12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி

author
0 minutes, 10 seconds Read
This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

அன்புடையீர், வணக்கம்.
12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும்
2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில்.

உலகத் தமிழர் பண்பாடு, கலை, கலாச்சார, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக

உலகளாவிய தமிழ்க்கல்வி
புலம் பெயர் தமிழர்கள்
தமிழர் சமயமும் வழிபாடும்
தமிழர் நாகரீகமும் தமிழ்க் கலைகளும்
தமிழ் மரபுகள்
தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள்
உலக நாடுகளில் தமிழர் நிலை
உலகத் தமிழர் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு

ஆகிய கருப்பொருள்களில் பேராளர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்.
A4 தாள் அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குறி(Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையையும் கடைசிப் பக்கத்தில் உள்ள பேராளர் பதிவுப் பகுதியில் உள்ள தகவல்களையும் imtcgermani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.09.2014க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.
நன்றி.

மாநாட்டுக் குழு

Conference Program Committee

12th  International Conference Tamil Culture & 40th Anniversary of  IMTC

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம்

International Movement for Tamil Culture, Europe Union

Postfach 2129, 48431 Rheine, Germany.

 

Phone:    0049-597114258                    0049-5211 60523

0049-15211 317329                 0049-15111 557890

0091-98423 74750

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *