
விழுகின்ற
அத்தனை கோடி மழைத் துளிகளையும் ஏந்திட
விழைகிற குழந்தை விரல்கள் தொலைந்து
இன்று ஒரு சிறு குடும்பக் குடைவாசியாகி
ஓரம் ஒழுகும் சொட்டுகளுக்கு
குனிந்து வாழும் அன்றாடத்தான்
என்ற பெயர் வேண்டாம்
தூக்கிப்போடு மானிடா உன் குடையை.
– பா.சத்தியமோகன்
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை