ரோஜா ரோஜாவல்ல….

This entry is part 13 of 28 in the series 29 ஏப்ரல் 2012


சந்தேகமும் எரிச்சலுமாய்ப்
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில் 
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக் 
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த 
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……
                           -உமாமோகன்.
Series Navigation2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்வேறோர் பரிமாணம்…
author

உமாமோகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *