author

இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு

This entry is part 39 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சமகால இஸ்லாமிய அரசியல் குறித்த விவாதத்தில் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பை ந.முத்துமோகன் எழுதிச் செல்கிறார். “”பல நபிகளை, பல சமூகங்களை, பல கலாச்சாரங்களை, பல வேதங்களை இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக ஒத்துக் கொள்கிறது. ஆனால் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம் ஏகத்துவத்தை வைத்தே தன்னை கட்டமைக்கிறது. இக்கூற்றில் இடம் பெறும் உண்மைகளையும் விடுபட்ட உண்மைகளையும் நாம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. உலக அளவில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம் நாடுகள் மீதும், அதன் பெட்ரோல் வளங்கள் மீதும் […]

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்

This entry is part 38 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள் ஹெச்.ஜி.ரசூல் சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த இருநாள் கருத்தரங்கம்படைப்பாளிகளின் நாவல்கள்கவிதைகள் கதையுலகம் என ஒரு விரிவான பரப்பை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்தது. இது வெறும் ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாக மட்டும் இல்லாமல் ஒரு சுதந்திரமான உரையாடலுக்கான களமாகவும் அமைந்திருந்தது. இந்த பதிவுகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதல்ல. இக்கருத்துக்களோடும் படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த விமர்சனங்களோடும் கூட நாம் […]

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

This entry is part 22 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]

உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்

This entry is part 27 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எனது எழுத்துக்களை கொலை செய்வதற்குஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர். அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைக்கின்றனர்.எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக் கிடக்கும் என நம்புகின்றனர். தீவிர எழுத்தின் இறுதி லட்சியமென்பதே சினிமாவுக்கு கதை பாட்டு எழுதவும்,பிரபல இதழ்களில் பத்தி எழுதவும், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்று அரட்டை செய்யவும், சொகுசாக உட்கார்ந்து பிளாக்கிலும்,பேஸ்புக்கில் எழுதுவதும் என்பதாகிவிட்ட சூழலில் எழுத்து சந்தர்ப்பவசமாக சிலரது வாழ்வின் இருப்பையே தகர்த்திருக்கிறது. பெரும்பானமை, சிறுபான்மை என்றெல்லாம் அடிப்படைவாதத்திற்கு முகமில்லை […]

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்

This entry is part 26 of 31 in the series 5 பிப்ரவரி 2012

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் -ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012 பிப்ரவரி 10,11 வெள்ளி , சனி நாட்களில் முஸ்லிம் கலைக்கலூரியில் நடைபெறுகிறது. முதல்நாள் துவக்க விழாவிற்கு முதல்வர் முனைவர் எ.அப்துல் ரஹீம் தலைமையேற்க தமிழ்த்துறைத்தலைவர் பேரா. என் ஹைருன்னிஸா வரவேற்புரை நல்குகிறார்.ஹாஜி எஸ் செய்யது முகமது முன்னிலை வகிக்க ஆங்கிலத்துறை முனைவர் […]

மூன்று நாய்கள்

This entry is part 15 of 30 in the series 22 ஜனவரி 2012

உயிர்மை இதழின் கேள்வி மத அடிப்படைவாதம் இலக்கியப் பிரதிகளை கண்காணிக்கும்போது அது தமிழில் சிறுபான்மையின மக்களின் இலக்கிய வளர்ச்சியைத் தடுக்கிறதா அல்லது அதுவே மீறலுக்கான உத்வேகத்துடன் கூடிய இலக்கிய மறுமலர்ச்சியைஏற்படுத்துகிறதா.. பதில் தன்னைத்தவிர பிறவற்றை அழித்தொழிப்பது அடிப்படைவாதத்தின் முக்கியக் கூறு.இது மத அடிப்படைவாதமாக மாறும்போது தனது மதத்திற்கு எதிராக தாம் கருதுபவை அனைத்தையும் அழித்தொழிக்க எத்தனிக்கிறது. இது பிற மதங்களின் கருத்துரிமை,மதத்திற்குள்ளே நிகழ்த்தப்படும் ஜனநாயக உரையாடல்,மத அமைப்புக்குள்ளே வாழும் விளிம்புநிலை மக்களின் விடுதலை என எதுவாகவும் இருக்கலாம் […]

முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு

This entry is part 13 of 30 in the series 15 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறையும் கீற்று வெளியீட்டகமும் இணைந்து சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த இலக்கிய உயராய்வுபன்னாட்டு இருநாள் ஆய்வரங்கைநெல்லை பல்கலைக்கழக அரங்கில் 2012 ஜனவரி 9 – 10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. துவக்கவிழாவிற்கு தமிழியல்துறைத்தலைவர் பேரா.முனைவர் சு. அழகேசன் தலைமைஏற்றார். பேரா. முனைவர் பே.நடராசன் வரவேற்பு சொல்லிட பண்பாடு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் தமிழ்மண்ணில் சூபிய வரலாறு சார்ந்த கருத்தரங்க மைய உரையை நிகழ்த்தினார். முதல் அமர்வுக்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா.கா.முகமது […]

துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை

This entry is part 26 of 42 in the series 1 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல்  முனைவர் செள..வசந்தகுமார் தேர்ந்த கல்வியாளர். இலக்கியவிமர்சகர். மொழியியலிலும், தத்துவத்திலும் ஆர்த்தம் நிறைந்த விவாதங்களை முன்வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள் தலைப்பின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதால் இவரது ஏற்கெனவே வெளிவந்த இலக்கிய கல்வியின் பரிணாமங்கள், புதிய நோக்கில் தமிழ்பாடமும் கல்வியும், தாய்மொழியும் திறன்மேம்பாடும் என்பதான மூன்று நூல்களும் தமிழ் அடையாளத்தை முன்வைத்து அறிமுகமாயின. தற்போது இவரது ஆழ்ந்த வாசிப்புக்கும், ஆய்வுக்கும் சான்றாக தமிழ் […]

சூபி கவிதை மொழி

This entry is part 29 of 29 in the series 25 டிசம்பர் 2011

பீர்முகமது அப்பாவின் பாடல்வரிகள் சிலவற்றை வஹாபிய நண்பர்கள் சர்ச்சைக்குரியதாய் முன்வைத்தார்கள். இதுநாள்வரை இப்பாடல்வர்களுக்கான விளக்கங்கள் யாராலும் சொல்லப்படாததற்கு காரணம் அவை இஸ்லாமிய இறையியலுக்கு எதிராக உள்ளதுதான் என்பது போன்று இவ்விவாதங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தமிழ் சூபிக்கவிஞர்களின் மொழியையும், கலாச்சார நிலைபாட்டையும் புரிந்து கொள்வதில் இன்னும் தெளிவுகள் உருவாக வேண்டும். தற்போது சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்ட சில கவிதைவரிகளுக்கான சில வாசிப்புகளை கவனிப்போம். 1) நீயே புவிக்குள் ரஸூலாக வந்தாய். முதல்நிலை அர்த்தம் ரஸுல் என்பதன் பொருள் இறைத்தூதர். தூதர் […]

பச்சைக் கூடு-பேசுவதற்கு பறவைகள் இல்லை

This entry is part 31 of 39 in the series 18 டிசம்பர் 2011

1) சூழலியல் அரசியலை தன் எழுத்தின்வழி ஆய்வாளர் மா.அமரேசன் எழுதிச் செல்கிறார்.இயற்கையின் சமன்குலைவு இதன் மையமும் விளிம்பும் சார்ந்த பார்வையாக மாறியுள்ளது.பெளதீகச் சூழலுக்கும் மனிதன் உருவாக்கும் பண்பாட்டுச் சூழலுக்கும் இடையிலான முரணும் விலகலும்நிகழ்ந்தவண்ணம்உள்ளது.பெளதீகச்சூழல்இயற்கைச்சார்ந்தது.நிலவியல்,தாவரங்கள்.வனங்கள்,காணுயிரிகள்,நீராதாரம்,காலநிலை,காற்றின் தூய்மை என விரிந்து செல்கிறது. மனித உழைப்பின் ஊடாக உருவாகியுள்ள விவசாய உற்பத்தி முறைகள் ,நகர உருவாக்கம் கட்டமைத்த வாழிடங்கள் , நம்பிக்கைகளின் வழியிலான சமயம் சாதி வாழ்வியல் சடங்கியல்கள் என பண்பாட்டுச் சூழல் உருவாகிறது.பிறிதொரு நிலையில் சொல்லப் போனால் உயிருள்ள ஜீவராசிகளுக்கும் […]