விடை பெறுகிறேன் !

This entry is part 6 of 7 in the series 8 ஜூலை 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

++++++++++++++++++

 

தயவு செய்து எழுப்பாதே என்னை,

நாளைப் பொழுது இரவு வரை !

தாமதம் செய்யேன் நானினி !

இன்றிரவு கழிந்து நாளை

என்றாகும் போது,

விடைபெற்றுக் கொண்டு நான்

வெளியேறுவேன் !

போய் வர்ரேன் !  போய் வர்ரேன்

கண்மணி !

 

உதட்டில் காத்திருக்கும் பாடல்கள்

உணர்ச்சி ஊட்டு மெனக்கு !

ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் !

கையில் கொண்டு வரும் பூங்கொத்தை

கதவருகில்  வைத்துச் செல் !

காத்திருக்கும் ஒருத்திக்கு அதனை

விட்டு வைப்பேன் !

வெகு தூரத்தில் தனித்துப் போன

என் காதலி பாடிக் கொண்டு

என்னை அழைக்கிறாள்

தன்னிடத்துக்கு !

தனித்துப் போன காதலி

பாடி என்னை அழைக்கும் போது,

ஓடிச் செல்ல வேண்டும் நான் !

போய் வர்ரேன் ! போய் வர்ரேன்

கண்மணி !

++++++++++++++++++++

Series Navigationசூரிய குழுமக் கோள்கள் தோன்றிய பூர்வ காலப் பிரளயத்தில் பூமிபோல் இருமடங்கு பளுவுள்ள அண்டம் மோதியதால் யுரேனஸ் அச்சு பேரளவு சாய்ந்ததுஎழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *