பெண்கள் பெண்கள் பெண்கள்

This entry is part 6 of 7 in the series 5 ஏப்ரல் 2020

ஸிந்துஜா  

1

உங்களிடம் நான்

கேட்டுக் கொள்வதெல்லாம்

எனக்கு எதிரே

வரும் போது 

என்னைப் பார்க்காமல்

செல்லுங்கள்..

2

எனக்கு அவர்கள்

ஸாரி அணிந்து கொண்டு

வருவதுதான் பிடிக்கும்

என்று எப்படியோ

தெரிந்து கொண்டு

மற்ற எல்லா ஆடைகளையும்

அணிந்து வருகிறார்கள்.

3

எதிரே வருபவளைப்

பார்க்காமல் போகிறவன்

காதுகளில் துப்புகிறாள்

எரிச்சலுடன்:

மூஞ்சியைப் பாரு.

4

பெண்ணென்னும்

மாயப் பிசாசு

எனறவனைக் கூப்பிட்டு

உதைக்க வேண்டும்.

பிசாசை அவமதிக்க

அவனுக்கென்ன

உரிமை இருக்கிறது ?

5

குழாயடிச் சண்டை

அல்ல 

குழாயடிச் சமாதானம் வேண்டும் எனக்கு.

தண்ணீர் பிடிக்க

ஆண்களை அனுப்பவும்

6

ஜானகிராமனின்

பெண்களைப் பற்றி

மாய்ந்து மாய்ந்து

எழுதுகிறார்கள்

ஆண்கள்.

பெண்கள்?

ம் ஹும். 

மூச்சு விடுவதில்லை.

7

தாயிற் சிறந்ததொரு

கோயிலுமில்லை.

வாஸ்தவம்

ஊருக்கு வெளியே 

அந்த முதியோர் இல்லத்தில்

நூற்று இருபத்து நான்கு

கோயில்கள்.

8

கையைப் பிடித்து இழுத்தவனை

செருப்பால் அடிக்கலாமா என்று

கேட்டேன்.

அவள் சிரித்தாள் :

ஏன் பாதுகை

பட்டாபிஷேகத்துக்கு மட்டும்தானா?

9

குறிகளும்

என்ன செய்வ?

இருபத்தி நாலு மணி நேரமும்

அவர்களின் கவிதைகளில்

சிறைப்பட்டிருக்கையில்?

Series Navigationவட்டத்துக்குள்வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்
author

ஸிந்துஜா

Similar Posts

3 Comments

  1. Avatar
    எஸ்.சுவாமிநாதன் says:

    ஸிந்துஜா எழுதனதை மாத்திரம் படிச்சேன்.
    ரொம்ப நாளாச்சு, திண்ணை படிச்சு.

  2. Avatar
    ராஜீவ் காந்தி says:

    மிக யதரத்தமான வாழ்வியலை உள்ளது உள்ளபடியே தந்தமைக்கு நன்றி.

Leave a Reply to எஸ்.சுவாமிநாதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *