author

இஸ்லாமிய பெண்ணியம்

This entry is part 24 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஹெச். ஜி. ரசூல் 1) பெண்ணின் உடல் – உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் […]

குரானுக்கான தப்சீர் எழுத்தியல் வரலாறு

This entry is part 8 of 37 in the series 2 செப்டம்பர் 2012

ஹெச்.ஜி.ரசூல்   இமாம் ஷாபி தரும் விளக்கமொன்று இவ்வாறு விரிகிறது. முசுக்கட்டை மரத்தின் இலை, அதன் சுவை ஒன்றுதான். ஆனால் அதை பட்டுப்புழு தின்றுவிட்டு பட்டுநூலைத் தருகிறது. தேனீ தின்றுவிட்டு தேனைத் தருகிறது. இவ்வார்த்தைகளை நாம் இச்சூழலில் பொருத்திப் பார்க்கலாம்.   குர்ஆன் ஒன்று. எனினும் காலந்தோறும் அதன் விளக்கவுரை நுட்பமாக விரிவாக பல்வித அர்த்தப் பரிமாணங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. காலம், அறிவுச்சூழல், பிரதேசம், பண்பாட்டின் இறுக்கம் சார்ந்து அதன் அர்த்தங்கள் அகலமும் கனமும் பெறுகின்றன. ஒற்றை […]

ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்

This entry is part 30 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இஸ்லாத்தின் புராதன பொருளியல் கோட்பாட்டின் நோக்கம் என்பதே துவக்க காலத்தில் நாடோடி மேய்ச்சல் சமூக வாழ்வியல் முறை சார்ந்த மக்காநகர் குறைஷிகளுக்கும், வணிக வாழ்வியலில் மேம்படுத்தப்பட்டிருந்த மதினாவாசிகளுக்கும் இடையேயான பொருளியல் ஏற்றத்தாழ்வையும் முரண்பாட்டையும், பகைமையும் சரிப்படுத்தும் விதத்தில் செல்வத்தை சமபங்கீடு செய்தலை நோக்கிய பயணமே ஆகும்.இதுவே பின்னர் உலகியல் கோட்பாடாக உருவாகிறது ஸகாத் என்பதற்கு தூய்மையையும் வளர்ச்சியையும் உருவாக்குதல் என்பது உள்ளார்ந்த பொருளாகும். இதுஏழ்மையின் பிடியில் சிக்கி பலவீனப்பட்டுக் கிடக்கும் ஏழை எளிய மக்களுக்கு வசதி படைத்தோரை […]

குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்

This entry is part 2 of 32 in the series 15 ஜூலை 2012

ஹெச்.ஜி.ரசூல் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். தாயார் அன்னை பாத்திமாவின் ஊர் தொண்டி. கனகாபிஷேகமாலை எழுதிய கனக கவிராயர் வழிவந்த குணங்குடியாரின் சமகால படைப்பாளி தொண்டி மண்ணில் பிறந்த மோன குரு ஷைகுமஸ்தான். தந்தையூரான குணங்குடி இவரது கவிதைப்பரப்பெங்கும் ஒரு குறியீட்டுச் சொல்லாடலாக தொடர்ந்து இடம் பெறுகிறது. குணங்குடி என்பதை குணங்கள் குடி கொண்டநற்பதி / சுவனம் / கனவுலகு […]

தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்

This entry is part 20 of 41 in the series 8 ஜூலை 2012

இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியமண்ணிலும், தமிழகத்தின் பலபகுதிகளிக்கு வருகைதந்த அரேபிய மார்க்க பிரச்சாரகர்களும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தோன்றி இஸ்லாத்தை ஆழமாக அடித்தளமக்கள் மத்தியில் கொண்டு சென்ற சூபிகள் என்னும் மெய்ஞானிகளும் முக்கிய பங்குவகிக்கின்றனர். இஸ்லாம் ஆட்சிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்பாகவே அரேபிய மண்ணின் மார்க்க பிரச்சாரச் குழுக்கள் கடல்வழிப் பயணமாக இங்கு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தெரியவருகின்றன. கி.பி. 632 ல் கேரளத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் சேரமான் பெருமாள் இஸ்லாமிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது […]

அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்

This entry is part 23 of 32 in the series 1 ஜூலை 2012

  தமிழகத்தின் தொன்மையான வரலாற்றில் அரேபிய வணிகர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  தமிழகத்தில் முத்தும் பவளமும், பொன்னும், மணியும், அகிலும் சந்தனமும் ஏற்றுமதி செய்யப்பட்டன.  தமிழக அரேபியத் தொடர்பை “நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவி’ என்ற பட்டினப்பாலைப் பாடல் சுட்டிக்காட்டுகிறது தமிழகத்தின் கிழக்கு கடற்கரை சோழ நாட்டின் ஆட்சிஎல்லைக்கு உட்பட்டிருந்தது. அரேபியர் சோழமண்டலக் கரையை மாபார் என்று குறிப்பிடுகின்றனர்.  கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கோவளம், காயல்பட்டினம், பாண்டிச்சேரி, கீழக்கரை, தூத்துக்குடி என இதன் துறைமுகப்பகுதிகள் விரிவடைந்து […]

இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை

This entry is part 26 of 43 in the series 24 ஜூன் 2012

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், நுண் அரசியல் தளங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும். அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் […]

சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி

This entry is part 7 of 41 in the series 10 ஜூன் 2012

பீர்முகமது அப்பாவின் படைப்புலகம் யதார்த்தமும் கனவும் ஒருங்கே உருப்பெற்ற தரிசனமாகும். யதார்த்தம், வாழ்வின் இருப்புகுறித்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், கனவுலகம் விரும்புகிற நேசிக்கிற வாழ்க்கையைப் பற்றிய படிமமாகவும், அமையப் பெற்றுள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றும் ஒன்றில் ஒன்று கலந்து காட்சி சித்திரங்களாக உரு மாறி இடம் பெயர்கின்றன. பீரப்பாவின் மொழியில் வாழ்வின் இருப்பு திருப்திகரமானதாக இல்லை. துன்பதுயரங்களின் புதர்க்காடாக கிடக்கிறது. இருள் நிறைந்த துக்கத்தின் சாயல்களை அதில் நிறையக் காணலாம். இத்தகைய பிம்பங்களிலிருந்து விடுபடவேண்டி இறையிடம் வேண்டுகிற […]

கயஸ்கானின் காரண காரிய சரித்திரம்

This entry is part 8 of 33 in the series 27 மே 2012

கயஸ்கான் தொடர்ந்து வெற்றுக் கூச்சல்களை போட்டுக் கொண்டிருந்தான்.வெவ்வேறு குரல்களில்  கூச்சல் போட்டு பழகிய வாய் ஒரு நாள் சோறு தின்ன மறுத்துவிட்டது.காபி குடிக்கவும் முடியவில்லை. தொழுகைக்கு ஸப்புகளில் நின்ற போது தக்பீர் கட்ட அல்லாஹுஅக்பர் சொல்லவும் முடியவில்லை. என்ன செய்யலாம்..என்று ஆலகால விஷமிறக்கும் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டான். நாட்டுவைத்தியர் நான்கு குளுசைகளை(லேகிய மாத்திரை)கையில் கொடுத்து ஐந்து நேரம் சாப்பிட வேண்டும் என்றார். நான்கு குளுசைகள்தானே இருக்கிறது எப்படி ஐந்துநேரம் சாப்பிடுவது என்று சைகையால் கேடடபோது […]

ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்

This entry is part 39 of 40 in the series 1 ஏப்ரல் 2012

  மகமூது தர்வீஷ்   இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது. அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது. திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை […]