அதுவே போதும்

This entry is part 5 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்

கிளறுதல்

This entry is part 6 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் குப்பையைக்கிளறினால்தான்கோழிக்கு இரைகிடைக்கிறது.அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவனசிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும்.அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும்அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ?இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா?அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன.நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதைநாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.

வாழ்வு – ராகம்

This entry is part 2 of 6 in the series 14 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ் தமிழில் : வசந்ததீபன் — கிடைத்து இருக்கிறது பார்வை கொஞ்சம் பார் சற்று பார்த்தால் இந்த பூமி, ஆகாயத்தின் நீலம் , நட்சத்திரங்கள் சூடிய இந்த இரவின் வானம் இவை மலைகள் , நதிகள் , அருவிகள் , பரந்த கடல் இந்த காட்டாறுகள் , ஏரிகள், மரங்கள் , அழகான புல் மைதானங்கள், ஏரிகள் _ தால் _ஸர்_ அனுபம் மற்றும் பூக்களின் இந்த அழகான பள்ளத்தாக்குகள் _  பார் […]

முதல் கல்

This entry is part 1 of 6 in the series 14 ஏப்ரல் 2024

ஆர் வத்ஸலா ஒரு காலத்தில்எனக்கு நண்பனாகஇருந்தான்எப்போதாவது சந்திப்போம்எப்போதாவதுபேசுவோம்புலனத்தில்குறுஞ்செய்தி பரிமாற்றம் அடிக்கடிமனைவியைப் பற்றிமகளைப் பற்றி அன்புடன் பேசுவான்அவன் மேல்எனக்கிருந்ததுஅன்பும் மதிப்பும்என் காரணமாகஎன் குடும்பத்தினருக்கும்பிறகுகாரணம் சொல்லாமல்வந்ததுஅவனதுமௌன விலகல்என்னை வருத்திக் கொண்டு நீண்ட மௌனத்திற்குப்பிறகு வரத் தொடங்கினநட்புக்கு கல்லறை கட்ட மறுத்துநான் பிடிவாதமாகஅனுப்பக் கொண்டிருந்த குறுஞ்செய்திகளுக்குஎதிர்வினைகள்மரியாதை நிமித்தம் அனுப்பப் பட்டவை என்று பறை சாற்றிக் கொண்டுமறுக்கிறேன் நான்தான்முதல் கல்லை வைக்கவிடுதலைக்கான முதலடி அதுதான்என்றறிந்திருந்தும்

என் பெயர்

This entry is part 7 of 8 in the series 4 ஏப்ரல் 2024

அமீதாம்மாள் எனக்குள்இன்னொரு உயிர்பேசுகிறதுபேசுகிறேன்அழுகிறதுஅழுகிறேன்சிரிக்கிறதுசிரிக்கிறேன்மௌனிக்கிறதுமௌனிக்கிறேன்வெளியேஎவர் பேசுவதும்எனக்குப் புரிவதில்லைநான் பேசுவதும்எவர்க்கும் புரிவதில்லைஅந்த இன்னொருஉயிரைத் தவிர

அனுபவம்

This entry is part 6 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு.இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன.தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டதுஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோஎன்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும்.அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது.அதை அனுபவிப்போம்

வாக்குமூலம்

This entry is part 5 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

சுழலும் பூ கோளம்

This entry is part 4 of 8 in the series 4 ஏப்ரல் 2024

சசிகலா விஸ்வநாதன் பம்பரம் சுற்றிச் சுழன்று விழும். பூ கோளம் தன் சுழற்சியில் என்றும் சுழலும். வரையருத்தது இறையன்றோ! நாள் ஒன்று கூடுவது கணக்கின் விதி நாம் அறிந்தோ; அறியமலோ கணக்கன்  விடும் புதிர். புதிரை  புரிந்தும் புரியாமலும் தான் புவி மேல் நாம் இன்னும் இருக்கிறோம்

நான் மனிதன் அல்ல

This entry is part 3 of 8 in the series 4 ஏப்ரல் 2024

வசந்ததீபன் ஒன்று___________ நான் மனிதன் அல்ல ஐயாமிருகமாக இருக்கிறேன்இரு கால் மிருகம்அதைப் பேச்சு வார்த்தையில்மனு புத்ரன் _ அம்மாவைப் புணர்பவன் _ அக்காவைப் புணர்பவன் _இழி சமூகம் எனச் சொல்கிறான். எல்லா நாட்கள் _மாடுகளைப் போல  உழுகிறதற்குகை நிரம்ப பார்லிகூலியாகக் கொடுக்கிறான். வாய் திறந்தால்கோபமாய் பார்க்கிறான்பழமொழியை உருவாக்குகிறான்எறும்பு எப்போது இறக்கிறதோசிறகுகள் வளர்கின்றன அதற்கு என்றுஇறப்பதற்காகத்தான் முண்டம்கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்தது என்றுஹு…ஆ…ஹு… ஆ…செய்கிறான். பஞ்சாயத்து தலைவன் என்றுவட்டாரத்தின் போலீஸ்என்னுடைய உறவின சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றுபைத்தியம் என்று  _பொதுவான மற்றும் […]

வேலி

This entry is part 2 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஆர் வத்ஸலா அன்றைக்குள் மென்பொருளை முடித்துபயனாளி நிறுவனத்திற்குஅனுப்பி வைக்க வேண்டுமென்றுமேலதிகாரி உத்தரவிட்டதால்நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னைஎன் இரு சக்கர வாகனம்பழக்க தோஷத்தில்மேய்ச்சலுக்கு பின்தன்னிச்சையாகவீடு திரும்பும்பசுக்களைப் போல்என்னிடம் எதுவும் கேட்காமல்விளக்குகள் எரியாதவெறிச்சோடிக் கிடந்தஎன் தெருவுக்குகொண்டு சேர்த்ததுகவலையில்லாமல்முன்னேறிய நான்தெரு முடிவில்கவனித்தேன்ஒரு காவல்துறை அதிகாரியைகொஞ்சம் பயமாக இருந்தது