ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நீ சொல்ல நினைப்பதை
நான் பேச வில்லை
என்றால் எனது
கன்னத்தில் அறைந்து விடு !
பிதற்றும் சிறுவன்
தவறிப்
பிடிபடும் போது
அன்புத் தாய் போல் எனக்கு
நன்னெறி புகட்டு !
தாக முள்ள மனிதன்
சாகரம் நோக்கி ஓடினான் !
கழுத்துக்குக்
கத்தியை நீட்டியது
கடல் !
++++++++++++
ரோஜாப் பூ மேடை
நோக்கிய மல்லிகைப் பூவும்
சிரம் தாழ்த்திச்
செப்பாது எதுவும் !
நானோர் இசை கருவி
நடனம் முடியும் வரை அதைக்
கடத்தி விடாதே !
என்னைப் பற்றிப் பாடு
எந்த நேரமும்
இசைக் கருவியில்.
உதவி செய் எனக்கு
மெல்லோசை தன்னில் !
++++++++++++
வனப்புடன் தோன்று¡ன் ஜோஸ•ப்
உடுப்புகள் இன்றி !
அவனது மேனிச் சட்டையே
அதற்குச் சான்ற ளிக்கும்.
ஆத்மாவின் நீரில்
எதிரொ லிக்கும் ஒளிச்சுடரை
இனிது காணும்
மனித உடம்பு !
பிணத்தைத் துடைப்பவன்
என் வாயை மூடினும்
இன்னும் கேட்கும் உனக்கு
இந்தப் பாடல்
என் மௌனப் பேசாமையில் !
+++++++++++
வெளிப் புறத்தி லிருந்து
உட்புறம் காண்பவர் யார் ?
ஆடிப் போன
நெஞ்சங் களின்
கோடிக் கணக்கான
மர்மங்களைத்
தேடிச் செல்பவர் யார் ?
கண்கள் மூலமே நோக்கு
முறிந்த மனிதன்
காண்பது என்ன வென்று ?
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2011)
- இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்
- ஜெயகாந்தன் என்றொரு மனிதர்
- காட்சி மயக்கம்
- நிகழ்வுகள் மூன்று
- ஊரில் மழையாமே?!
- சதுரங்கம்
- மனவழிச் சாலை
- ஒரிகமி
- கணமேனும்
- அறிகுறி
- கவிதை
- தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !
- பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்
- ‘காதல் இரவொன்றிற்க்காக
- சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்
- பெற்றால்தான் பிள்ளையா?
- நெருப்பின் நிழல்
- நிழலின் படங்கள்…
- வட்ட மேசை
- மன்னிக்க வேண்டுகிறேன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
- மூன்று பெண்கள்
- (69) – நினைவுகளின் சுவட்டில்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)
- “பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
- அலையும் வெய்யில்:-
- ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39
- இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3
- மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்