கொல்கத்தா தமிழ் மன்றத்தில் மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு

author
9
0 minutes, 0 seconds Read
This entry is part 26 of 33 in the series 27 மே 2012

(கே.எஸ்.செண்பகவள்ளி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கருத்தரங்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரனின் அரிய முயற்சியில் இந்தியாவிலே மிகவும் தொன்மை வாய்ந்த நகரமும், முதலாவது தலைநகரமுமான கொல்கத்தாவில் மிகவும் சிறப்பாக நடந்தது. இவ்வாண்டு மார்ச் 8-9 தேதிகளில் இந்தக்கருத்தரங்கம் நடந்தேறியது.

கொல்கத்தாவைப் பற்றி சிறிது சொல்லித்தான் ஆக வேண்டும். காரணம் இந்தியாவில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாநிலமாகும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இராமகிருஷ்ண பரஹம்சர், விவேகானந்தர், அன்னை சாரதா தேவி போன்ற தியாகிகள், மகான்கள் அவதரித்த புண்ணியபூமி. மேலும் ஆஸ்ட்ரியாவிலிருந்து சேவைக்காகவே புலம் பெயர்ந்து வந்த அன்னை திரேசா வாழ்ந்ததும் இம்மண்ணில்தான்.

இம்மாநிலம் மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் “ஊக்லி” எனப்படும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடாகக் காணமுடிகிறது.

மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு

கொல்கத்தா தமிழ் மன்றத்தின் 59ஆம் ஆண்டு விழா ஐந்து நாள் நிகழ்வாக நடந்தது. இந்த ஆண்டு விழாவில் மலேசியாவிலிருந்து 46 பேர் கலந்துகொண்டனர். இந்தப் பயணக்குழுவில் திரு.ஆதி.இராஜகுமாரன், திரு.ஆர்.தியாகராஜன், இயக்குனர் திரு.விஜயசிங்கம், திரு.அசன்கனி, திரு.சோ.பரஞ்சோதி, திரு.ஞானசைமன், திரு.இரா.மாணிக்கம் தம்பதியினர், திரு.ரெ.கோ.ராசு தம்பதியினர், முன்னாள் தலைமையாசிரியைகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மலேசிய நண்பன் நிருபர் திரு.ஐ.எஸ்.சத்தியசீலன், நயனம் திருமதி நயனதாரா எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முனைவர் உதயசூரியன், கவிப்பேரரசு வைரமுத்துவின் வெற்றிப் பேரவையின் செயலாளர் திரு.குமார், முன்னாள் மேகா டிவியின் நிருபர் திரு.வினோத் குமார் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ்மன்றத்தினரின் வெகுவிமரிசையான வரவேற்பு நல்கப்பட்டது. பயணக்குழுவினர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தனர். பயணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்குத் தலையில் சூடிக்கொள்ள மல்லிகைச் சரம் தந்தது, நமது கலாச்சார பிரதிபலிப்பை மென்மேலும் மெருகூட்டியது. கொல்கத்தா தமிழ் மன்றத்தினரில் பெரும்பாலோர் அரசாங்க உயர் பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆளுமைகள் சிறப்புகள் இருந்தன. ஜவஹர்லால் நேருவிற்கு திருக்குறள் சொல்லிக்கொடுத்த திரு. நேரு நாராயணன் என்று அழைக்கப்பட்ட எண்பத்து மூன்று வயது பெரியவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

தமிழ்மன்றத்தின் துணைத்தலைவர் திரு.வரதராஜன் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். பயணத்தின் ஆரம்பக்கட்டங்களிலிருந்தே மிகவும் உறுதுணையாக இருந்தவர். வெளிநாடுகளுக்குத் தோலினால் செய்யப்பட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும், பணிவாகவும் காணப்பட்டார். அவரின் மறுபக்கம் நல்ல தமிழ் வளம். அவரின் பேச்சில் மிகவும் அழகாக தமிழ்க்கவிதைகள் இழைந்தோடின.

“மலேசியத் தமிழ் இலக்கிய அறிமுகக் கருத்தரங்கு” என்ற அங்கம் முதல் நாள் பிரத்தியேகமாக மலேசிய இலக்கிய ஆர்வலர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அந்த அமர்வில் நம் எழுவர் கட்டுரை படைத்தனர். முதன் முறையாக இளைய தலைமுறையினருக்குக் கட்டுரைப் படைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன். இளைய தலைமுறையினர் தங்களை வளர்த்துக்கொள்ள இது ஓர் அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கே.எஸ்.செண்பகவள்ளி, பொன்.கோகிலம் ஆகிய இருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் முதல் படைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.ஆகுணநாதன் “மலேசியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் கட்டுரை சமர்பித்தார். தமிழ்க் கல்வியின் வரலாறு, இன்றைய நிலை, வளர்ச்சி, தொய்வு என பல கருத்துகள் அவர் கட்டுரையில் அடங்கியிருந்தன.

அவரைத் தொடர்ந்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் வே.சபாபதி அவர்கள் “அண்மைய மலேசியத் தமிழ் நாவல்கள்” என்ற தலைப்பில் பேசினார். தமிழ் நாவல்களின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை, மலேசியத் தமிழ் நாவல்களின் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி எவ்வாறெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை மிகத் துல்லியமாகத் தம் கட்டுரையில் தொகுத்திருந்தார்.

மூன்றாவது படைப்பாளராக ஆசிரியரும், புதுக்கவிதை ஆய்வாளருமான திருமதி இராஜம் இராஜேந்திரன் “மலேசியாவில் புதுக்கவிதைகளும் பெண் படைப்பாளர்களும்” என்ற தலைப்பில் பேசினார். நமது நாட்டின் பெண் கவிஞர்களின் ஆளுமைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கவிதை வாயிலாக பிரதிபலிக்கும் பெண்களின் பிரச்சனைகள், சிந்தனைகள், புதுக்கவிதை கூறுகள் ஆகியவற்றை தம் கட்டுரை வாயிலாகப் பதிவுச் செய்தார்.

அவரைத் தொடர்ந்து “மலேசியப் புதுக்கவிதைகளில் நவீனச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் முன்னாள் தலைமையாசிரியர் திரு.கோ.புண்ணியவான் பேசினார். இன்றையச் சூழலில், நவீனச் சிந்தனையில் புதுக்கவிதைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்று தமது கட்டுரையில் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருந்தார்.

அடுத்தப் படைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளரும், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தின் அதிகாரியும், ஆய்வாளருமான கே.எஸ்.செண்பகவள்ளி “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக்காப்பகம்: ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் கட்டுரையைச் சமர்ப்பித்தார். மலேசியாவின் வரலாறு எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது, குறிப்பாக தமிழ் ஆவணங்கள், இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நினைவகம் அமைத்தல் போன்ற பல ஆய்வியல் கூறுகளை தம் கட்டுரையில் துல்லியமாக விவரித்திருந்தார்.

மலேசிய வானொலி, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான திருமதி பொன்.கோகிலம் “மலேசிய வானொலியின் தமிழின் வளமும் பயன் தரும் நிகழ்ச்சிகளும்” என்ற தலைப்பில் பேசினர். வானொலியில் தமிழ் மொழியின் பயன்பாடு, கலைச்சொற்களின் ஆதிக்கம், பிரபலமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றி தம் கட்டுரையில் விவரித்தார்.

இறுதியாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருமான திரு. பெ.இராஜேந்திரன் “1980ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப்பத்திரிகைகள்” என்ற தலைப்பில் பேசினார். மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாறு, 1980ஆம் ஆண்டிற்குப் பின் தமிழ்ப்பத்திரிகை துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளியான மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை மிகவும் தெளிவாக விவரித்தார்.

மலேசிய இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்ச் சொல்லாடலில் கொல்கத்தா மன்றத்தினர் மெய்மறந்து வியப்புக்குள்ளாகினர். கட்டுரையாளர்களை மனதாரப் பாராட்டினர். கொல்கத்தா மண்ணில் தமிழ் மணம் மணக்கச் செய்துவிட்ட பெருமை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தையே சாரும். “இந்த உறவு இறுதியாக இல்லாமல், இரு இலக்கிய அமைப்புகளுக்கும் தொடக்கப் பாலமாக அமைய வேண்டும்” என்று தலைவர் கேட்டுக் கொண்டார்.

“மலேசியத் தமிழ் இலக்கியம் அறிமுகக் கருத்தரங்கு” என்னும் தலைப்பில் தொகுத்திருந்த நூலை திரு.பாலச்சந்திரன், ஐ.ஏ.எஸ். வெளியிட்டார். கொல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் மேனாள் செயலாளர் நக்கீரன் அதிகாரப்பூர்வமாக அந்நூலைப் பெற்றுக் கொண்டார். அந்நூலில் பயணத்தில் இடம் பெற்ற 46 பங்கேற்பாளர்களின் குறிப்புகள், கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருந்தன. இந்த இலக்கியப் பயணம் நல்ல பல அனுபவங்களைத் தந்ததுடன் தமிழ் மன்றத்தினருடன் நல்லதொரு நட்புப் பாலத்தையும் இணைக்க வழிவகுத்தது எனலாம்.

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 27பிரேன் நிசாரின் “ இஷ்டம் “
author

Similar Posts

9 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    K.S.SHENBAGAVALLI, a popular writer of MALAYSIA has brought the might of the MALAYSIAN TAMIL WRITERS to the knowledge of Tamil readers all over the world through this informatve article in THINNAI. The visit of Malaysian Tamil writers to participate in the KOLKATHA TAMIL MANDRAM is yet another milestone in the closer ties between the literary contributions between the Tamil writers of both countries. I appreciate the efforts of MR. P.RAJENDRAN for his efforts in fostering this friendship of goodwill among the writers. It is indeed interesting and encouraging that 46 delegates attended the 59th anniversary of the KOLKATHA TAMIL MANDRAM. The affection and care given by MR.VARATHARAJAN, the President of the mandram too is much appreciated. K.S.SHENBAGAVALLI, who works in the MALAYSUIAN NATIONAL ARCHIVES naturally has a flair in writing historical articles. Hence she has given the readers an interesting background on KOLKOTTA. Well done SHENBAGAVALLI..With Regards…Dr.G.Johnson.

  2. Avatar
    K.S.Senbakavally says:

    Dr.G.Johnson : Thank you so much for your good view on our Writers Association and your great concern on me DR!
    I am really happy to see your comments over here. Thanks again Dr. God Bless!

  3. Avatar
    N.Ganeshan says:

    வாழ்த்துக்கள், செண்பகவள்ளி அவர்களே. நிலாச்சாரலில் எனது அமானுஷ்யன் முதலான நாவல்களுக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்குவித்த தாங்களும் ஒரு எழுத்தாளர் என்பதை இப்போது தான் அறிய நேர்ந்தது. எழுத்துத் துறையில் மேலும் முத்திரை பல பதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். -என்.கணேசன்
    http://enganeshan.blogspot.in/

    1. Avatar
      கே.எஸ்.செண்பகவள்ளி says:

      வணக்கம் சார்.
      தாங்கள் எனது கட்டுரைக்காக கருத்து பதிவுச் செய்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் தங்கள் படைப்புகளின் இரசிகை. தாங்கள் எழுதிய படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தது இந்த “அமானுஷ்யன்” தொடர். மிகவும் அற்புதமான சிந்தனை. இது போன்ற கதைகளை விரும்பி வாசிப்பேன். வாழ்த்துகள். மேலும், தாங்கள் என்னை பாராட்டியது எனக்கு இன்னும் உற்சாகமாக உள்ளது. மிக்க நன்றி சார். தங்களைத் தொடர்புக் கொள்ள எண்ணுகிறேன். எனது மின்னஞ்சல் (ksvally@yahoo.com) ; முகநூல் :K.s.Senba

  4. Avatar
    c.vadiveloo says:

    tanggalin katurai arumai.ulaga parvaikku malaysia ilakkiyam arimugam seiyapattirukirathu.malaysia tamileluthaalar sangathin ilakkiya munaippum muyarchiyum vellattu.vaazhutugal.

    1. Avatar
      கே.எஸ்.செண்பகவள்ளி says:

      வணக்கம் சார். தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியப் பணிகளை உலக பார்வைக்குக் கொண்டு வர நானும் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு உறுதுணையாக நிற்கும் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்களுக்கும் இத்தளத்தில் என் நன்றியினைப் பதிவுச் செய்கிறேன்…!

  5. Avatar
    kalaimakalhidaya risvi says:

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைச் செயலாளரும், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகத்தின் அதிகாரியும், ஆய்வாளருமான கே.எஸ்.செண்பகவள்ளி முதலில் எனது நன்றிகள் மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக்காப்பகம்: ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் . மலேசியாவின் வரலாறு எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது, குறிப்பாக தமிழ் ஆவணங்கள், இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நினைவகம் அமைத்தல் போன்ற பல ஆய்வியல் கூறுகளை துல்லியமாக கட்டுரையில் விவரித்திருப்பது பாராட்டத்தக்கது விழாவுக்கு நேரில வந்தது போன்ற மன நிறைவை கே.எஸ்.செண்பகவள்ளியின் கட்டுரை ஏற்படுத்தியது பாராட்டுக்கள் கட்டுரையை பிரசுரித்தமைக்கு தின்னைக்கும் நன்றி

    1. Avatar
      கே.எஸ்.செண்பகவள்ளி says:

      வணக்கம் சகோதரி. தங்களின் அன்பான கருத்துகளுக்கு நன்றி.

  6. Avatar
    கு.மாரிமுத்து says:

    வெண்மணி அறக்கட்டளை வழங்கும்
    வெண்மணி இலக்கிய விருதுகள்
    (ரூ. ஒரு லட்சத்திற்கு மேல்
    ரொக்கப் பரிசுகள், பாராட்டுக் கேடயங்கள், பொன்னாடைகள் கொண்டது)
    1. குறும்படப் போட்டி, 2. ஆவணப்படப் போட்டி, 3. நூல்களுக்கான போட்டி
    4. கவிதைப் போட்டி, 5. கதைப் போட்டி, 6. கட்டுரைப் போட்டி

    1.குறும்படப் போட்டி – ரூ, 10,000./- 7,000./- 5,000./ மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
    2. ஆவணப்படப் போட்டி- ரூ,10,000./- 7,000./- 5,000./- மூன்று பரிசுகள் = ரூ.22,000/-
    தவிர ரூ. 2000./- வீதம் சிறந்த கதை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை, குழந்தை நடிக நடிகைகள், படத் தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர்களுக்கு என்று எட்டுப் பரிசுகள் 8×2,000 = 16,000/-
    3. நூல்களுக்கான போட்டி – ரூ,.30.000/-
    போட்டிக்கு வரும் நூல்களில் கீழ்க்கண்ட துறைகளில் 10 துறைகளுக்கு மட்டும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பரிசாக ரூ. 3,000./- வீதம் 10 x 3,000/- = 30,000/-
    கவிதை, கதை, மொழியாக்கம், தமிழ் வளர்ச்சி, தனித்தமிழ் வளர்ச்சி, தமிழ் மருத்துவம், நாட்டுப் புறவியல், தலித்தியம், பெண்ணியம், அறிவியல், கணிணித் தொழில் நுட்பம், அரசியல், வரலாறு, சமூகவியல், பண்பாடு, வாழ்வியல், சூழலியல், பல்சமய ஆன்மீகம், பயணவியல் தன்முன்னேற்றம், திறனாய்வு பல்துறை விழிப்புணர்வுச் செய்திகள் போன்ற தலைப்புகளிலும் இன்ன பிற துறைகளிலும் இருக்கலாம்.

    * இரண்டு படிகள் தேவை.
    * ஒருவரே பல துறை நூல்களை அனுப்பலாம்.

    4. கவிதைப் போட்டி – ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
    5. கதைப் போட்டி – ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
    6. கட்டுரைப் போட்டி – ரூ, 2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.00/0- = ரூ.6,000/-
    * ஒரு படி போதும்.
    * படைப்புகள் ஏ 4 அளவில் 5 பக்க அளவில் இருக்கலாம்.
    * படைப்புகளை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அவை யுனிகோடு தமிழ்ப் பாண்டில் செய்திருக்கப்பட வேண்டும்.
    * சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
    * இதுவரை எதிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
    * ஒருவரே பல படைப்புகளை அனுப்பலாம்.
    * படைப்புகளை திரும்ப அனுப்ப முடியாது..
    * படைப்புகள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய முகவரி : கு.மாரிமுத்து, வழக்கறிஞர், சென்னை உயர்நீதி மன்றம், வெண்மணி அறக்கட்டளை / வெண்மணிப் பதிப்பகம், எண் 114 / 61, முதல் தளம், மூர் தெரு, சென்னை – 600 001, மின்னஞ்சல் முகவரி: kumarimuthu12@gmail.com
    செல்பேசி எண் 93 45 34 61 08 க்கு அனுப்பப்பட வேண்டும்,
    * அனைத்துப் போட்டிகளுக்கும் கடைசி நாள் : 31.10.2015 * பரிசளிப்பு : பிப்ரவரி 2016.
    * தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் : பிற்பகல் 4 முதல் 10 மணியளவில்.

    அன்புடன் அழைப்பவர்,
    (கு.மாரிமுத்து)

Leave a Reply to kalaimakalhidaya risvi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *