பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?

This entry is part 45 of 45 in the series 9 அக்டோபர் 2011

கோவிந்த் கோச்சா :::

இந்த படம் நியூடெல்லி விமான –புது- நிலையத்தில் எடுத்தது.
விமானம் ஏறும் இடம் அருகே, -செக்யூரிட்டி செக் முடிந்த பின் – இருக்கும் உணவு வகைகள் நடுவே… ஒரு திறந்த மதுக் கடை… BAR …

ஸ்டீவ் ஜாப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்திய கலாச்சாரத்தின் யுவன், யுவதிகள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் காட்சி….
இது எதைக் காட்டுகிறது…?
இதே சரக்குக் கடை ரயில் நிலையத்திலோ, இல்லை பேருந்து நிலையத்திலோ திறக்கப்பட்டு ,, வண்டி ஏறும் முன் ஒரு குவாட்டரை அதுவும் பெண்கள் இது மாதிரி அமர்ந்து பெக் அடித்தால் நாம் என்ன மாதிரியான விமர்சனம் செய்வோம்…?

இங்கு பணம் பணம் வளம் அதுவே எதுவும் சரியென்று ஆன போது, ஏழைகளுக்கு மட்டும் தனி விதி…..

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

10 Comments

  1. Avatar
    anony says:

    {ஸ்டீவ் ஜாப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்திய கலாச்சாரத்தின் யுவன், யுவதிகள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் காட்சி….}
    என்ன ஏமாற்றம் என்று விளக்கவும்.

  2. Avatar
    anony says:

    என்ன ஏமாற்றம் என்பதை விளக்குமாறு வேண்டுகோள் விடுத்துப் பல நாட்களான பிறகும் ஒரு விளக்கத்தையும் காணோம். திண்ணையின் வேறு பல இடங்களில் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பதால் கோவிந்தனுக்கு நேரமில்லை என்ற முடிவுக்கு வரவும் இயலவில்லை.

    தன் கூற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தைரியம் கோவிந்தனுக்கில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன்.

  3. Avatar
    admin says:

    அனானி என்ற பெயரில் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். ஒரே நபரே பல பெயர்களில் பின்னூட்டமிடுவது விரும்பத்தக்கதல்ல.

  4. Avatar
    GovindGocha says:

    பல இணையப் பத்திரிக்கைகளில் பின்னூட்டம் எந்த ரெஜிஸ்ட்ரேஷன் முறையும் இல்லாததால் குப்பைக்காடாக இருக்கிறது. அதனால், பின்னூட்டம் இடுவதற்கு login with password முறையை திண்ணை கொண்டு வருதல் நன்றாக இருக்கும்.

  5. Avatar
    GovindGocha says:

    சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் முறை மூலம் User ID தரப்பட வேண்டும்.

  6. Avatar
    காவ்யா says:

    கருத்து நல்லதுதான். ஆனால் எதார்த்தமில்லை. வணிகக் கண்ணோட்டம் சிலவிடங்களில் முதன்மை பெறும். அதன்பிரகாரம் இது சரியே.

    இன்னொன்றும் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன் தமிழகக் கவர்னராக ஜட்டி என்பவர் பொறுப்பேற்றார். பழுத்த காந்தீய வாதி. ராஜ் பவன் விருந்துகளில் மதுபானத்தை நிறுத்திவிட்டார். உள்ளூர்க்காரர்கள் கலந்துகொள்ளும் விருந்தென்றால் ஓகே. ஆனால் வெளிநாட்டினர் நம் நாட்டின் ஒரு பெரும் வணிக ஒப்பந்தத்துக்காக வர அவர்களுக்களிக்கும் விருந்தில் காந்தீய வழியில் சைவமும் எளிமையும் கலந்து விருந்தாக இருக்கமுடியுமா ? அவரிருக்கும் வரை வெளிநாட்டினர் வரவில்லை. இன்று அரசு நடத்தும் பெரிய விருந்துகளில் மது பானம் உண்டு. ராணுவத்தில் என்றுமே எங்கேயுமே உண்டு. எனவே சிலவேளைகளில் இப்படிப்பட்ட வாழ்க்கை கட்டாயமாக்கப்படுகிறது. விமானத்தில் பயணிப்போர் ஏழைகளல்ல. மது அருந்துதல் மேட்டுக்குடியின் வாழ்க்கை நியதி. அதே விமான நிலையத்திலும் செய்கிறார்கள். இது விவாதத்துக்குரிய ஒன்றே அன்று.

    எல்லா வகைக்குடியினர்களும் கலந்ததே ஒரு சமூகம்.

  7. Avatar
    காவ்யா says:

    U may also note that alcoholic beverages r served in international flts of Indian origin also, like AI. Because it makes business sense. Can u insist that our AI shd be Gandhian ?

  8. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    //எல்லா வகைக்குடியினர்களும் கலந்ததே ஒரு சமூகம்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள். அடுத்தவரை மது அருந்த வேண்டும் என்றோ அருந்தக் கூடாது என்றோ கட்டாயப்படுத்துவது இந்தியத் தன்மை அல்ல.

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *