மெல்ல இருட்டும்

author
2
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி

மெல்ல இருட்டும்
இவ்வேளையில்
உன் நினைவுகள்
ஒரு
நிலவைப்போல்
மேலெழுந்து
குளிர்ந்து ஒளிர்கின்றன.

நிலவின் ஒளி
மெல்லடி வைத்துப்
படர்கையில்

இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது

குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை
முழுவதும்
நனைத்திருந்தது.

அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்.

Series Navigationமணிபர்ஸ்நம்பிக்கைகள் பலவிதம்!
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Kavya says:

    புனைப்பெயரில் பெண் கவிஞர்கள் எழுதினால் நன்று. Only then, I can have a free flow of sensual criticism.

    காதலனை அல்லது கணவனை, காதலியை அல்லது மனைவியை முறையே தமிழ் இலக்கியம் தலைவன், தலைவி என்றழைக்கும்.

    இங்கே தலைவி தலைவனை நினைத்து வாடுவதாகத்தான் கொள்ளவேண்டும். ஏனென்றால், அருகில் இல்லாதவனைத்தான் நினைப்பர். அவளின் தலைவன் இல்லை இப்போது. நினவைலைகள் கண்டிபாக வாட்டும். அவ்வாடலைத் தமிழ் இலக்கியம் பசலை நோய் என்று பகரும்.
    தமிழ் இலக்கியத்தின் முதல் சாஃப்ட் போர்ன் ரைட்டர் வள்ளுவர் தலைவி தலைவனை நினைந்து வாடுவதை பச்சையாக எழுதியிருக்கிறார்.

    இங்கேயும் கொஞ்சம் சாஃப்ட் போர்ன் இருக்கிறது. ஆனால் கவிநயத்தோடு இருப்பதால் படிக்கலாம்.
    அவ்வரிகள்:

    குளிர்ந்த ஒளி

    மழையெனப் பொழிந்து

    என்னை
    முழுவதும்
    நனைத்திருந்தது.
    அப்போது
    பூமியெங்கும்
    பூத்திருந்தன
    நிலவுகள்.

    நினைப்பே அவளை நனைத்ததென்றால், உண்மை எப்படியிருக்கும்? காம தேவனே கலேபரம் ஆகிவிடுவான். அல்லது தன் பதவியை இவளுக்கு கொடுத்துவிட்டு சந்நியாசி ஆகிவிடுவான்.

    ”நிலவுகள் பூத்திருந்தன”

    ஆம்பிளை ஒப்பனாச் சொல்லிவிடுவான்; பெண் இப்படித்தான் வெளியிடுவாள் ரிச்ல்டுகளை!

    ’குங்குமத்தில்’ சிவசங்கரியின் ஒரு புதியநாவல் தொடங்கியது. முதல்வாரமே அவர்களுக்குத் திருமணம். இரண்டாவது வாரம் முதலிரவுக்காட்சி என்று சூசகமாக அறிவித்துவிட்டார் நாவலாசிரியை.

    ஓடோடிச்சென்று குங்குமம் படித்தேன் மறுவாரம். எப்படி அந்த முதலிரவு. வரிக்கு வரி மேலே போய்கொண்டிருக்க, இறுதி அந்த காட்சியும் வந்தது. ‘அவன் அவளை அணைத்தாள்’ முடிந்த்து வர்ணனை ஒரே வரியில்.

    முதலணைப்பு. ஆணின் ஸபரிசம் முதலில் பெண்ணாள் அனுபவிக்கப்படுகிறது. அதன்பிறகு மெல்ல மெல்ல. அவளுள் என்ன மாற்றம்? வள்ளுவர் அசத்திவிடுவார். புஸ்பா தங்கதுரை சென்சார் போர்டையே ஓட வைத்துவிடுவார். ஆனால் சிவசங்கரி:

    “அவளுள் வண்ணவண்ண விளக்குகள் எரிந்தன”

    பூ…ரிசல்டு இவ்வளவுதானா? She touches upon the effect of orgasm in this line. Not mere embrace. But all the act that followed. anf final crescendo i.e orgasm and its effect, is told in the above one liner.

    அதே போல ”நிலவுகள் பூத்தன” நினைவுகளை வைத்தே.

    சிருங்கார ரசமிக்க கவிதைகள் தமிழுக்குப்புதியல்ல அது விரசமன்று. ரசம். அதன் வழியாகவும் ஆன்மிக உயர்நிலை அடையலாமெனப்பறைவது தமிழ் வைணவம். ஆண்டாள், கலியன் நம்மாழ்வார் போன்றவர்கள் அப்படி சாதித்திருக்கிறார்கள்.

    Thank you poet for this sensual offer in this Thinnai

    அருமையான கவிதை. நான் இரசித்தேன். இரசிக்கவில்லையென்றால் எனக்கு வயதாகிவிட்டது என்று பொருள்.

  2. Avatar
    punaipeyaril says:

    புனைப்பெயரில் பெண் கவிஞர்கள் எழுதினால் நன்று –> ஹம்ம்…..

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *