ஆண்களைப் பற்றி

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 11 in the series 15 மே 2016

விஜய் விக்கி

பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின்
நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய
பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம்
பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது.. பெண்களை சுற்றியே சுழல்கின்ற இந்த
உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான
சிந்தனையாகிவிட்டது.. அந்த அபூர்வ சிந்தனையின் ஒரு துளிதான் இந்த
கட்டுரையும்…
ஒரு ஆணுக்கு எது அழகு? பெண்களை கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு.. ஆறு
அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும், ஆர்யாவின் கசின் போன்ற
புறத்தோற்றமும் ஒரு பெண்ணிடம் ஆணின் மீதான ஈர்ப்பை உண்டாக்குவதைவிட,
ஆண்மகனின் ஆளுமைதான் அதிகம் கவர்ச்சியை உண்டாக்குகிறது என்கிற அறிவியல்
உண்மையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்…
அந்த ஆளுமையின் அடிப்படையில் ஆண்களை ஐந்து வகையாக பிரிக்கிறது உளவியல்
உலகம்.. ஆல்பா (alpha), பீட்டா(beta), காம்மா(gamma), ஒமேகா(omega),
சிக்மா(sigma) என்கிற ஐந்து பிரிவுகளுக்குள் உலகின் முன்னூறு கோடி
ஆண்களையும் புகுத்திவிடமுடியும்…
ஒரு தமிழ் திரைப்படம் என்றால், அதன் முதல் காட்சியே ஹீரோ
இன்ட்ரொடக்ஷன்தான்… அதன்படி பார்க்கையில், ஆல்பா ஆண்களைத்தான் இங்க
முதலில் அறிமுகப்படுத்தனும்… காரணம், இந்த உலகம் ஆல்பா ஆண்களைத்தான்
நாயகர்களாக ஏற்றுக்கொள்கிறது, நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?…
ஆல்பா ஆண்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?..
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்”
இந்த பாரதியின் வரிகளே ஒட்டுமொத்தமாக ஆல்பா ஆளுமையை குறிப்பாக
உணர்த்திவிடுகிறது…. சற்று விளக்கமாக கூறவேண்டுமானால், இவர்கள்
வலிமையான மனவுறுதி பெற்றவர்கள்.. எப்போதும் தன்னை வெற்றியாளராகவே
கருதுபவர்கள்.. அதற்காக எப்போதும் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்களா? என
ஆச்சர்யப்படவேண்டாம்.. ஆல்பா ஆண்களுக்கு அவ்வப்போது தோல்வியும்
நேரிடலாம்.. ஆனால், அந்த தோல்விகளில் துவண்டு மேலே எழமுடியாமல்
தடுமாறுபவர்கள் அல்ல.. விழுந்த வேகத்திலேயே நம்பிக்கையோடு எழுந்து
நிற்கும் குதிரை போன்றவர்கள்… தன்னுடைய தோல்வியைக்கண்டு பிறர்
எள்ளிநகையாடக்கூடாது எனவும், தன் மீது பிறருக்கு பரிதாபம் உண்டாகக்கூடாது
எனவும் எண்ணுவதால் தனது தோல்வியின் தடம், சுவடே தெரியாமல் மறைந்துபோகும்
அளவிற்கு அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்..
ஒருமுறை கிடைத்த தோல்வியின் மூலம் கிடைக்கும் கற்பினையால், அடுத்த
இலக்கின் வெற்றி எதிரிக்கு சம்மட்டி அடியாய் அடிக்கவேண்டுமென கடுமையாக
உழைப்பவர்கள்.. அதேபோல தனது வெற்றியை பிறரிடம் சொல்லி தம்பட்டம்
அடித்துக்கொள்பவர்கள் இல்லை.. வெற்றியைக்கூட அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள
எத்தனிக்காமல், மேற்கொண்டு அதைத்தாண்டிய வரலாற்று வெற்றிக்காக
உழைப்பவர்கள்..
வெளித்தோற்றம் ஆல்பா ஆண்களை தீர்மானிப்பதில்லை.. ஆனால் ஒருமுறை
பேசுவதிலேயே தனது ஆளுமையை பிறருக்கு பதியவைத்துவிடுவார்கள்.. எதிரே
நிற்பவரின் கண்களை எதிர்கொண்டுதான் பேசுவார்கள், பேச்சில் தெள்ளிய நீரோடை
போன்ற தெளிவு இருக்கும்… அனாவசிய பேச்சுகள் இருக்காது, பேசும்
வார்த்தைகளில் கண்ணியம் தொனிக்கும்.. அவர்கள் நடையில் கூட ஒரு நிதானம்
இருக்கும்.. எடுத்துவைக்கும் அடிகளில் ஒரு அழுத்தம் தென்படும்..
நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, தான்
நிற்கவேண்டிய இடத்தைக்கூட யோசித்துதான் நிற்பார்கள்.. பேசும் சில
மணித்துளிகளிலேயே அந்த குழுவை தன்வசப்படுத்திவிடுவார்கள்..
ஒரு குழுவாக செயலை செய்வதாக இருந்தால்கூட, ஆல்பா ஆண்களின் தலையீடுதான்
அதில் பிரதானமாக இருக்கும்… தான் செய்யவேண்டிய விஷயங்கள் மட்டுமல்லாது,
பிறர் செய்வதற்கான பணிகளைக்கூட இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்..
எதிர்கொள்ளும் இலக்கினில் ஏதேனும் பிரச்சினைகள் உண்டாகுமேயானால், அதனை
துணிச்சலாக முன்னின்று எதிர்கொள்வர்..
ஒரு மன அழுத்தமான சூழலில் கூட, தன் மனக்குமுறலை பிறரிடம் வெளிப்படுத்த
மாட்டார்கள்.. எந்த தருணத்திலும் தன் பலவீனம் பிறருக்கு தெரியக்கூடாது
என்பதில் தெளிவாய் இருப்பார்கள்.. கடுமையான சூழலில் கூட பொறுமையாகவும்,
பிறருக்கு பதற்றத்தை உண்டாக்காத அளவிலும் செயல்படுவார்கள்..
பிறர் தன்னை அங்கீகரிக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்க்காதவர்கள்..
தனக்கான உலகத்தில், தனக்கு பிடித்தவற்றை செய்தால் போதும்.. அதற்கு யாரோ
ஒரு மூன்றாம் நபரின் பாராட்டுப்பத்திரம் பெரிய விஷயமில்லை என
நினைப்பவர்கள்.. மகிழ்ச்சி என்பது தான் செய்யும் செயல்மூலம் கிடைப்பது,
அந்த செயலின் வழி கிடைக்கும் பாராட்டால் கிடைப்பது அல்ல என
உணர்ந்தவர்கள்..
ஒரு உடை உடுத்துவது முதல், செயல்கள் செய்வதுவரை எது தனக்கு பிடிக்குறதோ
அதைமட்டும்தான் செய்வார்கள்.. எல்லோருக்கும் நல்லவனாக, நண்பனாக
இருக்கவேண்டுமென நினைப்பவன் ஆல்பா ஆணாக முடியாது.. “எல்லோருக்கும்
பிடித்தவனாக இருக்கனுமென்றால், நீ பிரியாணியாகத்தான் இருக்கணும்!”
என்றொரு பழமொழி உண்டு.. இவர்கள் பிரியாணி அல்ல…. மொத்தத்தில் தன்னை
நம்புபவன், தனக்காக வாழ்பவன், தன்னம்பிக்கை உடையவன் என்று மூன்றே
வார்த்தைகளில் சொல்லிவிடலாம்..
இவ்வளவுதான் ஆல்பா ஆளுமை…
இதனை முன்வைத்தே நாம் பீட்டா ஆளுமையை எளிமையாக கணித்துவிடமுடியும்…
எல்லா விஷயங்களிலும் நேரெதிர் ஆளுமைதான் பீட்டா…
பீட்டா ஆண்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தை தாண்ட
விரும்பாதவர்கள்.. துணிச்சலாக ஒரு சவாலை ஏற்க தயங்கி, தன் வட்டத்தை தாண்ட
தயங்குபவர்கள்.. ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்து, அதிலெதாவது தோல்வி
உண்டாகுமானால், அதனை கிரகிக்கும் மன திடம் இல்லாதவர்கள்.. அந்த
தோல்விக்கு பயந்தே, எல்லை தாண்டி பயணிக்க விரும்பாதவர்கள்.. தனது கூச்ச
சுபாவத்தால், புதியவர்களிடம் பழகிட தடுமாறுபவர்கள்..
“நல்ல பையன்” பெயரை தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள்…எப்போதும்
அவர்களுக்கு பிறரின் அங்கீகாரம் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதால், சற்று
கடுமையான விஷயமாக கருதப்படும் செயல்களில் ஈடுபட விரும்பாதவர்கள்.. பிறரை
திருப்தி படுத்துவதிலேயே தன் நேரத்தை செலவிடுவர்… எல்லோருக்கும் தான்
பிடித்தவனாக இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்..
எல்லா விஷயங்களிலும் நூல் பிடித்தபடி, கோடிட்டு வாழ நினைப்பவர்கள்..
அப்படி வாழ்வதன்மூலம் பிறர் தன்னை அதிகமாக மதிப்பார்கள் என்று
நினைப்பார்கள்.. இவர்களின் எல்லா செயலுக்கும் அர்த்தமிருக்கும், தன்னை
அழகூட்டிக்கொள்ள அதிக மெனக்கெடுவார்கள், பிறருக்கு உதவுவார்கள்… ஆனால்
இவை எல்லாமுமே பிறரின் அங்கீகாரம் கருதியே செயல்பட்டிருக்கும்.. ஒரு
விவாதம் எழுகிறதென்றால், அதில் நம் தரப்பில் வாதம் புரிய முறையான
விஷயங்கள் இருந்தால் கூட, அதை வெளிப்படையாய் பேச தயங்குவார்கள்…
மனதிற்குள் எழும் ஆதங்கங்களை, எச்சிலை போல விழுங்கிக்கொல்வார்கள்.. தான்
தமது நியாயத்தை முன்வைத்தால், மற்றவரின் முகச்சுளிப்பை எதிர்நோக்க
வேண்டிவருமோ எனவும் மற்றவரின் பகையை சுமக்க நேரிடுமோ என தயங்கியே
மௌனித்து போவார்கள்..
ஒரு உதவியை பிறருக்கு செய்யும்போது கூட, என்றைக்காவது ஒருநாள் அதற்கான
பதிலுதவி கிடைக்குமென எதிர்பார்த்தே செய்வார்கள்.. ஏதாவது விதத்தில்
ஆதாயம் கிடைக்குமெனில் தயங்காமல் உதவி செய்வார்கள்..
ஒரு குழுவாக செயல்படும்போது, பீட்டா ஆண், “நான் என்ன செய்யனும்னு
சொல்லுங்க!” என பிறரின் கட்டளைக்காக காத்திருப்பார்கள்.. தானே முன்வந்து
எதையாவது செய்து, அது சொதப்பிவிடுமோ? என தயங்குவார்கள்.. அதையும் மீறி
தவறு நிகழும் பட்சத்தில், “நீங்க சொன்னதுதானே செய்தேன்!” என்று
தப்பித்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள்… அதாவது ஒரு
செயலை செய்வதற்கு முன்பே அதில் தோல்விதான் உண்டாகும் என்கிற எதிர்மறை
சிந்தனை அவர்களுக்குள் பொதிந்திருக்கும்.. செயலை செய்துமுடிக்கும்வரை,
“நான் செய்றது சரியா?.. இதைத்தானே நான் செய்யனும்னு சொன்னிங்க?” என்று
ஒவ்வொரு நகர்வுக்கும் ஒப்புதல் பெற நினைப்பார்கள்..
என்றைக்குமே தன் விருப்பத்திற்காக ஒரு செயலை செய்யமாட்டார்கள்.. பிறர்
விருப்பத்தை முன்னிறுத்தியே காரியத்தில் இறங்குவார்கள்.. அதனால்,
செய்யும் செயல்களில் முழு மனதுடன் ஈடுபட முடியாமல் தவிப்பவர்கள்…
உலகமே தனக்கு எதிராய் செயல்படுவதாய் நினைப்பார்கள்.. ஒரு தோல்வி
ஏற்படும்போது, அதில் தன்னைத்தவிர தன்னை சூழ்ந்திருக்கும் அத்தனை பேரின்
மீதும் பழியை போடுபவர்கள்.. விளையாட்டாய் தன்னை பகடி செய்யும்போதுகூட,
அதில் ஆயிரம் கற்பிதங்கள் கற்பித்து தன்னை நொந்துகொள்வார்கள்.. எளிதில்
உணர்ச்சியவயப்படுபவர்கள், சோர்ந்து போகக்கூடியவர்கள்..
எல்லோரிடமும் நல்லவர்களாக இருக்க முற்பட்டு, ஒருகட்டத்தில் நடித்து
வாழும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.. தன் சுயத்தை இழந்து பிம்பமாக
வாழ்பவர்கள்.. தன் இயல்பை மீறிய விஷயங்களுக்கும் ஒப்புதல்
கொடுத்துவிட்டு, பின்பு வாக்கினை காப்பாற்ற முடியாது தவிப்பார்கள்..
பிறரின் பாராட்டு ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும்..
எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்கும்… “எனக்கு
தெரியாது!”ன்னு ஒரு பதிலை சொல்லவே விரும்பமாட்டார்கள்.. தெரியாத
விஷயங்களை கூட ‘தெரியும்!’ என்று சொல்லி, அதன்மூலம் சிக்கல்களை
உருவாக்கிக்கொள்வார்கள்..
இவைதான் பீட்டா ஆளுமை….
ஆல்பா ஆளுமையைப்பற்றி படித்தபோது, ஏதோ திரைப்படத்தின் கதானாயகனைப்பற்றி
விவரிப்பதை போல தோன்றியிருக்கலாம்.. ஆனால், உலகம் ஹீரோக்களால்
சூழப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் அறியாதவர்கள் இல்லையே நாம்..
அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் பீட்டா ஆண்களாகத்தான்
இருக்கிறார்கள்… ஆனால், பெரும்பாலும் அதனை ஏற்க தயங்குவார்கள்..
“ஒருவன் தன்னை பீட்டா ஆணாக ஏற்றுக்கொள்வது மட்டுமே, ஆல்பா ஆணாக தம்மை
மாற்றிக்கொள்வதற்கான முதல் படி” என்கிறார்கள் உளவியலாளர்கள்..
ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.. பீட்டா
ஆணாக ஒரு குழந்தை உருவாகுவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன.. குழந்தை
வளர்ந்த விதம், வாழும் சமூக சூழல், தந்தையின் ஆல்பா நிலையை பார்த்து
வளரமுடியாத சூழல் என பல்வேறு காரணிகள் உண்டு.. தந்தை ஆல்பா நிலையில்
இருந்து வழிநடத்திடாத காரணம் பிரதானமாக கருதப்படுகிறது.. ஆளுமை மிக்க
தந்தையின் தடம் அவன் மனதில் பதிய மறுத்து, பெண்மையின் தடம்
பதிவேருகிறது… ஆய்வாளர்கள் சொல்வதென்னவென்றால், குகைகளில் வாழும்போதே
நமது மூதாதையர் பீட்டா ஆளுமை பெற்றவர்களாகத்தான் வாழ்ந்தார்கள்..
காலப்போக்கில் தப்பித்தவறி உருவானதுதான் ஆல்பா கலாச்சாரம் என்கிறார்கள்..
காரணிகள் எதுவாக இருந்தாலும், எதிர்பாலினத்திடம் அதிக ஈர்ப்பு
கொண்டவர்கள் ஆல்பா ஆண்கள்தான் எனும்போது பரிணாம வளர்ச்சியை குற்றம்
சொல்லுதல் முறையில்லை..
ஆல்பா ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது…
வாழ்க்கையின் கடைமட்டத்தில் இருந்தால்கூட, இவனால் உயர்நிலைக்கு
வரமுடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.. ஆனாலும், நம் ஊர்களில்
‘பிழைக்க தெரிஞ்சவன்’ பாராட்டுக்கு உரியவர்கள் பீட்டா ஆண்கள்தான்..
இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்ற விவாதத்திற்குள் செல்ல
விரும்பவில்லை… அவரவர் விருப்பம் அவரவருக்கு என்பதால் மற்ற மூன்று
பிரிவுகளைப்பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம்…
ஒமேகா – ஆல்பா ஆண்களை போலவே நம்பிக்கை உடையவர்கள், புத்திசாலிகள்,
செய்யும் செயல்களின் தெளிவு உடையவர்கள்.. ஆனால், ஆல்பா ஆண்களை போல
அல்லாமல், தனக்காகவே வாழ்பவர்கள்.. எவருடனும் உணர்வுப்பூர்வ ஒட்டுதல்
இல்லாதவர்கள்.. வெகு சிலரை மட்டுமே நம்புவார்கள், அதனினும் வெகு
சிலரைத்தான் நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்துகொள்வார்கள்.. தலைமையை
பற்றி கவலைப்படாதவர்கள்.. ‘எனக்கு நானே தலைவன்!’ என்று வாழ்பவர்கள்..

காம்மா – ஒருவகையான தலைமறைவு நபர்கள்.. ஆல்பாவை போல, தாங்கள் இருக்கும்
இடத்தை தன்வசப்படுத்துபவர்களும் அல்ல, அருகில் நின்று ஆமோதிக்கும்
‘பீட்டா’ போலவும் அல்லாதவர்கள்.. அறையின் சுவர்களை போல அவர்களும் ஒரு
பிராப்பர்ட்டிதான்.. யாருக்கும் தொந்தரவு செய்யாதவர்கள், அதேநேரத்தில்
பிறருக்கு மறக்க முடியாத அளவுக்கு தன் இருப்பினை காட்டிக்கொள்பவர்களும்
அல்ல.. தலைமைக்கும் ஆசைப்படாது, பின்தொடர்பாளர்களாகவும் இருக்க
விரும்பாதவர்கள்.. அதிக சிரமமில்லாத இலக்கை, தனக்கு வசதிப்பட்டால் கையில்
எடுத்துக்கொள்வார்கள்..

சிக்மா – திறமையான சாணக்கியர்கள்.. தன் இரைக்காக காத்திருக்கும்
சிலந்தியைப்போல, தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பார்கள்.. தன் இலக்கினை
அடைவதற்கு பிறருக்கு குழிபறித்து காத்திருப்பவர்கள்.. ஆல்பா ஆண்கள்
போலவே, ஒரு குழுவில் இவர்களுடைய குரலுக்கு அதிக வலிமை இருக்கும்.. ஆனால்,
அது தலைமை பண்பினால் உண்டாகும் மதிப்பு அல்ல.. “இவன் பேச்சை
கேட்காவிட்டால், நம்மை எதிலாவது சிக்கல்களில் மாட்டிவிடுவானோ?” என்ற
அச்சத்தில் பிறர் ஆமோதிப்பார்கள்.. விதியே என நொந்து இவரை தலைவனாக
ஏற்றுக்கொள்வார்கள்.. இதன்காரணமாக சில நேரங்களில் ஆல்பா ஆண்களை விட அதிக
உயரத்துக்கு செல்லும் வாய்ப்புகள் கூட கிடைக்கலாம்.. வாய்ப்பு
கிடைக்கும்வரை பீட்டா போலவும், கிடைத்த பிறகு ஆல்பா போலவும்
மாறிக்கொள்ளும் அமைதிப்படை அமாவாசை’கள்..

இவ்வளவுதான் ஆண்கள்!.. இனக்கவர்ச்சி என்பது ஏதோ ஒரு சபலம் சம்மந்தப்பட்ட
விடயமல்ல.. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிநாதமே
இனக்கவர்ச்சிதான்… ஏவாளின் மீது ஆதாமுக்கு இனக்கவர்ச்சி
ஏற்பட்டிருக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?..
ஆகையால் பெண்களை கவர்கின்ற ஆண்களின் ஆளுமை பட்டியலை இங்கே
வரையறுத்திருப்பதும் அவசியமாகவே படுகிறது..
“அவன் திமிர்பிடிச்சவன்!” என்று ஆல்பா ஆளுமையை புறந்தள்ளும் பெண்களும்
உண்டுதான்.. அத்தகைய பெண்கள் பீட்டா ஆண்களை தேடிப்பிடிப்பதும் உண்டு…
ஆனால், பெரும்பாலும் பெண்களின் தேடல், ஆல்பா ஆளுமை மிக்க ஆண்களை சுற்றியே
சுழல்கிறது என்பதுதான் உண்மை..
ஒருவன் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முதல் படியே, தனது ஆளுமையின்
படிநிலையை உணர்வதுதான்… அந்தவகையில் ஆளுமைகளைப்பற்றி
அறிந்துகொள்வதுதான், தலைமைப்பண்பு மிக்க ஆல்பா ஆணாக உருவாவதன் முதல்
நிலை.. இதனை சரியாக புரிந்துகொண்டால் உங்களுக்கும் ஒரு ஹீரோ
இன்ட்ரொடக்ஷன் பாடல் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்க!..

பாயும் ஆறு முதல் பதறவைக்கும் புயல் வரையிலும் எங்கும் எதிலும் பெண்களின்
நாமம்தான்.. அரசியல் முதல் அறிவியல்வரைக்கும் பெண்ணுரிமை பற்றிய
பேச்சுகள்தான்.. நிலவு, காற்று, வானம் என வர்ணிக்கும் அழகெல்லாம்
பெண்களுக்கென்றே உரித்தாகிவிட்டது.. பெண்களை சுற்றியே சுழல்கின்ற இந்த
உலகத்தில், ஆண்களைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே அபூர்வமான
சிந்தனையாகிவிட்டது.. அந்த அபூர்வ சிந்தனையின் ஒரு துளிதான் இந்த
கட்டுரையும்…
ஒரு ஆணுக்கு எது அழகு? பெண்களை கவர்கின்ற ஆண்களின் ஆளுமைதான் அழகு.. ஆறு
அடிகள் உயரமும், ஆஜானுபாகுவான உடல்வாகும், ஆர்யாவின் கசின் போன்ற
புறத்தோற்றமும் ஒரு பெண்ணிடம் ஆணின் மீதான ஈர்ப்பை உண்டாக்குவதைவிட,
ஆண்மகனின் ஆளுமைதான் அதிகம் கவர்ச்சியை உண்டாக்குகிறது என்கிற அறிவியல்
உண்மையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்…
அந்த ஆளுமையின் அடிப்படையில் ஆண்களை ஐந்து வகையாக பிரிக்கிறது உளவியல்
உலகம்.. ஆல்பா (alpha), பீட்டா(beta), காம்மா(gamma), ஒமேகா(omega),
சிக்மா(sigma) என்கிற ஐந்து பிரிவுகளுக்குள் உலகின் முன்னூறு கோடி
ஆண்களையும் புகுத்திவிடமுடியும்…
ஒரு தமிழ் திரைப்படம் என்றால், அதன் முதல் காட்சியே ஹீரோ
இன்ட்ரொடக்ஷன்தான்… அதன்படி பார்க்கையில், ஆல்பா ஆண்களைத்தான் இங்க
முதலில் அறிமுகப்படுத்தனும்… காரணம், இந்த உலகம் ஆல்பா ஆண்களைத்தான்
நாயகர்களாக ஏற்றுக்கொள்கிறது, நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?…
ஆல்பா ஆண்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?..
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்”
இந்த பாரதியின் வரிகளே ஒட்டுமொத்தமாக ஆல்பா ஆளுமையை குறிப்பாக
உணர்த்திவிடுகிறது…. சற்று விளக்கமாக கூறவேண்டுமானால், இவர்கள்
வலிமையான மனவுறுதி பெற்றவர்கள்.. எப்போதும் தன்னை வெற்றியாளராகவே
கருதுபவர்கள்.. அதற்காக எப்போதும் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்களா? என
ஆச்சர்யப்படவேண்டாம்.. ஆல்பா ஆண்களுக்கு அவ்வப்போது தோல்வியும்
நேரிடலாம்.. ஆனால், அந்த தோல்விகளில் துவண்டு மேலே எழமுடியாமல்
தடுமாறுபவர்கள் அல்ல.. விழுந்த வேகத்திலேயே நம்பிக்கையோடு எழுந்து
நிற்கும் குதிரை போன்றவர்கள்… தன்னுடைய தோல்வியைக்கண்டு பிறர்
எள்ளிநகையாடக்கூடாது எனவும், தன் மீது பிறருக்கு பரிதாபம் உண்டாகக்கூடாது
எனவும் எண்ணுவதால் தனது தோல்வியின் தடம், சுவடே தெரியாமல் மறைந்துபோகும்
அளவிற்கு அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்..
ஒருமுறை கிடைத்த தோல்வியின் மூலம் கிடைக்கும் கற்பினையால், அடுத்த
இலக்கின் வெற்றி எதிரிக்கு சம்மட்டி அடியாய் அடிக்கவேண்டுமென கடுமையாக
உழைப்பவர்கள்.. அதேபோல தனது வெற்றியை பிறரிடம் சொல்லி தம்பட்டம்
அடித்துக்கொள்பவர்கள் இல்லை.. வெற்றியைக்கூட அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள
எத்தனிக்காமல், மேற்கொண்டு அதைத்தாண்டிய வரலாற்று வெற்றிக்காக
உழைப்பவர்கள்..
வெளித்தோற்றம் ஆல்பா ஆண்களை தீர்மானிப்பதில்லை.. ஆனால் ஒருமுறை
பேசுவதிலேயே தனது ஆளுமையை பிறருக்கு பதியவைத்துவிடுவார்கள்.. எதிரே
நிற்பவரின் கண்களை எதிர்கொண்டுதான் பேசுவார்கள், பேச்சில் தெள்ளிய நீரோடை
போன்ற தெளிவு இருக்கும்… அனாவசிய பேச்சுகள் இருக்காது, பேசும்
வார்த்தைகளில் கண்ணியம் தொனிக்கும்.. அவர்கள் நடையில் கூட ஒரு நிதானம்
இருக்கும்.. எடுத்துவைக்கும் அடிகளில் ஒரு அழுத்தம் தென்படும்..
நான்கு நபர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, தான்
நிற்கவேண்டிய இடத்தைக்கூட யோசித்துதான் நிற்பார்கள்.. பேசும் சில
மணித்துளிகளிலேயே அந்த குழுவை தன்வசப்படுத்திவிடுவார்கள்..
ஒரு குழுவாக செயலை செய்வதாக இருந்தால்கூட, ஆல்பா ஆண்களின் தலையீடுதான்
அதில் பிரதானமாக இருக்கும்… தான் செய்யவேண்டிய விஷயங்கள் மட்டுமல்லாது,
பிறர் செய்வதற்கான பணிகளைக்கூட இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்..
எதிர்கொள்ளும் இலக்கினில் ஏதேனும் பிரச்சினைகள் உண்டாகுமேயானால், அதனை
துணிச்சலாக முன்னின்று எதிர்கொள்வர்..
ஒரு மன அழுத்தமான சூழலில் கூட, தன் மனக்குமுறலை பிறரிடம் வெளிப்படுத்த
மாட்டார்கள்.. எந்த தருணத்திலும் தன் பலவீனம் பிறருக்கு தெரியக்கூடாது
என்பதில் தெளிவாய் இருப்பார்கள்.. கடுமையான சூழலில் கூட பொறுமையாகவும்,
பிறருக்கு பதற்றத்தை உண்டாக்காத அளவிலும் செயல்படுவார்கள்..
பிறர் தன்னை அங்கீகரிக்க வேண்டுமென எப்போதும் எதிர்பார்க்காதவர்கள்..
தனக்கான உலகத்தில், தனக்கு பிடித்தவற்றை செய்தால் போதும்.. அதற்கு யாரோ
ஒரு மூன்றாம் நபரின் பாராட்டுப்பத்திரம் பெரிய விஷயமில்லை என
நினைப்பவர்கள்.. மகிழ்ச்சி என்பது தான் செய்யும் செயல்மூலம் கிடைப்பது,
அந்த செயலின் வழி கிடைக்கும் பாராட்டால் கிடைப்பது அல்ல என
உணர்ந்தவர்கள்..
ஒரு உடை உடுத்துவது முதல், செயல்கள் செய்வதுவரை எது தனக்கு பிடிக்குறதோ
அதைமட்டும்தான் செய்வார்கள்.. எல்லோருக்கும் நல்லவனாக, நண்பனாக
இருக்கவேண்டுமென நினைப்பவன் ஆல்பா ஆணாக முடியாது.. “எல்லோருக்கும்
பிடித்தவனாக இருக்கனுமென்றால், நீ பிரியாணியாகத்தான் இருக்கணும்!”
என்றொரு பழமொழி உண்டு.. இவர்கள் பிரியாணி அல்ல…. மொத்தத்தில் தன்னை
நம்புபவன், தனக்காக வாழ்பவன், தன்னம்பிக்கை உடையவன் என்று மூன்றே
வார்த்தைகளில் சொல்லிவிடலாம்..
இவ்வளவுதான் ஆல்பா ஆளுமை…
இதனை முன்வைத்தே நாம் பீட்டா ஆளுமையை எளிமையாக கணித்துவிடமுடியும்…
எல்லா விஷயங்களிலும் நேரெதிர் ஆளுமைதான் பீட்டா…
பீட்டா ஆண்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு வளையத்தை தாண்ட
விரும்பாதவர்கள்.. துணிச்சலாக ஒரு சவாலை ஏற்க தயங்கி, தன் வட்டத்தை தாண்ட
தயங்குபவர்கள்.. ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்து, அதிலெதாவது தோல்வி
உண்டாகுமானால், அதனை கிரகிக்கும் மன திடம் இல்லாதவர்கள்.. அந்த
தோல்விக்கு பயந்தே, எல்லை தாண்டி பயணிக்க விரும்பாதவர்கள்.. தனது கூச்ச
சுபாவத்தால், புதியவர்களிடம் பழகிட தடுமாறுபவர்கள்..
“நல்ல பையன்” பெயரை தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள்…எப்போதும்
அவர்களுக்கு பிறரின் அங்கீகாரம் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதால், சற்று
கடுமையான விஷயமாக கருதப்படும் செயல்களில் ஈடுபட விரும்பாதவர்கள்.. பிறரை
திருப்தி படுத்துவதிலேயே தன் நேரத்தை செலவிடுவர்… எல்லோருக்கும் தான்
பிடித்தவனாக இருக்கவேண்டுமென நினைப்பவர்கள்..
எல்லா விஷயங்களிலும் நூல் பிடித்தபடி, கோடிட்டு வாழ நினைப்பவர்கள்..
அப்படி வாழ்வதன்மூலம் பிறர் தன்னை அதிகமாக மதிப்பார்கள் என்று
நினைப்பார்கள்.. இவர்களின் எல்லா செயலுக்கும் அர்த்தமிருக்கும், தன்னை
அழகூட்டிக்கொள்ள அதிக மெனக்கெடுவார்கள், பிறருக்கு உதவுவார்கள்… ஆனால்
இவை எல்லாமுமே பிறரின் அங்கீகாரம் கருதியே செயல்பட்டிருக்கும்.. ஒரு
விவாதம் எழுகிறதென்றால், அதில் நம் தரப்பில் வாதம் புரிய முறையான
விஷயங்கள் இருந்தால் கூட, அதை வெளிப்படையாய் பேச தயங்குவார்கள்…
மனதிற்குள் எழும் ஆதங்கங்களை, எச்சிலை போல விழுங்கிக்கொல்வார்கள்.. தான்
தமது நியாயத்தை முன்வைத்தால், மற்றவரின் முகச்சுளிப்பை எதிர்நோக்க
வேண்டிவருமோ எனவும் மற்றவரின் பகையை சுமக்க நேரிடுமோ என தயங்கியே
மௌனித்து போவார்கள்..
ஒரு உதவியை பிறருக்கு செய்யும்போது கூட, என்றைக்காவது ஒருநாள் அதற்கான
பதிலுதவி கிடைக்குமென எதிர்பார்த்தே செய்வார்கள்.. ஏதாவது விதத்தில்
ஆதாயம் கிடைக்குமெனில் தயங்காமல் உதவி செய்வார்கள்..
ஒரு குழுவாக செயல்படும்போது, பீட்டா ஆண், “நான் என்ன செய்யனும்னு
சொல்லுங்க!” என பிறரின் கட்டளைக்காக காத்திருப்பார்கள்.. தானே முன்வந்து
எதையாவது செய்து, அது சொதப்பிவிடுமோ? என தயங்குவார்கள்.. அதையும் மீறி
தவறு நிகழும் பட்சத்தில், “நீங்க சொன்னதுதானே செய்தேன்!” என்று
தப்பித்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு செயல்படுவார்கள்… அதாவது ஒரு
செயலை செய்வதற்கு முன்பே அதில் தோல்விதான் உண்டாகும் என்கிற எதிர்மறை
சிந்தனை அவர்களுக்குள் பொதிந்திருக்கும்.. செயலை செய்துமுடிக்கும்வரை,
“நான் செய்றது சரியா?.. இதைத்தானே நான் செய்யனும்னு சொன்னிங்க?” என்று
ஒவ்வொரு நகர்வுக்கும் ஒப்புதல் பெற நினைப்பார்கள்..
என்றைக்குமே தன் விருப்பத்திற்காக ஒரு செயலை செய்யமாட்டார்கள்.. பிறர்
விருப்பத்தை முன்னிறுத்தியே காரியத்தில் இறங்குவார்கள்.. அதனால்,
செய்யும் செயல்களில் முழு மனதுடன் ஈடுபட முடியாமல் தவிப்பவர்கள்…
உலகமே தனக்கு எதிராய் செயல்படுவதாய் நினைப்பார்கள்.. ஒரு தோல்வி
ஏற்படும்போது, அதில் தன்னைத்தவிர தன்னை சூழ்ந்திருக்கும் அத்தனை பேரின்
மீதும் பழியை போடுபவர்கள்.. விளையாட்டாய் தன்னை பகடி செய்யும்போதுகூட,
அதில் ஆயிரம் கற்பிதங்கள் கற்பித்து தன்னை நொந்துகொள்வார்கள்.. எளிதில்
உணர்ச்சியவயப்படுபவர்கள், சோர்ந்து போகக்கூடியவர்கள்..
எல்லோரிடமும் நல்லவர்களாக இருக்க முற்பட்டு, ஒருகட்டத்தில் நடித்து
வாழும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.. தன் சுயத்தை இழந்து பிம்பமாக
வாழ்பவர்கள்.. தன் இயல்பை மீறிய விஷயங்களுக்கும் ஒப்புதல்
கொடுத்துவிட்டு, பின்பு வாக்கினை காப்பாற்ற முடியாது தவிப்பார்கள்..
பிறரின் பாராட்டு ஒன்றே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கும்..
எந்த ஒரு கேள்விக்கும் அவர்களிடம் விடை இருக்கும்… “எனக்கு
தெரியாது!”ன்னு ஒரு பதிலை சொல்லவே விரும்பமாட்டார்கள்.. தெரியாத
விஷயங்களை கூட ‘தெரியும்!’ என்று சொல்லி, அதன்மூலம் சிக்கல்களை
உருவாக்கிக்கொள்வார்கள்..
இவைதான் பீட்டா ஆளுமை….
ஆல்பா ஆளுமையைப்பற்றி படித்தபோது, ஏதோ திரைப்படத்தின் கதானாயகனைப்பற்றி
விவரிப்பதை போல தோன்றியிருக்கலாம்.. ஆனால், உலகம் ஹீரோக்களால்
சூழப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் அறியாதவர்கள் இல்லையே நாம்..
அந்தவகையில் நம்மில் பெரும்பாலானவர்கள் பீட்டா ஆண்களாகத்தான்
இருக்கிறார்கள்… ஆனால், பெரும்பாலும் அதனை ஏற்க தயங்குவார்கள்..
“ஒருவன் தன்னை பீட்டா ஆணாக ஏற்றுக்கொள்வது மட்டுமே, ஆல்பா ஆணாக தம்மை
மாற்றிக்கொள்வதற்கான முதல் படி” என்கிறார்கள் உளவியலாளர்கள்..
ஒரு குழந்தை பிறக்கும்போதே அதன் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.. பீட்டா
ஆணாக ஒரு குழந்தை உருவாகுவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன.. குழந்தை
வளர்ந்த விதம், வாழும் சமூக சூழல், தந்தையின் ஆல்பா நிலையை பார்த்து
வளரமுடியாத சூழல் என பல்வேறு காரணிகள் உண்டு.. தந்தை ஆல்பா நிலையில்
இருந்து வழிநடத்திடாத காரணம் பிரதானமாக கருதப்படுகிறது.. ஆளுமை மிக்க
தந்தையின் தடம் அவன் மனதில் பதிய மறுத்து, பெண்மையின் தடம்
பதிவேருகிறது… ஆய்வாளர்கள் சொல்வதென்னவென்றால், குகைகளில் வாழும்போதே
நமது மூதாதையர் பீட்டா ஆளுமை பெற்றவர்களாகத்தான் வாழ்ந்தார்கள்..
காலப்போக்கில் தப்பித்தவறி உருவானதுதான் ஆல்பா கலாச்சாரம் என்கிறார்கள்..
காரணிகள் எதுவாக இருந்தாலும், எதிர்பாலினத்திடம் அதிக ஈர்ப்பு
கொண்டவர்கள் ஆல்பா ஆண்கள்தான் எனும்போது பரிணாம வளர்ச்சியை குற்றம்
சொல்லுதல் முறையில்லை..
ஆல்பா ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது…
வாழ்க்கையின் கடைமட்டத்தில் இருந்தால்கூட, இவனால் உயர்நிலைக்கு
வரமுடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.. ஆனாலும், நம் ஊர்களில்
‘பிழைக்க தெரிஞ்சவன்’ பாராட்டுக்கு உரியவர்கள் பீட்டா ஆண்கள்தான்..
இவர்களில் யார் சிறந்தவர்கள்? என்ற விவாதத்திற்குள் செல்ல
விரும்பவில்லை… அவரவர் விருப்பம் அவரவருக்கு என்பதால் மற்ற மூன்று
பிரிவுகளைப்பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம்…
ஒமேகா – ஆல்பா ஆண்களை போலவே நம்பிக்கை உடையவர்கள், புத்திசாலிகள்,
செய்யும் செயல்களின் தெளிவு உடையவர்கள்.. ஆனால், ஆல்பா ஆண்களை போல
அல்லாமல், தனக்காகவே வாழ்பவர்கள்.. எவருடனும் உணர்வுப்பூர்வ ஒட்டுதல்
இல்லாதவர்கள்.. வெகு சிலரை மட்டுமே நம்புவார்கள், அதனினும் வெகு
சிலரைத்தான் நெருங்கிய வட்டத்துக்குள் சேர்த்துகொள்வார்கள்.. தலைமையை
பற்றி கவலைப்படாதவர்கள்.. ‘எனக்கு நானே தலைவன்!’ என்று வாழ்பவர்கள்..

காம்மா – ஒருவகையான தலைமறைவு நபர்கள்.. ஆல்பாவை போல, தாங்கள் இருக்கும்
இடத்தை தன்வசப்படுத்துபவர்களும் அல்ல, அருகில் நின்று ஆமோதிக்கும்
‘பீட்டா’ போலவும் அல்லாதவர்கள்.. அறையின் சுவர்களை போல அவர்களும் ஒரு
பிராப்பர்ட்டிதான்.. யாருக்கும் தொந்தரவு செய்யாதவர்கள், அதேநேரத்தில்
பிறருக்கு மறக்க முடியாத அளவுக்கு தன் இருப்பினை காட்டிக்கொள்பவர்களும்
அல்ல.. தலைமைக்கும் ஆசைப்படாது, பின்தொடர்பாளர்களாகவும் இருக்க
விரும்பாதவர்கள்.. அதிக சிரமமில்லாத இலக்கை, தனக்கு வசதிப்பட்டால் கையில்
எடுத்துக்கொள்வார்கள்..

சிக்மா – திறமையான சாணக்கியர்கள்.. தன் இரைக்காக காத்திருக்கும்
சிலந்தியைப்போல, தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பார்கள்.. தன் இலக்கினை
அடைவதற்கு பிறருக்கு குழிபறித்து காத்திருப்பவர்கள்.. ஆல்பா ஆண்கள்
போலவே, ஒரு குழுவில் இவர்களுடைய குரலுக்கு அதிக வலிமை இருக்கும்.. ஆனால்,
அது தலைமை பண்பினால் உண்டாகும் மதிப்பு அல்ல.. “இவன் பேச்சை
கேட்காவிட்டால், நம்மை எதிலாவது சிக்கல்களில் மாட்டிவிடுவானோ?” என்ற
அச்சத்தில் பிறர் ஆமோதிப்பார்கள்.. விதியே என நொந்து இவரை தலைவனாக
ஏற்றுக்கொள்வார்கள்.. இதன்காரணமாக சில நேரங்களில் ஆல்பா ஆண்களை விட அதிக
உயரத்துக்கு செல்லும் வாய்ப்புகள் கூட கிடைக்கலாம்.. வாய்ப்பு
கிடைக்கும்வரை பீட்டா போலவும், கிடைத்த பிறகு ஆல்பா போலவும்
மாறிக்கொள்ளும் அமைதிப்படை அமாவாசை’கள்..

இவ்வளவுதான் ஆண்கள்!.. இனக்கவர்ச்சி என்பது ஏதோ ஒரு சபலம் சம்மந்தப்பட்ட
விடயமல்ல.. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிநாதமே
இனக்கவர்ச்சிதான்… ஏவாளின் மீது ஆதாமுக்கு இனக்கவர்ச்சி
ஏற்பட்டிருக்காமல் போயிருந்தால், என்னாகியிருக்கும்?..
ஆகையால் பெண்களை கவர்கின்ற ஆண்களின் ஆளுமை பட்டியலை இங்கே
வரையறுத்திருப்பதும் அவசியமாகவே படுகிறது..
“அவன் திமிர்பிடிச்சவன்!” என்று ஆல்பா ஆளுமையை புறந்தள்ளும் பெண்களும்
உண்டுதான்.. அத்தகைய பெண்கள் பீட்டா ஆண்களை தேடிப்பிடிப்பதும் உண்டு…
ஆனால், பெரும்பாலும் பெண்களின் தேடல், ஆல்பா ஆளுமை மிக்க ஆண்களை சுற்றியே
சுழல்கிறது என்பதுதான் உண்மை..
ஒருவன் தன் ஆளுமையை வளர்த்துக்கொள்ள முதல் படியே, தனது ஆளுமையின்
படிநிலையை உணர்வதுதான்… அந்தவகையில் ஆளுமைகளைப்பற்றி
அறிந்துகொள்வதுதான், தலைமைப்பண்பு மிக்க ஆல்பா ஆணாக உருவாவதன் முதல்
நிலை.. இதனை சரியாக புரிந்துகொண்டால் உங்களுக்கும் ஒரு ஹீரோ
இன்ட்ரொடக்ஷன் பாடல் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்க!..

Series Navigationதொடுவானம் 120. ஜப்பானியர் ஆட்சியில் சிங்கப்பூர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *