வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!

This entry is part 21 of 31 in the series 31 மார்ச் 2013

 Walt Whitman

(1819-1892)

(புல்லின் இலைகள் –1)

எதிலும் நீ இருக்கிறாய் ..!

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

உள்ளும் புறமும் தெய்வாம்சம்

எனக்குள்ளது ! நான்

எதைத் தொட்டாலும், யாரேனும்

எனைத் தொட்டாலும்

எனக்குப் புனித மாகும் !

பிரார்த்தனை மணத்தை விட எனது

அக்குள்ளின் வாசனை

மிக்க நேர்த்தி யானது !

எனது சிரமானது

ஆலயம், பைபிள் போன்ற

சமய விதிகளை விடச்

சாலச் சிறந்தது !

ஒன்றைவிட நான் மேலாய் வேறொன்றை

வழிபட்டால் அது என்

உடலுறுப்பின் வளர்ச்சியால் தான் !

 

 

என் பளிங்கு வார்ப்பில்

இருப்பது நீ !

நிழலில், நில வசிப்பில்

இருப்பது நீ !

நிமிர்ந்த குதிரை ஓட்டி நீ !

என் உழுத நிலத்தில்

எது புகுந்தாலும்

அது நீதான் !

என் செழித்த குருதி நீ !

என் வாழ்வின்

வெளுத்த பாலோட்டம் நீ ! நான்

அழுத்தித் தழுவும் மார்பு நீ !

எந்தன் மூளை

உந்தன் ஆன்மீகச் சுழற்சி !

சொட்டுச் சொட்டாய்க் கசியும்

மேப்பிள் மரச்சார் நீ !

கோதுமை ஆண்மை நார் நீ !

 

தாராளமாய்க் கொடை அளிக்கும்

சூரியன் நீ !

என் முகத்துக்கு

ஒளியும் நிழலும்

அளிக்கும் ஆவி முகில் நீ !

வேர்க்கும் சிற்றோடை, பனித்துளி நீ !

உடல் உறுப்பை எழுப்பும்

உணர்வுத் தென்றல் நீ !

தேக்கு மரக் கிளைகள் நீ !

அகன்ற செழிப்புத் தளங்கள் நீ !

சுழிவுப் பாதை களில்

இளைப்பாறும் சுமைதாங்கி நீ !

நின் கைகளைப் பற்றினேன்,

நின் முகத்தில் முத்த மிட்டேன்,

நானென்றும் தொடும்

மானிடப் பிறவி

நீ ஒருத்தி தான் !

 

+++++++++++++++++++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
    3. Britannica Concise Encyclopedia [2003]
    4. Encyclopedia Britannica [1978]
    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 27, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரிநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *