உஷாதீபன்

அவன், அவள். அது…! -8

This entry is part 1 of 24 in the series 1 நவம்பர் 2015

( 8 )       இன்றைக்கு சப்ஜெக்ட் பெண்களைப் பத்தி, பொதுவா லேடீஸ் பத்தி என்னென்ன அபிப்பிராயம் தோணுதோ, நிலவுதோ அதையெல்லாம் எடுத்து வைக்கலாம். ஓ.கே…! ஓ.யெஸ், ஐ ஆம் ஆல்வேஸ் ரெடி…. நிறைய ஆண்களோட மனசைக் கெடுக்கிறதே இந்தப் பெண்கள்தான். இதைப்பத்தி நீ என்ன சொல்றே? ஒரு ஆணினுடைய வெற்றிக்குப் பின்னாலே நிச்சயம் ஒரு பெண் இருப்பான்னு சொல்வாங்க…அதே போல பல ஆண்களுடைய தோல்விக்கும் குற்றங்களுக்கும் பின்னாலேயும் ஒரு பெண்தான் இருப்பாள்னு நான் சொல்றேன். பெரும்பாலுவும் […]

அவன், அவள். அது…! -7

This entry is part 13 of 24 in the series 25 அக்டோபர் 2015

தலையைக் குனிந்தவாறே இருந்த கண்ணனை சேதுராமனின் வார்த்தைகள் ஆட வைத்தன. உன் அப்பா அம்மா கஷ்டத்திலே இருக்காங்கன்னா அதுவும் அது மனக்கஷ்டம்னு தெரிஞ்சா அது முதல்லே எனக்குமுண்டு…அதை என்னன்னு அறிஞ்சு தீர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. கடமை. அதான் உடனடியாப் புறப்பட்டு வந்தேன். உங்கப்பாவும் நானும் சகோதரர்கள். அவனுக்கு ஒரு துன்பம்னா அது எனக்கும்தான். அந்தக் குடும்பத்துல இருக்கிற சந்தோஷம் எல்லாமும் அவங்களுக்குன்னா, அங்கே கவிழ்ற துன்பத்தை நான் கையிலெடுத்து அதை சந்தோஷமா மாத்திக் கொடுக்கிறதை […]

அவன், அவள். அது…! -6

This entry is part 14 of 18 in the series 18 அக்டோபர் 2015

      இதுநாள் வரைக்கும் இத்தனை சீரியஸா நீ எதையும் டிஸ்கஸ் பண்ணினதில்லையே? என்னாச்சு உனக்கு? என்றான் கண்ணன். கூடவே ஏதேது, போகிற போக்கைப் பார்த்தா நீ என்னையே கூடத் தப்பா நினைக்க ஆரம்பிச்சிடுவ போலிருக்கே…என்றான். அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. பதில் எதுவும் சொல்லாத ஒப்புதலா இது? அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இவனும் யோசிக்க ஆரம்பித்தான். மனைவி என்ற வித்தியாசமில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம், ஆண் சார்ந்த, பெண் சார்ந்த என்று கூடப் பார்க்காமல் அவ்வப்போது விவாதித்தது தவறோ […]

அவன், அவள். அது…! -5

This entry is part 8 of 23 in the series 11 அக்டோபர் 2015

      என்னடா ஆள் டல்லா இருக்கே…? – கேட்டான் மதிவாணன். இருக்கையில் அமர்ந்து தன் வேலைகளை எப்போதும் மும்முரமாகச் செய்து கொண்டிருக்கும் கண்ணனுக்கு இன்று என்னவோ வேலையே ஓடவில்லைதான். இது நாள்வரை தான் கதை எழுதி எந்தப் புண்ணியமுமில்லையோ என்று தோன்றியது. சுமதி தன் கதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவனை வெகுவாக உறுத்தியது. வெறும் செய்தித்தாள் படிப்பவள் அவள். தினசரி காலையில் அந்த செய்தித்தாளை அவள் கையில் கொடுத்தால் போதும். சோறு தண்ணி வேண்டாம் அவளுக்கு. சமையலைக் […]

அவன், அவள். அது…! -4

This entry is part 21 of 23 in the series 4 அக்டோபர் 2015

( 4 )       கண்ணனுக்கு அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. ஏனென்றால் அவன் படைப்புக்கள் பலவற்றைப் படித்துவிட்டுப் பாராட்டியவள் அவள். அதனால் ஊக்கம் பெற்றவன் இவன். இப்பொழுது வேறு மாதிரிப் பேசுகிறாள். எதற்காக இத்தனை வெறுப்பு மண்டியது அவளுக்கு? எழுதுபவனெல்லாம் அப்படியே உள்ளவன் என்று பொருளா? ஒரு கதை என்றால் அதில் நாலுவிதமான கதாபாத்திரங்கள் வரத்தான் செய்யும். நாலு பேரும் நாலு விதமாகத்தான் பேசுவார்கள். செய்வார்கள். அதற்காக அந்தக் கதாசிரியனும் அப்படியாப்பட்டவனே என்று நினைத்து […]

அவன், அவள். அது…! -3

This entry is part 4 of 22 in the series 27 செப்டம்பர் 2015

        எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை. சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…? எதைச் சொல்றீங்க…? அதான், கமலம் வார இதழ்ல வந்திருக்கே “சபலம்”ங்கிற சிறுகதை…அதைத்தான் படிச்சியான்னு கேட்டேன்… ம்ம்…படிச்சேன்…. என்ன? சுரத்தில்லாமப் பதில் சொல்றே? வெறுமே ஒரு வார்த்தைல இப்டி பதில் சொன்னேன்னா எப்டி? ஏதாவது பாராட்டுக் கிடையாதா? நடை எப்படியிருந்தது? கதையோட வேகம் எப்படி? உள்ளே சொல்லியிருக்கிற […]

அவன், அவள். அது…! -2

This entry is part 3 of 16 in the series 20 செப்டம்பர் 2015

( 2 )       அடடா….ரொம்பத் தப்பாச்சேடா கண்ணா…அவளாத்தான் புறப்பட்டுப் போனான்னு நீ சொல்லலாமா….? இது உன் மனதுக்கு அசிங்கமாயில்லே? கண்ணியமான வாழ்க்கை வாழறவங்க நாம. சுற்று முற்றும் இருக்கிறவங்க எதுவும் தப்பாப் பேசிடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறவங்க…அவங்ககிட்டே நமக்கு ஒரு மரியாதை கிடைக்கணும்னு எதிர்பார்க்கிறவங்க….அமைதியா, அழகாக் குடும்பம் நடத்துறவங்கன்னு எல்லாரும் நினைக்கணும்னு விரும்புறவங்க….நாம போய் இப்படிச் செய்யலாமா? சொல்லு…உனக்குத் தெரியாததா இது? வெளியே வந்ததும் வராததுமாக இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்பதுபோல் சித்தப்பா ஆரம்பித்து விட்டது […]

அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )

This entry is part 21 of 24 in the series 13 செப்டம்பர் 2015

(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்) சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா? இந்தப் பெரிசுகளே இப்படித்தான். எதையாவது அவர்களாக மனதில் பரபரப்பாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்குள்ளேயே பதறிக்கொண்டு, என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்று அரக்கப் பரக்க ஓடி வருவார்கள். பெரியவர்களை இம்மாதிரிப் “பெரிசு” என்ற சொல் பதத்தில் விளிக்கக் கூடாது என்று அப்பா கோவிந்தன் எத்தனையோ முறை கூறியிருக்கிறார். எல்லோருக்கும் வயதாவது என்பது பொது. […]

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)

This entry is part 13 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

( 6 ) அன்று ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே பரபரப்பாக எழுந்த பாலன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப் பறந்தான் அலுவலகத்துக்கு. எதற்காக இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்பது புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ஜெகதாம்பாள் அவனுக்கு முன்னால் எழுந்து ஓட்டமாய் ஓடிய தன் கணவனை நினைத்துக் கொண்டாள். இவன்தான் காலில் வெந்நீரைக் […]

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 5 )

This entry is part 5 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

( 5 ) பாலா…இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா…? சற்றுத் தயங்கியவன்….ம்ம்…..தெரியும்ப்பா…என்றான். யாரு சொன்னா? பியூன்தாம்ப்பா… யாரு ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே….. அப்பா எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து ஆரம்பித்த வேலை. உங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்தேன், போயிட்டு வந்தேன் என்று அடிக்கடி போனில் சொல்லுவார். ஒரு காரியத்தை எடுத்தார் என்றால் முடிப்பதுவரை ஓய்வதில்லை. அப்படித்தான் இன்று அரசியலிலும் கால் பதித்திருக்கிறாரோ! வெறும் ஜவுளி […]