“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

author
1
0 minutes, 1 second Read
This entry is part 12 of 12 in the series 17 ஜனவரி 2021


டி வி ராதாகிருஷ்ணன்


—————————————————–
முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்
ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக்
குறிப்பொன்று சொல்கிறது.
இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில்
தோன்றிய யோகா வாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் அற்புதங்கள்
ஏராளம்..ஏராளம்…அத்தோடு தமிழகத்தில் பெரும் கலைஞர்கள் ஜலஸ்தம்பனம்,வாயு
ஸ்தம்பனம் ஆகிவற்றுள் தேர்ச்சிப் பெற்று அவற்றின் அடிப்படையான வித்தைகளை
செய்து காட்டி,வியக்க வைத்தனர்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் விச்சுளி வித்தை.
விச்சுளி…அம்பு விரைந்து பாயும் பாய்ச்சல்
.
வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விச்சுளி என்பது.அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை விச்சுளிபறவை.அதாவது நாமெல்லாம் அறிந்த மீன் குத்திப் பறவையின் பெயர்.சுள் என்றால்..விரைந்து எனப் பொருள்.


கழையாட்டத்தில் ஒரு ஆட்டமாகத் திகழ்வது விச்சுளிப் பாய்ச்சல்.ஓரிடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்ணேறி ஓரிடத்தில் தாவிப் பிடித்து பற்றுவது விச்சுளிப் பாய்ச்சல்
.
கழைக்கூத்து என்பது தமிழகத்தில் சிறந்து விளங்கிய கூத்து எனும் கலை.பழைய பாரம்பரியம் மிக்க கூத்துகளில் கழைக்கூத்தும் ஒன்று. வலிமையும்,உயரமும் வாய்ந்த இரண்டு மூங்கில்களை நட்டு ,அவற்றிற் கிடையே உறுதியான கயிற்றை இணைத்துக் கட்டி ஆடவரும், பெண்களும் அதன் மீது நின்று அந்தரத்தில் ஆடிச் சாகசங்கள் செய்வதேக் கழைக்கூத்தாகும்.


இந்தக் கழைக்கூத்தினுள் “விச்சுளிப் பாய்ச்சல்” இருந்ததாக தனிப்பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.விச்சுளிப் பாய்ச்சல் வித்தை மரண அபாயம் மிக்கது.உயிரைப் பெரிதாக மதிக்காதவர்கள் மட்டுமே நிகழ்த்திபடக் கூடியதாகும்.


கூத்தாடுபவர் கழை மீது ஏறி அதிலிருந்த படியே பல வித்தைகள் செய்து காட்டுவர்.பின் யோகப் பயிற்சியால் மூச்சினை அடக்கித் தம் உடலின் பளுவை கயிற்றின் பளுவிற்கு சமன் செய்து கொண்டு வர வேண்டும்.பின்னர், கயிற்றினின்று மேலே தாவி,பறவை போல சிறகு விரித்து..முப்பது இமைப்பொழுதுகளில் அந்திரத்தில் லைத்துக் காட்டிய பின்னர் கணப்பொழுதும் யோசிக்காமல் கயிற்றுக்கு வந்து விட வேண்டும்.


இந்த அபாய வித்தையை எந்தக் காரணம் கொண்டும், ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்யக் கூடாது.மீறிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்பது இவ்வித்தையப் பயிற்றுவிக்கும் ஆசான்களின் முதல் எச்சரிக்கையாக இருக்குமாம்.


இந்த எச்சரிக்கையையும் மீறி.பெண் ஒருத்தி..மன்னரின் ஆணையால்..இரண்டாம் முறையாக அந்த வித்தையை நிகழ்த்தி..உயிரினைத் தியாகம் பண்ணிய வரலாறும்
தனிப்பாடல் ஒன்றின் மூலம் சொல்லப் படுகிறது.
நினைத்துக் கூட பார்க்க முடியாத கலை.இப்படி விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்பதே நமக்கு ஆச்சரியத்தினைத் தருகிறது.

தொண்டை மண்டலம் 24 கோட்டங்களைக் கொண்டதாகத் திகழ்ந்தது.அதில் ஒன்று புழல் கோட்டம்.அக்கோட்டத்தில் அயின்றை (இன்றைய சென்னையில் அயனாவரம் பகுதி) எனும் சிற்றூரில் வேளாண் குடிப் பிறந்த சடையநாத வள்ளல் என்பவர் விறலியர்
வகுப்பினரை ஆதரித்து வந்தார்.


ஒருநாள் கிட்டத்தட்ட பத்து இருளர்கள் அவரது இல்லத்திற்கு வந்தனர்.


வள்ளலின் கணக்குப் பிள்ளை அவர்களைக் கண்டு, “நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார் .

கூட்டத்தில் சற்று வயதான் இருளன், “ஐயா..நாங்க எல்லாம் கழைக்
கூத்தாடிங்க.உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்தோமுங்க..ஒருமுறை வள்ளல் ஐயாவைப் பார்த்துட்டுப் போயிடறோம் சாமி”என்றான்.


“ஐயாவை..இந்த நேரத்திலா..”எனத் தயங்கினார் கணக்கு.


ஆனால் அதே நேரம் தந்த வேலைப்பாடுகள் செய்யப் பெற்ற பெரும் கதவினைத் திறந்து வெளியே வந்தார் சடையநாத வள்ளல்.
கலியுகக் கர்ணனாய், கேட்போருக்கு அள்ளி வழங்கி வருபவர் அவர்.

,
கலைஞர்களும் அவரை நாடி வந்து..ஆதரவினைப் பெற்று வந்தனர்.
“யார் இவர்கள்?”என்றவர் முன், அனைவரும் வணங்கி எழுந்தனர்.
மூத்த இருளன் சொன்னார், “அய்யா..நாங்க கழைக் கூத்தாடிங்க.இந்தக் கலையின் குறைந்து வரும் சில கரணங்களை என் மகள் மிகவும் அநாசயமா செய்வாள் சாமி.உங்க முன் ஒருமுறை அவ திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கொடுக்கணும்”


அப்போதுதான் அவர்களுடன் நின்று கொண்டிருந்த அந்தச்சின்னப் பெண்ணைப் பார்த்தார் வள்ளல்.


பதினாறு வயதே நிர்ம்பியவள்கொள்ளை அழகு.மினு மினுக்கும் கருப்பு நிறம்.அடர்ந்த கரு கரு கூந்தல்..காந்தக் கண்கள்..வண்டினம் நம் இனம் சேர்ந்த இருவர் அவள் கண்களில் புகுந்து விட்டனரோ..என எண்ணும் கருவண்டு கண்கள்.நீங்கள் எள்ளுப் பூவினைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்..கூர்மையான நாசி.மேல் தோல் பிரிந்தாற் போன்ற நாவல் பழ உதடுகள்.அதனுள் முத்துப் பரல்களா? மாணிக்கப்
பரல்களா என வியக்க வைக்கும் வெந்நிற பற்கள்.இவள் கழுத்தினைப் பார்த்த பின்னர்தான் கழுத்திற்கு சங்கு என்ற சொல் வந்திருக்குமோ? என்ற சந்தேகத்தை உருவாக்கும் கழுத்து.தாமரை மொக்கு போன்ற மார்பகங்கள்..மொத்தத்தில் அழகுச் சிலையாய் இருந்தாள் அவள்.


அந்தப் பெண்ணைப் பார்த்து வள்ளல்,”இந்த சிறு பெண்ணா?.இவளுக்கு என்ன வித்தைத் தெரியும்?”என்றார்.


“கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை சிறுவயதிலேயே இவளுக்குக் கற்பித்திருக்கிறோம் “


“விச்சுளிப் பாய்ச்சலா? அது என்ன வித்தை?”என்றார் வள்ளல் ஆர்வத்துடன்.


“சாமி..விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் ஆபத்து நிறைந்த வித்தை.ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள்.அங்கிருந்தபடியே தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.அல்லது யாராவது கையில் ஒரு மோதிரத்தை
வைத்திருப்பார்கள்..”


“அப்புறம்..” வள்ளலுக்கு ஆவல் அதிகமானது.


“எறியப்பட்ட காதணி..நிலத்தில் விழு முன்னர்..மின்னலாய்க் கீழே
பாய்ந்து..அதை கைக் கொண்டு ஒரு நொடியுள் மீண்டும் மூங்கில் உச்சிக்கு பழையபடி சென்றிருப்பாள்.அல்லது, மோதிரம் வைத்திருப்பவர் கையில் உள்ள மோதிரத்தைப் பறித்து மேலே மீண்டும் சென்றிடுவாள்’


“அதெப்படி சாத்தியம்?”


“உச்சத்தில் ஏறிய பின், ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல லேசாக எடுத்துக் கொள்வாள்”

“ஆச்சர்யம்…கொஞ்சம் ஆபத்தான வித்தைதான்..”வள்ளல் ஒப்புக் கொண்டார்.


‘ஆபத்து கொஞ்ச நஞ்சம் இல்லை சாமி.உயிரையே பறித்து விடும் அபாயம் உண்டு.ஒருமுறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாகச் செய்ய வேண்டும்.ஒருமுறை இப்பாய்ச்சலை செய்து விட்டால்
மீண்டும் இந்த வித்தையை ஆறு மாதத்திற்குப் பின்னர்தான் செய்ய
வேண்டும்.அப்படியில்லாமல் உடனே செய்யத் துணிந்தால் அந்தக் கணமே மரணம் உண்டாகும்” என்றார் இருளன்.


‘இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்கு மட்டுமே இவளைத் தயார் செய்து,
வேறொன்றிற்கும் லாயக்கில்லாமல் செய்து விட்டாயா?”


“இல்லை சாமி! இவள் வயது பெண்கள் கற்க பெடிந்ததெல்லாம்.. இவளும் கற்று வந்திருக்கிறாள்.அதுமட்டுமல்ல..பாக்கள் புனைவதிலும்..முறையாக தமிழாசா்ன்களிடம் பாடம் பயின்றிருக்கிறாள்”


“ஓஹோ…பா புனையவும் தெரியுமோ? அதைச் சொல்லு.நீங்கள் அனைவரும் இன்று என் விருந்தினர்.விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள்.நாளைமுதல் காலை வேளைகளில் சிறிது நேரம் இவளின் தமிழைனை ரசிக்கிறேன்”


“சாமி..விச்சுளிப் பாய்ச்சலை எப்போ வைத்துக் கொள்ளலாம்?”


“சொல்கிறேன்..”என்ற வள்ளல்..அன்று முதல் அந்தப் பெண்ணின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துகளிலும் தன்னை மறந்தார்.அந்தப் பெண்ணின் மேல் அவருக்கு அபிமானமும், அளவற்ற வாஞ்சையும் ஏற்பட்டது.அவளைத் தன் மகளைப் போலவே நடத்த முற்பட்டார்.


பின் ஒருநாள்..இருளன் மீண்டும் கேட்டுக் கொண்டதால் “வருகின்ற வெள்ளிக் கிழமை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.


அன்றே பறை மூலம் ஊர் முழுதும் அறிவித்து..வெள்ளியன்று மக்கள் அந்த வித்தையினைக் காணக் கூடினர்.


இருளன் கணீர்க் குரலில், பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தார்..


“மாபெரும் மக்கள் கூட்டமே..இச்சிறு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து,ஒரு நொடியில் கீழே விழும் தன் காதணியை கைக் கொண்டு மீண்டும் மூங்கில் உச்சிக்கே சென்றிடுவாள்.ஆகவே அனைவரும் அவளதுகவனம் சிதறாமல்
இருக்க மௌனமாகவும்அதே நேரத்தில் தக்கையில் வைத்த கண்களைப் போல பாய்ச்சலையும் கண்டு ரசியுங்கள்” என்றார்.


மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி சொல்லி முடித்ததும்..இளைஞன் ஒருவன் மேளத்தைத் தட்டி நிறுத்தினான்.


அனைவர் கண்களும் அந்த இளம் பேரழகியின் மீது.


பாவம் என்ற கண்கள், பச்சாதாபக் கண்கள், இரக்கக் கண்கள், பாசக் கண்கள்,காமக் கண்கள் என பலரின் கண்கள் பல செய்திகளைக் கூறியபடி அப்பெண்ணின் மீது நிலைத்திருந்தது.
சபையினருக்கு நடுவே வந்து நின்ற பெண், அனைவருக்கும் தன் இரு கரங்களைக் கூப்பி வணங்கினாள்..பின்.. “கர கர” என மூங்கிலின் உச்சிக்கு ஏறிச் சென்றாள்.


வள்ளல் மூச்சைப் பிடித்துக் கொண்டார்
.
காதணியை கழற்றி எறிந்தாள். பின் பறந்து வந்து அக் காதணி தரையைத் தொடுமுன் கையில் பற்றினாள்.மீண்டும் மூங்கிலின் முனைக்குச் சென்றாள்.


எல்லாமே..சில கண் இமைக்கும் நேரங்களில் நடந்து முடிந்தது.


மக்கள்..விடாது கரவொலி எழுப்பி..தங்கள் மகிழ்ச்சியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

சடையநாத வள்ளல்..மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகளைத் தந்தார்.
பின் இருளர் கூட்டம் அவரிடம் இருந்து விடைப் பெற்றது.


நெகிழ்ந்து போன வள்ளல்..அப்பெண்ணை நோக்கி..”தாயே! உனக்கு அந்த சரஸ்வதி கடாட்சம் இருப்பதால்..உன் கவி புனையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.கூடிய விரைவில் மீண்டும் இங்கு வா.வருகையில் நீ புனைந்த கவிதைகள் அனைத்தினையும்
ஒரு தனி வண்டி மூலம் எடுத்து வர வேண்டும்..புரிந்ததா..?”என வாஞ்சையுடன் வழி அனுப்பினார்.


அப்பெண்ணும் அவரிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றாள்.
வள்ளலின் அன்பும், தமிழ் போற்றும் குணமும் அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்து இருந்தது.


அடுத்து அந்த கூட்டம் பாண்டிய நாடு செல்லத் தீர்மானித்தது. மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி..பரிசினைப் பெற வேண்டும் என்பது அக்கூட்டத்தினரின் நீண்ட நாள் ஆசையாகும்.


மதுரை வந்ததுமே..விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.
மக்கள் திரளாகக் காத்திருந்தனர்.


நிகழ்ச்சி ஆரம்பிக்கு முன் வழக்கம் போல மூத்த இருளன் நிகழ்ச்சி பற்றி அறிவித்தார்.
மேளம் தட்டப்பட்டது.


இளம் பெண் வந்து அனைவரையும் வணங்கினாள்.
மன்னன்..தனது அரசியுடன் வந்திருந்தான்.அரசி தொழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


மன்னன்..அந்தப் பெண்ணைப் பார்த்த விழிகளை அவளிடமிருந்து அகற்றாமல், அவளது பேரழகை ரசித்துக்கொண்டிருந்தான்.
தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த ராணி அதனைப் பார்த்து..விரைவாக வந்து மன்னனின் அருகே வந்து அமர்ந்தாள்.
விரக தாபத்துடன் மன்னன் அப்பெண்ணைப் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.


நடந்த நிகழ்வுளை அப்பெண்ணும் ஓரளவு புரிந்து கொண்டாள்.
மேளம் தட்டி முடிக்கப் பட்டதும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது..
பாவம்..அந்தப் பெண் நிகழ்ச்சிக்குப் பின் தனக்கு ஆகப் போகும் நிலையை உணரவில்லை.


மூங்கிலின் உச்சிக்குச் சென்று பாய்ச்சலுக்குத் தயாரானாள்
அந்த விச்சுளிப் பாயும் பெண்ணின் விச்சுளிப் பாய்ச்சலை மட்டுமின்றி..அவள் அழகினையும் காண ஆடவர்கள் கண்கள் விரும்பிக் கொண்டிருப்பதை அவர்களுடன்
வந்த மனைவியர்கள் உணர்ந்தார்கள்.


பாண்டியனின் மனைவியும்..மனதிற்குள் “அடடா..இவள் எவ்வளவு அழகு” என வியந்தாள்.அடிக்கடி மன்னனைப் பார்த்தாள். ம்ன்னனாய் இருந்தால் என்ன, அவனும் ஆடவன்தானே! அவள் அழகை ஆசைத் தீர பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் கண்கள் வேறு எந்தப் பக்கமும் பாராது, அவளையேப் பார்த்துக் கொண்டிருப்பதை எண்ணிய அரசி அவனை தன் பக்கம் திருப்ப முயன்றாள்.


அந்த கழைக்கூத்தில் அவளின் ஒவ்வொரு விளையாட்டினையும் மக்கள் ரசித்தனர்.


இப்போது அவளின் விச்சுளிப் பாய்ச்சல் மட்டுமே மீதமிருந்தது.அதற்கான ஆயத்தங்களைக் குழுவினர் செய்து கொண்டிருந்தனர். ஒருவேளை ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால்.. அதற்காக, பாதுகாப்பாக அவர்கள் ஒரு முரட்டுப் படுதா ஒன்றை பிடித்தபடி நின்றனர்.தவறி விழுந்தால் அதன் மீது விழலாம். ஆனால், அதுவும் பாதுகாப்பானது என சொல்லிவிட முடியாது.


பாண்டிய மன்னன் தன் கையில் இருந்த மோதிரம் ஒன்றை ,ஒருவனிடம் கொடுத்து..அவள் பாயும் போது அதை வீசச் சொன்னான்.அப்படி அவன் வீசுவதை, அவள் பாய்ந்து பிடிக்க வேண்டும்.


அரசியாரோ, “மோதிரம் வேண்டாம்.வேறு ஏதேனும் கொடுக்கலாமே! வேண்டுமானால் என் அணிகலன்களில் ஒன்றினைத் தருகிறேன்” என்றாள்.


மன்னன் அவளை, “எனக்கு எதைக் கொடுப்பது எனத் தெரியும்..நீ பேசாமல் இரு” எனக் கடிந்து கொண்டான்.


வீசி எறியும் பொருள் அதைப் பிடிக்கும் அப்பெண்ணுக்கே சொந்தம் என்பதால் மன்னனின் மோதிரம் அவளுக்கு செல்வதை ராணி விரும்பவில்லை. இதுநாள் வரை தன்னைக் கடிந்து கொள்ளாத மன்னன் இப்போது கடிந்து கொள்வதைக் கண்டு அரசியாரின் அச்சம் அதிகரித்தது.அப்பெண்ணை மன்னன் மனம் நாடுகிறது.. ஒரு கழைக்கூத்தியை அவன் விரும்புவதா” அரசியின் உடல்
நடுங்கியது.


இப்போது அப்பெண் கம்பத்தின் உச்சியில் பாய்ச்சலுக்குத் தயாராய் ஏறிக் கொண்டிருந்தாள்.


அவள் ஏறும் நளினம் தான் என்ன?அவள் உடல் மெழுகால் ஆனதோ?அவள் வலிமையினைப் பார்த்தால், இரும்பின் உரம் இருக்க வேண்டும்.ஆனாலும் வளைவும், நெளிவும் கொடி போலத்தான் இருக்கிறது என்றெல்லாம் அரசிக்குத் தோன்றியது.


அவள் இப்போது கம்பத்தின் உச்சியில் இருந்தாள்.


அரசன் கொடுத்த மோதிரத்தை கீழே ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தான்.மீன் குத்திப் பறவையினைப் போல அவள் அந்த மோதிரத்தை அவனிடம் இருந்து பறித்துச் செல்ல வேண்டும்.
அப்போது, மன்னனின் பார்வையை அவளிடம் இருந்து விலக்க அரசியார் ஒரு தந்திரம் செய்தாள்..


அந்த தந்திரம்..எதிர்பாராத நிகழ்ச்சிகளெல்லாம் நடைபெற வித்திட்டவிட்டதை விதி என்று தானே சொல்ல வேண்டும். மன்னன் ஆவலுடன் பாய்ந்து அப்பெண் மோதிரத்தை எப்படிக் கைப்பற்றுகிறாள் என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

எந்நேரமும், அந்நிகழு நேரிடலாம் என்பதால்..மக்கள் கூட்டமும் நிசப்தமாய் அப்பெண்ணையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அச்சமயம், அரசி..மன்னனின் பார்வையை, அப்பெண்ணிடமிருந்து விலக்க எண்ணி, மன்னனின் தோள்களில் மயங்கி விழுந்தாள்… இல்லை..இல்லை.. மயங்கியது போல நடித்தாள்.

உடன், மன்னனின் பார்வை அரசியின் மேல் செல்ல..அந்த இமைப் பொழுதில் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ந்து..அப்பெண் மோதிரத்தைப் பறித்துக் கொண்டு மூங்கிலின் உச்சிக்குச் சென்று விட்டாள்.

சில நொடிகள் கழித்து அரசி கண் விழித்தாள்.சற்று நிம்மதியடைந்த மன்னன், நிகழ்ச்சி முடிந்து..அனைவரும் அப்பெண்ணைப் புகழ்வதைக் கேட்டான்.

உடனே அவளை அருகே அழைத்து,அந்த வித்தையைத் தான் பார்க்கத் தவறிவிட்டதாகவும்..தனக்காக மீண்டும் ஒருமுறை செய்துக் காட்டும் படியும்..அதற்காக மீண்டும் ஒரு மோதிரத்தைத் தருவதாகவும் கூறினான்.

ஆனால் அப்பெண்ணோ மன்னனிடம், “மன்னா..ஆறுமாத அளவு சுவாச பந்தனம் எனும் மூச்சை அடக்கிப் அழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திக் கொண்ட பின்னரே..என்னால் மீண்டும் இவ்வித்தையினியச் செய்ய முடியும். அதை மீறி உடனே செய்தால் நன இறந்து விடுவது உறுதி” என்றாள்.

அதனைப் புரிந்து கொள்ளாத அரசனோ..உடனடியாகச் செது காட்டும்படி வலியுறுத்தினான்.

வேறு வழியின்றி..அரசனின் ஆணையால் சாகத் துணிந்த அப்பெண்..கழை ஏறி..மீண்டும் விச்சுளிப் பாயத் தயரானப் போது..ஆகாயத்தில் பறந்து செல்லும் பறவைகள் சிலவற்றினைக் கண்டாள்.

அப்போது சடையநாத வள்ளல் தன்னை கவிதைகள் எழுதச் சொன்னதையும், அடுத்த முறை அவரைக் காண் அவரும்போது ஒரு வண்டியில் அவற்றைத் தனியாகக் கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்னதும் ஞாபகம்  வர..அந்த காரியத்தை செய்ய
முடியாது போகிறதே..வள்ளலுக்கு தன் நிலையைத் தெரிவிக்க வேண்டுமே என அப்பறறைகளிடம் கீழே குறிப்பிட்டுள்ள செய்யுளைக் கூறுகிறாள்.

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப்
பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்!
புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே”

 (“பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச்
சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த
இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்பது கருத்து)

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான
விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமைந்துள்ளது அல்லவா?

Series Navigationஅட கல்யாணமேதான் !
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *