திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான். யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நான்கு ஒட்டகச் சிவிங்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் உள்ள புலிகளின் கூண்டருகில் நல்ல கூட்டம் இருந்தது. கடந்த மாதம் வந்த புது வரவான வெள்ளைப் புலியும் ஒரு காரணம். சிறுவர்களுக்கான ரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிழல் தரும் பெரிய […]
வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம் அதிகமான போதும் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை. ஒருநாள் முழுதும் விளையாடிவிட்டு மாலையில் வேட்டி சட்டையுடன் [ இதுதான் பண்டைய தமிழ்ச் சொற்பொழிவாளர் உடை ] பட்டி மன்றம் பேசப் போயுள்ளேன். இந்த இருவித ஈர்ப்புகளினால் […]
வளவ.துரையன் சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும். ’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார். வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது. ”தண்டார் விடலை தாயுரைப்பத் தாய்முன் அணுகித் தாமரைக்கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றித் தீண்டா னாகிச் செல்கின்றான் […]
வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார். சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது. சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]
வளவ. துரையன் மிகப் பெரியதாக மெகா நாவல்கள் வரத்தொடங்கிய பின்னர் சிறிய நாவல்களின் வரவு மிகவும் குறைந்து விட்டது. அதிலும் குறு நாவல்கள் என்ற வடிவம் சுத்தமாக அற்றுப் போய் விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ் குறுநாவல் போட்டி நடத்தி அவ்வப்போது இந்த வடிவத்துக்குப் புத்துயிர் கொடுத்து வந்தது இச்சூழலில் வையவனின் ’ஆச்சாள்புரம்’ எனும் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதியைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. . ஆச்சாள்புரம் எனும் சிற்றூருக்கு வேணு ஆசிரியராகப் பணிபுரியப் பொறுப்பேற்கிறான். […]
பாச்சுடர் வளவ. துரையன் ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேச வரிசையில் இடம் பெறுவது திருநிலாத்துண்டம் என்னும் பெயர் பெற்ற திவ்யதேசமாகும். இத்திவ்யதேசம் பல அதிசயங்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டதாகும். முதலில் இத்திவ்யதேசம் ஒரு சைவத்திருக்கோயிலின் உள்ளே இருக்கிறது. ஆமாம்; இத்திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலின் உள்ளேதான் உள்ளது. இதேபோல திருக்கள்வனூர் எனும் திவ்யதேசமும் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலுக்குள்ளேதான் இருக்கிறது. திருநிலாத்துண்டம் மற்றும் திருக்கள்வனூர் இரண்டும் எப்படி சைவத் திருக்கோயில்களுக்குள் வந்தன என்பது தெரியவில்லை. ஒருவேளை நிலாத்துண்டத்தான் கோயிலும், […]
வளவ.துரையன் விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது. பறவைகள் கூடு விட்டுக் கிளம்பி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பால்காரர்களின் ‘பாம்-பாம்’ சத்தம் போய் இன்னும் உறங்குபவர்களையும் விழிக்க வைத்தது. ”ஞாயிறுதானே, மெதுவாக எழுந்திருக்கலாம்” என்று எண்ணியவாறே கண்களை மூடிப்படுத்திருந்தவனைத் தொலைப்பேசி ஒலி கிளப்பி விட்டது. “வணக்கம்! யாருங்க பேசறது?” என்றேன் வழக்கம் போல. “நான்தாண்டா தமிழ்மணி பேசறேன், எங்கியும் போயிடாத, இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்” “நீ வர்றது சரி, வா, என்னா செய்தியைச் சொல்லு” என்றேன் அவசரமாக. “வந்து…ஒண்ணுமில்ல” […]
வளவ. துரையன் சிறுகதை என்பது வாழ்வின் ஏதேனும் ஒரு முரணைக் காட்டிச் செல்கிறது. அந்த முரண் என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சந்தித்திருப்பதே. அந்த முரணுக்குத் தீர்வு கண்டு வாழ்வை அமைத்துக் கொள்வதும் அல்லது அந்த முரணோடு இணைந்து போய் வாழ்வைச் சீராக்கிக் கொள்வதும் அவரவர் தேர்ந்தெடுக்கும் முறைகள். தான் கண்ட அல்லது கேட்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கும்போது படைப்பாளன் அந்த நிகழ்வில் உள்ள முரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டிக் காட்டுகிறான். அதே நேரத்தில் அந்த முடிச்சை […]
[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : வளவ துரையன் ] நான் லிட்ச்சி மரத்தின் கிளயில் உட்கார்ந்திருந்தேன். தோட்டத்துச் சுவரின் மறுபக்கத்திலிருந்து கூன் விழுந்த ஒரு வயதான பிச்சைக்காரன் பறக்கின்ற வெண்மைத் தாடியுடனும், கூரிய பார்வையுள்ள பழுப்பு நிறக் கண்களும் கொண்டவனாய் என்னைப் பார்த்தான் ” உன் கனவு என்ன “ என்று என்னை அவன் கேட்டான். தெருவில் செல்லும் கந்தையான ஆடை உடுத்தியிருந்த ஒருவனிடமிருந்து வந்த அந்தக் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. அதுவும் அவன் ஆங்கிலத்தில் […]
தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட் [ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ] தரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது. நான் என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புழுதி மண்ணாலான தெருவைப் பார்த்துக் கொண்டே யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் வேகமாகப் போக புழுதி […]