author

மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்

This entry is part 11 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன.  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசும்போது இந்தியப் பிரதமர் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரங்களைப் பட்டியலிட்டார். இப்போதைய கலவரங்களுக்குப் பொறுப் பேற்காமல் நழுவுகிறார், பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்குகிறார் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன.  இன்னொரு புறம் திரு.ராகுல் காந்தி பிரதம […]

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்

This entry is part 10 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் 11.8.2023 அன்று படித்த செய்தி இது.  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு – உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் – அந்தப் பகுதியில் மேலாதிக்கம் பெற்று விளங்கும் இடைச் சாதியை சேர்ந்தவர்கள் மதிப்பழித்து நடத்தியதால் பள்ளி செல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மாணவர். பள்ளி ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்க விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர் அந்த […]

ஊடக அறம்

This entry is part 9 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் ஊடக அறமா இது – 1 தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள். மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது.  அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக, தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக் கும், கண்டனத்திற்கும் உரியவர்கள் ஊடக அறமா இது – 2 […]

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?

This entry is part 8 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் _  Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such […]

80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்

This entry is part 1 of 12 in the series 14 மே 2023

80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம் ஆதரிப்பார் யாரும் இல்லாததால்  64 வருட நூலகத்திற்கு மூடுவிழா இப்படியொரு பதிவை ஃபேஸ்புக்கில் கவிஞர் கனியமுது அமுதமொழி யின் டைம்லைனில் படிக்க நேர்ந்தது. கோவையில் உள்ள தியாகு நூலகம் மூடப்படலாகாது. இது குறித்த யூட்யூப் காணொளியையும் பார்த்தேன் // https://youtu.be/3sm-_zoLUGM மிகவும் வருத்தமாயிருந்தது. இது குறித்து கவிஞர் தமிழ்நதி (யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ஆறாத்துயரத்தை சுமந்துகொண்டிருக்கும் கவிஞர் தமிழ்நதி உட்பட தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இந்த நூலகம் மூடப்படலாகாது […]

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே

This entry is part 22 of 22 in the series 26 மார்ச் 2023

வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும் அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை. மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள் வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை. அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று […]

பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை

This entry is part 21 of 22 in the series 26 மார்ச் 2023

அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு ஊர் படிப்பு உச்சரிப்பு எதை வேண்டுமானாலும் பகடி செய்யுங்கள் பழித்துக்கூறுங்கள் அவரை மட்டந்தட்ட மதிப்பழிக்க body-shaming செய்ய உங்களுக்குப் பரிபூரண உரிமையுண்டு. அரசியல் சாசனத்தில் இல்லையென்றால் என்ன ஆயத்த வழக்கறிஞர் குழு இருக்கிறதே அதனால் அதிகம் யோசிக்காமல் அவரை எத்தனைக்கெத்தனை அசிங்கமாக வசைபாட முடியுமோ அத்தனைக்கத்தனை பாடுங்கள் சுருதிபேதங்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பாடல்களுக்கு […]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 13 in the series 12 மார்ச் 2023

மௌனம் சம்மதமல்லமந்திரக்கோல்மாயாஜால மொழிமனதின் அரூபச் சித்திரம்மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசிமகோன்னத நறுமணம்மரித்தார் உயிர்த்தெழல்மாகடலின் அடியாழ வெளிமையிருட்டிலான ஒளிமாமாங்க ஏக்கம்மீள் பயணம்மருகும் இதயத்தின் முனகல்மனசாட்சியின் குரல்மிதமிஞ்சிய துக்கம்மகா அதிர்ச்சிமுறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதிவழிமறந்தொழியும் சூன்யவெளிமொழியிழந்தழியும் எழுத்துக் கலைமரணமனைய உறைநிலை…….. சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 18 in the series 5 மார்ச் 2023

அக்கம்பக்கத்தில்தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..அவ்வளவுதான்ஏதும் செய்யவியலாது.இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.தற்கொலை செய்யத் துணிந்தவர்கோழையா தைரியசாலியாஎன்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோதான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்பொருட்டோநடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலைஅல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாதஅரைகுறை நம்பிக்கையில்…..நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்இல்லாத பெட்ரோல், அல்லதுஇருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,மங்கலாகிவிட்ட பார்வை,எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..கற்பனையாய் குழந்தைகள் […]

ரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

This entry is part 15 of 15 in the series 26 பெப்ருவரி 2023

ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த கையோடு காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள். தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை. தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங்காய்ச்சிகளின் சிரசுகளில் கிரீடங்களைப் பொருத்துகிறார்கள் கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள் கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில் அவர்களைத் தெருவோரமாக […]