வடகிழக்கு இந்தியப் பயணம் : 7 

This entry is part 7 of 9 in the series 1 மே 2022

 

 

சுப்ரபாரதிமணியன்

பருத்தியும் தேயிலையும்

சுற்றுலாப் பேருந்தில்  குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி

பருத்தி பல்கலைக்கழகம்  கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது

(முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . 

 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   

பருத்திக் கல்லூரி 1901 ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் முன்னாள் பிரிட்டிஷ் மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டனால் நிறுவப்பட்டது. இது அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் உள்ள பழமையான உயர்கல்வி நிறுவனமாகும் . [2] பருத்திக் கல்லூரி 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரியாக மாறியது , பின்னர் அது 2011 இல் நிறுவப்பட்டபோது, அஸ்ஸாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் (2011 ஆம் ஆண்டின் XIX ஆம் சட்டம்) காட்டன் கல்லூரி மாநில பல்கலைக்கழகம் ஆனது. பருத்திப் பல்கலைக்கழகச் சட்டம், 2017 கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இயற்றப்பட்டது 

கல்லூரி இல்லாத ஒரே மாகாணம் அஸ்ஸாம் என்பதாலும், குவஹாத்தி மிகவும் வசதியான இடம் என்பதாலும், குவஹாத்தியில் கல்லூரியைத் திறக்குமாறு மாணிக் சந்திரா 1899ல் பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதினார். பதிலுக்கு, சர் ஹென்றி ஸ்டெட்மேன் காட்டன் , KCSI, அப்போதைய அஸ்ஸாமின் தலைமை ஆணையர், 3 நவம்பர் 1899 அன்று கவுகாத்தியில் ஒரு கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்தார். பெயர்: பொது மக்களால் தீர்மானிக்கப்பட்ட பருத்திக் கல்லூரி, 27 மே 1901 அன்று பருத்தியால் தொடங்கப்பட்டது. கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது  மேலும் ஐந்து பேராசிரியர்களுடன் தொடங்கப்பட்டது; இதில் கல்லூரியின் முதல் முதல்வர் பிரடெரிக் வில்லியம் சட்மர்சன் மற்றும் 39 மாணவர்கள் அடங்குவர்.

இக்கல்லூரியானது சுதந்திர இயக்கம் மற்றும் மாநிலத்தின் இலக்கிய மற்றும் கலாச்சார இயக்கங்களின் மையமாக இருந்தது, இது இந்தியாவின் ஒரு தனித்துவமான, ஒருங்கிணைந்த அங்கமாக அஸ்ஸாமின் அடையாளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. 1948 இல் கௌஹாத்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, கல்லூரி அதனுடன் இணைக்கப்பட்டதால், அது ஒரு தொகுதிக் கல்லூரியாக மாறியது 2015 இல் கல்லூரி சிறப்பு பாரம்பரியக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. 

1992 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, கல்லூரி சிறந்த மையமாக அறிவிக்கப்பட்டது, [6] இந்த நிகழ்வானது , அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மாவுடன் ஒரு புனிதமான விழாவில் கொண்டாடப்பட்டது . மேலும் இது அதிகாரப்பூர்வமாக முதுகலை கல்லூரியாக மாறியது. [5]

பருத்திக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை 27 மே 2001 முதல் 26 மே 2002 வரை ஒரு வருட நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. ₹ 4.00 நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

 

பருத்தி கல்லூரி மாநில பல்கலைக்கழகம் அசாம் அரசாங்கத்தின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது  இந்தப் புதிய பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கு உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குவது,

காமரூப் ஊரக மாவட்டம் அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது

மகாராஷ்டிரம் மாநிலம்  அதிக அதிக அளவில் பருத்தியை விளைவிக்கிறது

காமரூப் ஊரக மாவட்டம்அசாமில் உள்ளது. இதன் அருகில் உள்ள பார்பேட்டா மாவட்டம்நல்பாரி மாவட்டம் ஆகியவற்றுடன் இதுவுன் சேர்ந்த பகுதியை காமரூப் பகுதி என்கின்றனர். இந்த மாவட்டங்களில் காமரூபி மொழி பேசுவதே இதற்கு காரணம். இந்த மாவட்டம் 4345 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது

பருத்தி ஆசியாஐரோப்பாஆப்பிரிக்காஅமெரிக்காஆத்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி விளைச்சலில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   பேரளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பே 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு விளைச்சல் செய்யப்பட்டது.

பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர்..

மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் எந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல ஈடுகள் தொடர்ந்து வளரக்கூடியது.

பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது.

பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணெய் ஆட்டப்படுகிறது. தூய்ம செய்யப்பட்ட பின், இது மனிதர்களால் மற்ற எண்ணெய்கள் போலவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  அஸ்ஸாம் மாநில மக்கள் அதிக அளவில் பருத்தி ஆடைகள் அணிகிறார்கள் என்பது முக்கியமானச் செய்தியாகும்.

பருத்தி போலவே தேயிலை என்பது இந்த மாநிலத்தில் முக்கியமான விளை பொருளாகவும் பொருளாதாரத்தை நிர்ணயிக்க்க்கூடியதாவும் விளங்குகிறது

அஸ்ஸாம் தேயிலை என்பது அதன் உற்பத்திப் பிரதேசமான இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தேயிலை ஆகும். அசாம் தேயிலை ஒரு கருப்பு தேயிலை ஆகும். அசாம் தேநீர் குறிப்பாக கேமல்லியா சினன்சிஸ் என்ற சீனத் தேயிலைச் செடியிலிருது பெறப்படுகிறது.[1][2] இதே தேயிலைச் செடி பாரம்பரியமாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் பயன்படுத்தப்படுகிறது அஸ்ஸாம் தேநீர் பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு நிகரான உயரட்திலோ அல்லது அதற்கருகிலோ வளர்க்கப்படுகிறது. மேலும் அதன் வடிவம், அதன் உற்சாகம், தீஞ்சுவை, அடர்வு, பிரகாசமான நிறம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. அசாம் தேயிலை மற்றும் அசாம் தேயிலைக் கலவைகள் கொண்ட தேயிலைகள் காலைத் தேநீர் ‘ என விற்கப்படுகின்றன. உதாரணமாக, ஐரிஷ் காலை உணவு தேநீர், ஒரு சுவையான மற்றும் வலுவான காலைத் தேநீர் ஆகும். இத்தேயிலை சிறிய அளவிலான அசாம் தேயிலை இலைகளைக் கொண்டுள்ளது.

அசாம் மாநிலம் உலகின் தேயிலை வளரும் பகுதியில் மிகப்பெரியது ஆகும் பிரம்மபுத்ரா ஆற்றின் இருபுறமும், பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் எல்லையிலும் அசாம் உள்ளது. இந்தியாவின் இந்த பகுதி அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மழைக்காலத்தில், ஒரு நாளைக்கு 10 முதல் 12 அங்குலங்கள் வரை (250–300   மிமீ) மழைப் பொழிவு இருக்கும். பகல்நேர வெப்பநிலை சுமார் 96.8 பாரன்ஹீட் (36° C) ஆக உயர்கிறது. தீவிர ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாக பைங்குடில் விளைவு போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது. இந்த வெப்பமண்டல காலநிலை அசாமின் தனித்துவமான உலர் தேயிலைச் சுவையில் பங்களிக்கிறது, இந்த அம்சத்தால் இந்தத் தேநீர் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது.

அசாம் தேயிலை பொதுவாக அதன் தனித்துவமான கருப்பு தேயிலைகளைக் குறிக்கிறது என்றாலும், இப்பகுதி சிறிய அளவிலான பச்சை மற்றும் வெள்ளை தேயிலைகளையும் அவற்றின் தனித்துவமான குணாதிசயங்களையும் உற்பத்தி செய்கிறது. வரலாற்று ரீதியாக, உலகின் சொந்த தேயிலைச் செடிகள் உள்ள இரண்டு பகுதிகளில் அசாம் தெற்கு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது வணிகத் தேயிலை உற்பத்தி பிராந்தியம் என அழைக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு அஸ்ஸாம் தேயிலைச் செடி ஸ்காட்லாந்து சாகசக்காரரான ராபர்ட் புரூஸ் என்பவரால் அறிமுகமானது.[5] அவர் 1823 ஆம் ஆண்டில் இதை அறிந்தார். இப்பிராந்தியத்தில் அவர் வணிகம் செய்யும் போது அசாமில் “காட்டுச் செடிகளாக” தேயிலைச் செடிகள் வளர்ந்து வருவதை புரூஸ் கண்டதாகக் கூறப்படுகிறது மனிராம் திவான் என்பவர் இதுகுறித்து வழிகாட்டியதோடு அவரை உள்ளுர் பழங்குடியினத் தலைவரான பெஸா காம் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.[6] உள்ளூர் பழங்குடியினர் (சிங்போஸ் மக்கள்) இச்செடியின் இலைகளில் இருந்து தேநீர் காய்ச்சுவதைக் கவனித்த புரூஸ், பழங்குடித் தலைவர்களுடன் இலைகள் மற்றும் விதைகளின் மாதிரிகளைச் சேகரித்து வழங்க ஏற்பாடு செய்தார், அதை அவர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யத் திட்டமிட்டார். ராபர்ட் ப்ரூஸ் சிறிது காலங்களில் இறந்து போனதால் இச்செடி சரியாக வகைப்படுத்தப்படவில்லை. 1830 களின் முற்பகுதியில் ராபர்ட்டின் சகோதரர் சார்லஸ், அசாம் தேயிலைச் செடிகளிலிருந்து சில இலைகளை கல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கு முறையான பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். அங்கு, இச்செடியானது இறுதியாக பலவிதமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இது தேயிலைச்செடி அல்லது கேமல்லியா சினென்சிஸ் வர் அசாமிகா என அடையாளம் காணப்பட்டது, ஆனால் சீனத் தேயிலையிலிருந்து ( கேமல்லியா சினென்சிஸ் வர். சினென்சிஸ் ) வேறுபட்டதாகும்.

 

நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன, அங்கு விளையும் அரியவகை கோல்டன் டீத்தூள் கவுகாத்தி தேயிலை ஏல நிலையம் (GTAC) மூலம் 99,999 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது., மனோகரி கோல்டு டீத்தூள் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்ற ஆண்டு 75,000 ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டது

இந்த அரியவகை தேயிலைத்தூளை சவுரவ் வர்த்தக நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு 99,999 ரூபாய் என விற்கப்படுகிறது. இது போன்ற அரிய வகை டீத்தூளை பல வெளிநாட்டுக்காரர்கள் மிகவும் விரும்புவதாக பிகானி தெரிவித்தார். இந்த விற்பனை அஸ்ஸாம் தேயிலை விற்பனையில் ஒரு பெரிய மைல் கல்லாகும்.

இந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 52 விழுக்காடு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தியாகிறது. அஸ்ஸாமின் பல இடங்களில் விளையும் பல்வேறு தேயிலை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. இந்நிலையில் இந்திய தேயிலை ஆணையம் (NTA) தேயிலைத் தோட்டங்களை விரிவுப்படுத்துவதை நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது, மேலும் அங்குப் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு கால வருங்கால வைப்புத்தொகை (PF) வழங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தாண்டி அஸ்ஸாமில் 850 சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் பராமரிப்புப் பணிகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம்செய்ய வேண்டும். இந்திய தேயிலை ஆணையமும் இதையே பரிந்துரைசெய்கிறது.

 

மனிதனின் அடிப்படைத் தேவையான தண்ணீரை அடுத்து சர்வதேச அளவில் அனைவரும் பருகும் பானம் தேநீர். காலை எழுந்தவுடனே தேநீர் அருந்தவில்லையென்றால் அன்றைய நாளில் எதையோ இழந்துவிட்டது போல் தோன்றும் அளவுக்கு நம் வாழ்க்கையோடு ஒன்றாகக் கலந்து விட்டது. பிரிட்டிஷார் நம் நாட்டில் திணித்தவற்றுள் மிக முக்கியமானது தேயிலை.

அவர்கள் தேவைக்காக நம்மை பயிரிடச் சொல்லி பின்பு நம்மையே நுகர வைத்து அதன் தேவையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டினார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு சர்வதேச அளவில் தேயிலையின் தேவை அதிகரித்தையொட்டி இந்திய அரசு தேயிலை பயிரிடுவதை ஊக்கப்படுத்தியது. மலைவாழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேயிலை அளித்து வருகிறது.

இந்த தேயிலை துறையை பற்றியும் தேநீரை பற்றியும் சில தகவல்கள் உங்களுக்காக….

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் தென்மேற்கு சீனாவில் ஷாங் பேரரசர்கள் தேநீரை மருந்தாக பயன்படுத்தியதற்கு வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

கி.மு.800 களில் தேநீர் அருந்தும் பழக்கம் ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு தேயிலை பரவியது.

17ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டனில் தேநீர் மிக பிரபலமடைந்தது. இதன் பிறகே இந்தியாவில் தேயிலை உற்பத்தியை பிரிட்டிஷார் தொடங்கினர்.

முதன் முதலில் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டவர் மணிராம் தேவான்

தேயிலையை பற்றி படிக்கக்கூடிய கலைக்கு டேசியோகிராபி (Tasseography) என்று பெயர்.

சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் தேநீர் விழா நடத்தப்படுகிறது.

மத விழாக்கள், திருமணம் போன்றவற்றின் போது தேநீர் விருந்து நடத்தப்படுகிறது.

சீனர்கள் இதை `ஆர்ட் ஆஃப் டீ’ என்று அழைக்கிறார்கள்.

இந்தியாவில் இரண்டாவது அதிகம் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய துறை தேயிலை துறை.

ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் தேநீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் விளம்பரப்படுத்தினர். 1920-ம் ஆண்டுக்கு பிறகுதான் இந்தியாவில் தேநீர் அருந்துவது மிகவும் பரவலானது.

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில்

சீனாவின் பங்கு 36%

இந்தியாவின் பங்கு 22.6%

உலகின் மொத்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் நுகர்வு 25%

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் அஸ்ஸாம். அஸ்ஸாமில் 3,04,000 ஹெக்டேரில் தேயிலை பயிரிடப்படுகிறது. அஸ்ஸாம் டீ என்பது உலகளவில் மிகவும் பிரபலம்.

2014-ம் ஆண்டு தகவலின் படி இந்தியாவில் தேயிலை சந்தையின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் கிரீன் டீ சந்தையின் மதிப்பு 250 கோடி ரூபாய்

எகிப்தியர்கள் ஹைபிஸ்கஸ் என்று அழைக்கக்கூடிய செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் டீயையே அருந்துகின்றனர். இதன் பெயர் கார்ஹடே.

 

ஐரோப்பியர்கள் மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்

உடல் எடையை குறைப்பதற்கு வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கிரீன் டீயை விரும்புகிறார்கள். 1800களுக்குப் பிறகு கிரீன் டீ உலகளவில் பிரபலமடைந்தது. அதிலும் அமெரிக்கர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கமீலியா சைனசிஸ் என்ற தேயிலையிலிருந்துதான் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் ஜப்பான்.

அஸ்ஸாமில் உள்ள தேயிலைத் தொழிலாளர்கள் தினக்கூலியாக 205 யை கூடப் பெறவில்லை.  இது கேரளா (403), கர்நாடகா (349), மற்றும் தமிழ்நாடு (333) ஆகிய மாநிலங்களின் தினக்கூலியை விட மிகக்குறைவு.

அசாமின் 7 மாவட்டங்களில் 5,000 தேயிலைத் தொழிலாளர்களுடன் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது‌.

தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக ஊதியத்தை உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு அரசாங்கம் மற்றும் தேயிலைத் துறைக்கு ஆக்ஸ்பாம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுமார் 39% நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் 61% தற்காலிக தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கிறார்கள்.

கோவிட் நெருக்கடிக்கு முன்னர், 7% பெண் தொழிலாளர்கள் மட்டுமே மகப்பேறு விடுப்புக்குப் பதிவுசெய்துள்ளனர். வெறும் 2% பேர் மட்டுமே தங்கள் முதலாளிகளால் வழங்கப்படும் குழந்தைகளின் கல்விக்கான வசதியைப் பெற முடிந்தது” என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு தோட்டத் தொழிலாளியின் ஊதியத்திலிருந்து முதலாளிகள் சராசரியாக 778 ஐ மாதத்திற்குக் கழிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளி உண்மையில் ஒரு நாளைக்கு 160-180 ரூபாய் தான் ஊதியமாய் பெற்றுள்ளனர்.

தரத்தின் காரணமாக அசாம் தேநீர் முதன்மையாகக் கென்யா மற்றும் இலங்கை போன்ற ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் போட்டியிடுகிறது. ஆக்ஸ்பாம் கருத்துப்படி, இந்த நாடுகளில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மோசமான தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளே கிடைக்கின்றன.

அசாமின் தினக்கூலி 205 ரூபாயும் ஒப்பிடும் போது அது கென்யாவில் 370 மற்றும் இலங்கையில்
260 ரூபாயாக உள்ளது.

 

 

 

ஆங்கிலேயர்களால் அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களில் எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. கிராமங்கள் தற்போது வளர்ந்துவிட்டன; சில கிராமங்களில் தேயிலை தோட்டம் சாராத பணிகள் கிடைக்கிறது; ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

உலகின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் சிலதாங்கள் தேயிலை வாங்கும் இந்தியத் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஆபத்தான மற்றும் மிகவும் இழிவான நிலைமைகளில் வேலை செய்ய வேண்டியிருப்பதை பிபிசி ஆய்வு ஒன்று கண்டறிந்ததை அடுத்து இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது.

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய கழிப்பிட வசதிகள் இல்லை, கழிப்பிடங்கள் இருந்தால், அவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன. கழிவுப் பொருள் தொட்டிகள் நிரம்பி வழிந்து தொழிலாளர்கள் வாழும் இடங்களுக்குள் கழிவு நீர் வருகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இது போன்ற மோசமான நிலைமைகளும், மிகக் குறைவான ஊதியமும், தொழிலாளர்கள் ஊட்டச்சத்து இல்லாத நிலையிலும், வியாதி தொற்றும் நிலையிலும் இருப்பதற்கு வழி வகுத்திருக்கின்றன.

தேயிலைப் பயிரின் மீது தொழிலாளர்கள் பாதுகாப்பு ஏதுமின்றி ரசாயன உரங்களைத் தெளிப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது.

முன்னணி பிரிட்டிஷ் தேயிலை நிறுவனங்களான, பி.ஜி.டிப்ஸ், ட்வினிங்ஸ், மற்றும் டெட்லீஸ் போன்றவை நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்திருக்கின்றன.

இந்தியாவில் தேயிலை தயாரிப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும், இந்திய தேயிலை சங்கம் என்ற அமைப்பின் அஸ்ஸாம் கிளையின் தலைவரான, சந்தீப் கோஷ், தொழிலாளர்களின் வாழ்விட நிலைமைகள் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்டார். கழிப்பறை சரியாக இல்லாத நிலை, திறந்த வெளியில் கழிப்பது போன்றவை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைமைகள், இவைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டியவை, என்று அவர் பிபிசியிடம் பேசுகையில் கூறி

 கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேயிலைத் தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவின் தேயிலைத் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 22ஆம் தேதியிலேயே தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இல்லாமல்

காங்கிரஸின் “சதித்திட்டத்தின்” ஒரு பகுதியாக உலகெங்கிலும் பிரபலமான அஸ்ஸாம் தேயிலை மற்றும் நமது பண்டைய புனித பாரம்பரியமான யோகாவை அவதூறு செய்ய ஒரு ”டூல்கிட்” கருவித்தொகுதி சமீபத்தில் முயன்றது என்றார். பிரதமர் நரேந்திர மோடி “அசாம் தேயிலைக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. நீங்கள் ஒரு கருவித்தொகுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இது அசாமின் தேயிலைத் தோட்டங்களை அழிக்க முயன்றது. எந்த        இந்தியரும் அதை அனுமதிக்க மாட்டார்” என்று அவர் கூறினார்.

இது ஒரு வித்யாசமானப் போட்டியும் பேட்டியும் ஆகும். எப்படியிருந்தாலும் நேனீர் சாப்பிடும் போது தொழிலாளர்களின் ரத்தமும் ஞாபக்ம் வருவதும் தவிர்க்க இயலாததே .

Series Navigation’மனுசங்க’இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    தேயிலை பற்றி பல அறியப்படாத விவரங்களையும் தேயிலையை முன்னினிறுத்தி நடத்தப்படும் நுண்ணரசியல் பற்றியும் சொல்லும் இத்தொடர் வரவேற்புடையது.வாழ்த்துக்கள் திரு.சுப்ரபாரதிமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *