மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள் தவிர்க்கப் படும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலரின் முதல் நோக்கு இதய நிலத்தில் இறைவன் மானிடத் துக்கு விதைத்த வித்து போன்றது ! காதலர் முதல் முத்தம் வாழ்வு மரக்கிளை முனை யிலே முளைத்த முதல் பூ […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இம்மாதிரி தான் இளங் காளை ஒருவன் தேடி வருகிறான் ஒரு குரு நாதரை நோக்கி ! அது போன்று தான் சேய் ஒன்றும் தாய் முலையில் வாய் வைக்கப் போகும் தன் ரகசியத் தாகம் அறியாது ஆயினும் தலை தானாகத் திரும்பிக் கொண்டு ! மனித இனம் படிப் படியாய் வழி வழியாய் புலம் பெயர்ந்து அறிவு ஞானம் வளர்ச்சி அடைந்து வருகுது […]
ப.பார்த்தசாரதி. துரு பிடித்த ஜாமெட்ரி பாக்ஸ் ஒன்றை பல்லால் கடித்து திறந்த குழந்தை தினமும் அரிசி போட்டாள் என்றாவது ஒரு நாள் மயிலிறகிலிருந்து மயில் வருமென நம்பிக்கையில்.
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தூங்கச் செல்கிறான் ஒருவன் தான் வசித்த ஊரில் ! கனவில் வேறோர் ஊரில் வாழ்வதாய் நினைவு ! கனவில் நினை வில்லை எந்த ஊர் மெத்தையில் தான் உறங்கிய தென்று ! கனவு ஊரைப் பற்றிய உண்மையை நம்பினான் ! உலகு தூக்க மயக்கம் தருகிறது ஒருவிதத்தில் ! தகர்ந்து போன அநேக நகரங்களின் தூசி வெள்ளம் தரையில் நம்மேல் படிந்திடும் உறங்கி […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “எனக்கு விரிந்த அறிவும், கூரிய நீதித் திறனும் நீடித்த அனுபமும் இல்லாமல், மனிதருக்குப் போதனையோ ஆலோசனையோ கூற அருகதை அற்றவன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலியின் விழிகள் முதலில் வீசும் ஓரப் பார்வை வாழ்க்கைக் கீதத்தின் ஆரம்ப நோக்கு ! அதுவே முதல் நாடக அங்கம் மனித குலத்துக்கு ! கடந்த கால அதிசயத் துக்கும் […]
ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத் தூய்மையாக்கி தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து நிரம்பும் அம்மணங்களைக் கழுவி நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து தன் கனத்தை தானே தாங்கி தன் குணத்தை எங்கும் விதைத்து தன் மணத்தை திசைகளில் தூவி நனைக்கும் கால்களிலும் கைகளிலும் உற்சாகத்தை ஒட்டிவிட்டு தத்தித்தாவி தாளம் போட்டு நடனமாடி நளினமாயோடுது பெருநதி ஒரு துளியும் […]
சம்பூர் சனா நான் பிறந்ததால் “நீ” இறந்தாய்.. நீ இறந்ததால் “நானும்” இறந்தேன்.. மீண்டும் ஓருயிரென ஆனாயோ..?, என்னை இன்று வாழ்த்துகிறாய்… உன் ஒரு வாழ்த்துக்காக காத்திருந்தேன் பல நாள்.., இன்று என்னை வாழ்த்துகிறாய் “நான்” உயிர் நீத்த பின்னால்… “நன்றி” சொல்ல “நான்” இல்லை.., ஆனாலும் சொல்லுகிறேன் – “கல்”லாய் உள்ளம் ஆகினாலும் இதயம் இன்றும் துடிப்பதனால்…! என் அன்பு வாழுமிடம் உன் இதயம் என்பதனால் “நான்” இறந்து போனபோதும் உனக்குள் வாழ்வேன் இதயத்துடிப்பாய்…! உன் […]
வையவன் எல்லாக் கைதிகளுமே சின்னஞ்சிறு சிசுக்களாகத்தான் தென்படுகிறார்கள் தூங்கும் போது கைமடித்து ஒருக்களித்து கவிழ்ந்து மல்லாந்து கருப்பைக்குள்ளும் வெளியிலும் ஒரு பாவமும் அறியாது இருந்த அதே நிலையில்.. துயிலின் தாலாட்டில் துவண்டு போன தோற்றத்தில் .. காவலர், நீதிபதி , வழக்கறிஞர் தண்டனை, பாதிக்கப்பட்டோர் மற்றும் தம் குடும்பம் என்று வளரும் சமூகத்தில் அடப் பாவிகளா என்ற சாபம் உறங்குவோருக்குக் கேட்காது விழித்தபின் தான் வெளிப்படுவான் மூத்து முற்றி முதிர்ந்த அந்த ஆதி மனிதன் சற்றே நீடிக்கட்டும் […]
தாத்தா நினைவு தப்பி தன்மை பிறழ்ந்து முன்னிலை மறந்து படர்கைகளை பிழையாக அனுமானித்து முதுமையை வாழுகையில் பரிதாபமா யிருக்கும் கட்டிக் காலங்கழித்தப் பாட்டியையும் பெற்றுப் பேர் வைத்த அம்மாவையும் பேரன்பு காட்டிய எங்களையும்கூட இதுதான் இவர்தான் நான்தான் நீதான் என அடிக்கடி அடையாளம் காட்டியே பேச வேண்டியிருந்தது தேர்தல் விழா தேர்த் திருவிழாவென படு விமரிசையாக நடந்து முடிய கட்சி சார்புக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அவர் சுய நினைவோடு தீர்மாணித்திருக்க முடியா தெனினும் தாத்தாவின் சுட்டு விரலிலும் […]
எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் […]