வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

(These I Singing in Spring)

என் வசந்த காலப் பாட்டு

 (1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

காதலருக்காக நான் பாடப் போகும்

வசந்த காலப் பாட்டு

அவரது சோகத் துயர்களை நான்

அறிந்து கொள்ள வேண்டும்.

தோழருக்கு

என்னைத் தவிரத் தகுதி யான

கவிஞன் யார் ?

சேமித்துக் கொண்டு

பூமியின்

பூந்தோட்ட மெல்லாம்

பார்வை இட்டுவேன்.

விரைவில் கடப்பேன் அந்த

வாசல்களை.

ஏரிக்கரை வழிச் செல்வேன்

இப்போது.

சேற்றில் கொஞ்சம்,

நீரிலும் கால்பட அச்சமில்லை !

வேலிக்கு அருகில்,

பூர்வக் கற்கள் வீசி எறிந்து

சேர்த்த குவிப்பில்,

காட்டுப் பூக்கள்

திராட்சைக் கொடிகள்,

களைகள்,

நிரம்பிய களத்துக் கப்பால்,

வெகுதூரக் கானகத்தில்

அல்லது

பிந்தைய வேனிற் காலத்தில்

தனியனாய்

தரணி மண் வாசனையில்

இங்கு மங்கும் மௌனமாய்

உலவிச் செல்வேன்;

 

 

சிலர் பக்கத்திலும்

சிலர் என் பின்னாலும்

சிலர் என்னைப் பின்பற்றியும்,

வருவதாய் நினைத்தேன்.

அவருடன் பாடிக் கொண்டு

திரிந்தேன்.

பூக்களைப் பறித்துக் கொண்டு,

இறுதியில்

இங்கொருவன் என்னைப்  

பரிவுடன் நேசிக்கக் கண்டேன்.

திரும்பி வந்தான்

மறுமுறை;

ஒரு போதும்

என்னை விட்டுப் பிரியேன்

என்றுரைத்தான்

உறுதியுடன் !

ஏரி நீரில் எடுப்பதை நான்

ஒதுக்கி வைப்பேன்;

என்னை நேசிப்போர்க்கும்,

என்னைப் போல்

நேசிக்கத்

தகுதி உள்ளோர்க்கும்

மட்டுமே

மகிழ்வுடன் அளிக்க !

 

 

+++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [April 16, 2014]

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *