சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54

This entry is part 31 of 31 in the series 19 பிப்ரவரி 2012

     samaskritam kaRRukkoLvOm 54 இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, இதுபோன்ற மற்றும் அதுபோன்ற ஆகிய சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கீழே பொம்மைக் கடைக்காரருக்கும் ரமா என்ற சிறுமிக்கும் நடக்கும் உரையாடல் உள்ளது. உரையாடலை உரத்துப் படிக்கவும். आपणिकः – भवती किम् इच्छति | āpaṇikaḥ – bhavatī kim icchati | கடைக்காரர் – உங்களுக்கு என்ன வேண்டும் ? रमा – […]

தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்

This entry is part 30 of 31 in the series 19 பிப்ரவரி 2012

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் […]

Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil

This entry is part 29 of 31 in the series 19 பிப்ரவரி 2012

Dear All Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil, the first ever direct translation from Chinese to Tamil. We are releasing the book on Feb 25th evening in Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English. Find the invite attached. Please come to the event. […]

முன்னணியின் பின்னணிகள் – 27

This entry is part 28 of 31 in the series 19 பிப்ரவரி 2012

    சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் பார்த்தாள். அதாவது, நீதான் உதவணும் என்கிற குறிப்பா இது. ”இப்ப அந்த கெம்ப் ரோசியோட ஓடிப் போயிட்டார்னால், அவர் தன் மனைவியை விட்டுப் பிரிஞ்சிருக்கணும், இல்லியா?” ”இருக்கலாம்” என்றேன் நான். ”யப்பா, நீ ஒரு உபகாரம் பண்ணேன்?” ”சொல்லுங்க, முடிஞ்சா செய்யிறேன்.” ”நீ பிளாக்ஸ்டேபிள் வரை ஒரு […]

இவள் பாரதி கவிதைகள்

This entry is part 27 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன் எதிராளி அறியாமல் கலைத்து முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ அத்துடன் முடிக்கவோ துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று… ============= நிலத்தில் விழவும் நீரில் விழவும் நிழல் மறுக்கிறது.. காற்றில் பரவவும் உடலெங்கும் விரவவும் சுவாசம் திணறுகிறது ஆயுதம் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11

This entry is part 26 of 31 in the series 19 பிப்ரவரி 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தொழிற்சாலை பரம்பரைச் சொத்தாய் இருக்கலாம்.  ஆனால் அங்குள்ள மேஜை நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜை விரிப்புகள், தோரணத் துகில், பூங்கா, பூத்தோட்டம், உணவகம் எல்லாம் எங்களுக்குச் சேர்ந்தவை !  மெய்யாகச் சொன்னால் எனக்குச் சேர்ந்தவை.  நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் அவற்றை ! பெர்னாட் ஷா (மேடம் பிரிட்னி)   மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் […]

ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?

This entry is part 25 of 31 in the series 19 பிப்ரவரி 2012

இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் ஐசிஐசியை நவீனமாகவும் அதன் பயனீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகிப்பதற்கு இலகுவாகவும் அதன் இணையமூல சேவையில் முன் நிற்கிறது. ஆனால், அதில் சில முறை தவறான தகவல்கள் வருகின்றன,,, அது பற்றி எழுதினாலும் பதில் வருவதில்லை… மென்பொருளின் கவனிக்கப்படாத, சீராக எழுதப்படாத உத்திரவுகள் பல குழப்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தவே செய்யும். உலகமே திரண்டு ஒப்பாரி வைத்த Y2K விஷயம் பற்றி சற்றும் அக்கறையின்றி தவறான அதுவும் மிக மிகத் தவறான தகவல் […]

ஐங்குறுப் பாக்கள்

This entry is part 24 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் கரைசேர்க்குது அலைகள் தவணை முறையில். காற்றின் உபயம் மூச்சு முட்டி மூங்கிலில் வழிகிறது இசை குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சியில் தாவரங்கள் சோம்பித் தி¡¢யும் மானிடப் பதர்க்கு காற்றின் உபயத்தில் கவிதையும் இலவசம். மலராது மலர்ந்து பூக்கவே பூக்காத செடியில் சோகம் பூத்திருக்கு. சாகாதல் பூத்துப் போயிருக்குமென ஞாபகம் தோண்டினால் இன்னும் நெருப்பு. _ ரமணி,

குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.

This entry is part 23 of 31 in the series 19 பிப்ரவரி 2012

கிண்ணியா இஜாஸ் குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான் என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன. பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப் போய்க் கிடக்கிறது. எதுமே செய்ய இயலாது போகையிலும் உண்மையின் உறைவிடம் இன்றும் அநாதரவற்ற நிலையில் இருக்கையிலும் அடிமைப் படுத்தப்பட்ட வாழ்வுக்கும் மீழ்தழின்றி தவிக்கும் பொழுதுகளிலும் மெழுகு பூசப்பட்ட வாழ்வுக்கான போர்கைள் கைகளில் சிக்கிக் கொள்ள எத்தனிக்கையிலும் […]

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

This entry is part 22 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன. எமிலிதர்கைமும், மாக்ஸ்வேபரும் மதம்பற்றி பேசியதை உரையாடல் செய்கின்றன. தத்துவங்கள், மதங்கள், அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலனியம் சார்ந்த விவாதங்களை மார்க்ஸிய பின்புலத்தோடு வாசகனிடத்தில் உரையாட முன்வருகின்றன. எதிர்க்கதையாடல்களின் ஒலிகளை தன்னுள் நிரப்பி வைத்த எழுத்து உண்மை, […]