பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் படுவதே அதன் சாராம்சம். நான்காவது தூண் எவ்வளவு சந்தர்ப்பவாதமும் மிகுந்தது என்பது கூடங்குளத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டைப் பார்த்தாலே புரியும். கூடங்குளம் போராட்டத் தரப்பு அனைத்துமே சரி என்று […]
கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன குத்தக்க சீர்த்த இடத்து. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் பெண்ணின் நிலை சோதனைக் களத்தில் வெந்து கொண்டிருந்தது. பெண் கற்கச் செல்வது கூடப் பிரச்சனை. அவள் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் மற்றவர் பரிசோதனைப் பார்வையில் இருந்தன. பணிகளில் இருவிதங்கள்.. ஓரிடத்தில் இருந்து பணி யாற்றுவது ( sedantary ) இன்னொன்று பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது. அதாவது களப்பணி. அதிலும் ஆடவர்களுடன் சேர்ந்து செய்யும் பணி. முதலில் வம்புக் […]
இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த பொழுது அண்மையில் ஒரு நாள் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை மாலைத் தேனீருடனும் […]
காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு, அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக, ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ. ( AUNG SAN SUU KYI) சமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக கட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, ராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது. மாயான்மார், பல்லாண்டுக் […]
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்! கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனிய குரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ”ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும்” […]
ம ந ராமசாமி >>> என் இலக்கியப் பணியை அங்கிகரிக்கும் நிமித்தமாக இங்கே எனக்கு விருது வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு விவரத்தை நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். விருது வழங்கப்பட்டதால் இனி நான் எழுதும் எழுத்தில் ஒரு தயக்கம் ஏற்படும் என்பதான ஐயம் என்னுள் எழுகிறது. பெற்ற பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்பதான அச்சம். அக்காலத்தில் கல்கி சொல்வார். ”ஒருவர் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவரை அழைத்து கழுத்தில் ஒரு பூமாலையைப் போடுங்கள். […]
– அருணகிரி ”What was unfolding in Mumbai was unfolding elsewhere, too. In the age of global market capitalism, hopes and grievances were narrowly conceived, which blunted a sense of common predicament. Poor people didn’t unite, they competed ferociously amongst themselves for gains as slender as they were provisional. And this undercity strife created only the […]
தியானம் என்பது யாது? தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று. விக்கிபீடியா தியானம் என்பது, இருக்கும் இடத்தில் இருப்பது. நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது. உணர்வுகளை […]
தமிழ் பழமையான, எளிதான, இனிமையான மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் மற்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள சொற்களை ஒலி அடிப்படையில் எழுதவோ (transliteration) பேசவோ இயலாது. தமிழ் பத்திரிக்கைகளிலு்ம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மற்ற மொழிப்பெயர்கள் தவறாக அச்சிடவும் பேசவும் படுகின்றன. . 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே தமிழ் தேங்கிவிட்டது என்று நான் எண்ணுகிறேன். தமிழ்க்காவலர்கள் என்மீது பாயும் முன் என்னைப் பற்றிய சிறு குறிப்பு : என் தாய் மொழி தெலுங்கு. நான் […]
1 அறிமுகம் ஒரு உலோகம். அதிக விலை மதிப்புடையது. உலகெங்கிலும் மக்களால் விரும்பி வாங்கப்படுவது. தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது. இதுவே தங்கத்தைப் பற்றிய பொதுவான கருத்து. நானும் உங்களில் ஒருத்தி. வணிகவியலிலோ பொருளாதாரவியலிலோ பட்டம் பெற்றவள் இல்லை. எந்தவொரு தங்கம் பற்றிய முதலீடு மற்றும் வியாபார அறிவும் இது வரை இருந்தது கிடையாது. கடந்த பத்து வருடங்களில் தங்கத்தைப் பற்றிய விலையை மட்டும் தொடர்ந்து […]