புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை ஓடக்காரர்களாகவும் ஆக்குகிறது மழை. அடித்து அடித்து மாநகரத்தைச் சலவை செய்துகொண்டிருக்கிறது மழை..
அலிபாவா வெறுமையாய்த் தெரிகிறது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு மாயையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு பிறருடைய வாழ்க்கை. alibavapkm@gmail.com
1)மூன்றுதலைமுறைவயசிருக்கும் இதன் பிரம்மாண்டமான உருவத்தை யாரும் கவனித்ததாய் இல்லை. எவருக்கும் தெரிந்ததுவுமில்லை இது முளைத்து வளர்ந்தவிதம்பற்றியும் வான் நோக்கி நிமிர்ந்தும் மண்ணுக்குள் வேர்பாய்ச்சி நிற்கும் வேப்பமரம்தான் என்றாலும் முன்காமிகளும் சொன்னதில்லை இத்தனை ஆண்டுகளாய் இது உதிர்க்கும் பச்சை இலைகளுக்கு புனிதம் சேர்ந்த வரலாறு குறித்தும் மூலிகை காற்றாய் சுவாசத்திற்கு இதமளிக்கும் இதன் அகவிலாசம் பற்றியும். 2)ஒவ்வொரு இலைகளும் தாழ்வாரங்களில் சமாதிகளின் பூக்களோடு பேசிக் கொண்டிருக்கும் ரகசியம் பிடிபடவில்லை. கசக்கும் வேப்பிலைகளை வாயில் போட்டால் இனித்துக் கிடக்கிறதென்ற இன்னொரு […]
=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து – குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை அழகுக்கு இடையே கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட சந்தை பொருட்களாக நகர்கிறோம் அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில். -சித்ரா (k_chithra@yahoo.com)
நடுநிசியில் யார் கதவைத் தட்டுவது பிரமையா தூக்கம் வராத இரவுகளை எதிர்கொள்கையில் நரகம் பற்றிய பயம் அதிகரிக்கின்றது சிநேகிதர்கள் ஒவ்வொருவராக பிரியும் போது கதவைத் தட்டியது எமன் தானோ என்று தோன்றுகிறது பருவத்தில் படமெடுத்து ஆடிய மனது இன்று பயந்து பம்முகிறது மனம் பக்குவமடைந்துள்ளது அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிய இப்போது ஆளாய் பறப்பதில்லை செய்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்றுவிடுமோ என பயமாய் இருக்கிறது அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன் வாடினால் தான் மலரென்று செத்தால் […]
ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய பாறை மனது கெக்கலித்து புரளும் நினைவில் ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை விண்ணைத் தாண்ட எத்தனிக்கும் மழைத் தவளையின் சாகசத்தோடு துளியென்பது கூழ் பூசின கூட்டின் அடையாளமாய் வீலென்று அலறும் கனத்த மார்பில் அமுது சுமந்தபடி நிழல் பிடிக்க முடியாதவன் சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி […]
கர்ப்பிணிக்கான சிறப்பு இருக்கையில் அந்த மனிதர் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி கேட்டார் ‘இது கர்ப்பிணிக்கான இருக்கை அமரவிடும் என்னை’ அவர் ‘மன்னிக்க வேண்டு’ மென்றார் மரியாதையாய் நின்றார் பிறவிக் குருடர் அவரென்று நின்றபின்தான் தெரிந்தது ‘முந்நூறு நாள்தான் கரு வாழ்க்கை உங்களுக்கோ மொத்த நாளும் இருள் வாழ்க்கை அமரும் அருகதை உங்களுக்கே’ என்று\ கர்ப்பிணி எழுந்தார் கர்ப்பிணிக்காக எல்லாரும் இடம் தர அமர்ந்து கொண்டார் அவர் எல்லார் இதயங்களிலும் யூசுப் ராவுத்தர் ரஜித்
_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது ஒரு வகை. பரவலாய் காணக்கிடைப்பதுதான். ஒரு கேள்வியை இடைமறித்து கச்சிதமாய் தவறான விடையளிக்கும் பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம். தம்மைக் கதிரோனாய் காவ்யாசானாய் கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய் இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும். விழிப்போடிருக்கவேண்டும். 2 உன்னுடைய […]
என் படிமங்கள் ஒவ்வொன்றாக அலங்கரிக்கப்படுகின்றன அதன் கட்டமைப்பு மிகவும் தொன்மையானவை உலகில் தோன்றிய முதல் உயிரின் மிச்சங்கள் இதிலும் இருக்கிறது . படிமத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனிக்கிறேன் அவையே என்னை தீர்மானிக்கின்றன எதை முன்னிலை ஆக்குவது என்பதில் பெரும் போட்டிகளும் போராட்டங்களும் நாளும் நடைபெறுகின்ற இயல்பாகிறது . புதிய படிமங்கள் தோன்றுவதில் பழையனவை ஆதங்கம் கொள்கின்றன தான் இன்னும் கீழே செல்கிறோம் என்று அவை இன்னும் தொன்மையாகிறது என்பதை அறியாமை உடையவானகிறது . நிறங்களின் தன்மையை மேலும் […]
— மன்னார் அமுதன் கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த நீதிமான்களைக் காலம் வெல்லும் கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும் கீழான மனிதர்தம் பாதம் தொட்டு – நல்ல மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள் நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும் பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த நீரினில் ஒருபுறம் நீதி […]