பூரண சுதந்திரம் யாருக்கு ?

This entry is part 20 of 28 in the series 27 ஜனவரி 2013
 
 
cover-image-indian-flag.jpg

 

சி. ஜெயபாரதன், கனடா

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம்
ஒரு போர்க்களம் !

 

பஞ்ச பாண்டவர்
பகடை ஆடுவர் சூதில்
பத்தினியைப் பணயம் வைத்து !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர் முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம்
ஒரு குருச்சேத்திரம் !

ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !
பூரணச் சுதந்திரத்தில்
மதம் பிடித்த யானைகள்
மானிடரை மிதிக்கும் !

விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விதிகளுக்கு அடங்கிய
சுதந்திரம் !
உரிமை யில்லாத
சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா சுதந்திரம் ?

 

எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும்
பூரணச் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டி
போராடுகிறார்
போலிச் சாமியார்
புதிய பூமிக்கு !

 

+++++++++++

 

S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 7, 2012 (R-9)

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)விதி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *