புத்தகங்கள்

This entry is part 16 of 22 in the series 1 ஏப்ரல் 2018

நீலச்சேலை வானில்
சிவப்பு முந்தானை
காணப்படாமலேயே
கரைந்துவிட்டது

விமானப் புகைவில்
காணப்படாமலேயே
கலைந்துவிட்டது

அழகான அந்தப் பூ
ரசிக்கப்படாமலேயே
உதிர்ந்துவிட்டது

கன்னியாகவே
அவள் வாழ்க்கை
கழிந்துவிட்டது

அழகான கோலம்
காணப்படாமலேயே
சிதைந்துவிட்டது

சேலத்து மல்கோவா
ருசிக்கப்படாமலேயே
அழுகிவிட்டது

பொத்திப் பொத்தி வைத்த
விக்டோரியா ரூபாய்
தொலைந்துவிட்டது

பொம்மை அழுகிறது
விளையாட குழந்தை
இல்லையாம்

‘கலையாமல் கரையாமல்
உதிராமல் தொலையாமல்
அழுகாமல் அழாமல்
காத்திருக்கிறேன்
ஒருநாள் புரட்டப்படுவேன்’

நம்பிக்கையுடன் புத்தகம்

அமீதாம்மாள்

Series Navigationதுரித உணவுஇயற்கையை நேசி
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *