மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.

author
12
0 minutes, 20 seconds Read
This entry is part 1 of 19 in the series 19 ஏப்ரல் 2015

godfatherபுனைப்பெயரில்

 

கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்”

சொன்னவர், சுஹாசனி.

நடிகை, இயக்குனர், காமிராஉமன், பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன்

இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான

கமல் அண்ணன் பெண்,

சாருஹாசன் மகள்

மற்றும் இன்றைய இண்டநேஷனல் அடையாளம் ஆன,

மணிரத்னம் பெண்டாட்டி.
சொன்ன இடம், அவரது கணவரும்,

தமிழ் சினிமாவின் GOD FATHER no..இல்லை “நாயகன்” என அவர் தம் குழுவால் சொல்லப்படும் MANI”RAT”NAM மணிரத்னம் பட விழாவில்.
இதை படித்து விட்டு , எங்க வாய் சும்மா இருந்தாலும், கை சும்மா இருக்க மாட்டேன் என்குது,

 

நீங்கள் எப்படி தயாரிக்கும் வலு இருப்பதால் , சினிமா எடுப்பது நிறுத்தாமல் சினிமா எடுத்துத் தள்ளுவதாலும்,

 

மார்கெட்டிங் தெரிந்ததால் கல்லா கட்டுவதாலும்,

அதிலும், GOD FATHER படத்தை காப்பி அடித்து , TIMES 100 Best Listல்

”நாயகன்”, இடம் பெறச் செய்யும் தந்திரம் தெரிந்ததாலும்

தொடர்ந்து படம் எடுப்பது போல்,

மவுஸ் பிடிக்கத் தெரிந்தவன் விமர்சனம் பண்ணுவது,
அந்த மவுஸ் பிடிக்கத் தெரிந்ததால் தான், மேட்டுக்குடு நுனி நாக்கிற்கு சொந்தமாயிருந்த

ரோஷமன், ஃபெலினி, அக்ரா குருஷேவா, குருதத், பை சைக்கிள் தீவ்ஸ் சில்ரென் ஆப் ஹெவன், மஜ்ஜித் மஜ்ஜித் என்பதெல்லாம் எங்களுக்கும் பரிச்சயமானது.

 

அந்த காலத்தில் வேண்டுமானால் நாயகன் வந்தவுடன் வாய் பிளந்து ஆஸ்கார் உண்டுடா என்று கேனப்பய கூட்டமாய் ஃபீல் பண்ணியிருக்கலாம்,

ஆனால் இன்று,

உண்ட சோறு செறிக்காமல் கலைகளோ , விமர்சனப் படைப்புகளோ படைப்பவர்கள் அல்ல இவர்கள்,

இவர்கள், அக்கினி குஞ்சுகள்.

எந்த கமர்ஷியல் கல்லா கட்டும் எதிர்பார்ப்பும் இல்லா கனன்று குமையும் உள்ளங்கள்.

500 கோடி சொத்துக்களுடன், “டாட், மாம், ஐ வாண்ட் டு டரய் பியீங் எ கம்யூனிஸ்ட்” எனும் உங்கள் வாரிசு ரகமல்ல…

ஒரு வேளை சோறின்றி, வாய்ச் சொல் வீரர்களால் புரட்சி ஓங்குக என்று அழைத்துச் செல்லப்பட்டு , திக்குத் தெரியா காட்டில், தங்களை பஸ்மம் ஆக்கிக் கொள்ளும் அனாதைகளை மீட்டெடுக்க உண்மைக் குரல் கொடுப்பவர்கள்.

இவர்களுக்கு தங்கள் எண்ணங்களின் உண்மையே நண்பர்கள்.

யாரோடும் பசப்பு சிநேகமிருக்காது

அதனால்,

ஊரோடு ஒன்றி வாழாமல் போனாலும்

ஊருக்காக குரல் கொடுப்பவர்கள்.

 

அவர்களுக்கு மவுஸ் பிடிக்கத் தெரிந்ததால் தான்,

காசே முக்கியம் என்று சினிமாவை ரத்ன வியாபார கூடமாக பார்ப்பவர்களுக்கு பிடிக்காமல் போகிறது.

ஒரு வேளை MANI- ”RAT” – NAM என்பதால் தானோ இந்த மவுஸ் பிடிப்பவர்களிடம் மாட்டிக் கொள்கிறார், உங்க கணவர்.?

இப்ப வந்திருக்கும் படம் கூட,

பத்து ஆண்டுகள் முன் வந்த எஸ் ஜெ சூர்யாவின் அன்பே ஆருயிரே கரு தானே.. அதான் திருமணம் செய்யாமல் கூடி வாழ்தல்.

 

அவர் சொன்னதை நீங்க காக் டெயில் பாணியில் ஹை சொஸைட்டி கலாச்சாரத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.

அதுவும் அல்ஜிமீர் ஜோடி என்ன சுயசிந்தனையா?

இளம் ஜோடி, வயதோக ஜோடி கம்பரீசனிலேயே நீங்கள் அவுட்.

ஒரே வய்து நிலையில், ஒத்த விஷயத்தில் மாற்றுக் கருத்து தானே காண்பித்தல் கடினம்.

 

மவுஸூக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டியிருக்கிறோம்

இல்லாவிட்டால் உங்க மவுஸூ தகுதிக்கு மீறி அறிவு ஜீவி ரகமாக இருந்திருக்கும்.

World top classics

World best film

100 best films of india

Films of Akira

Feleni

Anrew Robelov

An occurance in owl creek

Confession

Godard

Bergman

என்றெல்லாம் பிரவுஸ் பண்ண, கீ போர்டும், மவுஸும் தானே உதவுகிறது.

அதிலும் தவறிருந்தால் அதுவே சரி செய்து சரியானதை தருகிறது.

 

அதனால் தானே எங்கள் தரம் உயர்கிறது.

அதில் உங்கள் தரம் குறையும் என்றால் நாங்கள் என்ன செய்வது,

அப்படித் தடவிப் பார்த்த பின்னரும்,

சுப்ரமணியபுரம், அழகி, நான் கடவுள், பருத்தி வீரன், காதல் கொண்டேன், ஆரண்யகாண்டம், பீட்சா, விண்ணைத் தாண்டி வருவாயா, போன்ற படங்களை கொண்டாடுகிறோமே…

என்ன போலிகளை கண்டு இப்போதெல்லாம் ஏமாறுவது மிகக் குறைந்து விட்டது.

அதுவும் போக

நல்ல படங்களை தான் ரசிக்க முடியும்,

ஒரு நல்ல படம் தந்தார் என்பதற்காக அவர்தம் பிற கழிவுகளை கொண்டாட முடியுமா என்ன..

காசு கொடுத்தாலும் கள்ளத் தனமாக பார்த்தாலும் ரசிகன் ரசிகன் தான்,

அவன் விமர்சிப்பான்.

உலக சினிமாவை பூனே பிலிம் இன்ஸ்ட்டியூட் நாயர் போட்டுக் காண்பிக்க நீங்கள் சிலர் பார்த்தீர்கள்,

பின், தனி புரஜக்ட்டர், டெக், டிவிடி என்று இருந்தது..

இப்போது தனியாக மவுஸ் இருந்தது போய், இரு கட்டைவிரலும் பின் சில விரலும் மவுஸ் போல் ஸ்மார்ட் போனில் விளையாடும் காலம்,
இதில் தரம் தனித்திருந்தால், மரியாதை கௌரவத்திற்கு தவம் இருக்க வேண்டியதில்லை… யாரும்.

கடமையை கருத்தாய்ச் செய்தால் போதும்,

காலம் காலடியில்…

என்ன,

மன்னனின் காலடி எனினும்,

பிச்சைகாரன் காலடி எனினும்,

காலம் காலடியில் நிற்காது –

நழுவித்தான் செல்லும்..

 

அதில் காவியங்கள் கசடு தாண்டி நிற்கும்.

 

பாரதி தான் வாழ்ந்த காலத்தில் பத்து சினிமா பட்டு எழுதி தன்னை கவிகளின் அரசன் என்று பட்டம் சூட்டிக் கொண்டதில்லை..

ஆனால் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறான்.
நீங்கள் போய் வந்த அந்த பிலிம் இண்ஸ்ட்டியூட்டில் பயின்ற ஆபாவாணனின் பாடல்,

”தோல்வி நிலையென நினைத்தால்..” –ஒரு இனத்திற்கே பூபாளமாக இருக்கிறது..

கரப்பான் பூச்சி பாடல்களாய் அவன் எழுதித் தள்ளவில்லை..

 

கவிஞர்களின் அரசன், சக்ரவர்த்தி என்றெல்லாம் இறுமாப்பு கொண்டதில்லை.

 

ஆனால், அப்பாடல் சூரிய கீற்றுடன் கலந்தல்லவா ஒரு இனத்தின் விடியலுக்கான நம்பிக்கையுடன் புது நாள் மலர்ந்ததைச் சொல்கிறது.

எத்துனை படங்கள், எத்துனை இயக்குனர்கள், எத்தனை விழாக்காள்

ஆனால் நினறதென்ன…?

 

மணிரத்னம் ஒரு வித்தையும் வியாபாரமும் தெரிந்த நபர்.

மௌனராகம், அஞ்சலி, போன்ற தரமான படங்களையும்,

அலைபாயுதே போன்ற கமர்சியல் ஹிட் காதல் கதையும் தந்தவர்.

 

அலைபாயுதே படத்திற்க்கு, பிரபல அன்னக்கிளி ஆர்.செல்வராஜை நீங்கள் பயன்படுத்திய காரணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்குச் சொல்லலாமே..

 

ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற முயற்சி செய்ததுண்டா,

மவுஸ்ஸை கண்டு பயப்படும் நீங்கள்?

 

பேச்சால் கடித்துக் குதறினாலும் மிஷ்கின் கொண்டாடப்பட வேண்டிய கலைஞன் தானே..

இந்த அளவிற்கு உங்களின் படம் அலசப்படிருக்கிறதா.?

 

 

உங்கள் கூற்றுப்படி சினிமா கற்றவர்கள் தான் சினிமா எடுக்க வேண்டும் என்றால்,

தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பாரதிராஜா, இளையராஜா, ஆர்,செல்வராஜ், கங்கை அமரன் எல்லாம் சினிமாவே எடுத்திருக்க முடியாது…

துக்ளக்கில் போஸ்ட் மார்ட்டம், ஹலோ டாக்டர் என சினிமா விமர்சனம் எழுதித் தள்ளிய மகேந்திரனால் அடையாளம் காணப்பட்டு அவார்ட் வாங்கியவர் நீங்கள். அவர் எந்த இன்ஸ்ட்டியூட்டிலும் பயிலவில்லை.

ஒரு இனம் மரணத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்று வலி தெரியாமல்  எடுத்தது பற்றி சொல்லக் கூடாதா?

 

அமிரோச் பரஸ் எனும் படத்தை காப்பி அடித்து படமெடுத்து மணியான இயக்குனர் என்று மார்தட்டினால்,

 

இந்த பாழாய் போன் மவுஸ் தானே உங்களைக் காட்டிக் கொடுத்தது.

 

நரைகளுக்கு டை அடித்து , உடல் எடை குறைத்து இளமையாய் ஃபீல் பண்ணி படுத்தாமல்,

வயதில் வரும் அனுபவித்தில் ஞானத்தில் படமெடுக்கலாமே.
சத்யஜிதெரேயுடன் காபி சாப்பிட வேண்டும் என்று டிவியில் சொல்லும் மணிரத்னம்,

காப்பி அடித்தாவது அவர் போல் ஒரு படம் தரலாமே..

இலக்கியங்களா இல்லை நிகழ்வுகளா இங்கில்லை?

எஸ்.ரா, ஜெயமோகன், வண்ணநிலவன், கி.ரா , என எத்தனை எத்தனை எழுத்தாளர்கள். பாலகுமாரன் கூட வசனத்திற்கு தானே வ்ந்தார். அவரின் மெர்க்குரி பூக்கள் எடுக்கலாமே..?

தமிழக்த்தின் ஒவ்வொரு குடிமகன் தலையெழுத்திலும் கையெழுத்து போட்ட கலைஞர் – எம்ஜிஆர் உறவுகளின் நிகழ்வுகளை நீங்கள் எப்படி எடுத்தீர்கள்,

என்ன சாப்பிட்டாச்சா , எனும் ஷாட் எம் ஜீ ஆரையும்

இன்னொரு பெண் காதல், கருணாநிதியையும் என்று தானே குறீட்ட்டு படம் எடுத்தீர்கள்.

அதனால், ஒரு இயக்கமே வலம் இடம் என்று பிய்த்து பீராயாப்பட்டது தொட முடியவில்லையே?

 

பம்பாயில், நீங்கள் அடித்த பாசாங்கு சம்த்துவம், காங்கிரஸிற்கே ஜல்லி அடிக்கும் கலை.

அதே சமயம், உங்களின் மௌனராகம், அஞ்சலி பாராட்டத்தானே செய்தோம்.

 

விமர்சனம் பண்ணுபவன் ஒன்றும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை.

ஒரு கார்த்திக் மகன், ராதா மகள், மம்முட்டி மகன், என்று அறிமுகங்கள் நடத்தும் உங்களால் , சாதாரண சாமன்ய கலை ஆர்வலர்களை உருவாக்க முடிகிறதா?

வசதியும் வியாபார தந்திரம் தெரிந்ததால் தானே நீங்கள் படம் எடுக்கிறீர்கள்.

அல்ஜிமீர், டிம்னிச்யா படங்களான,

STILL ALICE

இல்லை வயோதிக பரஸ்பர காதல் பற்றியான AMOUR படம் என சுடவில்லையா?

ஒரு போஸ்டருக்கு கூட , சுடப்படுகிறது, உங்கள் கும்பலால்.

 

மாறி மாறி பாருங்கள் , எது உங்கள் படம் எனும் குழப்பம் உங்களுக்கே வரும்.

முனி படத்தில் ராகவா லாரன்ஸ் பேய் சொல்வது போல்,

“பேய்க்கும் பேய்க்கும் சண்டை, அதை ஊரெல்லாம் வேடிக்கைப் பார்க்குது”

அது தான் சினிமா எடுப்பவன் & விமர்சனுக்குண்டான் உறவு.

இரண்டு பேய் போடும் ஆட்டத்தால் தான் இன்னும் மீடியாவிற்கு உயிர் இருக்கிறது.

தமிழ் கூறும் நல் உலகு,

இணையத்தைப் பயன்படுத்தி,

இத்தாலி, ஜெர்மன், ஈரானியன், கொரியன் படங்களைப் பார்த்தால்

சினிமா கலையின் வெளிப்பாடுகளின் தளம் சந்தோஷிக்கலாம்.

”சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” நல்லா இருக்காம்.

மோகன்லாலின், ஸ்பிரிட் படத்தை கட்டாயம் ஒவ்வொரு டாஸ்மாக், மற்றும் மேட்டுக்குடி குடிகாரன்கள் பார்க்க வேண்டும்.

மவுஸ் போனாலும், விமர்சகர்களின் மவுஸு போகாது.

புனைப்பெயரில் –

மவுஸே சரணம்

உன் வாலில் நழுவி செல்லும் எங்கள் தேடலுக்கு

கண்முன்னே விரிக்கிறாயே…

அதில் தான் எங்களின் கனவும் விரிகிறது.

கானல் நீர்களாய் எங்களை காய்ச்சி எடுக்கும் பிம்பங்கள் உடைத்து

உலகின் கடை மடை சென்று

நீர் பெற்று வந்து

எமது ஞான தோட்டத்தின் வெள்ளாமைக்கு வகை செய்யும்

மௌஸே உனக்கொரு நன்றி…

தொடும் கணணி முறையில்

நீ காணாமல் போனாலும்

கட்டைவிரல் நேற்று வரை உன்னை பிடித்து மேல் வந்தது

மறந்திட மாட்டோம்.

மவுஸை கொண்டாடுவோம்.

 

Series Navigationசூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
author

Similar Posts

12 Comments

  1. Avatar
    paandiyan says:

    A review says;
    படம் முழுக்க பரஸ்பரம் எத்தனை முத்தங்கள் கொடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிச் சொல்பவர்களுக்கு ஒரு மவுஸ் இலவசம்.
    so might be suhasini knows and based on this she can go for 100 mokka episode then announce mouse winner!!!!

  2. Avatar
    BS says:

    தேவையில்லாமல் சொற்களை அள்ளித்தெளித்த நீண்ட கட்டுரை. சுஹாசினியின் கருத்து பரவலாக இன்று பலராலும் சொல்லப்படுவதே. இணையதளங்கள் வந்தவுடன் எல்லாருமே எழுதப்புறப்பட்டு விட்டார்கள். தமிழைப்பொறுத்தவரை, முக்காலவாசிப்பேர் எழுத்தை ஆராதிப்பவர்களோ, அதை முழுனேரமாக எடுப்போரல்ல. ஏதோவொரு பொழுதுபோக்கிகிறக்காவும் ஈகோ கிராடிப்ஃபிகேசனுக்காக (அதாவது தன் முதுகைத்தானே சொறிந்து சுகிப்பது) எழுதுகிறார்கள்.

    எனவே இணையதளத்தில் வரும் சினிமா விமர்சனங்களை அமெச்சூர்த்தனமாக பொழுதுபோக்கிற்காக‌ எழுதப்படுகின்றன என்றுதான் எடுக்க வேண்டும். ஏதோ ஒரு சிலர் இருக்கலாம். மற்றபடி இவையனைத்தையும் ஒரு குழந்தை விளையாட்டாக தள்ளிவிடலாம். இப்படி இருக்க, சுஹாசினி போன்றோரின் கவலை என்னவென்றால், சினிமாவுக்குப் போகும் கூட்டம் இளைஞர்களால் நிரம்பிவழிகிறது. இவர்கள் இன்டெர்நெட் உலாவருபவர்களும் கூட. இவர்கள் கண்களின் இந்த அமெச்சூர்களின் விமர்சனம் தென்பட்டு இவர்கள் மனங்களைச்சுண்டி விடும் அபாயத்தில் இருக்கிறது. போலி டாகடர்களிடம் போகும் ஏழை மக்கள் கொஞ்சமா நஞ்சமா> அதைபோல போலிச்சாமியார்களிடம் போய் கற்பையும் பணத்தையும் இழப்பவர் எத்தனை எத்தனை?

    எனவே இணையதள அமெச்சூர் விமர்சகர்கள் போலிச்சாமியார்கள் போலி டாக்டர்கள் இவர்களெல்லாம் ஒன்று. சுஹாசின் சொன்னது ஒரு எச்சரிக்கை: யாருக்கு இப்படி இவர்களிடம் ஏமாந்து மாய்ந்துபோகாமலிருக்க.

    Well done Ms Suhasini. You have shown these egoist mouse-movers their places !

  3. Avatar
    mahakavi says:

    I am not sure what Suhasini wants. It appears (to me at least) that she wants loads of moviegoers to watch the movies without reading amateur reviews. Does it mean her intent is to manufacture favorable reviews by magazines? If you take good movies there will be audience, irrespective of what mouse-wielding amateur reviewers write. To paraphrase a Thamizh proverb: மடியில் கனமில்லையெனில் வழியில் பயமில்லை.

    1. Avatar
      BS says:

      I think the purpose of her comments have been misconstrued by you.

      விமர்சனங்களைப் படித்துவிட்டு திரைப்படங்களோ, நாடக‌மோ, இலக்கியமோ படிக்கவே கூடாது. இதுதான் நாம் முதலில் தெரிய வேண்டியது. ஏனென்றால், விமர்சனங்கள் விமர்சகரின் தனிப்பட்ட பார்வை மட்டுமே. இலக்கிய விமர்சனமும் அவ்வாறே. எனவே முதலில் படிக்கவோ, பார்க்கவோ செய்ய வேண்டும். பின்னரும் விமர்சனத்தைத் தேடிப்போய் படிக்ககூடாது. அவை தென்பட்டால் படித்து, அவர் எப்படி அனுபவித்தார்; நமக்குத்தென்படா பலவும் அவரிடன் தென்பட்டாள். வியக்கலாம். மீண்டுமொறு பார்க்கலாம்; படிக்கலாம்.

      விமர்சனங்கள் தேர்ந்த விமர்சகரால் எழுதப்படவேண்டும். அவர் எதையும் குப்பை என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதமாட்டார்கள். சில படங்கள் அப்படி முற்றிலும் ஒதுக்கத் தக்கவையாக இருந்தாலும் அப்படங்களை எடுத்தோர் நல்ல நோக்குடன்தான் எடுத்தனர் என்பதால் விமர்சகன் என்ன, எப்படி, எங்கு தவறுகள் நேர்ந்தன என்று புரியும்படி எழுதவேண்டும். இவையெல்லாம் ஒரு தேர்ந்த விமர்சகனால் மட்டுமே முடியும்.

      மவுசை ஒரு கையிலெடுத்துக்கொண்டு, இன்னொரு கையிலால் பீசாத்துண்டை வாயில் நுழைத்துக்கொண்டு எழுதும் லஞ்ச் இடைவேளை விமர்சகர்களும், போட்டுத்தாக்கினால் பலரும் படிப்பர் – அதாவது ரோட்டில் சண்டை நடந்தால் வேடிக்கப் பார்க்கக்கூடுவதைப் போல – என்று குறுமகிழ்ச்சியடையும் விமர்சகர்களும்தான், சுஹாசினியால் குறிப்பிடப்படுகிறார்கள்.
      \
      பத்திரிக்கைகள் ஒரு துறையில் நன்கு கற்றவர்களையே விமர்சகராக வைப்பர். நாட்டிய, இசை நிகழ்ச்சியைப்பற்றி இந்த விமர்சகர்கள் எழுதமாட்டார்கள். அவ்வளவு பயம். எந்த பிளாக்கரும் எழுதி நான் பார்த்ததில்லை. ஏனென்றால், அதற்கு நாட்டிய, இசை நுணுக்கங்கள் நன்கு தெரிந்திருக்கவேண்டும். ஆனால், சினிமாவைப்பற்றி நாலு வார்த்தை நறுக்கென்று பாட் ஷாட்ஸ் போட்டுவிட்டு ஓடிவிடலாம். குழந்தைகள் கல்லெறிந்துவிட்டு ஓடி ஒழிந்துகொள்வதைப்போல.

      தேர்ந்த விமர்சனம் குறை நிறைகளச்சொல்லும்போது சுஹாசினி விமர்சகரைத் திட்டினால் மட்டுமே நாம் சுஹாசினியில் கருத்தை இகழலலாம். மற்றபடி அவர் சொல்வது சரியே.

      நான் விமர்சனங்களைச் சட்டை பண்ணுவதில்லை. பத்திரிக்கைகளில் வந்தாலும். என தனிநபர் அனுபவம் எனக்குச் சொந்தமானது. அதைப் பறிகொடுக்க நான் ஆசைப்படுவதில்லை. சிலவேளைகள், விமர்சனத்தைப்படித்துவிட்டு சில பிரபல எழுத்தாளர்கள் படைப்புக்களைப் படித்துவிட்டு, ஏமாந்து போனேன். தரங்கெட்டவைகளை பிரபலம் என்பதால் தூக்கிவைத்துப்பேசி ஊரோடுடொத்துவாழ் என்ற இலக்கணத்தின்படி செய்தலிது. கோழைகள் இவர்கள், தேர்ந்த விமர்சகன் என்ற போர்வையில் உலாவரும் பித்தலாட்டப்பேர்வழிகளும் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்.

      1. Avatar
        mahakavi says:

        No, I did not misconstrue her intent. What is she afraid of? She wants to go with the establishment and not with maverick views. The establishment can be “bought”—like hiring a few people scattered in the audience in theaters and asking them to produce “canned” laughter and applause. The random views by amateurs will have some poor opinions but also a few good opinions too. At the end of the day, they (the mouse wielders) represent the mass—not the few in the establishment. If you don’t like the random reviews why not do away altogether with reviews? Still those who want to see the movies (their favorite stars/directors) will do so–come professional reviews or amateurish reviews. There have been junk movies which were box office hits while some very good ones bombed. The bottom line: There is nothing to fear except fear itself.

  4. Avatar
    BS says:

    I don’t think her comments were out of any fear. They came from the frustration on seeing the irresponsible and childish amateurs. They don’t represent general public as you believe. The general public don’t read blogs or internet fora to see movies or read books. If at all they are led by popularity, that popularity has come to them thorough hearsay in the neighbourhood. Amateur commentators kid themselves with the delusion that popularity of the film go up or down only due to their views. In book review, too, we see ireviews are written by amateurs. Like children imitating adults. The amateur load their minds with a lot of prejudices and, for e.g., the reviews on Mathoru Bagan and the film Komban are a kind of emotional reactions far and against. And, you want them to be taken seriously. :-) Oh No.! However,, there are a few rare good ones, as I have already pointed out. Suhashini cannot target them; nor do they need to bother about Suhashini. Only the juvenile blather of others only is nuisance. The essay writer is a fine e.g of what I say: he even distorts the name of the Director, you see.

  5. Avatar
    sanjay says:

    BS,

    You are missing the point here. You say that knowledgeable people are employed by the media to write reviews. That is true but what is the impact? There are many films which are thrashed by these reviewers, but these films have become big hits. Ravanan was hailed by these critics but it flopped.

    The recent release “Kaaki sattai” was thrashed on the internet but the movie is a hit. The audiences today are not so dumb as they were when, say Nayakan was released. Otherwise, they would have realized that it is an utter copy of the Godfather & the film may not have become such a big hit.

    People do not go to watch a movie solely on the basis of net reviews.

    If a film maker thinks that the reviews of his films should only be positive, film making is not the place to be in.

    I look at her comments in another angle. Mani’s last few films have been washouts so any publicity is a good thing.

    As the article has pointed out, it is only bcos of the mouse that mani is surviving. Most of is films are copies of Hollywood films. Can you tell me 1 film of his which had an original script? Maybe Mouna raagam. I cannot think of anything else.

    He has got much much more than what he deserves, that he should be thankful that people still go to watch his films.

    Suhasini must remember 1 thing – Never fear criticism when you are right, never ignore it when you are wrong.

    Also, you must remember that most of the reviews posted ion the internet are by poepl who have seen the movie.

  6. Avatar
    mahakavi says:

    The editor selectively refuses to publish some comments. I wrote one a couple of days ago. It showed up here “awaiting moderation”. But it did not see the light of the day. Unless a comment is abusive the editor is duty-bound to publish all comments. I did not write anything objectionable—either in content, tone, or in language. Some editorial privilege indeed!

  7. Avatar
    admin says:

    தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துகளை எழுதவும்.
    ஆசிரியர் குழு

  8. Avatar
    paandiyan says:

    Thanks to vikatan comments;
    தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே !
    தாலி கட்டாமல் ஊருக்குத் தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி !
    தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம்
    இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்திக் கொண்டு போனால் – ராவணன்
    தாலி கட்டலாம வேண்டாமா என சிந்தித்தால் -கடல்
    ஸ்கூல் பெண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன்
    ஒரு மனைவிக்கு தாலி கட்டி விட்டு இரு மனைவியருடன் வாழ்வது – அக்னி நட்சத்திரம்
    ஒரு பெண்ணுக்கு ரெண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருட திருட
    தாலி கட்டி விட்டு புருஷனுக்காக போராடினால் – ரோஜா
    காதலித்த பெண்ணுக்கு தாலி கட்ட முடியாமல் போனால் – இதய கோயில்
    —– ரத்னம் டா ! மணிரத்னம் டா !!

  9. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துகளை எழுதவும்.
    ஆசிரியர் குழு//

    இந்தப் பின்னூட்டங்களிலேயே நான் இரசித்தது இதுதான்.

    சரியாகச் சொன்னீர்கள்! தமிழ்ப் பத்திரிகையில் ஏன் ஆங்கிலத்தில் மடலாடவேண்டும்?

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *