விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்

This entry is part 30 of 31 in the series 31 மார்ச் 2013

6.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

(விவிலியம் – மத்தேயு)

**
விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.

**

vishwaroopam-jan-24மறுபடியும், தமிழ் ஜனங்கள் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளை விட புத்திசாலிகள் என்பதையும், அவர்களால் பல பரிமாணங்களில் சிந்திக்கமுடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி, இதன் அதிரடி காட்சிகளுக்கு மட்டும் இல்லை என்பதை படம் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறது. ஒரு நல்ல கலை அதன் பல அடுக்குகளில் பொதிந்து வைத்திருக்கும் அர்த்தங்களையும் முதல்முறையே அறிந்துவிடமுடியாது என்பதை இந்த படம் இன்னொரு முறை நிரூபிக்கிறது.

இதில் ஒவ்வொரு காட்சியிலும் படைப்பு நுணுக்கம் ஆழமாக செயல்பட்டிருக்கிறது. அவை ஒரு முழுமையான கலையின் கண்ணிகளாக வெகு நேர்த்தியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இதில் நிச்சயமாக பல கலைக்கே உரித்தான தாவல்கள் இருக்கின்றன. அவற்றை கலைப்படைப்பின் சுதந்திரமாக எடுத்துகொண்டு இதனை அணுகினால், தமிழ்படத்தின் ஒரு மகத்தான படைப்பை நாம் அறிவோம்.

*
படம் புறாக்களிடமிருந்து துவங்குகிறது. இந்த புறாக்கள் படம் முழுவதும், அப்பாவி முஸ்லீம்களின் உருவகமாக வருகிறார்கள். கண்களை கருப்பு கண்ணாடியால் மறைத்துகொண்ட முதியவர் இறுகிய மனத்துடன் புறாக்களை நியூயார்க்குக்கு அனுப்புகிறார். இறுதி காட்சியில் இந்த புறாக்கள், நியுயார்க்கில் அணு குண்டு தயாரிக்க உதவுகின்றதை சொல்கிறது. இந்த புறாக்கள் அணுகுண்டு தயாரிக்க உதவும் பொருளை எடுத்துகொண்டு வருவதால் மரணமடைந்துவிடுகின்றன. தீவிரவாதிகளின் கையில் அப்பாவி இஸ்லாமின் முகம் அழிந்து இறந்துவிடுவதை குறியீட்டு ரீதியில் கூறுவதாகவும் கருதலாம்.

பறவைகளின் இயல்பே பறப்பது தான், மக்களின் இயல்பே உடலாலும், மனதாலும் அலைந்து திரிந்து அறிவையும் அன்பவங்க்களையும் சேர்ப்பது தான். “விட்டு விடுதலையாகி” நிற்பது தான் சிட்டுக் குருவியின் இயல்பு மனிதனின் இயல்பும் அதுவே.

புறாக்கள் குறியீடாக படம் முழுவதும் வியாபித்துள்ளன . உமர் புறாக்களை நாம் நியு யார்க்கில் அணு குண்டு பிரயோகிக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லும்போது அவன் கால்களினால் புறாக்களை எத்திக் கொண்டு நகரும் காட்சி. அவன் தன மக்களையும் தான் சார்ந்த மக்களையும் இப்படித்தான் கருதுகிறான் என்பதற்கு பிற காட்சிகள் அவன் மற்றவர்களை நடத்தும் விதம் எப்படி என்று கோடிட்டுச் செல்கிறது படம். இந்தப் போராளிகள் தம்முடைய மக்களுக்காக போராடுகின்றனர் என்ற பிரமையை இது உடைத்தெறிகிறது. இவர்கள் செயல் திட்டத்தின் மையம் மக்கள் அல்ல இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு தத்துவமே. அது தவறா சரியா, நவீன உலகில் பொருத்தமானதா என்பதெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று,. ஒரு அழுகிப் போன தத்துவத்திற்காக தம் மக்களை பலி கொடுக்க தயங்காதவர்கள் இவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

ஆரம்ப காட்சியில் இந்த புறாக்கள் ஒரு ஜன்னலில் பறக்கின்றன. அந்த ஜன்னலின் உள்ளே ஒரு அமெரிக்காவில் வாழும் ஒரு பிராம்மண பெண், தான் மத்தியவர்க்க பிராம்மண மனைவியாக வாழ்வதை தவிர்த்து அமெரிக்காவில் வாழ விரும்பி வந்ததை சொல்லிகொண்டிருக்கிறாள். அதுவும் தனது தற்போதைய பெண் தன்மை நிரம்பிய கணவனோடு கொண்ட வசதிக்கான திருமணத்தை விட்டுவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள். பின்வரும் காட்சிகளில், தனது குழந்தைக்கு என்ன சொல்லித்தர வேண்டும் என்பதில் கூட உரிமை இல்லாத ஒரு ஆப்கானிய பெண்ணோடு ஒப்பிடத்தகுந்தது. அவள் முகம் மட்டும் மறையவில்லை, அவள் சுதந்திரங்கள், தன மகனைப் பற்றி முடிவு எடுக்கும் உரிமை, தன்னைப் பற்றி முடிவு எடுக்கும் உரிமை எல்லாமே மறைக்கப் பட்டிருக்கின்றன.

நிருபமாவின் விருப்பத்தில் யாரும் குறுக்கிட விரும்பவில்லை. அவளது நியூக்கிளியர் ஆன்க்காலஜி பிஹெச்டி பண்ண நியூயார்க் வந்து அங்கு வேலை செய்கிற பெண்ணுக்கு உதவுகிறார்கள்.

இந்திய கலைஞர்களின் தீராத ஊற்றாக இருக்கும் மகாபாரதம் மீண்டும் இந்த படத்தில் பல திசைகளில் பார்வையாளனை தாக்குகிறது. கண்ணன் மீது தீராத காதலோடு துவங்கும் பாடலுக்கு பெண்மை மிகுந்த விஸ்வநாத் ஆடும் நடனம், அர்ஜூனனின் பெண்வேஷமான பிருஹன்னளையை நினைவூட்டுவதை தவிர்க்க முடியாது. பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ்வதை யூகித்த துரியோதனாதிகள் விராத தேசத்தில் சண்டை மூட்டி அங்கு பாண்டவர்களை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். அந்த போரில் பிருஹன்னளையாக இருந்த அர்ஜூனன் தனது வேஷம் கலைத்து அர்ஜூனனாக வெளிப்படுகிறான்.  அதே போல, பயங்கரவாதிகளை உளவு பார்க்கும் விஸாம் மாட்டிகொண்டதும், தனது முந்தைய ரூபத்தை எடுத்துகொள்கிறான்.

விசாம் ஆப்கானிஸ்தான் உள்ளே செல்வதும் அபிமன்யு சக்கரவியூகத்தை உடைக்க எதிரியின் பாசறைக்குள் புகுவதை நினைவு படுத்துகிறது.

நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற கல்விக்கு விஸாமிடம் பதில் இல்லை. தனக்கு emotional baggage இருப்பதை ஒப்புக் கொள்ளும் அவன் பின்னோக்கில் தான் அப்பாவிகளின் மரணத்துக்கு  காரணமாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்கிறான்.

ஆப்கானிஸ்தானின் உமர் வழங்கும் நீதியில் அவனே விசாரணை, அவனே நீதிபதி, அவனே தண்டனை நிறைவேற்றும் கொலையாளி என்று சட்டம் தொலைத்த சமூகத்தின் அராஜகம் முழுமையாய் வெளிப்படுகிறது. அவன் தான் குற்றவாளி இல்லை என்று கதறுவது கானகத்தில் ஓலமாகக் கரைந்து போகிறது. இதன் ஒப்புநோக்கில் விசாம் நியூ யார்க் போலிசால் விசாரணைக்கு உள்ளாகும் காட்சி. கிட்டத்தட்ட எல்லா சாத்தியங்களும் விஸாமை குற்றவாளியாகக் காட்ட , விசாரணையற்ற தண்டனை இங்கே இல்லை. விசாரணை கொடியதாய் இருப்பினும், பேச ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் படுகிறது.

இந்த கதையை பாரதக்கதையின் சகோதர யுத்தமாக பார்க்கும்போது பார்க்கும்போது இந்த படத்தின் பரிமாணங்கள் வெளிப்பட துவங்குகின்றன. இந்த கதை இஸ்லாமிய சகோதரர்களுக்கு இடையே நடக்கும் யுத்தமாக ஆகிவிடுகிறது. இந்த சகோதர யுத்தம் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான போராக ஆகிவிடுகிறது. அதனாலேயே விஸ்வரூபம் என்ற பெயர் பொருளுள்ளதாக ஆகிவிடுகிறது. கமல்ஹாசனின் பாத்திரம் முஸ்லீம் தான் என்று தெள்ளத் தெளிவாக நிறுவுவது இந்த அர்த்தமுள்ள குறியீட்டை நோக்கித் தான்.

இந்த சகோதர யுத்தத்தின் ஒரு பக்கத்தில் துரியோதனாதிகளான நூறுபேரும் அவர்களது சேனைகளும், ஏன் கிருஷ்ணனின் படைகளும் நிற்கின்றன. பாண்டவரின் பக்கத்தில் கிருஷ்ணனின் சேனைகள் இல்லை. ஆனால் கிருஷ்ணன் இருக்கிறான். அவனும் பார்வையாளனாக, வெறும் தேரோட்டியாக நின்றுவிடுகிறான். அவனது தார்மீக பலமே அர்ஜூனனுக்கு வலிமை கொடுக்கிறது. இந்த பாரதப்பெருங்கதையினை இஸ்லாமிய சமூகத்தின் சகோதரர்களுக்கு இடையே நடக்கும் யுத்தமாக கமலஹாசனால் பார்க்க முடிகிறது. அதையொட்டியே நல்ல முஸ்லீம் சகோதரர்களுக்கும் அழிவு திசையில் சென்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையேயான இந்த போரில், பற்பல ஆயுதங்களுடனும், இஸ்லாமிய முல்லாக்களின் துணையோடு ஒரு புறம் நிற்க, மற்றொரு புறம் அல்லாவை மட்டும் தனது அருகில் சாரதி போல வைத்துகொண்டு விஸாம் போன்ற நல்ல முஸ்லீம்கள் போராடுவதாக கமலஹாசன் சிந்திக்கிறார். ஒரு மனசாட்சியுள்ள முஸ்லிமைப் பார்த்து நீங்கள் யார் பக்கம் என்று கேள்வியை எழுப்புகிறது.

பட ஆரம்பத்தில் உசாமா பின்லாடனின் இறப்பு தொலைக்காட்சியில் சொல்லப்படுகிறது. அதனூடாக “மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாரி கொண்டாடறது?” என்ற கேள்விக்கு, பதிலாக “அசுராளைகொன்னா கொண்டாடத்தானெ செய்வா?” என்ற பதில். இங்கே பயங்கரவாதிகள் அசுரர்கள் என்பதும் அசுர தலைவனின் ஒவ்வொரு ரத்ததுளியிலிருந்தும் ஆயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றுவார்கள் என்ற இந்திய புராணக்கதையையும் நினைவில் கொண்டால், அசுர தலைவனின் மரணம் அத்தோடு முடிந்துவிடவில்லை என்று பார்வையாளன் அறிந்துகொள்கிறான்.

ஒன்னு ஒமர் சாவணும் அல்ல நான் சாவணும் அதுவரை இந்த கதை தொடரும் என்று முடிகிறது. ஒன்று பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும், இல்லையேல் கௌரவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுவரைதானே போர்?

முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முஸ்லீம்களே செய்யவேண்டும் என்பதையும், அவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது, யார் நிற்கிறார்கள் இறுதியில் என்பதில்தான் முடிகிறது என்பதையும் கடைசிவரிகள் கூறுகின்றன.

இதில் ஒரு திறந்த சமுதாயத்துக்கும், ஒரு மூடிய சமுதாயத்துக்குமான வித்தியாசத்தை காட்ட தவறவில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் சென்று ஜிகாதிகளாக வெடிப்பதையும் காட்ட தவறவில்லை. அதன் மூலமாகவே பெண்கள் மீதான போலீஸ் ராணுவத்தின் அத்துமீறலை ஜிகாதிகள் ஆரம்பித்துவைக்கிறார்கள். இந்த விமர்சனத்தை குழந்தைகளிலும் காட்ட தவறவில்லை. குழந்தைகளை தற்கொலைப்படையாக உபயோகப்படுத்தும்போது, அந்த குழந்தைகளை போர்வீரர்கள் எப்படி பார்க்கமுடியும்? குழந்தைகள் என்ற பரிவையா, அல்லது தற்கொலைப்படையினனாக இருக்கலாம் என்ற அச்சத்தையா? எதை ஒரு போர்வீரன் அறிவான்?

படிக்க விரும்பும் பெண்களையும் குழந்தைகளையும் பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்கள், ஏகே47ஐயும் குண்டுகளையும் வைத்து பயிற்சி கொடுக்கும்போது, எல்லா ஊர்களிலும் குழந்தைகள் விளையாடும் துப்பாக்கி விளையாட்டு விபரீத பரிணாமம் அடைவதை பார்வையாளர் பார்க்கிறார்.

குழந்தைகள் ஆடும் ஊஞ்சலில் கூட, வன்முறைக்கும், வாழ்வுக்கும் இடையே ஊஞ்சலாடும் குழந்தைகளை காட்டி வியப்பூட்டுகிறது திரைப்படம். தான் சாகப்போகிறோம் என்று அறிந்த சிறுவன், ஊஞ்சலாடுகிறான். அது தெரியாத விஸாம், வயது முதிர்ந்த சிறுவன் இப்படி ஊஞ்சலாட விரும்புகிறானே என்று முறைத்துவிட்டு விலகிப்போகிறான். ஒளியை நோக்கி அந்த சிறுவன் ஊஞ்சலாடுகிறான். அது அவனது இறுதி குழந்தைமை என்பதை அவன் தற்கொலை ஜிகாதியாக இறந்த பின்னால் விஸாம் உணர்கிறான்.

ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கமல் ஹாசனின் முகம் இறுகிப்போய், சிந்தனை வயப்பட்டு, தான் புரிந்து கொள்ள இயலாத ஓர் உலகில் நிற்கிற பாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

நிச்சயமாக பிரச்சாரதொனியை கமலஹாசனால் விட்டுவிட முடியவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும், சொல்லாமல் சொல்லிவிட பல காட்சிகளில் முடிந்திருக்கிறது. காட்சிப்படுத்தலின் உள்ளே சொல்லப்பட்ட கதையை பார்க்கும்போது நம் முகத்தில் அறையும் புள்ளிகள் நினைவு கூறத்தக்கவை.

1) விஸாம் நுழையும் மசூதியின் ஓரத்தில் nypd video surveylance என்ற போர்டு இருப்பதை(அங்கு மசூதிக்கு வருபவர்களும் தெரிந்துகொள்ளும்படியாக) இருக்கிறது.

2) பாப்பி தோட்டங்கள் வழியே செல்லும் வண்டி சென்றதும் கார் சென்றதும் மலர்கள் உறைந்து நிற்கின்றன.

3) கண்ணை கட்டிவிட்டு தன் மகனை பரிசோதிக்கும் ராகுல் போஸ், ஏதோ ஒரு செய்தி வந்ததும் கண்கட்டுகளை அவிழ்க்காமல் வெளியேறுகிறான். அந்த சிறுவன் அருகே யாரும் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் குருடனை போல திகைக்கிறான். அந்த பெண் வந்து அந்த கட்டுகளை அவிழ்த்துவிடுகிறாள்.

4) குகைக்குள் நுழையும் கார்களை பார்த்தவண்ணம் முழுவதும் நீல நிறபுர்க்கா நிற்கிறது.

5) அமெரிக்கங்க பொண்ணு குழந்தைகளை கொல்லமாட்டாங்க. அவங்களுக்கு நம்ம உயிரு வேண்டும் என்று சொல்லி வாய் மூடுவதற்கு முன்னால், குழந்தைகள் பெண்கள் இருக்கும் வீடுகளில் அமெரிக்க குண்டு மழை பொழிகிறது.

6) ஆப்கானிஸ்தானிய பழம்பொருட்கள் விற்கும் கடையில் காட்சியின் மையமாக புத்தரின் முகம். தகர்க்கப் பட்ட பாமியான் புத்தரை நினைவுபடுத்திச் செல்கிறது. ஆயுதக் கிடங்காகிவிட்ட ஆப்கானிஸ்தானுக்கு புத்தர் வெறும் சிலையாக அர்த்தமற்று உறைந்து போயிருப்பதை நினைவு படுத்துகிறது.

7) கருகிப்போன கிராமத்துக்குள் வண்டி நுழையும் காட்சியில் பார்வையாளன் முதலில் பார்ப்பது கருகிப்போன மிக்கி மௌஸ்.

8) விஸாமுடன் பணி புரியும் ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறையின் நபருக்குப் பெயர் டாகின்ஸ். இது ரிச்சர்ட் டாகின்ஸ் -ஐ நினைவூட்டும் ஒரு பெயர். காட்டுமிராண்டித்தனம் என்று பாமியான் சிலைகள் அழிப்பையும், டிம்பக்டு அழிப்பையும், அலெக்சாண்டிரியா நூலக அழைப்பையும் பற்றி மிக தீவிரமாய் எதிர்வினை ஆற்றியவர். இஸ்லாமியர்களை காட்டுமிராண்டிகள் என்று அவர் அழைப்பதாக தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அவரைத் தாக்கிய போது “Some people (perhaps 1st language not English) think I was calling ALL Muslims barbarians. No. I was calling Islamic BARBARIANS barbarians” என்று தெளிவுபடுத்தியவர். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பல அறிவிஜீவிகள் பூசிமெழுகிய பார்வைகளை முன்வைத்தபோது தெளிவாக அது பற்றி கருத்துத் தெரிவித்தவர்.

9)  தமிழ்மொழியை ஆப்கானிஸ்தானை மையமாக வைத்த கதையில் புகுத்தி கதை சொல்வதன் சிக்கலை விடுவிக்க முயற்சிக்கும்போதே, மொழி – மதம் பற்றிய உரையாடலையும் எடுத்துச்செல்லும் திறமையான வசனங்கள்.

விஸ்வரூபம் இரண்டாம் பகுதியும் பார்த்த பின்னால்தான் இந்த படம் எழுப்பும் கேள்விகளை நாம் முழுமையாக பார்க்கமுடியும் என்றாலும், இதுவரை சொல்லப்பட்ட கதையும் அதன் விதமும் இந்த படத்தை தமிழ் படங்களின் ஒரு மைல்கல் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளன.

(அடுத்த வாரம் இந்த படத்தின் விமர்சனங்களை பற்றிய விமர்சனம்)

Series Navigationஅக்னிப்பிரவேசம்-28குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….
author

கோபால் ராஜாராம்

Similar Posts

21 Comments

  1. Avatar
    murali says:

    Vishwaroopam, is just a 3rd rated English movie but 1st rated tamil movie.

    Kamal and Rajini both are very good business man, they used us for their growth. Happening’s in India proved we are third world country and semi barbaric’s.

    I don’t know, what is there to praise that movie or to find fault. Western world accepted DaVinci’s code, that mentality we will never get it…..

  2. Avatar
    Jay says:

    Very nice and different view of watching the movie. Hats- off to Gopal Rajaram. He observed the scene’s and movie very detailed.

  3. Avatar
    SANKAR KOTTAR says:

    After reading this, I wish to see VISWAROOPAM once again since I have missed to notice so many points Mr. GopalRajaRam mentioned in this article

  4. Avatar
    களிமிகு கணபதி says:

    கமலா ஹாசனுக்கே தெரியாத புது புது அர்த்தங்களைக் கண்டுபிடித்து எழுதி இருக்கும் ஆசிரியரின் கற்பனை வளம் பாராட்டுக்கு உரியது.

  5. Avatar
    புனைபெயரில் says:

    குழந்தைகள் ஆடும் ஊஞ்சலில் கூட, வன்முறைக்கும், வாழ்வுக்கும் இடையே ஊஞ்சலாடும் குழந்தைகளை –> டெர்மினேட்டர் படத்தின் ஓப்பனிங் இது.

  6. Avatar
    smitha says:

    Kanmal took tihs movie purely to please the american bosses since he is itching to get a foothold in Hollywood.

    He has succeeded.

  7. Avatar
    Sivan says:

    கட்டுரை படித்ததும் முதலில் வந்தது சிரிப்பு.. மிக பிரயத்தனப்பட்டு எழுதப்பட்ட ஒரு துதி இது.. அல்லது இதை கமலே எழுதி இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக என் நண்பர் கூறுகிறார்..

    கமலின் நல்ல படங்களின் ரசிகன் என்ற முறையில்.. அவரது சமீபத்திய முயற்சிகள் எனக்கு வருத்தம் அளிக்கிறது..

    கமல் ஒரு நல்ல நடிகர் .. அவருக்கு இப்போதைய தேவை ஒரு நல்ல கதாசிரியர்..மற்றும் இயக்குனர்.. டி . ராஜேந்திர் போல அஷ்டாவதனம் கேலியில் மட்டுமே முடிகிறது..

    விஸ்வரூபத்தின் வெற்றிக்கு கமல் நன்றி செலுத்த வேண்டியது தமிழக முதல்வருக்கு மட்டுமே.. இல்லையேல் இதுவும் மும்பை எக்ஸ்பிரஸ் அல்லது மன்மதன் அம்பு போல்
    வந்த சுவடு தெரியாமல் போயிருக்கும்.

    அப்படி என்னதான் முஸ்லிம் பற்றி சொல்லி இருக்கிறார் என்கிற ஆர்வத்தில் படம் பார்த்த மக்கள் அளித்த கோடை 300 கோடி..

    ஹாலிவுட் மாதிரி படம் எடுக்க ஹாலிவுட் இருக்கிறது. கமல் எதற்கு.. அவர்கள் ‘பசங்க’ , சலங்கை ஒலி மாதிரி படங்கள் எடுக்க முயற்சிக்க வில்லையே.!

    ஒரு பக்கம் நாத்திக வாதம் .. மறுபக்கம்.. படத்திற்கு படம் கடவுள் மையப்படுத்தி காட்சிகள் பாடல்கள்.. என்ன ஒரு முரண்..!

    கட்டுரை ஆசிரியர் கோனார் உரை எழுதி காட்சியில் வரும் எல்லாவற்றிற்கும் படிம அந்தஸ்து கொடுப்பது.. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்திற்கும் கொடுக்க இயலும்..

    இப்படி முதுகு சொரிந்தால் ஒரு வேளை அடுத்த படத்தில் ‘கதை’ விவாதத்தில் பங்கேற்க இடம் கிடைக்கலாம். !

    தேவையில்லாத ஒரு படம்.. அதற்கு தேவையில்லாத ஒரு பாஷ்யம்.

    சிவன்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      இப்படியும் அபத்தமாக ஒரு பின்னூட்டமிடலாம் என்று தெரிந்துகொண்டேன். நன்றிகள் பல. உச்சம் இது கமலே எழுதி இருப்பதாக “நண்பர்” கூறுவது.

  8. Avatar
    புனைப்பெயரில் says:

    சிவன், ரொம்ப நாள் அப்புறம் மனம் விட்டுச் சிரித்தேன். கமல், நியூயார்க்கிற்கும் புறாவிற்கும் இருக்கும் பலமான தொடர்பு பற்றி ஒரு காட்சி கூட கிடையாது. ஏதோ நரிக்குறவன் நம்ம ஊரில் காக்காவை சுட்டது மாதிரி ஒரு பத்து புறா கிடக்குது கீழே… ஒரு 10 விநாடி புறா நகரமாக இருக்கும் நியூயார்க்க பற்றி எஸ்டாபிளிஸ்சிங் ஷாட்டே இல்லை. அது மாதிரி தான் ஃபாரே ஷீல்ட் எனும் வசனம். இவரே ஃபாரடே ஷீல்ட்டான்ன என்ன என்று விவரமாக பலநாள் பேசியிருப்பார். ஆனால், படம் பார்க்கும் எல்லாரும் ஏதோ ஃபாரடே ஷீல்ட் என்றவுடன் புரிந்து கொள்வார்கள் அல்லது புரியாமல், இவரை ஒரு ஆல் இன் ஆல் ஜீனியஸ் என்று நினைப்பார்கள் என்பது போல் தான் காட்சியமைப்பு. இந்த படம் வெற்றியடையவே இவர் முஸ்லீம் சூட்டை கிண்டியதோ என்ற எண்ணம் வருகிறது. படத்தில் முயற்சிகள் இருக்கின்றன… ஹாலிவுட் தரம் என்பதற்காக -150கோடி செலவு என்று சொல்லி.. ஆனால், பின்லேடன் சூழலில் சிறு பிள்ளைத்தனமான பாயும்புலி ரஜினி கணக்கா பைட்.. ஆனால், இவர் மட்டும் பல்டி அடித்து அப்படியே கதக் ஆடுவார் நியூயார்க்கில் -ஆப்கானஸ்திலிருந்து தாவி.

  9. Avatar
    சங்கர் says:

    சிவன் உங்களுக்கு என்ன பொறமை,கோபால் ராம் கதை வசனத்தில் பங்கு கொண்டால், கமலின் படத்தில் தமிழர் எல்லோருக்கும் பங்கு உண்டு, அவர் எல்லோரையும் ஊக்குவிப்பார். ரஜினி போல ஒரே பாணி கதை , இவரிடம் கிடையாது. அன்பே சிவம்,தசாவதாரம்,குருதி புனல் , தேவர்மகன் ,சண்டியார். என பலதரப் பட்ட் படம் உண்டு.அர்ச்சுன்,மாதவன்,ஜெயராமன், என எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பார் எங்கள் கமல் , பிற கதா நாயகர்க்ளுக்கு இந்‌த தைரியம் உண்டா ? முயற்சி ஆதாரிப்போம்… அவருக்கு தடை போடதீர்கள் . தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு போக துணிச்சல் இவரிடம் மட்டுமே உண்டு.
    கமல் சார் படம் எல்லாமே கூட்டு முயற்சி தான். பல மலர்களைக் கொண்ட மாலை போல.

    சங்கர்

  10. Avatar
    smitha says:

    Sankar,

    Kamal will give chances to other actors but will chop off their roles. Examples are Arjun in kuruthipunal & Prabhu in vasool raja. If any doubts, see the original.

    Prabhu was initially supposed to do the mail role in vetri vizha & kamal a guest role, but the reverse happened.

    Talented actors have been wasted in his films. Hemamalini in Hey Ram, Zarina wahab in viswaroopam.

    Only maddy escaped in anbe sivam. Wonder how.

  11. Avatar
    புனைபெயரில் says:

    சுமிதா, இங்கீஷில் பொளந்து கட்டுறீகளே… ரொம்ப படிச்சவரோ… தமிழில் எழுதுன எங்கள போல் பாமரருக்கும் புரியுமில்ல.. அன்பே சிவத்தில் மாதவன் பண்ணியது, “மெயில் ரோல்” தான்… டிரெயின்ல வந்ததாலே… மத்தபடி “மெயின் ரோல்” அதிலும் கமல் தான்…

  12. Avatar
    paramasivam says:

    Till today Maadhavan in AnbeSivam and Arjun in Kurudhipunal are remembered.So is the case with Mohanlal in Unnaipol Oruvan.Kamal is a great artist.Aayiram kaigal maraitthu nindraalum Aadhavan maraivadhillai

  13. Avatar
    smitha says:

    Paramasivam,

    U remember arjun in kuruthipunal? Great. pls see the original hindi version “Drohkaal” in which arjun’s role was played by naseeruddin shah. Then you will understand.

    I do not deny kamal is a good artist. But he chops off his fellow artists’ roles.

  14. Avatar
    smitha says:

    We are talking only of kamal here. But to give some instances, in prabhu’s films with rajini – dharmathin thalaivan & guru sishyan – he had good roles.

  15. Avatar
    punaipeyaril says:

    பரம்ஸ் & ச்மிதா ஆங்கிலப் பின்னூட்டத்தை தடை செய்யாமல் , எடிட்டர் (!) ரசிப்பது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *