இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

This entry is part 11 of 43 in the series 29 மே 2011

இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி

சிக்கலாகுகையில்

சுவாசமோர் விசையில்

மென்காற்றாகவோ புயல்மழையாகவோ

ஏன் பெருமூச்சாகவும்

இருத்தல் கூடும் .

 

ஒரு கயிற்றின் வழியில்

இரு முனைகளாக வழிந்தோடுமவை

வெவ்வேறு கோணங்கள் தீண்டி

ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட

இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக

மீளவும் சிக்கல்கள்

பிரிக்கப்படாமல்

அவள்

மற்றும்

அவன் ….

 

-ஷம்மி முத்துவேல்

 

Series Navigationமிச்சம் !தக திமி தா
author

ஷம்மி முத்துவேல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *