மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1

This entry is part 7 of 32 in the series 1 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

ஏகாலி

This entry is part 5 of 32 in the series 1 ஜூலை 2012

மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32

This entry is part 3 of 32 in the series 1 ஜூலை 2012

36.  குதிரை லாயத்தை ஓட்டியிருந்தது சிறை. அருகிலேலேயே தொழுவமும், குதிரைகள் லாயமும் இருக்கவேண்டும். சிறைச்சாளரத்தின் வழியே உள்ளே விழுந்திருந்த ஒளித்துண்டில், விலங்குகளுக்காக இடப்பட்ட மட்டைக்கோரை, கமரிப்புல், அறுகம் புல், சாமை, கொள் தப்பித்த துகள்கள் மின்மினிப்பூச்சிகள்போல பறந்தன. குதிரைகளின் பொதுவான கனைப்பு, நகைப்பதுபோன்ற கனைப்பு, மூக்கின் சீறல், கால்களை இடம் மாற்றிவைக்கும் குளம்பொலி; பசுக்களின் சந்தோஷம் ‘ம்மா’, கதறல்; கன்றுகளின் கூவல்; எருதுகளின் உக்காரம்; அவற்றின் வாடை; துர்க்கந்தம் சர்வமும் சிறைக்குள் இவன் மிச்சம் வைத்த இடத்தை […]

முள்வெளி அத்தியாயம் -15

This entry is part 1 of 32 in the series 1 ஜூலை 2012

மதியம் மணி பன்னிரண்டு. “இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…?” அவனுக்குக் கமறி விக்கியது. “மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள். “முதல்ல தண்ணியைக் குடிடா” “ஆம்லேட்டை ரசம் வரைக்கும் வெச்சிருக்க மாட்டே.. இரு.. அப்பளம் சுட்டுப் போடறேன்.” அப்பளம் சுட்ட படியே “ஏண்டா.. ஏதோ […]

அவனுடைய காதலி

This entry is part 39 of 43 in the series 24 ஜூன் 2012

கோமதி [*1950இல் எழுதப்பட்டது] நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் அழகை வர்ணித்தார்கள். சுருண்ட கூந்தல், சிவந்த உதடு, மைதீட்டிய கண்கள், முத்துப்பற்கள், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி என்று சொன்னார்கள்.   உடனே நந்த குமார் ”செயற்கை அழகு செய்துகொள்ளும் பணக்க்காரப் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

This entry is part 37 of 43 in the series 24 ஜூன் 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது.   ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு,  கவிந்த படிக்கே விடியும் பொழுது.   பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் […]

நான் ‘அந்த நான்’ இல்லை

This entry is part 34 of 43 in the series 24 ஜூன் 2012

தெலுங்கில் :B. ரவிகுமார் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய ஆடையுடன் தலையில் குடத்தால் அப்படியே தண்ணீரை அபிஷேகம் செய்துக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். விஷயம் எதுவாக இருந்தால் என்ன? என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர் என்று கணக்கிட வேண்டியது தான். ஆனால் நான் ரொம்ப நேரமாய் வியர்வை ஆறாய் வழிய எதையோ […]

பஞ்சதந்திரம் தொடர் 49

This entry is part 33 of 43 in the series 24 ஜூன் 2012

பாம்பின்மேல் சவாரி செய்த தவளைகள் ஒரு இடத்தில் மந்தவிஷன் என்றொரு கருநாகம் இருந்தது. அது வயதான பாம்பு. ‘’நான் சுகமாக வாழ்வதற்கு வழியென்ன?’’ என்று அது எண்ணிப்பார்த்தது. பிறகு, தவளைகள் நிறைய வசித்த ஒரு குளத்துக்கு அது போயிற்று. வாழ்க்கையில் வெறுப்படைந்தது போல் அது பாசாங்கு செய்தது. அம்மாதிரி காத்து நிற்கையில், நீர் ஓரத்துக்கு வந்த ஒரு தவளை அதைப் பார்த்து, “மாமா, முன்போல் நீங்கள் ஏன் இரைதேடித் திரியவில்லை?’’ என்று கேட்டது. அதற்குப் பாம்பு, ‘’நண்பனே, […]

“செய்வினை, செயப்பாட்டு வினை“

This entry is part 32 of 43 in the series 24 ஜூன் 2012

       கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் போலானது. பெருகியிருக்கும் அந்த நெரிசலில் தெரிந்த, தெரியாத எல்லா சோக முகங்களையும் கடந்து, மறந்து, கதறி அழ ஆரம்பித்தேன். அவர் மடியில் விழுந்த வேகத்தில் உடம்பு சாய்வதைக் கண்டு யாரோ வந்து தாங்கிப் பிடித்து நிமிர்த்தி நாற்காலியோடு இணைந்த கட்டுக்களை இறுக்கினார்கள்.     அப்போதும் […]

நினைவு

This entry is part 30 of 43 in the series 24 ஜூன் 2012

மராத்தி மூலம்- சதீஷ் அலேக்கர் ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி   திரை விலகும் போது மேடையில் அடர்த்தியான இருள்.    மெல்ல ஒளிபடர்ந்து மேடையில் இருப்பவை மங்கலாகக் காட்சிக்குக் கிடைக்கின்றன.  மேடையின் ஒருபுறம் உயர்ந்த சாய்மானம் கொண்ட சிம்மாசனம் போன்ற இரு நாற்காலிகள் இருக்கின்றன.  இந்த நாற்காலிகளிலும் ஒரு ஆணும் ஒரு பெண்மணியும்  ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.  பெண்மணிக்கு   35 வயது இருக்கும். ஆணுக்கு சுமார் 40 வயது இருக்கலாம். இரு […]