மீண்டும் முத்தத்திலிருந்து

This entry is part 22 of 53 in the series 6 நவம்பர் 2011


நீ யாராக மாற விருப்பம்
ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.
நான் புலியாக
வீரத்தின் சின்னமாக
ஆணின் ஆகுருதியாக…

நான் தென்றலாக
பூவாக எங்கும் உலாவி…

ஆடை களைந்து
ஆடிய ஆட்டத்தில்
உடம்பு சோர்ந்து விடவில்லை
என் பிரிய மீனே என்று கொஞ்சினான்
என் பிரிய காற்றே என்றாள் அவள்.

உடம்புகள் பிரிந்து
தனித்தனியாக்க் கிடந்த போது
புலியாக இருந்த்தாக அவன் சொன்னான்.
இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட.

நானும் தென்றலாக உலவி வந்தேன்
அப்புறம் புறாவாகவும், காடையாகவும் கூட.

வெவ்வேறு உருவங்களில்
திரிந்து விளையாடி
சுயம் பெற்றதாகச் சொல்லினர்.
தந்த முத்த்த்தில்
மீண்டும் விளையாட்டுக்கு திரும்பினர்
இன்னும் புலியாகவும், பூவாகவும்.
வேறு வேட்த்தில் திரும்பத்திருமப.

வேண்டுகோள்/எச்சரிக்கை

எனது மின்ன்ஞ்சல் முகவரியிலும், பெயரிலும் பல செய்திகள் பலருக்கு விசமத்தனமாக அனுப்பப்பட்டுள்ளன. அதை நண்பர்கள் நிராகரிக்க வேண்டுகிறேன். மின்னஞ்சல் பெட்டி ஊடுருவப்பட்டு களவாடப்பட்டுள்ளது.. இதை எச்சரிக்கையுடன் கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் ஏற்பட்டுள்ள மனச்சங்கடங்கள் குறித்து என வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..=சுப்ரபாரதிமணியன்

Series Navigationசிலர்நீவிய பாதை
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *