சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?

This entry is part 32 of 35 in the series 29 ஜூலை 2012

யாம் சொல்லும் சொல்லெல்லாம்
எங்கே செல்லும்…?
காற்றலையில் கரைவதனால்
வார்த்தைகள்
காணாமல் போயிடுமா..
கண்டபடி சிதறித்தான்
ஏழு
கண்டங்களும் உலவிடுமா..?
உலகின் காந்தமது
ஈர்க்கும் வடபுலந்தான்
விரைந்திடுமோ…
ஊசாட்டம் இல்லாத
இடமொன்று எங்கே
அங்கு சென்றொழிந்திடுமோ…
வார்த்தை பேசிடும் உதட்டளவில்
உறைந்திடுமோ
இல்லை
கேட்டிடும் இதயமெல்லாம் சென்று
குடியிருந்திடுமோ…
ஆறு குளம் மலைகளைத் தான்
அடைந்திடுமா
அண்டவெளி தாண்டி
வார்த்தை சென்றிடுமா…
இந்த வளி மண்டலத்தை
நிரப்பிடுமா…
இதுகாறும்
காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..?
இருதயத்தில் என்றென்றும்
இருந்திடுமா…
இரு தோள்புறத்தில் இருப்பாரை
அடைந்திடுமா…
ஜுமானா ஜுனைட், இலங்கை.
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்திகொடுக்கப்பட பலி
author

ஜே.ஜுனைட்

Similar Posts

Comments

  1. Avatar
    செ.பா.சிவராசன், says:

    5005 கவிஞர்கள்
    ஆசிரியர்களாக
    இணைந்துப் படைக்கும்
    புது படைப்பிற்கு (உலகப்
    பதிவிற்கு) 20
    வரிகளுக்குள் கவிதைகள்
    வரவேற்கப் படுகின்றன.
    வண்ணப் படத்துடன் கவிதை
    வெளியிடப்படும்
    நாள் : 14-01-2013.
    கவிதைகள் வந்து சேர
    வேண்டிய கடைசி
    நாள் : 25-09-2012.

    அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம்

    முகவரி

    செ.பா.சிவராசன்,
    எண்-42,ஆவடி,சென்னை-62.
    mail : cpsivarasan@gmail.com

    விளம்பரங்கள் ஏற்றுக்
    கொள்ளப்படும்.
    தொடர்புக்கு : 8438263609

    http://www.vahai.ewebsite.com

    Good opportunity to Poets. 5005 Poets will write one

    book for world record.Pls sent one good poem

    (20 Lines) with your age and address

    to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color

    picture. No charges. Last date on 25-09-2012.

    Poems Publish will be on 14-01-2013

    Advertisements will be accepted

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *