பிரசவ அறை

This entry is part 33 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

நீ பிறந்து விட்டாய்
கேட்டதும் சில்லென்ற உணர்வு..

உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே
அரை அங்குல புன்சிரிப்பு மட்டும்
கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும்
பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்..

எப்போது என தெரியாமல்
வெடிக்கின்றன குண்டுகள்..
முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்…
உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது –
தலையனை தரும் ஆறுதலை கூட
சிற் சமயங்களில் ..

என்ற போதும்
ஏதோ ஒர் மூலையில்
மிக அகண்டு,மிக அகண்டு –
வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை
முத்தமிடுகிறது உன் நெற்றியில்

பூவுலகத்திற்கு ,எங்கள் உலகத்திற்கு
வந்து விட்டாய்,அந்த ஆனந்தத்தில்
வரவேற்கிறேன் ,அன்பே உன்னை !

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationகாலம்தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
author

சித்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Thenammai says:

    வாழ்வின் மீதான நம்பிக்கை தொடரட்டும்.. அருமையான கவிதை சித்ரா..

Leave a Reply to Thenammai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *