறும் போது, மொத்தம் 3960 MWe மின்சாரம் அனுப்பப் படும்.  அடுத்து 8 அணுமின் நிலையங்கள் பாரதத்தில் கட்டுமானமாகி வருகின்றன.  அவை எதிர்பார்க்கும் 2008 ஆம் ஆண்டில் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது மொத்த ஆற்றல் 6780 MWe ஆகப் பெருகி, கி.பி. 2020 இல் 20,000 MWe மின்சார ஆற்றலை அடையும் குறிக்கோள் நிறைவேறும்.

டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை.  அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்!  நேரடிப் பார்வையில் அவர் மொம்பையில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.  இந்திய அணுவியல் தொழிற் துறைகளின் பொற்காலத்திற்கு, டாக்டர் பாபாவின் பணிகள் பேரொளி அளித்துள்ளன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

++++++++++++++++++++

********************

India’s operating nuclear power reactors:

Reactor State Type MWe net, each Commercial operation Safeguards status
Tarapur 1 & 2 Maharashtra BWR 150 1969 item-specific
Kaiga 1 & 2 Karnataka PHWR 202 1999-2000
Kaiga 3 Karnataka PHWR 202 2007
Kakrapar 1 & 2 Gujarat PHWR 202 1993-95 in 2012 under new agreement
Kalpakkam 1 & 2 (MAPS) Tamil Nadu PHWR 202 1984-86
Narora 1 & 2 Uttar Pradesh PHWR 202 1991-92 in 2014 under new agreement
Rajasthan 1 Rajasthan PHWR 90 1973 item-specific
Rajasthan 2 Rajasthan PHWR 187 1981 item-specific
Rajasthan 3 & 4 Rajasthan PHWR 202 1999-2000 early 2010 under new agreement
Rajasthan 5 Rajasthan PHWR 202 Feb 2010 Oct 2009 under new agreement
Tarapur 3 & 4 Maharashtra PHWR 490 2006, 05
Total (18) 3981 MWe

Kalpakkam also known as Madras/MAPS
Rajasthan/RAPS is located at Rawatbhata and sometimes called that
Kaiga = KGS, Kakrapar = KAPS, Narora = NAPS
dates are for start of commercial operation.

India’s nuclear power reactors under construction:

Reactor Type MWe net, each Project control Commercial operation due Safeguards status
Kaiga 4 PHWR 202 MWe NPCIL 3/2010
Rajasthan 6 PHWR 202 MWe NPCIL 2/2010 Oct 2009 under new agreement
Kudankulam 1 PWR (VVER) 950 MWe NPCIL 9/2010 item-specific
Kudankulam 2 PWR (VVER) 950 MWe NPCIL 3/2011 item-specific
Kalpakkam PFBR FBR 470 MWe Bhavini 9/2011
Total (5) 2774 MWe

Rajasthan/RAPS also known as Rawatbhata
dates are for start of commercial operation.

Power reactors planned or firmly proposed

Reactor State Type MWe net, each Project control Start construct Start operation
Kakrapar 3 Gujarat PHWR 640 NPCIL 2010? 2014
Kakrapar 4 Gujarat PHWR 640 NPCIL 2010? 2014
Rajasthan 7 Rajasthan PHWR 640 NPCIL 2010? 2014
Rajasthan 8 Rajasthan PHWR 640 NPCIL 2010? 2014
Kudankulam 3 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL late 2010? 2017
Kudankulam 4 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2011? 2017
Jaitapur 1 & 2 Maharashtra PWR – EPR 1600 NPCIL by 2012 2017-18
Kaiga 5 & 6 Karnataka PWR 1000/1500 NPCIL by 2012
Kudankulam 5 & 6 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2012? 2017
Kudankulam 7 & 8 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2012? 2017
? PWR x 2 1000 NPCIL/NTPC by 2012? 2014
Jaitapur 3 & 4 Maharashtra PWR – EPR 1600 NPCIL by 2016
Kumharia Haryana PHWR x 4 640 NPCIL by 2012?
Bargi Madhya Pradesh PHWR x 2 640 NPCIL
Kalpakkam 2 & 3 Tamil Nadu FBR x 2 470 Bhavini 2017
? ? FBR x 2 470 Bhavini 2017
? AHWR 300 NPCIL by 2012 2020
Subtotal 29 units 25,800 MWe
Jaitapur 5 & 6 Maharashtra 6 x EPR 1600 NPCIL
Markandi (Pati Sonapur) Orissa PWR 6000 MWe
Mithi Virdi 1-6, Saurashtra region Gujarat 6 x AP1000 1250
Pulivendula Andhra Pradesh PWR? 2×1000 NPCIL 51%, AP Genco 49%
Kovvada 1-6 Andhra Pradesh 6 x ESBWR 1350-1550
Haripur 1-4 West Bengal PWR x 4 VVER-1200 1200 2017 2022?

For WNA reactor table: first 23 units ‘planned’, next (estimated) 15 ‘proposed’.
The AEC has said that India now has “a significant technological capability in PWRs and NPCIL has worked out an Indian PWR design” which will be unveiled soon – perhaps 2010.

Nuclear Energy Parks

In line with past practice such as at the eight-unit Rajasthan nuclear plant, NPCIL intends to set up five further “Nuclear Energy Parks”, each with a capacity for up to eight new-generation reactors of 1,000 MWe, six reactors of 1600 MWe or simply 10,000 MWe at a single location.  By 2032, 40-45 GWe would be provided from these five.  NPCIL says it is confident of being able to start work by 2012 on at least four new reactors at all four sites designated for imported plants.

The new energy parks are to be:

Kudankulam in Tamil Nadu: three more pairs of Russian VVER units, making 9200 MWe.

Jaitapur in Maharashtra: Preliminary work at is likely soon with six of Areva’s EPR reactors in view, making 9600 MWe.

Mithi Virdi (or Chayamithi Virdi) in Gujarat: to host US technology (Westinghouse AP1000).

Kovvada in Andhra Pradesh: to host US technology (GE Hitachi ESBWR – possibly ABWR).

Haripur in West Bengal: to host four further Russian VVER-1200 units, making 4800 MWe.

At Markandi (Pati Sonapur) in Orissa there are plans for up to 6000 MWe of PWR capacity. Major industrial developments are planned in that area and Orissa was the first Indian state to privatise electricity generation and transmission. State demand is expected to reach 20 billion kWh/yr by 2010.

At Kumharia in Haryana the AEC had approved the state’s proposal for a 2800 MWe nuclear power plant and the site is apparently earmarked for four indigenous 700 MWe PHWR units. The northern state of Haryana is one of the country’s most industrialized and has a demand of 8900 MWe, but currently generates less than 2000 MWe and imports 4000 MWe. The village of Kumharia is in Fatehabad district and the plant may be paid for by the state government or the Haryana Power Generation Corp.

Bargi in Madhya Pradesh is also designated for two indigenous 700 MWe PHWR units.

The AEC has also mentioned possible new nuclear power plants in Bihar and Jharkhand.

*********

Information :

1.  Bhabha Atomic Research Centre, Trombay,  Mombai (BARC) 

http://en.wikipedia.org/wiki/Bhabha_Atomic_Research_Centre

2. Dept of Atomic Energy, Mombhai. (DAE) 

http://en.wikipedia.org/wiki/Department_of_Atomic_Energy_(India)

3. Indira Gandhi Centre for Atomic Research,  (IGCAR)

(http://en.wikipedia.org/wiki/Indira_Gandhi_Centre_for_Atomic_Research)

4.  Nuclear Power Corporation India Ltd (NPCIL)   http://www.npcil.nic.in/ 

http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

++++++++++++++++

S. Jayabarathan  [jayabarath@tnt21.com] (January 19, 2012) (R-2)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஇறந்து கிடக்கும் ஊர்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 7
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

11 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    பேரறிஞர் ஞாநி, ஜெயமோகன், இராம கி ஐயா, உதயக் குமார், செல்வக் குமார், டாக்டர் புகழேந்தி, நாக. இளங்கோவன், கோ. திநாவுக்கரசு, மணிவண்ணன், மற்றும் பலர் அணுமின் உலை இயக்கத்தை நச்சுப் பொருளாகக் கருதி அறவே வெறுக்கிறார்.

    ஆதலால் இந்திய அணுமின் உலைகள் 20 உட்பட, உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாய் இயக்கி மின்சாரம் பரிமாறிவரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகள் அனைத்தையும் உடனே மூடிவிட வேண்டும்.

    இது எப்போது நடக்கும் ? இது நடக்குமா ? ஹிரோஷிமா, நாகசாக்கி, திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா விபத்துக்களுக்குப் பிறகும் 430 மேற்பட்ட அணுமின் உலைகள் உலகில் இயங்கி வருவது எதைக் காட்டுகிறது ? அவற்றைப் பாதுகாப்பாக இயக்கி அணுசக்தியின் பேரளவு ஆக்க வினையைப் மக்கள் பெறமுடியும் என்பதை அழுத்தமாகக் காட்டுவதற்கு.

    சி, ஜெயபாரதன்.

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள திரு.ஜெயபாரதன்,

    உங்களது எள்ளல் இருக்கட்டும். நான் படித்தவரையில் நீங்கள் குறிப்பிடுபவர்களுள் ஞாநி-யும் ஜெயமோகனும் (மற்ற அன்பர்களின் பதிவுகளை படித்ததில்லை) அணுசக்தி தேவையில்லை என்று மட்டும் சொல்லவில்லை;

    மாற்று வழிகளை சுட்டுகிறார்கள்;

    தற்போதைய மின்பரிமாற்ற இழப்பு விகிதமான அரசு ஒப்புக்கொண்ட 30% அளவை (உண்மையான அளவு இன்னும் அதிகமாகவே இருக்க வாய்ப்பு) சர்வதேச அளவான 10%-க்கும் கீழாக குறைத்தாலே 70,000 MW-க்கும் அதிகமாக சேமிக்க இயலும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கி விரைவில் இதை சாதிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று வினவுகிறார்கள்;

    ஒப்பீட்டளவில் அணு மின்சாரத்தைவிட அதிக மின்சாரம் வழங்க வாய்ப்புள்ள மாற்று சக்தி துறைகளுக்கு (‘இப்போதே 5%-க்கும் குறைவாகவே வழங்கும் அணுமின் துறையைவிட அதிகமாகவே சூரிய மற்றும் காற்றாலைத்துறைகள் மின்சாரம் வழங்கி வருகின்றன, அணுமின்சாரத்துக்காகும் செலவைவிட குறைவான செலவில்’ என்று ஞாநி கூறிகிறார். இது பொய் அல்லது பிழை என்கிறீர்களா ?) ஏன் அணுமின்சாரத்துக்கு ஒதுக்குவதில் மிகமிக குறைந்த விகிதமே ஒதுக்கப்படுகிறது என்ற நேர்மையான கேள்வியை எழுப்புகிறார்கள்.

    இதுகுறித்து உங்களது “கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !” கட்டுரையிலேயே விரிவாக பின்னூட்டமிட்டிருந்தேன், இதுவரை உங்களிடமிருந்து அதற்கு பதில் இல்லை. (ஒருவேளை உங்களால் பதிலளிக்க தகுதியற்ற எதிர்வினை என்று இடக்கையால் ஒதுக்கியிருக்கலாம்)

    கடைசியாக, இந்த “பேரறிஞர்கள்” மட்டுமல்ல, அணுசக்தித்துறை சார்ந்த விஞ்ஞானிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஞாநி சொல்கிறார்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    மேற்கண்ட எனது பின்னூட்டத்தில் 70,000 MW என்று தவறாக குறிப்பிட்டுவிட்டேன். அது 30,000 MW என்றிருக்கவேண்டும்.

    மன்னிக்கவும்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  4. Avatar
    ஜெயபாரதன் says:

    நண்பர் பொன் முத்துக்குமார்,

    அணுமின் உலைகள் கடந்த 50 ஆண்டுகளாக 30 உலக நாடுகள் விருத்தி செய்து 430 மேற்பட்ட நிலையங்கள் இப்போது பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன. அணுமின் உலைகள் 1000 -1500 மெகா வாட் பேரளவு மின்சாரம் தொடர்ந்து கொடுப்பதுபோல், சூரிய சாதனமும், காற்றாலையும் தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப முடியாது. சூரிய மின்சாரம் இன்னும் உலகில் விருத்தியாக வில்லை.

    மின்சார உற்பத்தியில் Base Load, Swing load என்று இருவிதத் தேவை தொழிற்சாலைகட்கு வேண்டும். பேரளவு மெகாவாட் அனுப்பும் அணுமின் நிலயங்கள் பேஸ் லோடு பணிக்கும், மற்றவை சுவிங் லோடு தேவைக்கும் பயன்பட வேண்டும்.

    இந்த அளவு விருத்தி, சூரிய மின்சாரமும், காற்றாலை மின்சாரமும் வாணிப ரீதியாக அடைய வில்லை.

    ஞாநி “கான்ஸர் கல்பாக்கம்” என்று எழுதி வருகிறார். அங்கு புற்று நோயில் இறந்தவர் அணுக்கதிர் அடியால் பாதிக்கப்பட்டார் என்று இதுவரை அவர் நிரூபித்ததில்லை.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    ஜெயபாரதன் says:

    நண்பர் பொன்முத்துக்குமார்,

    உங்கள் கூடங்குளம் பின்னூட்டத்தை இன்றுதான் பார்த்தேன். உங்கள் கட்டுரைக்குப் பதில் கட்டுரை எழுத நேரமில்லை எனக்கு. அதிலிருந்து எடுத்து குறிப்பிட்ட வினாக்கள் கேட்டால் பதில் தருவேன்.

    எதிர்ப்பவரை அசுரப்படை என்றதில் என்ன தப்பு ? ஆயுதங்கள் ஏந்தி அரசியல் நிபுணரைத் தாக்கி கூட்டத்தை நிறுத்தியது காட்டுமிராண்டிகளின் அநாகரீகச் செயல்.

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள திரு.ஜெயபாரதன்,

    நன்றி. இவைதான் எனது குறிப்பிட்ட வினாக்கள் :

    1. தற்போதுள்ள மின்னிழப்பை சர்வதேச அளவுக்கு குறைத்தாலே ஏறத்தாழ இன்னும் எட்டாண்டுகளுக்கு தற்போதைய மின்னுற்பத்தியே போதுமானதாக இருக்கும். ஏன் மின்னிழப்பை தடுப்பதில் அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை ?

    2. மாற்று மின்சக்தித்துறைகளுக்கு (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி) ஏன் தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை ? தொழிற்சாலைகளை தவிர்த்து பிற பொது உபயோகத்திற்கு பயன்படுத்தலாமே.

    3. விபத்து நேர்ந்தால் ஏற்படும் பின்விளைவுகளை (எல்லாவகையான) சமாளிக்க நமக்கு தெம்புள்ளதா ?

    4. உலகப்பிரச்சினையாக இருக்கும் அணு உலைக்கழிவு மேலாண்மைக்கான பொருளாதார ரீதியான வலு இருக்கிறதா ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  7. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    எதிர்ப்பு வன்முறையால் தெரிவிக்கப்பட்டிருந்தால் அது அநாகரீகமானதும் சட்டரீதியான தண்டனைக்கும் உள்ளானதே. இல்லாத பட்சத்தில் அசுரப்படை எனும் விளி நிச்சயமாக அதிகப்படி.

    ஞாநி-யின் ‘கல்பாக்கத்தில் கான்ஸர்’ தொடர்பான குற்றச்சாட்டுக்கு ‘கல்பாக்கத்தில் அணு உலை நிறுவும் முன்னும் பின்னரும் கான்ஸர் குறித்தான முழுமையான ஆய்வும் புள்ளிவிபரமும் இல்லாமல் கான்ஸர் குற்றம் சாட்டக்கூடாது’ என்ற உங்களது பதிலை ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளித்தமைக்கு மறுபடியும் என் நன்றிகள்.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  8. Avatar
    ஜெயபாரதன் says:

    நண்பர் பொன்.முத்துக்குமார்,

    1. மின்வடங்களில் ஏற்படும் மின்னாற்றல் இழப்பை மீட்பது, மின்சாரப் பயன்பாடுகளைக் குறைப்பது எல்லாம் செயற்கை முறைகளுக்கு ஒவ்வாதவை. செயல்படுத்த முடியாதவை. இவ்விதி முறைகள் நேரடி மின்சக்தி உற்பத்திக்கு ஈடாகா.

    2. மாற்று மினசார உற்பத்தி முறைகள் (சூரிய மின்சாரம், காற்றாடி மின்சாரம், சாணி வாயு மின்சாரம்)சிறிதளவில்தான் தொடர்ச்சியின்றிப் பயன் தரும். இவை ஒருபோதும், பேரளவு நீர் மின்சக்தி, நிலக்கரி மின்சக்தி, அணுமின்சக்தி உற்பத்திக்கு நிகராகா. மேலை நாடுகள் ஆராய்ச்சி சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம், நமது நிதியை வீணாக்காமல்.

    3. இந்திய நரோரா அணுமின் உலை விபத்தில் இந்திய நிபுணர் வெகு சாமர்த்தியாக கதிரியக்கம் வெளியேறாது பாதுகாத்துள்ளார். கட்டுரை பழைய திண்ணியிலும் என் வலைப்பகுதியில் உள்ளது. http://jayabarathan.wordpress.com/2011/03/19/narora-atomic-power-plant/

    இந்திய அணுமின்னுலைகள் அபாய விபத்து காலத்தில் தானாக நிறுத்தம் அடையும். கசியும் கதிரியக்கம் கோட்டை அரணை விட்டு வெளியேறாது. அணு உலை இயக்குநர் அணுவியல் கல்வி அறிவும் இயக்கப் பயிற்சியும் பெற்றவர். இதுவரை 20 அணுமின் உலைகள் இயக்கிய அனுபவம், ஆறு மேற்பட்ட ஆய்வு உலைகளை இயக்கிய அனுபவம் இந்தியருக்கு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 20 அணுமின் உலை இயக்கங்களில் கதிரடிப் புற்று நோய் உற்றவர், கதிரடிக் காயங்கள் பெற்றவர் இதுவரை யாருமில்லை. நீர்த் தடாகங்களில் பாதுகாப்பாகச் சேமிப்பான அணுக் கழிவுகளால் யாரும் கதிரடிப் பாதிப்பு அடையவில்லை.

    4. என் இந்தியக் கனடா அனுபவம். அணுக்கழிவு பாதுகாப்பு, புதைப்பு அரசாங்கப் பொறுப்பில் உள்ளதால் NPCIL இடம் ஏராளமான நிதியும், நிபுணத் திறமையும் உள்ளது. கிளை நிறுவனங்களின் எண்ணிக்கையைப் படத்தைப் பாருங்கள்.

    என்னுடைய வலையில் அணுசக்தி தலைப்புக்குக் கீழ் உள்ள மற்ற கட்டுரைகளில் உங்கள் வினாக்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

    http://www.npcil.nic.in/

    சி. ஜெயபாரதன்

  9. Avatar
    ஜெயபாரதன் says:

    (http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html) (காலஞ் சென்ற அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ? கூடங்குளம் அணுமின் திட்டம்.)

    மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

    +++++++++

    கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தா விட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர்.

    இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன.

    இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார்.

    அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக் கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது. இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது

    +++++++++
    சி. ஜெயபாரதன்

  10. Avatar
    ஜெயபாரதன் says:

    மின்வெட்டில் சாகும் மக்களை காக்க கூடங்குள ஆலையை திறக்க கோரிக்கை

    தூத்துக்குடி:
    “”முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்”என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர். கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின்உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன், உண்ணாவிரதம் நடந்தது. சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை வகித்தார். தேவர் பேரவை தலைவர் சேதுராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி, சமுதாய தலைவர்கள், அணுஉலை ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    மக்களை திசைதிருப்ப முயற்சி: இதில், சந்திரன் ஜெயபால் பேசியதாவது: முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகஉள்ளது. அதனால் ஆபத்துஎன, கேரளமுதல்வர் உம்மன்சாண்டி கூறுகிறார். அதுபோல, கூடங்குளம் அணுமின்நிலையத்தால் பேராபத்து எனக்கூறி மக்களை திசைதிருப்ப இங்குள்ள உம்மன்சாண்டி நினைக்கிறார். மக்களுக்கு மின்சாரம் மிக அவசியம். ஆனால், இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்கின்றனர்.

    ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒருபகுதிமக்களின் அச்சம் தீரும்வரை, இங்கு அணுமின் உற்பத்தியை துவங்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.ஆனால், இந்த அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்கப்படுமா? என தற்போது பெரும்பாலான மக்களிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சட்டசபையைக்கூடி, மக்கள் அச்சம் தீர்ந்துவிட்டதால், இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதல்வர் ஜெ.,நினைத்தால் இந்த அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்கிவிடலாம். அவ்வாறே பொதுமக்களும் கருதுகின்றனர். அதை அவர் உடனடியாக செய்யவேண்டும். ஏனெனில், தொழில்வளர்ச்சி, விவசாயம், எதிர்கால சந்ததியினருக்கு மின்சாரம் அவசியம். மின்சாரம் இல்லையென்றால் தமிழகம் இருளில்மூழ்கிவிடும். காமராஜர் ஆட்சிகாலத்தில் கல்பாக்கம் அணுமின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டு பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அன்று அதற்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அவர் பின்வாங்கியிருந்தால், இந்த அற்புத திட்டங்கள் நமக்கு கிடைத்திருக்காது.
    யாருக்குமே திருமணம் நடக்காது: அணுமின்நிலையம் குறித்த சந்தேகம் என்ற பெயரில் நாட்டின்பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை போராட்டக்குழுவினர் கேட்கின்றனர். அணுமின்நிலையத்தால் எந்தபாதிப்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதையும் ஏற்கமறுக்கின்றனர். பிரசவத்தின்போது இறப்போம் என பெண்கள் பயப்பட்டால், இவ்வுலகில் யாருக்குமே திருமணம் நடக்காது. அணுமின்நிலைய எதிர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் வந்தது குறித்த குற்றச்சாட்டை இதுவரை அவர்கள் மறுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களிடம் உரியவிசாரணை நடத்தவேண்டும். இந்த
    அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பேசிய அனைவருமே இதே கருத்தை வலியுறுத்தினர்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தீர்மானம் : கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அணுஉலை ஆதரவு உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    * கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தடுத்து, அன்னிய நாட்டு நிதியுதவியுடன்

    4 மாதத்திற்குமேல் போராட்டம் என்ற போர்வையில் அப்பாவிமக்களை பகடைக்காயாக்கி, தூண்டி, நாட்டின்பாதுகாப்பு ரகசியங்களையும், அணுஉலை வரைபடம் மற்றும் செயல்திட்டங்களைக்கேட்டு, இந்தியாவுக்கு அச்சத்தை கொடுப்பவர்களை நாட்டின்பாதுகாப்புகருதி, தேசிய பாதுகாப்புசட்டத்தை பயன்படுத்தி, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை கோருகிறோம்.

    * கூடங்குளம் பகுதிமக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உயர மீனவர்களுக்காக புதிய மீன்பிடித்துறைமுகம், மத்திய அரசின்

    நேரடிகட்டுப்பாட்டுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மீன்வளர்ச்சித்துறை சார்ந்த கல்லூரியும், மக்கள் அனைவரும் பயன்பெற கல்விநிலையங்களும், உயர் தொழில்நுட்ப கல்லூரியும், மருத்துவக்கல்லூரியும் அமைக்க கோருகிறோம்.
    * தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அனைத்து தொழில் வளர்ச்சிக்கும், மிகுந்த துணைநிற்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலைவாய்ப்பு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட மத்திய அரசை கோருகிறோம்.
    * அணுசக்தித்துறை முழுக்க முழுக்க பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்நிலையில், கூடங்குளம் அணுமின் உற்பத்தி தாமதத்தால் அணுசக்தியின் ஆக்க வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு கட்டுப்பாட்டை
    அணுசக்தித்துறை இழந்து நிற்பது போன்ற தோற்றம் மக்களிடையே எழுகின்றது. நாட்டின்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்திட்டத்தில் முக்கிய பங்காற்றும் அணுசக்திதுறையின் செயல்திறன் கேள்விக்குறியாக போகும்முன், இந்திய ஜனாதிபதி உடனடியாக பார்லி.,யை கூட்டி முடிவெடுக்க கோருகிறோம்.

    *மத்திய, மாநில அரசுகளின் இணக்கமற்ற போக்கே, கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்தி தடங்கலுக்கு காரணம் என பாமரர்களும் பேசும்நிலை, தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களின் அச்சமெல்லாம் மின்வெட்டைப்பற்றியதுதான். விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும், இளைஞர்களும் அச்சப்படுவது உயிர்பயத்திற்காக அல்ல. மேற்கண்ட தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் முடங்கிவிட்டால், அத்தொழில்களின் உற்பத்தி மட்டுமல்ல, அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் குடும்பமும் வருமான இழப்பால் கடன்தொல்லை ஏற்பட்டு மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என நடுங்கிக் கொண்டிருக்கிற மக்களின் அச்சத்தைப்போக்க, மத்திய, மாநில அரசுகள் விட்டுக்கொடுத்து, உருவாக்கப்பட்ட போலி உயிர்பயத்தில் இருக்கிற மக்களையும் மீட்டு, உண்மையான வாழ்க்கை பயத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் காக்க கோருகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

Leave a Reply to ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *