author

கற்றல்

This entry is part 24 of 26 in the series 22 செப்டம்பர் 2013

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா?   ஆழத்தில் உள்ளொடுங்கின் அமைதியென்று மெளனமாய் இருக்கை நன்றென்று உணர்வேன்.   கடல் மறந்ததை கடலிடம் சொல்லி விடலாமென்றால் கடல் பேசாமல் ஓய்வதாயில்லை. கு.அழகர்சாமி

கறுப்புப் பூனை

This entry is part 19 of 24 in the series 8 செப்டம்பர் 2013

பொழுது சாயும் வேளை.   கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும்.   காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது.   இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும்.   கால் பதித்த இடங்கள் கறுப்பு மச்சங்களென கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும் இழுத்துத் தாவியோட இரவு முன் கூட்டியே இறங்கியிருக்கும்.   பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின் பால் முலையை உண்ணுவது போல் மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும் ஆல்மரத்தின் மேல் தாவும்.   மேகங்களை மண்டியிட வைக்கப் […]

இராஜராஜன் கையெழுத்து.

This entry is part 10 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம். நடமாடாக் கற்கோயில் கலை நடனம். நடுவெளியில் நிலத்தொளிரும் கலைதீபம். சட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும் காட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம். பறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும் வீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம். நேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி […]

இரகசியமாய்

This entry is part 16 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம்.   வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான்.   பிறர் கண்களை மூடப் பார்த்தால் என் கண்கள் பிறர் கண்கள்.   என் கண்களை மூடப் பார்த்தால் பிறர் கண்கள் என் கண்கள்.   இருளென்று நினைத்தால் இருளுக்குள் கரந்திருக்கும் வெளிச்சம் கவனிக்கும் என்னை.   என் ஆடையும் ’சக்கரவர்த்தி’ […]

குளம் பற்றிய குறிப்புகள்

This entry is part 27 of 30 in the series 28 ஜூலை 2013

(1) ஒரு மீன் செத்து மிதக்கும்.   குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை.   (2) ஒன்றும் குறைந்து போவதில்லை.   படிகள் இறங்கிச் செல்லும் குளத்திற்கு உதவ.   (3) குளத்தில் போட்ட கல்.   பாவம்; நீந்தியிருந்தால் மீனாகியிருக்கலாம்.   (4)   நீர் நிறைந்து தெளியும் குளம் கண்ணாடியா?   சூரியனை எறிந்து பார் தெரியும்.   (5) ஊர்க் குளம் காணோம்.   அடுக்கு மாடி வீடுகள் குடித்திருக்கும். […]

உ(ரு)ண்டை பூமியை நோக்கி

This entry is part 13 of 25 in the series 7 ஜூலை 2013

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.   எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின் சூக்குமப் படிக்கட்டுகளில் சும்மா மாறி மாறித்தாவி சீறி சீறிப் பாய்வது போல் பயணிக்கும்.   கால முள் பின்னகர இந்த ஸ்திதியிலிருந்து இன்னொரு ஸ்திதியில் மாறி இனிப் பயணம் தொடரும்.   பூமி சேருமுன் எந்த ஸ்திதியில் எப்படிச் சேரும் என்பதைக் […]

இரயில் நின்ற இடம்

This entry is part 26 of 29 in the series 23 ஜூன் 2013

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள்.   பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும்.   சடுதியில் ’மூடு வெயில்’ இறங்கி வந்து கருவேல முள்ளில் கிழிபட்ட காயத்தில் மறு கணத்தில் ’சுள்ளென்று’ உக்கிரம் கொள்ளும்.   கண்ணுக்கெட்டிய தொலைவில் சின்னப் புள்ளிகள் உயிர் கொண்டு நகர்வது போல் சில […]

இன்னொரு எலி

This entry is part 18 of 28 in the series 5 மே 2013

எப்படி எலியைப் பிடிக்கும் எனக்கு?   எனக்குப் பிடித்த புத்தகங்களைக் கடித்துக் குதறியிருக்கும்.   சிறுநீர் கழித்து ஈரமாக்கியிருக்கும்   புத்தகங்களின் தராதரம் தெரியவில்லை அதற்கு.   எழுதப் படிக்கத் தெரியாத அற்பம் அது.   சினந்து கவிதை எழுதி சபித்து விடலாம் அதை.   ஆனால் அதற்கு கவிதையை இரசிக்கத் தெரியாது. சுட்ட தேங்காய் ருசி தான் தெரியும்.   திருத்த முடியாது எலியை. எப்படியும் பிடித்து விட வேண்டும்.   வன்மம் கூடிய இரவில் […]

பாலச்சந்திரன்

This entry is part 14 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  கண்களில் கூடக் கபடில்லையே.   மிரளும் பார்வையில் மிருகமும் இரங்குமே.   என்ன செய்தான் பாலகன்?   என்ன செய்யமுடியும் சிறகுகள் பிணிக்கப்பட்ட சின்னப் பறவை?   தொடும் தூரத்தில் நிறுத்தி துப்பாக்கி ரவைகளால் துளைத்து விட்டான்களே ‘தேவதத்தன்கள்’.   தொடும் தூரம் சுடும் தூரமா? உள்ளத்தைத் ‘தொடும் தூரம்’ இல்லையா?   விகாரையிலிருந்து பதறி ஓடி வந்து பாலகன் மார்பின் புண்களை மெல்லத் தொடுவான் புத்தன்.   கொலையுண்டது மனிதமென்று சில்லிடும் அவன் விரல்கள் […]

சற்று நின்று சுழலும் பூமி

This entry is part 9 of 33 in the series 14 ஏப்ரல் 2013

  பூமி மேல் தன் முதலடியை எடுத்து வைக்க முயலும்.   உயிர்ப் பந்தாய் மெல்ல எழுந்து நிற்கும்.   பூமிப் பந்தைப் பிஞ்சுக் கால்களால் உருட்டி விடப் பார்க்கும்.   பிஞ்சுக் கால்களின் கிளுகிளுப்பில் சுழலும் பூமியின் களிப்பு கொஞ்சம் கூடிப் போயிருக்கும்.   ‘பொத்’தென்று கீழே விழும் குழந்தை கத்தும்.   ’தரை தானே தடுக்கிச்சு’- தரையை மிதித்துக் குழந்தையைச் சமாதானப்படுத்துவாள் தாய்.   சுழலும் பூமி சற்று நின்று சுழலும் மீண்டும்.   […]