மிதிலாவிலாஸ்-9

This entry is part 28 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் ரூமில் சித்தார்த் கட்டில் மீது படுத்திருந்தான். அபிஜித் அங்கே வந்தான். அவன் பின்னால் நர்ஸ் வந்தாள். அவள் கையில் ட்ரேயில் சூடான பால், பிரெட் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன. அபிஜித் சித்தார்த்தின் கன்னத்தில் மெதுவாக தட்டிவிட்டு “சித்தார்த்!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைத்தப் பிறகு சித்தார்த் கண்களைத் திறந்தான். […]

ஜெயகாந்தன்

This entry is part 2 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  ஜோஸப் யாருக்காக அழுதான்?   சிட்டியை சமூகம் எங்கெல்லாம் துரத்தியது?   கங்கா மணமாகாமல் கோகிலா மணவாழ்வில் எந்த அகழிகளைத் தாண்டவில்லை?   சாரங்கனின் கலையும் ஹென்றியின் தேடலும் எந்த முகமூடிகளை நிராகரித்தன?   இவர்கள் நம் நெஞ்சில் இன்றும் வாழ உயிராய் ஜெகேயின் புனைவு வெளி   “என்னைக் கொல்வதும் – கொன்று கோவிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடியிருப்பதுண்டோ?” அவர் கேள்வி விழிப்புக்கு விதை   தமிழில் இலக்கியம் இலக்கியத்தில் ஜெயகாந்தன் […]

செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

This entry is part 3 of 28 in the series 12 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி  ஃபீனிக்ஸ் தளவுளவி உட்கார்ந்து உளவுகிறது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது ! பனிக்கட்டி உறைந்த நீரென்று நிரூபித்துக் காட்டியது தளவுளவி ! […]

பொழுது விடிந்தது

This entry is part 4 of 28 in the series 12 ஏப்ரல் 2015

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)

நான் யாழினி ​ ​ ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1

This entry is part 5 of 28 in the series 12 ஏப்ரல் 2015

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்]   ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் -1 மென் சாமரம் வீசும் தென்றல் காற்றின் கைங்கரியத்தால் அசைந்த சேலையை இறுகப் பற்றிய படிநடந்தாள் யாழினி. யாழினி அழகானவள். சராசரிக்கும் சற்றே உயரம்  குறைவு. நீண்ட கருங்கூந்தல். பேசும் விழிகள். மௌனத்தை அடையாள ​ ​ மாக்கிய அதரங்கள். சேலைக் கட்டில் ஒரு தனித்துவ நேர்த்தி! மழை வரக்கூடும் என்று அறிவித்தது கருமேகம் சூழ்ந்த வானம்! சில்லென்று தழுவி காற்று சற்றே பாதத்தை […]

நதிக்கு அணையின் மீது கோபம்..

This entry is part 6 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய் நிற்கும் மலை ராஜனை மற்றுமொரு போர்வையாய் கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள, மகிழ்ந்து போன மலைராஜன் பரிசு கொடுக்கிறான் அது தான் மழை..   மழை நதியாகிறது.. நதியாகிய மழைக்கு அவசரம், சமுத்திர ராஜனுடன் கலக்க..   அணை தடுக்கிறது.. என்னை தடுக்காதே என்று நதி அணையோடு கோபித்துக் கொள்கிறது..   அணை சொல்கிறது நதியிடம்.. நதியே.. என் மீதான உன் கோபம் நியாயமானதல்ல..   வெறியுடன் சமுத்திர ராஜனுடன் […]

நானும் நீயும் பொய் சொன்னோம்..

This entry is part 7 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    நீ என் வீட்டிற்கு வந்தபோது, வசந்தம் வரவேற்க காத்திருப்பதாகச் சொன்னேன்.. வாழ்வில் வறட்சியை மட்டும் நான் காட்டிய போதும் நீ வாழ்வில் வசந்தத்தை மட்டும்தான் பார்த்ததாகச் சொன்னாய்..   நம் வீட்டுத்தோட்டத்தில் குயில்களின் கானம் மட்டும்தான் கேட்கும் என்று கூசாமல் பொய் சொன்னேன்.. ஆந்தைகளின் அலறல் கேட்டபோதும் உன் காதில் குயில்களின் இனிய கீதமே கேட்பதாகச் சொன்னாய்..   தென்றல் சுகமாய் நம்மை தாலாட்ட தவம் கிடப்பதாக கையில் அடித்து சத்தியம் செய்தேன்.. ஓங்கி […]

முதல் பயணி

This entry is part 8 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    நான் தான் அந்த காட்டுப்பாதையின் முதல் பயணி.   பாதை நெடுகிலும் மண்டிக்கிடந்தன முட் புதர்கள். என் கால்களை முட்கள் கிழித்த போதும் எனக்கு பின்னால் நடந்து வருபவர்களின் கால்களை குத்திக் கிழிக்காமல் இருக்க அவைகளை வெட்டிச் சாய்த்து நல்ல பாதை செய்தேன்   இப்போது என் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.. அவர்களின் பாத சுகத்திற்காக அந்த பாதையில் நான் மலர்களைத் தூவவில்லை என்று.    

சிறுகதை உழவன்

This entry is part 27 of 28 in the series 12 ஏப்ரல் 2015

கோ. மன்றவாணன்   அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கலாம். என்னோடு என் வயது பையன்கள் இருப்பார்கள். மேடையில் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மேடைக்கு முன் தரையில் அமா்ந்து நாங்கள் பேசிக்கொண்டும் மண்ணில் விளையாடிக்கொண்டும் இருப்போம். கூட்ட அமைப்பாளா்கள் அடிக்கடி எங்களைப் பேசாதீங்க […]

அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

This entry is part 9 of 28 in the series 12 ஏப்ரல் 2015

எழுத்துக்கள் வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல! அவை ஒவ்வொன்றும் கடி எறும்புகள் ஆனபோது தான் தமிழ் இலக்கியம் தூக்கம் கலைத்தது. புதிய யுகம் காண‌ தூக்கம் கலைத்த அவருக்கு தூக்கம் ஏது? தூங்கி விட்டார் என்ற செய்தியில் செய்திகள் ஏதும் இல்லை. ஒரு வெட்டியானைப்பற்றிய‌ அவரது சிறுகதைக்கு இப்போது தான் பிள்ளையார் சுழி போடுகிறார் என்று எடுத்துக்கொள்வோம். பிள்ளையார் என்று சொல்லால் அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும் மார்க்ஸ் எங்கல்ஸின் டையலக்டிகல் மெடீரியலிஸம் அவருள் நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான் […]