ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 1

This entry is part 19 of 26 in the series 24 பிப்ரவரி 2013

க்ருஷ்ணகுமார்

 

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

வள்ளல் அருணகிரிப் பெருமான் – கந்தர் அனுபூதி – பாடல் – 51

சீக்கியர்களின் மதநூலான குருக்ரந்த் சாஹேப்பில் மூல்மந்தர் (மூல மந்திரம்) என்றழைக்கப்படும் முதற்பாடல்

சரியான உச்சரிப்பைச் சுட்ட தேவ நாகர லிபியிலும் ஆங்க்ல லிபியிலும் தட்டச்சப்பட்டுள்ளது

இக் ஓம்கார்

इक ओम्कार

ik OmkAr

பரம்பொருள் ஒன்றே

ஸத்நாம்

सत् नाम

sat nAm

என்றென்றும் உண்மையென அறியப்படுபவர்

கர்தா புரக்

करता पुरख

kartA purak

உலகத்திற்கும் மற்றும் அனைத்துக் காரணங்களுக்கும் காரணமானவர்

நிர்பவ்

निर्भाओ

nirbhav

பயமற்றவர்

நிர்வைர்

निर्वैर

nirvair

அவருக்கு யாரிடமும் பகைமை இல்லை

அகால் மூரத்

अकाल मूरत

akAl mUrat

அவர் அழிவற்றவர்

அஜூனி

अजूनि

ajUni

பிறப்பிறப்புகளுக்கு அப்பாற்பட்டவர்

சை பங்க்

शै भङ्ग्

Sai(n) bhang

ஸ்வயம் ப்ரகாசமானவர்

குரு ப்ரசாத்

गुरु प्रसाद

guru prasAd

குருவின் கருணையால் அறியப்படுபவர்

வாஹே குரு தீ கால்ஸா! வாஹே குரு தீ ஃபதே!

WahE guru dhI khalsA WahE guru dhI phathE!

வல்லமை படைத்த குருவின் இயக்கம் கால்ஸா; அவருக்கு வெற்றி உண்டாகட்டும்.

—- xxxxxx

மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம் சில உண்மைகள், சில நற்கருத்துக்கள், சில சரித்ரத்திற்கு மாறான கூற்றுகள், தகவற்பிழைகள், வெறுப்புக்கருத்துக்கள் போன்ற கலவையால் சமைக்கப்பட்டது என்பது என் தாழ்மையான அபிப்ராயம். நான் ஏற்கும் மற்றும் மறுக்கும் கருத்துக்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன அதற்கான காரணங்களுடன். என் கருத்துக்களிலும் பல அன்பர்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். கவனப்பிசகால் பிழைகளும் இருக்கலாம். அவற்றையும் நான் அறிய விழைகிறேன்.

அதற்கு முன் :-

ஹிந்தி, பஞ்சாபி, ஆங்க்லம், தமிழ் இந்த மொழிகள் இங்கு முன் பின் சொன்னபடி நான் தினப்படி அதிகமாயும் குறைவாயும் உபயோகிக்கும் மொழிகள். சில நிமிடத்துளிகள் என் குடும்பத்தாருடன் தமிழில் தொலைபேசியில் உரையாடுவது மட்டும் தமிழில் என் தொடர்பு. அதை மனதில் இருத்தி இரண்டரை தசாப்தமாய் கிட்டத்தட்ட இவ்வாறே வாழ்ந்துவரும் என் மொழிக்கலப்பை க்ஷமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயன்ற வரை மொழிநடையை சீர்திருத்தியே வ்யாசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னும் என் மொழிநடையைத் தூய தமிழில் அன்புள்ள அன்பர்கள் குற்றம் கண்டால் அதில் எனக்குப் பிணக்கோ அல்லது வாத விவாதங்களோ இல்லை. அவர்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

கடும் குளிரில் கைவிறைக்க மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த பரிச்ரமத்துடன் எழுதப்பட்டது இந்த வ்யாசம். அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சமர்ப்பித்த மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசத்திற்கு எதிர்வினையாகச் சமர்ப்பிக்கப்படும் இந்த வ்யாசத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எதிர்வினையாற்றப்பட்ட வ்யாசத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் உடன்பட்டும் ஒவ்வாத கருத்துக்கள் சுட்டப்படும் காரணங்களின் பாற்பட்டு மறுதலிக்கப்பட்டுமுள்ளன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் கருத்துக்களில் மட்டும் தான் குற்றங்கள் காணப்பட்டன. வ்யக்தி விசேஷத்தில் அல்ல.

ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் என என்னால் அன்புடன் விளிக்கப்பட்டு நம்முடன் சலிக்காது உரையாடி மகிழ்ந்த சலியாத் தொண்டர் ஓய்விலா எழுத்தாளர் த்ருடமான ஹிந்துத்வவாதி வினயமிகு ஆன்மிகவாதி ஒப்பிலா மனிதர் எனப்பன்முகப் புகழ் வாய்ந்த அவர்களுடைய மறக்கவியலா நினைவுகளின் பாற்பட்டு சமர்ப்பிக்கப் படுவது இந்த வ்யாசம். தன்னுடைய எஜமானன் என்று அப்பெருந்தகை சொல்லும் கருமாணிக்கமாம் கண்ணன் தன் திருதாள்களடைந்த அவர் தம் எண்ணங்களும் நினைவுகளும் நம்மை வழிகாட்டட்டும் எனக் கார்முகில் வண்ணனவனையும் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனையும் இறைஞ்சுகிறேன்.

உத்தர பாரதத்தில் ரீடா சாஹேப் குருத்வாரா (சீக்கியர் கோவில்) என்று ஒரு குருத்வாரா மிகவும் ப்ரசித்தம். இது உத்தராகண்ட் மாகாணத்தில் உள்ளது. பரேலிக்கு (உ.பி) அருகில் உள்ள டனக்பூர் (உத்தராகண்ட்) என்ற இடத்தில் இருந்து 166 கிலோமீட்டர் தொலைவிலும் நானக்மத்தா என்ற இடத்தில் இருந்து 209 கிலோமீட்டர் தொலைவிலும் (சாலை மார்க்கமாக) உள்ளது இந்த ஸ்தலம். குருநானக் தேவ் மஹராஜ் அவர்கள் தனது முதல் சிஷ்யரான பாய் மர்தானா (Bhai Mardana) அவர்களுடன் இந்த ஸ்தலத்திற்கு வருகை தந்துள்ளார். பாய் மர்தானா முஸல்மானாகப் பிறந்து குருநானக் மஹராஜ் அவர்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சிஷ்யராகச் சேர்ந்தவர். குருவும் சிஷ்யரும் இந்த ஸ்தலத்திற்கு வந்த போது பாய் மர்தானாவுக்குப் பசியெடுக்கையில் வேறெதுவும் கிட்டாத போது குரு மஹராஜ் அங்கிருந்த பூவந்திக்காய்களை (சீயக்காய் – Soapnut) இவருக்கு உண்ண அளித்ததாகவும் அது தித்திப்பாக இருந்ததாகவும் செவிவழிச்செய்தி. குருதசமேஷ் (பத்து சீக்கிய குருமார்) பற்றிப் பேசும் நூலான ஜனம்சாகியில் இது பற்றிக் குறிப்பில்லாத போதும் சீக்கிய சம்ப்ரதாயத்தின் செவிவழிச்செய்தியாக இது ஏற்கப்படுகிறது. இன்றும் குருத்வாராவுக்கு வணங்கச்செல்லும் தர்சனார்த்திகளுக்கு ப்ரசாதமாக தித்திப்பான பூவந்திக்காய்கள் கொடுக்கப்படுகின்றன.

இதை நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் கசப்பான காய்களை இனிப்பாக மாற்றியது குருமஹராஜ் அவர்களின் சித்தி (sidhi) (Miracle). அவருடைய சமத்காரம். அது அமானுஷ்யமானது. மஹாத்மா காந்தியின் மரணம் என்ற இந்த வ்யாசத்தில் மதநல்லிணக்கம் மற்றும் மதஒற்றுமை என்ற கனி கருப்பொருளுடன் ஒவ்வாதவாறு க்றைஸ்தவ மத மேட்டிமை மற்றும் ஹிந்து மதத்தின் மீது மட்டிலுமான குற்றச்சாட்டுக்கள் என்ற காயாக படைக்கப்பட்டுள்ளது.

சரித்ரத்தை அணுகுவதற்குக் கறாரான அணுகுமுறை வேண்டும். விருப்பு வெறுப்புகள் இல்லாது ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்படும் விஷயம் சரித்ரம். சரித்ரத்தைத் தொகுப்பதில் மத நம்பிக்கை, சொந்த விருப்பு வெறுப்புகள் இவையெல்லாம் அறவே இருக்கலாகாது. மாறாக சரித்ரத்தை சொல்லுவது போல் தோற்றமளிக்கும் இந்த வ்யாசம் சொந்த மத நம்பிக்கைகள், சொந்த மத விருப்பு வெறுப்புகள் இவற்றுடன் சிலப்பல சரித்ர உண்மைகளையும் ஒன்றாகக் கலந்து சமைக்கப்பட்டுள்ளது.

மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்பது மிகவும் ஆதர்சமான விஷயம். இந்த அறிய கோட்பாட்டை மதங்களிடையே மற்றும் சமயங்களிடையே உள்ள ஒற்றுமைகளைப் போற்றுதல் என்ற படிக்கு விளக்குதல் கோட்பாட்டை நேர்மறையாக விளக்குதல் ஆகும். மதங்களிடையே நிகழும் பூசல்களை விளக்கி அதனால் ஏற்படும் துன்பங்களைச் சுட்டிக்காட்டி அதன்மூலம் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் நன்மை பயக்கும் என்பதை விளக்குதல் இதே கோட்பாட்டை எதிர்மறையாக விளக்குதலாகும்.

ஹிந்துஸ்தானத்தில் பல சமயங்கள் மற்றும் பல மதங்கள் புழங்கின புழங்கி வருகின்றன. விவித சமயங்களினிடையே கருத்துப் பரிமாற்றங்கள் எவ்வாறு இருந்தன அவற்றைத் தெரிவிக்கும் ஆவணங்கள் யாவை என்பதை வாசிக்கையில் அந்த ஆவணங்களின் படி சமயங்களிடையே காணப்பட்ட ஒற்றுமைகள் யாவை என்பதையும் பட்டியலிடமுடியும். அவ்வாறு பகிர்வது நேர்மறையான விளக்கம். ஆதர்சமான விளக்கம். காந்தியடிகளின் மரணத்தை முன் வைத்து மத ஒற்றுமையைப் பற்றி வ்யாசம் பேச முனைந்தாலும், வ்யாசத்தின் ஒட்டு மொத்த த்வனி மதஒற்றுமைக்கு புறம்பானதாகக் காணப்படுகிறது.

எதிர்மறையாக மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைச் சொல்ல விழைந்து மத வேறுபாடுகளைக் கருத்துச்ச் சமநிலையுடன் சொல்ல விழைவோர் மதப்பூசல்களைப் பற்றிச் சொல்ல விழைந்தால் ஹிந்துஸ்தானத்தில் தழைக்கும் அனைத்து மதங்களிலும் செயல்பட்டு வரும் மத அடிப்படை வாதத்தை / மத அடிப்படை வாதிகளைப் பற்றிக் காய்த்தல் உவத்தல் இல்லாது சொல்ல வேண்டும். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் அடிப்படை வாதிகள் இருப்பது போன்றும் ஹிந்து மதத்தினர் மட்டும் மற்ற மதத்தினரை ஹிம்சை செய்வதாகவும் வ்யாசத்தில் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவ அடிப்படைவாதத்தை / இஸ்லாமிய மற்றும் க்றைஸ்தவ அடிப்படை வாதிகளைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாதது கருத்துச் சமநிலையின்மையை ப்ரதிபலிப்பதின்றி சில வாசகங்கள் அப்பட்டமாய் க்றைஸ்தவ மத மேட்டிமையையும் பறை சாற்றுகின்றது.

ஆனால் காந்தியடிகளின் மரணத்தை முன்வைத்து அதனுடன் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றி விதந்தோந்தும் ஒரு வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமையை மட்டிலும் தனித்து ப்ரகாசிக்கச் செய்து மேலும் ஹிந்து மதத்தை மட்டிலும் அடிப்படைவாதம் உள்ளதாக ஹிந்துக்களை மட்டும் அடிப்படைவாதிகளாக சித்தரித்தல் கருப்பொருளைச் சிதைப்பதாக மட்டிலும் தான் அமையும்.

———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx

முதலில் வ்யாசத்தின் சில நிறைவான அம்சங்கள் ( அதில் உள்ள குறைகளுடன் கூடி)

1. நிறைகள் :-

\\\\இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!\\\

நான் ஹிந்து மதத்தின் படி ஒழுகுபவன். மஹாத்மா காந்தியடிகளின் ராமபக்தி நான் மிகவும் போற்றும் விஷயம். அதே போன்றே அவரது எளிமையும்.

ஆனால் காந்தியடியகளின் அரசியல் கருத்துக்கள், ப்ரம்மசர்யத்தை முன்னிறுத்தி அவர் செய்த வேதனையளிக்கும் சோதனைகள், மதஒற்றுமை என்ற பெயரில் ஹிந்துக்கள் ஹிம்சிக்கப்பட்ட போதெல்லாம் அஹிம்சாவாதியான அவர் ஆதரித்தமை, அரசியலில் எதேச்சாதிகாரத்தைக் கையிலெடுத்து ஜனநாயகத்தைப் படுகுழியிலாழ்த்தி ஸ்ரீ சுபாஷ் சந்த்ரபோஸ் போன்று ஜனநாயக ரீதியில் வென்ற தலைவர்களை ஒடுக்கியமை மற்றும் முடிவிலே “என்னைப் பிளந்து பின் தேசத்தைப் பிளப்பீர்” என்று சொன்ன காந்தியடிகள் தேசப்பிரிவினையை மௌனமாக அங்கீகரித்தது போன்றவை நான் ஏற்கஒண்ணாத விஷயங்கள். சில கருத்துக்களில் மட்டும் காந்தியடிகளின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு மிகப்பல கருத்துக்களில் அவர் கருத்துக்களில் எனக்குக் கடுமையான முரண் என்பது என் நிலைப்பாடு. இதை முதலில் சொல்லி மற்ற விஷயங்களைப் பகிர்வது என்பது நேர்மையான போக்கு என்பதால் நான் காந்தியடிகளுடன் உடன்படாத கருத்துக்களை வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

சாகும் தருவாயில் இறைவன் பெயரைச் சொல்லிச் சாவது என்பது அறிதானதும் ஹிந்துக்கள் போற்றக்கூடியதும் ஆன நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம். குலசேகராழ்வார் இயற்றிய முகுந்தமாலையிலும் இது பற்றி ச்லோகம் காணக்கிட்டும். கொடூரமாக ஸ்ரீ நாதுராம் கோட்சே அவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்குந்தருவாயிலும் ராம நாமத்தைச் சொல்லி காந்தியடிகள் இறந்தார் என்றால் எந்த அளவு சதா ராம நாமம் அவரது உளத்தில் உறைந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க இயலும். நான் மிகவும் போற்றும் ராம் கதாவாசக் (உபன்யாசகர்) பூஜ்ய ஸ்ரீ மொராரி பாபு (Morari Bapu) அவர்கள் காந்தியடிகள் பிறந்த அதே குஜராத் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவரது இணைய தளத்திலும் இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். காந்தி மகானின் உயர்வான ராமபக்தியில் ஒருதுளி நம் எல்லோருக்கும் கிட்டுவதாக. வாழ்க நீ எம்மான்.

ஆனால் காந்தியடிகள் “ஹே ராம்” என்று சொல்லி இறந்தது சரித்ர ரீதியாக சந்தேகத்திற்கப்பாற்பட்டு நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயமன்று என்பதும் நோக்கத் தக்கது. விக்கிபீடியாவில் இன்னமும் விவாதாஸ்பதமாக உள்ள விஷயம் இது. இந்த சுட்டியில் http://en.wikipedia.org/wiki/Talk%3AMahatma_Gandhi/Dying_words_controversy விவாதத்தைக் காணலாம். இந்த விஷயத்தில் ஆழ்ந்த கருத்துள்ள அன்பர்கள் சரித்ர ஆவணங்களின் பாற்பட்டு தகுந்த ஆதாரங்களுடன் இந்த விவாதத்தில் பங்கெடுத்து விஷயத்திற்கு மேல் அதிகத் தெளிவு கொடுக்கலாம்.

இந்த விவாதத்தில் சமீபமாக இணைக்கப்பட்ட விஷயம் காந்தியடிகளுக்கு உதவியாளராக இருந்த ஸ்ரீ கல்யாணம் என்ற அன்பர் இதை மறுத்துள்ளமை. காந்தியடிகளுடன் அவர் உயிர் பிரியும் சமயத்தில் உடன் இருந்த இரு சிறுமியரான ஆபா மற்றும் மனு இருவரும் — ஆம் காந்தியடிகள் “ஹே ராம்” என்று சொல்லி இறந்தார் என்று பகிர்ந்துள்ளனர். மற்றும் அங்கிருந்த பல சாக்ஷியினர் தங்களுக்கு இது சம்பந்தமாக ஏதும் தெரியாது என்று சொல்லியுள்ளனர்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதித பாவன சீதாராம் ( தர்மத்திலிருந்து பிறழ்ந்தவர்களை பாவனமாக்குபவர் ராம பிரான்)

ஈஸ்வர அல்லா தேரோ நாம் *அவரவர் சம்ஸ்காரங்களின் படி* (அவரை ஈஸ்வர் எனவும் அல்லாஹ் எனவும் போற்றுகின்றனர்)

ஸப்கோ ஸன்மதி தே பக்வான் (எல்லோருக்கும் நன்மதியைக் கொடுப்பாய் இறைவா)

என்று வாழ்நாள் முழுதும் ராம நாமத்தைக் கேட்டு எளிமையாக வாழ்ந்த அந்தப் பெருந்தகை இறக்குந்தருவாயிலும் ராம நாமத்தைச் சொல்லியே இறந்திருப்பார் என்று எமது நம்பிக்கை ஆழமாகப் போதிக்கிறது.

ஆம். அவர் வாயிலிருந்து இறக்குந்தருவாயில் சொல்லிய ராம நாமம் அடுத்தவரால் கேழ்க்கப்பட்டிருந்து ஆவணப்பட்டிருந்தால் அது சரித்ரமாகிறது. இல்லையேல் சரித்ரமாகாது. அவ்வளவே.

எனது நம்பிக்கைக்கு ஆதாரம் சரித்ர நிகழ்வுகள் அல்ல. தர்ம நூற்கள் மற்றும் தர்மத்தின் வழி ஒழுகும் சான்றோர்களின் போதனைகள்.

நம்பிக்கையைச் சரித்ரத்துடன் கலத்தல் கருத்துத் தெளிவு நல்காது.

\\\\\\\காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்!\\\\\\\

தேசப்பற்றுள்ள பல கோடி ஹிந்துஸ்தானியரில் நானும் ஒருவன். இன்னமும் என்னைப் போன்றே பலருடைய உளங்களிலும் கனன்று கொண்டிருக்கும் விஷயம் அகண்ட ஹிந்துஸ்தானம். ஆகவே தேசப்பிரிவினை என்பது பெரும்பாலான ஹிந்துஸ்தான மக்கள் தங்கள் மனதில் சுமக்கும் துன்பப் பெருஞ்சுமை என்றால் மிகையாகாது. திரும்பவும் பிளக்கப்பட்ட நிலப்பரப்புகள், நேபாளம், தென்னிலங்கை போன்ற பகுதிகள் ஹிந்துஸ்தானத்தில் இணைய வேண்டும் என்பது மிகப்பல ஹிந்துஸ்தானியரின் விருப்பம். இதைச் சொல்கையிலேயே இந்த விஷயத்தில் என்னுடன் மிகவும் ஒத்த கருத்துள்ள —– நம்மிடையே உரையாடி சில நாட்கள் முன் அமரரான —— என்னுடைய மற்றும் வாசகர்கள் பலரின் பேரன்பிற்குறிய —— ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களை —— என் நெஞ்சாரக் கண்ணீருடன் நினைவு கூர்கிறேன்.

பொதுவாக மஹாத்மா காந்தியடிகளைப்பற்றிப் பேசும் காந்தி பக்தர்கள் காந்தியடிகளால் தேசப்பிரிவினையைத் தடுக்க இயலாமையைப் பற்றிக் குறை கூறி நான் கண்டதில்லை.

அப்படி இருப்பினும் கூட வ்யாசத்தில் இந்த விஷயம் உளந்திறந்து சொல்லபட்டதற்கு எமது நன்றி.

\\\\\ உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்!\\\\

மிகவும் அருங்கருத்து. நான் முற்றிலும் ஏற்கும் கருத்து. காந்தியடிகளுக்கு ஹிந்து மத நூற்கள் இளமையில் போதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வாழ்நாள் முழுதும் ஹிந்து மத நூற்களையும் மாற்று மத நூற்களையும் வாசித்துள்ளார் என்று அறிவேன். இந்தக் கருத்தைச் சொல்கையில் ஹிந்துக்களிடையே பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னமேயே இந்த உயர்ந்த கருத்து இருந்துள்ளது என்பதைச் சொல்வதும் கூட மிக முக்யம்.

ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)

உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.

\\\\\\\\\அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !\\\\\

உண்மை தான். நான் முற்றிலும் ஏற்கும் அருங்கருத்து இது. ஆனால் வ்யாசத்தில் துரத்ருஷ்டவசமாய் இதற்கு நேர் மாறாக தனித்ததாய ஹிந்து மதத்தின் மீது மட்டிலுமான குற்றச்சாட்டுகள் மற்றும் க்றைஸ்தவமத மேட்டிமை உரத்துப் பேசப்பட்டுள்ளன என்பதை மறுக்க இயலாது.

———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx———— xxxxxx———-xxxxxx

2. தகவற் பிழைகளும் க்றைஸ்தவ மேட்டிமை பரப்புரைகளும் :-

1. ஏசுபிரானை சரித்ர மாந்தர்களுடன் சேர்த்தமை :-

Trinity என்ற க்றைஸ்தவர்களின் மதநம்பிக்கையான பிதா – சுதன் – பரிசுத்த ஆவி என்ற விஷயத்தை நான் மதிக்கிறேன். க்றைஸ்தவர்களுக்கு மட்டுமல்ல —– ஏசுபிரான் என்று க்றைஸ்தவர்கள் நம்பும் தேவமைந்தன் சொன்ன விஷயங்களில் பொதுவிலே எல்லோரும் ஏற்கும் விஷயங்களுமுள்ளன. அவற்றை நான் மிகவும் போற்றுகிறேன். அப்படியே ஹிந்து மத நூற்களில் போதிக்கப்பட்ட விஷயங்களும். சத்யம் வத – உண்மை பேசு – என்ற கூற்றினை உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் வேத நூற்கள் பேசுகின்றன. உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒப்புக்கொள்ளும் விஷயம் தானே இது.

ஏசுபிரான் என்ற க்றைஸ்தவர்களின் கடவுட்கோட்பாடு எனது மத நம்பிக்கைக்குப் புறம்பான ஆனால் க்றைஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற விஷயம். ஏன் சிலப்பல வேறுபாடுகளுடன் இஸ்லாமிய சஹோதரர்களும் ஈசா-அலே-சலாம் அவர்களை அவர்களது குரான்-ஏ-ஷெரீஃப்பின் படி போற்றுகிறார்கள் என்பது நான் அறியும் விஷயம். ஏசுபிரான் என்ற கடவுட்கோட்பாட்டை நான் விவாதத்திற்கப்பாற்பட்டதாகவும் க்றைஸ்தவ இஸ்லாமிய மத நம்பிக்கைக்குறியதாகவும் கொள்கிறேன். அதை மிகவும் மதித்துப் போற்றுகிறேன்.

ஆனால் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்த ஒரு நபர் என்றால் நான் கட்டாயம் அக்கூற்றைப் பரிசீலனை செய்யத் தக்க ஆவணங்களை அணுகி அலசுவேன்.

ஏசுபிரான் மிகப்பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. யஹூதிகள் அவரைத் தண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. உலக நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவர் மரித்த பின்னும் மீண்டும் உயிரெழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு அளவற்ற புகழ் அவருக்கு இருக்கும் பக்ஷத்தில் அவர் புகழ் அல்லது அவர் பகர்ந்த கருத்துக்களில் மற்றையோருக்குக் கருத்து வேறுபாடுகள் போன்றவை —– அவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் பகுதிகளில் எந்த அளவுக்குப் பரவியிருக்க வேண்டும். அவரைப்பற்றி எந்த அளவுக்குப் போற்றியும் அவருடன் முரண்பட்டும் நூற்கள் பல எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவர் காலத்தில் யஹூதிகள் மற்றும் பாகனியர்களின் (Pagan) மதங்கள் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஏசுபிரான் அவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு நபராகச் சொல்லப்படுகையிலும் கூட அவர் வாழ்ந்த சமகாலத்திலும் அதற்குச் சற்றே பிந்திய காலத்திலும் எழுதப்பட்ட யஹூதிய பாகனிய நூற்களில் அவர் பற்றிய குறிப்புக்கள் கூட காணப்படவில்லை என்பது ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் திண்ணை தளத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம்.

\\\\உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’,\\\\\\\\இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்!\\

மஹாத்மா காந்தி மற்றும் புத்த பிரான் போன்று சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மக்களுடன் தேவமைந்தனாகிய ஏசுபிரானை இணைத்ததை சரித்ரத்தின் பாற்பட்டு ஏற்க இயலாது. இதுவரை கிடைத்த சான்றுகளின் படி ஏசுபிரானை சரித்ரத்தில் வாழ்ந்த நபராகக் கொள்ள இயலாது. இருப்பினும் ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்த நபர் என்பதைப் பரிசீலிக்கத் தக்க ஆவணங்கள் ஏதும் முன்வைக்கப்பட்டால் அதன் பாற்பட்டு அக்கூற்று மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட இயலும்.

ஏசு அவர்களின் பிறப்பு, சிலுவையில் அறையப்பட்டது; மரித்தது; உயிர்மீட்டெழுந்தது இவையெலாம் மெய்ப்பாடு என்று நம்பிக்கை மட்டும் சார்ந்து உரத்துப் பேச முயலாது சரித்ரச் சான்றுகளின் படி விஷயத்தை அணுக வேண்டும் என்பதை அழுத்ததுடன் சொல்ல விழைகிறேன். கூடவே பைபிளியல் அறிஞரான அன்பர் தேவப்ரியா சாலமோன் அவர்கள் முன்வைத்த ஏசு பிறந்த நகரம், அவர் பிறந்த திகதிக் குறிப்புகள், அவர் மரித்தமை, அவர் உயிர் மீட்டெழுந்தமை மற்றும் இன்ன பிற தகவல்களில் உள்ள சுவிசேஷ வேறுபாடுகளையும் நினைவு கூர்கிறேன். சரித்ர ரீதியில் ஏசுபிரானை நிறுவ இதுபோன்ற சுவிசேஷ வேறுபாடுகளும் சமன்வயம் செய்யப்படுதல் அவசியம்.

பூமி ஸ்திரமாக வைக்கப்பட்டுள்ளது அதை நகர்த்த இயலாது என்று பைபள் கூறுகிறது – The Earth is firmly fixed; it shall not be moved(Psalms 104.5). ஆனால் இன்று விக்ஞானம் பூமி சுழல்கிறது என்று சொல்கிறது. பூமி நகராது என்ற கூற்றை மதநம்பிக்கை என்று கூறினால் பிணக்கே இல்லை. ஆனால் பூமி நகராது என்ற கூற்றை விக்ஞானம் என்று கூறினால் கண்டிப்பாகப் பிணக்கு வரும். அதே போல சந்தேகத்திற்கப்பாற்பட்டு ஏசுபிரான் சரித்ரத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இதுவரை தெளிவாக இல்லாது போது உண்மையாக சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மாந்தர்களுடன் ஏசுபிரானை ஜபர்தஸ்தியாக இணைப்பதால் மட்டும் அவருக்கு ஒருவர் சரித்ர ஆதாரத்தைக் கொடுத்து விட முடியாது. மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் இவற்றுடன் ஜபர்தஸ்தியாக பச்சைமிளகாயைச் சேர்ப்பதன் மூலம் மட்டும் பச்சை மிளகாய் என்ற பழம் இனிக்கும் என்று சாதிக்க முனைதல் எப்படியோ அப்படியே சரித்ரச்சான்றுகளல்லாத படிக்கு நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் ஏசுபிரானை சரித்ரத்தில் வாழ்ந்திறந்த மாந்தர்களுடன் பட்டியலிடுதல் நோக்கப்படும்.

நான் சரித்ரத்தை வாசித்த வரை இந்த விஷயத்தில் இன்னமும் எனக்கு வினாக்கள் உண்டு. ஆனால் இன்று உலகத்தில் கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் பைபிளியல் முரண்பாடுகள் ஏசுபிரானை சந்தேகத்திற்கப்பாற்பட்டு சரித்ர நாயகனாக சுட்டவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன்.

\\\\ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது.\\\\

மஹாத்மா காந்தியின் மரணத்தையும் அத்துடன் கூடவே மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற விஷயங்களைப் பேசும் ஒரு வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமை ஏன் ஜபர்தஸ்தியாக நுழைக்கப்பட்டுள்ளது என்ற வினா எழுகிறது.

உலகிலே க்றைஸ்தவ மதம் Crusade, Inquisition போன்ற உக்ரமான வழிமுறைகளாலும் பரப்பப்பட்டது என்பதும் சரித்ரம்.

பதினோராம் நூற்றாண்டு துவங்கி இருபதாம் நூற்றாண்டு வரை க்றைஸ்தவ மத நம்பிக்கையை ஏற்காதோரை முறையாகத் திட்டங்கள் தீட்டி சிலுவைப்போர்கள், நீதிமன்ற விசாரணைகள் எனப் பல வழிமுறைகளில் பலவந்தம் செய்து அச்சமூட்டி க்றைஸ்தவ மதம் பலவந்தமாக திணிக்கப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

க்றைஸ்தவ மதத்தை இமயத்தளவு ஓங்கி உரத்துப் பேச முனைந்தால் அதற்கு முறையாக க்றைஸ்தவ மத மேன்மை பற்றி தனியாக ஒரு வ்யாசமெழுதலாமே. உலகத்திலேயே மிக உயர்ந்த மலை இமயம். சிலுவை இமயத்தளவு உயர்ந்தது என்றால் மற்றைய மதங்கள் அதற்குக் கீழே என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு அன்பர் பேச முற்படல் ஒரு அன்பருடைய தனி விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம். தனிப்பட்டதாக அதில் எனக்கு ஆக்ஷேபமேதுமில்லை. ஆனால் அதனுடன் கூடவே மத ஒற்றுமை மத நல்லிணக்கம் போன்ற உயர்ந்த கோட்பாடுகளும் பேசப்பட்டு ஹிந்து மத அடிப்படைவாதம் என்றும் ஹிந்துக்கள் அடிப்படைவாதிகள் என்ற படிக்குமான கருத்துக்களும் உரத்துப்பேசப்பட்டால் இது கருத்துக்களில் முன் பின் உள்ள வெளிப்படையான முரண்பாடுகளாகவே காணப்படும். கருத்துச் சமநிலைப் பிறழ்வாகக் காணப்படும்.

ஹிந்துமதம் மட்டும் அடிப்படைவாதமுள்ளதாகச் சித்தரிக்கப்பட்டு ஹிந்துமதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் அடிப்படைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு க்றைஸ்தவமதம் குற்றமற்றதாகவும் அடிப்படைவாதமற்றதாகவும் இமயமளவு உயர்ந்த மேட்டிமை பொருந்தியதாகவும் சொல்லப்படுவதால் ஏன் என்னால் க்றைஸ்தவ மத மேட்டிமை வாதத்தை ஏற்க இயலாது என்பதைச் சொல்லுமுகமாக Inquistion, Crusade போன்ற விஷயங்களைப் பற்றி ப்ரஸ்தாபிக்க அவசியமும் எழுகிறது.

சிலுவை ஓங்க முடிந்தமை உலகளாவிய சிலுவைப் போர்களாலும் என்பதும் கூட நிதர்சனம் தானே.

நம்பிக்கையின் அடிப்படையில் சிலுவையில் ஏசுபிரானின் குருதி உள்ளது. பின்னிட்டும் சரித்ரத்தின் அடிப்படையில் க்றைஸ்தவ மதத்தை ஏற்காத ஆனால் பலவந்தத்துக்கும் சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்ட உலகளாவி மாற்று மதத்தைப் பேணிய எண்ணிறந்த சஹோதரர்களுடைய குருதியும் நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட குருதியுடன் பலவந்தமாகத் திணிக்கப்பட்டதை எப்படிப் புறக்கணிக்க இயலும்.

சிலுவைப் போர்களால் பெருக்கெடுத்த ரத்தச் சகதியில் ஆணிவேர் போன்று சிலுவை ஆழமாக ஊன்றப்பட்டும் இமயமளவு அது காட்சியளித்தால் நோக்கப்பட வேண்டியது சிலுவை எந்தளவுக்கு உயர்ந்தது என்று மட்டுமல்ல…………………….

ரத்தச் சகதியில் ஆணிவேர் போன்று ஆழமாக ஊன்றப்பட்டும் இமயமளவு இச்சின்னம் உயர்ந்துள்ளது என்றால்…..

க்றைஸ்தவத்துடன் மாற்றுக்கருத்துக் கொண்டு அதை ஏற்க மறுத்துப் போராடிய மாற்றுமதத்தவர் எத்துணைபேர்………..

அன்பைப் போதிப்பதாக மலைப்ரசங்கம் செய்யும் தத்துவத்தைக் கொண்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் செய்த வதங்கள் எத்தனை………..

குவிந்த பிணங்கள் எத்தனை…………..

பெருக்கெடுத்த உதிரம் எவ்வளவு………….

என்பதும் நோக்கப்படும்.

சிலுவை இமயமளவு உயர்ந்ததை மட்டிலும் நோக்குபவர்கள் க்றைஸ்தவர்கள் மட்டிலும்………

குவிந்த பிணங்களின் எண்ணிக்கைகளயும் அழித்தொழிக்கப்பட்ட மாற்று மதச் சுவடுகளையும் பெருக்கெடுத்த உதிரத்தையும் மட்டும் கணக்கெடுப்பவர்கள் இந்த பயங்கரங்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்படும் மாற்று மதத்தவர்கள் மட்டிலும்………

மத ஒற்றுமையை அலச வேண்டி மதப்பூசல்களை அவதானிக்க விழைபவர்கள் கருத்து சார்ந்து கருத்துச் சமநிலை சார்ந்து நோக்க வேண்டியது இரண்டு விஷயங்களையும்.

ஏன் இன்னமும் கூட சுவிசேஷக்கூட்டங்கள் என்ற பெயரில் க்றைஸ்தவ ப்ரார்த்தனைகளால் கால் முடங்கியவர்களை நடக்க வைப்போம், கண்ணிழந்தவர்களைப் பார்க்க வைப்போம், தீரவியலா வ்யாதிகளைக் குணப்படுத்துவோம் என்றெல்லாம் பார்க்கிறோமே. அறிவு பூர்வமாக இவையெல்லாம் சாத்யமா?

அப்படிப்பட்ட சிலுவைப்போர்கள், பலவந்தம், சித்ரவதை மற்றும் அறிவு பூர்வமாக ஏற்க இயலா சுவிசேஷ அற்புதங்கள் போன்ற உந்து சக்திகள் இமயமளவு ஏன் வானளவு கூட சிலுவையை உயர்த்த இயலுமே.

நிதர்சனம் இப்படி இருக்க க்றைஸ்தவ மத மேட்டிமைவாதிகளால் உரத்துப் பேசப்படும் அன்பு, தொண்டு மற்றும் த்யாகம் போன்ற விஷயங்களை யதார்த்தமாக மட்டும் கொள்ள இயலுமா அல்லது வானளாவ / இமயமளாவ ஏற்கவொண்ணா உந்து சக்திகளால் உந்தப்பட்ட சிலுவையில் பூசப்பட்ட வண்ண முலாம் என ஏற்க இயலுமா என்பதை இதை வாசிக்கும் வாசகர்களே அவதானிக்கலாம்.

க்றைஸ்தவ மதத்தையோ அல்லது க்றைஸ்தவ மதப்படி ஒழுகும் அன்பர்களையோ குற்றங்காணுமுகமாய் இவை சொல்லப்படவில்லை. மாறாக ஏமாற்று ஜாலவித்தைகளாக இல்லாது மதமாற்றம் ஒன்றையே குறியாகக் கருதாது சமூஹத்தில் இடுக்கண்களுக்கு உட்படும் அன்பர்களின் இடுக்கண்களைக் களையும் தொண்டார்வமுள்ள க்றைஸ்தவ ஸ்தாபனங்கள் எவையெவையோ அவையனைத்திற்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள்.

ஹிந்து மதத்தைப் பற்றியும் ஹிந்துக்களைப் பற்றியும் எண்ணிறந்த குற்றங்களை அடுக்கும் அன்பர்கள் மாற்று மதங்களை முன் வைத்து மாற்று மதத்தைப் புழங்குபவர்களால் நிகத்தப்படும் அந்யாயங்களை மற்றும் பயங்கரவாதங்களைப் புறந்தள்ளுதல் மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளுக்கு எள்ளளவும் வலு சேர்க்காது என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டி இக்கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இஸ்லாம் மதத்தைச் சார்ந்து உலகமளாவி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அப்பாவி உயிர்களைக் கொன்று குவிப்பவர்கள் இஸ்லாமியப்பெயர் தாங்கிகள் என்று புறந்தள்ளப்பட்டு குரான்-ஏ-ஷெரீஃபிலிருந்து அன்பைப் போதிக்கும் ஓரிரு வாசகங்கள் சுட்டப்படும்.

க்றைஸ்தவ மிஷநரி அடிப்படை வாத சக்திகளின் பழிச்செயல்களும் இழிசெயல்களும் புறந்தள்ளப்பட்டு பைபளிலிருந்து அன்பைப் போதிக்கும் ஓரிரு வாசகங்கள் சுட்டப்படும்.

ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்று மதத்தினரைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு அதற்காக நீதி மன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் மட்டிலும் ஹிந்துப்பெயர் தாங்கிகள் அல்லர். அவர்களெல்லாம் ஹிந்து மதத்தினர்……… அப்போதெல்லாம் ஹிந்துக்கள் தங்கள் தர்ம நூற்களிலிருந்து அன்பைப்போதிக்கும் வாசகங்களை உதாஹரிக்கக் கூடாது…………

என வாத விவாதம் செய்வது…………..

மதசார்பின்மை…….. மத ஒற்றுமை பேணல்………… மத நல்லிணக்கம் பேணல் …………..

என்றால்………………….

அனைத்து மதங்களைச் சார்ந்தோரும் தாங்கள் தங்கள் அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லும் உலகம் அமைதியின் பாற்பட்டதாகுமா என அவதானிக்க வேண்டும்.

2. ஹிந்து இயக்கங்கள் பற்றிய பக்ஷபாத துஷ்ப்ரசாரம் :-

\\\\மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்!\\\\\\\\\\\ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்.\\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.\\\\\\

இணைய தளத்தில் தமிழில் எழுதுபவர்களில் மிகவும் தூய்மையான தமிழில் எழுதுபவர்களில் ஒருவராக நான் மிகவும் மதித்துப்போற்றுவது ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களை. அதுவும் மாற்று மொழிச்சொற்களை (ஆங்க்லச் சொற்களை) அன்பர் அவர்கள் கையாளும் விதத்தை நான் மிகவும் உகப்புடனும் கவனத்துடனும் நோக்குவதுண்டு. கவனப்பிசகாக RSS என்ற சரியான சொல் வ்யாசத்தில் தவறாக தட்டச்சப்பட்டுள்ளது. முதலில் அது RSSS அல்ல. மாறாக RSS – RashtrIya svayamsEvak Sangh – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (சம்ஸ்க்ருத உச்சரிப்புப் படி) – ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஹிந்தி உச்சரிப்புப் படி). ஸ்வயம்சேவக என்பது ஒரே சொல். இரண்டு தனிச் சொற்களல்ல. பிழைதிருத்துமுகமாக மட்டும் இந்த விபரத்தைப் பதிவு செய்கிறேன். க்ஷமிக்கவும்.

இளவயதில் நான் சங்கத்தில் பயிற்சி பெற்ற ஸ்வயம்சேவகன். ஹிந்துஸ்தானமெங்கிலும் சங்கத்தில் பாடப்படும் ஒரு சம்ஸ்க்ருதப் பாடலும் அதன் உத்தேசமான மொழியீடும் கீழே தரப்பட்டுள்ளது.

யம் வைதிகா மந்த்ரத்ருச: புராணாம்

இந்த்ரம் யமம் மாதரிச்வானமாஹு:

வேதாந்தினோ நிர்வசனீயமேகம்

யம் ப்ரம்ஹ சப்தேன விநிர்திசந்தி

சைவாயமீசம் சிவ இத்யவோசன்

யம்வைஷ்ணவா விஷ்ணுரிதிஸ்துவந்தி

புத்தஸ்ததார்ஹன் இதிபௌத்த ஜைன:

ஸத்ஸ்ரீ அகாலேதி சசிக்க சந்த:

சாஸ்தேதி கேசித் கதிசித் குமார:

ஸ்வாமீதி மாதேதி பிதேதி பக்த்யா:

யம்ப்ரார்த்தயந்தே ஜகதீசிதாரன்

ஸ ஏக ஏவ ப்ரபுரத்விதீய:

பரம்பொருள் ஒருவரே. அவரை வைதிக சமயத்தினர் இந்த்ரன், யமன், மாதரிச்வான் எனவும் வேதாந்திகள் நிர்குண நிராகார ப்ரம்மம் எனவும் சைவர்கள் சிவன் எனவும் வைஷ்ணவர்கள் விஷ்ணு எனவும் பௌத்தர்கள் புத்தர் எனவும் ஜைனர்கள் அர்ஹர் எனவும் சீக்கியர்கள் ஸத்ஸ்ரீ அகால் எனவும் போற்றுகின்றனர்.

இது கருத்து ரீதியாக சங்கத்தினர் (RSS ஸ்வயம்சேவகர்கள்) எப்படி பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்ற சிறு விளக்கம். ஹிந்துஸ்தானமுழுதிலும் போர், இயற்கைப்பேரிடர்கள் போன்று அசம்பாவிதங்கள் நிகழ்கையில் சங்கத்தினர் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என அனைத்து மதத்தினருக்கும் எப்படி உதவுகின்றனர் எனபது உலகமறிந்த உண்மை. இச்சேவைகளின் போது குறைகள் காண்பவரும் உண்டு. மிகவும் கடினமான காலங்களில் செய்யப்படும் சேவைகளில் குறைகள் வாஸ்தவத்திலும் இருக்கலாம் தான். ஆனால் ஸ்வயம்சேவகர்கள் மதங்கள் கடந்து அனைத்து மதத்தைச் சார்ந்தவருக்கும் சேவை செய்துள்ளமையை யாரும் மறுக்க இயலாது. முஸல்மான் மற்றும் க்றைஸ்தவ சஹோதரர்கள் பலரும் கூட இவற்றைப் போற்றியுள்ளனர் என்பதும் உண்மை . சங்கத்திலும் சங்கத்தின் கருத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளிலும் இவை ஆவணப்படுத்தப்பட்டும் உள்ளன. RSS இயக்கத்துடன் மதவெறியைச் சம்பந்தப்படுத்திப் பேசியமையால் உண்மையை விளக்க மேலே கண்ட சில கருத்துக்கள்.

இத்தகவல்கள் மதவெறியைச் சுட்டுகின்றனவா என்பதை நடுநிலை பிறழா வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.

ஸ்ரீ விநாயக் தாமோதர் சாவர்க்கர் (வீர சாவர்க்கர்) அவரைப் பற்றிய துரபிப்ராயம் அவர் பெயரின் முன் இடப்பட்ட எதேச்சாதிகாரி, காந்திக்கொலைச் சதித்திட்ட குழுவின் தலைவர் போன்ற வெறுப்புமிழும் அடைமொழிகளிலிருந்து தெரிகிறது. ஓரிரண்டு நூற்களை வாசித்து இந்த வ்யாசம் எழுதப்பட்டதும் தெரிகிறது.

ஸ்ரீ சாவர்க்கர் பற்றி துஷ்ப்ரசாரம் செய்வதற்கு முன் சாவர்க்கர் எழுதிய நூற்களை வாசிக்க வேண்டும். அவரது கருத்துக்களை உள்வாங்க வேண்டும். அவரை ஏற்பவர்களின் அவரை எதிர்ப்பவர்களின் நூற்களை வாசிக்க வேண்டும். அதற்குப் பின் அவரைப்பற்றி நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் இரண்டையும் சரித்ரம் சார்ந்து தெரிவித்தல் சமநிலை கொண்டதாக இருக்கும். அவ்வாறில்லாது ஹிந்து இயக்கங்களின் மீதான வெறுப்பையும் சாவர்க்கர் மீதுள்ள வெறுப்பையும் மட்டும் ஆதாரமாக்கி எழுதப்புகின் கருத்துக்களில் முரண்களும் தகவற்பிழைகளும் அதீத வெறுப்பும் மட்டும் விஞ்சி நிற்கும்.

3. ஸ்ரீ சாவர்க்கர் பற்றிய தவறான கருத்துக்கள் :-

1. \\\\\\ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்\\\\\ –

சாவர்க்கர் ஒரு பொழுதும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் ஸ்வயம்சேவகராக இருந்ததில்லை என்பது சரித்ரம். ஸ்ரீ சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்ததில்லை எனினும் அவர் RSS இயக்கத்தினரின் அன்புக்குப் பாத்ரமானவர் என்பதும் உண்மை. அவருடைய இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கில் ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். பின்னிட்டும் ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் RSS இயக்கத்தில் இருந்தமைக்கு சரித்ர பூர்வ ஆவணங்கள் (RSS இந்து போராட்டத் தளபதி என்றெல்லாம் அடைமொழி விளித்தமையால்) ஏதும் இருக்குமாயின் (புகைப்படங்கள் இத்யாதி இத்யாதி அல்ல – ஆவணங்கள்) அவற்றை முன் வைக்கலாமே. அப்படி இயலாவிடின் இது கண்டிப்பாகத் தகவற்பிழையாக மட்டும் கருதப்படும்.

2. \\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின!\\\\

அதீதமான வெறுப்பின் பாற்பட்ட ஒரு வாசகம் இது என்றால் மிகையாகாது.

1984ம் வருஷம் ஹிந்துஸ்தானத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் தனது பாதுகாவலரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது பல வன்முறையாளர்கள் 3000க்கும் மேற்பட்ட சீக்கிய சஹோதரர்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் காங்க்ரஸ் கட்சியைச் சார்ந்த நபர்களான ஸஜ்ஜன் குமார், லலித்மாகன், எச்.கே.எல் பகத், பல்வான் கோகர், ஜக்தீஷ் டைட்லர் போன்ற பலரின் மேல் நீதிமன்றங்களில் வழக்குப் பதியப் பட்டு வழக்குகள் நடந்தன. இதை காங்கரஸைச் சார்ந்த சில / பல வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று சொல்வது எப்படி காங்க்ரஸ் கட்சி வன்முறையில் ஈடுபட்டது என்று சொல்வது எப்படி?

யஹூதிகளை அழித்தொழிக்க விழைந்த (holocaust) இனப்படுகொலைத் திட்டங்களில் பரங்கிய ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கினை “A moral Reckoning” என்ற நூல் விவரணம் செய்கின்றது என்றாலும் ——– இனப்படுகொலைத் திட்டங்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் தீட்டப்பட்டது என்று விவரிப்பது எப்படி பரங்கிய ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சார்ந்த சிலரும் யஹூதிய இனப்படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்று விவரிப்பது எப்படி?

ஹிந்து மஹாசபையைச் சார்ந்த சில நபர்கள் சதித்திட்டத்தில் ஈடுபட்டனர் என்று சொல்வதற்கு மாறாக ஹிந்து மஹாசபையில் காந்தியைக் கொல்ல சதித்திட்டங்கள் உருவாகின என்று சொல்வது எப்படி?

சரித்ரம் என்ற துலாக்கோலால் அளக்கப்பட்டுப் பகிரப்படுபவை நேர்மறையான மற்றும் எதிர்மறையான தகவல்கள். ஹேஷ்யங்கள் என்ற குங்கிலியத்தால் மூட்டப்பட்ட நெருப்பால் எரிந்து புகைபவை வெறுப்புக்கள்.

3. \\\\போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!\\\இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்\\\\\

வீரசாவர்க்கர் தலைமையில் காந்தியைக் கொல்லத் திட்டங்கள் உருவாகின என்று வ்யாசம் சொன்ன போதும் போதிய சாக்ஷி இல்லாது போனதால் சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர் என்றும் வ்யாசம் சொல்கிறது.

ஹிந்துஸ்தானத்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதாடி நீதிபதி வழக்கை சாக்ஷி சம்மன் களுடன் விசாரித்து ஸ்ரீ சாவர்க்கர் குற்றமற்றவர் என்று விடுதலை கூடக் கொடுத்தாகி விட்டது. அதற்குப்பின்னரும் வெறுப்பின் அடிப்படையில் மட்டும் தானே வீரசாவர்க்கர் தலைமையில் காந்தியடிகளைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டது எனச் சொல்ல இயலும். இது விண்ணுலகு ஏகிய காந்தியடிகளுக்குக் கூட அடுக்குமா?

தேசத்தந்தை என்று மிக உயர்வுடன் போற்றப்படும் மஹாத்மா காந்தியடிகளின் கொலை பற்றிய வழக்கை விசாரணை செய்த ஹிந்துஸ்தான நீதிமன்றங்கள் எவ்வளவு முனைப்பு எடுத்திருக்கும். அவ்வளவு உயர்ந்த ஒரு மனிதரின் கொலை பற்றிய வழக்கில் அந்தக்கொலையை நடத்தி முடிக்க சதித்திட்டம் தீட்டுவதற்கு ஒரு குழு இயங்கி அக்குழுவிற்கு ஒருவர் தலைவராக இருந்திருந்தால் அவருக்கு தண்டனையே கொடுக்காது விடுவிக்க ஹிந்துஸ்தான நீதிமன்றம் தகுதியற்ற மற்றும் திறமையற்ற நீதிமன்றமா?

வ்யாசம் ஸ்ரீ வீரசாவர்க்கரை மட்டுமன்று RSS இயக்கத்தையும் காந்தியடிகளின் கொலையுடன் வெறுப்பின் பாற்பட்டு மட்டும் சரித்ர ஆதாரங்கள் சாராது நீதி மற்றும் நேர்மை சாராது சம்பந்தப்படுத்துகிறது. நீதிமன்றங்கள் இவ்விஷயத்தில் தன்னிலையைத் தெளிவு படுத்திய பின்னும்.

வ்யாசத்தில் தகவல்கள் முன் பின் முரணாக உள்ளதா? வெறுப்பினால் முரண்பாடுகள் காணப்படுகின்றனவா? ஹிந்துஸ்தான நீதிமன்றத் தீர்ப்புகள் பரிகசிக்கப்படுகின்றனவா?

உலகில் உள்ள எந்த ஒரு மனிதரையும் முழு முற்றாகக் கெட்டவராகவோ அல்லது நல்லவராகவோ பார்க்காது நிறை குறைகளை அளந்து பார்த்தே ஒரு மனிதரை முழுமையாக ஏற்றாலோ அல்லது புறந்தள்ளலோ கருத்துச் சமநிலை உடையோரின் முறைப்பாடு. ஆனால் வ்யாசத்தில் விவாதிக்கப்படும் மனிதர்கள் ஒட்டு மொத்தமாக உயர்த்தப்பட்டு அல்லது படு மட்டமாகத் தாழ்த்தப்பட்டு ஆதாரங்களின் படி இல்லாது சொந்த விருப்பு வெறுப்புக்களால் காழ்ப்பு மிக விமர்சிக்கப்பட்டுள்ளமை வ்யாசத்தில் கருத்துச் சமநிலை இல்லாமையை சுட்டிக்காட்டுகிறது.

அன்பர் ஈவெரா அவர்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை மற்றும் அவரது செயல்பாடுகளில் எனக்குக் கடுமையான வேறுபாடு உண்டு என்றாலும் கூட பல லக்ஷக்கணக்கான மக்களுக்கு அவர் பெரியார் என்பதையும் நான் அறிவேன். எனக்கு அவர் கருத்துக்களில் உடன்பாடு இல்லை மற்றும் அவரது செயல்பாடுகளில் எனக்கு முரண்பாடு உண்டு என்பதற்காக அன்பர் அவர்களை அவர் செய்யாத குற்றத்துக்காகத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதோ அல்லது அவரை ஏகவசனத்தினால் சுட்டுவதோ பண்பார்ந்த செயலாகாது. இவ்விஷயம் அன்பர் ராமசாமி நாயக்கர் அவர்களைப் பொறுத்தவரை எந்தளவுக்குப் பொருந்துமோ அதே அளவுக்கு ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களுக்கும் பொருந்தும்.

\\\\\சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! \\\\\

காந்தியடிகள் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூஹத்தினருக்காக செய்த பணிகளை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

காந்தியடிகளின் விதேசி சாமான் களை பஹிஷ்கரிக்கும் போக்கை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

காந்தியடிகளின் எளிமையை ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் எங்கேனும் எதிர்த்துள்ளாரா?

ஹிந்துக்கள் மாற்று மதத்தவரால் ஹிம்சிக்கப்படுகையில் அஹிம்சாவாதியான காந்தியடிகள் அதை சஹித்துக்கொள்ளுமாறு போதித்ததை அவர் எதிர்த்தார். மதசார்பின்மை என்ற பேரில் மாற்று மதத்தவரின் வெறிப்போக்குகளை காந்தியடிகள் கண்டுகொள்ளாமல் இருந்தததை அவர் எதிர்த்தார். இந்த தேசம் துண்டாடப்படுவதை அவர் எதிர்த்தார்.

எதேச்சாதிகாரப்போக்கு இருந்தது ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களுக்கா காந்தியடிகளுக்கா என்பதை சரித்ர நிகழ்வுகளின் பாற்பட்டு விவாதித்தால் தனித்து ஒரு வ்யாசமெழுத வேண்டும்.

\\\\உங்கள் புத்திரரில் யார் உத்தமன் என்று ஒருவர் கிராமத்தான் ஒருவனைக் கேட்டாராம். இது அவன் பதில் : ” அதோ வீட்டுக் கூரைமேல் தீ வைக்கிரானே அவன்தான் என் உத்தம புத்திரன்,” என்றானாம். ஆமாம் கோட்ஸே, வீர சாவர்க்கர் இவர்கள்தான் இந்தியாவின் உத்தம புத்திரர்.\\\\

போதிசத்வ பாபாசஹேப் அம்பேத்கர் அவர்கள் தலித் சஹோதரர்களின் சமூஹ முன்னேற்றத்துக்குப் பணி செய்த அன்பர்களில் ஒருவராக மிக உயர்ந்த சான்றோராக ததாகதராக (கருணை மிக்கவராக) முன்னிறுத்தப்படுபவர். பாரத அன்னை பெற்றெடுத்த அருந்தவப்புதல்வரும் போதிசத்வர் ( ஞானி) என போற்றப்படும் அவரே ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் தலித் சஹோதரர்களுக்குச் செய்த பணி கௌதம புத்தரின் பங்களிப்புக்குக் குறையாதது என்று சொன்ன பின்னரும் பிறிதொருவரின் சான்றிதழும் கூட பாரத அன்னையின் அருந்தவப்புதல்வர்களில் ஒருவரான வீர சாவர்க்கர் அவர்களுக்கு வேண்டுமோ?

வீரசாவர்க்கர் என்ற மாமனிதரைப்பற்றிப் பொய்யுரை பரப்புபவர்கள் பரப்பட்டும். அந்தமான் சிறையில் இருந்து வெளிவர அவர் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பித்ததை குறைகூறுபவர்கள் கூறட்டும்.

அந்த உயர்ந்த சான்றோரின் மாண்புகள் சிலவற்றைக் கருத்துச் சமநிலை கொண்டோரின் வாசிப்புக்காகக் கீழே சமர்ப்பிக்கிறேன். அதற்குப் பின்னரும் அவரைப் போற்றுதலும் தூற்றுதலும் அவரவர் விருப்பம்.

கீழ்க்கண்டவை ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் போதிசத்வ பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் பற்றித் தமிழ் ஹிந்துவில் சமர்ப்பித்த வ்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள். சுட்டி http://www.tamilhindu.com/2012/12/bodhisatvas-hindutuva-1/.

—————–************—————-************—————–************—————-************—————–************—————-************—————–************

”’வீர சாவர்க்கரை பொறுத்த வரையில் சாஸ்திர அடிப்படையிலான சாதி அமைப்பு ஒரு மனநோய். இந்த சமூக மனநோய்க்கான மருந்து இந்த சாஸ்திரங்களை நம்பாமல் நிராகரிப்பதுதான்.”

V.D.Savarkar, Samagra Savarkar Vangmaya, Vol-3 ed. SR Date, Maharashtra Prantik Hindu Sabha, Pune, pp 497-9

“சாதி பிரிவுகளும் சாதுர் வர்ண அமைப்பும் வெறும் பழக்கங்களே. அவற்றுக்கும் சனாதன தர்மத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இன்று சாதி அமைப்பு என்கிற பெயரில் நிலவும் திரிபுகள் அழிந்தால் அதனால் சனாதன தர்மம் ஒன்றும் செத்துவிடாது”

V.D.Savarkar, SSV, Vol-3 1930: Essays on the abolition of caste, p.444

“நம் சகோதரர்களில் லட்சக்கணக்கானவர்களை தீண்டத்தகாதவர்களென்றும், விலங்குகளைக் காட்டிலும் கீழானவர்களாகவும் பார்க்கும் பார்வை மனித குலத்துக்கும் நம் ஆன்மாவுக்கும் அவமானம் தீண்டமை கொடுமை முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பது என் திடமான உறுதியாகும். தீண்டாமை அழிக்கப்படுவதுதான் ஹிந்து சமுதாயத்துக்கு நன்மை. இந்து சமுதாயத்துக்கு நன்மையோ இல்லையோ, ஏன் நன்மை ஏதாவது இதனால் இருந்தது என்றாலும் கூட, இந்த கொடுமை அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் அறத்தின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், மானுடத்துவத்தின் அடிப்படையில் தீண்டாமையை அழிப்பதுதான் மிக முதன்மையான அறக் கடமையாகும்..”

V.D.Savarkar, SSV, Vol-3 1927, p.483

“ஆனால் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீங்கள் செய்து வரும் பணிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் ஹிந்து சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வேண்டுமென்றால் தீண்டாமையை அகற்றினால் மட்டும் போதாது; அதற்கு சாதுர்வர்ண கோட்பாடும் அழிய வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டுள்ள வெகுசில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”

Dr.Bhimrao Ramji Ambedkar’s letter quoted by Dhananjay Keer, Veer Savarkar, Popular Prakashan, 1950:1966, p.190

“1933 இல் பாபா சாகேப் அம்பேத்கரின் ஜனதா சிறப்பு இதழ் வீர சாவர்க்கர் செய்து வரும் சமூக சீர்திருத்த பணிகளால் தலித்துகளுக்கு கிடைக்கும் பங்களிப்பு கௌதம புத்தரின் பங்களிப்புக்கு குறையாதது என புகழ்ந்தது”

Janata special number, April 1933, p.2 (quoted in Dhananjay Keer, 1950:1966 p.195)

—————–************—————-************—————–************—————-************—————–************—————-************—————–***********

ஹிந்து மஹாசபை என்ற இயக்கத்தை காந்தியடிகளின் படுகொலையுடன் மட்டிலும் சம்பந்தப்படுத்தி அந்த இயக்கம் பரிச்சயம் செய்யப்பட்டுள்ளது. RSS மற்றும் ஹிந்துமஹாசபை போன்ற இயக்கங்கள் மதவெறியுடன் சம்பந்தப்பட்டதாய் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமூஹ முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டமை ஹிந்துஸ்தானத்துச் சான்றோர்களால் எவ்வாறு பாராட்டப்பட்டது என்று பார்த்தோம். இந்த இயக்கத்தைச் சார்ந்த மற்றொரு சான்றோரான பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் மாண்பையும் உடன் பார்த்தல் இந்த இயக்கம் தேசத்திற்கு எப்படிப்பட்ட உன்னதமான மனிதர்களை அளித்துள்ளது என்பதும் விளங்கும்.

பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் முதலில் ஹிந்து மஹாசபையில் இருந்து பின்னர் பாரதீய ஜனசங்கம் என்ற கட்சியை 1951ம் வருஷம் துவங்கி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றவர். காஷ்மீரத்துக்கு என்று ப்ரத்யேகமாக ஷரத்து 370 — அரசியல் சாஸனத்தில் வழங்கப்பட்டதை ஹிந்து மஹாசபைக் கட்சியுடன் சேர்ந்து கடுமையாக எதிர்த்தார். அச்சமயங்களில் காஷ்மீரத்து கவர்னரை ஜனாதிபதி (சத்ர்-ஏ-ரியாசத்) என்றும் காஷ்மீர முக்ய மந்த்ரியை ப்ரதம மந்த்ரி என்றும் அழைத்து வந்தனர். ஒரே தேசம் ஆனால் இரண்டு ஜனாதிபதி இரண்டு ப்ரதம மந்த்ரி என்ற அவல நிலை.

“ஏக் தேஷ் மே தோ விதான், தோ ப்ரதான் ஔர் தோ நிஷான் நஹீன் சலேகா நஹீன் சலேகா” (ஒரே தேசத்திற்கு இரண்டு அரசியல் சாஸனம், இரண்டு ப்ரதம மந்த்ரி, இரண்டு தேசியச் சின்னங்கள் என்ற நிலை தொடரலாகாது) என்ற அவல நிலையை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்ந்தன.

அச்சமயங்களில் காஷ்மீரத்துக்குச் செல்வதற்கு “பர்மிட் முறை” யும் பாரத சர்க்காரால் முறைப்படுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் காஷ்மீரத்துக்குச் சென்று இந்த அவலங்களை எதிர்த்து போராட விழைந்தார். ஆனால் பாரத சர்க்கார் அவருக்கு காஷ்மீரத்துக்குச் செல்ல அனுமதி மறுத்தது. பர்மிட் தர மறுத்தது. என்னுடைய தேசத்தில் ஒரு பகுதிக்குச் செல்ல எனக்கு முழு சுதந்திரம் உண்டு என அனுமதி மீறி காஷ்மீரத்தில் 11-5-1953 ல் நுழைந்த அவர் கைது செய்யப்பட்டு ஆங்கே ஒரு பாழடைந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டார். மிக மோசமான அந்தச் சூழ்நிலையால் அவர் உடல்நிலை கெட்டது. நோய்வாய்ப்பட்டார். அவருடைய வைத்தியத்திற்கு பொறுப்பான டாக்டருக்கு ஸ்ரீ முகர்ஜி அவர்களுக்கு பெனிசிலின் ஒவ்வாமை உள்ளது என்று சொல்லப்பட்டிருந்தும் அவருக்கு பெனிசிலின் செலுத்தப்பட்டது. 23-06-1953ல் அவர் காஷ்மீரத்தில் மர்மமான முறையில் இறந்தார்.

ஆனால் இவரது போராட்டம் மற்றும் மர்மமான சாவால் சுணங்கிய பண்டித நேரு அவர்களின் சர்க்கார் பர்மிட் முறையை காஷ்மீரத்தில் ரத்து செய்ய நேர்ந்தது. சந்தேஹாஸ்பதமான மரணமானால் சவப்பரிசோதனை செய்யப் படவேண்டும் என்ற சட்ட விதிமுறை இருந்தபின்னும் சர்க்கார் இவரது இறந்த உடலுக்கு சவப்பரிசோதனையும் நிகழ்த்தவில்லை. அவரது உடலை தில்லிக்கு எடுத்து வருவதைக் கூட பாரத சர்க்கார் அனுமதிக்கவில்லை. ஆகையால் அவரது உடல் நேராக கொல்கொத்தாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பாதுகாவலில் வைக்கப்பட்டு இருந்த இவர் மர்மமான முறையில் இறந்ததை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என இவரது அன்னை ஸ்ரீமதி ஜோக்மயா தேவி விண்ணப்பித்துப் பின்னர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் மன்றாடியும் கூட பண்டித நேரு அவர்கள் விசாரணைக்கு மறுத்து விட்டார்.

மர்மமான முறையில் பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் இறந்த பின்னும் சட்டப்படி இறந்த உடலை சவப்பரிசோதனைக்கும் உட்படுத்தவில்லை இறந்த மர்மத்தை விசாரணையும் செய்யவில்லை. பண்டித நேரு அவர்கள் —–தான் காஷ்மீரத்தில் ஸ்ரீ முகர்ஜி கைதில் இருந்த சமயத்தில் —— அங்கு பொறுப்பில் இருந்தவர்களிடம் விசாரித்து விட்டதாகவும் ——- தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் —— அவர் சாவில் ஏதும் மர்மம் இல்லை என்றும் அறிவித்து விட்டார். தீர்ந்தது விசாரணை. நிலைநாட்டப்பட்டது நீதி என்பதை கருத்துச் சமநிலையுடையோர் ஏற்பரோ?

2004ம் வருஷம் பாரதத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் இறந்தது பண்டித நேரு அவர்களின் சதித்திட்டங்களால் தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பார்க்க சுட்டி http://articles.timesofindia.indiatimes.com/2004-07-07/india/27144866_1_nehru-j-k-conspiracy. ஸ்ரீ வாஜ்பாய் அவர்கள் அதே செய்தியில் ஸ்ரீ முகர்ஜி அவர்களின் உயிர்த்யாகத்தால் காஷ்மீரம் தேசத்திலிருந்து துண்டாடப்படுவதிலிருந்து தப்பித்தது என்றும் சொல்லியுள்ளார்.

ஆனால் ஸ்ரீ முகர்ஜி இறந்த பின் காஷ்மீரத்து ஜனாதிபதி பின்னர் மற்ற மாகாணங்கள் போன்று கவர்னர் என அழைக்கப்படலானார். காஷ்மீரத்து ப்ரதமமந்த்ரியும் பின்னர் முக்யமந்த்ரி என அழைக்கப்படலாயினர். பின்னர் பாரதத்தின் பல சட்டங்களும் காஷ்மீரத்துக்கும் விரிவு படுத்தப்பட்டது. இது பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களின் பலிதானத்தினால்.

வ்யாசம் ஸ்ரீ சாவர்க்கர் அவர்களை, “”””சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி!”” என்று பழிக்கிறது. ஆனால் காங்க்ரஸ் தலைவராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ சுபாஷ் சந்த்ரபோஸ் அவர்களை பதவியிறக்க முனைந்த காந்தியடிகளை விமர்சனம் செய்ய யோசித்திருக்கவும் இயலாது. நிறைகளால் மட்டும் நிறைந்த மாந்தராக ஒருவரை முன்னிறுத்த முனைந்தால் குறைகளைக் கூட ந்யாயப்படுத்தலாமே?

மர்மமான முறையில் இறந்த உடலுக்கு சவப்பரிசோதனைகூட செய்யாதது போதாதென்று விண்ணப்பித்தும் மன்றாடியும் விசாரணை செய்யக்கூட அறவே மறுத்து தான் தனிப்பட்ட முறையில் விசாரித்த படிக்கு மரணத்தில் மர்மமில்லை என்று தீர்மானம் செய்த பண்டித நேரு அவர்களின் செயல்பாடு எதேச்சாதிகாரமானதா அல்லவா என வாசகர்கள் அவதானிக்கலாம்.

ஹிந்து மஹாசபையினரை மதவெறியர்கள் என்று குற்றம் சாட்டியதல்லவா? ஸ்ரீ சாவர்க்கர் அவர்களது சமூஹ முன்னேற்றப் பணிகளைப் பார்த்தோம். ஸ்ரீ முகர்ஜி அவர்களின் காஷ்மீரத்திற்கான போராட்டத்தையும் பலிதானத்தையும் பார்த்தோம். ஹிந்து மஹாசபை என்ற இயக்கம் தேசத்திற்குத் தந்த பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களைப் பற்றி மேலும் வ்யாசத்தில் அவதானிக்கையில் அவர் மற்ற மதத்தைச் சார்ந்த சான்றோர்களை எப்படி மதித்தார் என்பதையும் பார்ப்போம்.

————

Series Navigationஅக்னிப்பிரவேசம்-24ஸ்பெஷல் 26 ( இந்தி) – சிறகு ரவி.
author

க்ருஷ்ணகுமார்

Similar Posts

67 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

    இந்தக் கட்டுரை எழுதிய பொறுப்பாளி யார் ? ஏன் அவரது பெயர் மர்மமாக விடப் பட்டுள்ளது ? இது மொட்டக் கட்டுரையா ? அல்லது ஆசிரியர் இல்லாத அனாதைக் கட்டுரையா ? எத்தனை, எத்தனை எழுத்துப் பிழைகள் ?

    காந்திஜி கோட்சேவால் கொலை செய்யப்பட்ட மோது, வீர சாவர்க்கர் கண்ணீர் விட்டாரா? வருந்தினாரா ? மகிழ்ந்தாரா ? அல்லது எங்காவது இரங்கல் வாசகம் எதுவும் எழுதினாரா ?

    ஈவேரா முற்றிலும் இந்து மத வெறுப்பாளார். அவரை இந்து மத விருப்பாளி வீர சாவர்க்கரோட கட்டுரை ஆசிரியர் ஒப்பிடுகிறார். நல்ல வேடிக்கை !

    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      paandiyan says:

      வீர சாவர்க்கர் என்ன பண்ணினால் உங்களுக்கு என்ன வந்தது ? அப்படி என்ன ஒரு வெறுப்பு ? பெண்கள் கற்பழிக்கப்பட்ட பொது உங்கள் உத்தமர் என்ன பண்ணினார். வயிர்ரை மிக நன்ராக சுத்தபடுத்தி கொண்டுதான உண்ணாவிரதம் போகின்றான் என்று ஓடினார்.
      க்ருஷ்ணகுமார் போன்றவர்கள் எதிருப்புக்கு பயந்து போகாது பயணம் தொடர வேண்டுகின்ரேன் .

  2. Avatar
    Saravanan says:

    நான் எழுத்துப்பிழை ஏதும் காணேன். கருத்துப்பிழையும் ஏதும் இல்லை.
    கட்டுரை ஆசிரியர் மிக தெளிவாக தனது வாதங்களை முன் வைத்துள்ளார்.
    நல்லதை சொல்ல தயங்காததோடு அல்லவற்றவையும் நடுநிலையுடன் முன் வைத்துள்ளார்.
    ஒரு சார்பு கட்டுரைகளையே படித்துப்பழகியோருக்கு ஒரு புது அனுபவம்.

  3. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீ ஜெயபாரதன்,

    எழுத்துப் பிழைகள் சுட்டப்பட்டால் மகிழ்வடைவேன்.

    உங்கள் மனதில் இருந்து வெறுப்பு என்ற விஷயத்தை விட்டெறிந்து அன்பு என்ற ஜன்னலை திறந்து வ்யாசத்தை வாசிக்கவும்.

    காந்தியடிகளின் மரணத்திற்கு யார் அழுதார் என்பது பற்றி அல்ல இந்த வ்யாசம்.

    மாறாக தங்கள் வ்யாசத்தின் நிறை குறைகள் தகுந்த காரணங்களுடன் ஏற்க மற்றும் மறுக்க பட்டிருக்கின்றன.

    முக்யமாக தாங்கள் காந்தியடிகளின் மரணத்தை சாக்கிட்டு முன்வைத்த க்றைச்தவ மத மேட்டிமை மற்றும் ஹிந்து மத வெறுப்பு.

    அன்பர் ஈ வே ரா அவர்களை ஸ்ரீ சாவர்க்கர் அவர்களுடன் எங்கே ஒப்பிட்டேன்?எனக்கு அவர் கருத்துகளில் உடன்பாடு இல்லை என்றாலும் காரணம் ஏதும் இன்றி குற்றம் சாட்டல் முறை இல்லை என்று தான் சொல்லியுள்ளேன். தாங்கள் ஸ்ரீ சாவர்க்கர் அவர்களை முன் பின் முரணான தகவல்கள் பகிர்ந்து வெறும் வெறுப்பின் பார் பட்டு சாடியுள்ளீர்கள்.

    கருத்து சார்ந்து தங்கள் வாத விவாதங்களை முன் வைக்கவும்.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      கோட்ஸே கொலைக் கூட்டத்தோடு நீண்ட காலம் நெருங்கி உலவி வந்த காருண்யவாதி வீர சாவர்க்கர், நிச்சயம் தேசப் பிதா காந்திஜி சதிக் கொலையைக் தடுத்திருக்க முடியும். அப்படி செய்யாமல் கொலைச் சதியை ஒளிமறைவாய் ஊக்கியவர் வீர வீர வீர சாவர்க்கர்.

      வரலாறு இதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும்.

      சி. ஜெயபாரதன்

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \இந்தக் கட்டுரை எழுதிய பொறுப்பாளி யார் ? ஏன் அவரது பெயர் மர்மமாக விடப் பட்டுள்ளது ? இது மொட்டக் கட்டுரையா ? அல்லது ஆசிரியர் இல்லாத அனாதைக் கட்டுரை\
    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,
    நான் என் வ்யாசத்தை திண்ணை தளத்தில் சமர்ப்பித்த போது என் பெயருடனேயே சமர்ப்பித்தேன். நிர்வாகத்தினர் இப்போது எழுத்தாளர் பெயரையும் பதிவு செய்துள்ளனர். வ்யாசத்தை தளத்தினர் பதித்த பொழுது தவறுதலாய் எழுத்தாளர் பெயர் விடுபட்டிருக்கலாம் என நினைக்கிறேன். இது என் தரப்பிலான தன்னிலை விளக்கம். நிற்க.
    மேற்கண்ட கருத்துக்களில் எனக்கு அதீத பண்பின்மையும் வெறுப்பும் த்வனிக்கிறது. எழுத்தாளர் யார்? என்று இரண்டு சொற்களால் கேட்டிருக்க வேண்டிய ஒரு கேள்வியை பல வினாக்களால் பண்பற்ற வெறுப்பு த்வனிக்கும் மொழியில் கேட்டிருக்கிறீர்கள்.
    இந்த வ்யாசத்தில் தமிழ், சம்ஸ்க்ருதம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்க்லம், ஹிந்தி, உர்தூ போன்று பல மொழிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. மாற்று மொழிகள் பால் எனது மதிப்பும், மாற்று மதங்கள் பாலும் மாற்று மதத்தவர் கருத்துக்களிலும் என் மதிப்பும் எனது கருத்து வேறுபாடுகளும் பண்பார்ந்து பகிரப்பட்டுள்ளன.
    நான் கருத்துக்களை மிகக் கவனமுடன் சமநிலையின் பாற்பட்டு பகிர்ந்துள்ளேன். சமநிலை பிறழ்ந்தமையை அன்பர்கள் யாரும் சுட்டினால் அதற்கு என் பணிவார்ந்த நன்றிகள் உரித்தாகும். என் கருத்துக்களை மேன்மைப்படுத்தும் வாய்ப்பாக அதைக்கருதுவேன்.
    பின்னும் பண்பற்ற கருத்துக்களுக்குப் பதிலாக என் கருத்துக்களில் பண்பின்மை இருக்காது.
    மஹாத்மா காந்தியடிகளின் மரணத்தை ஒரு வ்யாஜமாக வைத்து மத ஒற்றுமை போன்ற உயர்ந்த கருத்துக்களைப் பேசுவதாய்ச் சொல்லி அப்பட்டமான ஹிந்து மத வெறுப்பை தங்கள் வ்யாசத்தில் பகிர்ந்தீர்கள். அதன் தொடர்ச்சி மேற்கண்ட பண்பற்ற மொழிகளில் த்வனிக்கிறது என்றால் மிகையாகாது. கசப்பான உண்மையைப் பகிர்வதற்கு க்ஷமிக்கவும்.
    \ஈவேரா முற்றிலும் இந்து மத வெறுப்பாளார். அவரை இந்து மத விருப்பாளி வீர சாவர்க்கரோட கட்டுரை ஆசிரியர் ஒப்பிடுகிறார். நல்ல வேடிக்கை !\
    அன்பரே வேடிக்கை பற்றிப் பேசுகிறீர்கள்!!!!
    மதஒற்றுமை என்ற பெயரில் மஹாத்மா காந்தியடிகளின் மரணத்தை முன்னிறுத்தி தாங்கள் க்றைஸ்தவ மத மேட்டிமையையும் ஹிந்து மத வெறுப்பையும் தகவற் பிழைகளையும் பொய்யுரைகளையும் பகிர்ந்ததை நான் வேடிக்கையாகக் கருதாததால் தான் இந்த வ்யாசம் என்னால் எழுதப்பட்டது என்பதை மனதிலிறுத்தவும்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      தமிழ்க் கிறித்துவரின் தமிழ்ப்பணி,

      பாராட்டுகள் திருமதி வி.எஸ். ராஜம் அவர்களே.

      ஔவையாரின் வாரிசாய், ஆண்டாளின் மறுபிறவியாய் நீங்கள் செய்த தமிழ்ப்பணிக்கு வரலாற்றில் நிகரில்லை.

      தமிழர் பெருமையை உலகெல்லாம் பரவும் வகை செய்கிறீர்கள்.

      சி. ஜெயபாரதன்

      ++++++++++++++++++

      Harvard Oriental Series : 76 By Jeanne Hein & V.S. Rajam

      2013/3/30 Rajam

      அன்புள்ள நண்பர்களே,

      வணக்கம். கிறித்துவர்களுக்கு இந்த வாரமும் (holy week), குறிப்பாக, வரும் ஞாயிற்றுக்கிழமையும் (மார்ச்சு 31, 2013) மிகவும் புனிதமானவை.

      இந்தப் புனித ஞாயிறு (Easter Sunday) எனக்குத் தனிப்பட்ட வகையிலும் மகிழ்ச்சி தரும் நாள்.

      பல பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய நூல் ஒன்று அண்மையில் (மார்ச்சு 15) வெளிவந்த செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

      தமிழக வரலாற்றில் … அயலவர் நுழைவு, பிற சமயக் குறுக்கீடு, ஒரு சமூகக் குழு முழுவதும் கிறித்துவர்கள் ஆனது, கிறித்துவத் தமிழ் வளர்ச்சி, … இன்ன பிற செய்திகளை உள்ளும் புறமுமாகச் சொல்லும் இலக்கண நூல் (Arte Da Lingua Malabar) ஒன்றின் மொழிபெயர்ப்பு இது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதை வெளியிட்டிருக்கிறது.

      இதைப் பற்றிய விவரங்களைப் பல தொடர்களில் சொல்லத் தேவையும் விருப்பமும். அதனால் சொல்லத் தொடங்கியிருக்கிறேன். விரும்பினால் இங்கே பார்க்கவும்:

      http://mytamil-rasikai.blogspot.com/2013/03/1.html (அறிமுகம்)

      http://mytamil-rasikai.blogspot.com/2013/03/2.html (பின்னணி)

      http://mytamil-rasikai.blogspot.com/2013/03/3.html (இலக்கண அமைப்பு)

      அன்புடன்,

      ராஜம்

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        https://mail.google.com/mail/?pc=en-ha-na-us-bk&shva=1#inbox/13dbec6beff958b6

        தமிழ்க் கிறித்துவரின் தமிழ்ப்பணி,

        பாராட்டுகள் திருமதி வி.எஸ். ராஜம் அவர்களே.

        ஔவையாரின் வாரிசாய், ஆண்டாளின் மறுபிறவியாய் நீங்கள் செய்த தமிழ்ப்பணிக்கு வரலாற்றில் நிகரில்லை.

        தமிழர் பெருமையை உலகெல்லாம் பரவும் வகை செய்கிறீர்கள்.

        சி. ஜெயபாரதன்

        ++++++++++++++++++

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கிறித்துவ மத இருப்பு உங்களுக்குப் பிடிக்க வில்லை என்று சாடுவதும், ஏசுபெருமான் வாழ்ந்ததற்குச் சான்றுகள் போதா என்பதும் ஒருவித மதவெறியே. உலக மதங்களில் எல்லா வற்றைக் காட்டிலும் ஓங்கி வளர்ந்து உச்சியில் இருப்பது நிச்சயம் கிறித்துவ மதமே. இந்து மதத்தினரை விட அந்த மதத்தினர் எந்த விதத்தில் மக்களுக்குப் பணி செய்துப் பரவி முன்னேறுகிறார் என்பதைப் பிற மதத்தினர் விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். ஓர் உதாரணம் கூறுகிறேன்: நமது இந்து கோயில்களின் நிலைகளைத் தமிழ் நாட்டில் பாருங்கள். குறிப்பாக குமரி முனையில் இருக்கும் கன்னியா குமரிக் கோயில் உள்ளே போய்ப் பாருங்கள். மாறாக நாடெங்கும் தூயதாய் இருக்கும் கிறித்துவ ஆலயங்கள் உள்ளே சுற்றிப் போய்ப் பாருங்கள். நமது அழுக்கு மனம், இழுக்குக் குணங்கள் தெரியும்.

    க்ருஷ்ணகுமார், க்றைச்தவ மதம், வ்யாசம், ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி, க்றைஸ்தவ ப்ரார்த்தனைகளால் – இப்படித் தமிழில் எழுதலாம் என்று தமிழ் இலக்கணம் எங்காவது கூறுகிறதா ?

    காந்திஜி இறந்ததைக் கொண்டாடியவர் வீர சாவர்க்கர். அவர் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காந்தி கொலைக்குச் சதி செய்தவர். இல்லாவிட்டால் ஏன் அவரைக் காவல் துறையினர் கைது செய்கிறார்.
    வழக்கறிஞர்கள் வாதாடிக் கொலைகாரரை விடுதலை செய்வது நாடுகளில் நடந்து வருவதை நாம் யாவரும் அறிவோம். பொய்ச் சாட்சியம் காட்டி வீர்சாவர்க்கர் கொலைக் கேசில் தப்பிக் கொண்டது உண்மை. நிரூபிப்பது கடினம்.
    சி. ஜெயபாரதன்.

    1. Avatar
      paandiyan says:

      உங்கள் உத்தமரை கன்னத்தில் அறைந்து மனரீதயாக முதலில் கொன்றத உங்கள் கிறிஸ்துவன்தான் . ஆஸ்திரேலியாவில் உங்கள் மதம் பண்ணிய பாவத்தை முதலில் படிக்கவும்

  6. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்து மதத்தினரின் எதிரிகள் இந்தியக் கிறித்துவர் அல்லர். ஈவேரா பெரியார், பெரியாரின் திராவிடக் கட்சிச் சீடர்கள்.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      அன்புள்ள ஜெயபாரதன் சார்,

      தி.க-வினரையா இந்து மதத்தின் எதிரிகள் என்கிறீர்கள் ? ஹாஹ்ஹ்ஹா … நல்ல நகைச்சுவை. இந்த உள்ளீடற்ற பதர்களா இந்து மதத்தின் எதிரிகள் ? எதிரிகளாக இருக்கவும் ஒரு தகுதி வேண்டும். அது கிஞ்சித்தும் இதுபோன்ற விலைபோன அற்ப ஜந்துக்களிடம் இல்லை.

      1. Avatar
        paandiyan says:

        நாஸ்திகம் என்றால தி க என்று உலரும் கூட்டம் இது . இவகர்லுக்கு எங்க த்ரியபோகின்றது ராமாயணம் காலத்திலய அதில் உள்ள கேள்வி பதில்கள் . அதில் ஒரு சதவீதம் கூட இந்த தி க பேசியதில் இல்லை என்று இவர்களுக்கு புரியுமா என்ன .

  7. Avatar
    ஷாலி says:

    திரு.பாண்டியன் கூறுவதுபோல், // வீர சாவர்க்கார் என்ன பண்ணினால் உங்களுக்கென்ன வந்தது? அப்படி என்ன வெறுப்பு?//. அரை டவுசர் சேவக்குகள் விநாயக் தாமோதர் சாவார்க்கரை ஏற்றிப் போற்றட்டும்,அது பற்றி யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் இவர்களுடைய ஆதர்ஷ புருஷர் ஏன் அந்தமான் ஜெயிலில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்? ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒருமுறை மன்னிப்பு கடிதம் கேட்டு கடிதம் எழுதியிருந்தால் அதை புரிந்துகொள்ளலாம்.ஆனால் ஜெயிலுக்கு வந்த வருடமே மன்றாடலை ஆரம்பித்துவிட்டார்.1911 அக்டோபரில் ல் முதல் கடிதம்,1912 டிசம்பர் 15 ல் இரண்டாவது கடிதம், 1913 நவம்பரில் மூன்றாவது கடிதம்,19 14 பிப்ரவரியில் நான்காவது கடிதம்.நான் ஏன் வெளியே வரவேண்டும்? என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் இங்கு ஹைலைட்.திருவாளர். க்ருஷ்ண குமார்,பாண்டியன்களின் வீரத் தலைவரின் மன்றாட்டத்தைப் பாருங்கள். “ இந்திய இளைஞர்கள் தவறாக வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள். என்னை விடுவித்தால் நானும் எங்கள் இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.” வழி தவறிப்போன மகன், அரசராகிய பிறந்த வீட்டு வாசலுக்கு வரும்போது சர்வ வல்லமை பொருந்திய தங்களையன்றி வேறு யார் கருணை காட்டமுடியும்? தயவு செய்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”…..இப்படிப்போகிறது சரணாகதி வ்யாசம். சாவர்க்கரின் உறுதிமொழியை இன்றும் அவரது சீடர்கள் வெள்ளையன் வாழ் இங்கிலாந்து,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா நாடுகளில் உஞ்சவிருத்தி சேவை செய்து நிறைவேற்றுகிறார்கள்.
    காந்தி கணக்கை முடிக்க என்ன காரணம்? 1942 ஆகஸ்ட் 8 ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறும் முன்பு காந்தியின் சொற்பொழிவில் கூறியது.” வாள் வலிமையால் முஸ்லிம்களை ஹிந்துக்களின் மேலாதிக்கத்தின் கீழ் வைக்கவேண்டும் என டாக்டர் முன்ஷி, திரு.சாவர்க்கர் ஆகியோர் நினைக்கிறார்கள்,அவர்களை என்னால் பிரதிநிதிப் படுத்தமுடியாது.” வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தவர் சாவர்கார். ஹிந்துஸ்தான் என்னும் ஒரு நிலப்பரப்பை மட்டும் நேசித்து,முப்பது முக்கோடி தேவர்கள் நிரம்பிய ஹிந்து மதத்தின் ஞான தரிசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாத்திகரை ஹிந்து மதத்தின் ஆதாரமாக பேசுவது வேடிக்கைதான். நாத்திகரையும் உட்செரித்துக்கொண்டதுதான் ஹிந்து மதம் என்பார்கள்.பவுத்தனையும் பத்தாவது அவதாரமாக ஆக்கிக்கொண்டதால்தான்,தமிழ் ஹிந்து சைவர்களைக் கொன்ற புத்தனின் பேரன் அஹிம்சாமூர்த்தி ராஜ பக்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. அவரும் புத்த பெருமாளை சேவிக்க திருப்பதி வருகிறார். விபரம் புரியாத தமிழர்கள் எதிர்க்கிறார்கள். இறுதியாக, வீரர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்வார்கள், வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.

  8. Avatar
    paandiyan says:

    //அரை டவுசர் சேவக்குகள்/
    To admin
    see the above, if i use those type of words, you are doing censor but you allow others to do happily? what was the reason behind? could you clarify? how should i do counter attack? please clarify

  9. Avatar
    vedamgopal says:

    A true Gandhian will not renounce his faith and switchover to alien religion and claim that he is a true follower of Gandhi. It is totally false act. Given below Mr. Gandhi’s advice to true Indian citizen about the dangers of changing the faith.

    1. If I had the power and could legislate, I should stop all proselytizing. In Hindu households the advent of a missionary has meant the disruption of the family coming in the wake of change of dress, manners, language, food and drink. (Hrijan Nov 5 1935)

    2. Only the other day a missionary descended on a famine area with money in his pocket, distributed it among the famine stricken, converted them to his fold, took charge of their temple, and demolished it. This is outrageous. (Harijan Nov 5 1937)

    3. When the missionary of another religion goes to them, he goes like a vendor of goods. He has no special spiritual merit that will distinguish him from those to whom he goes. He does however possess material goods which he promises to those who will come to his fold (Harijan April 3 1937)

    4. I disbelieve in the conversion of one person by another. My efforts should never to be to undermine another’s faith. This implies belief in the truth of all religions and, therefore, respect for them. It implies true humility. (Young India April 23 1931)

    5. It is impossible for me to reconcile myself to the idea of conversion after the style that goes on in India and elsewhere to-day. It is an error which is perhaps the greatest impediment to the world’s progress towards peace. Why should a Christian want to convert a Hindu to Christianity? Why should he not be satisfied if the Hindu is good or godly man? (Harijan Jan 30 1937)

    6. I am not interested in weaning you from Christianity and making you Hindu, and I do not relish your designs upon me, if you had any, to convert me to Christianity. I would also dispute your claim that Christianity is the only true religion. (Harijan June 3 1937)

    7. I hold that proselytisation under the cloak of humanitarian work is unhealthy to say the least. It is most resented by people here. Religion after all is a deeply personal thing. It touches the heart. Why should I change my religion because the doctor who professes Christianity as his religion has cured me for some disease, or why should the doctor expect me to change whilst I am under his influence (Young India April 23 1937)

    8. My fear is that though Christian friends nowadays do not say or admit it that Hindu religion is untrue, they must harbour in their breast that Hinduism is an error and that Christianity, as they believe it, is the only true religion. So far as one can understand the present (Christian) effort, it is to uproot Hinduism from her very foundation and replace it by another faith. (Harijan March 13 1937)

    9. In the manner in which they are working there would seem to be no room for them. Quite unconsciously they do harm to themselves and also to us. It is perhaps impertinent to say that they do harm to themselves, but quite pertinent to say that they do harm to us. They do harm to those amongst whom they work and that amongst whom they do not work, i.e., the harm is done to the whole of India. The more I study their activities the more sorry I become. It is a tragedy that such a thing should happen to the human family (Harijan Dec 12 1936)

    10. I believe that there is no such thing as conversion from one faith to another in the accepted sense of the word. It is highly personal matter for the individual and his God. I may not have any design upon my neighbor as to his faith which I must honour even as I honour my own. Having reverently studied the scripture of the world I could no more think of asking a Christian or a Muslim, or a Parsi or a Jew to change his faith than I would think of changing my own (Harijan Sept 9 1935)

    11. If the Christian church uses its activities of education, healthcare or humanitarian service to change the religion of poor Hindus, I shall ask them definitely, to leave this country and go. (Harijan Dec 7 1931)

    12. Proselytizing (conversion) under the cloak of humanitarian work is un-health, to say the least and If I had the power and could legislate, I should stop all the proselytizing. It is a deadliest poison and ever sapped the fountain of truths.

    13. In my opinion, (rejoining original faith) is not an example of conversion. It is unfair to call as conversion to “coming back to his home” If any person owing to fear , compulsion, starvation or for any worldly gain, joins another religion, I unhesitatingly declare that Hindu society should amalgamate fearlessly all those who repent their desertion.

  10. Avatar
    சான்றோன் says:

    குறையில்லாத மனிதர்கள் யாரும் கிடையாது…….காந்தியும் மனிதரே…….இஸ்லாமியர்களை தாஜா செய்யும் அவர‌து முயற்சி ஒரு கட்டத்தில் எல்லையை தாண்டிவிட்டது……. [ ந‌வகாளி யாத்திரை பற்றி மறைந்த பெரியவர் மலர்மன்னன் அவர்கள் எழுதிய பின்னூட்டம் இங்கு நினைவுகூற‌த்தக்கது…..] ஹிந்துக்கள் முழுவதும் அழிந்தாலும் ஒரு இஸ்லாமியர் கொல்லப்படுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்..என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார்…இதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்..? தொடர்ந்து பல குண்டுவெடிப்புகளில் பல லட்சம் இந்தியர்கள் கொல்லப்பட்டாலும் பயங்கரவாதிகளின் தாடையை பிடித்து கொஞ்சும் இன்றைய ”மதச்சார்பின்மை ” [ ஹிந்துமதசார்பின்மை என்று பொருள் கொள்ளவேண்டும்…….] அரசியல் காந்தி அவர்களால் தூவப்பட்ட விதை……

    காந்தி அவர்களை கொலை செய்வது என்ற கோட்சேவின் செயல் நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல…ஆனால் , கோட்சேமுதன்முதலில் சிறைக்குச்சென்றது காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ” வெள்ளையனே வெளியேறு ” போராட்டதில் கலந்து கொண்டு என்பது எத்தனை பேருக்குத்தெரியும்?

    இந்தியாவின் செலவில் படித்துவிட்டு இன்று வெள்ளையனுக்கு உழைப்பவர்களை விட வீரசாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேசபக்தர் தான்……..

  11. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வீர சாவர்க்கர் பொய் சொல்லக் கொஞ்சமும் அஞ்சாத மகா வீரர். தீரர் ! காந்திஜி கொலை வழக்கில் பொய் சொல்லித் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலி. தனக்கு ஆதரவாய்ப் பலரைப் பொய் சொல்ல வைத்து நீதி மன்றத்தில் தண்டனையிலிருந்து தப்பிய சாதனை மேதை.

    வன்முறையே நன்னெறி என்று போராடிய சன்மார்க்கவாதி.

    சி. ஜெயபாரதன்.

  12. Avatar
    ஷாலி says:

    //இந்தியாவின் செலவில் படித்துவிட்டு இன்று வெள்ளையனுக்கு உழைப்பவர்களை விட வீரசாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேசபக்தர் தான்……..//
    திரு.சான்றோன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.அதை யாரும் மறுக்க முடியாது.இந்தியாவில் படித்தால் இந்தியாவுக்குத்தான் உழைக்க வேண்டும்.அப்ப இங்கிலாந்தில் படித்தால் இங்கிலீஷ்காரனுக்குத்தானே உழைக்கணும்.அதைத்தானே நம்ம தலைவர் வீர்சாவர்க்கர் செய்தார்.அவர் இங்கிலாந்திலே படித்தபோதுதான் “அபினவ் பாரத் சங்கம்” ஆரம்பித்தார்.பிறகு இந்தியா வந்து தப்புப் பண்ணி ஜெயிலுக்கு போனபின்புதான் அவருக்கு ஞானோதயம் வருகிறது.படித்த நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்று உடனே கடிதம் எழுதுகிறார்.”என்னை விடுவித்தால் நானும் எனது இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.” வீர் சாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேச பக்தர்தான் இங்கிலாந்துக்கு.இதைத்தான் சான்றோன் சொல்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.இதோடு விஷயம் முடியவில்லை. சாவர்க்கரின் தம்பி மருமகளும் காந்தியை கொன்ற கோட்சேவின் மகளுமான ஹிமானி சாவர்க்கர் 2003 ல் பெரிய மாமனாரின் “அபினவ் பாரத் சங்கத்தை” மீண்டும் ஆரம்பித்து பொறுப்பேற்கிறார்.இவருடன் சாத்வி பிரயாக்சிங்க் தாக்கூர் என்ற பெண்மணியும் சேர்ந்துகொள்கிறார்.இவர்களுடன் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியிலிருந்த புரோகித் ஸ்ரீ காந்த் பிரசாத் என்பவரும் ராணுவ வெடி மருந்துகளை திருடிவந்து,2006 ல் மாலேகான் முஸ்லிம் வழிபாட்டுத்தலத்தில் குண்டு வைக்கிறார்கள்.இதில் 37 பேர் கொல்லப்படுகிறார்கள். 125 பேர் படுகாயம் அடைகிறார்கள்.இப்பொழுது பிடிபட்டு கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் அலைகிறார்கள்.உத்தமர் காந்தியைக் கொன்ற கோட்சேவின் உத்தம புத்திரியும்,சாவர்க்கரின் மருமகளுமான ஹிமானி சாவர்க்கருக்கும் நல்ல ஒரு சான்றிதழை சான்றோன் கொடுத்தால் சந்தோசமாக இருக்கும்.முஸ்லிம்களை சாவடிப்பதுதான் சாவர்க்கரின் குடும்பத்தினர் வேலை போல் தெரிகிறது.அபினவ் பாரதத்திற்கு இதெல்லாம் அவசியம்தான்.நல்லா செய்யட்டும்.நாடு நாசமா போகட்டும்.

    1. Avatar
      paandiyan says:

      இது எல்லாம் நீங்கள் சொன்னால் உண்மை . குருமூர்த்தி போன்றவர்கள் அப்பட்டமாக பொய் என்று நீருபித்தால் மடமை . ஜெயபாரதனும், சோனியாவும் இருக்கும் வரை இங்கு அவர்கள் மார்க்கம்தான் கோடி (கொடி)கட்டி பறக்கும் என்று தெரியாத என்ன. ஜெயபாரதன் என்ன காந்திக்க இங்கு அலுது புலம்புகின்றார் !!!அந்தோணி அண்ணனின் டிராமா பாருங்கள் அதுவா அவர்களின் “பாசத்தை” எப்படி புட்டு புட்டு வைகின்றது

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///சாவர்க்கரின் தம்பி மருமகளும் காந்தியை கொன்ற கோட்சேவின் மகளுமான ஹிமானி சாவர்க்கர் 2003 ல் பெரிய மாமனாரின் “அபினவ் பாரத் சங்கத்தை” மீண்டும் ஆரம்பித்து பொறுப்பேற்கிறார் ///
      காந்திஜியின் கொலைச் சதித் திட்டத்தில், வீர சாவர்க்கர் குடும்ப உறுப்பினரும், கோட்ஸே குடும்ப உறுப்பினரும் சேர்ந்தே பொறுப்பேற்றதற்கு இறுகிய தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
      சி. ஜெயபாரதன்

  13. Avatar
    paandiyan says:

    //தனக்கு ஆதரவாய்ப் பலரைப் பொய் சொல்ல வைத்து நீதி மன்றத்தில் தண்டனையிலிருந்து தப்பிய சாதனை மேதை//
    இதை நீ நிருபீக்க வில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா ?

    அட்மின்
    குறைந்த பட்ச ஆதாரம் ஜெயபாரதன் தரவில்லை என்றால் இதை நீக்க வேண்டும்.

  14. Avatar
    paandiyan says:

    இந்த நாட்டில் காந்தி என்ற பெயர் இப்பொழுது ஊழல்க்கு தான் பயன்படுகின்றது. போபோர்ஸ் , ஹெலிகாப்ட்டர் என்று கோடி கட்டி பரகின்றது . வெளிநாட்டில் கூட காந்தி குடும்பம் என்று கெட்ட பெயர். ஊழல்க்கு கிறித்துவர் பின்னாலும் என் பெயரா என்று அவர இன்று இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பார்.

  15. Avatar
    paandiyan says:

    //வீர சாவர்க்கர் பொய் சொல்லக் கொஞ்சமும் அஞ்சாத மகா வீரர். தீரர் ! காந்திஜி கொலை வழக்கில் பொய் சொல்லித் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலி. தனக்கு ஆதரவாய்ப் பலரைப் பொய் சொல்ல வைத்து நீதி மன்றத்தில் தண்டனையிலிருந்து தப்பிய சாதனை மேதை.

    வன்முறையே நன்னெறி என்று போராடிய சன்மார்க்கவாதி.

    //

    இந்திய வரலாறுகளை முழுவதும் அழிது கிறிஸ்துவர்கள் பண்ணிய பொய் வரலாறை படித்து அதை இணையும் மூலமும் பரப்பும் ஒரு கிறிஸ்துவனை எங்கலால் மிக நன்றாக புரிந்து கொள்ளமுடியும் .

  16. Avatar
    paandiyan says:

    ஒரு காந்தி வெளி நாட்டில் போதை மருந்து பணம் வைத்து இருதுதர்காக உள்ள போய் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடி வந்தார் , இன்னொரு காந்தி போபோர்ஸ் , ஹெலிகொப்டர் ர்னு கோடிகளை சுருடுகின்ரறார். அவறின் மகளோ ஒரு நிலம் விட்டு வைக்காமல் உலையில் போடுகின்றாரர் . காந்தி இர்வின் ஒப்ந்தம் என்று வரலாறு படித்தோம அது மாத்ரி காந்தி கிறிஸ்துவம் ஒபந்த கலவையில் இது ஓகோ !!!

  17. Avatar
    சான்றோன் says:

    வெடிகுண்டு வைத்துஅப்பாவிப் பொதுமக்களை கொத்துக்கொத்தாக கொல்லும் உரிமை இந்த தேசத்தில் பாகிஸ்தான் ஆதர‌வில் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமை……இந்த ” உரிமையை ” ஹிந்து இயக்கங்களுக்கு விட்டுக்கொடுக்காதீர்கள்…….

    பிரக்யா சிங் தாக்கூர் பற்றிய ” கதையை ” புனைந்த ஹேமந்த் கார்கரே கடைசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டார்…….அந்த துறவியை ”உண்மை கண்டறியும் சோதனை ” [ உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி ] என்ற பெயரால் குற்றுயிராக்கியதுதான் மிச்சம்…..வழக்கு அதற்கு மேல் ஒரு இன்ச் கூட நகரவில்லை……..காரண‌ம் அதில் உண்மையில்லை…… பாகிஸ்தானால் தூண்டப்படும் பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லும் நம்முடைய நியாயமான முயற்சியை கெடுத்தது மட்டுமே மிச்சம்……இன்று லஷ்கர் – இ- தொய்பாவின் தலைவன் ஹஃபீஸ்சையத் [ இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி] பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு நக்கலடிக்கிறான்…….‌
    பார்த்தீர்களா … நான் சொன்னதையேதான் இந்திய உள்துறை அமைச்சரும் சொல்கிறார் என்கிறான்……

    ஹிந்து பயங்கரவாதம் என்பது ஆக்சிமொரான் – பொருளற்ற வார்த்தை…..

  18. Avatar
    சோழன் says:

    மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவரை ஏன் வீர சாவர்க்கர் என அழைக்கிறார்கள்? வெறும் சாவர்க்கர் போதுமே!

    1. Avatar
      paandiyan says:

      பண்டித, வீர எல்லா பெயருக்கும் தமிழ்படி நேறடி அர்த்தம் கற்பித்து கொண்டு கொழப்புங்கள் . ஜோக் என்றாலும் இழப்பு உங்களுக்குத்தான்

  19. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன், வெறுப்பை மனதில் கொண்டால் காண்பதிலெல்லாம் வெறுப்பு மட்டுமே தெரியும்.

    \எத்தனை, எத்தனை எழுத்துப் பிழைகள் ?\காந்திஜி கோட்சேவால் கொலை செய்யப்பட்ட மோது, \

    தாங்கள் எழுதிய நாலு வாசகங்கள் கூட வெறும் வெறுப்பின் பாற்பட்டு எழுதியதால் “செய்யப்பட்ட போது” என்பது “மோது” என்று வந்துள்ளது. கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறியக்கூடாது.

    \க்றைச்தவ மதம், வ்யாசம், ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி, க்றைஸ்தவ ப்ரார்த்தனைகளால்\

    க்றைச்தவ – என்பதில் எழுத்துப்பிழை “ஸ்” என்று இருக்க வேண்டும். எனது க்ஷமா யாசனங்கள்.

    கலப்பு மொழி நடை பற்றி வ்யாசத்தின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளேன். மற்ற சொற்கள் கலப்பு மொழிநடை சார்ந்தது. அது பற்றி தாங்கள் சொல்லும் குறையை ஒரு தூய தமிழ் விரும்பி ஒருவரின் குறை சுட்டலாகவே கொள்கிறேன். இதற்காகத் தங்களுக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள். மேலும் இது சம்பந்தமாக எனக்கு ஏதும் விவாதங்கள் இல்லை.

    \கிறித்துவ மத இருப்பு உங்களுக்குப் பிடிக்க வில்லை\

    இது உங்கள் கற்பனை. வ்யாசத்தின் ஆரம்பத்தில் க்றைஸ்தவ மதத்தை நான் எவ்வளவு போற்றுகிறேன் என்று தெளிவாகச் சொல்லியுள்ளேன். வ்யாசத்தை மீண்டும் ஒருமுறை திரும்பி வாசிக்கவும். பொய் சொல்வது முறையான வாதத்திற்கு அழகல்ல. விஷயத்தை சரியான கோணத்தில் விவாதிக்க முயற்சியுங்கள். Dont put words into my mouth.

    நான் விமர்சனம் செய்தது காந்தியடிகளின் மரணத்தை சாக்காக வைத்து தாங்கள் ஜபர்தஸ்தியாக பரப்ப முனையும் க்றைஸ்தவ மத மேட்டிமை. நான் விமர்சனம் செய்வது க்றைஸ்தவ மத இருப்பை அல்ல. இப்படித் தாங்கள் முனைந்து பொய் சொல்வது காந்தியடிகளுக்கே அடுக்காது.

    ஸ்ரீ கோட்சே கொன்றது காந்தியடிகளின் உடலை. தங்கள் கருத்துக்கள் காந்தியடிகளின் ஆன்மாவைச் சிதைக்க முயற்சிக்கின்றன. அதனுடன் உடன் படாததால் தான் இந்த வ்யாசம் எழுதப்பட்டது.

    காந்தியடிகளின் ஆன்மா வாழ்வது தன் மதத்தைப் பேணுவதோடு அல்லாமல் மற்ற மதங்கள் உலகில் தழைப்பதில் ஒப்புதல் உள்ள உயர்ந்த உள்ளங்களால்.

    அது போன்ற ஒரு ஒப்புதல் நடுநிலை தங்கள் கருத்துக்களில் அறவே இல்லை. ஏன் இல்லை என்பதைப் பத்தி பத்தியாக தங்களுடைய தகவற்பிழைகள், நடுநிலையின்மை, பொய்யான பரப்புரைகள் எனத் தனித்தனியாக விளக்கியுள்ளேன். நான் வேறுபடுவது தங்கள் கருத்துக்களுடன் மட்டும். ஸ்ரீமன் ஜெயபாரதன் என்ற வ்யக்தி விசேஷத்துடன் அல்ல என்பதையும் மறுமுறை சொல்லிவிடுகிறேன்.

    \உலக மதங்களில் எல்லா வற்றைக் காட்டிலும் ஓங்கி வளர்ந்து உச்சியில் இருப்பது நிச்சயம் கிறித்துவ மதமே.\

    அது எப்படி உச்சிக்குப் போனது என்பதைப் பற்றி விசாரித்துள்ளேனே. அதில் ஏன் உங்கள் கவனம் செல்லவில்லை. விஷயத்தை கருத்து நேர்மையுடன் அணுக முயலுங்கள். க்றைஸ்தவ மத மேட்டிமை வாதத்தின் உச்சிமண்டையில் அடிப்பது க்றைஸ்தவம் வளர்வதற்கு அது கையாண்ட வன்முறைகளும் படுகொலைகளும்.

    க்றைஸ்தவ மத மேட்டிமை வாதம் பேசுபவர்கள் Crusade, Inquisition பற்றி உலகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும். க்றைஸ்தவ மதம் உலகில் பரவியது அன்பு மற்றும் தொண்டினால் மட்டும் இல்லை என்பதை ஏன் மறைக்க முயற்சிக்கிறீர்கள்? க்றைஸ்தவத்தை ஏற்காத மானுடர்களைக் கொன்றதால் விளைந்த ரத்தச் சகதியால் உலகில் பரப்பப்பட்ட க்றைஸ்தவத்தின் முகத்தை ஏன் மறைக்கிறீர்கள்.

    இரண்டாம் பாகத்தில் காந்தியடிகளின் கருத்துக்களுடன் சார்ந்து இந்த விஷயம் பற்றி மேலும் பார்ப்போம்.

    \ஏசுபெருமான் வாழ்ந்ததற்குச் சான்றுகள் போதா என்பதும் ஒருவித மதவெறியே.\

    ஏசுபிரான் வாழ்ந்ததற்குச் சான்றுகள் போதா என்பது என் வாதமில்லை. ஏசுபிரான் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்திலும் அதற்கு உடன்பின்னான காலத்திலும் எழுதப்பட்ட யஹூதிய பாகனிய நூற்களில் இப்படிப்பட்ட ஒரு வ்யக்தியைப் பற்றி அறவே குறிப்புகள் இல்லை என்பது வைக்கப்பட்ட விஷயம்.. சான்றுகள் போதா என்று இல்லை அன்பரே சான்றுகளே இல்லை என்பது தான் வாதம்.

    இதை மதவெறி என்று சொல்வது குதர்க்க வாதம்.

    மதம் நம்பிக்கை சார்ந்தது. சரித்ரம் ஆவணங்கள் சார்ந்த விஷயம். ஆவணங்கள் சார்ந்த விஷயத்தை நம்பிக்கையுடன் கலக்க முனைவது என்பதே தவறான போக்கு.

    ஏசுபிரான் சரித்ரத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க யஹூதிய பாகனிய ஆவணங்கள் சார்ந்து அல்லது அது போன்று சரித்ர இருப்புக்கு வலுவூட்டும் ஆவணங்கள் சார்ந்து மட்டும் பேசுங்கள். ஆவணங்களின் படி பேசாது கிளிப்பிள்ளை போல சொன்னதைத் திரும்பித் திரும்பிச் சொல்வதால் மட்டும் நம்பிக்கை சரித்ரமாகாது.

    பூமி ஸ்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்ற பைபள் வாக்யம் விக்ஞானிகளால் ஏற்கப்படுவதில்லை என்பதை இதற்காகத் தான் முன்வைத்தேன். அப்போது விக்ஞானிகளெல்லாம் க்றைஸ்தவ மதத்திற்கு எதிரான மதவெறியர்கள் என்பீர்கள் போலும். கலீலியோவை எப்படியெல்லாம் அன்பு பொங்கும் பரங்கிய க்றைஸ்தவ தேவாலயம் துன்புறுத்தியது என்பது சரித்ரம் சொல்லும் செய்தி தானே. சரித்ர வல்லுனர்கள் மற்றும் அவர்கள் முன்வைக்கும் ஆவணங்கள் படி சரித்ரத்தைப் புரிந்து கொள்ள விழைபவர்கள் மதவெறியர்கள் என்றால் அது மதிஹீனமான கருத்து. மதவெறி என்பது உள்ள விஷயத்தை உள்ள படி வடிக்க விழையும் விக்ஞானிகள் அல்லது சரித்ர ஆய்வாளர்களிடம் இல்லை. மாறாக புத்தி பூர்வமாக அன்றி நம்பிக்கை மட்டும் சார்ந்து ஒரு விஷயத்தை அணுக முயல்பவர்களிடம் காணப்படுவது தான் மதவெறி.

    நம்பிக்கை சார்ந்து மட்டும் பேசாது ஆவணங்கள் சார்ந்து ஏதும் பேச முற்பட்டால் நிச்சயம் அவற்றை பரிசீலனை செய்ய முயல்வேன்.

    \இந்து மதத்தினரை விட அந்த மதத்தினர் எந்த விதத்தில் மக்களுக்குப் பணி செய்துப் பரவி முன்னேறுகிறார் என்பதைப் பிற மதத்தினர் விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். \

    ஏன்???????? சுவிசேஷக் கூட்டங்களில் ப்ரார்த்தனை மூலம் எல்லா ப்ரச்னைகளையும் சரிசெய்வோம் என்றெல்லாம் கூவுகிறார்களே??????? அது அறிவு பூர்வமானதா???????அதன் மூலமும் தானே பரவுகிறது க்றைஸ்தவம்?????? இதனைப்பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்.

    தொண்டு, பணி செய்தல் க்றைஸ்தவத்திற்கு மட்டிலும் உரியது என்பது பச்சைப்பொய். மற்ற மதத்தவர் செய்யும் கல்வி, மருத்துவம், தொண்டாற்றல் போன்றவற்றைப் பழிக்கும் செயல். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது போன்ற சேவைகளை க்றைஸ்தவ மதத்தவர் மட்டும் இல்லாமல் ஹிந்து மற்றும் இஸ்லாமிய இயக்கங்களும் செய்து வருகின்றன என்பதை உலகோர் அறிவர்.

    நல்ல செயல்கள் செய்வதில் ஒவ்வொரு மதத்தினரும் மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் க்றைஸ்தவர்கள் ஹிந்துக்களிடமிருந்தும் இஸ்லாமியரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் உண்டு என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன்.

    \ குறிப்பாக குமரி முனையில் இருக்கும் கன்னியா குமரிக் கோயில் உள்ளே போய்ப் பாருங்கள். மாறாக நாடெங்கும் தூயதாய் இருக்கும் கிறித்துவ ஆலயங்கள் உள்ளே சுற்றிப் போய்ப் பாருங்கள்.\

    விஷயம், எந்த மதத்தைச் சார்ந்ததாக இருப்பினும் வழிபாட்டு ஸ்தலங்கள் தூயதாய் இருக்க வேண்டும் என்றால் அதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. க்றைஸ்தவ ஆலயங்கள் அனைத்தும் தூய்மையாய் இருக்கின்றன; ஹிந்து ஆலயங்கள் அனைத்தும் அழுக்காய் இருக்கின்றன என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    அன்பரே நான் அழுக்கான பலப்பல க்றைஸ்தவ தேவாலயங்களையும் பார்த்திருக்கிறேன். தமிழக ஹிந்து ஆலயங்கள் சிலவற்றில் தூய்மைக் குறைவு காணப்படுகிறது என்பதில் உண்மை உண்டு. ஆனால் அதை அனைத்து ஹிந்து ஆலயங்கள் என நீட்டி முழக்காதீர்கள். கன்யாகுமரியில் சில கோவில்கள் என்று சொல்கிறீர்களே. அருகில் மிகத் தூய்மையான சுசீந்த்ரம் ஸ்தாணுமாலயன் ஆலயம் ஏன் தங்கள் கண்ணில் படவில்லை. பக்கத்தில் கேரளத்திலும் கர்னாடகத்திலும் அனைத்து ஹிந்து ஆலயங்களும் மிகத் தூய்மையாக உள்ளன என்பதையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறேன்.

    \காந்திஜி இறந்ததைக் கொண்டாடியவர் வீர சாவர்க்கர். அவர் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காந்தி கொலைக்குச் சதி செய்தவர். இல்லாவிட்டால் ஏன் அவரைக் காவல் துறையினர் கைது செய்கிறார்.\

    இப்படி எழுதுவது வெளிப்படையான நகைச்சுவை. காவல் துறை ஒருவரைக் கைது செய்வது சந்தேகத்தின் அடிப்படையில் என்பது தாங்கள் அறியாததா? அதுவே ஒருவரைக் குற்றவாளி என்று நிலை நாட்டப் போதுமானது என்பது மதிஹீனம். பின் தேசத்தில் நீதிமன்றங்கள் எதற்கு? ஸ்ரீ சாவர்க்கரை சாக்ஷி சம்மன் களுடன் விசாரித்த நீதிமன்றம் சாட்டப்பட்ட குற்றத்தில் இருந்து விடுவித்தது என்பதை மறுக்க முயல்வது தாங்கள் ஸ்ரீ சாவர்க்கர் மீது கொண்டுள்ள மட்டு மீறிய வெறுப்பால். வெறுப்பேறிய மனம் என்றும் ந்யாய தர்மங்களின் பாற்பட்டு விஷயங்களை க்ரஹிக்க முயற்சி செய்யாது.

    \வீர சாவர்க்கர் பொய் சொல்லக் கொஞ்சமும் அஞ்சாத மகா வீரர். தீரர் ! காந்திஜி கொலை வழக்கில் பொய் சொல்லித் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலி. தனக்கு ஆதரவாய்ப் பலரைப் பொய் சொல்ல வைத்து நீதி மன்றத்தில் தண்டனையிலிருந்து தப்பிய சாதனை மேதை.\அப்படி செய்யாமல் கொலைச் சதியை ஒளிமறைவாய் ஊக்கியவர் வீர வீர வீர சாவர்க்கர். வரலாறு இதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும்.\

    வெறுப்புக்குத் தான் எவ்வளவு பிடிவாதம்.

    மூட நம்பிக்கைகள் என்றும் வரலாறு ஆகாது.

    முதலில் இது தங்களது கற்பனையா அல்லது ஆவணங்களின் பாற்பட்டதா என்பதைத் தெளிவு செய்யுங்கள்.

    மூடநம்பிக்கைகள் வாதத்தின் பேசுபொருளாக என்றும் ஆகவியலாது.

    காந்தி கொலைவழக்கில் ஸ்ரீ சாவர்க்கர் முன்வைத்த பொய்கள் யாவை தனக்கு ஆதரவாக யாரைப் பொய் சொல்ல வைத்தார் என்பதை ஆவணங்கள் சார்ந்து முன்வையுங்கள்.

    சரித்ரத்தை நம்பிக்கையுடன் கலந்தடிப்பதே முறைமை என்று விதண்டாவாதம் செய்யாதீர்கள்.

    விட்டால் ஹிந்துஸ்தான நீதிமன்ற நீதிபதிகள் முட்டாள்கள் என்றும் ஸ்ரீமான் ஜெயபாரதன் தான் நீதிபதி அவர் தான் நீதிமன்றம் அவர் தீர்மானம் செய்வது தான் நீதி என்றும் சொல்வீர்கள் போலும்.

    பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் மர்மமான முறையில் இறந்ததை விசாரணைக்குக் கூட உட்படுத்தாத பண்டித நேரு அவர்களைப் பற்றி யோஜனையாவது செய்யலாமே. செத்தது ஹிந்து இயக்கத்தைச் சார்ந்த ஒரு அன்பர் என்றால் அதற்கு விசாரணை செய்யக் கூடத் தேவையில்லை என்பது தான் காந்தியடிகள் உங்களுக்கும் பண்டித நேருவுக்கும் சொல்லிக் கொடுத்த பாடமோ?

    சரித்ரம் வாழ்ந்திறந்த மனிதர்களின் நிறைகளை மட்டும் அல்ல குறைகளையும் காட்டுகிறது என்று அறிவீர்களாக. ஒவ்வொரு மனிதரையும் அவரது நிறைகள் மற்றும் குறைகள் இரண்டுடனும் பூர்ணமாக அறிய விழையுங்கள்.

    ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் தலித் சஹோதரர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்குச் செய்த பணிகள் கௌதம புத்தரின் பங்களிப்புக்குக் குறையாதது என பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் சொல்லியது உங்கள் கண்ணில் படவே படாது போலும்?

    \இந்தியாவின் செலவில் படித்துவிட்டு இன்று வெள்ளையனுக்கு உழைப்பவர்களை விட வீரசாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேசபக்தர் தான்\

    உண்மையே. மேலும் ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களைப் போற்றியதைப் புறக்கணித்து ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் சொல்வதை ஏன் ஏற்க வேண்டும் என்பதற்கு அன்பர் அவர்கள் சரியான வாதங்களைக் கூட முன்வைக்கவில்லையே.

    ஸ்ரீ சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்ததாக ஸ்ரீமான் ஜெயபாரதன் சொல்லியது தகவற்பிழையா அல்லது அதற்கு ஏதும் ஆவணங்கள் முன்வைப்பாரா?

    ஸ்ரீ சாவர்க்கர் அவர்களை காந்தி கொலை வழக்கில் நீதி மன்றம் விடுவித்த பின்னரும் குற்றவாளி என்று சொல்ல முனையும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தன் வசம் தகுந்த ஆவணங்கள் இருப்பின் நீதிமன்றத்திற்கோ அரசிற்கோ அவற்றை பகிர முயற்சிக்கலாம். அல்லது இந்த தளத்தில் அவற்றைப் பதிய முயற்சிக்கலாம். உண்மை அறிவதில் ஆர்வமுள்ளவர்கள் நாடுவது சாக்ஷிகளை; ஆவணங்களை; தங்கள் நம்பிக்கைகளை அல்ல.

    நூறு முறையென்ன ஆயிரம் முறை திரும்பிச் சொன்னாலும் பொய்களை உண்மைகள் என சாதிக்க முடியாது.

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \அரை டவுசர் சேவக்குகள்//

    ஸ்வயம்சேவகர்களுடைய சீருடை Half Trousers என்பது உண்மை தான்.

    அரை டவுசர் சேவக்குகள் என்பதில் வெறுப்பும் எள்ளலும் காணப்படுகிறது. முறையான விவாதத்திற்குத் தேவையில்லாதது.

    காந்தியடிகள் மிக எளிமையாக வெறும் துண்டு தான் ஆடையாக அணிவார்.

    துண்டு மட்டும் ஆடையாக காந்தியடிகள் அணிவது ஹிந்துஸ்தானமுழுதும் எளிமையின் அடையாளமாகக் காணப்பட்டது.

    விதேசத்தினர் அவரை Half Naked Fakir – அரை நிர்வாண பக்கிரி என்று எள்ளலுடன் பேசினர்.

    எளிமை மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமான உடை மற்றும் சீருடை இவற்றை எள்ளலுக்கு உள்ளாக்கினால் அதன் மூலம் தரத்தில் குறைவது எளிமையோ அல்லது உடை அல்லது சீருடையோ அல்ல மாறாக வெறுப்பு கலந்த எள்ளலான கருத்து.

    வெறுப்பு என்றும் முறையான வாத விவாதத்திற்கு அளவுகோல் ஆகாது.

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    முதலில் எனது கலப்பு மொழிநடையை மனதிலிறுத்தி வ்யாசத்திற்கு மறுப்பு எழுதும் முயற்சியை விட்டு விட்டேன். பின்பும் மனது ஏற்காததால் வ்யாசத்தை எனது மொழிநடையிலேயே எழுதி இயன்ற வரை மொழிநடையை சீர் செய்து பின் வ்யாசத்தை சமர்ப்பித்தேன்.

    பெரும் தமிழறிஞரான அன்பார்ந்த ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் மொழிநடையில் குற்றம் கண்டது இயல்பே. அதில் எனக்கு ஏதும் பிணக்கு இல்லை.

    ஸ்ரீ பாண்டியன் மற்றும் ஸ்ரீ சரவணன் போன்ற அன்பர்கள் அளிக்கும் உத்சாஹத்திற்கு மிகுந்த நன்றிகள்.

    கருத்து பகிரும் அனைவருக்கும் நன்றிகள்

    அன்பர் ஷாலி அவர்கள் கவனத்திற்கு.

    அந்தமான் சிறையிலிருந்து வெளிவர ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமர்ப்பித்த மன்னிப்புக் கடிதம் அவர் சரித்ரத்தில் ஒரு கறை. அவரது வீரத்திற்கு ஒரு இழுக்கு. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது அவரது வீரத்தையே மறுதலிக்கும் விஷயமாக முன்னிறுத்தப்படுத்துவது சாவர்க்கர் வெறுப்பாளர்களால். காந்தியடிகளின் குறைகளை மட்டும் அவதானிப்பவர்கள் இதே போன்று அவரை வெறுப்பின் பாத்ரமாகச் சித்தரித்து அவரது நிறைகளை அறவே ஒதுக்க முயல்வர். காந்தியடிகளின் சரித்ரமும் கறைகளும் குறைகளும் படிந்ததே. வீர சாவர்க்கர் மற்றும் மஹாத்மா காந்தியடிகள் மனிதர்களே. மனிதர்களின் வாழ்க்கை நிறை குறைகள் நிறைந்ததே. குறைகளை மட்டும் அடுக்குபவர்கள் வெறுப்பாளர்கள். பண்பட்ட மனித மனம் மனிதர்களின் நிறை குறைகளை முழுமையாக ஏற்க முயலும்.

    \தமிழ் ஹிந்து சைவர்களைக் கொன்ற புத்தனின் பேரன் அஹிம்சாமூர்த்தி ராஜ பக்ஷேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. அவரும் புத்த பெருமாளை சேவிக்க திருப்பதி வருகிறார்.\

    சனாதனி, நாஸ்திக, பௌத்த, ஜைன, சீக்கிய, நாட்டார் வழிபாடுகள் இவையனைத்தையும் தன்னகத்தே கொண்டது ஹிந்து மதம். ராஜ பக்ஷே ஈழத்தில் கொலை செய்தது தமிழ் ஹிந்துக்களை மற்றும் தமிழ் க்றைஸ்தவர்களை. ஹிந்துக்களை சைவர் மற்றும் வைஷ்ணவர் என பரிசோதித்து வைஷ்ணவரை விட்டு விட்டு தமிழ் பேசும் சைவர்களை மட்டும் கொலை செய்தார்கள் சிங்களவர்கள் என நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. தங்கள் கூற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் ஏதும் இருப்பின் சமர்ப்பிக்கவும்.

    \வீரர்கள் கொண்ட கொள்கைக்காக உயிரை தியாகம் செய்வார்கள்,வீர் சாவர்க்கரைபோல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒருவேளை இது வீரத் தற்கொலையாக இருக்கலாம்.\

    ஸ்ரீ வீர சாவர்க்கர் இறந்தது சமணம் மற்றும் மற்றைய ஹிந்து சமய வழிமுறைகளில் ஏற்கப்பட்ட உயிர் த்யாகமே. தற்கொலையால் அல்ல.

    உங்களுக்கு ஸ்ரீ சாவர்க்கர் அவர்களின் பேரில் வெறுப்பு என்பது வேறு விஷயம். அவரின் இறப்பை தற்கொலை என சித்தரிக்க முனைவது வெறுப்பின் பாற்பட்டது.

    சமணர்கள் மற்றும் ஏனைய ஹிந்து சமயத்தினர் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறைமை “ப்ராயோபவேசம்”.

    தன் வாழ்க்கையில் தன் கடமைகள் முடிந்தது என முடிவெடுப்பவர் உணவை மறுத்து மரணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து உணவை மறுத்ததால் ஏற்கும் இறப்பு “ப்ராயோபவேசம்”. இதில் *கொலை* என்ற சொல் பயன் படுத்தலாகாது. தற்கொலையைக் குறிக்கும் சம்ஸ்க்ருத பதம் “ஆத்மஹத்யா”. இன்றும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் ப்ரதேசங்களில் மிகப்பல ஜைனர்கள் “ப்ராயோபவேசம்” என்ற இந்த முறையின் படி தங்கள் அந்திம காலத்தை கழித்து இறக்கிறார்கள்.

    சித்தாந்த ரீதியாக இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். அதைத் தாங்கள் அவசியம் பதிவு செய்யலாம்.

    மதரீதியான ஒரு விஷயத்தை வெறுப்பு மற்றும் எள்ளல் மிக தற்கொலை என சித்தரிப்பது ஏற்க இயலாதது; ஒரு முறையான வாதத்தின் பாற்பட்டதன்று.

    அன்பர் ஸ்ரீ வேதம் கோபால் அவர்கள் காந்தியடிகள் க்றைஸ்தவம் பற்றிப் பேசியுள்ள விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். நான் இரண்டாம் பாகத்தில் காந்தியடிகள் க்றைஸ்தவம் பற்றிப் பகிர்ந்த ஒரு கருத்தை மட்டும் அவதானித்துள்ளேன். க்றைஸ்தவ மத மேட்டிமை வாதம் பேசும் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் இதை வாசித்து காந்தியடிகளின் க்றைஸ்தவ மதம் பற்றிய கருத்துக்களை முழுமையாக அறியலாம். மலைப்ரசங்கம் பற்றி மட்டும் பேசி காந்தியடிகளின் க்றைஸ்தவம் பற்றிய கருத்தை சுட்டுவது மஹாத்மா காந்தியடிகளை முழுமையாக முன்னிறுத்துவது ஆகாது.

    1. Avatar
      paandiyan says:

      //அந்தமான் சிறையிலிருந்து வெளிவர ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமர்ப்பித்த மன்னிப்புக் கடிதம் அவர் சரித்ரத்தில் ஒரு கறை. அவரது வீரத்திற்கு ஒரு இழுக்கு. ஏற்றுக்கொள்கிறேன்//

      இதை ஏற்றுகொள்ள முடியவில்லை . ஒரு ஒருவரும் தங்கள் நிலைகளில் போராடினார்கள் . அதில் குறை சொல்ல வேண்டாம். அன்றைய அந்தமான் வாசம் எப்படி என்று குறைந்த பட்சம் கூட படிக்காதவர்கள் இன்று கருத்து சொல்வது எளிது

  22. Avatar
    Indian says:

    Shri Krishnakumar, congratulations for a fantastic article. Mr Jayabarathan, I am sorry to say, is another hard core Christian. He knows that if Jesus Christ’s HISTORICITY (fable) is knocked off, then Christianity as a religion will collapse. He cannot stomach the fact JC was a just a mythical figure and not an historical one. You can present facts after facts till cows come home but he will not budge. Sorry,he is victim of ” Stockholm syndrome”
    Now back to Shri Savarkar. I urge all critics of this great man to browse this web site with an open mind and make judgement after that.
    http://www.anurupacinar.com/

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      http://www.savarkar.org/files/u1/AVARKAR_S_APPLICATION_TO_THE_COURT_OF_APPEAL.pdf

      [IN THE COURT OF APPEAL.]
      THE KING v. GOVERNOR OF HIS MAJESTY’S PRISON, BRIXTON. Ex parte
      SAVARKAR.
      1910 June 16, 17.
      VAUGHAN WILLIAMS, FLETCHER MOULTON, and BUCKLEY L.JJ.
      Practice – Habeas Corpus – Appeal – Criminal Cause or Matter – Fugitive Offender – Judicature Act,
      1873 (36 & 37 Vict. c. 66), s. 47 – Application to Court of Appeal under Fugitive Offenders Act, 1881
      (44 & 45 Vict. c. 69), s. 10 – Estoppel by Judgment – Res Judicata – Absence of Adjudication as of
      Record.
      An appeal will not lie to the Court of Appeal against the refusal of a Divisional Court to issue a writ of
      habeas corpus in the case of a prisoner committed under the Fugitive Offenders Act, 1881.
      ++++++++05 Feb 1948 – Arrested under the Preventive Detention Act after Gandhi’s murder

      10 Feb 1949 – Acquitted in Gandhi Murder Trial

      19 Oct 1949 – Youngest brother Dr. Narayanrao Savarkar passed away

      Dec 1949 – Inaugurated Calcutta session of the Akhil Bharat Hindu Mahasabha

      04 Apr 1950 – Was arrested and detained in Belgaum jail on the eve of arrival of Pakistani Prime Minister Liaquat Ali in Delhi

      May 1952 – Public function held at Pune to announce the dissolution of Abhinav Bharat, the revolutionary society having achieved its aim of freeing India

      Feb 1955 – Presided over Silver Jubilee celebrations of Patitpavan Mandir at Ratnagiri

      23 Jul 1955 – Was the Chief Speaker at Lokmanya Tilak Centenary Celebrations in Pune

      10 Nov 1957 – Main speaker at the Centenary Celebrations of the Indian War of Independence 1857 held in New Delhi

      28 May 1958 – Accorded a civic reception by Greater Bombay Municipal Corporation on the occasion of his Diamond Jubilee

      08 Oct 1959 – University of Pune conferred honorary D. Litt. at his residence

      24 Dec 1960 – Mrityunjay Divas celebration – a day set down for the release of Savarkar after completing the sentences of two Transportation for Life

      15 Apr 1962 – Sri Prakash, Governor of Bombay called upon Savarkar at his residence to pay his respects

      29 May 1963 – Hospitalized for a fracture in the leg

      08 Nov 1963 – Savarkar’s wife Yamuna passed away

      Sep 1965 – Taken seriously ill

      01 Feb 1966 – Takes a decision to fast unto death

      26 Feb 1966 – 10.30 a.m., at the age of 83, Savarkar left his mortal coil

      27 Feb 1966 – Cremation at the electric crematorium, the final salute given by 2500 uniformed swayamsevaks of the RSS and millions of admirers across the country

      +++++++++++++

  23. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த நண்பர்களே, கருத்துப் பரிமாற்றத்தின் நோக்கம் நமது கருத்துக்களை மேம்படுத்துதல் என்பது என் புரிதல்.

    சரியான சான்றாதாரங்களுடன் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு தெளிவுடன் வாதங்கள் வைக்கப்படில் அது நிறைவேறுகிறது.

    \இதை ஏற்றுகொள்ள முடியவில்லை . ஒரு ஒருவரும் தங்கள் நிலைகளில் போராடினார்கள் . அதில் குறை சொல்ல வேண்டாம். அன்றைய அந்தமான் வாசம் எப்படி என்று குறைந்த பட்சம் கூட படிக்காதவர்கள் இன்று கருத்து சொல்வது எளிது\

    மிகவும் அருங்கருத்து வழங்கிய ஸ்ரீ பாண்டியன் அவர்களுக்கு நன்றி. உள்ளபடியே ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களது அந்தமான் சிறைவாசம் அதன் பின்னர் அவருடைய செயல்பாடுகள் போன்றவற்றை முறையாக வாசித்தறியாது மேலோட்டமாக அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை மட்டிலும் கணக்கில் வைத்து அவருடைய வீரத்திற்கு இழுக்கை என் மனதிலேற்றுவது ஒரு அழுக்கை மனதிலேற்றுவதற்குத் தான் சமம். இது போன்றதொரு தீர்மானத்திற்கு வருமுன் நான் வாசித்தறிய வேண்டிய விஷயம் அதிகம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். திறந்த மனத்துடன் கருத்தை அணுகி இந்த விஷயத்தில் நான் தெளிவு பெற வேண்டும் என்ற படிப்பினையை மேற்கண்ட கருத்தில் இருந்து பெருகிறேன். அதற்காக ஸ்ரீ பாண்டியன் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

    \//தனக்கு ஆதரவாய்ப் பலரைப் பொய் சொல்ல வைத்து நீதி மன்றத்தில் தண்டனையிலிருந்து தப்பிய சாதனை மேதை//
    இதை நீ நிருபீக்க வில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா ?
    அட்மின்
    குறைந்த பட்ச ஆதாரம் ஜெயபாரதன் தரவில்லை என்றால் இதை நீக்க வேண்டும்.\

    அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் தன்னுடைய பல கூற்றுகளை…………

    ஏசுபிரானின் சரித்ர இருப்பு, ஸ்ரீ வீர சாவர்க்கர் மற்றும் பல சாக்ஷிகள் நீதிமன்றத்தில் பொய் சொன்னார்கள் போன்ற விஷயங்களை சரித்ர ஆவணங்கள் மற்றும் காந்தியடிகளின் மரணம் சம்பந்தப்பட்ட வழக்காவணங்களின் பாற்பட்டு தகவல்களை பகிர்ந்தார்கள் என்றால் மட்டிலும் அவை கருத்துத் தெளிவும் விஷயங்களின் உண்மை நிலையையும் தெளிவு படுத்தும் படிக்கு இருக்கும்.

    மாறாக ஆவணங்களின் பாற்பட்டன்றி சொன்ன விஷயத்தையே திரும்பித் திரும்பிச் சொல்வது அவரது சொந்தக் கருத்தை சொந்த வெறுப்புக்களை பறைசாற்றுதலாக மட்டிலும் ஆகும். இது தத்யம். இதற்கு மேல் இது பற்றி சொல்ல வேறு ஏதும் இல்லை.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்கள் பால் மட்டற்ற வெறுப்பு உள்ளது என்பது புரிகிறது. அன்பர் அவர்களுக்கு ஸ்ரீ சாவர்க்கர் பால் எவ்வளவு வெறுப்பு உள்ளதோ அதை விட பன்மடங்கு வெறுப்பு எனக்கு ஒரு சமயம் காந்தியடிகள் மேல் இருந்தது. ஆனால் எனது ஆன்மீக நாட்டமும் காந்தியடிகளின் வாழ்க்கை நிறை குறைகளை முற்றாக ஏற்கும் மற்றும் முற்றாக மறுக்கும் அன்பர்கள் பலருடைய வ்யாசங்களை வாசித்ததன் மூலம் சற்றேறக்குறைய நிறை மற்றும் குறைகளை அதனதன் காரணங்களின் பாற்பட்டு ஏற்று அந்த வாழ்வாங்கு வாழ்ந்த மகத்தான மனிதரை சமநிலையின் பாற்பட்டு புரிந்து கொள்ள ஹேதுவானது.

    திறந்த மனதுடன் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் சான்றாதரங்கள் பாற்பட்டு ஸ்ரீ வீர சாவர்க்கர் பற்றி வாசித்தறிந்தால் ஒரு சமநிலையான கருத்தை அன்பர் அவர்கள் எட்ட இயலும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    \இதை நீ நிருபீக்க வில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா ?\

    மேற்கண்ட வாசகம் எனக்கு சொல்லொணா மனத்துயரம் தருகிறது என்றால் மிகையாகாது.

    நாம் இங்கு கருத்துப் பரிமாற்றம் தானே செய்து வருகிறோம்.

    நான் ஹிந்துஸ்தானத்தின் பதட்டம் நிறைந்த எல்லைப் பகுதிகளில் கிட்டத்தட்ட இரண்டரை தசாப்தங்கள் உத்யோகத்தில் இருந்ததால் மதவேறுபாடின்றி அகாலத்தில் நிகழும் மரணங்கள் என்பது எவ்வளவு வலி மிகுந்தது என்ற விஷயத்தை அனுபவ பூர்வமாக அறிவேன்.

    கருத்துடன் மாறுபடுவது என்பது வேறு மிகக் கடுமையான சுடுசொற்களால் பிழையை சுட்டுவது என்பது வேறு. பின்னது தவிர்க்கப்பட வேண்டியது என்பது என் புரிதல். எனது கருத்தில் பிழை இருக்குமாயின் அன்பர் ஸ்ரீ பாண்டியன் அவர்கள் என்னை க்ஷமிக்குமாறு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

    வ்யாசத்திலோ அல்லது என் கருத்துப் பரிமாற்றங்களிலோ என் பக்ஷம் குற்றம் குறை இருக்குமாயின் அதையும் பகிருமாறு நண்பர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன். நம்முடைய குற்றத்தைச் சுட்டுபவர்கள் நம்மை மேம்படுத்தும் பந்துக்களே அன்றோ.

    கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அன்புடன் கருத்துப் பரிவர்த்தனம் செய்வோமே.

  24. Avatar
    ஷாலி says:

    அன்பு நண்பர் ஸ்ரீ க்ருஷ்ணகுமார் அவர்கள் தம் மனம் சரி கண்டு ஏற்றதை ஒளிக்காமல் வார்த்தையில் வடிக்கிறார்.//ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமர்ப்பித்த மன்னிப்புக் கடிதம் அவர் சரித்திரத்தில் ஒரு கறை.அவர் வீரத்திற்கு இழுக்கு.ஏற்றுக்கொள்கிறேன்.// இப்படி மன நேர்மையுடன் கருத்துக்களமாடுபவர்களை இன்றைய நாட்களில் காண்பதரிது. எதிர்க்கருத்து எல்லாவற்றையும் மூர்க்கமாகத்தாக்கி வீழ்த்துவதும் தனிநபர் தாக்குதலில் திசை திருப்புவதும்தானே இன்றைய நடைமுறை.உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுக்கள்.!
    சாவர்க்கரை நீங்கள் உயர்வாகப் புகழ்வதாலோ.நான் தாழ்வாக விமர்சிப்பதாலோ, உலகத் தராதர தராசு தடுமாறப்போவதில்லை.//ஏசுபிரானை சரித்திரத்தின் பாற்பட்டு ஏற்க இயலாது.// என்று கூறும் நீங்கள் சாவர்க்கரின் மறு பக்கத்தை சரித்திர உண்மையாக நாம் கூறும்போது வெறுப்பின் வெளிப்பாடக தாங்கள் கருதுவது சரியல்ல.யாரையும் வெறுத்து எவரும் இவ்வுலகில் சாதிக்கப்போவதில்லை. // ஹிந்துக்களை சைவர் மற்றும் வைஷ்ணவர் என பரிசோதித்து வைஷ்ணவரை விட்டுவிட்டு தமிழ் பேசும் சைவர்களை மட்டும் கொலை செய்தார்கள் சிங்களவர்கள் என நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.// தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே! நீங்கள் புத்தனை பெருமாள் அவதாரமாக பார்த்து,சிங்கள பெருமாள் பக்தர் ராட்சச ராஜ பக்சேவிற்கு அரசு மூலமாக ஆதரவினை அள்ளி வழங்கினீர்கள். ஆனால் புத்த பக்தர் ராஜ பக்சே திருப்பதி பெருமாளை ஸ்ரீ வெங்கடாஜலபதியாக கருதி வழிபடவில்லை.திருப்பதி புத்தனாக கருதியே வழிபாடு செய்கிறார்.எனவே இந்திய ஹிந்துக்கள் மீது அவருக்கு ஓட்டும் இல்லை உறவுமில்லை.ஆகவே தமிழ் பேசும் அனைத்து ஹிந்துக்களும் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டார்கள். இன்று வதை முகாம்களில் சிங்கள சிப்பாய்களுக்கு தமிழ் பெண்கள் சதை பங்கிடப்படுகிறது.தேவைப்படும் உரிய ஆலோசனையை புலியை எலியாக்கிய பெருமாள் பக்தர் சு.சாமி நேற்றுக் க்கூட கொழும்பு சென்று கொடுத்து வந்தார். காஷ்மீர் பிராமண பண்டிட் அகதிகளுக்காக அழுது கண்ணீர் வடிக்கும் பிராமண அன்பரே! உங்கள் தமிழ் சூத்திர,பஞ்சமர்,சண்டாள சகோதர ஹிந்துக்கள் உடல் இழந்து,உறவு அறுந்து, உடமை இழந்து பஞ்சைப் பாராரீகளாக கண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறார்களே! அவர்களுக்காக நீங்கள் நீலிக் கண்ணீராவது வடித்ததுண்டா?
    நீங்கள் நீட்டி முழக்கும் ஹிந்து சனாதன தர்மம் யாருக்கு பாடு படுகிறது? தேவ பாஷை பேசும் கனபாடிகள் சமூகத்திற்கு மட்டும் தானா? நீச பாஷை சூத்திர ஹிந்துக்களுக்கு இல்லையா?
    //ஸ்ரீ வீர சாவர்க்கர் இறந்தது சமணம் மற்றும் மற்றைய ஹிந்து சமய வழி முறைகளில் ஏற்கப்பட்ட உயிர்த் தியாகமே.தற்கொலையால் அல்ல.// நண்பரே! ஹிந்து சமய சடங்குகளில் நம்பிக்கையில்லாமல் நாத்திகராகவே வாழ்ந்தவர் சாவர்க்கர்.தன் உயிரை தானே போக்கிக்கொண்டவர்.அவர் இறந்ததற்க்குப்பின் அவரை ஹிந்துவாக மதம் மாற்றுவது நீங்கள்.மிசினரிகள் கூட உயிருள்ளவர்களை மட்டுமே மதம் மாற்றுகிறார்கள் இறந்தவர்களையே மதம் மாற்றும் திறமை உங்களிடம் உள்ளது.
    நான் உங்களுக்கு ஓர் உதவி செய்கிறேன்.இனி எவரேனும் சாவர்க்கர் மரணம் பற்றிக்கேட்டால்,” அந்தக்கால தமிழ் மன்னர்கள் மரபுப்படி, கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் போன பாதையில் “வடக்கிருந்து” உயிர் துறந்தார்.” என்று கூறி விடுங்கள்.பிரச்சினை முடிந்தது.”அரை டவுசர்” ஒரு அடையாள குறியீடாக சொல்லப்பட்டதுதானே தவிர அதில் எள்ளளவும் எள்ளல் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

  25. Avatar
    paandiyan says:

    திரு கிருஷ்ணகுமார்க்கு நன்றி , குற்றச்சாட்டு கடினமானது என்பதால் வார்த்தைகளில் கடினம். திரும்ப திரும்ப ஒர மாதரியான குற்றச்சாட்டு இங்கு வைக்கபடுகின்றது . நான் ஆதாரம் கேட்டதற்கு மேல உள்ள பதிலை பாருங்கள். ஒரு நாட்டு விடுதலைக்காக போராடியவருக்கு இதுவா மரியாதை. மன்னிப்பு கடிதம் கொடுத்தால்தான் என்ன. அது என்ன பெரிய கோழைதனமா? போர்களத்தில் புத்திசாலிதான் வேண்டும தவிர அசட்டு வீரம் இல்லை. காந்தியை குறை சொல்வது அவரின் நவகாளி யாத்திரை மற்றும் நேரு குடும்பம் அவரின் தியாகத்தை வைத்து “பணம்” அறுவடை பண்ணுவது. நீங்கள் கோட்சவாக இருந்து அவரின் செயலை படித்து பாருங்கள் – உங்களுக்கு கண்டிப்பாக அவர் ஒரு ஹீரோ வகை தெரிவார் . அப்படி தெரிவார் என்பதற்காக யாரும் படிக்காமல் இருக்கவேண்டாம். மற்றபடி கிருஷ்ணகுமார் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும். அவரின் அனுபவம் எனக்கு ஒரு நல்ல பாடமாக, அனுபவமாக அமையும்.

  26. Avatar
    ஷாலி says:

    என்ன? ஸ்ரீ க்ருஷ்ணஜி, மன்னிப்பு கடிதத்தில் மீண்டும் மனம் மாறிய மைந்தன் ஆக மாறிவிட்டீர்களே! அன்று அரசவை பொற்கொல்லனின் பேச்சைக்கேட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் மதிமயங்கி வீழ்ந்தான்.இன்று நீங்களும் நமது பாண்டியனார் பேச்சைக்கேட்டு பல்டி அடித்துவிட்டீர்களே!
    // அன்றைய அந்தமான் வாசம் எப்படி என்று குறைந்தபட்சம் கூட படிக்காதவர்கள் இன்று கருத்து சொல்வது எளிது.// //மிகவும் அருங்கருத்து வழங்கிய ஸ்ரீ பாண்டியன் அவர்களுக்கு நன்றி!// திரு.பாண்டியன் கருத்துப்படி அன்றைய வெள்ளை அரசாங்கத்தில் இந்திய சிறைச்சாலைகளை விட மிககொடுமையான சிறைச்சாலை அந்தமான் தீவாந்திர சிறை என்று தெரிகிறது.அதைப்பற்றி இன்று கருத்து சொல்வது சரி அல்ல.அந்தமான் சிறையைப்பற்றி அன்றே 1908-1912 சொல்லப்பட்ட கருத்தை திரு.க்ருஷ்ண-பாண்டியன் ஏற்றுக்கொள்வார்கள் தானே. உண்மை நிலவரத்தைப் பார்ப்போம்.
    ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் வழக்கறிஞர்.வெள்ளை அரசுக்கு விரோதமாக மக்களை தூண்டியதாக கைது செய்யப்படுகிறார்.இவருக்கு இரட்டை ஆயுள் 40 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது.கோவை சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.சிறையில் பல கொடுமைகள் அவருக்கு செய்யப்படுகிறது.அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் படாதபாடு படுகிறார். இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கு மனுப்போடுகிறார்.என்ன மனு? வீர சாவர்க்கரின் மன்றாட்ட மன்னிப்பு மனுவா? இல்லை அய்யா இது வேறு மனு. தன் தண்டனைக்கேற்ப தன்னை அந்தமான் தீவாந்திர சிறைக்கு அனுப்புமாறு வைஸ்ராய்க்கு எழுதுகிறார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டு வேதனையுற்ற மனைவி மீனாட்சி அம்மாள், தன் கணவரை தமிழ்நாட்டு சிறைகளில் வைத்து கொடுமைப்படுத்துவதை விட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுச்செய்தார். ஒரு முறை சிறை அதிகாரி அவரிடம் வந்து,”தாங்கள் சிறை அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டால் தண்டனைக் காலம் குறையும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்று கூறியும் அதை ஏற்க மறுத்தார்.இந்த சுதந்திர போராட்ட மாவீரன் யார் தெரியுமா? அவர்தான் சிறையில் செக்கிழுத்த செம்மல்.கப்பலோட்டிய தமிழன் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை வ.உ.சி. அந்தமான் சிறையை விட்டு வெளியேற மன்னிப்பு மனுப்போட்டவர்களை தாங்கிப்பிடிக்க இன்று ஒரு கூட்டம் உள்ளது.ஆனால் அந்தமான் சிறைக்குப்போக மனுப் போட்ட வீரத் தம்பதிகளை மறந்து போன, மரத்துப்போன தமிழர்கள் கூட்டம் இங்கு மட்டுமே உள்ளது.இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும் திரு.பாண்டியன் கூறும் அன்றைய அந்தமான் வாசம். நாம் இன்று ஸ்ரீமான். க்ருஷ்ண-பாண்டியனின் சுதந்திர ஹிந்துஸ்தானில் வாழ வேண்டியிருப்பதால் ஸ்ரீ வீர சாவர்க்கரின் மனுவை ஏற்றுக்கொள்வோம். அடிமை இந்தியாவில் எழுதிய வ.உ.சி மனுவை மறுதளிப்போம். “வீரம்..வீரம்…மேலும் வீரம்..கொஞ்சம் வாழ்க்கை”.அதுதான். பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர். இந்த வீரத்தின் விலை நிலம் தந்த பரிசுதான் மாலேகான் கூரையில் கொள்ளிவைத்த கோட்சேவின் உத்தம புத்திரி ஹிமானி சாவர்க்கர்.

  27. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    காந்தியடிகளின் மரணத்தை முன்னிறுத்தி மத ஒற்றுமையை விதந்தோதுவதாக எழுதப்பட்ட வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமை மற்றும் மட்டற்ற ஹிந்து மத வெறுப்பு போன்ற விஷயங்களுக்கு ஏன் இடமளிக்கப்பட்டது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது நான் சமர்ப்பித்துள்ள இந்த வ்யாசம்.

    வ்யாசத்தில் முக்யமாக விசாரிக்கப்பட வேண்டியவை இந்தக்கருத்துக்களும் நான் இவற்றை முன்னிறுத்தி வ்யாசத்தில் பதிவு செய்த அதனுடன் சார்ந்த மற்ற விஷயங்களும்.

    \//ஏசுபிரானை சரித்திரத்தின் பாற்பட்டு ஏற்க இயலாது.// என்று கூறும் நீங்கள் சாவர்க்கரின் மறு பக்கத்தை சரித்திர உண்மையாக நாம் கூறும்போது வெறுப்பின் வெளிப்பாடக தாங்கள் கருதுவது சரியல்ல.\

    அன்பர் ஷாலி,

    நான் வாசித்தறிந்த வரை யஹூதிய பாகனிய நூற் சான்றுகளில் ஏசுபிரானின் சரித்ர இருப்புக்கு ஆதாரம் இல்லை.

    இந்தச் சான்றுகளிலோ அல்லது வேறு ஏதுனும் சான்றாதாரங்கள் யாரேனும் கொடுத்தால் நான் மகிழ்வுடன் பரிசீலனை செய்வேன்.

    க்றைஸ்தவர்கள் ஏசுபிரானை தேவமைந்தன் என வணங்குவதை நான் போற்றியுள்ளேன். நான் கேழ்விக்கு உட்படுத்துவது ஏசுபிரானின் சரித்ர இருப்பை மட்டிலும்.

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் பொய் சொன்னார், சாக்ஷிகள் பொய் சொன்னார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் வைக்காத வரை அவர் கூற்றுகள் ஆதாரத்தின் பாற்பட்டு அல்ல மாறாக வெறுப்பின் பாற்பட்டு என்பது விஷயம். வெறுமனே ஆங்க்லத்தில் copy paste செய்து என்ன ப்ரயோஜனம். சாவர்க்கர் பொய் சொன்னதற்கு வழக்காவணங்கள் சார்ந்த ஆதாரம் எங்கே? ஏசுபிரான் சம்பந்தப்பட்ட வ்யாசத்திலும் சான்றுகளே சாராது தன் நம்பிக்கையை மட்டும் சார்ந்து தடம் புரளும் விவாதமும் அன்பர் அவர்கள் செய்தார்கள் என நினைவு கூர்கிறேன்.

    வ்யாசத்திலேயே ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமான் சிறையிலிருந்து வெளிவர மன்னிப்புக்கடிதம் கொடுத்தது ப்ரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது வ்யாசத்தின் வெளியே விசாரிக்கப்படும் விஷயம். சாவர்க்கரின் வாழ்க்கையில் உள்ள நிறைகளையும் நான் பார்க்கிறேன். எப்படி காந்தியடிகளின் வாழ்க்கையை நிறை குறைகள் உள்ளதாகப்பார்க்கிறேனோ அப்படி.

    \நீங்கள் சிங்கள பெருமாள் பக்தர் ராட்சச ராஜ பக்சேவிற்கு அரசு மூலமாக ஆதரவினை அள்ளி வழங்கினீர்கள்.\

    எங்கே? எப்போது? இது முக்யமான விஷயம் தான். ஆனால் வ்யாசத்தின் பேசுபொருள் அல்ல. இவ்விஷயம் சார்ந்து விவாதிக்கும் போது விவாதம் செய்வோம்.

    \காஷ்மீர் பிராமண பண்டிட் அகதிகளுக்காக அழுது கண்ணீர் வடிக்கும் பிராமண அன்பரே!\

    காஷ்மீர பண்டிதர்களின் நிலையில் எனக்கு வ்யாகூலம் உண்டு. ஆனால் வ்யாசத்தில் இது பற்றிப் பேசப்படவில்லை. வ்யாசத்தின் பேசுபொருள் அல்ல அது. பின்னர் அது பற்றி பேசலாம்.

    கருத்துப்பதிபவர்களின் ஜாதியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்தவும். காஷ்மீர பண்டிதர்களுக்காக ப்ராம்மணர் மட்டிலும் தான் கண்ணீர் வடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? அது தவறில்லை?

    ஹிந்து இயக்கங்களை ஸ்ரீமான் ஜெயபாரதன் தூஷித்துள்ளார் (குறிப்பாக ஹிந்து மஹாசபையை) அந்த இயக்கத்தைச் சார்ந்த பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்கள் காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தில் இருந்து பிரியாதிருக்க ஆற்றிய பணிகள் பகிரப்பட்டுள்ளது வ்யாசத்தில். மேலும் அவர் பற்றி மற்ற விஷயங்களை பாகம் இரண்டில் பார்ப்போம்.

    \உங்கள் தமிழ் சூத்திர,பஞ்சமர்,சண்டாள சகோதர ஹிந்துக்கள் உடல் இழந்து,உறவு அறுந்து, உடமை இழந்து பஞ்சைப் பாராரீகளாக கண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறார்களே! அவர்களுக்காக நீங்கள் நீலிக் கண்ணீராவது வடித்ததுண்டா?\

    நான் எனது ஹிந்து மத தலித் சஹோதரர்களுக்காக — குறிப்பாக உத்தர பாரதத்தில் இருக்கும் துப்புறவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள எனது மதிப்பிற்குறிய வால்மீகி சஹோதரர்களின் வாழ்வு முன்னேற்றத்தில் பங்களித்துள்ளேன். கண்ணீர் வடித்ததில்லை. ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களது வாழ்வில் ஒரு முக்யமான பங்களிப்பு தலித் சஹோதரர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு. ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அதை கௌதம புத்தரின் பங்களிப்புக்குக் குறையாதது என போற்றியுள்ளார்.

    \நீங்கள் நீட்டி முழக்கும் ஹிந்து சனாதன தர்மம் யாருக்கு பாடு படுகிறது? தேவ பாஷை பேசும் கனபாடிகள் சமூகத்திற்கு மட்டும் தானா? நீச பாஷை சூத்திர ஹிந்துக்களுக்கு இல்லையா?\

    சனாதனம் ஹிந்து மதத்தின் ஒரு அங்கம் மட்டும். RSS இயக்கத்தில் பாடப்படும் சம்ஸ்க்ருத பாடலின் மூலத்தையும் அதன் தமிழ் மொழி சாரத்தையும் கொடுத்துள்ளேன். ஹிந்து மதத்தில் சனாதன தர்மத்தைத் தவிர மிகப்பல சமயங்கள் உண்டு அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் வெட்டியும் கருத்துக்களுடன் ஒன்று பட்டும் வேறுபட்டும் உறவாடுகின்றன. இது சம்பந்தமாக சில விஷயங்கள் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம். இது பற்றி வ்யாசத்தை மீண்டும் வாசிக்கவும்.

    பின்னும் சனாதன தர்மத்தில் நான் இங்கு முன்னமே பகிர்ந்த படிக்கு உத்தர பாரதத்தில் வேதக்கல்வி அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண், பெண் என பால் வேறுபாடு இன்றி. ஜாதி வித்யாசங்களன்றி. ஏன் மத வித்யாசங்களும் அன்றி. இங்கு வேறு ஒரு வ்யாசத்தில் கருத்துப்பகிர்ந்த யதிவரரான ஸ்வாமி வேதநிஷ்டானந்த ஸரஸ்வதி அவர்கள் தக்ஷிண பாரதத்தில் இவ்விதம் தொண்டாற்றும் இயக்கங்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

    பாஷை சம்பந்தமாய் எனக்கு எந்த ஏற்பு மறுப்பும் இல்லை. தினமும் நான் நாலு மொழிகளில் புழங்கி வருகிறேன்.

    \ஹிந்து சமய சடங்குகளில் நம்பிக்கையில்லாமல் நாத்திகராகவே வாழ்ந்தவர் சாவர்க்கர்.தன் உயிரை தானே போக்கிக்கொண்டவர்.அவர் இறந்ததற்க்குப்பின் அவரை ஹிந்துவாக மதம் மாற்றுவது நீங்கள்.\

    ஹிந்து மதத்தில் பல சமயங்கள் உண்டு. சமய சடங்குகளில் நம்பிக்கையற்றவரும் ஹிந்துவே. கடவுள் நம்பிக்கையற்றவரும் ஹிந்துவே. இரண்டாம் பாகத்தில் மேலும் இது பற்றிப் பார்ப்போம். ஸ்ரீ வீர சாவர்க்கர் ஹிந்துக்குடும்பத்தில் பிறந்தவர். நாஸ்திகர். அவரை ஹிந்து அல்ல என்று சொல்வது உங்கள் தனிப்பட்ட தவறான ஹிந்து மதம் மற்றும் அதில் அடங்கிய சமயங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாத படிக்கான கருத்து (நாஸ்திகமும் அதில் ஒன்று அங்கம் தான்). எனக்கு அதில் உடன்பாடு அல்ல.

    வடக்கிருத்தல் என்ற தமிழ்ப்பதம் என் நினைவில் இல்லை. ப்ராயோபவேசத்திற்குச் சரியான தமிழ்ப்பதம். மிக்க நன்றி அன்பர் ஷாலி அவர்களே. தற்கொலை வேறு வடக்கிருத்தல் வேறு. மரபின் பாற்பட்டு வடக்கிருத்தலை தற்கொலை என ஏற்க முடியாது. மரபையே மறுப்பவர்கள் பார்வையில் இது தற்கொலை என்று படலாம்.

    \என்ன? ஸ்ரீ க்ருஷ்ணஜி, மன்னிப்பு கடிதத்தில் மீண்டும் மனம் மாறிய மைந்தன் ஆக மாறிவிட்டீர்களே! அன்று அரசவை பொற்கொல்லனின் பேச்சைக்கேட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் மதிமயங்கி வீழ்ந்தான்.இன்று நீங்களும் நமது பாண்டியனார் பேச்சைக்கேட்டு பல்டி அடித்துவிட்டீர்களே!// அன்றைய அந்தமான் வாசம் எப்படி என்று குறைந்தபட்சம் கூட படிக்காதவர்கள் இன்று கருத்து சொல்வது எளிது.// //மிகவும் அருங்கருத்து வழங்கிய ஸ்ரீ பாண்டியன் அவர்களுக்கு நன்றி!//

    அன்பர் ஷாலி, இரு வேறு விஷயங்கள். ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமான் சிறையிலிருந்து வெளிவர கொடுத்த மன்னிப்புக் கடிதம் எனக்கு இது வரை நெருடலான விஷயம் விஷயம் தான். ஆனால் அந்த ஒற்றை விஷயத்தை மட்டும் முன்னிறுத்தி அவரது வீரத்தையே மறுதலிப்பது மற்றொரு விஷயம். இது கருத்துச் சமநிலையற்றது என்பது என் அபிப்ராயம். தாங்கள் எனது கருத்திலிருந்து மாறுபடலாம்.நான் மேலும் வாசித்தறிந்தே இது பற்றி முடிவெடுப்பேன். நீங்கள் கொடுத்துள்ள தகவல்களும் எனக்கு முக்யமானவை.

    \ காந்தியை குறை சொல்வது அவரின் நவகாளி யாத்திரை மற்றும் நேரு குடும்பம் அவரின் தியாகத்தை வைத்து “பணம்” அறுவடை பண்ணுவது.\

    ஸ்ரீ பாண்டியன், காந்தியடிகளின் பல கருத்துக்களில் எனக்குக் கடும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அதில் ஒன்று நவகாளிக் கலகமும். பலவற்றை நான் வ்யாசத்தில் பட்டியலிட்டும் உள்ளேன். எனது மிக முக்யமான காந்தியடிகளுக்கு எதிரான கருத்து தேசப்பிரிவினை. காந்தி பக்தரான ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் கூட இந்த விஷயத்தில் ஒன்று படுகிறார் பாருங்கள்.

    ஆனாலும் காந்தியடிகளின் ராம பக்தியில் அவரது எளிமையில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பதை நான் மறுக்க மாட்டேன்.

    ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜியின் மரணத்தில் பண்டித நேருவின் பங்கு பற்றி ஸ்ரீ அடல் பிஹார் வாஜ்பாய் அவர்களின் கருத்தும் விசாரணைக்கு மறுத்த நேருவின் அடாவடித்தனமும் பற்றி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார் எனத் தெரியவில்லை.

  28. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜியின் மரணத்தில் பண்டித நேருவின் பங்கு பற்றி ஸ்ரீ அடல் பிஹார் வாஜ்பாய் அவர்களின் கருத்தும் விசாரணைக்கு மறுத்த நேருவின் அடாவடித்தனமும் பற்றி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார் எனத் தெரியவில்லை.///

    இது இங்கே தர்க்கத் தலைப்பு இல்லை. இதனை உங்கள் புதுத் தலைப்பாக எழுதுங்கள் திண்ணைக்கு.
    வட்ட மையத்தை விட்டு வெளியே பாண்டியன் போல் விட்டத்துக்குத் தாவ வேண்டாம்.
    சி. ஜெயபாரதன்

  29. Avatar
    paandiyan says:

    ஒருவர் இருந்த பின்பும் அவர் வாழ்ந்த , நடந்த நல்லவாழ்க்கையில் உலகம் நடக்கும். நடக்கவேண்டும். காமராஜ் என்று பெயரை வைத்து இங்கு யாரும் சுருட்டவில்லை, ராஜாஜி, போஸ், கக்கன் இன்னும் பல பல . அனால் காந்தியை பாருங்கள் , அவர் குடிக்கவில்லை ஆனால் அவர் பெயரை வைத்துகொண்டு வெளிநாட்டு ஏற்போர்டில் ஒருவர் அடைந்துகிடந்தார் , அவரின் நவகாளி மற்றும் தேர்தல் விளையாட்டுதான் இன்று நாட்டில் கோடிகளை சுரட்ட ஒரு பெரிய வாய்பாக இருகின்றது, இன்னும் இருக்கபோகின்றது. ஒரு தவறான சித்தாந்தத்தை விதைத்து போனவர் அவர். தெரியமால் பண்ணவில்லை, சொல்லி சொல்லி மாய்ந்தார்கள் கூட இருந்தவர்கள், ஆனால் கேட்டரா ? தன்னுடைய பிரபலமான பேரை வைத்துகொண்டு அதை வைத்து பல நேர்மையனர்வளை வாயடைக்க செய்துவிட்டார்.

  30. Avatar
    ஷாலி says:

    //இன்னமும் என்னைப்போன்றே பலருடைய உள்ளங்களிலும் கனன்று கொண்டிருக்கும் விஷயம் அகண்ட ஹிந்துஸ்தான்.ஆகவே தேசப்பிரிவினை என்பது பெரும்பாலான ஹிந்துஸ்தான் மக்கள் மனதில் சுமக்கும் துன்பச் சுமை,நேபாளம்,தென்னிலங்கை போன்ற பகுதிகள் ஹிந்துஸ்தானத்தில் இணைய வேண்டும் என்பது மிகப்பல ஹிந்துஸ்தானியரின் விருப்பம்.// தென்னிலங்கையை அதாவது தமிழிழத்தை அகண்ட ஹிந்துஸ்தானில் சேர்க்க ஆசைப்படுகிறார் திரு.க்ருஷ்ணஜி, இன்றைய தமிழிழ ஹிந்துக்களின் துன்ப துயரங்களை எழுதினால்//வ்யாசத்தின் பேசு பொருள் அல்ல,பின்னர் அதுபற்றிப் பேசலாம்.//என வசதியாக நழுவுகிறார்.அவர் ஆசைப்படும் அகண்ட ஹிந்துஸ்தானில் தென்னிலங்கை ஹிந்துக்கள் நலன் மறுக்கப்படுவதேன்? ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதுபோல்,வெறும் நாடு பிடிக்கும் ஆசை தானா? இல்லை அனைவரும் சூத்திர வர்ணம் என்ற அலட்சியமா? //.கருத்துப் பதிபவர்களின் ஜாதியைப் பற்றி பேசுவதை தவிர்க்கவும்.// ஸ்ரீ க்ருஷ்ணாஜி! நான் எங்கே ஜாதியப்பற்றி எழுதினேன்? ப்ரம்மனின் முகத்தில் பிறந்த முதல் வருண பிராமணர் என்று சொல்வதில் என்ன தவறு? வருணம் வேறு ஜாதி வேறு என்று நான் சொல்லி தெரிந்துகொள்ளும் நிலையிலா இருக்கிறீர்கள்?வருணத்தின் உட்பிரிவு தானே ஜாதி.உதாரணமாக,நாலாவது வருணத்தின் உட்பிரிவில் உள்ள தாழ்ந்த சாதி,பறையர்,பள்ளர்,சக்கிலியர்.மகாத்மா பாஷையில் ஹரிஜன்.
    //உத்தர பாரதத்திலிருக்கும் துப்புரவு தொழிலில் ஈடுபட்டுள்ள எனது மதிப்பிற்குரிய வால்மீகி சகோதரர்களின் வாழ்வு முன்னேற்றத்தில் பங்களித்துள்ளேன்.// என்ன பங்கு? அவர்களுடன் சேர்ந்து மனிதக்கழிவுகளை அகற்றி பொதுசேவை செய்தீர்களா?கண்டிப்பாக இருக்காது.ஏதோ அர்ச்சனை தட்டில் சில்லறையை அள்ளிப்போட்ட பங்கு.மற்றபடி 49 கோத்திரத்தில் எதிலாவது சேர்த்து விட்டு முன்னேற்றியது உண்டா?
    //உத்தர பாரதத்தில் வேதக்கல்வி அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்,பெண், என பால் வித்தியாசமின்றி ஜாதி வித்தியாசங்களன்றி..// இது உண்மையென்றால் உங்கள் மதிப்புக்குரிய மகரிஷி வால்மீகி தனது உத்தர காண்டத்திலே எழுதியதை எதிர்க்கிறீர்களா? நாலாம் வர்ணத்தவன் சம்பூகன் தவம் செய்வதைக்கண்ட ஸ்ரீ இராமன் அவன் தலையை ஒரே வெட்டில் வெட்டியது கண்டு வானிலிருந்த தேவாதி தேவர்கள் பூமாரி சொரிந்து,”இராமா! அற்புதமான காரியம் செய்துவிட்டாய்! அதர்மத்தை ஒழித்து விட்டாய்!” சூத்திரனை கொன்று பிராமணப் பிள்ளைக்கு உயிர் கொடுத்த தர்மத்தை ஆதரிக்கிறீர்களா? அருள்கூர்ந்து எழுதுங்கள்

  31. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீ ஜெயபாரதன்,

    வ்யாசத்தின் இந்த பாகத்தில் பதியப்பட்ட கருத்துக்கள் மற்றும் தங்களது உத்தரங்களில் தாங்கள் பகிர்ந்த கருத்துக்கள் பல தங்கள் கருத்துக்களில் உள்ள தகவற்பிழை, கருத்து நேர்மையின்மை, கருத்துச் சமநிலையின்மை போன்றவற்றை சுட்டுகின்றன.

    பெரும் தமிழறிஞறான தாங்கள் எனது மொழிநடையை சாடுவதை நான் குணமாகவே காண்கிறேன். குற்றமாக அல்ல. ஆயினும் மூத்த தமிழ் எழுத்தாளரான தங்களிடமிருந்தும் கருத்துப் பகிரும் அன்பர்கள் பலரிடமிருந்தும் பண்பான மொழி சார்ந்து கருத்துரையாடலை எதிர்பார்க்கிறேன்.

    அடுத்த பாகம் போகுமுன் விஷயங்களை sum up செய்து கீழே கொடுத்துள்ளேன்.

    தாங்கள் வெறும் copy paste venture ல் இறங்காது தெளிவான குறிப்பான சான்றுகள் ஆதாரங்கள் அளித்தால் தங்கள் கருத்துக்களை பரிசீலனைக்கு ஏற்கிறேன். இல்லையெனில் தங்கள் கருத்துக்கள் பிழையானவை என மேற்செல்லுகிறேன்.

    1. ஏசுபிரானின் சரித்ர இருப்பை சுட்டும் யஹூதிய அல்லது பாகனிய அல்லது வேறு சரித்ர ஆவணங்கள் இருப்பின் பகிரவும். Please avoid copy pasting urls.

    2. பூஜ்ய ஸ்ரீ சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்தமைக்கு ஆவண ஆதாரங்கள் ஏதும் முன்வைக்க முடியுமா?

    Please do not repeat, “27 Feb 1966 – Cremation at the electric crematorium, the final salute given by 2500 uniformed swayamsevaks of the RSS and millions of admirers across the country”. That fact has already been mentioned in my article.

    3. \வீர சாவர்க்கர் பொய் சொல்லக் கொஞ்சமும் அஞ்சாத மகா வீரர். தீரர் ! காந்திஜி கொலை வழக்கில் பொய் சொல்லித் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலி.\

    பூஜ்ய ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் ஹிந்துஸ்தான நீதிமன்றங்களால் காந்தியடிகளின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பின்பும் தாங்கள் காழ்ப்பு மிக சாவர்க்கர் அவர்கள் பொய்கள் சொல்லி காந்தி கொலைவழக்கில் இருந்து விடுபட்டார் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த வழக்கிலிருந்து வெளிவர சாவர்க்கர் அவர்கள் சொல்லிய பொய்கள் யாவை அதைச் சுட்டும் ஆவணங்கள் யாவை என்பதை தாங்கள் முன்வைக்காது ஒரு உரலை சுட்டியுள்ளீர்கள். ஸ்ரீ சாவர்க்கர் அதில் பொய் சொன்னதாகக் காணக்கிட்டவில்லை. க்ஷமிக்கவும். தங்கள் கூற்றுக்கு சந்தேகத்திற்கப்பாற்பட்டு வலு சேர்க்கும் சான்றுகள் பகிர முடியுமானால் பகிரவும். இல்லையெனில் இது மற்றொரு மட்டற்ற வெறுப்பின் பாற்பட்ட பொய்ப்பரப்புரையாக மட்டிலும் ஏற்கப்படும்.

    4.\காந்திஜி கோட்சேவால் கொலை செய்யப்பட்ட மோது, வீர சாவர்க்கர் கண்ணீர் விட்டாரா? வருந்தினாரா ? மகிழ்ந்தாரா ? அல்லது எங்காவது இரங்கல் வாசகம் எதுவும் எழுதினாரா ? \காந்திஜி இறந்ததைக் கொண்டாடியவர் வீர சாவர்க்கர்.\

    எவ்வளவு வன்மமிகு காழ்ப்பின் பாற்பட்ட கருத்துக்கள்.ஏசுபிரான் வ்யாசத்தில் தாங்கள் செய்தது போல் மிகத் தவறான copy paste venture ல் தொடர்கிறீர்கள் என்பதற்கு இது மற்றொரு சான்று. தாங்கள் சமர்ப்பிக்கும் உரல்களை தாங்கள் வாசிப்பதுண்டா அல்லது வெறும் copy paste மட்டும் செய்கிறீர்களா என்பது இறைவனுக்கே வெளிச்சம். தாங்கள் பகிர்ந்த உரலை வாசித்து அதில் கடைசீ Annexure ல் கொடுத்துள்ளதை பகிர்கிறேன். ஏசுபிரானின் மலைப்ரசங்கத்தை சுட்டும் மற்றும் வாய்க்கு வாய் காந்தியடிகளைச் சுட்டும் ஒரு அன்பரிடமிருந்து மட்டற்ற வெறுப்பின் பாற்பட்ட பொய்ப்பரப்புரைகள் மனோவ்யாகூலத்தை அளிக்கின்றன என்றால் மிகையாகாது.

    ANNEXURE D.

    A cutting from the “Times of India”, Bombay dated 7th February 1948 vide Sec.29, page 55 above.

    MR. SAVARKAR’S VIEW.

    In a statement issued on February 4, the day previous to his arrest, Mr. V.D. Savarkar, former President of the Hindu Mahasabha said : “The statement of the President and the joint statement of some members of the Working Committee at Delhi have done well in expressing authoritatively the feelings and in clearing the position of the Hindu Mahasabha as a democratic and public organization as regards the gruesome assassination of Mahatma Gandhi. I too as one of the Vice-presidents of the Mahasabha subscribe to their feelings and condemn unequivocally such fratricidal crime whether they are perpetrated by individual frenzy or mob fury.

    பூஜ்ய ஸ்ரீ சாவர்க்கராக இருக்கட்டும் அன்பர் ஈவேரா அவர்களாக இருக்கட்டும் காந்தியடிகளாக இருக்கட்டும் – ஒரு அன்பரை குற்றம் சாட்டுமுன் தகுந்த சான்றாதாரங்களுடன் குற்றம் சாட்டுங்கள். பொய்யான குற்றஞ்சாட்டல்கள் குற்றம் சாட்டுபவரை தரம் தாழ்த்துமேயல்லாது பொய்க்குற்றம் சாட்டப்படும் அன்பர்களை தரம் தாழ்த்தாது.

    5. க்றைஸ்தவ மதத்தை பேணும் அன்பர்களை நான் வ்யாசத்தில் வெளிப்படையாகப் போற்றி மிகத் தெளிவான வாசகங்களால் க்றைஸ்தவ மத மேட்டிமையை மட்டிலும் நான் எதிர்த்த பின்பும் நான் க்றைஸ்தவ மத இருப்பையே எதிர்த்ததாக கூறியுள்ளீர்கள். என் மொழிநடையில் குறை காணப்படினும் கருத்துக்களை மிகக் கவனமாகவே நான் பகிர்ந்துள்ளேன். க்றைஸ்தவ மத இருப்பை நான் எங்கும் சாடியதாய் எனக்கு நினைவில்லை. பின்னும் தாங்கள் தெளிவாகச் சுட்டினால் நான் என் பிழையை உணர்வேன். அவ்வாறு சுட்டவில்லையெனில் தங்கள் கருத்து பிழையானது என்பதாகும்.

    ஒரு மதத்தை ஏற்க மறுக்கும் கோடானுகோடி மனுஷ்யர்களை சிலுவைப்போர்கள் வன்முறைகள் பித்தலாட்டங்கள் இத்யாதிகள் மூலம் பலவந்தமாக அம்மதத்தை ஏற்கச்செய்தலை தாங்கள் முறையெனக் கருதுகிறீர்களா? Crusade, Inquisition மற்றும் சுவிசேஷக்கூட்டங்கள் க்றைஸ்தவ ப்ரார்த்தனைகளால் மானுஷ்யமாய் சாதிக்க முடியாத விஷயங்களை சாதிக்க முடிவதாய் சாதிப்பமை இவையெல்லாம் க்றைஸ்தவ மத மேட்டிமையைப் பார்த்து பரிஹசிக்கும் விஷயங்களாய் தாங்கள் பார்க்கவில்லையா?

    6. \///ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜியின் மரணத்தில் பண்டித நேருவின் பங்கு பற்றி ஸ்ரீ அடல் பிஹார் வாஜ்பாய் அவர்களின் கருத்தும் விசாரணைக்கு மறுத்த நேருவின் அடாவடித்தனமும் பற்றி ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார் எனத் தெரியவில்லை.///இது இங்கே தர்க்கத் தலைப்பு இல்லை. இதனை உங்கள் புதுத் தலைப்பாக எழுதுங்கள் திண்ணைக்கு.\

    உங்கள் வ்யாசத்தில் காந்தியடிகளின் மரணத்தை முன்னிறுத்தி தாங்கள் பரப்புரை செய்த மட்டற்ற ஹிந்து வெறுப்பை ஹிந்து இயக்கங்களின் பாற்பட்ட வெறுப்பை மறுக்குமுகமாய் சமர்ப்பிக்கப்பட்டது இந்த வ்யாசம். ஹிந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் தேசத்திற்கு அளித்த பங்கினை பகிருமுகமாக. ஹிந்து இயக்கத் தலைவர்களை மாற்று இயக்கத்தினர் எப்படி கொடுமைப்படுத்தினர் என்பதற்கு ஒரு சான்றாக பண்டித ஷ்யாம ப்ரசாத முகர்ஜி அவர்கள் காஷ்மீரத்திற்காகச் செய்த பலிதானமும் அதனைத் தொடர்ந்த மாற்றங்களும் தாங்கள் மிக உயர்வாகப் போற்றி வரும் பண்டித நேரு அவர்களின் அடாவடிச் செயலும் பகிரப்பட்டன. இவ்விஷயம் வ்யாசத்தின் கருப்பொருளினின்று வேறானதன்று. எனது வ்யாசத்தின் கடைசீ பத்திகளில் விவாதிக்கப்பட்டதும் கூட.

    ஸ்ரீ முகர்ஜி அவர்களை முனைந்து பாழடைந்த வீட்டில் கைது செய்தமையும் அவரது சந்தேஹாஸ்பத மரணத்திற்குப் பின் முனைந்து ப்ரேத பரிசோதனையை அடாவடியாக நடத்தாமையும் விண்ணப்பங்கள் மன்றாடல்கள் இவற்றுக்குப்பின்னும் நடந்த நிகழ்வுகளை விசாரணைக்கு உட்படுத்தாமையும் பண்டித நேருவின் அடாவடித் தனத்தினை பறைசாற்றுகின்றன.

    தங்களது மௌனம் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் பற்றிய தங்களது வெறுப்பை மட்டும் பறைசாற்றும்.

    \வட்ட மையத்தை விட்டு வெளியே பாண்டியன் போல் விட்டத்துக்குத் தாவ வேண்டாம்.\

    விட்டத்துக்குத் தாவுதல் விலங்குகளின் செய்கை. மாற்றுக்கருத்துக் கொள்பவர்களின் கருத்தை பண்பான மொழி சார்ந்து இடித்துறைப்பமை மூத்தோர் செயல். வசவுகள் மூத்தோர் மொழியாகக் கூடாது. க்ஷமிக்கவும். ஸ்ரீ பாண்டியன் அவர்கள் சுடுசொல் பகிர்ந்த போது நான் அடைந்த அதே வ்யாகூலத்தை மீண்டும் அடைகிறேன்.

    பண்பான மொழியால் அன்புடன் கருத்துப் பகிர்வோம்.

    இந்த பாகம் சார்ந்து நான் மேலும் சொல்லக்கூடிய விஷயங்கள் ஏதுமில்லை.

    அன்புடன்
    க்ருஷ்ணகுமார்.

  32. Avatar
    paramasivam says:

    Mr Krishnakumaar states that Vedic education is being imparted to all people irrespective of castes.But,even in TN Govt run Vedic schools,Vedic teachers were assaulted only because they taught students from all castes.Those 207 archagar trainees are still struggling in the SC to vacate the stay against their appointment in TN temples.

  33. Avatar
    Indian says:

    Mr Jayabarathan so far had failed to provide any PRIMARY EVIDENCE to support his atrocious allegations against the great Veer Savarkar. Copy paste job will not be considered as hardcore evidence. That goes for personal opinions also. In Gandhi’s case,if VS was found to have lied in courts and was involved in conspiring with others to lie for him, then Mr Jayabarathan is honour bound to prove his allegations from court documents or official letters written by VS, etc. Repeating lies as nauseum shatters MR JB’s reputation as an unbiased commentator. If Veer Savarkar was released due to lack of evidence by the Supreme court and the Police, that is it then. NOT GUILTY. Period. I hope MR Jayabarathan gets this.

  34. Avatar
    Indian says:

    Now back to Veer Savarkar’s letter of apology to the British which enabled his release from the prison. This similar to tactics used in all wartime to achieve the final goal. In this case, it was to boot out the colonial British. I am sure Shally/ Swanapriyan can quote Quran or Hadiths on Taqiyya employed by the likes of Prophet Mohamed to justify lying to achieve an end. Yudhsithira lied to Drona on the battlefield to secure victory. Means used, however repulsive for a DHARMIC END are justified. This applies to Savarkar. He would not achieved anything for freedom while rotting away in jail.

  35. Avatar
    Indian says:

    This son of God was born to a Virgin mother on December 25th. He performed miracles in his lifetime and had twelve disciples. He was crucified at the end, only to raise after 3 days.
    Sounds very much like the life story of ( mythical) Jesus Christ, eh? Actually, this is the story of God Mithra of Persia, who predates Jesus Christ by 600 years! The Catholic Church simply copy pasted Mithra onto Jesus Christ, like some people do here! The myth now lives on.
    There is no historical Jesus Christ. As one Pope in the past SUPPOSED to have said ” The myth of Jesus Christ has served us well”

  36. Avatar
    Indian says:

    Mr Jayabarathan is continuing to make allegations without proof.It is tiring. In the same vein, I could call him a murderer without slightest evidence. In his book, why worry about inconvenient things like, onus of proof, primary evidence etc. Who needs them? If Mr Jayabarathan speaks, then that is it.There is no need for anything else. We all got to swallow whatever he chucks at us. Give us a break, Mr JB. Don’t kill us with your peculiar sense of humour.

  37. Avatar
    paandiyan says:

    //Veer Savarkar was a bloody Liar //
    எனக்கு என்னோவோ போர்டல் ஹிட் ஆக அட்மின் தான் இப்படி எல்லாம் வேறு பெயரில் கருத்து போட்டு உசுபேத்தி விடுகிறார்போல ஏன் என்றால் இதமாத்ரி response போட்டால் அது ப்ளாக் பண்ணபடுகின்றது . என்ன மாயை என்ன மாயை !!!!

  38. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஏசுநாதர் தந்தையின்றி ஒரு கன்னிக்குப் பிறந்தவர். குருடருக்குப் பார்வை கொடுத்தவர். செத்தவரை உயிர்ப்பித்தவர். முடவனை நடக்க வைத்தவர். பிற மதத்தினர் பைபிள் அறநூலில் இருக்கும் இவற்றை நம்ப வேண்டிய தில்லை. இவற்றை நம்பாதவரும் ஏசுநாதர் வரலாற்றில் வாழ்ந்ததை நிச்சயம் நம்பலாம்.

    இவற்றை பைபிள் நூலிலிருந்து வடிகட்டினாலும், அதிலுள்ள மற்ற வழிகாட்டு அறநெறிகள் பெரும்பான்மை உலக மக்களுக்கு நற்பாதை காட்டியுள்ளன.

    சி. ஜெயபாரதன்.

  39. Avatar
    Indian says:

    As usual, Mr JB is trying to shoot the messenger instead of addressing and answering his allegations on Savarkar. Why should it matter who I am? I am a Sanatana Dharmist and a patriotic Indian.

  40. Avatar
    admin says:

    அனைவரும் அவதூறு வார்த்தைகளை தவிர்க்க கோருகிறோம்

  41. Avatar
    புனைபெயரில் says:

    செத்தவரை உயிர்ப்பித்தவர். —> ஏசுநாதர் எனச் சொல்லப்படுபவர், இமயமலையில் அலைந்த போது அங்கு கற்றுக் கொண்ட சில சித்து வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அவரது தொண்டர் ஏன் அருவருக்கத்தக்க வகையில் அடுத்தவர்களை :”ஏசு”கிறாரோ…? முகமதியர்களும், கிறிஸ்துவர்களும் ஒரு ஏரியாவின் கஸின்பிரதர்ஸ்… அதில் ஏதாவது ஒரு கோஷ்டியில் ஏன் இந்தியராகியவர் இணைய வேண்டும்..? இவர்கள் டாவின்சி கோட், அல்லது “ஜீஸஸ் -தி டைனஸ்டி” புத்தகம் போன்றவற்றை படிக்கலாம்…

  42. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கிருஷ்ண பரமாத்மா, பாரதப் போரில் குதிரை ஓட்டியாக வந்து குருச்சேத்திரத்தில் அர்ஜுனனுக்கு வேத நூல் கீதை ஓதியதாக இந்துக்கள் நம்புவதில்லையா ? வியாச முனிவர்தான் கீதை எழுதியவர். கடவுள் தேரோட்டியாக வந்து போர்க்களத்தில் எழுதினாரா ?

  43. Avatar
    புனைபெயரில் says:

    ஜெயபாரதன், உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. நீங்கள் படித்த விஞ்ஞானம் இடுப்பு எலும்பை உடைத்தால் இன்னொரு ஜீவனை உருவாக்க முடியும் என்று சொல்கிறதா…? இல்லை குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை அலசுகிறதா..? இந்து மதக் கிளைக் கதையிலேயே, கன்னிப் பெண் தாயாகும் கர்ணன் கதை உண்டு. மெயின் மேட்டரில் கிறிஸ்துவ மதம் என்ன செய்தது என்று வாடிகன் லைப்ரேரி பொதுமக்களுக்கு திறந்து விட்ட போது நடந்த கதை அறியுங்கள்..

  44. Avatar
    Indian says:

    I am sorry to say this.With due apology, I over estimated intellectual capacity of Mr Jayabarathan.I can understand the reasons. Painted into a corner, he is just lashing out as he has to defend the indefensible. That include the Historicity of Jesus, the supposed lies and conspiracies of Veer Savarkar and the imaginary superiority of Christianity over other religions.
    Now, what could be his reason for this nauseating hatred of Hindu religion? Another modern Indian Sepoy of the West?!!

  45. Avatar
    புனைபெயரில் says:

    இந்தியன், தவறு உங்கள் மீது தான், இண்டலெக்சுவல் என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்க்கு தெரியவில்லை. ஜெயபாரதன் ஒரு மொழி பெயர்ப்பாளர். அவரின் மொழிபெயர்ப்பு கண்டெண்ட்டுகளை அவரின் சிந்தனை என்று நீங்கள் நினைத்தது உங்கள் தவறு தானே..?

    1. Avatar
      paandiyan says:

      பாவம் இது கூட புரியாமல் தான இங்கு நெறைய படித்தவர்கள் இருகின்றார்கள். இதுக்கு எல்லாம் மேம்போக்காக ஒரு ஆங்கில பத்திரிக்கையை படிதால போதும். என்ன பண்ணுவது . படிதர்வால் இருக்கும் இடத்தில இப்படி என்றால் படிக்காத ஆதிவாசி வனவாசிகளை இவர்கள் எப்படி மூளை சலவை பண்ணுவார்கள் என்று சற்று எண்ணி பாருங்கள்

Leave a Reply to Saravanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *