ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2

This entry is part 33 of 33 in the series 3 மார்ச் 2013

க்ருஷ்ணகுமார்

 

 

மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :-

 

 

 

மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் எந்தெந்த மதத்தை / மதத்தைச் சார்ந்தவர்களைக் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது? ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மாற்று மதத்தவர் பேரில் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை மட்டும் பத்தி பத்தியாக வ்யாசம் பதிகிறது. அப்படியானால் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர் ஹிந்துக்களின் மீது வன்முறைகளை அறவே நிகழ்த்தியதில்லை என்று வ்யாசம் சொல்லாமல் சொல்கிறதா?

 

மதநல்லிணக்கத்தில் கருத்துச் சமநிலை உடைய கருத்தாளர்கள் மதவன்முறையைப் பற்றிப் பேசவேண்டுமானால் ஒரு பக்கம் மட்டும் பக்ஷபாதமாகப் பேசாது  பொதுவிலே மதத்தின் பேரால் நிகழ்ந்த பூசல்களைப் பட்டியலிட வேண்டும். அப்பட்டியல் ஹிந்துஸ்தானத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் பிற மதத்தின் மீது வன்முறைகளை நிகழ்த்தியோ பிணக்குகளை முன்வைத்தோ போராடியிருப்பின் அவற்றைப் பட்டியலிட வேண்டும். ஆனால் வ்யாசம் கருத்துச் சமநிலையற்றதால் அதீத பக்ஷபாதத்துடன் ஹிந்துக்களை மட்டும் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது.

 

 

\\\\\காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார்\\\\\

 

இது சார்ந்து இரண்டு கருத்துக்கள்.

 

“””””””இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை””””” என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துப்பரிமாறும் வ்யாசம்……….

 

ஹிந்து வேதங்கள் அதன் நிலையில் என்ன சொல்கின்றன…….

வேதங்களை ப்ரமாணமாக ஏற்கும் வைதிக சமயத்தினர் இது சம்பந்தமாக என்ன சொல்லியுள்ளனர்……….

 

என்பதைப் பற்றி சற்றேனும் யோசிக்காது ஒரு பிசகான கருத்தினை முன்வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

 

 

ஆ  நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)

 

உயர்ந்த கருத்துக்கள்  நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.

 

 

1. இக்கருத்தை ஆரம்பத்திலும் சொல்லியுள்ளேன்.  ஆனால் அங்கு நற்கருத்துக்கள் எம்மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும்  அவையெல்லாம்  நற்கருத்துக்களே என்ற நேர்மறையான ஆதர்சமான ஒரு கருத்து மட்டிலும் வைக்கப்பட்டிருந்தது.

 

வேதங்களை தேவ வாக்குகள் என்று வைதிக சமயத்தினர் ஒட்டுமொத்தமாக ஏற்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளல் முதற்கண் அவசியம்.

 

வேதம் என்று போற்றப்படும் மத நூல் இறைவனால் அளிக்கப்பட்டது என்றும் அதனை ஏற்காதவர்களை அந்த இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற  பூச்சாண்டி சமாசாரங்கள் வைதிக சமயத்தில் அறவே காணப்படாதவை என்பது நோக்கத் தக்கது.

 

மாறாக, பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொல்லப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’. http://www.sangatham.com/news/notes/sanskrit-q-and-a.html

 

 

வேதங்கள் அபௌருஷேயமானவை (யாராலும் இயற்றப்படாதவை) என்று பூர்வ மீமாம்சம் என்ற தர்சனம் (வைதிக சமயப்பிரிவு) கருதுகிறது. இந்த சமயப்பிரிவு ஈச்வரன் –  கடவுள் என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசாத ஒரு தர்சனம்.

 

ஈச்வரனிடமிருந்து (முழுமுதற்காரணர்) வெளிப்பட்டவை என்ற கருத்து நையாயிகர்கள் எனப்படும் ந்யாய வாதிகளால் முன்வைக்கப்படுவது.

 

எந்த ரிஷிகளால் வேத சூக்தங்கள் (வேதப்பாடல்கள்) முன்வைக்கப்பட்டனவோ அவர்களால் இயற்றப்பட்டன என்று நவீன வேதாந்திகள் சொல்கின்றனர்.

 

வேதம் யாரால் இயற்றப்பட்டது என்பதில் வேதத்தை ப்ரமாணமாகக் கொள்பவர்களில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு என்பது காய்த்தல் உவத்தல் இல்லாது சொல்லப்பட வேண்டிய விஷயம்.  மாறாகப் பொத்தாம் பொதுவாக வேதங்கள் மட்டிலும் தேவ வாக்குகள் என்று ஹிந்துக்கள் சொல்வதாக ஒரு கருத்தை முன்வைப்பது தவறானது.

 

 

 

2. வேதங்களே  சொல்லும் கருத்துக்களானால் உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்(மேலே பார்த்தோம் – ரிக் வேதம்).   உன் மனதை மாற்றுக்கருத்துக்களிலிருந்து மூடி வை என்று வேதங்கள் சொல்லவில்லை.  ஆகவே இதற்கு மாறான கருத்தை ப்ரதிபலிக்கும் வ்யாசத்தின் மேற்கண்ட வாசகம் ஏற்புடையதன்று.

 

 

வேதத்தில் சொன்ன கருத்துக்களுக்குப் புறம்பான கருத்துக்கள் முன்வைக்கப்படில் அவை முழு முற்றாக வேதத்திற்குப் புறம்பானவை என்பதால் மட்டும் வைதிக சமயத்தினரால் புறக்கணிக்கப்பட்டதில்லை.   மாறாக முழுமுற்றாகத் தர்க்க விசாரம் செய்து ஏன் ஏற்கப்படவில்லை என்று நிறுவிய பின்னரே புறம்பாகச் சொல்லப்பட்ட கருத்துக்கள் மறுதலிக்கப்பட்டன.

 

 

~~~~~~~~~    ~~~~~~~~~~~   ~~~~~~~~~~~

 

 

மஹாத்மா காந்தியடிகள் மலைப்ரசங்கத்தினால் கவரப்பட்டார் என்று விதந்தோதும் வ்யாசம் காந்தியடிகள் க்றைஸ்தவ மதத்தினர்  செய்து வந்த மதமாற்றம் பற்றியும் கருத்துக்கொண்டுள்ளதைப் பற்றி ஏன் பேசவேயில்லை? சௌகர்யமில்லாத கருத்து அது என்பதாலா? ஆங்க்ல மொழியில் Cherry picking என்று இப்போக்கு சுட்டப்படுகிறதே.  வேண்டிய கருத்தை மட்டும் விதந்தோதி வேண்டாத கருத்தைப் புறந்தள்ளல் கருத்துச் சமநிலைக்குப் புறம்பானதல்லவா. ஆகவே மதமாற்றம் பற்றி (அதுவும் க்றைஸ்தவர்கள் முனைந்து செய்யும் மதமாற்றம்) காந்தியடிகள் ஹரிஜன் இதழில் என்ன சொல்லியுள்ளார் என்பதையும் இங்கு பார்க்கலாம்.

 

ஹிந்துஸ்தானத்திலும் மற்றைய இடங்களிலும் மதமாற்றம் (க்றைஸ்தவ மதத்திற்கு) நிகழ்த்தப்படுவதையும் அது நிகழ்த்தப்படும் முறைகளையும் நோக்குங்கால்……  என்னால் அதை ஏற்கவே இயலாது. இது தவறானது; மேலும் உலகத்தின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் (மதமாற்றம்) பெரும் தடைக்கல்…….ஒரு க்றைஸ்தவர் ஏன் ஹிந்துவை க்றைஸ்தவ மதத்திற்கு மாற்ற வேண்டும்? ஒரு ஹிந்து நல்லவனாகவும் கடவுளுக்குப் பணிந்தவனாகவும் இருப்பதில் ஏன் அவர் த்ருப்தியடையக்கூடாது (ஹரிஜன் இதழ் – 30-ஜனவரி-1937)

 

It is impossible for me to reconcile myself to the idea of conversion after the style that goes on in India and elsewhere today. It is an error which is perhaps the greatest impediment to the world’s progress toward peace … Why should a Christian want to convert a Hindu to Christianity? Why should he not be satisfied if the Hindu is a good or godly man?

Harijan (30 January 1937)

 

காந்தியடிகள் ஹிந்துக்குடும்பத்தில் பிறந்து ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துவாக இறந்து ஹிந்துவாக அந்திம சம்ஸ்காரம் செய்யப்பட்ட ராம பக்தர்.  வைஷ்ணவ இலக்கணப்படி வாழ்ந்திறந்த மகான்.  எல்லா மதங்களையும் மதித்த காந்தியடிகள் மலைப்ரசங்கத்தால் கவரப்பட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவரது வாழ்க்கை வைஷ்ணவ லக்ஷணங்களால் வழிநடத்தப்பட்டது என்பதும்.

 

காந்தியடிகள் என்றதும் “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் எவ்வாறு நினைவுக்கு வருமோ அதே போல் நினைவுக்கு வர வேண்டிய மற்றொரு பாடல், பூஜ்ய ஸந்த் மஹாத்மா ஸ்ரீ நர்ஸி மேத்தா அவர்களால் இயற்றப்பட்ட   “வைஷ்ணவ ஜன தோ தேனே கஹியே ஜே” என்ற குஜராத்தி மொழிப் பாடல்.  காந்தியடிகள் இந்தப் பாடலை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார் என்பது மட்டுமின்றி பாடலின் கருத்துக்களால் கவரப்பட்டு அதன் படி தன் வாழ்க்கைமுறைகளையும் நெறிப்படுத்திக்கொண்டார் என்பதும் நோக்கத் தக்கது.

 

வைஷ்ணவ ஜன தோ தேனே கஹியே ஜே பீட் பராஈ ஜாணே ரே

वैष्णव जन तो तेने कहिये जे पीड पराई जाणे रे,

vaishNava jana tO thEnE kahiyE jE pId parAyI jANE rE

 

பர் துகே உப்கார் கரே தோயே மன் அபிமான் ந ஆணே ரே

पर दुखे उपकार करे तोये मन अभिमान न आणे रे॥

par dukhE upkAr karE tOyE man abhimAn na ANE rE

 

 

பாடலின் கருத்து :-

 

அடுத்த மனிதர்களின் கஷ்டங்களை வலிகளை அறிந்தவர் வைஷ்ணவர் ஆவார் (விஷ்ணுவின் அடியார்). அவர் அடுத்தோருக்கு நன்மை செய்வார். குறிப்பாக கஷ்டத்தில் உள்ள அன்பர்களுக்கு.  மற்றும் எப்போதும் தான் தன்னுடைய என்பதான அஹங்காரம் மனதிலேறாமல் இருப்பர்.

 

 

 

காந்தியடிகளை நான் முற்று முழுதாக ஏற்பதும் இல்லை. முற்று முழுதாக முத்திரை குத்தி நிராகரணம் செய்வதும் இல்லை.  ஆனால் மதமாற்றம் பற்றிய காந்தியடிகளின் கருத்து எவ்வளவு தீர்க்க தர்சனமுடையது என்பதை ——-   ஹிந்துஸ்தானத்தில் நிகழ்த்தப்பட்ட  மதமாற்றங்களும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த, நிகழும் வன்முறைகளும் ——-அது போலவே உலக முழுதிலும் க்றைஸ்தவ மதமாற்றத்திற்காக நிகழ்த்தப்பட்ட சிலுவைப்போர்களில் எண்ணற்ற உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளமையும் ——-   சரித்ரம்  பறைசாற்றுகிறது.

 

 

 

\\\\வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! \\\\\

 

 

ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஒரு பத்து வருஷம் முந்தி நிகழ்ந்ததைச் சொல்ல வருகிறது வ்யாசம் என எண்ணுகிறேன்.  ஹிந்துஸ்தான அரசியல் சாஸனம் மத உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ளது.  தத்தம் மதப்படி ஒழுகுவதல்லாது மதம் மாறுவது கூட ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை தான்.  மதத்தைப் பரப்புவதும் அடிப்படை உரிமை தான்.

 

ஆனால் விஷயமென்னவென்றால் க்றைஸ்தவர்கள் தங்கள் மதத்தை வனவாசிகளிடம் பரப்புவது அடிப்படை உரிமை என்றும் ஆனால் ஹிந்துக்கள் அவர்கள் மதத்தை வனவாசிகளிடம் பரப்ப முனைவது அடிப்படை உரிமை இல்லை என்றும் வாதிடும் ஒரு போக்கு (வ்யாசத்தில் காணப்படவில்லை – ஆயின் பொதுவில் காணப்படும் வாதம்) ——-  இது சமநிலையின் பாற்பட்டதன்று. மேலும் என் புரிதலின் படி கருத்து ரீதியாக வனவாசிகளின் சமயம்  ஹிந்துமதத்தைச் சார்ந்ததே. ஒரு விதத்தில் ஹிந்துக்கள் வனவாசிகளிடம் நிகழ்த்தும் சம்பாஷணம் அவர்களது தாய் மதத்தைப் பேணுதலே.

 

நடுநிலை என்றிருந்தால் ஒரிஸ்ஸா மாகாணத்தில் பரங்கிய மதமாற்றி க்றைஸ்தவர் தன் மகவுகளுடன் படுகொலை செய்யப்பட்டதை சொல்லும் வ்யாசம் (கொலை என்றிருந்தாலும் – அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் சொன்னபடி விபத்து என்றிருந்தாலும் வருந்தத்தக்கதே) அதற்கு முன் பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீ லக்ஷ்மணானந்த ஸரஸ்வதி அவர்கள் க்றைஸ்தவ வன்முறையாளர்களால் வதம் செய்யப்பட்டதையும் சொல்லியிருக்க வேண்டும். ஸ்வாமி லக்ஷ்மணானந்த ஸரஸ்வதி அவர்கள் க்றைஸ்தவ மதமாற்றத்தைத் தடுக்க முனைந்த சான்றோர்; மேலும் க்றைஸ்தவத்திற்கு மாறிய பல அன்பர்களைத் தாய்மதத்திற்குத் திரும்ப அழைத்து வந்தார் என்பதும் சரித்ரம். சமநிலையுடன் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தால் இவையும் உடன் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.

 

க்றைஸ்தவ மதத்திற்கு மாறிய பல அன்பர்களை அவர்களுடைய தாய் மதமாம் ஹிந்து மதத்திற்கு அழைத்து வரும் பணியை நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களும் தம் வாழ்வில் நிறைவாக செய்துள்ளமையையும் இங்கு நினைவு கூர்கிறேன்.

 

 

ஒரு பத்து வருஷமுன்பு பரங்கிப்பணத்தில் தழைத்த க்றைஸ்தவ மதமாற்ற முனைப்புகள் (இன்னமும் மறைமுகமாக வித விதமாக தொடர்கிறது என்பதும் உண்மை) —–  ஏமாற்று ஜாலவித்தைகளின் (முதல் பாகத்தில்  சுட்டப்பட்டுள்ளன) மூலம்  நயவஞ்சகத்தின் மூலம் ( உதாரணம் –  http://www.tamilhindu.com/2011/06/power-to-change-fraudulent-ad/) ——  பலவிடங்களில் வலம் வந்ததன் காரணமாக இரண்டு சமூஹத்தினரிடையே விரோதங்கள் வளர்ந்து இரு சமூஹத்தினரும் ஹிம்சையில் ஈடுபட்டனர்.  அதை விடுத்து ஏதோ ஒரு மதத்தினர் மட்டும் மற்றொரு மதத்தை ஹிம்சித்தனர் என்று சொல்வது பாரபக்ஷமான செய்தி. இது போன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் தொடரவில்லை என்பதையும் பதிவு செய்தல் அவசியம்.  ஆனால் வ்யாசத்தின் மேற்கண்ட வாசகம் நிகழ்காலத்தைச் சுட்டுகிறது.  அதில் உண்மையில்லை. க்றைஸ்தவ மதமாற்ற ஜாலவித்தைகள்  தொடர்கின்றன என்பது மட்டும் நிதர்சனம்.

 

மிஷநரிகளின் அதீத மதமாற்ற ஈடுபாடு  அதன் முறைமைகள் என்பயவை உலக முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கத்தக்கது என்ற காந்தியடிகளின் கூற்றையும் மீண்டும் நினைவு கூர்வோம்.  பற்பல மதத்தினருடன் புழங்கி மதஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையாக முன்னிறுத்தப்படுபவர் காந்தியடிகள். அவர் ஹிந்துக்கள்  மாற்று மதத்தினரால் ஹிம்சிக்கப்படுகையில் அதை மத ஒற்றுமை என்ற கோட்பாட்டின் பேரில் ஆதரித்தவர் என்ற கருத்தையும் நான் கொண்டிருப்பவன். அப்படியெல்லாம் இருப்பினும் கூட ——–  அப்படிப்பட்ட காந்தியடிகளால் கூட ——-   க்றைஸ்தவ மதமாற்றத்தையோ அதற்கானா அவர்களுடைய வழிமுறைகளையோ ஏற்க இயலவில்லை என்பது வெள்ளிடைமலை.

 

வன்முறைகளை ந்யாயப்படுத்துமுகமாய் இதைப் பகிரவில்லை. ஆயினும் ஒரு குறிப்பிட்ட சமூஹத்தை மட்டும் வன்முறைகளுக்குக் காரணமாகக் கட்டம் கட்டும் போக்கு சமூஹ நல்லிணக்கத்திற்கு என்றும் வழி வகுக்காது என்பதைச் சொல்ல வேண்டியது அவசியம் என்பதால் இதைக்குறிப்பாகச் சொல்ல நேர்கிறது.

 

 

காந்தியடிகளால் கூட ஏற்கப்படாத க்றைஸ்தவ மதமாற்றம் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துக்களால் எப்படி நோக்கப்படும் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகளும் தேவையோ?

 

 

ராம ஜன்மஸ்தான் மற்றும் ராமர் பாலம் போன்ற விஷயங்களில் மட்டிலும் சரித்ரத்தை அளவுகோலாக எடுத்துக்கொண்டு இவ்விஷயங்களை இகழ்ச்சியாகப் பேச முயலும் வ்யாசம்  ஏசுபிரானை மட்டும் சரித்ர ஆதாரங்கள் இல்லாது போனாலும் ஜபர்தஸ்தியாகச் சரித்ர நாயகனாகக் காட்ட  முனைவது க்றைஸ்தவ மத மேட்டிமைவாதத்தைப் பறைசாற்றுதலே அல்லாது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தினை முன்வைத்து அல்ல என்பதும் வெள்ளிடைமலை.

 

 

 

 

 

\\\\\மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! \\\\\\

 

“””””இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!””””  *******ஒருவரை ஒருவர் தாக்கி******** என்பதில் விதிவிலக்காக ——–   முழு வ்யாசத்திலும் காண இயலா எள்ளளவு சமநிலை ———   இவ்வாசகத்தில் காணப்படினும்  ——-  முத்தான இந்த சமநிலை சுட்டும் சொற்களுக்கு —–  அனேக வாழ்த்துக்கள். மிகுந்த நன்றிகள்.

 

 

நடுநிலை என்றிருந்தால் 2002ம் வருஷம் குஜராத் மாகாணத்தில் நிகழ்ந்த மதக்கலஹத்தைச் சொல்லும் வ்யாசம் அதற்கு முன் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு பற்றியும் அதில் மாற்று மதத்தவரால் வதம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்.  . “””””பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள் தீங்கிழக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு அவர்களை உயிரோடு கொளுத்தி இருக்கிறார்கள்”””””” என்பது எவ்வளவு வேதனை மிகுந்த விஷயமோ அதே அளவு வேதனை மிகுந்த விஷயம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் வன்முறையில் தாக்கப்பட்டு உயிர் துறந்த அப்பாவி ஹிந்துக்களும்.  ஒரு வரி அல்லது ஒரு வரியில் பாதியாகவாவது வெறும் வாய்வார்த்தைக்காகவேனும் கொலை செய்யப்பட்ட அப்பாவி ஹிந்துக்களுக்கும் வருத்தம் தெரிவித்திருக்கலாமே. இந்த வ்யாசத்தில் மட்டுமன்று எப்போதெல்லாம் குஜராத் கலவரம் பற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நிகழுமோ அப்போதெல்லாம் கூட கோத்ராவிலோ அல்லது 2002ம் வருஷத்திலோ இறந்த அப்பாவி ஹிந்துக்களைப் பற்றி யாரும் வாய்வார்த்தைக்காகக் கூட வருத்தம் தெரிவிப்பதாகத்  தெரியவில்லை.

 

 

 

எப்போது இறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் மத வேறுபாடின்றி நாம் வருந்துகிறோமோ அதை நிவர்த்திக்கப் பாடுபடுகிறோமோ அதுவரை மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளைப் பேசுவது……….

 

வெறும்பேச்சாக மட்டும் தான் அமையும்.

 

 

 

மதப்பூசல்களில் இழக்கப்படும் ஒவ்வொரு மனித உயிரும் மானுடம் சாவதைப் பறைசாற்றுகின்றன………

 

மதப்பூசல்களில் சொட்டப்படும் ஒவ்வொரு சொட்டு உதிரமும் மதங்களைப் பரிகசிக்கின்றன………

 

என்ற கூற்றுகளுடன்……..

 

நான் முற்று முழுதாக உடன்படுவேன்.

 

 

ஹிந்துக்களை மட்டும் மதப்பூசல்களுக்குக் காரணமாகச் சுட்டுவதும் ஹிந்து மதத்தை மட்டும் அடிப்படை வாதமுடையதாகச் சித்தரிப்பதும்  எதிர்வினையாற்றப்பட்ட வ்யாசத்தின் போக்கு. இப்போக்கு தவறானது; மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கத் தக்கது என்பது என் தாழ்மையான ஆனால் அழுத்தந்திருத்தமான அபிப்ராயம்.

 

 

 

 

\\\\ பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்!\\\\\

 

பௌத்த மதத்தில் பலப் பல சம்ப்ரதாயங்கள் ஹிந்துஸ்தானமுழுதும் இருந்திருக்கின்றன. இருந்து வருகின்றன.

 

ஹீனயானம், மஹாயானம், மத்யமகம், யோகாசாரம், விக்ஞானவாதம், தேராவாதமும் அதன் பிரிவுகளும், வஜ்ரயானமும் அதன் பிரிவுகளும். சமீபத்தில் அறிமுகமான நவயானம்.

 

 

ஹிந்துஸ்தானத்தில் இருந்து அருகில் இருக்கும் தேசங்களிலெல்லாம் பௌத்தத்தைப் பரப்ப பிக்ஷுக்கள் சென்றார்கள் என்பது சரித்ரம்.  பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சைவம், வைஷ்ணவம் போன்ற சமயத்தினருக்கும் பௌத்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததும் உண்மை. அந்த வேற்றுமைகளெல்லாம் தத்துவம் சார்ந்தவை என்பதும் உண்மை.  இன்றைக்கும் பௌத்த —-   பூர்வ மீமாம்சா —–  உத்தர மீமாம்சா நூற்களில் இந்த தத்துவ வேறுபாடுகளைப் பற்றிய விளக்கங்களைக் காண இயலும்.  இன்றும் முறையாக வேதாந்தம் வாசிப்பவர் பூர்வ பக்ஷம் – மாற்றுக்கருத்து என்ற படிக்கு பௌத்தக் கருத்துக்கள் என்ன அதற்கு மாறான சித்தாந்தம் என்ன என்று வாசிக்கிறார்கள்.  பௌத்தக்கருத்துக்கள் மிக முக்யமான மாற்றுக்கருத்துக்கள் ——   வேதாந்தத்தை முழுமையாக அறிய முற்படுவோருக்கு பயனளிக்கவல்லவை தெளிவளிக்க வல்லவை ——- என்றபடிக்கு இன்று வரை இவை ஆழ்ந்து வாசிக்கப்படுகின்றன என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

 

பௌத்தக்கருத்துக்களுடன் முதன் முதலில் கருத்துச் சமர் செய்தவை பூர்வமீமாசக்கருத்துக்கள்.  சப்தநித்யத்வம் என்ற கோட்பாடு சார்ந்து.  சொற்களும் பொருட்களும் நித்யமானவையா அல்லவா.  (இதுபோன்ற விவாதம் கணித வடிவங்களும் கோட்பாடுகளும் சார்ந்தும் உண்டு).  மேற்கத்திய உலகிலும் இது சார்ந்து விவாதங்கள் உண்டு.   Formalism மற்றும் Platonism என்று மாற்றுக் கருத்துக்களைச் சொல்வர். முந்தைய கருத்து சொற்களும் பொருட்களும் மனித மனத்தில் மட்டும் இருப்பவை. அதை விடுத்து இவற்றுக்கு தனித்ததான இருப்பு கிடையாது என்று சொல்வது. பிந்தைய கருத்தானால் சொற்களுக்கும் அதன் பொருட்களுக்கும் (கணித வடிவங்களும் கோட்பாடுகளும்) மனித மனத்தில் இருப்பதைத் தவிரவும் தனித்த இருப்பும் இவற்றிற்கு உண்டு —  “in Platonic World” என்று சொவது. ரத்தினச் சுருக்கமாக மட்டும் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

பௌத்தர்கள் முந்தைய கருத்தை முன்வைப்பவர்கள். பூர்வ மீமாம்சகர்கள் பிந்தைய கருத்தை முன்வைப்பவர்கள்.  இது வேறுபாடு.

 

இந்த இரு தர்சனங்களிடையே ஒரு ஒற்றுமையும் உண்டு.  பௌத்தர்கள் மற்றும் பூர்வ மீமாம்சகர்கள் கடவுள் – ஈச்வரன் என்ற கோட்பாடு பற்றி பேசாதவர்கள்.

 

ஒற்றுமை வேற்றுமைகள்.

 

புத்தர் தசாவதாரங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறார்; புத்தர் வைதிக சமயத்தில் வணங்கப்படுகிறார் என்பதை உப்பு மிளகாய் மசாலாக்கள் கலந்து முன் வைப்பவர்கள் பௌத்த சாஸ்த்ரங்களில் ஸ்தோத்ரங்களில் மற்றைய வைதிக சமய தைவங்கள் புத்தரை வணங்குபவர்களாகக் காண்பிக்கப் படுதலையும் காய்த்தல் உவத்தலில்லாமல் யோஜிக்கலாமே!!!!!

 

சைவ ஸ்தோத்ரங்களில் பகவான் விஷ்ணு சிவனை வணங்குதலும் விஷ்ணு ஸ்தோத்ரங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வணங்குதலும் கூட காய்த்தல் உவத்தல் இல்லாது நோக்கத் தக்கவையே.

 

இரண்டு பௌத்த நூற்களை மட்டிலும் இப்போது முன்வைக்கிறேன்.

 

ஒன்று கரந்த வ்யூஹ சூத்ரம்…….

 

இந்த சூத்ரத்தை வாசிக்கையில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்ற போதிசத்வரை தர்மராஜனான யமன், சிவபெருமான், உமாதேவி போன்றோரெல்லாம் ஸ்துதி செய்வதை வாசிக்கலாம் கீழ்க்கண்ட சுட்டியில்.  *ஓம் மணிபத்மே ஹூம்*  என்ற ஆறு அக்ஷரங்களாலான ஷடாக்ஷர மந்த்ரத்திற்கு ப்ரதிபாத்யரானவர்  (மந்த்ரத்தால் ஆராதிக்கப்படுபவர்) ஆர்ய அவலோகிதேஸ்வரர்.  ஆங்க்ல லிபியில் சூத்ரங்களின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஹிந்துஸ்தானம், திப்பத், சீனம், பர்மா, வியட்நாம், கம்போடியா, கொரியா, ஜப்பான் போன்று பௌத்தம் புழக்கத்திலுள்ள தேசமனைத்திலும் வணங்கப்படுபவர் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்றும் பத்மபாணி என்றும் போற்றப்படும் இந்த போதிசத்வர்.  இவர்  கருணைமிகு புத்தர்.  budha of compassion.

 

http://www.virtualvinodh.com/mantra/142-stotra-karanda-vyuha-avalokitesvara

 

நம்மில் பலருக்கு இணையமூலம் பரிச்சயமான ஸ்ரீ வினோத் ராஜன் மஹாசயர் அவர்கள் தளத்தில் பல பௌத்த ஜின சாஸ்த்ரங்கள் மற்றும் ஸ்தோரங்களை (தமிழ், பாலி, சம்ஸ்த்ருதம்) ஆர்வமுள்ள அன்பர்கள் வாசிக்கலாம். யாப்பின் படி எழுதப்படும் தமிழ்ப்பாக்களின் தளை சரிபார்க்க மென்பொருள் வடிவமைத்தவர் ஸ்ரீ வினோத் ராஜன் மஹாசயர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்றொன்று பெண் போதிசத்வராய் போற்றப்படும் ஆர்ய தாராதேவி பற்றியதான தாராஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்…….

 

பற்பல சம்ஸ்க்ருத மொழியிலான பௌத்த சாஸ்த்ரங்கள் மற்றும் ஸ்தோத்ரங்கள் ஆங்க்ல லிபியிலும் மற்றும் தேவ நாகர லிபியிலும் வாசிக்கத் தோதான இணையம் www.dsbcproject.org.

 

தாராஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் கீழ்க்கண்ட சுட்டியில் நாகரலிபியில் கிட்டும்.

 

http://www.dsbcproject.org/canon-text/titles/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D/%E0%A4%86%E0%A4%B0%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BE%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%B7%E0%A5%8D%E0%A4%9F%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%A4%E0%A4%B0%E0%A4%B6%E0%A4%A4%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%AE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%8B%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%AE%E0%A5%8D

 

ச்லோகம் எண் – 35

 

रक्षणी मोहनी शान्ता कान्तारी द्रावणी शुभा।

ब्रह्माणी वेदमाता च गुह्या च गुह्यवासिनी॥ ३५॥

 

ரக்ஷணீ  மோஹனீ  சாந்தா காந்தாரீ த்ராவணீ  சுபா

ப்ரம்ஹாணீ  வேதமாதா ச குஹ்யா ச குஹ்யவாஸினீ

 

தாராதேவி பௌத்தர்கள் ப்ரமாணமாகக் கொள்ளாத ஆனால் வைதிகர்கள் ப்ரமாணமாகக் கொள்ளும் வேதங்களையும் அருளியவளாக *வேதமாதா* எனக் கொண்டாடப்படுகிறாள்.

 

நமஸ் தாராயை.

 

 

விரட்டல் துரத்தல் இவையெலாம் வெறும் முன் தீர்மானங்களின் பாற்பட்ட ஹேஷ்யங்கள் என்றே படுகிறது. சரித்ர ஆதாரம் எனக்குத் தெரிந்து இல்லை.

 

 

ஹிந்துஸ்தானத்திலிருந்து ஹிந்து மதத்தின் மற்ற சமயத்தவரால் பௌத்தர்கள் விரட்டப் பட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? பௌத்த மத சாஸ்த்ரங்களில் (தமிழ், பாலி, சம்ஸ்க்ருதம்) இது பற்றி ஏதேனும் கூறப்பட்டுள்ளதா என்பதைத் தகுந்த நூற்குறிப்புகளுடன்  பதிவு செய்யலாமே?   (விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு புனையப்படும் கதைகளை / ஹேஷ்யங்களை / உரல்களை  தயவு செய்து சுட்ட வேண்டாம்).  கூடவே எந்தப் பிரிவினைச் சார்ந்த பௌத்தர்கள் விரட்டப்பட்டனர் எப்போது விரட்டப்பட்டனர் எங்கு விரட்டப்பட்டனர்  என்பதையும் சரித்ரச் சான்றுகளுடன் விளக்கலாம். (பௌத்த சாஸ்தரங்கள் – எந்த உட்பிரிவாயினும் சரி – முதன்மையான சரித்ர ஆவணமாக ஏற்கப்படும்)  அப்படி ஏதும் பதிவு செய்ய இயலவில்லையானால் இது தகவற்பிழை என்று மட்டும் ஏற்கப்படும்.

 

 

மீதி இருப்பவர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் என்ற கருத்து அப்பட்டமான பச்சைப் பொய்.

 

 

ஏனெனில் நான் லத்தாக்கிலுள்ள பல பௌத்த மடாலயங்களுக்கு நேரில் சென்று வந்துள்ளேன்.  அங்கு மடாலயங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சம்ஸ்க்ருதத்திலிருந்து திப்பத்திய பாஷையில் மாற்றப்பட்ட பௌத்த சாஸ்த்ரங்களடங்கிய ஓலைச்சுவடிகள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன;  படியெடுக்கப்படுகின்றன என்பதை நேரடியாகக் கண்டுள்ளேன்.

 

வஜ்ரயான பௌத்தம் எவ்வாறு ஹிந்துஸ்தானத்தில் தழைத்து வருகிறது; பௌத்த சாஸ்த்ரங்கள் எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மேலும் த்வீபாந்தரத்தில் இருந்து வரும் பரங்கியருக்கும் கூட கற்பிக்கப் படுகிறது என்பதை கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

 

 

வஜ்ரயான பௌத்த பிக்ஷுக்களுடன் இது சம்பந்தமாக உரையாடியும் இருக்கிறேன்.  ஆகவே ஹிந்துஸ்தானத்தில் இன்று இருக்கும் பௌத்தர்கள் முடங்கி இருக்கிறார்கள் என்பது உண்மைக்கு மாறான கூற்று. சொந்த (க்றைஸ்தவ) விருப்ப (ஹிந்து) வெறுப்பின் பாற்பாட்டு முனைந்து செய்யப்படும் பொய்யான பரப்புரை.

 

 

ஹிந்துஸ்தானத்தில் மேற்கு வங்காளத்திலுள்ள டார்ஜீலிங், ஹிமாசலத்திலுள்ள லாஹௌல், ஸ்பிட்டி, முழு சிக்கிம் மாகாணம், பீஹாரின் புத்தகயா, மிகப்பெரும்பாலான அருணாசலப்ரதேசம் ——-  போன்ற பல இடங்களில் இன்றும் பௌத்தம் விகசிதமாய் உள்ளதை அறிவேன். லத்தாக் தவிரவும் மற்றைய சில பௌத்த விஹாரங்களுக்கும் மடாலயங்களுக்கும் சென்றுள்ளேன்.

 

புத்த கயா க்ஷேத்ரத்தை பரிபாலனம் செய்யும் விஷயத்தில் பௌத்தர்களுக்கும் ஹிந்து மதத்தின் மற்றைய சமயத்தவருக்கும்ம் இடையே அபிப்ராய பேதங்கள் உண்டு என்பது அதனளவில் தத்யம்.

 

ஆனால் மந்த்ர – தந்த்ர – காலசக்ர – வஜ்ர  –   யான பௌத்தத்திற்கும் வைதிக  – தாந்த்ரிக  – சைவ – சாக்த சமயங்களிடையே இன்றும் கூட இணக்கமான சம்வாதங்கள் நிகழ்கின்றன  – தொடர்கின்றன என்றறியாது வைக்கப்படும் பச்சைப்பொய் “மீதி இருக்கும் பௌத்தர்கள் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்”  என்ற கருத்து.

 

பூனை கண்ணை மூடிக்கொண்டு லோகமே இருண்டு விட்டது என்றால் உண்மையாகுமோ?

 

 

ஹிந்து மத வெறுப்பு என்ற முன் தீர்மானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வ்யாசம் எழுதப்பட்டதால்  ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாகிய பௌத்த சமயத்திற்கும் ஏனைய ஹிந்து மதத்திய சமயங்களிடையேயும் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவை இவற்றினிடையே உள்ள இணக்கங்கள் யாவை வேறுபாடுகள் யாவை என்பதைப் பற்றி யோசித்தும் பார்க்காது ஹேஷ்யங்களை வெறுப்புக்களாக்கி அதை மத ஒற்றுமை என்ற சாதுர்யமான குடுகையிலிட வ்யாசம் முனைகிறது என்றால் மிகையாகாது.

 

 

 

சீக்கிய சமயத்துக் கருத்துக்கள் சிலவற்றை (வ்யாசத்தின் தலைப்பில் மேலும் வ்யாசத்தின் நிறைவில்) பகிர்ந்து கொண்டுள்ளேன். நான் முனைந்து சொல்லாமலேயே இவற்றில் உள்ள இணக்கமான கருத்துக்களை வாசகர்கள் அவதானித்திருக்கலாம்.

 

 

 

இதன் தொடர்ச்சியாக சமய நல்லிணக்கக் கருத்துக்கள் மற்றும் மத நல்லிணக்கக் கருத்துக்கள் இவற்றையும் தனி வ்யாசங்களாகப் பதிக்க முனைகிறேன். ஆங்கு ஹிந்து மதத்தின் பல சமயங்களிடையே காணப்படும் சமய நல்லிணக்க விஷயங்கள் யாவை. ஹிந்துஸ்தானத்தில் புழங்கும் பல மதத்தினரிடையே வேறுபாடுகள் பலவும் காணப்படினும் விகசிதமாகக் காணப்படும் மத ஒற்றுமை சார்ந்த விஷயங்கள் யாவை?  மிகக் குறிப்பாக பௌத்த சமயத்திற்கும் மற்றைய ஹிந்து சமயப்பிரிவுகளுக்கும் இடையில் காணப்படும் இணக்கமான விஷயங்கள் யாவை? அவை நம் எதிர்கால சந்ததிகளுக்குச் சுட்டுவது என்ன? போன்ற விஷயங்களையும் பார்ப்போம்.

 

 

அது போன்ற இணக்கங்களைச் சுட்டும் எண்ணப்பகிர்வுகள் சமய ஒற்றுமைக்கு மத ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையட்டும் என்ற நப்பாசை கூட எனக்கு உண்டு.

 

 

\\\\இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.\\\\\

 

மிகவும் கடுமையான சொற்களால் வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியதும் அதீத வெறுப்பு நிறைந்த மற்றும் உண்மைகளை பக்ஷபாதமாகப் பேச முற்படுவதுமானது மேற்கண்ட வாசகம்.

 

 

 

அதற்கு முன் :-

 

 

 

முதற்கண் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர்களும் ஹிந்துக்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர்  என்பதை காய்த்தல் உவத்தல் இல்லாது பதிவு செய்து விடுகிறேன்.  இது ஹிந்துஸ்தானத்தின் பல நீதிமன்றங்களில் தீர்மானம் செய்யப்பட்ட விஷயம். நேர்மையாக மதப்பூசல்களை அணுகுபவர்கள் பக்ஷபாதமில்லாது மதப்பூசல்களை அணுகுவது அவசியம் என்பதால் இந்த விஷயத்தை முதலில் பதிவு செய்கிறேன். நான் முன்னமே பதிவு செய்தபடி மதப்பூசல்களும் அதனால் நிகழும் வன்முறைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.

 

 

 

ஆனால் மாற்று மதத்தவர்களும் ஹிந்துக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்பது ஏன் மேற்கண்ட வாசகத்தில் மறைக்கப்பட்டுள்ளது? அதே ஹிந்துஸ்தான நீதிமன்றங்கள் மாற்று மதத்தினர் ஹிந்துக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலை மற்றும் வன்முறைகளுக்காக மாற்று மதத்தினரை தண்டித்ததும் சரித்ரம் தானே. வ்யாசத்தில் இவை ஏன் அறவே பேசப்படவில்லை?

 

மாற்று மதத்தினர் ஹிந்துக்களைப் படுகொலை செய்தது அவர்களை ஹிம்சித்தது ஹிம்சித்து வருவது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு. மும்பை குண்டு வெடிப்புகள்; கோவை குண்டு வெடிப்புகள்; காசிமாநகரத்து குண்டு வெடிப்புகள்  – சற்றுப் பழையவை.  என்றாலும் ஒரு சில சமீபத்திய சம்பவங்களையும் வாசகர்களின் முன் வைக்கிறேன்.

 

http://www.tamilhindu.com/2012/10/dr-arvind-reddy-bjp-medical-wing-president-murdered/

 

http://www.tamilhindu.com/author/correspondent/page/6/

 

http://www.tamilhindu.com/2011/06/nilgiris-baduga-struggle-against-conversion/

 

http://www.tamilhindu.com/2011/06/power-to-change-fraudulent-ad/

 

http://www.tamilhindu.com/2010/07/erode-hindus-fight-to-save-amman-temple/ (Erode Mariamman kovil Land grab by CSI )

 

http://www.tamilhindu.com/2010/05/protest-meeting-in-mylapore-announcement/ (Forceful entry of christians inside kapaleeswarar temple of Chennai and Hindu hate speech of christians inside this hindu temple)

 

http://www.tamilhindu.com/2010/04/kullampalayam-evangelists-cornered-by-people/

 

http://www.tamilhindu.com/2010/03/hindu-leader-murthy-murder-cholavaram/

 

ஆனால்  அடிப்படை உண்மைகள் என்ற ஆதாரத்தால் நிறுத்துப்பார்க்கப் பட வேண்டியது “ஹிந்து மத அடிப்படை வாதிகள் சீக்கியர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்” என்ற நயவஞ்சகமான கருத்து.

 

1……………………….சில அடிப்படை உண்மைகள் :-

 

சில அடிப்படை உண்மைகளைப் பகிர்ந்து கொண்டால் தகவற்பிழைகள் தானாகத் துலங்கும் என்ற படிக்கு சில அடிப்படை உண்மைகள்.  கருத்துச் செறிவு என்ற தீபமேற்ற அறியாமை என்ற இருள் அகல்வதாக.

 

முதலாவதாக குருதசமேஷ் (பத்து சீக்கிய குருமார்கள்) அவர்களது கருத்துக்களை பஞ்சாப் மற்றும் அண்மையிலுள்ள மாகாணங்களில் எல்லா சமயத்தினரும் சமய வேறுபாடின்றி  விதந்தோதுகிறார்கள் என்பது.  ஆரம்பத்தில் நான் பகிர்ந்த மூல்மந்தர் என்ற பாடல் பஞ்சாபி மொழி பேசும் அன்பர்கள் அனைவராலும் (சீக்கியர் மற்றும் சீக்கியரல்லாதோர்) போற்றப்படுகிறது. தொலைபேசியில் பேசுகையில் பஞ்சாபி மொழிபேசும் பல அன்பர்களின் ரிங்க்டோனாக இந்தப்பாடலையே கேட்க இயலும்.  ஹிமாசலம், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு & கஷ்மீர் போன்ற மாகாணங்களைச் சார்ந்த அன்பர்களுடன் பழகிய எனது  நேரான அனுபவத்தின் பாற்பட்டு உறுதியாக இதைச் சொல்கிறேன்.

 

கேஷ் (kEsh) (மழிக்காமுடி) கங்கா (kangA) (அதைப் பராமரிக்க தலைப்பாகையில் வைக்கப்பட்டிருக்கும் சீப்பு) கடா (kadA) ( கையில் அணியும் கங்கணம்) கச்சா (kachcha) ( எப்போதும் கத்தியுடன் இருக்கும் இவர்கள் பாதுகாப்புக்காக அணிய வேண்டிய உள்ளாடை) கிர்பான் (kirpAn) ( பற்பல அளவுகளில் அவரவர் சௌகர்யப்படி வைத்திருக்கும் கத்தி) இவை ஐந்தும் சீக்கிய அடையாளங்கள். கேஷ், கங்கா, கடா, கச்சா, கிர்பான். தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் குருமார்களின் கட்டளைகளின் படி வாழ்க்கையை நடத்துவதன்றி இந்த அடையாளத்தையும் பேணுகிறார்கள்.  பல அன்பர்கள் குருமார்களை கட்டளைகளை மட்டும் ஏற்று இந்த அடையாளங்களை ஏற்பதில்லை.  இவ்வாறு சீக்கிய அடையாளங்களை ஏற்காது ஆனால் முழுமுற்றாக குருதசமேஷின் கருத்துக்களை சிரமேற்கொள்பவர்களை மோனா (mOna)என்று அழைக்கிறார்கள்.

 

ஒவ்வொரு சீக்கியரும் ஆணும் பெண்ணும் எப்போதும் கிர்பான் என்ற கத்தியை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். வீர தீர பராக்ரமத்தைச் சரித்ரமாகக் கொண்ட  சீக்கியர்களுக்கு மற்ற சமயத்தவர்கள் தொந்தரவு கொடுக்க இயலும் என்பது நகைப்பிற்குறிய விஷயம். “தொ” என்ற எழுத்துத் தொடங்கி “வு” என்று அது நிறைவு பெறுமுன்னேயே கொடுக்கப்படும் தொந்தரவுகளை களையறுக்க வல்லவர்கள் சீக்கிய சஹோதரர்கள் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம்.  ஆனால் தங்களுக்குக் கொடுக்கப்படும் தொந்தரவுகளை “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்று செயல்படுபவர்கள் சீக்கியர்கள் அல்லர். மாறாக தர்மத்திற்கு எதிராக வன்முறையுடன் எழும் கைகளை அவை  உயரும் போதே பலம் கொண்டு அடக்கும் பயிற்சியை கால்ஸா பந்த் (கால்ஸா இயக்கம்) சீக்கியர்களுக்கு அளித்துள்ளது என்பதை சரித்ரம் சுட்டுகிறது.

 

பின்னிட்டும் சீக்கியர்களுக்கு ஹிந்து மத அடிப்படை வாதிகள் தொல்லை கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படும் கூற்றில் உண்மை என்று ஏதும் இருந்தால் “ஹிந்து மத அடிப்படை வாதிகள்” என்று சுட்டப்படுபவர் யார்? அவர்கள் சீக்கிய சஹோதரர்களுக்குக் கொடுக்கும் தொல்லை யாது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

 

ஹிந்து அடிப்படை வாதிகள் சீக்கியர்கட்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் அப்படித் தொல்லை கொடுப்பவர்கட்கும் அது தகவற் பிழை என்றால் அவ்வாறு தகவற் பிழையை அளிக்கும் அன்பர்களுக்கும் வாஹேகுரு ஸன்மதி அளிக்கவேண்டும் என்று மட்டிலும் இப்போது என்னால் ப்ரார்த்தனை செய்ய இயலும்.

 

வாஹே குரு தீ கால்ஸா! வாஹே குரு தீ ஃபதே!

 

வல்லமை படைத்த குருவின் இயக்கம் கால்ஸா; அவருக்கு வெற்றி உண்டாகட்டும்.

 

 

நான் கடந்த இரண்டரை தசாப்தங்களாக உத்தரபாரதத்தில் வசித்து வருகிறேன்.  ஹிந்துக்கள் குருத்வாராக்களுக்குச் (சீக்கியர் கோவில்) செல்வதும் சீக்கியர்கள் ஹிந்துக்கோவில்களுக்குச் செல்வதும் மிகவும் சர்வ சாதாரணமான விஷயம்.  அதுமட்டுமின்றி ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே திருமண பந்தங்கள் தொடர்வதும் மிகவும் பொதுவான விஷயம்.  என்னுடைய மிகப்பல நண்பர் குடும்பங்களின் சொந்த பந்தங்களில் சீக்கியர்களை (ஹிந்துக்குடும்பங்களில்)மற்றும் ஹிந்துக்களை  (சீக்கியர் குடும்பங்களில்) மிக அதிகமாகப் பார்த்துள்ளேன்.

 

ஹிந்துஸ்தானத்தின் கூரை எனப்படும் லத்தாக்கிலுள்ள பத்தர் சாஹேப் குருத்வாராவிலிருந்து ஹிந்துஸ்தானத்தின் பல குருத்வாராக்களுக்குப் பலமுறை சென்று வணங்கியுள்ளேன். குரு கீ லங்கர் எனப்படும் குருத்வாராவில் அளிக்கப்படும் ப்ரசாதத்தைச் சாப்பிட்டுள்ளேன். குருத்வாராவில் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என மதவேறுபாடின்றி அனைத்து மத மக்களும் சேவை செய்வதைக் கண்டுள்ளேன். இவர்கள் அனைவரையும் அன்பர் அவர்களின் வ்யாசத்தில் சொல்லப்பட்ட மேற்கண்ட வாசகம் பரிகசிக்கிறதோ என்றும் ஒரு க்ஷணம் தோன்றுகிறது.

 

விஷமவாதங்களை வாஹே குரு களையறுப்பாராக.

 

 

 

2………………………..…..சீக்கியர்கள் தாக்கப்பட்ட போது உடனுக்குடன் உதவிக்கு வந்த ஹிந்து இயக்கங்கள் :-

 

ஹிந்துக்கள் (சீக்கியரல்லாத மற்ற ஹிந்து சமயத்தினர்) சீக்கியருக்கு தொல்லைகள் ஏதும் கொடுத்ததில்லை என்பது மட்டுமல்லாது பன்முறையு சீக்கியரால் தாக்கப்பட்ட போதும் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தியதில்லை என்பதும் சரித்ரம்.  இது விஷயமாய் பற்பல சான்றுகள் அளிக்க இயலும் என்றாலும் ஒரு முக்யமான சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

காலிஸ்தான தீவ்ரவாத சமயத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர் மற்றும் சீக்கியரல்லாதோர் மத்தியில் பகைமை இருந்தது உண்மை.  இன்றைக்கு பஞ்சாப் மற்றும் அண்டைய மாகாணங்களில் ஹிந்து (சீக்கியரல்லாத மற்ற ஹிந்துக்கள்) சீக் பாய் பாய் (Bhai Bhai).  ஹிந்துவும் சீக்கியரும் சஹோதரர்களே.

 

1988ம் வருஷம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மோகா (Moga) என்ற நகரத்தில் RSS ஷாகாவில் (தினப்பயிற்சிக் குழு / கூடம்) பயிற்சி செய்த 26 ஸ்வயம்சேவகர்களை  கலவர காலத்தில் பாதை தவறிய காலிஸ்தான தீவ்ரவாத சீக்கியர்கள் படுகொலை செய்தனர். ஆனால் அப்பொழுதும் அதற்குப் பின்னும்  ஹிந்துக்கள் எந்த பதில் தாக்குதலும் சீக்கியர் பால் நிகழ்த்தியதில்லை என்பது சரித்ரம்.

 

1984 ம் வருஷம் பாரதத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் தனது சீக்கிய பாதுகாவலரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது பல வன்முறையாளர்கள் சீக்கியர்களைக் கொன்று குவித்தனர். அப்போது RSS மற்றும் பாஜகவினர் சீக்கியர்களைப் பாதுகாத்தமை ——  இந்த இயக்கங்களின் சித்தாந்தத்திலிருந்து கருத்து  ரீதியாகக் கடுமையாக வேறுபடும் ——  அன்பர்களான ஸர்தார் குஷ்வந்த் சிங்க் மற்றும் அமரர் ஸர்தார் க்யானி ஜெய்ல் சிங்க் அவர்களும் பதிவுசெய்த விஷயங்கள்.

 

மதங்கள் மற்றும் சமயங்களிடையே வேற்றுமைகள் ஒருபுறம் இருக்கட்டும். இல்லாத ஒரு வேற்றுமையை ஏன் உருவாக்க வேண்டும். இருக்கும் ப்ரகாசமான ஒற்றுமையை மேலும் தழைக்க வைப்பதில் ஏன் ஈடுபாடு காட்டக்கூடாது? ஆம் ப்ரகாசமாய் இருக்கும் ஹிந்து சீக்கிய ஒற்றுமையைத் தழைக்க வைப்பது அந்த ஒற்றுமையைக் குலைக்க முனையும் சக்திகளையும் மீறி ஒற்றுமையில் நாட்டம் கொண்டோர் மிகுந்த முனைப்புடன் எடுக்க வேண்டிய விஷயம் என்பது துலங்குகிறது.

 

வாஹே குரு ஒற்றுமையில் நாட்டமுடைய அன்பர்களுக்கு நிறைந்த சக்தி அளிக்க இறைஞ்சுகிறேன்.

 

 

———— xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx

 

 

நிறைவாகச் சில கருத்துக்கள் :-

 

 

 

\\\\\\\\\ உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்!\\\\\\\\\\\\\அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !\\\\\

 

 

RSS பற்றி பயங்கரமாக எதிர்மறையான கருத்துக்களை வ்யாசம் முன்வைத்ததைப் பார்த்தோம்.

 

RSS இயக்கம் சிறுவயதில் எனக்குப் போதித்து ——    இன்னமும் பசுமையாய் நினைவில் இருக்கும் என் தாய்மொழி தமிழ்மொழியிலான சங்கப் பாடலை நிறைவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

 

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய நினைவுடனே

 

பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால் பேதம் இங்கில்லை

வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்

கன்னடம் தெலுங்கு கவின் மலையாளம் ஹிந்தியும் எங்களதே

 

இதில் மொழிவெறி, இனவெறி, ஜாதிவெறி, மாநில வெறி, மத வெறி என்று ஏதும் தென்படுகிறதா என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.

 

 

\\\\ ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! \\\\

 

ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்வே என்று கொட்டை எழுத்துக்களால் கருத்தைப் பகிர்ந்த வ்யாசத்தில் பத்தி பத்தியாக க்றைஸ்தவ மத மேட்டிமையும் சமயம் சார்ந்த வேற்றுமைகளை விதைக்கும் தகவற் பிழைகளும் மற்றும் ஹிந்து மதத்தினர் பற்றியும்  ஹிந்து இயக்கங்கள் பற்றியும் வெறுப்புக் கருத்துக்களும் பகிரப்பட்டனவேயல்லாது எம்மதமும் சம்மதம் என்ற கூற்றுக்கு எள்ளளவும் வ்யாசம் வலுசேர்க்கவில்லை என்பது வெள்ளிடைமலை.   ஆகையால் அப்படி ஒரு கோட்பாட்டின் படி வாழ்ந்த (காந்தியடிகளை?????—-(சம்சயமே –  என் புரிதலில் வைஷ்ணவராக வாழ்ந்தவர் காந்தியடிகள்) யாரையும் அவர்களுடைய வாழ்வியல் நிகழ்ச்சிகளின் மூலம் சுட்டவும்  வ்யாசம் விழையவில்லை.

 

“ஏக்ல சொலோ ஏக்ல சொலோ ஏக்ல சொலோரே”  (தனியாகச் செல்) என்ற மிகவும் புகழ்வாய்ந்த குருதேப் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களுடைய அருமையான மற்றும் மிகவும் ப்ரசித்தியான பாடலுடன் வ்யாசம் துவங்கியது.  ரொபீந்த்ரொ ஷொங்கீத் (ரவீந்த்ர சங்கீதம்) என பாங்க்ளா பாஷையில் (வங்காள மொழியில்) மிகவும் உகப்புடன் குறிப்பிடப்படுவது குருதேவர் கவிதைகளும் அவரது பாடல்களாலான சங்கீதமும்.  “அமார் ஷோனார் பாங்க்ளா” (எமது பொன்மயமான வங்காளம்) என்றொரு பாடலும் குருதேவரின் மிகவும் ப்ரசித்தியான பாடல்.

 

எதற்கு இப்படி ஒரு அவதாரிகை என்றால் இப்படியெல்லாம் புகழ் வாய்ந்த பொன்மய வங்காளத்தில் பாரத அன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்களுக்குள் இன்னொரு புகழ்வாய்ந்த கவியரசரும் இருந்திருக்கிறார் என்பதைச் சொல்வதற்கு.  பித்ரோஹி கவி (வித்ரோஹி கவி) – விரோதமான கருத்துக்கொண்ட கவி – Rebel poet – என்றெல்லாம் சுட்டப்படும் கவியரசரான கவி காஜி நஸ்ருல் இஸ்லாம் (Kazi Nazrul Islam) என்ற அன்பரும் குருதேவர் காலத்திலேயே வங்காளத்தில் வாழ்ந்தவர். இவர் குருதேவர் பேரில் பேரன்பு கொண்டவரும் கூட.

 

அவரது ஒரு கவிதையின் சில பொற்துளிகளின் தமிழாக்கமும்  (மூலம் இல்லாததால் நாகரத்திலோ அல்லது தமிழிலோ சுட்ட இயலவில்ல; க்ஷமிக்கவும்) அப்பெருந்தகையின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளையும் இப்போது பார்ப்போம்.

 

கவிதையின் சாரம்:-

 

ஓ அறியாமையின் பாற்பட்டவர்களே!

மனிதர்களே நூற்களைக் கொணர்ந்தவர்கள்

நூற்கள் மனிதர்களைக் கொணர்ந்ததில்லை

ஆதாம், தாவீது, இசையா, மோசஸ்,அப்ரஹாம், மொஹம்மத்

க்ருஷ்ணர், புத்தர், நானக், கபீர் போன்ற உலகப்பொக்கிஷங்கள்……

அவர்கள் நம் மூதாதையர்கள்

அவர்களுடைய குருதியே நம் நரம்புகளில் ஓடுகிறது

 

மேற்கண்ட கவிதையை சித்தாந்த ரீதியாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் உலகப்பொக்கிஷங்களில் இரண்டாம் வரிசையில் சொல்லிய மாந்தர்களை மட்டும் நான் என் மூதாதையர்களாகக் கருதுவதால்.  ஆனால் இங்கு இக்கவிதையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.  இது இந்தப்பெருந்தகையின் வெற்று வாய்ச்சொல் அல்ல. மாறாக தன் சொற்படி வாழ்ந்த பெருமை மிகுப் பெருந்தகை இந்த அன்பர் என்பதால்.  எக்கணம் வாழ்வாங்கு வாழ்ந்த ——-   பாரத அன்னை பெற்றெடுத்த பெருந்தவச்செல்வர் இவர்.  வாழ்க நீ எம்மான்.

 

இந்தக் கவிப்பேரரசர் முஸல்மானாகப் பிறந்தும் சிவன், அம்பிகை, க்ருஷ்ணர் போன்ற ஹிந்து தெய்வங்களின் பாலும் சுவை மிகும் கவியமுதங்களைப் பொழிந்துள்ளார். இவருடைய ஷ்யாம சங்கீத் மிகவும் ப்ரசித்தியானது. இவருடைய கவிதைத் தொகுப்பு நஸ்ரூல் கீதி (Nazrul geeti) என்று அழைக்கப்படுகிறது.

 

ப்ரமீளா என்ற ஹிந்துப்பெண்ணை மணந்தார் இந்தப்பெருந்தகை. இந்த ஆதர்ச தம்பதியினரின் மகவுகளின் பெயர்களைப் பாருங்கள். க்ருஷ்ண மொஹம்மத்; புல்புல் (Bulbul – (குயில் போன்றதொரு பக்ஷி) என்று ஆசையுடன் அழைக்கப்பட்ட அரிந்தம் காலித்; காஜி சப்யசாசி, காஜி அனிருத்.

 

ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் 1939ம் வருஷம் நோய்வாய்ப்பட்டார். தன் தர்மபத்னியின் வைத்தியத்திற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் செலவு செய்தார் அன்பர் அவர்கள்.  ஆயினும் அம்மையாருக்குப் பூர்ண குணம் கிட்டவில்லை.  1941ம் வருஷம் குருதேப் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் இறந்தது இவருக்கு மேலும் பேரிடியாய் இருந்தது. இந்தத் துயரமிகு சூழ்நிலையால் தானும் நோய்வாய்ப்பட்டார். தன்னிலை இழந்தார். பித்தர் போல் ஆனார். மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பினும் இவரது தர்மபத்னி ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் தன்னிலையையும் பொருட்படுத்தாதுத் தன்பதிதேவருக்குச் சேவை செய்தார்.

 

இந்தப் பொன்மய பூமியின் தாய்த்திரு சாரதா மணி அம்மையும் குருதேவர் ராமக்ருஷ்ண பரமஹம்சரும் இங்கு நினைவுக்கு வருகின்றனர் அன்றோ!!!!!!!! க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும் ஹரிப்ரியா தேவியும் கூட.

 

அமார் பாங்க்ளா ஷோனார் பாங்க்ளா!

 

எமது வங்காளம் பொன்மய வங்காளம்!

 

சத்யம் தான்.

 

இவருக்குச் சரியான வைத்தியமளிக்க லண்டனுக்கு இவரை அனுப்ப முடிவு செய்தது “Nazrul Treatment Society” என்ற ஸ்தாபனம். பல ப்ரசித்தி வாய்ந்த அரசியல் தலைவர்களும் இந்த அமைப்பு மூலம் அவரை லண்டன் அனுப்ப முயற்சி செய்தனர்.  ஹிந்து மஹாசபையைச் சார்ந்தவரான பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களும் அதில் முக்யமான ஒருவர்.

 

 

எந்த ஹிந்துமஹாசபை காந்தியடிகளைக் கொலை செய்யத் திட்டம் வகுத்தது எனத் தனித்துப் பழிக்கப்பட்டதோ —— எந்த ஹிந்து மஹாசபையைச் சார்ந்தவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்று  வ்யாசத்தில் இழித்துறைக்கப்பட்டார்களோ  —–   அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்.

 

என்ன ஒரு வாழ்வு?  எவ்வளவு உயர்ந்த மனிதர்கள்?  என்ன ஒரு ஆதர்சம்?

 

த்வீபாந்தரத்தில் வைத்தியமளிக்கப்பட்டு “பிக்ஸ் நோய்” என்ற தீரா நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறிந்த பின்னர் ஹிந்துஸ்தானம் வந்தார் 1953ல்.  1962ல் ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் இறைவனடி சேர்ந்தார். 1972ல் அதுசமீபம் உருவான பாங்க்ளாதேசத்திற்கு ஹிந்துஸ்தான சர்க்காரின் சம்மதத்தின் பேரில் இப்பெருந்தகை அனுப்பப்பட்டார். அதன் தலைநகரான டாக்காவில் வாழ்ந்து 1976ல் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

 

எம்மதமும் எனக்கு சம்மதம் என்றில்லாவிடினும் இக்கருத்துடன் எனக்கு அறவே உடன்பாடு இல்லாவிடினும் அக்கருத்துப் படி வாழ்ந்திறந்த அற்புத மனிதரை பாரத அன்னை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வரை வங்காளிகள் அன்புடன் போற்றும் பித்ரோஹி கவியை மறக்கவும் இயலுமோ? அதன் பாற்பட்டு அந்த அற்புத மனிதரின் ஆதர்ச வாழ்க்கை சில வரிகளில் பகிரப்பட்டது.

 

 

~~~~~~~~~~~———-~~~~~~~~~~~————-

 

 

 

 

வ்யாசத்தின் கருத்துக்களில் சொல்லப்பட்ட  எம்மதமும் சம்மதம் என்ற கூற்றில் மதங்களின் பட்டியிலில் இருந்து ஹிந்து மதம் விலக்கி வைக்கப்பட்டுள்ளதோ என்றே தோன்றுகிறது. அப்படி விலக்கி வைக்கப்பட்ட பின்பும் க்றைஸ்தவர்களுக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களுக்கு க்றைஸ்தவமும் சம்மதமா என்ற வினாவும் கூடவே எழுகிறது. இது பற்றி இங்கு கருத்துப் பதியும் க்றைஸ்தவ இஸ்லாமிய சஹோதரர்களிடம் தெரிந்து கொள்ள விழைகிறேன். கூடவே இந்த இருமதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் ஹிந்து மதம் சம்மதமா என்பதையும். ஹிந்து மதம் என்றதும் உடனே மனுஸ்ம்ருதி –  ஜாதிகள் –  என்று இறங்கிவிட வேண்டாம். நான் பகிர விழையும் விஷயம் கருத்து ரீதியிலான – சித்தாந்த ரீதியிலான விஷயம் மட்டிலும். அதனை கீழே விளக்கியுள்ளேன்.

 

 

எனக்கு என் மதம் மட்டுமே சம்மதம். மற்ற எந்த மதமும் எனக்கு சம்மதமல்ல.

 

 

ஆனால் மற்ற மதத்தினரையும் நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் தங்கள் வழிபாடுகளில் முனைந்து ஈடுபடுவதை நான் போற்றுகிறேன். இங்கு பங்கு பெறும் அனைத்து அன்பர்களின் – அவர்கள் என் மதத்தினராயினும் சரி – மாற்று மதத்தினராயினும் சரி —-  அன்பர்களின் பண்பு, ஆர்ஜவம் இவை எனக்கு மிகவும் ஆதர்சமான விஷயங்கள். மாற்று மத சஹோதரர்களுடன் கருத்துப் பரிமாறும் போது இவற்றை வெளிப்படையாகப் போற்றியும் வந்துள்ளேன்.

 

இது போன்ற ஒரு நேர்மையான அடிப்படையை முன் வைத்து மத வேறுபாடுகள் இருந்த போதிலும் கூட மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் சாத்யம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.

 

இது விஷயமாக ஆழ்ந்த கருத்துள்ள மாற்று மத சஹோதரர்களின் கருத்துக்களை மனமுவந்து வரவேற்கிறேன்.

 

என் மதத்தில் எனது சமயம் எனக்குப் போதித்த கருத்துக்கள் :-

 

ஆ  நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)

 

உயர்ந்த கருத்துக்கள்  நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.

 

 

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்

ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி

 

எப்படி ஆகாயத்திலிருந்து பொழியும் நீர் கடைசியில் சமுத்ரத்தைச் சென்றடைகிறதோ அதே போல் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அது (தொழுதல்) கேசவன் திருவடியைச் சென்றடையும்.

 

என் மதம் எனக்குப் போதிப்பது யார் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அவருக்குக் கேடில்லை என்பது. இந்த அளவுகோலின் படி  மற்ற மதங்களைப் பேணுபவர்கள் யாராயினும் யார் எந்த தெய்வத்தைத் தொழினும் அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைவர் என்று கருதுகிறேன்.

 

இன்னொரு கருத்தும் இருக்கிறது.  என்னைத் தவிர மற்றெவரைத் தொழுபவனும் கொலை செய்யப்படுவான் என்று சொன்னது ஹிரண்ய கசிபு என்ற அசுரன்.  அது பெற்ற மகனே ஆயினும் சரி.  தன்னைத்தவிர மற்றவரைத் தொழுபவர்களை அழித்தொழிப்பது அசுராவேசம் என்று ஹிந்துக்களால் நிந்திக்கப்படுவது.

 

ஹிந்து மதத்தின் பல சமயங்களிடையே வேற்றுமைகளும் கூட உள்ளன தான்.  சிவனைத் தொழுதால் தான் முக்தி என்று சைவம் சொல்கிறது. விஷ்ணுவைத் தொழுதால் தான் முக்தி என வைஷ்ணவம் சொல்கிறது. புறந்தொழுதல் நிந்திக்கப்படுகிறது தான். மறைக்க விரும்பவில்லை. பௌத்த ஜைன சீக்கிய சமயங்கள் முக்தியை வேறு விதமாகப் போதிக்கின்றன தான். ஆனால் வேறுபாடு இல்லாது ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைத்த சமயங்கள் அனைத்தும் தங்கள் கூற்றுப்படி தங்கள் தங்கள் சமய ஒழுக்கங்களைக் கைக்கொள்ளாதவர் மீளா நரகமேகுவர் என்று எப்போதும் பயமுறுத்தியதில்லை.

 

அவ்வாறிருக்க ஹிந்து மதப்படி ஒழுகுபவர்கள் (சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், வைதிகம், சீக்கியம், நாட்டார் சமய ஒழுகுமுறைகள் – இத்யாதி இத்யாதி)  தங்கள் மதத் தெய்வங்களைத் தொழுவதற்காக மட்டிலும் தங்கள் மதக்கூற்றுகளின் படி வாழ்வதால் மட்டிலும் நரகம் ஏகுவார்களா? அல்லது அதற்காக மட்டிலும் நரகம் ஏக மாட்டார்களா? என்று க்றைஸ்தவ மற்றும் முஸல்மான் சஹோதரர்கள் தங்கள் மதப் புஸ்தகங்கள் சார்ந்து கருத்துப் பகிர வேண்டுகிறேன்.

 

 

 

———— xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx——–—- xxxxxx———-xxxxxx

 

 

 

என்னுடைய கருத்துடன் சாம்யதை உடையதானது என நான் புரிந்து கொண்ட படிக்கான ஒரு குருவாணியை (நான் பலமுறை முணுமுணுக்கும்) நினைவு கூர்கிறேன்  – ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ராமாயணத் தொடரின் முன்பு பலரும் இந்த குருவாணியை தில்லி தூர்தர்ஷனில் கேட்டிருக்கலாம். இந்த குருவாணியுடன் (பாடல் எண் 885 – குரு க்ரந்த் சாஹேப்) வ்யாசத்தை நிறைவு செய்கிறேன்.

 

கொயி போலே ராம் ராம்  கோயீ குதாய்

कोई बोले राम राम कोई खुदाय

koi bolE rAm rAm koi khudhAi

(சிலர் உம்மை ராம் என்று போற்றுவர் சிலர் குதா (இறைவன் – உர்தூ) என்று போற்றுவர்)

 

கோயீ சேவே கொசாய்ன் கோயீ அல்லாஹ்

कोई सेवे गुसैयां कोई अल्लाह

koI sEvE gosai(n) koI allAh

(சிலர் உம்மை கொசாய்ன் (Gosain) (சாது – சந்த்) என்றும் அல்லாஹ் என்றும் சேவை செய்வர்)

 

காரண் கரண் கரீம்

कारण करण करीम

kAraN karaN karIm

(ஆயின் நீயோ காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்)

 

கிர்பா தார் ரஹீம்

कृपा धार रहीम

kirpA dhAr rahIm

(எல்லோர் மீதும் உனது அன்பு மற்றும் கருணையைப் பொழிவாய்)

 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

 

பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய நினைவுடனே

 

அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களது தூய அர்ப்பணிப்பும் ஆழ்ந்த ஆன்மீகமும் நம்மை வழிகாட்டுவதாக.

 

அகண்ட ஹிந்துஸ்தானம் மீண்டும் மலரட்டும்.

 

Series Navigationஅக்னிப்பிரவேசம்-25
author

க்ருஷ்ணகுமார்

Similar Posts

411 Comments

  1. Avatar
    ஷாலி says:

     சி. ஜெயபாரதன் says:
    March 4, 2013 at 1:21 am
    // Veer Savarkar was a bloody Liar regarding Gandhi’s murder Plot. He was indirectly responsible for Gandhi’s murder. //
    அய்யா ஜெயபாரதன் அவர்களே! நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.குண்டு வைப்பது,கொளுத்துவது,கொலை செய்வது என்ற கலாச்சார மரபை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.மகாத்மா காந்தி கொலையைப் பற்றி நீங்கள் சொல்கிறீர்கள்.இதற்க்குப்பின்னால் காலா காந்தி என்னும் கருப்புக்காந்தி பெரும்தலைவர் காமராஜ் அவர்களை உயிருடன் கொளுத்த முயன்ற கூட்டமும் இதுதான்.மறக்கப்பட்ட வரலாற்றை சிறிது புரட்டிப்பார்ப்போம்.
    1966 ம் வருடம் நவம்பர் 7 ந் தேதி டில்லியில் சங்கராசாரியர்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்வோர் பாராளுமன்றத்தின் மீது ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கத்தின் ஆதரவில் தாக்குதல் நடத்துகின்றனர். பசுவதை தடைச்சட்டம் அமுலாக்கக் கூறி வீதிகளில் சூலாயுதம்,மற்றும் பல ஆயுதங்களுடன் சாதுக்கள் களம் இறங்குகின்றனர். பெட்ரோலை கொண்டு வானொலி நிலையம்,தபால் அலுவலகம் கொளுத்தப்படுகிறது. காமராஜர் அவர்கள் பகல் உணவு முடித்துவிட்டு ஓய்வாக இருந்தபொழுது அவரது வீட்டை சூழ்ந்து கொண்டு தீ வைத்து கொளுத்தி கொல்ல முயன்றனர்.அதில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தார். காமராஜரை கொல்ல முயற்சிக்க காரணம்,சில ஆட்களுக்கு முன்பு அவர் பேசிய பேச்சு.
    “பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொல்கிற வர்களும்தான் சோசலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள்தான் ஏன் சோசலிசத்தை எதிர்க்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசலிசத்தை வர விடாது தடுத்துவிட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். நாம் விட்டுவிடுவோமா என்ன?” —நவ சக்தி. 3-11-1966.
    தீ வைப்பு கொலை முயற்சிக்கு பிறகு காமராஜர் அவர்கள் சேலத்தில் நடந்த கூட்டத்தில், “ குறிப்பாக,அவர்களுக்கு பயம் என்னைப்பற்றித்தான்.இந்தக் காமராஜ் தான் சோசலிச சமூதாயத்தினை அடைந்தே தீருவேன் என்று சொல்கின் றான். அவன்தான் அதிலே தீவீரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்க்கெல்லாம் பயப்படமாட்டேன்.கடமையை செய்தே தீருவேன்.” -நவ சக்தி. 15-12-1966.
    கைப் புண்ணிற்கு கண்ணாடி கேட்கும் திருவாளர்கள். ஸ்ரீ மான் க்ருஷ்ணா-பாண்டியன் வகையாறாக்கள் காந்தியையே தூக்கி கனம் பார்த்தவர்கள், ஏழைத் தமிழன் எம்மாத்திரம்? அய்யா ஜெய பாரதன் அவர்களே! அவுங்க இதுக்கெல்லாம் செரிப்பட்டு வரமாட்டாக….ஊதுற சங்க ஊதுங்க! விடியும்போது விடியட்டும்!

  2. Avatar
    ஷாலி says:

    தள நிர்வாகிகள் கவனத்திற்கு,
    கட்டுரைத் தலைப்பு “மத நல்லிணக்கத்தை பேணதுல்…” என்று உள்ளது.அதை “பேணுதல்” என்று திருத்தினால் நன்றாக இருக்கும்.நன்றி!

  3. Avatar
    paandiyan says:

    அப்படிய நம்பிட்டோம் . சேலம் டு டெல்லி ஸ்டோரி சூப்பர்.. ஆகா … சோசலிச சமூதாயத்தினை அடைந்தே தீருவேன் என்று சொன்னவர் அதை எப்படி அடைந்தார். ஆகா ஆகா. எமேர்ஜென்சியில் வந்து அதை அடைந்தார் போல . அதற்க்கும் காரணம் RSS தான். கிருஷ்ணகுமார் தான் பாவம் இங்கு . கட்டுரை க்கு சம்பந்தம் இல்லை என்று ஆதாரம் கேட்டால் மெண்டல் ஆக்குவார்கள் , அவர்கள சம்பந்தம் இல்லாமல் திசை திருப்பி விளையடுவார்கள்.. அடுத்து “காந்தியையே தூக்கி கனம் பார்த்தவர்கள்” காந்தி என்ன பண்ணினார் , ஓடி போயிதான மூலையில் ஒக்கந்தார், பெண்கள் மானபங்க படுத்தப்பட்டபோது. வேறு மத காரர்களுக்கு காந்தி பாசம் புரிந்துகொள்ள கூடியதுதான். நான் சொல்வது எல்லா *.காந்தியையும் ..

  4. Avatar
    paandiyan says:

    //.குண்டு வைப்பது,கொளுத்துவது,கொலை செய்வது என்ற கலாச்சார மரபை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்//
    இந்திரா கொலை , ராஜீவ் கொலை, சஞ்சய் accident ..(..என்று மறந்து போயி சொல்லிவிடாதீர்கள் , வருண் அங்கு இருப்பதால் உங்களை பத்வா பண்ணிவிடுவார்கள் உங்கள் கூடத்தில் இருந்து)மற்றும் பல பலவும் RSS பின்புலம் என்று போட்டு தாக்குங்கள் அப்போதுதான் மதசார்பின்மை க்கு முழு அர்த்தம் தெரியும்.

  5. Avatar
    admin says:

    தனிநபர் தாக்குதலில்லாமல், கருத்துக்களை விவாதிக்க கோருகிறோம்.

  6. Avatar
    paramasivam says:

    Mr Krishnakumar should tell why there is discrimination on the basis of one”s birth even while distributing prasadam in certain vaishnavite temples in Kancheepuram?Brahmins were allowed to sit while the other caste people are not allowed to sit.Even a pious vaishnavite is not allowed to sing slogans during worship if he is a non-brahmin.In spite of HR&CE circular prohibiting such discrimination,these temples never care.

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வீர சாவர்க்கர் இங்கிலாந்தில் பார்-அட்-லா பட்டம் வாங்கி பொய் சொல்லியும், பிறரைப் பொய் சொல்ல வைத்து ஜெயிக்கும் / பிழைக்கும் வழக்கறிஞரின் பரம்பரை வாரிசு அவர். காந்திஜி கொலைச் சதியில் தான் ஈடுபட வில்லை என்று நீதி மன்றத்தில் புளுகினார். கொலைக்குத் தானே காரணம், சாவர்க்கர் இல்லை என்று கோட்ஸேயைப் பொய் சொல்ல வைத்தவர். கோட்ஸேயின் புதல்வியைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்து நன்றிக்கடன் தீர்த்தவர்.

    சாவர்க்கர் இந்துத்தவ மதவாத நாத்திகர். கடவுளுக்கும், சத்தியத்துக்கும் அஞ்சாமல் பொய் சொல்லும் மகாவீரர் !

    வீர சாவர்க்கர் நினைத்திருந்தால் காந்திஜி கொலைச் சதியை நிறுத்தி இருக்கலாம். கொலைச் சதிக்கு மூல கர்த்தாவான தளபதி தான் திட்டமிட்டபடி வெற்றி பெற்றார்.

    சி. ஜெயபாரதன்.

  8. Avatar
    சான்றோன் says:

    ஷாலி அவர்களே…..

    இந்த பித்தலாட்டப்பிரச்சாரம் எல்லாம் அறுபதுகளிலேயே எடுபடல‌…..இப்ப எடுத்துவிட்டு என்ன ஆகப்போகுது…….. காவி கட்டுனவன் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரனா? இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஈரோடு மாவட்டம் கொடுமுடி போய்ப்பாருங்க……அங்கிருந்து பழனி வரைக்கும் ஒரே காவி மயமாத்தான் இருக்கும்…எல்லோரும் சங்க பரிவாரங்களா?

    சாமியாருங்க கிட்ட இருந்து காமராசர் தப்பிச்சுட்டாரு சரி….அவரு யாரால செத்தாரு தெரியுமா? யார அவரு தலைவரா தேர்ந்தெடுத்தாரோ அந்த அம்மையாரால‌தான்……….. ஜே.பி ய கைது பண்ணிட்டாங்கன்னு தெரிஞ்ச ஒடனே நெஞ்சப்புடிச்சுக்கிட்டு போய்ப்படுத்தவருதான்…..எந்திரிக்கவே இல்ல…….. அவருகிட்ட இருந்தவனெல்லாம் போயி அதே அம்மையார் கால்ல விழுந்தான்….. ஆர்.எஸ்.எஸ்ஸ குறை சொல்ல வந்துட்டீங்க…….

  9. Avatar
    கண்ணன் says:

    “காந்திஜி கொலைச் சதியில் தான் ஈடுபட வில்லை என்று நீதி மன்றத்தில் புளுகினார். கொலைக்குத் தானே காரணம், சாவர்க்கர் இல்லை என்று கோட்ஸேயைப் பொய் சொல்ல வைத்தவர்”. – ஜெயபாரதன் நீங்கள் சொல்ல்லும் எதற்கும் நீங்கள் ஆதாரம் கொடுக்கமாட்டீர்களா! இது என்ன விதமான வாதம்; இது உண்மையை நிறுவுமா! சாவர்கர் பொய்யர் என்று ஆதாரத்துடன் உங்களௌக்குத் தெரிந்தது நீதிபதிகளுக்குத் தெரியவில்லை, ஏமாந்துவிட்டார்கள் முட்டாள்கள் என்கிறீர்களா? உங்களைப்போன்ற சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் இப்படி ஆதாரங்களில்லாமல், நடுவுநிலையுமில்லாமல் குற்றச்சாட்டுக்களை வாதங்களை அடுக்கிக்கொண்டே போனால் நீங்கள் மதிப்பிழந்து போகமாட்டீர்களா? க்ருஷ்ணகுமார் முன்வைத்துள்ள ஆதாரபூரவமான வாதங்களுக்கு மனசாடியுடன் நிதானத்துடன் ஆதாரங்களுடன் பதில் சொல்லமுயவதே உங்களுக்கு அழகு.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      வீர சாவர்க்கர் காந்திஜி கொலைச் சதியில் ஈடுபட்ட குற்றவாளி யில்லை என்று நீதிபதி விடுவித்த முடிவைத் தானே திரும்பத் திரும்ப வெட்டி ஒட்டி வருகிறார். அவர் எங்கே நிரபராதி என்று நிரூபித்துள்ளார் ?

      சி. ஜெயபாரதன்

  10. Avatar
    paandiyan says:

    க்ருஷ்ணகுமார் உங்களை வேருப்பேறீ இங்கு இருந்து ஓட வைக்க ஒரு கும்பல் முயல்கின்றது. திண்ணை க்கு இது புதிது அல்ல . மலர்மன்னன் அவர்களிடம் இருந்து நீங்கள் கற்று கொள்ளவேண்டியது அந்த போராட்ட குணம் மற்றும் பயந்து பின்வாங்காமல் முன்னேறுவது. விமர்சனம் திசை மாற்றி (அதை அப்படி பண்ண வேண்டும் என்று மாற்று மத மாற்ற கும்பல் இங்கு முகாமிட்டு இர்ருகின்றது) செல்லாமல் தைரியமாக முன்னேறவும்.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீமான் ஜெயபாரதன், முதல் பாகத்தில் தங்கள் வ்யாசத்தில் சொல்லப்பட்ட பிழையான / பொய்யான கருத்துக்கள் சார்ந்து எழுப்பப்பட்ட வினாக்கள் எவற்றிற்கும் தாங்கள் சான்றுகள் ஏதும் தாராது சொன்னக் கருத்தையே திரும்பித் திரும்பிச் சொல்லி வருகிறீர்கள்.

    மூத்தோருக்கு அழகு தரம் தாழ்ந்த “bloddy liar” “விட்டத்திற்குத் தாவும்” போன்ற சொற்ப்ரயோகங்களை உபயோகித்து எழுதுவது அல்ல.

    உங்களைப் போன்ற மூத்த சான்றோர்கள் அடுத்த தலைமுறைக்கு நல்வழி காட்ட வேண்டும். தயவு செய்து எப்படித் தரம் தாழ்ந்து எழுதுவது என்பதற்கு உதாரணமாக இருக்காதீர்கள்

    \அனைவரும் அவதூறு வார்த்தைகளை தவிர்க்க கோருகிறோம்\

    தள நிர்வாகத்தினர் தங்களுக்கும் இந்த எச்சரிக்கையைக் கொடுத்துள்ளதாகவே கருதுகிறேன். இதுவரை ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களைப் பற்றித் தாங்கள் எழுதியமை எல்லாமே வெறும் அவதூறு மட்டிலும் என்பதை அழுத்தம் திருத்தமாககச் சுட்டுகிறேன்.

    முறையான கருத்துப்பரிமாற்றம் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் சார்ந்தது. தாங்கள் சாவர்க்கர் மீது எழுப்புபவை அவதூறுகள் மட்டிலும்.பச்சையான புறங்கூறல். சிறு பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படும் பாடம் புறங்கூறாதே. மூத்தோர் புறங்கூறலில் இறங்கினால் என் செய்வது?

    ஔவியம் பேசேல்

    வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே – மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரம் சொன்னார் மனை.

    போன்ற ஔவைப்பாட்டியின் கருத்துக்களை கருத்து நேர்மையின்றி கருத்துச் சமநிலையின்றி இளைய வாசகர் யாரேனும் பகிர்ந்தால் இடித்துறைக்க வேண்டியது மூத்தோர் கடமை. ஆயின் மூத்தோரே நிதானம் தவறல் எமது நிலைப்பாடு என்றிருந்தால் என் சொல்வது?

    ஸ்ரீ இந்தியன் அவர்கள் PRIMARY EVIDENCE ஏதும் தாங்கள் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்கள். எனது குற்றச்சாட்டு PRIMARY என்ன SECONDARY என்ன EVIDENCE என்று எதுவும் நீங்கள் இதுவரை எதையும் சமர்ப்பிக்கவில்லை. துரத்ருஷ்ட வசமாக நீங்கள் copy paste venture படி சமர்ப்பித்த EVIDENCE உங்களுடைய கருத்தையே பொய் என நிரூபித்தது.

    சாவர்க்கர் பொய் சொன்னார் என்று சொன்னதை நீங்கள் இதுவரை காந்தியடிகளின் கொலை வழக்காவணங்கள் சார்ந்து ஏதும் நிரூபிக்கவில்லை. அது உங்கள் புனைவு மட்டிலும். ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது ஆதாரங்களைச் சாராததால் பச்சைப்பொய்யே.

    ஆனால் “காந்தியடிகள் இறந்ததற்கு சாவர்க்கர் வருந்தினாரா. காந்தியடிகள் இறந்ததை சாவர்க்கர் கொண்டாடினார்” என்று நீங்கள் சொன்னது பச்சைப்பொய் என்பது நீங்கள் இந்த தளத்தில் பகிர்ந்த ஆவணங்களாலேயே கையும் களவுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பொய் சொல்லாதீர்கள். பொய் சொல்வது தவறு.

    இந்த பாகத்தில் காந்தியடிகளின் மரணத்தைச் சாக்காக வைத்து தாங்கள் க்றைஸ்தவ மதமேட்டிமையைப் பரப்பியமையும் அப்பட்ட ஹிந்து வெறுப்பைப் பகிர்ந்தமையும் விவாதிக்கப்பட்டுள்ளது. .குறிப்பான விஷயங்கள் சாரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது

    தங்கள் தகவற்பிழைகள் மற்றும் பொய்களை சுட்டுமுகமாய். முதல் பாகத்து விஷயங்கள் எதற்கும் தாங்கள் சான்றாதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை. இந்த பாகத்தில் என்ன கருத்துக்கள் பகிர்கிறீர்கள் என மேற்கொண்டு பார்ப்போம்.

    1. ஹிந்துக்கள் மட்டிலும் தங்கள் வேதங்களை தேவ வாக்கு என்று கருதுவதாக அறியாமையின் பாற்பட்டு ஒரு கருத்தை ஹிந்துக்கள் மீது திணிக்க முயன்றீர்கள். விஷயம் விளக்கப்பட்டுள்ளது. அறியாமை அகல்வதாக. இதை பொய் என கருதவில்லை. போகட்டும்.

    2. ஹிந்துஸ்தானத்தில் நடந்த மதக்கலவரங்களை ஹிந்துக்கள் மட்டிலும் மாற்று மதத்தினர் மீது நிகழ்த்திய படியாக ஹிந்துக்களின் மீது உங்கள் வெறுப்பைப் பகிருமுகமாக வ்யாசத்தில் முன்வைத்துள்ளீர்கள். மாற்று மதத்தினர் ஹிந்துக்கள் மீது நிகழ்த்திய படுகொலைகள் அவற்றுக்காக நீதிமன்றங்கள் மாற்று மதத்தினருக்கு தண்டனை கொடுத்துள்ளமை அனைத்தும் பொய்?

    மதப்பூசல்களில் இறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் நாம் வருத்தப்படுவது வரை மதஒற்றுமை என்பது வெறும் பேச்சு என்று கருத்துப்பதிந்துள்ளேன். காந்தியடிகளின் பேரைச் சொல்ல விழையும் ஒரு அன்பர் லவலேசமாவது கருத்துச்சமநிலையுடன் கருத்துப் பகிர வேண்டும் என நான் எதிர்பார்ப்பது தவறானால் என்னை க்ஷமிக்கவும்.

    மாற்று மதத்தவர் ஹிந்துக்கள் மீது நிகழ்த்தும் தாக்குதல்களையும் அதில் ஹிந்துக்கள் படுகொலைசெய்யப்படுவதையும் நீங்கள் மறைக்க விழைவதாகக் கருதுவதா அல்லது ஆதரிப்பதாகக் கருதுவதா?

    3. காந்தியடிகள் என்ற மனிதரை ஸ்ரீ கோட்சே கொன்றதற்கு கண்ணீர் வடிக்கும் (மற்றவர் கண்டனம் செய்தாரா என்று கேழ்வி கேட்கும்) நீங்கள் காந்தியடிகள் க்றைஸ்தவ மதமாற்ற வெறித்தனத்தைச் சாடியதை எப்படிப் புறந்தள்ளுகிறீர்கள். புனைவுகளை மட்டிலும் முன்வைக்கும் நீங்கள் ஸ்ரீமான் வேதம் கோபால் அவர்கள் க்றைஸ்தவ மதமாற்ற அவலங்களைக் காந்தியடிகள் சாடியதை திகதி வாரியாக சஞ்சிகைகள் வாரியாக முதல் பாகத்தில் பட்டியலிட்டதை மறுபடியும் வாசிக்கவும்.

    மிகக்கசப்பான ஆனால் நிதர்சனமான விஷயம். க்றைஸ்தவ மதமாற்ற வெறி என்ற அசிங்கத்தைத் துடைத்து எறிய வேண்டிய use and throw காகிதமாக மட்டிலும் தங்கள் வ்யாசத்தில் காந்தியடிகள் மற்றும் அவர் உகந்த மலைப்ரசங்கம் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன என்று தானே காந்தியடிகளின் க்றைஸ்தவ மதமாற்றம் பற்றிய கருத்துக்கள் சுட்டுகின்றன.

    ஸ்ரீ நாதுராம் கோட்சே துப்பாக்கியால் காந்தியடிகளைக் ஒரு நிமிடத்தில் கொன்று விட்டார். ஆனால் தாங்கள் ஹிந்து மதவெறுப்பு மற்றும் காந்தியடிகளின் க்றைஸ்தவ மதமாற்றுக்கருத்துக்களை புறந்தள்ளல் மத ஒற்றுமை என்ற பேரில் அப்பட்டமான மதவெறுப்புக்கள் மற்றும் மதவிரோதங்களுக்கு தூபம் போடுதல் மூலம் காந்தியடிகளின் கருத்தாக்கங்களை சித்ரவதை செய்து வருகிறீர்கள். கோட்சே செய்ததை விடக்கொடுஞ்செயல் இது. கருத்து நேர்மையற்றது.

    4. ஹிந்துக்கள் பௌத்தர்களை விரட்டினார்கள் என்று கதை சொல்லியுள்ளீர்கள். ஏசுபிரான் சரித்ரத்தில் இருந்தது, சாவர்க்கர் பொய் சொன்னார் என்று நீங்கள் சொல்வது போல இதுவும் உங்கள் கதையா? அல்லது ஆதாரங்கள் ஏதும் நீங்கள் முன்வைக்க முடியுமா?
    வெறும் புனைவுகளையோ உரல்களையோ முன்வைக்காது (copy paste misadventure ல் இறங்காது) உருப்படியாக ஏதும் ஆவணங்களை முன்வைக்க முயலவும்? பௌத்த மத சாஸ்த்ரங்களை குறிப்பிட்டுச் சொல்லவும்? அப்படி வைக்கப்படாவிடில் இதுவும் தங்களது பொய்ப்பட்டியலில் சேர்க்கப்படும்.

    5. மீதி இருக்கும் பௌத்தர்கள் முடங்கியுள்ளார்கள் என்பது வெறுப்பின் பாற்பட்ட பொய் என்பதைத் தெள்ளெனத் தெளிவாக விளக்கியுள்ளேன். பௌத்த சாஸ்த்ரங்களை அறவே நாடாது அவர்கள் ஹிந்து சமயத்தினருடன் பகிரும் இணக்கமான விஷயங்கள் யாவை என்பதை விசாரிக்கக்கூட இல்லாது ——- ஸ்ரீ பாரதிதாசனார் வேடதாரி, ஸ்ரீ சாவர்க்கர் பொய் சொன்னார் என்ற ரீதியில் ——- தாங்கள் முன்வைக்கும் hit and run பொய்கள் repetetive shouting devoid of documentary evidence போன்ற பொய்கள் இவை. இது போன்ற பொய்கள் சொல்வதைத் தவிர்க்கவும்.

    6. சீக்கியர்களுக்கு ஹிந்து மத அடிப்படை வாதிகள் தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்று அடுத்த தகவல். இதற்கு ஏதும் ஆதாரம் கொடுக்க முடியுமா? அல்லது இதுவும் தங்களது hit and run comment ஆ? ஒற்றுமையாக இருக்கும் சஹோதரர்களைக் கூட க்றைஸ்தவ மதமாற்றத்தை முன்னிறுத்தி ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி எடுக்க வேண்டுமோ? இது காந்தியடிகளுக்குக் கூட அடுக்குமோ?

    பௌத்த சாஸ்த்ரங்களில் எனக்குப் பரிச்சயம் உள்ளதால் சனாதனிகள் பௌத்தர்களுடன் சம்வாதத்தில் உள்ளது எனக்குத் தெளிவாகத் தெரியுமாதலால் ஹிந்துஸ்தானத்தின் பல மாகாணங்களில் பௌத்த மடாலயங்களில் நேரில் சென்று வந்துள்ளதால் உங்களது கருத்துக்கள் இது சம்பந்தமாகப் பொய் என ஆதாரங்களுடன் (பௌத்தர் அவதாரமாக ஹிந்து நூற்களில் போற்றப்படுவதும் பௌத்தரை ஹிந்து தெய்வங்கள் பௌத்த சாஸ்த்ரங்களில் வணங்குவதையும்) சொல்ல முடிந்தது.

    சீக்கிய குருத்வாராக்களுக்குப் போய் சீக்கிய குருக்ரந்த் சாஹேப் நூலுடன் எனக்குப் பரிச்சயமுள்ளமையால் —–ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் தாங்கள் சமய விரோத விஷத்தை விதைக்கும் வண்ணம் பகிர்ந்த கருத்தை விஷமுறிவு செய்ய முடிந்தது.

    ஒரு முறை தங்கள் வ்யாசத்தை மீண்டும் வாசிக்கவும். என் வ்யாசத்தின் இரண்டு பாகங்களையும் மீண்டும் வாசிக்கவும். உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லவும். கருத்துச் சமநிலை எங்கு பார்க்கிறீர்கள்?

    உங்கள் வ்யாசத்தில் க்றைஸ்தவ மத மேட்டிமையும் ஹிந்து மத வெறுப்பும் மட்டும் ப்ரகாசமாகக் காணப்பட்டது. மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விஷயங்கள் அறவே காணப்படவில்லை. ஆரம்பம் முதல் முடிவு வரை ஆதாரங்கள் அற்ற அடுக்கடுக்கான புறங்கூறல்கள்.

    இங்கு,

    பௌத்த சமயம் பற்றிய நல்லிணக்கக் கருத்துக்கள்
    சீக்கிய சமயம் பற்றிய நல்லிணக்கக் கருத்துக்கள்
    எமக்கு மாற்றுக்கருத்தாக இருந்தாலும் எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்த இஸ்லாமியப் பெருந்தகையைப் பற்றிய நற்கருத்துக்கள் அவர் தம் வாழ்க்கையில் ஹிந்து மஹாசபையின் அத்யக்ஷகராக இருந்த பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி உதவும் நற்பாங்கு
    க்றைஸ்தவ மத நம்பிக்கைகளை நம்பிக்கைகள் என்ற படிக்கு போற்றியமை (எதிர்க்கப்பட்டது க்றைஸ்தவ மத மேட்டிமை மற்றும் சான்றாதாரங்கள் இல்லாத ஏசுபிரானின் சரித்ர இருப்பு)
    தமிழ், சம்ஸ்க்ருதம், பஞ்சாபி, குஜராத்தி, பாங்க்ளா, ஹிந்தி, ஆங்க்லம் போன்ற பல மொழிகள் இந்த வ்யாசத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

    அது ஸ்ரீ பாரதி தாசனாராக இருக்கட்டும் அன்பர் ஈவேராவாக இருக்கட்டும் —– எனக்கு அகண்ட ஹிந்துஸ்தானத்தின் மீது அளவு கடந்த பற்றே இருக்கட்டும் —- அதற்கு ஜெனாப் மொஹம்மத் இக்பால் —– குந்தகம் விளைவித்ததாகவே இருக்கட்டும் —- உலகத்து மாந்தர்களின் குறைகளை மட்டும் பாராது அவர்களுடைய வாழ்க்கையில் நிறைகள் காணப்படின் அவற்றை மனமுவந்து ஏற்க எனது மதமும் எனது சமயமும் போதித்துள்ளது.

    மத ஒற்றுமை, மொழி ஒற்றுமை, மாகாண ஒற்றுமை எங்கு விதந்தோதப்படுகிறது. இந்த வ்யாசத்திலா உங்கள் வ்யாசத்திலா?

    காந்தியடிகள் உங்களுடைய வ்யாசத்தையும் வாசித்து என்னுடைய வ்யாசத்தையும் வாசித்தால் கண்டிப்பாக உங்களைக் கண்டிப்பார்.

    எம்மதமும் சம்மதம் என்று நீங்கள் பகிர்ந்தது உங்களளவில் உங்கள் வ்யாசத்தில் பகிர்ந்த கருத்துக்கள் படி நீங்கள் ஏற்காதது இன்னமும் ஏற்க மறுப்பது என்பது உங்கள் உத்தரங்களிலிருந்து வாசிக்கும் வாசகர்கள் அவதானிக்க முடியும். நீங்கள் ஏற்பது க்றைஸ்தவம் மட்டிலும். வெறுப்பது ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும்.

    நீங்கள் ஏற்பது க்றைஸ்தவம் மட்டிலும் என்று கருத்து நேர்மையுடன் ஏன் கருத்துப் பகிர்வதில்லை. ஏன் மத ஒற்றுமை மற்றும் எம்மதமும் சம்மதம் என பாசாங்கு செய்கிறீர்கள் — வெளிப்படையாக மத வெறுப்பையும் மத விரோதங்களையும் கூடவே பகிர்ந்து கொண்டு —– மற்றும் மத நல்லிணக்க விஷயங்களை அறவே ஒதுக்கிவிட்டு.

    எல்லோரும் காஜி நஸ்ரூல் இஸ்லாம் ஆக இருக்க முடியாது.

    குறிஞ்சிப்பூ எப்போதாவது மட்டிலும் தானே பூக்கும்.

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சாடிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவனாயிற்றே. அதன்படிக்கு எனது எதிர்வினைகள்

    பின்னும் எனக்கு குருதேவர் ரவீந்த்ரனாத் தாகூர் அவர்களின் கவிதைகளைப் பகிரும் மற்றும் ஒப்பற்ற அழகு தமிழில் விக்ஞானக் கருத்துக்களைப் பகிரும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் பால் சற்றளவும் மதிப்புக்குறையாது.

    நல்லன ஏற்போம். அல்லன புறந்தள்ளுவோம்.

    இயன்றால் இதை முயற்சிக்குமாறும் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு பரிந்துறையும் செய்கிறேன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
      பாதாள மூலி படருமே – மூதேவி
      சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
      மன்றோரம் சொன்னார் மனை. ///

      இந்த வெகுமதிகள்தான் கோட்ஸேயிக்கும், சாவர்க்கருக்கும் கிடைத்துள்ளன. அவர்கள் இறுதி மரணமே அதற்குச் சான்று.

      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டதும், பொங்கி எழுந்த இந்துக்கள் பலர் நூற்றுக் கணக்கான சீக்கிய அப்பாவிகளை அடித்து, நொறுக்கி, உயிரோடு எரிக்க வில்லையா ?
      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        சி. ஜெயபாரதன் says:

        ///காந்தியடிகள் ஹிந்துக் குடும்பத்தில் பிறந்து ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துவாக இறந்து ஹிந்துவாக அந்திம சம்ஸ்காரம் செய்யப்பட்ட ராம பக்தர். வைஷ்ணவ இலக்கணப்படி வாழ்ந்திறந்த மகான். எல்லா மதங்களையும் மதித்த காந்தியடிகள் மலைப்ரசங்கத்தால் கவரப்பட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவரது வாழ்க்கை வைஷ்ணவ லக்ஷணங்களால் வழிநடத்தப்பட்டது என்பதும்.////
        அத்தகைய உத்தமரைத் தேசப் பிதாவைக் கோட்ஸே கொன்றது தவறா, நியாயமா, குற்றமா, துரோகமா ? அந்த மனித வெறிக்கு கோட்ஸேயின் சம்பந்தி சாவர்க்கர் உடந்தை இல்லையா ? அந்தக் கொலைச் சதிக்கு சாவர்க்கர் மூல கர்த்தா இல்லையா ? அந்த பயங்கர்ச் சதியை அறியாதவரா சாவர்க்கர் ? அறிந்தும் சதியை ஏன் சாவர்க்கர் தடுக்க வில்லை ?

        விடுதலை நாட்டின் தேசப் பிதா காந்திஜியா ? அல்லது வன்முறை வீரர் சாவர்க்கரா ?

        சி. ஜெயபாரதன்.

    3. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ////இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

      அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

      மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

      கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்! /////
      என் கட்டுரை : “மகாத்மா காந்தியின் மரணம்”
      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        paandiyan says:

        //ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! //

        ஆமாம் கண்டிப்பாக பண்ணியிருப்பார் . கண்ணில் கண்ணீர் வருகின்றது என்று மன்மோகன் சொன்னர அதை விட கண்ணில் ரத ஆற ஓடவிட்டு புலம்பி இருப்பார் .

        //இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டதும், பொங்கி எழுந்த இந்துக்கள் பலர் நூற்றுக் கணக்கான சீக்கிய அப்பாவிகளை அடித்து, நொறுக்கி, உயிரோடு எரிக்க வில்லையா ?
        //

        இபோது இருந்தால் ஓடி ஒளிந்து மூலையில் போயி ஒக்காந்து வயிற்றை சுத்தமாகி உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடி இருப்பார்

        இதுஎல்லம் எங்களுக்கு தெரியாதா ?என்ன இப்படி பிரச்னைகளை இங்கு கொண்டுவந்ததுவ அவர்தன . அவர்சார்ந்த காங்கிரஸ் தான் வெட்டி கொன்ன்றார்கள் டெல்லியில் . நான் கேட்ட ஆதாரம் தரல்லை. அதுவா வெக்கி தலை குனிய வேண்டிய செயல்.

        //

        இந்த வெகுமதிகள்தான் கோட்ஸேயிக்கும், சாவர்க்கருக்கும் கிடைத்துள்ளன. அவர்கள் இறுதி மரணமே அதற்குச் சான்று.

        //

        இது ராஜீவ் இந்திரா சஞ்சய்க்கும் பொருந்தும் காங்கிரஸ் யை அவர் எப்படி விட்டு விட்டு போனார் என்று. அந்த சித்தாந்தாம் தான் மேல சொன்ன நபர்கள் படுகொலைகளும் . .

        //

        விடுதலை நாட்டின் தேசப் பிதா காந்திஜியா ? அல்லது வன்முறை வீரர் சாவர்க்கரா ?

        //

        வீரரர் என்றும் வீரர்தான் . அவரை வைது கிறிஸ்துவம் வளராது அகவா கிறிஸ்துவம் இங்கு அலுது புலம்புகின்றது .

    4. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்துத்துவ ஞானி திரு. கிருஷ்ணகுமார், காந்திஜி கொலைச் சதி வழக்கி்ல் வீர சாவர்க்கரும், நாதுராம் கோட்ஸேயும் பொய் சொல்லிச் சாவர்க்கரைத் தப்ப வைக்க வில்லை என்று தனிப்பட்ட முறையில் இந்து வேத நூல் பகவத் கீதை மீது கைவைத்துச் சொல்லத் தயாரா ?

      சி. ஜெயபாரதன்

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் சான்றோன்,

    அன்பர் ஷாலி அவர்கள் ஹிந்து இயக்கங்கள் காமராஜரை மட்டும் தாக்கியதாகக் குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தையே தாக்கியதாகவும் பதிந்துள்ளார். ஹிந்துஸ்தானத்தின் வடகோடியில் இருக்கும் எனக்கு வ்யாசத்தின் வெளியே சென்று சொல்லப்படும் கருத்துக்களை சரிபார்க்கவோ அதற்கு சரியான உத்தரம் அளிக்கவோ வசதி வாய்ப்புகள் இல்லை.
    தகவலில் காணப்பட்ட மிகைப்படுத்தல்களை துலக்கியதற்கு நன்றி.

    சர்வ ஸ்ரீமான் கள் கண்ணன், புனைப்பெயரில், இந்தியன்,பாண்டியன், ஷாலி, பரமசிவம் மற்றும் எமதன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அனைவருக்கும் கருத்துப்பகிர்வதற்கு நன்றி.

    எனது கருத்துக்களில் தகவற்பிழையோ கருத்துச்சமநிலையின்மையோ காணப்பட்டால் அவற்றையும் பகிருமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன். எனது பிழைகளைத் திருத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே அவற்றைக் கருதுவேன்.

    Mr.Paramasivam, with due respects,

    I like to confine myself to the points covered by me in my counter article. That does not mean that I ignore or disagree with your points.

    If you would like to discuss about the points covered in my article, I would join in your discussion, If I need to give any clarification. thank you.

    Not just in this thread, but also in the thread dealing with historicity of Jesus Christ penned by Sri Rajan Sundaravadivel, every effort was made by many persons including respected Sri Jeyabharathan to altogether derail discussion on the topic of the article and prevent a meaningful discussion. I condemned such efforts there and here too and in every other thread. Lets have a focussed discussion on the points covered in the article.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஒரு பழைய தீபம் இதழ் வாசிக்க நேர்ந்தது.

    கஷ்மீர் பெஹல்காமில் மாமலக சிவன் கோவில் என்று ஒரு ஆலயம்.

    ராதாக்ருஷ்ண பண்டித் என்ற அன்பர் கோவிலின் பூஜைகளை ஏற்றவர்.

    1990 ல் காஷ்மீர பண்டிதர்கள் தாக்கப்பட்டதால் இவர் புலம் பெயர நேரிட்டது.

    இவருடன் அன்புடன் பழகியவர்கள் ஜெனாப் அப்துல் பட் என்ற அன்பரும் குலாம் ஹஸன் என்ற அன்பரும்.

    இவர் புலம் பெயர்ந்த பின் இந்த இரண்டு முஸல்மான் சஹோதரர்களும் தினமும் கோவிலைத் திறந்து விளக்கேற்றி ஆரத்தி எடுத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் யாரும் ப்ரசாதம் பெறாமல் செல்வதில்லை இன்றும்.

    என்னதான் நாங்கள் வழிபாடுகள் நிகழ்த்தி வந்தாலும் எப்போது இக்கோவிலை ஹிந்துக்களிடம் ஒப்படைப்போமோ அப்போதே மகிழுவோம் எனவும் கூறுகிறார்கள்.

    அன்பர் ஸ்ரீ பரமசிவம் அவர்கள் தமிழகத்தில் இருக்கும் தமிழ் அன்பர்களிடம் இதைப் பகிரலாம்.

  14. Avatar
    Ram says:

    திண்ணையை ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக ஆக்கும் முயற்சியில் க்ருஷ்ணகுமார் அவர்களுடன் அனைவரும் இணைவோம்.
    தமிழன் என்றாலே குறுகிய மனம் படைத்தவன் என்று வடநாட்டவர் கூறும்போது எனக்கும் முதலில் கோபம் வந்தது. மற்ற மாநில மக்களுடன் பழகும் வரை.
    இங்கேதான் ஆரோக்யமான விவாத மேடைகள் மிகவும் குறைவு. தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவரும் சந்தித்து , ‘நலமா’ என்று கேட்டாலே அது ஒரு தலைப்புச்செய்தி! இவர்கள் விவாதித்து மக்களுக்கு நல்ல முடிவெடுப்பார் என்று கனவிலும் நினைக்க முடிவதில்லை.
    ஒருவர் தனக்கு பிடிக்காத கருத்தை சொன்னால், அவர் கூறுவது அனைத்தும் தவறு என்று கூறுவர். மேலும் தனிப்பட்ட தாக்குதலுக்கு விழைவர். இதில் கழக அரசியல் வாதிகளின் தாக்கம் வேறு. நான் தீக்குளிப்பேன் , தமிழுக்காக உயிரைவிடுவேன் என்று கருத்தற்ற ‘வீர’ வசனங்கள். அதன் தாக்கமே இங்கே ஒருவர் ‘தூக்கில் தொங்க தயாரா’ என்றார்.
    தனது கருத்து தவறு என்று நிருபிக்கபட்டால், அதை தவறு என்று ஒத்துக்கொள்ளும் வீரம் வேண்டும் (நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம் – ஜெயபாரதன் )
    ஜெயபாரதன் மீது க்ருஷ்ணகுமார் உட்பட அனைவருக்கும் மதிப்புள்ளது. அவரது அறிவியல் கட்டுரைகள் பலராலும்
    பாராட்டப்பட்டவை.
    இங்கு இந்த பக்கத்திலும் அவர் அதே நல்ல விவாத தரத்தை இனிமேலாவது கொண்டுவருவார் என்று ராமரையும், ஏசுவையும், இயற்கையையும் வேண்டுவோமாக.

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \வீர சாவர்க்கர் காந்திஜி கொலைச் சதியில் ஈடுபட்ட குற்றவாளி யில்லை என்று நீதிபதி விடுவித்த முடிவைத் தானே திரும்பத் திரும்ப வெட்டி ஒட்டி வருகிறார். அவர் எங்கே நிரபராதி என்று நிரூபித்துள்ளார் \

    ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களுக்கு நல்ல ஹாஸ்யரசம்.

    அபராதம் = குற்றம்

    அபராதி= குற்றவாளி

    நிரபராதி = குற்றமற்றவர்

    A person after being acquitted by the court of law is required to be acquitted again>>>>>>not lost balance. Take care.

    you are slowly but surely becoming out of sync……..

    Sir, You have made my day. I laughed and laughed and laughed.

    Court is the competent authority to try and punish or acquit an accused. Eventhough, you are a scientist, hope you should be well aware of this formality world over. Neither you nor me can declare Sri Savarkar or anyone a culprit or acquit him free of a crime. All one can do, if at all, one has acumen and brain enough, is to go through the court proceedings, and find whether still there are any loopholes.

    Everybody is asking your goodself as to when the court had acquitted this gentleman after thorough scrutiny and cross examination of witnesses after considering all the facts in connection with the murder trial, what is that loophole you have found in the proceedings. Share that. Go through the court proceedings and if you find anything glaring still, share it with the readers.

    To put forth pet theories like who married whom to get acquitted are laughable pet theories of a skewed hate mind set.

    hope your next theory could be one of Savarkar’s brother’s daughter’s son’s buffaloe shit in front Gandhiji’s house and that indicates that Sri Savarkar lied.

    The best commody piece I have enjoyed over a long long time. Best try. Good Night.

  16. Avatar
    Indian says:

    Mr Krishnakumar, I feel it is a waste of time to argue with the likes of Mr Jb. As they say, you can wake someone who is asleep but you cannot wake up someone who is pretending to sleep.
    It reminds me of NGOs, the Leftists, Marxists, the Indian Professors and their Indian cronies in the West, who toe the line drawn by the West,kissing their masters boot, for monetary benefits or otherwise. Modern Sepoys and Ettapans of the West, they are out there to rubbish anything that glorifies Indian and Hinduism.
    Your response was spot on. Kudos.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Mr. Indian says that it is justified for a patriotic Indian to redicule the existance of Jesus Christ and abuse Christianity Religion.

      It appears this great Mr. Indian enjoys throwing mud at others, hiding himself, inside a purdah and it is regretable that Thinnai.com editors allow this kind of unethical behaviour in a debate.

      S. Jayabarathan

  17. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Dear Krishnakumar,

    In a Court, people and witnesses have been coached by the lawyers to tell the written speech for some specific questions. Can anyone prove who is telling the truth and who is not.
    Veer Savarkar, the great bar-at-law, would go to any extent to save himself from hanging or life imprisonment.

    S.Jayabarathan

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Christian Religion has suvived 2000 years and will prolong to survive for another thousand years or more. It has the largest number of followers in the world in spite of many pitfalls, whether one likes it or not. By denying the very existance of Jesus Christ, what are you trying to establish, I do not understand.

    S. Jayabarathan

  19. Avatar
    paandiyan says:

    ஒரு பின்னூட்ட கதை — மன்னன்

    ஒரு ஊரில் ஒரு மன்னன் இருந்தான் . அவனுக்கு மன்னன் பட்டம் கிடைக்க பெரிய கஷ்டம் எல்லாம் படவில்லை . அந்த ஊரில் ஒரு கிழவன் இருந்தான், அவனுக்கு இருந்த நல்லபெயரை பயன்படுத்தி இவன் மன்னன் ஆகிவிட்டான். மன்னன் என்றால் அந்தபுரம் இல்லாமல் இருக்குமா? , வெளிநாட்டு மாதுவிடம் மயங்கிய அவனை , கிழவன் பார்த்து வெறுத்துவிட்டான் , வேறு என்ன மன்னன் கூலிப்படை வைத்து கிழவனை சுட்டுதள்ளி விட்டான். அந்தபுரம் பெரிய இடம், வேறு மதம் என்பதால் மண்னணை சப்போர்ட் பண்ணி , கிழவனை வேறு யாரோ கொன்றார்கள் என்று கதையை மாற்றி அவர்கள் கூட்டம் கதை திருப்புவதாக ஒரு கேள்வி.

  20. Avatar
    paandiyan says:

    //இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டதும், பொங்கி எழுந்த இந்துக்கள் பலர் நூற்றுக் கணக்கான சீக்கிய அப்பாவிகளை அடித்து, நொறுக்கி, உயிரோடு எரிக்க வில்லையா ?
    //

    மதமாற்ற கும்பலின் அடுத்த கட்ட பொய் ரெடி . அதாவது சீக்கியர்கள் கொன்றது இந்துகள் .நன்றாக கவனியுங்கள் .!!!

  21. Avatar
    சான்றோன் says:

    //இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டதும், பொங்கி எழுந்த இந்துக்கள் பலர் நூற்றுக் கணக்கான சீக்கிய அப்பாவிகளை அடித்து, நொறுக்கி, உயிரோடு எரிக்க வில்லையா ?//

    ஜயபாரதன் அவர்களே……

    ” படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் , போவான்
    அய்யோவென்று போவான் ”

    சற்று மனசாட்சியோடு கருத்துக்களை பதிவு செய்ய முயற்சி செய்யுங்கள்…….ஹிந்துக்கள் மீதான துவேஷம் உங்கள் கண்ணை மறைக்கிறது…..இவ்வளவு சமீபத்தில் நடந்த சம்பவங்களையே உங்களைப்போன்றவர்களால் இப்படி திரிக்கமுடிவது அதிர்ச்சியளிக்கிறது…… இந்திரா காந்தி படுகொலையைத்தொடர்ந்த சீக்கியர்கள் மீதான வன்முறை மதரீதியானதல்ல……….அது முழுக்க முழுக்க காங்கிரஸ்காரர்களால் நடத்தப்பட்ட இனப்படுகொலை……..ஜெகதீஷ் டைட்லர் , பல்ராம் ஜாக்கர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அந்த பயங்கரத்தை தலைமை தாங்கி நடத்தினார்கள்…..

    காலம் முழுக்க ஹிந்துக்களுக்கு எதிராகவே செயல்படும் நேரு குடும்பத்தைச் ஒருவர் கொல்லப்பட்டதற்காக ஹிந்துக்கள் ஏன் மற்ற மதத்தினரை தாக்க வேண்டும்?

  22. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \அத்தகைய உத்தமரைத் தேசப் பிதாவைக் கோட்ஸே கொன்றது தவறா, நியாயமா, குற்றமா, துரோகமா ? \

    தவறு

    \அந்த மனித வெறிக்கு கோட்ஸேயின் சம்பந்தி சாவர்க்கர் உடந்தை இல்லையா ? \

    அந்தத் தவறுக்கு ஸ்ரீ சாவர்க்கர் உடந்தை இல்லை நேராக அல்லது மறைமுகமாக என்பதால் நிரபராதி என நீதிமன்றம் விடுவித்துள்ளது. Both participation in a crime and abetment to crime – i.e to involve in a crime or assisting in committing a crime are punishable under laws of Hindusthan. That Sri Savarkar was acquitted by the court of law establishes that he neither committed the crime nor was there any abetment to this crime from his part.

    \அந்தக் கொலைச் சதிக்கு சாவர்க்கர் மூல கர்த்தா இல்லையா ? அந்த பயங்கர்ச் சதியை அறியாதவரா சாவர்க்கர் ? அறிந்தும் சதியை ஏன் சாவர்க்கர் தடுக்க வில்லை ?\

    My comments in English explain you that all the three above questions are nothing more than your figments of imagination our of your Hindu hate syndrome

    Sri Indian was correct Mr.Jeyabharathan. Try to avoid beating around the bush.

    You have adopted every dirty trick on the book .

    You lie.

    To establish your lie, instead of substantiating it with documentary evidence that is available for the public at large, you go on inventing your pet theories.

    To establish your lie, you have started adopting the Goebbelsian propoganda tactic of repeating your unsubstantiated lies

    To establish your lie, you have adopted the technique of shouting with filthy language

    To establish your lie, you try to gather people to shout along with you

    You may please correct me if I am wrong.

    Now counter questions on facts

    “காந்தியடிகளின் கொலையை சாவர்க்கர் கண்டிக்கவில்லை; அதை அவர் கொண்டாடினார்” என்று நீங்கள் சொன்னவை நீங்களே கொடுத்த ஆவணங்களின் மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களது அப்பட்டமான ஹிந்து வெறுப்பின் பாற்பட்டு நீங்கள் சொல்லிய இந்தப் பச்சைப்பொய்க்காக வெட்கப்படுகிறீர்களா? இல்லையா?

    ஹிந்துஸ்தான நீதிமன்றங்களின் நீதி முறைமை மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? இல்லையா?

    சாவர்க்கர் கோட்ஸேக்கு சம்பந்தியானார். மாடு சாணி போட்டது என்ற படிக்கு இல்லாமல் காந்தி கொலை வழக்காவணங்கள் சார்ந்து சாவர்க்கர் அவர்களை குற்றம் சாட்ட தாங்கள் ஏதும் சான்றாதாரங்கள் கொடுக்க இயலுமா? இல்லையென்றால் உங்களை இத்தை எழுது இத்தை எழுதாதே என நான் சொல்ல மாட்டேன். உங்கள் சான்றாதாரம் சாராத பொய்ப்பரப்புரையைத் தொடரலாம். நான் என் காலத்தை விரயமாக்கமாட்டேன் இவ்விஷயம் சார்ந்து.

  23. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \திண்ணையை ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக ஆக்கும் முயற்சியில் க்ருஷ்ணகுமார் அவர்களுடன் அனைவரும் இணைவோம்.\ஜெயபாரதன் மீது க்ருஷ்ணகுமார் உட்பட அனைவருக்கும் மதிப்புள்ளது. அவரது அறிவியல் கட்டுரைகள் பலராலும் பாராட்டப்பட்டவை.\

    ஆதரவுக்கு மிக்க நன்றி ஸ்ரீ ராம்.

    என் பன்மொழிச்சூழலில் நான் எந்த மொழி பேசினாலும் அதில் இன்னொரு மொழியின் தாக்கம் அவசியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கைதியான எனக்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் ஒரு முக்யமான ஆதர்சம். என்னுடைய ஆதர்சம் என்னுடைய பல ஆதர்ச அளவுகோல்களில் இருந்து விலகியதாலேயே இந்த வ்யாசம் எழுதப்பட்டது.

    அதில் மொழிக்குறைவு இருக்கலாம். ஆயின் கருத்து நேர்மையின்மை காணப்படவில்லை என்பது என் புரிதல். அப்படி ஏதும் சுட்டிக்காட்டப்பட்டால் அதை நான் என்னைத் திருத்திக்க்கொள்ள ஒரு வாய்ப்பாகக் கருதுவேன்.

    வெறுப்பு மற்றும் த்வேஷம் கலந்து மட்டிலும் கருத்துரையாடல் சாத்யம் என்ற பக்ஷத்தில் எனக்கு உடன்பாடில்லை. அன்பு சார்ந்து கருத்து நேர்மை சார்ந்து உரையாடல் சாத்யம் என்பது எனது பக்ஷம் மற்றும் எனது ப்ரயாசை. எனது ப்ரயாசை சபலமாக வேண்டும் என எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமானை வேண்டிக்கொள்ள இயலும். எனது ப்ரயாசையைத் தொடர இயலும்.

    \ஏசுநாதர் தந்தையின்றி ஒரு கன்னிக்குப் பிறந்தவர். குருடருக்குப் பார்வை கொடுத்தவர். செத்தவரை உயிர்ப்பித்தவர். முடவனை நடக்க வைத்தவர். பிற மதத்தினர் பைபிள் அறநூலில் இருக்கும் இவற்றை நம்ப வேண்டிய தில்லை.\

    ஸ்ரீமான் ஜெயபாரதன், முத்தான வார்த்தைகள். ஆம் எனது நம்பிக்கைக்கு இவை புறம்பானதாக இருந்தாலும் க்றைஸ்தவ மதத்தினரின் நம்பிக்கைகள் என்பதை நான் மதிக்கிறேன். போற்றுகிறேன். இதை என் வ்யாசத்திலும் சொல்லியுள்ளேன்.

    \இவற்றை நம்பாதவரும் ஏசுநாதர் வரலாற்றில் வாழ்ந்ததை நிச்சயம் நம்பலாம். \

    இங்கு நீங்கள் நம்பிக்கையை சரித்ரத்துடன் திணிக்க முயல்கிறீர்கள். சரித்ரம் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் பாற்பட்டது. நம்பிக்கையின் பாற்பட்டதன்று.

    க்றைஸ்தவர்களின் தேவ மைந்தனை க்றைஸ்தவர்கள் வணங்குவதை நான் மதிக்கிறேன். போற்றுகிறேன்.

    ஆதாரங்களின்றி அவரை சரித்ர நாயகனாக்க முயல்வது க்றைஸ்தவ மதமேட்டிமை வாதிகளின் சதி. சதியை அடையாளம் காண வேண்டும். மறுக்க வேண்டும்.

    \இவற்றை பைபிள் நூலிலிருந்து வடிகட்டினாலும், அதிலுள்ள மற்ற வழிகாட்டு அறநெறிகள் பெரும்பான்மை உலக மக்களுக்கு நற்பாதை காட்டியுள்ளன.\

    அற நெறிகள் உலகத்தில் எந்த மதத்தில் ஒழுகுபவர்களுக்கும் பொது.

    அற நெறிகள் பெரும்பான்மை மக்களுக்கு நற்பாதை காட்டுகின்றன என்பது சரி.

    பைபிளில் உள்ள மற்ற வழிகாட்டு அறநெறிகள் பெரும்பான்மை உலக மக்களுக்கு நற்பாதை காட்டியுள்ளன என்பது க்றைஸ்தவ மதத்தை ஏற்காதவரிடம் க்றைஸ்தவ மதத்தை மறைமுகமாக திணிக்கும் மத மேட்டிமை வாதம். இதை ஏற்க இயலாது.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      http://en.wikipedia.org/wiki/Major_religious_groups. [Feb. 9, 2013 Status]

      Christianity [2,000–2,200] million [33%]
      Islam [1,570–1,650] million [21%]
      Hinduism [828–1,000] million [13%]
      Buddhism [400–500] million [6%]

      Christian Religion has suvived 2000 years and will prolong to survive for another thousand years or more. It has the largest number of followers in the world in spite of its many pitfalls, whether one likes it or not. By denying the very existance of Jesus Christ, what are you trying to establish, I do not understand.

      S. Jayabarathan

  24. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \இந்திரா காந்தி ஒரு சீக்கியரால் சுடப்பட்டதும், பொங்கி எழுந்த இந்துக்கள் பலர் நூற்றுக் கணக்கான சீக்கிய அப்பாவிகளை அடித்து, நொறுக்கி, உயிரோடு எரிக்க வில்லையா ?\.

    Sir, I hope you are continuing on your comedy trail.

    ஸ்ரீமான் ஜெயபாரதன், உங்களுக்கு ஒரு பழையகால க்றைஸ்தவ பாடலை நினைவு படுத்துகிறேன்.

    தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
    அதைத் தேடியே நாளும் ஓடியே வருவாய் தினமும் நீ மனமே

    ஞாபகம் இருக்கலாம்.

    அப்படி இனிமையான ஒரு நாமத்தை நீங்கள் ஒருக்கால் தேடிச் சென்றிருந்தால் உங்கள் மொழியில் லவலேசமாவது இனிமை இருக்க வேண்டுமே. உங்களது க்றைஸ்தவ மதத்தைத் தவிர மற்ற மதத்தவர் பால் லவலேசமாவது மதிப்பு இருக்க வேண்டுமே? மாற்று மதத்தவர் பற்றி கருத்து நேர்மையுடன் உங்கள் கருத்துக்களைச் சொல்ல இயலுமே? ஏன் கருத்து நேர்மையுடன் கருத்துப் பகிர மாட்டேன் என ஹடம் பிடிக்கிறீர்கள்?

    ஸ்ரீமதி இந்திர காந்தி வதம் செய்யப்பட்ட பின்பு நடந்த கொலைவெறித்தாண்டவம் ஹிந்து சீக்கியர் கலகம் என உலகில் எங்கும் சொல்லப்பட்டதன்று. உங்கள் அப்பட்ட ஹிந்து வெறுப்பின் பாற்பட்டு நீங்கள் சொல்லும் அடுத்த பொய்.

    இந்த கொலைவெறித் தாண்டவத்தை ந்யாயப்படுத்திப் பேசியது அமரர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்கள். பெரும் வ்ருக்ஷம் வீழ்ந்தால் அருகிலுள்ள பூமி நடுங்கும் என்று சொல்லியுள்ளார். காங்க்ரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தப் படுகொலைகளை கடுமையாகக் கண்டனம் செய்துள்ளன அச்சமயத்தில்.

    காங்க்ரஸ் கட்சியைச் சார்ந்த பல பேர் இந்த கொலைவெறித் தாண்டவத்தில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் நடை பெற்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்ரீ எச்.கே.எல். பகத் இறந்து விட்டார். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களான ஸ்ரீ ஜக்தீஷ் டைட்லர் மற்றும் ஸ்ரீ ஸஜ்ஜன் குமார் போன்றவர்கள் மீது இன்னும் proverbial damocles sword தொங்குகிறது.

    கருத்து நேர்மை சார்ந்து ஹிந்துஸ்தான ந்யாயாலயங்கள் ஒருவரை குற்றம் சாட்டும் வரை நான் குற்றவாளி என சொல்ல மாட்டேன். எனது தேசத்து ந்யாயாலயங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு இல்லை என தெரிகிறது.

    வ்யாசத்தின் இந்த பகுதியை நீங்கள் வாசிக்கவில்லை எனத் தெரிகிறது.

    சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றியவர்கள் RSS மற்றும் பாஜகவினர். எந்த ஹிந்து இயக்கங்களை நீங்கள் மத அடிப்படை வாத இயக்கம் என குற்றஞ்சாட்டுகிறீர்களோ அந்த இயக்கங்கள். முக்யமாக அமரர் ஸ்ரீ மதன் லால் குரானா மற்றும் நமது முன்னாள் பாரத ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய்.

    ஹிந்து இயக்கங்கள் சீக்கியர்களின் உயிர் மற்றும் உடமையைப் பாதுகாக்க எடுத்த முயற்சியைப் போற்றியவர்கள் அமரர் சர்தார் ஸ்ரீ க்யானி ஜெய்ல் சிங்க் மற்றும் சர்தார் ஸ்ரீ குஷ்வந்த் சிங்க். இவர்களுக்கு ஹிந்து இயக்கங்களின் சித்தாந்தங்களின் மீது கடுமையான கருத்து வேறுபாடி இருப்பினும் கூட ஹிந்து இயக்கங்கள் சீக்கியர் உயிர் மற்றும் உடமைகளைக் காக்க எடுத்த முயற்சியை மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.

    காங்க்ரஸ் கட்சியைச் சார்ந்த சில நபர்கள் சீக்கியர்களைத் தாக்கியமையை ஹிந்து சீக்கிய கலஹமாகப் புனைவு செய்து பொய் சொல்லாதீர்கள்.

    காந்தி கட்சி என்றால் அந்தக் கட்சிக்காரர்கள் சிலர் செய்த குற்றங்களுக்காக அவர்களைக் குற்றஞ்சாட்டாது ஹிந்துக்களை குற்றம் சாட்டுவீர்கள்? என்ன கருத்து நேர்மை ஐயன்மீர்? என்னே காந்தி விஸ்வாசம். காந்தியடிகள் இந்த மாதிரி அடாவடித் தனங்களுக்காக நிச்சயம் மேலிருந்து கண்ணீர் விடுவார்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்,

      ///ஸ்ரீமதி இந்திர காந்தி வதம் செய்யப்பட்ட பின்பு நடந்த கொலைவெறித் தாண்டவம் ஹிந்து சீக்கியர் கலகம் என உலகில் எங்கும் சொல்லப்பட்டதன்று. உங்கள் அப்பட்ட ஹிந்து வெறுப்பின் பாற்பட்டு நீங்கள் சொல்லும் அடுத்த பொய்.///

      /// Sir, I am getting exhausted. Sri Indian is correct. Hope I too have overestimated your intellectual capacity to discuss something in a reasonable manner.////

      சீக்கியரைத் தாக்கிய காங்கிரஸ்கார இந்துக்கள் வேறா ? உதவி செய்த இந்துத்துவ இந்துக்கள் வேறா ? இந்துத்துவ இந்துக்கள் தூய இந்துக்களா, அடிப்படை இந்துக்களா அல்லது மேற்தள இந்துக்களா ? இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் முதிர்ச்சி பெற்ற மூதறிஞரான திரு. கிருஷ்ணகுமார் நமக்கு உபதேசம் செய்ய வேண்டும்.
      எல்லாரும் ஒரே இந்துக்கள் என்று பொறுப்பேற்று எப்போது எல்லாரும் இந்தியர் [இந்தியர், இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர்] என்று கற்றுக் கொள்ளப் போகிறார் ?
      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        paandiyan says:

        இங்கு இருந்து மதம் மாறியவனும் ஹிந்துதான் . அப்படி பார்த்தல் கலவரம் கரணம் இந்தியன்தான் அதை சொல்ல ஏன் மதம் மாறிகளுக்கு மனம் வரவில்லை

  25. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \கிருஷ்ண பரமாத்மா, பாரதப் போரில் குதிரை ஓட்டியாக வந்து குருச்சேத்திரத்தில் அர்ஜுனனுக்கு வேத நூல் கீதை ஓதியதாக இந்துக்கள் நம்புவதில்லையா ? வியாச முனிவர்தான் கீதை எழுதியவர். கடவுள் தேரோட்டியாக வந்து போர்க்களத்தில் எழுதினாரா ?\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    எந்த ஹிந்துவும் கண்ணன் கீதை எழுதியதாக சொல்லுவது இல்லை. ஹிந்துக்கள் சொல்லாததை ஹிந்துக்கள் மீது ஜபர்தஸ்தியாக ஏன் திணிக்கிறீர்கள்.

    வ்யாச முனிவர் எழுதியது மஹாபாரதம். அதில் ஒரு பகுதி பகவத் கீதை.

    “””பாரதப் போரில் குதிரை ஓட்டியாக வந்து குருச்சேத்திரத்தில் அர்ஜுனனுக்கு வேத நூல் கீதை ஓதியதாக இந்துக்கள் நம்புவதில்லையா””””

    முதலில் இந்த வாசகத்தில் உள்ள கருத்துப் பிழையை திருத்தினால் வாசகத்தை முறையாக விசாரணை செய்ய இயலும்.

    பகவத் கீதை பார்த்தனுக்கும் (அர்ஜுனன்) பார்த்த சாரதிக்கும் (அர்ஜுனனின் தேரோட்டியான கண்ணன்) இடையே நிகழ்ந்த உரையாடல். பகவத் கீதையில் அப்படித் தான் உள்ளது. கண்ணன் பார்த்தனுக்குச் செய்த உபதேச வடிவமாய் உள்ளது பகவத் கீதை. அந்த நூலில் உபதேசங்களைச் செய்தது பகவான் கண்ணன் கேட்டது பார்த்தன்.

    Sir, I am getting exhausted. Sri Indian is correct. Hope I too have overestimated your intellectual capacity to discuss something in a reasonable manner.

  26. Avatar
    paramasivam says:

    In this very essay Mr Krishnakumar has defined a vaishnaivaite as one who has no ego and shows empathy about the suffering of fellow human beings.He gave the above definition as the meaning of the song,”vaishnava janatho”When I have pointed about the behaviour of some vaishnavaites towards their fellow devotees at Kancheepuram,he says that I am raising irrelevant query.Is it fair MrKrishnakumar?

  27. Avatar
    paramasivam says:

    Mr Krishnakumar,in his essay part 1-in his comment dated 2nd March at 9.47 AM has stated that Vedic education is being imparted to all people in North India irrespective of religion,caste or gender.He has also stated that such vedic education is also being imparted in South India quoting Swamy Nishtananda Saraswathi.In my comment dated 3rd March,I have stated the plight of 207 Archagar trainees who got training in Govt run Vedic schools and how the vedic teachers were assaulted for giving training to people from all castes.Mr Krishnakumar left Part 1-without answering.In Part 2 essay he bracketed me also as one who raises irrelevant queries.When he writes an essay touching the lives of every citizen,he should be prepared to answer all queries.All readers may not agree with him.

  28. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், உங்கள் வ்யாசத்தில் நீங்கள் தகவற்பிழையாகச் சொல்லியுள்ள பல தகவல்களை நீங்கள் தெளிவு செய்யவில்லை.

    1. ஸ்ரீ வீர சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்ததாகச் சொல்லியிருந்தீர்கள் (ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்.) ஏதும் ஆவணங்கள் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லையென்றால் தங்கள் கருத்து தகவற் பிழையானது என ஒத்துக்கொள்ளலாமே?
    2. ஹிந்துக்கள் பௌத்தர்களை விரட்டியுள்ளார்கள் என சொல்லியுள்ளீர்கள். அதற்கு ஆதாரம் கேட்டிருந்தேன். ஆதாரங்கள் பாற்பட்டு எழுதியிருந்தால் பகிரவும். இல்லையேல் தகவற் பிழை என ஒத்துக்கொள்ளலாமே?
    3.மீதியுள்ள பௌத்தர்கள் முடங்கிக் கிடக்கிறார்கள் என எழுதியிருந்தீர்கள். நான் பௌத்த மடாலயங்கள் பலவற்றுக்கு நேரில் சென்ற படியும் வைதிக- தாந்த்ரிக-சைவ-சாக்த சமயிகள் மற்றும் மந்த்ர-தந்த்ர-வஜ்ர யான பௌத்தர்களிடையே இன்னமும் சம்வாதம் உள்ளதை அறிவேன். ஆகவே இது தவறான தகவல் என ஒத்துக்கொள்வீர்களா?
    4.காந்தியடிகள் க்றைஸ்தவ மதமாற்ற வெறியை கடும் கருத்துக்களால் சாடியுள்ளார்கள். காந்தியடிகளைப் போற்றும் நீங்கள் க்றைஸ்தவ மதமாற்ற வெறி பற்றி மௌனம் சாதிப்பதேன்?
    5.எம்மதமும் சம்மதம் என்ற கருத்தில் உங்களுக்கு உண்மையாகவே பிடிப்பு உண்டா? அல்லது நான் நம்புவது போல் என் மதம் மட்டும் எனக்கு சம்மதம். ஆயினும் மற்ற மதங்களை நான் போற்றுகிறேன் — என்ற நிலைப்பாட்டிலாவது நீங்கள் இருக்கிறீர்களா?
    6.ஹிந்துஸ்தானத்தில் நடந்த மதப் பூசல்களில் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் மதப்பூசல்களில் ஹிந்துஸ்தான நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உங்கள் வ்யாசத்தில் ஹிந்துக்களை மட்டிலும் நீங்கள் கலஹக்காரர்கள் என்ற படிக்கு சித்தரித்துள்ளீர்கள். இந்த கருத்து நேர்மையற்றது. ஆகவே தங்களது கருத்து தவறானது என ஒத்துக்கொள்கிறீர்களா?

  29. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \In a Court, people and witnesses have been coached by the lawyers to tell the written speech for some specific questions. Can anyone prove who is telling the truth and who is not.\

    In any court proceedings, apart from witnesses and cross examination of witnesses, there is another important element called ‘EVIDENCE”.

    Judgements are pronounced on the basis of examination of Evidence and oath given by the witness.

    True that judiciary world over operates on a primise that even if hundreds of culprits could get away, not a single true person is punished.

    But, the most important fact is……………

    to pinpoint that a person have escaped from the courts of law but shall be brought to books,

    one need to again look back at the papers; Ofcourse, if any unexamined evidence or witness still exist that may be brought in with NECESSARY DOCUMENTARY EVIDENCE

    Hope that clears your genuine objection to someone escaping from the system of justice.

    TO ACCUSE A PERSON ONE NEED HARD EVIDENCE.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Mr. Krishnakumar is the glorified Godfather of the great Hinduism. He is the present day Judge who assures one 100% after 60 years that all the witnesses, N. Godse and Veer Savarkar, all uttered truth, nothing but truth and nobody lied in Gandhi’s murder trial.

      I do not believe him nor his Hinduthva satellites with their vague and caustic comments or statements.

      S. Jayabarathan

  30. Avatar
    Indian says:

    Mr Krishnakumar. See above comments of Mr JB. Is there a point in responding to his infantile tantrums? Mr JB’s response so far has been muddled up gobbledygook with nauseating hatred for everything on our Dharmic culture and Hinduism.
    I have read numerous articles from the Indian Academia in the West. They simply abhor our glorious religion. Mind you, they are all paid by their Western masters and “Modern day Sepoys ” is the term I use to describe them ( term is not my own invention).( Lately, I see it’s usage in other blogs too!!)

  31. Avatar
    paandiyan says:

    //சீக்கியரைத் தாக்கிய காங்கிரஸ்கார இந்துக்கள் வேறா ? உதவி செய்த இந்துத்துவ இந்துக்கள் வேறா ? இந்துத்துவ இந்துக்கள் தூய இந்துக்களா, அடிப்படை இந்துக்களா அல்லது மேற்தள இந்துக்களா ? இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் முதிர்ச்சி பெற்ற மூதறிஞரான திரு. கிருஷ்ணகுமார் நமக்கு உபதேசம் செய்ய வேண்டும்.
    //

    இங்கு இருந்து மதம் மாறியவனும் ஹிந்துவா இல்லை கிறிஸ்துவன ? கிறிஸ்துவன் என்றால் நாடார் கிறிஸ்துவன் செட்டியார் கிறிஸ்துவன் என்று ஹிந்து ஜாதி அடையாளம் உடன் வழம் வருகின்றான் . ஆனால் இது எமேர்ஜென்சியில் ஓடி போன, அடைகலம் தேடிய கிறிஸ்துவ பெண்மணிக்கு பொருந்தாது . ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு மாதரி , ஓடிப்போனவளுக்கு உலக பத்திரிக்கை பாராட்டு பாருங்கள் .ஹிந்து ஓடினால் கோளை , கிறிஸ்து பண்ணினால் வீரம் . இப்போது புரிகின்றதா “வீரம்” இங்கு ஏன் வெருக்கபடுகின்றது என்று?

  32. Avatar
    ஷாலி says:

    மதமாற்றத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறுகிறார்களே தவிர, சாதி தீண்டாமையை ஒழிக்கிறோம்,யாரும் மதம் மாறதீர்கள் என்று சொல்வதற்கு எவரும் இல்லை.காரணம் வர்ணத்தை,சாதியை எவரும் மாற்ற முடியாது.மண்ணில் பிறந்ததிலிருந்து மண்ணுக்குள் போன பின்பும் அது தொடரும்.மிஷநரிகள் என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் உண்டா? தாழ்த்தப் பட்ட மக்களுக்கு குலக்கல்வியை மட்டுமே கொடுத்தது ஹிந்து மதம். கிறித்தவர்கள் பள்ளிக்- கூடக்கல்வியை கொடுத்து வளப்படுத்தினார்கள்.
    உதாரணமாக,மிஷனரிகள் முதலில் வந்து இறங்கிய கேரளாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட ஈழவர்களுக்கும்,பழங்குடிகளுக்கும் கல்விக்கண்ணை திறந்தார்கள்.இன்று இந்தியாவில் கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடங்களை பிடிக்கும் மக்கள் இவர்கள்தான்.கல்விக்கடவுள் சரஸ்வதியை பெற்ற மக்களில் கைநாட்டுத்தான் அதிகம்.ஹிந்து ஆதிக்கவாதிகள் கூறுவதுபோல்,மிஷனரிகள் ஆசைக்காட்டியோ,அச்சுறுத்தியோ இதைச்செயயவில்லை.ஹிந்து மதத்தின் கொடூரமான சாதீய சமூக அடக்குமுறைதான் இதற்குக்காரணம். உதாரணமாக,கேரளாவில் நம்யூதிரி,நாயர்,கம்மாளர்,ஈழவர்,புலையர் இவர்களுக்குள் என்ன சகோதரத்துவம் இருந்தது? தொலைவில் வரும் புலையரை ஒரு நம்யூதிரி பார்த்துவிட்டாலே, நம்யூதிரியை தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்த புலையரை கொலையும் செய்யலாம்.ஈழவப்பெண்கள் இடுப்புத்துணியுடன்தான் திரியவேண்டும்.மார்பை மறைக்கக்கூடாது.அவர்களை “டாப்லெஸ் மாடல்”களாக பார்த்து மகிழ்தது உயர் சாதிக்கூட்டம்.மீறி மார்பை மறைத்த பெண்ணின் மார்பை அறுத்து ஒரு ஓலை கொட்டானில் வைத்து சந்தையில் மக்கள் பார்வைக்கு வைத்து எச்சரிக்கை செய்தது.”முலைக் கொட்டான் சந்தை” என சரித்திரம் பேசுகிறது. மதம் மாறிய பிறகே அவர்கள் குப்பாயம் அணிய முடிந்தது.பின்னோருமுறை திருவாங்கூர் மகாராஜா வீதியில் ஊர்வலம் வந்தபோது,அந்த மன்னனைப் பார்த்து,”இதுவரை எங்கள் மேலே உள்ளதைத்தானே பார்த்தீர்கள்! இப்ப கீழே உள்ளதையும் பார்த்துக்கொள்!” என்று ஆடையை தூக்கிக்காட்டினார்களாம். தாழ்த்தப்பட்ட மக்கள் வெறுக்கும் அளவிற்கு அவர்களை அடிமையாக வைத்திருந்தது ஹிந்து மதம்.ஹிந்துப்பெரியவர்கள் பள்ளிக்கூடம்,மருத்துவமனை எதுவும் ஏழைகளுக்கு கட்டவில்லை.ஆனால் ஏராளமான கோயில்களைக் கட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை கொடுத்தனர். என்ன வேலை அர்ச்சகரையும்,உற்ச்சவரையும் தூக்கி சுமக்கும் வேலை,பந்தம் கொளுத்துதல், மேளம் அடித்தால்.இந்த வேலைக்குப் பெயர்தான் “வெட்டி வேலை” சம்பளம் கிடையாது.கோவில் பிரசாதம்,சுண்டல் கிடைக்கும்.இப்படி பிறப்பின் பெயரில் மக்களை அடிமைகளாய் வைத்திருந்த வேளையில் அந்நிய ஆபிரகாமிய மதங்கள் இவர்களை விடுவித்தபடியால் ஏற்ப்படும் இயல்பான கோபம்தான் உங்களது. நன்றாக கோபப்படுங்கள்.உங்களிடம் நியாயம் உள்ளது. அன்று வெள்ளை க்ரைஸ்தவர்கள் ஆபிரகாம் லிங்கன் மீதும் உங்களைப்போலவே கடும் கோபம் கொண்டனர். அன்றைய க்ருஸ்துக்களும் இன்றைய க்ருஷ்ணாக்களும் ஆத்திரம் கொள்ள அடிப்படைக்காரணம் அடிமை விடுதலைதான்.

    1. Avatar
      paandiyan says:

      //அன்று வெள்ளை க்ரைஸ்தவர்கள் ஆபிரகாம் லிங்கன் மீதும் உங்களைப்போலவே கடும் கோபம் கொண்டனர்.//

      அது எதற்காக , இந்த மர மண்டைக்கு ஒன்னும் புரியவில்லை.. அது என்ன கறுப்பு கிறிஸ்துவன் , வெள்ளை கிறிஸ்துவன் , நம் ஜாதி மாதரி அவர்கள் கலர் வைத்து காலய்பவர்களா ? என்னது அது

    2. Avatar
      paandiyan says:

      //ஏராளமான கோயில்களைக் கட்டி //
      அதில் ஒன்னும் தவறு இல்லை? இருந்து இருந்தால் மதம் மாறிய பின்பும் கோவில் உள்ள நுழைவன் என்று ஒருவர் அடம் பிடிப்பாரா ? இல்லை நாய் கூட உள்ள போகின்றது என்னால் முடியவில்லை என்று புலம்புவார ..

    3. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      மத மாற்றம் பற்றி ஓர் உன்னத கருத்தை வெளியிட்ட மதிப்புக்குரிய நண்பர் ஷாலிக்கு எனது பாராட்டுகள்.

      இந்துமதம் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவருக்கோ, நோய் நொடியில் வருந்துவோருக்கோ, ஆறுதல் அளித்து உதவி செய்யும் மதமில்லை. அது ஞானிகளுக்கும் ஆன்மீக மேதைகளுக்கும், படித்தவருக்கும் மட்டும் எழுதப் பட்டது, உருவாக்கப் பட்டது, விருத்தி செய்யப் பட்டது. உதாரணம் : பைபிளையும், பகவத் கீதையையும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை பேர் கையில் பைபிள் உள்ளது ? எத்தனை பேர் பையில் பகவத் கீதை உள்ளது ? பைபிள் ஏழை, எளியவர், சாதாரண மானிடருக்கு எழுதப்பட்டது. பகவத் கீதை ஞானிகளுக்கு எழுதப் பட்டது. எத்தனை பேர் பைபிள் படிக்கிறார் ? எத்தனை பேர் கீதை படிக்கிறார் ?

      எளியவருக்குக் கல்வி புகட்டியதுபோல், ஏழைகட்கு எத்தனை எத்தனை தர்ம ஆஸ்பத்திரிகள் கட்டப் பட்டுள்ளன, கிறித்துவ மத நிலையங்களால் ?
      கிறித்துவ மதாதிபதிகள் மக்களுக்கு உபதேசித்து வருவது போல், நமது இந்து மதாதிபதிகள் இருக்கும் இடம் விட்டு வெளி உலகத்தில் என்ன செய்து வருகிறார் ? ஏன் கிறித்துவ மதம் உச்ச நிலையில் இருக்குது என்று இப்போது தெரிகிறதா ?
      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        paandiyan says:

        இந்தியாவில் திருட்டு இல்லை பொய் இல்லை மக்களிடம் நேர்மை இருக்கிறது இவர்களை பிரிப்பது சுலபம் இல்லை என்று இங்கு வந்து பார்த்து எழுதியவன் ஒரு அசல் கிறிஸ்துவன் . அவன் அசல் என்ப்பதால் போலிகள் மாத்ரி சென்ற மதத்தை இகழ்ந்து போன மதத்தை புகழ்ந்து பேச அவசியம் இல்லாது போயிற்று . இந்த அளவு போவேர்புள் மதம் ஏன் ஆபரிக்காவில் அடிவங்குகின்ரது , சூடானில் சுடு வாங்குகின்றது , இங்கும் இட ஒதுக்கீடு என்று ஒப்பாரி வைக்கின்றது ,

      2. Avatar
        paandiyan says:

        //ஏன் கிறித்துவ மதம் உச்ச நிலையில் இருக்குது என்று இப்போது தெரிகிறதா ?
        //
        அது தெரியாது, அனால் கல்வியில் முனேறிய மாநிலத்தில் ஒரு கையை கபக் என்று இழந்தீர்கள் அது மட்டும் புரியவில்லை

        1. Avatar
          paandiyan says:

          பீரங்கி , ஹெலிகாப்ட்டர் என்று உச்ச நிலையில் திருடுபவன் யாரு என்று தெரியுமா ? ஜாதி பார்த்து பாதிரியா என்று சண்டைபோடாமல் முத்தமிட்டு கொண்டார்கள அது தெரியுமா ?

      3. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        “இந்துமதம் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவருக்கோ, நோய் நொடியில் வருந்துவோருக்கோ, ஆறுதல் அளித்து உதவி செய்யும் மதமில்லை. அது ஞானிகளுக்கும் ஆன்மீக மேதைகளுக்கும், படித்தவருக்கும் மட்டும் எழுதப் பட்டது, உருவாக்கப் பட்டது, விருத்தி செய்யப் பட்டது”

        யப்பா யப்பா யப்பா, பொறியியலாளர் ஜெயபாரதன் எப்போது இறையியல் நிபுணராக மாறினார் ?

    4. Avatar
      paandiyan says:

      can you ans this as well??
      இங்கு இருந்து மதம் மாறியவனும் ஹிந்துவா இல்லை கிறிஸ்துவன ? கிறிஸ்துவன் என்றால் நாடார் கிறிஸ்துவன் செட்டியார் கிறிஸ்துவன் என்று ஹிந்து ஜாதி அடையாளம் உடன் வழம் வருகின்றான் . ஆனால் இது எமேர்ஜென்சியில் ஓடி போன, அடைகலம் தேடிய கிறிஸ்துவ பெண்மணிக்கு பொருந்தாது . ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு மாதரி , ஓடிப்போனவளுக்கு உலக பத்திரிக்கை பாராட்டு பாருங்கள் .ஹிந்து ஓடினால் கோளை , கிறிஸ்து பண்ணினால் வீரம் . இப்போது புரிகின்றதா “வீரம்” இங்கு ஏன் வெருக்கபடுகின்றது என்று?

  33. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    \Mr. Krishnakumar is the glorified Godfather of the great Hinduism.\

    with due respects, Sir, there are no such concepts in Hinduism. As a practicing Hindu, with all humility, I do not consider me as one.

    \He is the present day Judge who assures one 100% after 60 years that all the witnesses, N. Godse and Veer Savarkar, all uttered truth, nothing but truth and nobody lied in Gandhi’s murder trial. \

    Sir, again with all due respects, I would like to invite your attention to my earlier remarks,

    “””””””””Court is the competent authority to try and punish or acquit an accused. ””””””

    “”””””””””Neither you nor me can declare Sri Savarkar or anyone a culprit or acquit him free of a crime.””””””””””

    From the above observations made by me, I hope, you will agree with me that your goodself calling me as a judge is not acceptable to me.

    \present day Judge who assures one 100% after 60 years that all the witnesses, N. Godse and Veer Savarkar, all uttered truth, nothing but truth and nobody lied in Gandhi’s murder trial.\

    Hope your goodself would have read my below mentiond observations :-

    “””””””””””True that judiciary world over operates on a primise that even if hundreds of culprits could get away, not a single true person is punished.”””””””

    “”””””””””But, the most important fact is……………

    to pinpoint that a person have escaped from the courts of law but shall be brought to books,

    one need to again look back at the papers; Ofcourse, if any unexamined evidence or witness still exist that may be brought in with NECESSARY DOCUMENTARY EVIDENCE””””””””””””

    That very clearly expresses my opinion that there are possibilities for a culprit to escape the judiciary system. But, to brand him or anyone else culprit, I hope, your goodself would agree with me that simply accusing someone will not serve the purpose, unless and until one provide NECESSARY DOUCMENTARY HARDCORE EVIDENCE””””””””””

    Since Godse had been convicted and punished and Sri Veer Savarkar has been acquitted by the courts of law of Hindusthan, I have every reason to believe that what had been uttered in our courts on oath are true and nothing other than truth unless your goodself or anyone else have material worth the name to prove it otherwise.

    I have every reason and right to believe in the HONESTY AND INTEGRITY of the courts of law of Hindusthan and unless and until otherwise proved, I have no reason to doubt the judgments pronounced by them.

    I do not deny some one putting a question mark on the judgments pronounced by the courts of law;

    BUT, PUT A QUESTION MARK ——– ONLY ——— IF ONLY——— YOU HAVE SUFFICIENT MATERIAL ——— HARDCORE EVIDENCE AT YOUR HAND TO DOUBT THE JUDGMENT PRONOUNCED.

    Again with all due respects, your goodself is simply throwing mud and maligning Sri Veer Savarkar, even after he is being acquitted by court with out submitting a single or half a line of hardcore evidence.

    IN ALL HUMILITY, THAT IS NOT A HONEST WAY OF DISCUSSING AN ISSUE LIKE THIS.

  34. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \By denying the very existance of Jesus Christ, what are you trying to establish, I do not understand. \

    Respected Jeyabharathan,

    You are trying to derail the discussion and doing all sorts of misinterpretation by sorts of adding up words into the mouth of people and intentionally dropping extremely relevant words to distort the discussion.

    The above one is such an example.

    In my article, there are n number of instances where I have expressly admitted respecting Christianity and their beliefs ****even if some of the beliefs are beyond scientific or logical scrutiny******

    What people are disputing are **********HISTORICAL EXISTENCE OF JESUS CHRIST***********.

    Nobody had denyed the *****very existence of christ****** as an *********ICON OF FAITH*********

    If any of my Hindu brethern say that ******** I BELIEVE IN DURGA MATHA**********, I have no problem with it, but if some one says that there was *****A HISTORICAL DURGA MATHA WHO KILLED SUMBA AND NISUMBA***********, I would surely check whether historically are there any facts and evidence to prove or disprove the fact.

    Hope your goodself could differentiate the difference between *******HISTORICAL EXISTENCE********** AND ***********EXISTENCE BY FAITH***********

  35. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \கருத்துக்களை விவாதிப்பதை விட்டு தனி மனித, அடுத்த மத துவேஷத்தில் இறங்கி விட்டோம். திரு.க்ருஷ்ணகுமாரே இதை ஒப்புக் கொள்ள மாட்டார். \திரு.ஜெயபாரதனும் திரு.ஜான்சனும் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்பதற்காக நேருவின் மீதும் அவர்கள் நம்பும் கிருத்துவ மதத்தின் மீதும் சேறு இறைப்பது அவர்தம் கருத்தை, நம்பிக்கையை மாற்ற உதவாது.\

    அன்பார்ந்த ஸ்ரீமான் கௌதமன்,

    ஸ்ரீமான் பாண்டியன் அவர்கள் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களை “தூக்கில் தொங்கத் தயாரா” என்ற படிக்கு கேழ்வி கேட்டபொழுது விசனப்பட்டு அது போன்ற கருத்தில் உள்ள கடுமையைச் சுட்டிக்காட்டியதை நான் நினைவு கூர்கிறேன்.
    அதே போன்று ஸ்ரீ பாண்டியன் அவர்களை “விட்டத்திற்குத் தாவும்” என்ற படிக்கு ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் கருத்துப்பதிந்த போதும் ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களை “bloddy liar” என்று தூஷித்த போதும், தூஷணைகளைத் தவிர்க்க விக்ஞாபித்தேன்.

    ஸ்ரீமான் பாண்டியன் அவர்களது குட்டிக்கதையில் மன்னன், கிழவன், க்றைஸ்தவப் பெண்மணி போன்ற சொற்களில் க்றைஸ்தவப் பெண்மணி என்ற சொல் மட்டும் இடறியது. ஆனால் தாங்கள் நேருவின் பெயரை இத்துடன் சம்பந்தப் படுத்தியதற்குப்பின் தான் குறைந்த சமயோசிதமுள்ள என் புத்திக்கு கதைக்கரு தட்டுப்பட்டது.

    தவறு தான். இரண்டு தவறு. அந்தத் திரியை விட்டு வெளியே விலகுதல் மற்றும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய க்றைஸ்தவ மத அவதூறு.

    \திரு.க்ருஷ்ணகுமாரின் கட்டுரைத் தலைப்பு “ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது ” என்பதே. நான் ஒரு அடி முன் வைத்து ” அடுத்த (எந்த) மத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது ” எனக் கூற விழைகிறேன்.\

    ஸ்ரீமான் கௌதமன், எனது வ்யாசத்தில் ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் மஹாத்மா காந்தியடிகளின் மரணத்தை வ்யாஜமாக வைத்து நிகழ்த்திய அப்பட்டமான ஹிந்து வெறுப்புப் பரப்புரை விவாதிக்கப்பட்டது. ஆயினும் எனது வ்யாசத்தில் க்றைஸ்தவ மத நம்பிக்கைகளை நான் போற்றுவதையும் மாற்றுக்கருத்து உள்ளவராயினும் கவி காஜி நஸ்ரூல் இஸ்லாம் அவர்களைப் போற்றுவதையும் பௌத்த மற்றும் சீக்கிய சமயத்தில் உள்ள நல்லெண்ணக்கருத்துக்களை விதந்தோதுவதையும் வாசிக்கும் அன்பர்கள் மாற்று மத நல்லெண்ணக் கருத்துக்களையும் மதிக்க விழைவார்கள் என்ற நப்பாசையிலே.

    எதிர்மறையாக மதப்பூசல்களை விசாரிக்க விழைபவர்கள் கருத்து நேர்மையுடன் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என வித்யாசமின்றி மதப்பூசல்களுக்காகவும் அதில் சிந்தும் குருதிக்காகவும் வருந்தினால் ஒழிய மத ஒற்றுமை என்ற கருத்து வெறும் பேச்சாகத் தான் அமையும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

    ஆதர்சமான கருத்து, “மத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது” என்பதே. ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்கள் வ்யாசத்தில் அப்பட்ட ஹிந்து வெறுப்பு காணப்பட்டதால் அதை ப்ரத்யேகமாய் விசாரிக்குமுகமாய் என் வ்யாசத் தலைப்பு *ஹிந்து* என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டது.

    அப்படி இருப்பினும் கூட எனது வ்யாசம் முழுதும் சமய மற்றும் மத நல்லிணக்கக் கருத்துக்கள் வ்யாசம் முழுதும் பன்முறை சொல்லப்பட்டுள்ளன என்பதை நினைவு கூர்கிறேன். தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமானால் பகிரவும்.

  36. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \I do not believe him nor his Hinduthva satellites with their vague and caustic comments or statements.\

    Respected Sri Jeyabharathan,

    Do you think if you go on abusing co contributors, just because they hold different point of view, they should reply back showering praises on you?

    And you attribute me with vague and caustic statements. don’t you think this itself is vague?

    When I have views different from that of yours, I very clearly indicate what are the views and why they are vague? look back 6-3-13 dated 3.19 timed reply of me wherein I have listed about six vague statements of your goodself for which you have not yet shared a single reply?

    If you point out any caustic statement of mine, and if there is anything offensive, I am there to correct myself.

    Do not you think that you owe an apology to this august forum for having lied that Sri Savarkar did not condemn Gandhiji’s murder and rather he celebrated it when the truth is otherwise

  37. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \சீக்கியரைத் தாக்கிய காங்கிரஸ்கார இந்துக்கள் வேறா ? உதவி செய்த இந்துத்துவ இந்துக்கள் வேறா ? இந்துத்துவ இந்துக்கள் தூய இந்துக்களா, அடிப்படை இந்துக்களா அல்லது மேற்தள இந்துக்களா ? இந்திய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் முதிர்ச்சி பெற்ற மூதறிஞரான திரு. கிருஷ்ணகுமார் நமக்கு உபதேசம் செய்ய வேண்டும்.\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் உங்களுக்கும் எனக்கும் இரண்டு கைகள் இருந்தாலும் இரண்டும் சமமாகவே இருந்தாலும் ஒன்று வலக்கை எனப்படுகிறது மற்றொன்று இடக்கை எனப்படுகின்றது என்பது எல்லோரும் அறிந்தது தானே? வலக்கையின் வேலை வேறு இடக்கையின் வேலை வேறு.

    சீக்கியரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துக்களில் சர்வ ஸ்ரீமான் கள் ஜக்தீஷ் டைட்லர், ஸஜ்ஜன் குமார் மற்றும் அமரர் ஸ்ரீ எச்.கே.எல் பகத் போன்றோர் சிலர். ந்யாயாலயங்களில் வழக்குகள் பல இன்னமும் நிலுவையில் உள்ளதால் நான் குற்றம் சாட்டப்படாதவர்களை இது வரை குற்றவாளி என்ற பதம் கொண்டு சுட்டவில்லை. மாறாக நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுவித்தவரைக் குற்றவாளி என்று கூசாமல் சொல்லும் பாங்கு தங்களுக்கே உரியதன்றோ.

    உதவி செய்த ஹிந்துக்கள் என சீக்கியர்களாலே போற்றப்பட்டவர்கள் அமரர் ஸ்ரீ மதன்லால் குரானா மற்றும் முன்னாள் பாரத ப்ரதம மந்த்ரி ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய். உதவி செய்த இயக்கங்கள் என போற்றப்பட்டவை RSS மற்றும் பாஜக.

    முதலில் சொன்ன அன்பர்கள் பெயர்களும் பின்னால் சொன்ன அன்பர்களின் பெயர்களும் வேறல்லாது ஒன்றா? விதண்டா வாதம் செய்வதற்கு ஒரு அளவு வேண்டாம்?

    நீங்கள் கருத்து நேர்மை சார்ந்து வாதம் செய்ய விழைந்தால் ஒரு மதக்கலஹத்தில் தாக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் நீட்ட விழைந்த அன்பர்களை அவர்கள் எந்த இயக்கம் சார்ந்தவர்கள் என்று பாராது அவர்கள் துன்பப்படும் அப்பாவிகளுக்கு உதவி புரிந்ததை மட்டும் கருத்தில் கொண்டு பாராட்ட வேண்டும்.

    அமரர் சர்தார் ஸ்ரீ க்யானி ஜெய்ல் சிங்க் மற்றும் சர்தார் ஸ்ரீ குஷ்வந்த் சிங்க் அவர்களுக்கு ஹிந்து இயக்க சித்தாந்தம் மீது கடும் வேறுபாடு இருப்பினும் அவர்கள் சீக்கியர்களின் உயிர் மற்றும் உடமைகளைக் காக்க விழைந்த இவர்களைப் போற்றியுள்ளார்கள் என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது கருத்து நேர்மையின் பாற்பட்டது.

    கருத்து நேர்மையற்றவர்களும் கருத்துச் சமநிலையற்றவர்களும் தான் அப்பாவிகளைத் தாக்குபவர்களையும் தாக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் கொடுப்பவர்களும் ஒன்று என சாதிக்க முடியும்.

    ”””””இந்துத்துவ இந்துக்கள் தூய இந்துக்களா, அடிப்படை இந்துக்களா அல்லது மேற்தள இந்துக்களா ? ””””””’ என்ற கருத்து முனைந்து பேசுபொருளை திரிக்க விழையும் சம்பந்தமில்லாத கூற்று.

    ஹிந்துக்கள், முஸல்மான் கள், க்றைஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் பௌத்தர்கள், சீக்கியர்கள் என அனைத்து சமயத்தவரையும் விதந்தோதியது என் வ்யாசமா அல்லது உங்கள் வ்யாசமா என நினைவு கூறவும்.

    நீங்கள் ஹிந்துக்களை மட்டும் வெறுத்து க்றைஸ்தவர்களை மட்டிலும் விதந்தோதியதால் அன்றோ இந்த வ்யாசம் எழுத நேர்ந்தது.

    இது வரையிலும் தாங்கள் உத்தரங்கள் வாயிலாகவும் ஹிந்துக்களை வெறுப்பதையும் க்றைஸ்தவ மத மேட்டிமையும் தொடர்ந்தே வருகிறீர்கள். மாற்று மதத்தவரைப் பற்றி நீங்கள் கூறிய ஒரு நல்லிணக்கக் கருத்து உங்கள் வ்யாசத்திலிருந்தோ அல்லது உங்கள் உத்தரத்திலிருந்தோ காட்ட இயலாது என்பதையும் நீங்கள் நினைவு கூறவும்.

    அவ்வாறிருக்க ஹிந்து முஸல்மான் மற்றும் க்றைஸ்தவர் அனைவரும் ஹிந்துஸ்தானி என்று கருதாத தாங்கள்

    “”””””””””எல்லாரும் இந்தியர் [இந்தியர், இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர்] என்று கற்றுக் கொள்ளப் போகிறார் ?”””””””””””

    என்று கூறுதலில் பொருளில்லை

    பொய் சொல்லலாகாது ஐயா

    கூறிய பொய்களுக்கு வருந்தி மேலும் பொய் சொல்வதைத் தவிருங்கள்.

    1. Avatar
      paandiyan says:

      //சீக்கியர்களின் உயிர் மற்றும் உடமைகளைக் காக்க விழைந்த இவர்களைப் போற்றியுள்ளார்கள் //
      இது சம்பந்தமாக பாரதி மணி எழுதிய பல நேரம்களில் பல மனிதர்களை திரு கிருஷ்ணகுமார் படித்து இருப்பார் என்று நம்புகின்றன். இணையத்தில் கூட இப்பொழுதும் படிக்கலாம். அவர ஒரு சீக்யருக்கு அடைக்கலம் தத்தையும் படிக்கலாம் . தவிர ஒரு பஞ்ச் மாத்ரி அவர் சொன்ன விதம் — ஒரு பிரதமர் என்றால் ஆலோச்னைகளை கேட்டு நடக்க வேண்டும் தான்தோன்றி தனமாக முடிவு எடுக்க கூடாது.
      பாதுகாப்பில் மாற்றம் வேண்டும் என்று சொன்னால் கேட்டு தொலைக்க வேண்டியதுதான

  38. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    Mr.Paramasivam,

    two different issues. Ethical understanding and factual interpretations.

    Vedic education to all irrespective of gender, creed and Religion

    Worship in temple by all.

    On above two issues, although these are not points of discussion in my current article,

    By knowing personally in North Hindusthan that Vedic education is provided to one and all and as I read through Swami vedanishtananda Saraswati maharaj in this forum that such facilities are available in thamizhnadu also I shared the information in respect of former issue Further, I shared about performance of puja in Mamalaka siva temple at Pehalgam by Moslem brethern, Kashmir.

    By these, I shared my ethical understanding and acceptability of above issues.

    I am living thousands of miles away from thamizhnadu.

    Regarding what you wrote are happenning at thamizhnadu, Since I am not well aware of what is happenning there, I can only say that what I ethically endorse as above should happen there at thamizhnadu and elsewhere. My prayers to Lord Muruga that sense prevail to people.

    I would request you, to concentrate on the points of focus I have listed out in this article currently under discussion, to do justice to my efforts in penning this article.

    To divert attention to other topics, although otherwise they are very important, is indirectly doing injustice to my efforts. Hope you can appreciate this. Thank you.

  39. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    காந்தியடிகள் மதமாற்றம் பற்றி என்ன சொல்லியுள்ளார்.

    “””””””””””It is impossible for me to reconcile myself to the idea of conversion after the style that goes on in India and elsewhere today. It is an error which is perhaps the greatest impediment to the world’s progress toward peace … Why should a Christian want to convert a Hindu to Christianity? Why should he not be satisfied if the Hindu is a good or godly man?

    Harijan (30 January 1937)””””””””””

    மதமாற்றம் உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது என சொல்லியுள்ளார் காந்தியடிகள்.

    அது உங்கள் கண்ணில் படாது அல்லவா?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      காந்திஜி மதமாற்றம் கூடாது என்றார். உண்ண்மைதான், ஏழ்மையும், வறுமையும், தீண்டாமையும் வருத்தும் ஏழைகள் காதில் காந்தி சொல் ஏறாது. மதம் மாறுவதும், கட்சி மாறுவதும் தனி மனிதன் சுதந்திரம். இந்துமதத்தார் ஏழ்மை, வறுமை, தீண்டாமை நீக்க என்ன செய்தார், என்ன செய்கிறார், என்ன செய்யப் போகிறார் ?

      சி. ஜெயபாரதன்.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      2000 ஆண்டுகளாக ஹரி ஜனங்கள் தீண்டாமையை இந்தியாவில் புற்று நோயாய்ப் பரவிப் புரையோடச் செய்தது இந்துமதமே. இப்போது நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தீண்டாமையை நீக்க முடியாமல் தவிப்பதும் இந்துமதம் ஆளும் இந்தியாவே.

      சி. ஜெயபாரதன்

  40. Avatar
    புனைபெயரில் says:

    ஜெயபாரதன், பகவத் கீதையை கையில் கொடுத்து தியானம் செய்யச் சொன்னால், உங்கள் சொத்தும் நிலமும் உங்கள் கையில் தானிருக்கும்.. ஆனால், பைபிளை கையில் கொடுத்தவர்கள், உங்கள் நிலங்களைப் பிடுங்கி ஓட்டாண்டி ஆக்கியவர்கள். டையும் கோட்டும் போட்டு இங்கிலீஷில் பேசுவதால் மட்டும் நாம் இங்கிலீஷ்காரன் ஆகிட முடியாது…“When the missionaries came to Africa they had the Bible and we had the land. They said, ‘Let us pray.’ We closed our eyes. When we opened them we had the Bible and they had the land.” ::: சொன்னது யாரென்று தெரியும் உங்களுக்கு…

    1. Avatar
      paandiyan says:

      இப்படிதான் பீட்டர் பாண்டி பீட்டர் சன்முகம் என்று பெயரை மாற்றினால் எல்லாம் வந்துவிடும் என்று அங்கு போய் அவனமானபட்டு சொந்த மதத்தை விட மனமில்லாமல் அழுது புலம்புகின்றார்கள் . என் அனுபவத்தில் மதமாறிகள் அங்கு உள்ள சர்ச்சில் கூட சுததிரதம் இல்லாமல் அழுது புலம்புவதை பார்துஉள்ளான் . அந்த …ஏரிப்பு தான இங்கு கருத்து என்ற போர்வையில் வருகின்றது

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      பெர்னாட் ஷா கூறினார்: “கிறித்துவர் ஒரு கையில் பைபிளையும், அடுத்த கையில் ரொட்டியையும் வைத்து, இந்த ரொட்டி வேண்டு மென்றால் இந்த பைபிளைப் படிக்க வேண்டும் என்று சொன்னாராம். இது உண்மை. முதலில் மனிதனின் வயிறு நிரம்பதான் வேண்டும். பிறகு அவன் எதையும் படிப்பான்.

      இந்துமதத்தார் ஏழைகள் வயிற்றையும் நிரப்பவில்லை. படிக்கப் பகவத் கீதையும் தர வில்லை.

      சி. ஜெயபாரதன்

  41. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \இந்துமதம் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவருக்கோ, நோய் நொடியில் வருந்துவோருக்கோ, ஆறுதல் அளித்து உதவி செய்யும் மதமில்லை. அது ஞானிகளுக்கும் ஆன்மீக மேதைகளுக்கும், படித்தவருக்கும் மட்டும் எழுதப் பட்டது, உருவாக்கப் பட்டது, விருத்தி செய்யப் பட்டது.\கிறித்துவ மதாதிபதிகள் மக்களுக்கு உபதேசித்து வருவது போல், நமது இந்து மதாதிபதிகள் இருக்கும் இடம் விட்டு வெளி உலகத்தில் என்ன செய்து வருகிறார் ? \

    எந்தெந்த க்றைஸ்தவ அமைப்புகள் தொண்டினையே குறியாகக் கொண்டு மானுட சேவையை மகேசன் சேவையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு எமது வணக்கங்கள்.

    அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் எப்போது உண்மை பேச கற்றுக்கொள்வார்?

    அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன் மாற்று மதத்தவர் செய்யும் சேவைகளை மதிக்க எப்போது கற்றுக்கொள்வார்?

    ஹிந்து சேவை அமைப்புகளின் பட்டியல் :-

    அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்:

    சேவா பாரதி (மையம், தமிழ்நாடு கிளை ) : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
    ஜெய்பூர் கால்கள் :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்
    மாதா அம்ருதானந்தமயி மடம் – சேவைப் பிரிவு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
    சத்யசாயி சேவை அமைப்பு :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
    ஏகல் வித்யாலயா : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்
    வாழும் கலை அமைப்பு (Art of Living) :கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் – சென்னை, இந்திய கேந்திரங்கள்
    சின்மயா மிஷன் : கல்வி, மருத்துவம் & பல்வகை சேவைகள்
    அக்ஷய பாத்ரா : அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்
    அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva)
    வித்யா பாரதி :கல்வி
    வனவாசி கல்யாண் அமைப்புகள் – 1, 2

    தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

    அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை
    ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் (Isha Foundation)
    இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம் (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’
    காஞ்சி காமகோடி பீடம்
    சிவானந்த குருகுலம் & அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர் (சென்னை அருகில்)
    ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்
    வேர்கள் அறக்கட்டளை , சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)
    கிராம கோயில் பூசாரிகள் பேரவை
    சேவாலயா, சென்னை
    ஓம் பிரணவ ஆசிரமம், தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)
    இளைய பாரதம் சேவா டிரஸ்ட், சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)
    அமர் சேவா சங்கம், ஆய்க்குடி, நெல்லை மாவட்டம் (ஊனமுற்றோர் மறுவாழ்வு)
    ரீச் ஃபவுண்டேஷன், சென்னை – கோயில் பராமரிப்பு & சீரமைப்பு, கலை & வரலாற்று விழிப்புணர்வு இயக்கம்

    பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:

    விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி – அருணாசலப் பிரதேசம்
    ஹிந்து சேவா பிரதிஷ்டானம் – கர்நாடகம்

    ஈழத்தில் ஹிந்து சேவை அமைப்புகள்

    யாழ.தொண்டமானாறு செல்வச்சந்நதியான் ஆச்சிரமம்
    யாழ.தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலய மகளீர் சிறுவர் அநாதைகள் இல்லம்
    அகில இலங்கை இந்துமாமன்றம்
    யாழ.வல்லிபுரம் பெருமாள் ஆலய பெரியாழ்வார் ஆச்சிரமம்.
    கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ராமகிருஷ்ணமிஷன்கள்
    யாழ். கொக்குவில் ராமகிருஷ்ண சேவாச்சிரமம்
    யாழ் பருத்தித்துறை சாரதா சேவாச்சிரமம்
    வவுனியா அகிலாண்டேஸ்வரர் கோவில் சிறுவர் இல்லம்
    கொழும்பு கிருஷ்ணர் ஆலய சிறுவர் இல்லம்
    மட்டக்களப்பு செங்கலடி சிவதொண்டர் நிலையம்
    கிளிநொச்சி மஹாதேவ ஆச்சிரமம்
    யாழ்.திருநெல்வேலி ஹிந்துபோட் ஸ்தாபனம்- சிறுவர் இல்லம்
    கைதடி இந்துச் சிறுவர் வயோதிபர் இல்லம்
    நயினாதீவு நாகபூஷணியம்பாள் ஆலய இலவச மருத்துவ முகாம்
    திருகோணமலை பத்திரகாளியம்பாள் ஆலயம்
    இலங்கையின் பலபாகங்களிலுமிருக்கும் சாயிசேவா சமித்திகள்…
    இலங்கையிலுள்ள வாழும் கலை அமைப்பின் கிளைகள்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்,

      இவை எல்லாம் இந்துமதத்தார் செலவு செய்து நடத்தி ஏழை, எளியவர் எல்லாம் கற்று முன்னேறி வந்தால் பாராட்ட வேண்டிய செயல்தான்.
      அப்படியனால் நாட்டில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள் நோய் நொடியில் வாடித் தெருவில் பிச்சை எடுக்கிறார் ? இந்திய மக்கள் கல்வி கற்று, வறுமையின்றி, நோயின்றி உலகில் முன்னேறி வந்து விட்டார் என்ற உறுதியாகச் சொல்கிறீரா ?
      இப்படி எல்லாம் இந்துமதத்தார் பணி புரிகையில், புனித குரு இராமகிருஷ்ணர் பிறந்த கொல்கத்தாவில் அன்னை தெரேஸாவின் கிறித்துவத் தொண்டர் பணி செய்து வருவது ஏன் என்று சொல்லுங்கள் ? அன்னை தெரெஸா ஏன் யாரும் தொடாத இந்திய ஏழைகட்குப் பல்லாண்டுகள் தொண்டு செய்தார் ?

      அன்னை தெரேஸாவை விரட்டி விட்டு இந்துமதத்தார் ஏன் அப்பணியை ஏற்று நடத்த வில்லை ?

      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:

      அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை ////
      இந்த இந்துமத அமைப்பகம் ஏழை, எளியவர், இல்லாத வருக்கு எல்லாம் இலவசமாகக் கண் சிகிட்சை, அறுவை சிகிட்சை செய்து வருகிறதா ?

    3. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திரு. கிருஷ்ணகுமார்

      இந்த பட்டியலில் உள்ளவை அனைத்தும் இந்துமதத்தார் தான் முற்றும் இலவசமாக நடத்தி வருகிறாரா ?

      இவற்றில் எவை எல்லாம் அரசாங்க நிதியில், உதவியில் இயங்குகின்றன ?

      எவை தனியார் நிதியில் இயங்கி வருகிறன்றன ? எவை எல்லாம் சங்கராச்சாரியார் நடத்தி வருகிறார் ? எவை எல்லாம் திருப்பதி கோயில் போன்ற இந்து ஆலய நிர்வாகம் நடத்தி வருது ?
      எவை எல்லாம் இந்து மகாசபை நடத்தி வருது ?
      எவை எல்லாம் இந்துத்துவா அமைப்பகம் நடத்துது ? எவை எல்லாம் பெயரவில் உயிரில்லாமல் இருக்குது ?

      வீர சாவர்க்கர் நீதி மன்றத்தில் உண்மை பேசினார் என்று துணிந்து பொய் கூறும் உம்மை நான் நம்புவாதாய் இல்லை.

      சி. ஜெயபாரதன்

  42. Avatar
    paandiyan says:

    திரு கிருஷ்ணகுமார் அவர்களின் கட்டுரைக்கு சமந்தம் இல்லாமல் கருது கொண்டுசொல்வத அவர்களின் தோல்வியும் , இவரின் வெற்றியையும் பறைசாருகின்றது. வீர சவர்க்கார் என்றார்கள் அவர்கள் பாணியில் பதில் வந்ததும் இப்போது வேறு வாக்குவாதம். ஹிந்துவை பற்றி ஹிந்துவைவிட ஓடிப்போனவன் தான் அழுது புலம்புகின்றான். ஓடியும்போகவேண்டும் , இங்கு உள்ள ஜாதியும் சேர்த்து கொண்டுபோகவேண்டும் , ஒதுக்கீடும் வேண்டும் , கோவில் உள்ளேயும் வரவேண்டும் இன்னும் என்னதான் வேண்டுமோ? கேட்டல் ஓடிப்போனபின் சுதந்திரமோ சுதந்திரம் என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது கம்பர் பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ஷாலி says: [மிரட்டல் சிறுகதை: டாக்டர். ஜான்ஸன்]
      March 7, 2013 at 4:25 am

      திரு.ஜெயபாரதன் அவர்கள் சரியான சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி நெத்தி அடியாக அடித்து விட்டார். சவார்க்கர், பெரிய கருப்பன் ரூட்டிலேயே கோர்ட்டில் தீர்ப்பு வாங்கி யதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நிரூபித்து விட்டார்.இதுதானே நம்ம கோர்ட்டு. சமூகத்தின் கூட்டு மனசாட்சிக்கு தகுந்தார்ப்போல் தீர்ப்பு சொல்வதுதான் உச்சா நீதிமன்றம். “சட்டம் ஒரு இருட்டறை.வக்கீலின் வாதம் ஒரு கை விளக்கு.” என்பார்கள்.பொதுவாக பொய் விளக்குகள் கோர்ட்டில் ஆஜராகும்போது பெரிய மனிதர்கள் நிராதிபதிகளாக வெளியே வருவார்கள்.சாவர்க்கர் என்ன சாதாரண ஆளா…பிரிட்டிஷ்காரனுக்கே பிஸ்கட் கொடுத்த பார் அட்லா.தீர்ப்பு எழுதப்பட்டு ஜெயிலுக்கு உள்ளே போனவர், வெள்ளைப் பேப்பரில் எழுதிக்கொடுத்து விட்டு வெளியே வந்தார்.கடலில் குதித்து தப்பிய சாவர்க்கருக்கு கச்சேரியிலிருந்து தப்புவது சாதாரணம்.

      ஷாலி

  43. Avatar
    புனைபெயரில் says:

    ஓடிப்போன இடத்தில் இந்துக்களுக்கு இருக்கும் மரியாதை இவர்களுக்கு கிடையாது… நேற்று பால்வாடி திறந்த போது மதம் இன்றோ நாளையோ இலவச பீஸாவிற்கு இன்னொரு மதம் மாறமாட்டார்களா என்ன என்று இவர்கள் மேல் சந்தேகம் தானே இருக்கும்…?

  44. Avatar
    ஷாலி says:

    திரு.பாண்டியன் கூறுகிறார். //வீரர் என்றும் வீரர்தான்//

    ஆம்! இவர்கள் அன்றும் இன்றும் என்றும் வீரர்கள்தான். இந்த வீரர்கள் எமர்ஜென்சியின் போதும் சரணாகதி மன்னிப்பு மனுப்போட்டாகள்.சிறை வைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் தம் தலைவன் சவார்க்கர் வழியிலேயே மன்றாட்ட மனு எழுதுகிறார்.அதில் இந்திரா காந்தியை தைரிய லட்சுமி,வீர லட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு,இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டிவிட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு –தங்கள் மீதான தடையை விலக்குமாறும்,தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்புக்கும் தொடர்பில்லை என்றும்,தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

    கருணாநிதியாவது எமர்ஜென்சி கொடுமைகளை அனுபவித்து முடிந்தபின்தான் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று சரண்டரானார்.அடி வாங்கிய பின்தான் திமுக அழுதது.ஆனால் ஆர்.எஸ்எஸ்.காரர்களோ,இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே, எண்ணிக்க…! ஆத்தா! என்று தோப்புக்கரணம் போட்ட கோழைகள்.ஆனால் இதற்க்கு ஸ்ரீ க்ருஷ்ண-பாண்டிய சான்றோன்களாகிய சேவக்குகள் பாஷையில் “வீராதி வீரர்”என்ற பொருளாம்.

    1. Avatar
      paandiyan says:

      அப்படியா? வீரர் – RSS இதற்க வித்தியாசம் சொல்லி சொல்லி மாய்ந்தார கிருஷ்ணகுமார் அதை படித்து கருது போடுகின்றீர்கள இல்லை ஒரு ஜாலியாக நம் பெயரும் வரவேண்டும் என்று கருணாநிதி மாதரி தனக்கு தான கேள்வி பதில் மாதரி சம்பந்தம் இல்லாமல் கருத்து போடுவது உங்கள் பாணியா ?வீரம் என்றால ரௌடி மாத்ரி என்று உங்களுக்குள் ஒரு வரமுறை இருப்பதால் வந்த வினை இது. அல்லது மற்றுமதம் புத்தகம் மட்டும் படித்தால் வந்த வினையாக கூட இருக்கலாம்

  45. Avatar
    ஷாலி says:

    ஸ்ரீ க்ருஷ்ணாஜி உணர்ச்சிவசப்பட்டு மூச்சுவிடாம மக்கள் சேவை லிஸ்ட் போட்டுவிட்டார்.ஹிந்துக்கள் என்று அவர் யாரை நினைக்கின்றார் என்பது இந்திய லிஸ்ட் அம்பலப்படுத்திவிடுகிறது.எல்லாம் அவருடைய முதல் வருண தலை மக்கள்.இந்த ஹிந்துக்களுக்காகவே இவர் குரல் ஒலிக்கும்.சூத்திர ஹிந்துக்கள் சேவையை கண்டுகொள்ள மாட்டார்.தமிழகத்தின் ஆன்மீக அம்மா பங்காரு அடிகள் நிறுவன சேவை.மற்றும் தருமபுரி,திருப்பனந்தாள்,மதுரை,குன்றக்குடி சைவ மடங்களின் தொண்டெல்லாம் மக்கள் சேவை அல்ல.மடச் சேவை போலும்.இன்னும் மருத்துவ சேவையையும் சேர் த்துக்கொள்ளலாம். “வாலிப வயோதிக அன்பர்களே! சித்தவைத்திய திலகங்களின் சின்னத்திரை சேவை.இலங்கையில் ஹிந்து நிறுவனங்கள் சேவை செய்கிறார்களாம்.எங்கே? முள்ளிவாய்க்கால் முள்வேலி வதை முகாம்மிலா? என்னமோ எழுதுங்க,கை தட்ட திரு.பாண்டியனிருக்க பயமேன்!

    1. Avatar
      paandiyan says:

      //முள்வேலி வதை முகாம்மிலா//
      அங்கு தி க போய் சேவை பண்ணலாமா ? அதை ஏன் கேள்வி கேக்கவில்லை நீங்கள்? சுனாமி க்கு கூட RSS தான் முதலில் ஓடி வந்தான், தி க ஓடி தான போனான்.

  46. Avatar
    Ram says:

    ///தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:
    அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை ////
    இந்த இந்துமத அமைப்பகம் ஏழை, எளியவர், இல்லாதவருக்கு எல்லாம் இலவசமாகக் கண் சிகிட்சை, அறுவை சிகிட்சை செய்து வருகிறதா ?
    //
    ஆம், அரவிந்த் கண் மருத்துவமனை இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்கிறது. இன்று மட்டுமல்ல, பல வருடங்களாக. நான் பல வருடங்களுக்கு முன் ஒரு கிராமப்பள்ளியில் படிக்கும்போது, அந்தப்பள்ளியில் முகாமிட்ட அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த நூற்றுக்கணக்கான இலவச கண் அறுவை சிகிச்சைக்கு உதவியாக , என்.எஸ்.எஸ் வாயிலாக, நானும் சிறு தொண்டு செய்தேன். பல ஏழை மக்கள் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெற்றதற்கு நானும் ஒரு சாட்சி. எல்லா மதத்தினரும் அவ்வாறு இலவச சிகிச்சை பெற்றதையும் அறிவேன். (பள்ளிக்கு வெளிப்புறம் வரை வரிசையில் நின்ற ஏழை மக்களின் உருவம் இன்றும் என் கண் முன் இருக்கிறது)

    தெரியாத ஒருவர் (அல்லது ஒரு அமைப்பை ) பற்றி அவதூறாக பேசக்கூடாது என்று ஒருவரும் உங்களுக்கு சொல்லிக்கொடுத்ததில்லையா ?

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      சான்றுகளோடு எழுதிய தகவலுக்கு நன்றி நண்பர் ராம்.

      அரவிந்த் கண் மருத்துவ மனையை நடத்துபவர் யார் ? நிதி செலவு செய்வது யார் சொல்லுங்கள். இந்துமதச் சம்பந்தப் பட்ட நிர்வாகிகளா ?

  47. Avatar
    Ram says:

    //இந்துமதத்தார் ஏழைகள் வயிற்றையும் நிரப்பவில்லை. படிக்கப் பகவத் கீதையும் தர வில்லை.
    பல இந்து மத நிறுவனங்களும், மதம் சாரா நிறுவனத்தில் உள்ள இந்துக்களும், ஏழைகளுக்கு உதவும் போது, மற்ற மதத்தினருக்கு பகவத் கீதை படிக்கத்தரவில்லை என்பது உண்மைதான்.

    பலன் எதிர்பார்க்காமல் செய்வதுதான் உதவி. தங்கள் மதத்திற்கு வருவார்கள் என்று நினைத்து செய்வது உதவி இல்லை.

  48. Avatar
    Ram says:

    //அன்னை தெரெஸா ஏன் யாரும் தொடாத இந்திய ஏழைகட்குப் பல்லாண்டுகள் தொண்டு செய்தார் ?
    அன்னை தெரேஸாவை விரட்டி விட்டு இந்துமதத்தார் ஏன் அப்பணியை ஏற்று நடத்த வில்லை ?
    //

    எனக்கு சார்வர்கரை பற்றி தெரியாது. தெரியவும் முயற்சிக்கவில்லை. அதேபோல் அன்னை தெரசாவை பற்றியும் அதிகம் தெரியாது. அதனால் அவரை பற்றி தவறாக ஆதாரம் இல்லாமல், வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம்சாற்ற மாட்டேன்.

    ஒருவரை பற்றி குறை கூறவேண்டும் என்றால், அதுவும் அவர் மறைந்துவிட்ட பிறகு, அவ்வாறு கூற தகுந்த ஆதாரம் வேண்டும். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளன் , பல்கலை கழகத்தில் ஆராய்ச்சியாளர் பட்டம் பெறும் அளவிற்கு சான்றுகளை அளித்த பின்னேயே, மறைந்த ஒருவர் பற்றி குறை கூறவேண்டும் என்பது எனது கருத்து.

    உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு ஆய்வுக்கட்டுரை வந்துள்ளது. கனடாவில் உள்ள இரு பல்கலை கழகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆராய்ந்து , ஒருவர் பற்றி குறை கூறி கட்டுரையை வெளியிட்டு உள்ளார்கள். (ஏனோ தெரியவில்லை, எனது மனம் இந்த ஆராய்ச்சி கட்டுரையை இன்னமும் நம்ப மறுக்கிறது.. சில காலம் வேண்டும் இந்த விஷயத்தை செறிப்பதற்க்கு)

    படித்து பாருங்களேன் (பிரெஞ்சு மூலம்):

    http://www.docstoc.com/docs/147462173/Les-cotes-tenebreux-de-Mere-Teresa-(Serge-Larivee-et-al-Jan-2013)

    ஆங்கில சுருக்கம்/செய்தி :

    http://www.thestar.com/news/world/2013/03/06/mother_teresas_saintly_image_comes_under_fire_in_new_study.html

  49. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    நண்பர் ராம்,

    நீங்கள் முழுக்கட்டுரை படிக்காமல் இதை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அன்னை தெரேசாவின் அரும்பணிகளை நான் மனதாரப் போற்றுகிறேன் நண்பரே.

    1. Avatar
      paandiyan says:

      அதை அனலைஸ் பண்ணி செய்தி போட்டவரும் கிறிஸ்துவன்தான் அதாவது ஒரிஜினல் மதம்மாறி இல்லை ..அதாரம் கொடுக்காமல் செய்தி இங்கு போடவில்லை ஒரு சிலரைபோல

  50. Avatar
    paandiyan says:

    ஆனால் ஒன்று வீர சவார்க்கரை இகழ்கின்ரன் என்று தங்களின் மறு, கொடூர முகத்தை, மத வெறியை இங்கு கொட்டிவிட்டார்கள். அதை கொண்டு வந்து அவர்களின்
    உண்மை முகத்தை அறிய வைத்த திரு கிருஸ்ணகுமார் அவர்களுக்கு நன்றி

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      வீர சாவர்க்கர் காந்தி கொலைச் சதி வழக்கில் பொய் சொல்லித் தப்பினார் என்பது இந்துமத எதிர்ப்பு வெறியல்ல என்பது என் வாசகம்.

      1. Avatar
        paandiyan says:

        //வீர சாவர்க்கர் காந்தி கொலைச் சதி வழக்கில் பொய் சொல்லித் தப்பினார் //
        what proof you have given so far??? 100 times asked this question..

  51. Avatar
    paandiyan says:

    உதவி என்ற பெயரில் மத மாற்றி நிறுவனங்கள் மாலத்தீவு வழியாக பணத்தை பல மடங்கு கடத்தி அமலாக்க பிரிவு விசாரணை எதிர்கொள்ள பயந்து ஓடி ஒளிவதக கேள்வி . அதை பற்றி யாராவது எழுதினால் நல்லது

  52. Avatar
    புனைபெயரில் says:

    //இந்துமதத்தார் ஏழைகள் வயிற்றையும் நிரப்பவில்லை. –> அய்யா அறிவார்ந்த சான்றோரே, ஆப்பிள் ஸ்டீவ் ஜாப், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் பசியாற்றல் பற்றியும் அவர் டொனேஷன் என்று மிக மிக அதிகமாக கொடுத்தது எந்த இயக்கத்திற்கும் என்று கூகுள் இடுங்கள். பால் பவுடர் கொடுத்து மதம் மாற என்றும் இந்து மதம் சொன்னதல்ல…. கிறிஸ்துவம், இஸ்லாம் இரண்டும் மதங்களல்ல… மனோரீதியாக பலவீனமானவர்களை தங்கள் கோஷ்டிக்கு மாற்றி ஆக்கிரமிப்ப்பு நடத்தும் அரசியல் முறைகள். இந்து மதம் ஒரு ஓப்பன் சோர்ஸ்… அது சரி மதம் மாறிய பின்னும் சரி சமம் என்ற கற்பனை சஞ்சாரம் நிதர்சனமாயிற்றா…? சரிசமம் என்பது என்றுமே நடக்காத ஒரு பித்தலாட்டம். போப்பாக நீங்கள் கோட்டாவில் வேண்டுமானால் ஒரு முறை வரலாம்… இலகுவாக அல்ல… சௌதி காஃபின் காவலராக என்ன ராமநாதபுரத்து அசேன் பாயா நியமிக்கப்படப்போகிறார்..? அப்புறம் என்ன காஞ்சி மட்டில் மட்டும் கந்தசாமி தலயாக வேண்டும் என்ற தற்குறிப் பேச்சுகள்…?

    1. Avatar
      paandiyan says:

      தான் படித்த இடத்தில் அள்ளி அள்ளி கொடுத்த டாட்டா வையும் இங்கு நாம் ஜாபகம் வைத்து கொள்ளவேண்டும். ஏதோ அவர்கள் கொடுகின்றார்கள் நாம் பிச்சைகாரர்கள் என்பது போல இருக்கிறது ஒரு சிலபேரின் கருத்துக்கள் அதர்குஅகவே இங்கு டாட்டா பதிவு

  53. Avatar
    paandiyan says:

    //இப்ப கீழே உள்ளதையும் பார்த்துக்கொள்!” என்று ஆடையை தூக்கிக்காட்டினார்களாம்.//

    அதாரம் இல்லாமல் அலந்து விடுவதில் கில்லாடி நீங்கள் கேட்டால் கதையின் போக்கை மாற்றி பழைய கன்டென்ட் கோப்பி பேஸ்ட் பன்னுவதிலும் புலமை பெற்றவர் நீங்கள். நிற்க இது உணமையா பொய்யா தெரியவில்லை .அனால் இன்றைய துணை தலைவர்.. தூக்கி ..அதில் மாட்டி சர்ச் க்கு பின்னால் ஓடி ஒளிவதாக கேள்வி . சர்ச் இங்கு எதற்கு எல்லாம் பயன்படுகின்றது பாருங்கள்.

  54. Avatar
    paandiyan says:

    http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuva-puraskar2012.pdf
    இவருக்கு, சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து, ஒரு கடிதம் வந்தது. அதில், “தூப்புக்காரி நாவல் எழுதியதற்காக இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகடமி விருது வழங்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. வரும், 22ம் தேதி, கவுகாத்தியில் நடைபெறும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. செப்பு பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் விருதாக வழங்கப்படுகிறது. இப்படி உயரிய விருதை பெற்ற மேரி புளோரா என்ற மலர்வதி, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தந்தை எலியாஸ்; தாய் ரோணிக்கம்; அக்கா லதா; அண்ணன் ஸ்டீபன். இவர், தாயின் வயிற்றில் வளர்ந்த போதே, தந்தை, குடும்பத்தை தவிக்க விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து, சென்று விட்டார். தந்தை சென்ற பின், வறுமை சூழலில் தவித்த குடும்பத்துக்கு உதவியாக, தாய் ரோணிக்கத்துக்கு, வெள்ளிக்கோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், தூப்புக்காரி வேலை கொடுக்கப்பட்டது. வெறும், 30 ரூபாய் சம்பளத்தில், மூன்று பிள்ளைகளை வளர்க்க, ரோணிக்கம், மிகவும் சிரமப்பட்டார். தன் தாய், கழிவறைகள சுத்தம் செய்யும் போது, தாயின் முந்தானையை பிடித்து நடந்த மலர்வதிக்கு, அந்த துர்நாற்றமும், பினாயில் மணமும், இன்னும் மூக்கை விட்டு விலகவில்லை. அந்த வலியும், கடினமான அனுபவமும் தான், “தூப்புக்காரி’ நாவலை உருவாக்க உதவியது என்கிறார் மலர்வதி

  55. Avatar
    Ram says:

    >>சான்றுகளோடு எழுதிய தகவலுக்கு நன்றி நண்பர் ராம்.

    ஒன் நிமிட் சி.ஜெ சார் …
    உங்க ஒரு கேள்விக்கு ஒரு விட போட்டேனா, அதுக்கு நீங்களும் நன்றி போட்டிங்களா, அதுக்கு பதிலுக்கு ஒரு நன்றி. அதே போல் நம்ப சுற்றம் நிறைய பேர் உங்கள் கேள்விக்கெல்லாம் பதில் போட்டங்கோ. அவங்களுக்கு உங்க சார்பிலே நன்னி நான் சொல்லிக்கறேன். சரியா..?

    இப்போ எல்லோரும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ப்ளீஸ். நம்ப சி. ஜெயபாரதன் அய்யா, மேலும் மேலும் கேள்வி மட்டும் கேட்காமல், விஷயத்தை கண்ட இடத்துக்கும் திருப்பாமல், யார் மேலும் கண்ண மூடிகினு சேறு அடிக்காம, சமத்து பிள்ளையா, நம்ப நொச்சு பிடிச்ச க்ருஷ்ணகுமாரின் ஆறு கேள்விக்கு டக்கு டக்குன்னு பதில் சொல்வாராம். ஓகே ?
    யாருப்பா அங்க, எல்லோருக்கும் நிறைய தண்ணி இருக்குற எளனியா வெட்டிப்போடு… சூடு கொஞ்சம் கொறயும்… நீங்க சொல்லுங்க சார்…

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் ராமையா

      ////சான்றுகளோடு எழுதிய தகவலுக்கு நன்றி நண்பர் ராம்.

      மதுரையில் அரவிந்த் கண் மருத்துவ மனையை நடத்துபவர் யார் ? நிதி செலவு செய்வது யார் சொல்லுங்கள். இந்துமதச் சம்பந்தப் பட்ட நிர்வாகிகளா ? ////

      முதலில் நான் உங்களைக் கேட்ட கேள்விக்கு நீங்கள் விடை தேடியதாகத் தெரியவில்லை. தெரிந்தால் ஏன் தெரிவிக்கத் தயக்கப்படுகிறீர் ? வீர சாவர்க்கர்,அன்னை தெரேஸா பற்றித் தெரிய முதலில் பாலர் வகுப்புக்குச் செல்லுங்கள்.

      1. Avatar
        புனைபெயரில் says:

        ஆம் அவர்கள் இந்துமதத்தினரே… மதுரை அண்ணாநகரில் சாத்தமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. அவரது சகோதரர் பெண் கோவை அரவிந்த் மருத்துவமனை நிர்வாகி. அடையாறு கேன்சர் மருத்துவமனையில் பிள்ளையார் துதியுடன் இன்றும் நல்சேவை. சென்னை சங்கர் நேத்ராலயா, காஞ்சி பெரியவர் “அமெரிக்கா வேலைக்கு போறேன் என்கிற… அப்ப இங்கு எல்லோருக்கும் கண் நல்லா தெரியுதா..?” என்ற கேள்வியால் டாக்டர் பத்ரிநாத்தால் காஞ்சி பெரியவர் ஆசியால் நடக்கிறது. கண் திறந்தவுடன் , தனது கடவுள் காட்சி தந்தாரா..? என்றெல்லாம் சொல்லி அங்கெல்லாம் மதம் மாறச் சொல்வதில்லை…

  56. Avatar
    smitha says:

    Mother Teresa was funded by christian missionaries for conversion. In her so called hospital, she allowed people to die by saying they shoudl pray instead of treating them.

    But even many hindus refrain from talking ill of her in spite of her foilies. That shows the magnanimity of hindus, which unfortunately is not reciprcoated by other religions.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      You are one 100% right Smitha. Mother Theresa was not a medical doctor, indeed. She brought home street sick people who were dying and abandoned by the local Hindus. She gave food,kind shelter,first aid and a honourable burial.

      If her humanitarian deeds converted poor Hindus, so be it. Where are the kind religious Hindus who can volunteer to do her dirty work and relace her as a Hindu Icon ?

      1. Avatar
        புனைபெயரில் says:

        மதர் தெரஸா அதற்கு பதில் திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் சாமியார்கள் போல் சிறார்களை வன்புணர்ச்சி செய்யும் பாதிரியார்களால் மனம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக போராடியிருக்கலாம்… மதர் தெரஸா சேவையின் பெயரால் , மதம் மாற்றும் அஜண்டா கொண்டிருந்தவர்…

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          புனைப் பெயரான் கிறித்துவ மதத்தார் அழுக்கைச் சுத்தம் செய்யப் பிறருக்குக் கட்டளை இடுவதற்கு முன் இந்துமதத்தார் அழுக்குகளைக் கழுவலாம்.

  57. Avatar
    Indian says:

    Mother Terea was a a missionary. Period. The book ‘The missionary position’ exposes this lady for what she was. Jut another glorified missionary bent on converting poor Hindus. Leaving it all aside, people should familiarise with this fraudulent Vatican and the Pope. Vatican is involved in money laundering,drugs, arms sales, murder, etc, etc. The CATHOLIC church is up to it’s neck in all clandestine activities. Just google on vatileaks. I will not get into the paedophile activities of their clergy and the massive cover up by the Vatcan.
    Thruvalluvar said ‘ whatever the subject, one should find the truth’. Let us not be carried away by glittering propaganda, elevating a Missionary into some sort of saint!

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ///Mother Terea was a a missionary. Period. The book ‘The missionary position’ exposes this lady for what she was. Jut another glorified missionary bent on converting poor Hindus ///

      Yes you are right. What did the Hindus do to replace her and her creative kind work. Christian Missionaries have been flourishing in India because of unkind careless Hindus. Where are the Hindu Missionaries to kick out the Christian ones, doing similar humanitarian service ?

      ////Vatican is involved in money laundering,drugs, arms sales, murder, etc, etc. The CATHOLIC church is up to it’s neck in all clandestine activities. Just google on vatileaks. I will not get into the paedophile activities of their clergy and the massive cover up by the Vatcan.///
      Poor hungry and sick street people in India do not bother about Vatican politics, when kind people like Mother Theresa have been doing humanitarian work.
      Please name one or two present Mother India whom you can glorify as the Hindu Saints.

  58. Avatar
    paandiyan says:

    //ஏன் கிறித்துவ மதம் உச்ச நிலையில் இருக்குது என்று இப்போது தெரிகிறதா ?//
    about Raul Vinci (Rahul Gandhi) வெளிநாட்டில் கிறிஸ்துவனாகவும் இந்தியாவில் காந்தியாக வலம்வரும் இவர் உண்மையான கிறிஸ்துவன இல்லை காந்தியின் பக்தன ? இல்லை கிறிஸ்துவர்கள் எல்லாரும் இந்த type ஆ ? இப்படிதான் இந்த மதம் உச்சம் தொடுமா ?

    1. Avatar
      Ganapathi Raman says:

      Whether you wear half trousers or an alien gown, what matters is what you do. One can be a paedophile in half trousers or a rapist in an alien gown. Or, one can be a charitable person in either dress. So, don’t give importance to what you wear.

      Jeyabarathan’s repeated question is:

      Where is the Hindu icon to replace Mother Teresa in Kolkata? Has any Hindu picked up the dying poor from the street, taken them to a hospice and helped them face death with dignity?

      She lived for many decades in Kolkata. Has any Hindu come forward to bring the dying poor to shade and gave them succour? Only she did. Will the dying poor care whether the helper has a motive or not?

      For the poor, God appears in the form of bread.

      Show an Hindu equivalent to Mother Teresa.

      Answer his question first.

      1. Avatar
        paandiyan says:

        அப்படிஒரு வறுமையை அங்கு கொண்டு வந்தத கிறிஸ்துவன்தான் வெளிநாட்டில் இருந்து முடிந்தால் படிக்கவும் சமீபத்தில் கூட ராமகிருஷ்ணன் பதிவு பண்ணி உள்ளார் தக்க ஆதரதுடன்.

        அவரக்கு போட்டிய இங்கு நடதுகின்ர்றோம் இவரை பாரு அவரை பாரு என்று இங்கு? பரந்த பாரதத்தில் எத்தனையோ பேர்கள் இருகின்றார்கள்.. அரவிந்த் கண் என்று போட்டால் எக்ஸ் டாக்டர் என்று பேருடன் கூகுளே தரபோகின்றது. அது மாத்ரி தேடுங்கள் , கிடைக்கும் . இப்படி அவர் கேட்டார் என்று வருவதற்கு நீங்கள் முதலில் படித்துவிட்டு வாருங்கள்

        1. Avatar
          IIM Ganapathi Raman says:

          No…no.

          You are evading the core point Jeyabarathan wrote about.

          It is that, the Christian missionaries came to India even before the British Raj proper came into being. Before that, it was East India Co. From then, till our independence, the missionaries were active and flourishing.

          Their strategy is to give both: Christianity and social service. Or, Social service with proselytizing motive.

          According to Jeyabarathan, the suffering masses needed urgent help from all kinds of social maladies of which untouchability was from Hindu religion. This social evil kept certain masses in perpetual bondage of poverty and ignorance.

          The missionaries opened educational institutions and admitted all w/o discrimination, whereas Hindu society debarred these ppl from education. While the Brahmins kept learning to themselves, the missioneries brought printing presses and printed in vernacular languages. Today, note, Krishakumar is delighted in writing manipravalam. In old times, the brahmins delighted using sanskrits so that learning could be confined to themselves. The missionaries turned the tables upon this by opening the doors of learning to the deprived sections of society i.e non brahmins.

          The result was that the masses got education and what they are now, is due to, to no small extent, to the education the missionaries imparted.

          The Hindus never thought of that. They woke up- as you see in the list given by Krishnakumar – very very late after centuries.

          In 1970s, Sankaracharya asked “Why America? have all ppl in India got treatment for their ailing eyes ? as punaipeyaril wrote.

          The same Sankarachariar, had he asked the same question three centuries before, when the missionaries opened CMC etc., Christianity would not have entered India – a point Jeyabaratan underlined and you are evading.

          Ultimately, he put the onus on your door.

          You have failed. They have succeeded.

          Or, after relentless attacks, you have woken up. So late, So little, so unknown.

          Even after that, you did precious little as seen in Kolkata.

          The streets of Kolkata existed always. The poor were dying always uncared for on the way side of streets. No one acted.

          Only after Teresa, it came to be known.

          You are neither useful to society, nor allowing people to be useful.

          1. Avatar
            paandiyan says:

            //According to Jeyabarathan//

            what do you think? we are not understand his content properly and neeed your help or any translator here? first go through the old article which he wrote and start from there to udnerstand all the points. did you see the highlight message in calcuta musueam about what they qutoted about british rule? i have personally and read those contents. are you reading the history start from few hundred years and concluding. its a biggest lost fro you. the same cristinal only wrote that india is powerful country , no theief, everywhere people happy and united, its not at all possible to divide them.. — how he concluded. do proper study.. in indiea people come , people go .. so just one lady did some job in calcutaa and the same calcutta crisitian has done enough damage as well.

          2. Avatar
            paandiyan says:

            //You are evading the core point Jeyabarathan wrote about.

            //

            what is your point, discuss here. are you acting as a mediator role for him?? or do you thnk that we are uneducated and not understand the points?

          3. Avatar
            paandiyan says:

            sir,
            what explanation you want from me? tell me. i am open to discuss. dont work as a PROXY. i know how to take the issues from others. what ever i said i have very solid proff. if you will get a chance to visit calcutta museam see the punch word they have written. i have seen personally. once upon a time Bharth is a fantastic counry and crisitan destoryed like anything. they destoryed our food in the easter area and took away to their side and then all problem started in the ease. they only brought the desiese like calara etc. go and read

      2. Avatar
        paandiyan says:

        //வீர சாவர்க்கர் காந்தி கொலைச் சதி வழக்கில் பொய் சொல்லித் தப்பினார் //
        what proof you have given so far??? 100 times asked this question..

        how many times this has been raised here? Answer his question first.

  59. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    உங்களுடைய வ்யாசத்தில் நீங்கள் எழுதிய தகவற்பிழைகள், பொய்ப்பரப்புரைகள், ஹிந்து வெறுப்புக்கருத்துக்கள் போன்ற வற்றை விஷயவாரியாக எனது வ்யாசத்தின் இரண்டு பாகங்களில் நான் பகிர்ந்ததை தாங்கள் உங்களுடைய கருத்துக்களில் உள்ள சாரம் சார்ந்து அணுகாது கண்ணாமூச்சி விளையாடுகிறீர்கள்.

    வெட்டி அரட்டைகளைத் தங்கள் பதுங்குகுழியாகக் கருதி உங்கள் சாரமற்ற கருத்துக்களைப் பற்றி மூச்சு விடாதிருக்கிறீர்கள். முதலில் உங்கள் வெட்டி அரட்டைகளை அணுகி அதன் பின்னர் கடைசீ வாய்ப்பாக உங்களுக்கு உங்கள் சாரமற்ற கருத்துக்களைத் திரட்டித் தருகிறேன்.

    இப்போது நான் உங்கள் பதுங்கு குழிக் கருத்துக்களை / கருத்து விலகல் கருத்துக்களை விசாரிக்கிறேன். இதற்கு பதிலெல்லாம் தர வேண்டாம்.

    தாங்கள் பதில் தர வேண்டியது தாங்களாகத் தங்கள் வ்யாசத்தில் உதிர்த்த கருத்துக்களுக்குத் தான். அவற்றையெல்லாம் தாங்கள் தான் எழுதியிருப்பீர்கள் என நாம்புவதால் அதற்கு மிக ப்ரத்யேகமாக பதில் எதிர்பார்க்கிறேன்.

    \காந்திஜி மதமாற்றம் கூடாது என்றார். உண்ண்மைதான், ஏழ்மையும், வறுமையும், தீண்டாமையும் வருத்தும் ஏழைகள் காதில் காந்தி சொல் ஏறாது. \

    காந்தி சொல் அம்பலமேறாது என்பது பூஜ்ய ஸ்ரீ வீர் சாவர்க்கர் மற்றும் ஸ்ரீ நாது ராம் கோட்சே போன்றோரின் கருத்து என்பது உலகம் அறிந்ததே. அவர்களை நீங்கள் விரும்புங்கள் அல்லது அவர்கள் மீது வெறுப்பைப் பொழியுங்கள். உங்களது விருப்பம். அவர்களது கருத்தில் கருத்து நேர்மை காணப்படுகின்றதே.

    காந்தி சொல் அம்பலமேறாது என நீங்கள் சொல்வதில் கருத்து நேர்மை இல்லை என்பதை இங்கு வாசிக்கும் வாசகர்கள் அவதானிப்பார்கள்.

    காந்தி சொல் அம்பலமேறாது என்ற விஷயத்தில் உங்களுக்கும் பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர் மற்றும் ஸ்ரீ நாதுராம் கோட்சே போன்றோரிடையே எந்த வித்யாசமும் இல்லை.

    வித்யாசம் அவர்கள் தங்கள் கருத்துக்களில் தெளிவாக இருந்தார்கள்.

    ஆனால் தாங்கள் காந்தியடிகளுடன் மற்றும் அவர் தம் கருத்துக்களுடன் நுனிக்கிளையில் உட்கார்ந்து மேற்கண்ட சதிக்கருத்துக்கள் மூலம் அடிக்கிளையை வெட்டிக்கொண்டு காந்தியடிகளுக்கும் அவருடைய கருத்துக்களுக்கும் சேவை செய்வது போல பாசாங்குக் கருத்துக்களைப் பகிர்கிறீர்கள் என்பதை வாசிக்கும் வாசகர்களால் அவதானிக்க முடியும்.

    \மதம் மாறுவதும், கட்சி மாறுவதும் தனி மனிதன் சுதந்திரம். இந்துமதத்தார் ஏழ்மை, வறுமை, தீண்டாமை நீக்க என்ன செய்தார், என்ன செய்கிறார், என்ன செய்யப் போகிறார் ? \

    க்ஷமிக்கவும். ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களை விட காந்தியடிகளுக்கு மதம், தனிமனித சுத்ந்திரம், ஹிந்து மதம், ஏழ்மை, வறுமை மற்றும் தீண்டாமை பற்றிய விஷயங்களில் அதிகமான சமூஹப் பங்களிப்பும் ஆழ்ந்த புரிதலும் இருக்கும் என்பது இங்கு கருத்துப் பகிரும் எனது புரிதல். நீங்கள் உங்கள் எழுத்துத் திறனால் அடுக்கும் காரணிகளை கருத்தில் கொண்டு அதன் பின்னர் தான் மஹாத்மா காந்தியடிகள் க்றைஸ்தவர்களால் செய்யப்படும் மதமாற்ற அடாவடித் தனங்களைப் பற்றி ஒரு முறை அல்ல பல முறை கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கிறேன்.

    இங்கு கருத்துப்பகிரும் பல அன்பர்களது புரிதலும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    \2000 ஆண்டுகளாக ஹரி ஜனங்கள் தீண்டாமையை இந்தியாவில் புற்று நோயாய்ப் பரவிப் புரையோடச் செய்தது இந்துமதமே. \

    தவறான புரிதல். வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தில்லை.

    ஹிந்து மதம் என்பது வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாட்டுமுறைகள் போன்று பலவற்றை தன்னுள் அடக்கிய மதம். ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனப்ரகாரம் நான் குறிப்பிட்டுள்ள இந்த அனைத்து மக்களும் ஹிந்துக்களாகவே கருதப்படுகிறார்கள்.

    ஹிந்து மதம் தீண்டாமையைப் புரையோடச் செய்துள்ளது என தாங்கள் கருதுவீர்களானால், வேதங்கள், பகவத் கீதை, சைவ வைஷ்ணவ ப்ராமாணிக நூற்கள், பௌத்த ஜைன சீக்கிய ப்ராமாணிக நூற்கள் மற்றும் நாட்டார் வழிபாட்டு முறைகள் இவற்றைச் சார்ந்து இந்த விஷயத்தை விளக்க முயற்சித்திருக்க வேண்டும். அது இயலாது.

    சரியான புரிதல் ஹிந்துக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் தீண்டாமை என்ற இந்தக் கொடிய விஷத்தை அனுமதித்திருக்கிறார்கள் என்பது. அதை ஒழிக்க பற்பல ஹிந்து இயக்கங்களும் பாடுபட்டு வருகிறார்கள். ஆயினும் இன்னமும் முழு வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். பின்னும் ஹிந்து இயக்கங்கள் தீண்டாமை ஜாதிக்கொடுமைகள் இவற்றை ஒழிக்கச் செய்யும் முயற்சிகள் பலன் தரும் என முருகப்பெருமானை இறைஞ்சுகிறேன்.

    அதே கொடிய விஷம் த்வீபாந்தரங்களிலும் அராபிய தேசங்களிலும் காணப்படுகின்றதே. நிறவாதத்தின் மூலம் தீண்டாமையை அனுஷ்டித்த வெள்ளையர்கள் மற்றும் இதே தளத்தில் அராபிய தேசங்களில் காணப்படும் தீண்டாமை பற்றிய வ்யாசங்களும் இது உலகளாவிப் புழக்கத்தில் இருந்து வரும் மதசார்பற்ற ஒரு கொடிய சமூஹ விஷக்கோட்பாடு என்பதைப் பறைசாற்றுகிறதே.

    ஹிந்து வேத நூற்களோ பைபிளோ குரான்-ஏ-ஷெரீஃபோ தீண்டாமை போதிப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    \இந்துமதத்தார் ஏழைகள் வயிற்றையும் நிரப்பவில்லை. படிக்கப் பகவத் கீதையும் தர வில்லை. \

    பொய்ப்பரப்புரைகளை விட மாட்டேன் என நீங்கள் ஹடம் பிடிப்பது புரிகிறது.

    பல ஹிந்து இயக்கங்கள் இரண்டு கார்யங்களையும் செய்து வருகிறார்கள் என்பதை ஆயிரம் சான்றுகள் கொடுத்தாலும் கருத்து நேர்மையற்ற மனம் ஏற்காது.

    \இவை எல்லாம் இந்துமதத்தார் செலவு செய்து நடத்தி ஏழை, எளியவர் எல்லாம் கற்று முன்னேறி வந்தால் பாராட்ட வேண்டிய செயல்தான்.\

    அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் அடுத்த ஒரு மனுஷ்யர் மீது போன போக்கில் குற்றம் சாட்டி விட்டு பதுங்கி ஓடுவது என்ற நிலையைத் தானே நீங்கள் இது வரை எடுத்துள்ளீர்கள். ஒரு மனிதரை ஒரு மதத்தை ஒரு நிறுவனத்தைக் குற்றம் சாட்டுமுன்னர் முதற்கண் அடிப்படைத் தகவற்களை சேகரியுங்கள். அவற்றைச் சரிபாருங்கள். எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பண்பாடுள்ள ஒரு மனுஷ்யன் அணுக வேண்டிய முறை இது.

    \இந்த பட்டியலில் உள்ளவை அனைத்தும் இந்துமதத்தார் தான் முற்றும் இலவசமாக நடத்தி வருகிறாரா ?

    இவற்றில் எவை எல்லாம் அரசாங்க நிதியில், உதவியில் இயங்குகின்றன ?

    எவை தனியார் நிதியில் இயங்கி வருகிறன்றன ? எவை எல்லாம் சங்கராச்சாரியார் நடத்தி வருகிறார் ? எவை எல்லாம் திருப்பதி கோயில் போன்ற இந்து ஆலய நிர்வாகம் நடத்தி வருது ?
    எவை எல்லாம் இந்து மகாசபை நடத்தி வருது ?
    எவை எல்லாம் இந்துத்துவா அமைப்பகம் நடத்துது ? எவை எல்லாம் பெயரவில் உயிரில்லாமல் இருக்குது ?\

    அதாவது இதே போன்ற கேழ்விகளை க்றைஸ்தவ அமைப்புக்கள் பற்றி ஹிந்துக்கள் கேட்க இயலாது என நினைக்கிறீர்கள். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி எனக்கு கேழ்க்கத் தான் தெரியும் என்ற ரீதியில் சொல்வது போல் இருக்கிறது உங்கள் கேழ்விகள்.

    \வீர சாவர்க்கர் நீதி மன்றத்தில் உண்மை பேசினார் என்று துணிந்து பொய் கூறும் உம்மை நான் நம்புவாதாய் இல்லை.\

    கருத்துத் திரிபு செய்வது என்பதை நீங்கள் ஒரு வாத உத்தியாகக் கொள்கிறீர்கள் என்பது மேலிருந்த வாசகத்தின் மூலம் தெரிகிறது.

    நான் என்னுடைய எந்த உத்தரத்தில் என்னுடைய கூற்றை நம்புங்கள் என உங்களிடம் விக்ஞாபித்தேன் எனக் கூற இயலுமா?

    ஸ்ரீ வீர சாவர்க்கர் நீதி மன்றத்தில் உண்மை பேசினார் என்பதை நான் ஹிந்துஸ்தான நீதிமன்றை முறைமை சார்ந்து அணுகுமாறும் அவர் பொய் பேசினார் என்று தங்களுக்குத் தெரியும் பக்ஷத்தில் ஆவணம் சார்ந்து அவற்றை விளக்குமாறும் மட்டிலும் கேட்டுள்ளேன். கருத்துத் திரிபு செய்யும் உங்களுக்காக மீண்டும் எனது கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    “””””””””””Since Godse had been convicted and punished and Sri Veer Savarkar has been acquitted by the courts of law of Hindusthan, I have every reason to believe that what had been uttered in our courts on oath are true and nothing other than truth unless your goodself or anyone else have material worth the name to prove it otherwise.

    I have every reason and right to believe in the HONESTY AND INTEGRITY of the courts of law of Hindusthan and unless and until otherwise proved, I have no reason to doubt the judgments pronounced by them””””””””””

    Hope your goodself would have read my below mentiond observations :-

    “””””””””””True that judiciary world over operates on a primise that even if hundreds of culprits could get away, not a single true person is punished.”””””””

    “”””””””””But, the most important fact is……………

    to pinpoint that a person have escaped from the courts of law but shall be brought to books,

    one need to again look back at the papers; Ofcourse, if any unexamined evidence or witness still exist that may be brought in with NECESSARY DOCUMENTARY EVIDENCE””””””””””””

    அன்பர் ஸ்ரீமான் ஜெயபாரதன், விஷயம் தாங்கள் சிறியேனான என்னை நம்புவதா அல்லவா என்றன்று. திரும்பத் திரும்ப இப்படி நீங்கள் தவறான கூற்றுகளில் பதுங்குவதன் மூலம் கருத்துத் தெளிவுடன் நீங்கள் நம்ப வேண்டிய ஹிந்துஸ்தான ந்யாயாயலயங்களையும் அதன் நீதி முறைமைகளையும் நம்புகிறீர்களா இல்லையா என்ற கருத்து நேர்மை சார்ந்த விஷயத்தில் இருந்து விலகிச் செல்கிறீர்கள்.

    கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்தி முறையாக வாதம் செய்வதில் உங்களுக்கு நேர்மையோ கருத்துத் தெளிவோ இல்லை என்பதை உங்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றன, ஐயன்மீர்.

    தாங்கள் ஹிந்துஸ்தான ந்யாயாலயங்களை நம்புகிறீர்களா அல்லவா என்பது தான் விஷயம். ஹிந்துஸ்தான ந்யாயாலயங்களை நம்ப மாட்டீர்கள்; ஹிந்துஸ்தான ந்யாயாலய நீதி முறைமைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அதைத் துணிந்து பதிவு செய்யுங்கள்.

    சஹ வாசகரை *உம்மை* என ஏக வசனத்தில் விளிப்பது தரம் தாழ்ந்த செய்கை என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் தெளிவாகச் சொல்கிறேன்.

    \திரு. கிருஷ்ணகுமார்,\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், என் பெயரை என் ஒவ்வொரு பதிவிலும் “க்ருஷ்ணகுமார்” என்று பதிகிறேன். உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உங்களை நான் விளிக்கையில் என்னுடைய எந்த உத்தரத்திலாவது ஏகவசனத்திலாவது அல்லது “செயபாரதன்” என்ற ரீதியில் பெயரைத் திரித்தாவது விளித்துள்ளேனா என்பதை அவதானிக்கவும்.

    அடிப்படை நேர்மை, பரஸ்பர மரியாதை இவைகள் ஒரு நேர்மையான விவாதத்திற்குத் தேவையானவை என உணருங்கள்.

    ஒரு முறையான விவாதம் சார்ந்து நீங்கள் தடாலடியாகப் பதிவு செய்த தகவற் பிழை சார்ந்த கருத்துக்களைப் பற்றி விவாதிக்காது வெட்டி அரட்டை செய்து உங்கள் தகவற் பிழைகள், பொய்ப்பரப்புரைகள், வெறுப்புக் கருத்துக்கள் போன்ற பூஷணிக்காய்களை நீங்கள் ஒரு கபளச் சோற்றான உங்கள் வெட்டி அரட்டைகளில் திணிக்க முயல்கிறீர்கள் எனத் தெரிகிறது.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      \திரு. கிருஷ்ணகுமார்,\

      ////அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், என் பெயரை என் ஒவ்வொரு பதிவிலும் “க்ருஷ்ணகுமார்” என்று பதிகிறேன். உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உங்களை நான் விளிக்கையில் என்னுடைய எந்த உத்தரத்திலாவது ஏகவசனத்திலாவது அல்லது “செயபாரதன்” என்ற ரீதியில் பெயரைத் திரித்தாவது விளித்துள்ளேனா என்பதை அவதானிக்கவும்.////

      நான் கற்ற தமிழ் நடையில் என் கருத்தை எழுதுகிறேன். நீங்கள் கற்ற மணிப்பிரவாள நடையில் உங்கள் கருத்தை எழுதுங்கள். உங்கள் தூய உச்சரிப்பு நடை எனக்கு ஒத்து வராது. மன்னிக்கவும்.

      1. Avatar
        புனைபெயரில் says:

        இல்லை, ஜெயபாரதன் விஷமத்தனமான மொழி பயன்பாட்டை கையாளுகிறார். முன்பு “பூனைபெயரான்” என்று எலித்தனமான குசும்பு செய்தார். இவரின் சுயரூபம் தெரிகிறது – அது பலருக்கு அதிர்ச்சியாக இப்போது உள்ளது… நமக்கு அவர் உள்ளம் முன்பே தெரிந்ததே…

      2. Avatar
        paandiyan says:

        ayyo visa bharatan engalukkum thriyum eppadi tune pannuvadhu enru. only problem is admin love you not us thats why he is doing censor when we use the words like you

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      //சரியான புரிதல் ஹிந்துக்கள் தங்கள் வாழ்க்கை முறையில் தீண்டாமை என்ற இந்தக் கொடிய விஷத்தை அனுமதித்திருக்கிறார்கள் என்பது. அதை ஒழிக்க பற்பல ஹிந்து இயக்கங்களும் பாடுபட்டு வருகிறார்கள். ஆயினும் இன்னமும் முழு வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். பின்னும் ஹிந்து இயக்கங்கள் தீண்டாமை ஜாதிக்கொடுமைகள் இவற்றை ஒழிக்கச் செய்யும் முயற்சிகள் பலன் தரும் என முருகப்பெருமானை இறைஞ்சுகிறேன்.//

      Good. Lets first acknowledge we have a disease. Only then, we will attempt to seek remedy. Well done.

      1. Avatar
        paandiyan says:

        every where the same problem you can see. dont you think that muslims they dont have this problem? go and see africa, even 20 years before Iraq now blusisthan etc etc. cristian i can give so much example and even butthist also facing such problem in thailand.

  60. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    க்ஷமிக்கவும். கருத்து நேர்மை மற்றும் கருத்துச் சமநிலையுடன் உங்களால் கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலாது என்பதை உங்கள் உத்தரங்கள் பறைசாற்றுகின்றன.

    மஹாத்மாகாந்தியின் மரணம் என்ற வ்யாசம் உங்களால் எழுதப்பட்டது என்றால் அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் பற்றி உங்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும்.

    நீங்களாகவே உங்கள் வ்யாசத்தில் எழுதிய விஷயங்களை எனது வ்யாசத்தின் இரண்டு பாகங்களின் வாயிலாக ஒவ்வொரு விஷயமாக எடுத்து அலசியுள்ளேன்.

    கருத்து நேர்மையுடன் விஷயங்களை அணுகும் ஒரு போக்கு உங்களிடம் இருக்கும் பக்ஷத்தில் பல நாட்கள் ஆயின பின் தாங்கள் எழுப்பிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் நான் எழுப்பியுள்ள ஆக்ஷேபங்களுக்குத் தெளிவான விளக்கங்களை மற்றும் சான்றாதாரங்களைத் தாங்கள் இது வரை அளித்திருக்க வேண்டும்.

    அல்லது ஒரு வேளை உங்களால் எழுதப்பட்ட விஷயங்களில் பிழை இருக்குமானால் Intellectual Honesty and Integrity – இவற்றைச் சார்ந்து தாங்கள் எழுதிய விஷயங்களில் உள்ள பிழைகளுக்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். பண்பட்ட ஒரு மனிதருக்கு இந்த இணைய தளத்தில் நான் உள்பட பலராலும் மதிக்கப்படும் ஒரு அன்பருக்கு இது போன்ற ஒரு முதிர்வு இருக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படும் என நினைக்கிறேன்.

    இதற்கு அடுத்ததான பதிவில் மேற் சொன்ன விஷயங்களை விஷய வாரியாக நீங்கள் சொல்லியது என்ன நான் எழுப்பிய ஆக்ஷேபங்கள் யாவை நீங்கள் இவற்றை எவ்வாறு கையாண்டுள்ளீர்கள் என்பதைப் பதிவு செய்து தங்களது பார்வைக்கும் வாசிக்கும் வாசகர்களது பார்வைக்கும் வைக்கிறேன்.

    உங்களுக்கு நீங்களாகப் பதிந்த கருத்துக்களில் தெளிவு இருக்கும் பக்ஷத்தில் உங்களுக்கு கருத்து நேர்மை இருக்கும் பக்ஷத்தில் இவற்றை விளக்க முயற்சிக்கவும்.

  61. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    மஹாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம் நீங்கள் தான் எழுதியது என நான் நம்புகிறேன்.

    என்னுடைய நம்பிக்கையை தாங்கள் ஸ்திரப்படுத்த விழைந்தால் மேலும் நீங்களும் இந்த வ்யாசத்தை நீங்கள் தான் எழுதினீர்கள் என நம்புவதானால் கீழே கொடுத்துள்ள விஷயங்களை பொறுமையாக வாசித்து கருத்துப் பகிர விழையவும்.

    தங்கள் வ்யாசத்தில் தாங்கள் தெரிவித்த கருத்துக்களில் உள்ள தகவற்பிழைகள், பொய்ப்பரப்புரைகள், ஹிந்து வெறுப்புக்கருத்துக்கள் போன்றவற்றைத் தொகுத்து அவற்றுடன் தங்கள் உத்தரங்களில் தாங்கள் பகிர்ந்த கருத்துக்களையும் தொகுத்து கீழே ஒரு “Ready recoknner” போல தங்கள் பார்வைக்கும் வாசகர்கள் பார்வைக்கும் முன்வைத்துள்ளேன். தங்கள் கருத்துக்களில் தங்களுக்குத் தெளிவு இருக்கும் பக்ஷத்தில் அவற்றைத் தெளிவு படுத்த விழையலாம்.

    கவலைப்பட வேண்டா? நீங்களாகச் சொல்லிய கருத்துக்களில் இருந்து நீங்கள் பயந்து பதுங்க விழைந்தால் இதை வாசிக்கவே வாசிக்காதீர்கள். இதற்குத் தாங்கள் பதிலிறுக்காவிட்டால் தங்கள் கருத்துக்களில் தங்களுக்குப் பிடிமானமில்லை என வாசகர்கள் அவதானிப்பார்கள்.

    1. ஏசுபிரானின் சரித்ர இருப்பு :-

    மிகத் தெளிவாக முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டு இதற்கு விளக்கமளிக்கவும்.

    நான் விவாத்திற்கு உட்படுத்துவது ஏசுபிரான் சரித்ரத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் விஷயத்தை மட்டிலும். இதை நான் ஒரு விவாதாஸ்பதமான விஷயமாய் மட்டிலும் கருதுகிறேன். எனக்கும் கூட இவ்விஷயத்தில் பல கேழ்விகள் இன்னுமுண்டு.

    க்றைஸ்தவர்கள் வணங்கும் தேவமைந்தனான ஏசுபிரான் என்ற கோட்பாடு எனது விவாததிற்கு அப்பாற்பட்ட விஷயம். அது போலவே க்றைஸ்தவ மத இருப்பும். உலகமெனும் பூங்காவில் பற்பல மதங்களும் அவற்றின் கிளை மதங்களுடன் இருப்பது இயற்கையே. க்றைஸ்தவ மத இருப்பும் க்றைஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பேணுவதும் என்னால் என் வ்யாசத்தில் மிகத் தெளிவாக போற்றப்பட்டுள்ளன. க்றைஸ்தவ மத இருப்பை யாரோ விவாதத்திற்கு உட்படுத்துவதாக பதிலிறுக்க வேண்டாம்.

    ஆகவே ஏசுபிரான் என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததாக தாங்கள் சொல்லும் பக்ஷத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் அல்லது அதற்கு உடன் பின் காலத்தில் எழுதப்பட்ட யஹுதிய பாகனிய நூற்களில் அல்லது அது போன்று வேறு ஏதும் ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றைப் பகிரவும். மேலும் ஏசுபிரானின் வாழ்க்கை சார்ந்து சுவிசேஷங்களில் காணப்படும் முரண்பாடுகள் – ஏன் ஒரே நூலில் வாழ்க்கைக்குறிப்புகள் முரண்படுகின்றன. உங்களுக்கு இது விஷயம் சார்ந்து ஏதும் வாசிப்போ அல்லது கருத்துத் தெளிவோ இருந்தால் அதை வாசகர்களுடன் பகிரவும்.

    2. க்றைஸ்தவ மத மேட்டிமை :-

    தாங்கள் க்றைஸ்தவ மதம் ஹிமயமளவு உயர்ந்தது என்றும் க்றைஸ்தவர்கள் அன்பு, தொண்டு, த்யாகம் போன்றவை கொண்டு சேவை செய்து வருகிறார்கள் எனவும் தங்கள் வ்யாசத்தில் மற்றும் தங்கள் உத்தரங்களில் விதந்தோதியுள்ளீர்கள்.

    இவ்விஷயம் கருத்துச் சமநிலை சாராத விஷயமாக என்னால் பார்க்கப்பட்டது.

    மதமாற்றம் என்ற கோட்பாட்டை மட்டிலும் சாராது மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற படிக்கு தொண்டு செய்து வரும் க்றைஸ்தவ ஸ்தாபனங்களை அவை யாவை என்று கூட பாராது அப்படிச் சேவை செய்யும் ஸ்தாபனங்களை என் வ்யாசத்தில் போற்றியுள்ளேன் என்பதை அன்பர்கள் வாசித்திருப்பார்கள். தாங்களும் வாசித்திருக்கலாம்.

    கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் வருஷம் க்றைஸ்தவ மதம் உலகளாவி Crusade, Inquisition போன்ற பலவந்தம், போர்கள், படுக்கொலைகள், சித்ரவதைகள் போன்றவற்றின் மூலம் உலகில் பரவியது என்ற விஷயத்தை உலக சரித்ரம் பேசுகிறது. சிலுவை ஹிமயமளவு உயர்ந்தது என்று விதந்தோதும் தாங்கள் போர்கள், வன்முறைகள் பலவந்தம் இவற்றால் உலகளவில் பெருகிய ரத்தச்சகதி அந்தச் சிலுவையை எந்தளவு உயர்த்தியது என்று அறவே பேசாது மௌனம் சாதிக்க முயல்கிறீர்கள்.

    தாங்கள் க்றைஸ்தவ மதத்தினர் உலகளாவி தங்கள் மதத்தைப் பரப்பவேண்டிச் செய்த படுகொலைகளை வன்முறைகளை உலக சரித்ரம் பேசுவதை நம்புகிறீர்களா இல்லையா என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்தால் க்றைஸ்தவ மத மேட்டிமை வாதத்தைத் தாங்கள் முன்வைப்பதில் கருத்துச் சமநிலை உள்ளதா என்பது தெளிவாகும்.

    3. க்றைஸ்தவ மதமாற்றம் :-

    மஹாத்மா காந்தியடிகள் மதமாற்றம் என்ற கருத்தை அறவே நிராகரித்த அன்பர். இவ்விஷயம் சம்பந்தமாக என் வ்யாசத்தில் அவருடைய ஆழமான ஒரு கருத்தை மட்டிலும் தெரிவித்திருந்தேன். அன்பர் ஸ்ரீ வேதம் கோபால் அவர்கள் க்றைஸ்தவ மதமாற்றம் மற்றும் அதற்கான க்றைஸ்தவர்களின் முறைமைகள் போன்ற விஷயங்களில் காந்தியடிகளின் பற்பல கருத்துக்களை சான்றாதரத்துடன் திகதி வாரியாக சஞ்சிகை வாரியாக தொகுத்து அளித்துள்ளார்கள்.

    என்னுடைய வ்யாசத்தில் நான் காந்தியடிகளுடன் உடன் படும் விஷயங்கள் உடன் படாத விஷயங்கள் போன்றவற்றை மிகத்தெளிவாகத் தெரிவித்துள்ளேன்.

    தங்களது வ்யாசத்தை வாசிக்கும் அன்பர்கள் தாங்கள் காந்தியடிகளை முழுமுற்றாக ஏற்கும் ஒரு அன்பர் என்று கருத ஹேது உண்டு. தேசத்தின் சுதந்திரப்போராட்டம் மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மனிதர்களில் ஒருவராக காந்தியடிகள் சான்றோர்களால் போற்றப்படும் ஒரு அன்பர்.

    காந்தியடிகளை விதந்தோதும் அன்பரான தாங்கள் அவருடைய மதமாற்றக் கருத்துக்களுடன் உடன்படுகிறீர்களா அல்லவா என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கவும்.

    4. வீர சாவர்க்கர் பற்றிய கருத்துக்கள் :-

    1. \ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான்.\

    பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்தவரில்லை என நான் தெளிவாகக் கருத்துத் தெரிவித்திருந்தேன். கூடவே அவருடைய அந்திம சம்ஸ்காரத்தில் அவர் மீது அன்பு கொண்ட பல்லாயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டுள்ளனர் எனக் கருத்து தெரிவித்திருந்தேன்.

    ஸ்ரீ வீர சாவர்க்கர் RSS இயக்கத்தில் இருந்தமைக்கு தங்களிடம் சான்றாதாரங்கள் இருக்குமானால் அவற்றை தளத்தில் பகிரலாம். இல்லாவிட்டால் கருத்து நேர்மை இருக்கும் பக்ஷத்தில் பொய்யான கருத்து ஒன்றை தள வாசகர்களிடம் திணித்தமைக்குத் தாங்கள் மன்னிப்புக் கோர வேண்டும்.

    2. காந்தியடிகளின் படுகொலைக்கு ஸ்ரீ வீர சாவர்க்கர் கண்டனம் தெரிவித்தாரா? அவர் அதைக் கொண்டாடினார் எனத் தாங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள். சான்றாதாரம் கேட்டதற்குத் தாங்கள் மனம் போன போக்கில் வாசிக்கக் கூட முனையாது ஒரு உரலைச் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். அந்த உரலில் மிகத் தெளிவாக சான்றாதாரங்களுடன் ஸ்ரீ வீர சாவர்க்கர் காந்தியடிகளின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தமை பதிவாகியுள்ளது.

    எந்த ஆதாரங்களும் சாராது ஒரு நபரின் பேரில் தங்களுக்கு உள்ள வெறுப்பின் பாற்பட்டு தாங்கள் செய்த பொய்ப்பரப்புரை இது என நிரூபணம் ஆகியுள்ளது. தங்களுக்கு கருத்து நேர்மை இருக்கும் பக்ஷத்தில் முனைந்து தாங்கள் செய்த பொய்ப்பரப்புரைக்கு தளத்தில் மன்னிப்புக் கோர வேண்டும்.

    3. காந்தியடிகளின் படுகொலையில் ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களின் பங்கு :-

    இந்த விஷயம் சார்ந்து சிறியேனான என்னை நம்புமாறு நான் தங்களிடன் என் வ்யாசத்திலோ அல்லது எனது எந்த உத்தரங்களிலோ தெரிவிக்கவில்லை. மாறாகத் தள வாசகர்களுக்குத் தாங்கள் தெரிவிக்க வேண்டியது ஹிந்துஸ்தான் ந்யாயாலயங்களின் பால் தங்களுக்கு உள்ள நம்பிக்கையும் ஹிந்துஸ்தான ந்யாயாலயங்களில் உள்ள நீதி முறைமைகளில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையும்.

    எனக்கு இதில் நம்பிக்கை உள்ளது என்ற விஷயத்தை நான் தெளிவாகப் பதிந்துள்ளேன்.

    தங்களுக்கு நமது தேச ந்யாயாலயங்களிலும் அதன் நீதி முறைமைகளிலும் நம்பிக்கை உண்டா இல்லையா என்பதைத் தெளிவாகப் பதிவு செய்யவும்.

    சாவர்க்கர் ந்யாயாலயத்தில் பொய் சொன்னார் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் நீங்கள் அதற்கு இது வரை ஒரு வரி அல்லது அரை வரி எந்த சான்றாதாரங்களும் கொடுக்கவில்லை. மாறாக ந்யாயலயத்தில் சத்யப்ரமாணம் எடுத்து ஒரு அன்பர் சொல்லும் கூற்றை தகுந்த சான்றாதாரங்கள் சாராது பொய் எனச் சொல்ல எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை.

    மீண்டும் தாங்கள் என்னை நம்புகிறீர்களா எனக் கிளிப்பிள்ளை போல் மாய்மாலம் செய்யாது ஹிந்துஸ்தான ந்யாயாலயங்களையும் அதன் நீதிமுறைமைகளையும் நம்புகிறீர்களா என்பதை மட்டிலும் தெளிவு செய்யவும்.

    5. ஹிந்து வேதங்கள் தேவ வாக்குகள் எனக் கருத்துத் திணிப்புச் செய்தது :-

    \இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! \

    ஒரு வ்யாசம் எழுத அழகு தமிழ் மட்டிலும் போதாது மாறாக கருத்துத் தெளிவும் கருத்துக்களில் உண்மைகளும் வேண்டும். கருத்துத் தெளிவும் கருத்து நேர்மையும் தங்கள் வ்யாசத்தில் பல விஷயங்களில் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

    வேதத்தை ப்ரமாணமாகக் கொள்ளும் பற்பல தர்சனங்களில் இது சம்பந்தமாய் உள்ள வேறுபாடுகள் தெளிவாக என்னால் பகிரப்பட்டுள்ளன. அப்படியிருக்க இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்ற படிக்கு பிழையான ஒரு கருத்தை வாசகர்களிடம் தெரிவித்தமைக்கு கருத்து நேர்மை இருக்கும் பக்ஷத்தில் பிழையான கருத்தைப்பகிர்ந்ததை ஒப்புக்கொள்ளலாமே

    6. மதப்பூசல்களில் ஹிந்துக்களை மட்டிலும் தனியாகச் சாடியமை :-

    ஹிந்துஸ்தானத்தில் நடந்த மதப்பூசல்களில் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் போன்ற அனைத்து சமூஹத்தைச் சார்ந்தவர்களும் ஹிந்துஸ்தான ந்யாயாலயங்களால் தண்டிக்கப்பட்டிருப்பமை, மதப்பூசல்களில் மதவேறுபாடின்றி அனைத்துச் சமூஹத்தைச் சார்ந்தவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

    வாஸ்தவிகம் இவ்வாறிருக்கையில் ஹிந்துக்கள் மட்டிலும் மற்றும் ஹிந்து இயக்கங்கள் மட்டிலும் ஹிந்துஸ்தானத்தில் நிகழ்ந்துள்ள மதப்பூசல்களுக்குக் காரணம் என்று தங்கள் வ்யாசம் வெறுப்புமீறிட்டு பொய்ப்பரப்புரை செய்துள்ளது.

    தங்களுக்கு கருத்து நேர்மை கருத்துச் சமநிலை போன்றவை இருக்கும் பக்ஷத்தில் அதீத ஹிந்து வெறுப்பின் பாற்பட்டு பகிரப்பட்ட இந்த பொய்ப்பரப்புரைக்கு இந்த தளத்தினரிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

    7. பௌத்த சமயம் பற்றிய பொய்க்கருத்துக்கள் :-

    தங்கள் வ்யாசத்தில் பௌத்த சமயம் பற்றி இரண்டு கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள்

    ஹிந்துக்கள் பௌத்தர்களை விரட்டியுள்ளார்கள் மற்றும் மீதி இருக்கும் பௌத்தர்களும் ஹிந்துஸ்தானத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள் என.

    தாங்கள் தெரிவித்த கருத்துக்களை தாங்கள் கருத்துத் தெளிவு மற்றும் கருத்து நேர்மை கொண்டு அணுகுவீர்கள் என எண்ணி இதுகாறும் நான் பொறுமை காத்து தங்களுடைய கருத்துக்களை தெரிந்து கொள்ள காத்திருந்தேன். ஆனால் தாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்காது dereailing tactics diversion tactics abusing tactics என பல உத்திகளைக் கையாண்டு தாங்கள் பயந்து பதுங்கி வருகிறீர்கள்.

    தங்களுக்கு தமிழ் மொழியிலோ பாளி மொழியிலோ சம்ஸ்க்ருத மொழியிலோ ஆன பௌத்த சாஸ்தரங்கள் சார்ந்து முதற்கருத்துக்குச் சான்றாதாரம் வைக்க முடியுமானால் வைக்கவும். இல்லையெனில் கருத்து நேர்மை சார்ந்து முனைந்து ஒரு பொய்க்கருத்தை இந்த தளத்தில் பகிர்ந்தமைக்கு மன்னிப்புக் கோரவும்.

    இரண்டாவது கருத்து ஹிந்துஸ்தானத்தின் பல பௌத்த மடாலயங்களுக்கு சென்று பௌத்த பிக்ஷுக்களுடன் உரையாடியவன் அவர்களது சாஸ்த்ரங்களில் பரிச்சயம் உள்ளவன் என்ற படிக்கு என்னால் நிராகரணம் செய்யப்பட்டது. என்னைப் பொருத்தவரை இது பொய்யான கருத்து. இது போன்ற கருத்துப் பகிர தங்களிடன் சான்றாதாரங்கள் ஏதும் இருப்பின் பகிரவும். மௌனம் சாதித்தால் இதுவும் தங்களது பொய்க்கருத்து என ஏற்கப்படும்.

    8. ஹிந்து சீக்கிய பூசல்கள் பற்றிப் பொய்க்கருத்துக்கள் :-

    பௌத்த சமயம் பற்றியோ சீக்கிய சமயம் பற்றியோ வைதிக சமயம் பற்றியோ எதையும் குறைந்த பக்ஷமாகக் கூட வாசித்தறியாது மனம் போன போக்கில் தங்கள் வ்யாசத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    சீக்கிய சமயம் பற்றித் தெளிவாக எனது வ்யாசத்தில் சீக்கிய குருக்ரந்த் சாஹேப் நூல் சார்ந்தும் அவர்களது மரபுகள் சார்ந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டன.

    1984 ம் வருஷம் முன்னாள் ப்ரதமமந்த்ரி ஸ்ரீமதி இந்திராகாந்தியின் படுகொலைக்குப் பின்னர் நடந்த கலவரத்தைத் தாங்கள் ஹிந்து சீக்கிய கலவரமாகத் தங்கள் உத்தரங்களில் தெரிவித்தமை தங்களது கருத்து நேர்மையின்மையை மட்டிலும் பறைசாற்றுகிறது.

    அக்கலவரத்தில் சீக்கியருடைய உயிர் மற்றும் உடமைகளைக் காக்க விழைந்தவர்கள் ஹிந்து இயக்கத்தவரான RSS மற்றும் பாஜகவினர். இவ்விஷயம் பல சீக்கிய அன்பர்களால் போற்றப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதை முனைந்து புறக்கணித்து கலஹத்தை ஹிந்து சீக்கிய கலஹமாகச் சித்தரிக்கும் உங்களது போக்கு கருத்து நேர்மையற்றது என்பதை வாசகர்களுக்கு முன்வைக்கிறேன். கருத்து நேர்மையிருப்பின் தவறு உணரவும்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      Krishna kumar, You are spending so much passion, which is not good for health. Just record your dissenting views calmly. Old age and passion are unhealthy bed fellows. Beware!

  62. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////தங்களுக்கு தமிழ் மொழியிலோ பாளி மொழியிலோ சம்ஸ்க்ருத மொழியிலோ ஆன பௌத்த சாஸ்தரங்கள் சார்ந்து முதற்கருத்துக்குச் சான்றாதாரம் வைக்க முடியுமானால் வைக்கவும். இல்லையெனில் கருத்து நேர்மை சார்ந்து முனைந்து ஒரு பொய்க்கருத்தை இந்த தளத்தில் பகிர்ந்தமைக்கு மன்னிப்புக் கோரவும்./////

    Who are you Proud Hinduthuva Guruji, Ayotola Khomeni ? Stop talking such stupid demands with others when we are discussing about the Law of the Land which let loose a brilliant legal culprit. If you do not agree with the content in Thinnai article “The Death of Mahatma Gandhi”. That is fine. Stop this non-sense demand.

    1. Avatar
      paandiyan says:

      mentioning name issue, use the word like bloody and now “stupid”, are you educated properly? or i should ask this question to admin here?

  63. Avatar
    IIM Ganapathi Raman says:

    Everyone records his opinion for or against an issue here. None needs to tender an apology to anyone for recording his opinion, if the same, in the opinion of the other, is at variance with truth. Our duty is just explain how it is at variance.

    It is not a court of law where we speak on oath.

    Because, what appears to be truth is your subjective opinion with which the other won’t agree, why should he?

    For e.g. Savarkar is a bar at law. He knew how to escape the clutches of law. So, he did it, according to Jeyabarathan. He is entitled to that view, which is sturdy common sense.

    If Savarkar is innocent, and he was let off for that, that is the view of Krishnakumar. He is entitled to that view.

    No question of seeking and giving apology here.

    Leave it to readers to decide your opinion.

    All of us are reading both sides: and we know which one is convincing.

    1. Avatar
      paandiyan says:

      //None needs to tender an apology///
      we dont need any Karuthu Kandasamy. if thats the case anyone can use the words like bloody to anyone to him. do you agree or Ok to use those words against anybody???

    2. Avatar
      paandiyan says:

      //For e.g. Savarkar is a bar at law. He knew how to escape the clutches of law. So, he did it, according to Jeyabarathan. He is entitled to that view, which is sturdy common sense.

      If Savarkar is innocent, and he was let off for that, that is the view of Krishnakumar. He is entitled to that view.

      No question of seeking and giving apology here.

      Leave it to readers to decide your opinion.

      //

      Then what is your job here? NATTAMAI job?
      do it happily

      1. Avatar
        IIMGanapathi Raman says:

        Pandian vs Jeyabarathan in this debate. So, just defend your points, Let him defend his.

        Thinnai is not a court of law with a Judge on the Chair to hear and pronounce judgements at the end.

        It is a readers’ court. Let them read and decide for themselves which side is the most convincing.

  64. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    எனதன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்

    இது தெய்வப்புலவரின் பொய்யா மொழி. உலகத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும் அனைவருக்கும் பொருந்தும். இதை மனதிலிறுத்தி இந்த தளத்தின் மூத்த தமிழறிஞரான தாங்கள் பணிவெனும் அணிகலனுடன் பீடுநடை போட விக்ஞாபிக்கிறேன்.

    இன்னொரு குறட்பாவும் நினைவுக்கு வருகிறது

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.

    இதையும் தமிழன்பரான தாங்கள் மனதிலிறுத்தி தங்கள் உத்தரங்களைப் பகிர விக்ஞாபிக்கிறேன்.

    \நான் கற்ற தமிழ் நடையில் என் கருத்தை எழுதுகிறேன். நீங்கள் கற்ற மணிப்பிரவாள நடையில் உங்கள் கருத்தை எழுதுங்கள். உங்கள் தூய உச்சரிப்பு நடை எனக்கு ஒத்து வராது. மன்னிக்கவும்.\

    ஐயன்மீர், உங்கள் தமிழ்ப் புலமைக்கு என் பணிவார்ந்த வணக்கங்கள்.

    *உம்மை* என்பது தமிழில் ஒருமையாக அதாவது பணிவின்மையையும் *உங்கள்* என்பது தமிழில் பன்மையையும் அதாவது பணிவையும் தெரிவிக்கும் சொல் என்பது எனது புரிதல். தமிழ்ப்புலமை வாய்ந்த அன்பரான தாங்கள் எனது புரிதலில் தவறு இருக்கும் பக்ஷத்தில் என்னைத் திருத்திப்பணியாட்கொள்ளுமாறு விக்ஞாபிக்கிறேன்.

    க்ருஷ்ணகுமார் என்பது தமிழ் சார்ந்த சமாசாரம் அன்று நீங்கள் உங்கள் பெயரை ஜெயபாரதன் என்று தானே எழுதுகிறீர்கள் செயபாரதன் என்று இல்லை அல்லவா

    \இல்லை, ஜெயபாரதன் விஷமத்தனமான மொழி பயன்பாட்டை கையாளுகிறார். முன்பு “பூனைபெயரான்” என்று எலித்தனமான குசும்பு செய்தார். இவரின் சுயரூபம் தெரிகிறது – அது பலருக்கு அதிர்ச்சியாக இப்போது உள்ளது… நமக்கு அவர் உள்ளம் முன்பே தெரிந்ததே…\

    ஏசுபிரான் வ்யாசத்தில் புனைப்பெயரான் என்று ஏகவசனத்தில் அன்பர் அவர்கள் வெகுண்டெழுந்து ஆயினும் உபதேச மொழிகள் நல்கியிருந்தார். பூனைப்பெயரான் என்று எப்போது சொன்னார் என்பது

    பத்துலக்ஷணத்தனுக்கு, பரம பதத்தனுக்கு, காரோன் அனுகூலனுக்கு, கன்னிமரிசேயனுக்கு, கோனார் சஹாயனக்குத் தான் வெளிச்சம்.

    ஆனால் எனதன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன் அவர்களே, இதுவெல்லாம் சாரமேயல்லாத பதுங்கு குழி சமாசாரம்.

    நீங்கள் முக்ய விஷயத்திற்கு வாருங்கள். அதாவது நீங்கள் தான் முக்ய விஷயங்களில் உங்கள் கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் என்ற நம்பிக்கை இருக்கும் பக்ஷத்தில்.

  65. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \Who are you Proud Hinduthuva Guruji, Ayotola Khomeni ? Stop talking such stupid demands with others when we are discussing about the Law of the Land which let loose a brilliant legal culprit. If you do not agree with the content in Thinnai article “The Death of Mahatma Gandhi”. That is fine. Stop this non-sense demand.\

    ஐயன்மீர், ஹிந்துக்களை பௌத்தர்கள் விரட்டினார்கள் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். அல்லது யாராவது மண்டபத்தில் எழுதிக்கொடுத்தார்கள் என்று நீங்கள் சொல்லி விட்டீர்களானால் நமக்குள் ஏது பிணக்கு சொல்லுங்கள்.

    ஐயன்மீர், ஆங்க்லபாஷையில் உங்களுக்கு வசவுகளில் பெரும் பாண்டித்யம் உண்டு என்று ஏற்றுக்கொள்கிறேன்.

    பௌத்தர்களை ஹிந்துக்கள் விரட்டினார்கள் என்றால் பௌத்தர்கள் கண்டிப்பாக அவர்கள் நூலில் எழுதியிருக்க வேண்டுமன்றோ.

    பௌத்த நூற்கள் பெரும்பாலும் பாளி மொழி, தமிழ் மொழி, சம்ஸ்க்ருத மொழியில் எழுதியிருப்பதால் அதைச்சுட்டியுள்ளேன்.

    சான்றாதாரங்கள் இல்லாது தாங்கள் ஸ்ரீமான் பாரதிதாசனார் வேஷதார் என்று அடித்து விட்டு அன்பர் ஸ்ரீ பாலா அவர்கள் இது என்ன புதுச்சால் என்று சொன்னாரே, அதற்குப் பின் தாங்கள் பாய்ந்தோடி விட்டீர்களே அதே போன்று தொடரும் சமாசாரம் என்றால்……… என் சொல்ல

    நான், Proud Hinduthuva Guruji இல்லை. Ayotola Khomeni இல்லை.

    தாங்கள் வசவுகளைப்பொழிந்தாலும் பணிவுடன் ன்புடன் மட்டிலும் கருத்துக்களைப் பகிர விழையும் தங்களிடம் இன்னமும் மதிப்பு குறையாத தங்கள் நண்பன்.

    தாங்கள் வசவுகளைத் தவிர்த்தீர்களானால் நான் மண்டபம் சமாசாரத்ததைத் தவிர்க்க சௌகர்யமாக இருக்கும்.

    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பது நீங்கள் அறியாததோ.

    ஹிந்துக்கள் பௌத்தர்களை விரட்டினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம். விஷயம் இது.

  66. Avatar
    IIM Ganapathi Raman says:

    Krishnakumar writes: ஹிந்து மதம் என்பது வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம், நாட்டார் வழிபாட்டுமுறைகள் போன்று பலவற்றை தன்னுள் அடக்கிய மதம். ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனப்ரகாரம் நான் குறிப்பிட்டுள்ள இந்த அனைத்து மக்களும் ஹிந்துக்களாகவே கருதப்படுகிறார்கள்.

    He says it is Constitution. I have not come across any article which clubs Sikhs, Buddhists, Jains into one category of Hindus. Modi attempted and the Sikhs went upto Supreme Court and won the case to be separate from Hindus.

    Hinduism strongly believes in varnashradharma. Sikhism strongly rejects it.

    I am afraid Krishakumar is making a invalid statement. Let him enlighten us in which part of Indian constitution.

    1. Avatar
      paandiyan says:

      go and read Bharthi mani – pala neramgalail pala manithargal and he has given points that who has separated Sikhs from hindu catagory and the reasons. there are enough evedince in public internet. all need litle bit patience to read, more and more time and understand properly. the problem is people come here blindly and they think that if they write anything against hindus — they get a support like a cinema hero. once u go that stage and think everything i know — even god also cannnot change your mindset.

      1. Avatar
        IIMGanapathi Raman says:

        Paandiyan! You seem to be not reading messages here properly. Mr Krishnakumar is referring to Indian Constitution and says that it clubs Sikhs, Jains, Buddhists along with Hindus into one omnibus category of Hindus.

        Sikhs protested. Jains believe in no God. Buddhists are against Vedas and rejected varanas.

        How can they be one just because all are having Indian habits? Like toilet habits, table manners? So also, Indian Christians and Indian Muslims use their hands in toilets and on tables (eating). Can we call them Hindus?

        I don’t mind if it is the opinion of Krishna Kumar but he says it is the opinion of founding fathers of Indian Constitution. In that case, I asked, let him show the relevant article.

        No one wants to read Tamil writers on that. Just speak relevantly, can you?

    2. Avatar
      paandiyan says:

      I paste some proff here. if you have time, read the complete contents. i can give you some sort of portions here. and i would advice that next time go and read and read and read and read and read and then come here for comments area please
      here its;
      சென்ற நூற்றாண்டுகளில் சீக்கியம் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. குடும்பத்தின் தலைமகனை வீரமகனாக நாட்டுக்குத் தந்தார்கள். ஒரே குடும்பத்தில் சீக்கியர்களும் இந்துக்களும் பேதமின்றி வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் திருமணம் நடந்தது. அவர்களது குரு கிரந்த் ஸாஹிப் கீதையையும், ராமனையும், கிருஷ்ணனையுமே முன்வைக்கிறது. பின்னால் இந்து மதத்தலைவர்களும், மைனாரிட்டி அரசியலும், மாஸ்டர் தாரா சிங் போன்றவர்களுமே அவர்களை இந்து மதத்திலிருந்து வேறுபடுத்தினார்கள். இப்போது சீக்கியர்களும் இந்துக்கள்தான் என்று சொன்னால் அடிக்க வருவார்கள்.

      ஒரு அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் சினிமாக்களில் வரும் பன்ச்டயலாக் போல, ‘எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்’ என்பதுதான் நிஜம். இன்னொரு உண்மை: எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர். உதாரணத்துக்கு அமர் சிங், வி.பி.சிங், கரண் சிங் போன்றோர்.

  67. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \Everyone records his opinion for or against an issue here. None needs to tender an apology to anyone for recording his opinion, if the same, in the opinion of the other, is at variance with truth. Our duty is just explain how it is at variance.\

    Dear Ganapati Raman, regarding Savarkar escaping from law, that point has been covered under my point 4.3. You might have noticed that I have neither asked for an apology for that.

    But even if someone’s case is lost in a lower court and if he prefers to go to the higher court, one is supposed to prove his case through papers.
    True, this is not a court.

    To abuse someone without any substantiation does not prove the point. The purpose of any discussion is to get clarity on the point discussed.

    I am just interested in matter of facts. If you have got material enough to prove that Sri Veer Savarkar had lied, that may be shared with the forum.

    That is as simple as that.

    How about points 4.1 and point 4.2.

    4.2 Respected Sriman Jeyabharathan had been proved beyond doubt that he is wrong.

    OK, leave about apology.

    Atleast, Respected Sriman Jeyabharathan admits that the sort of information he had spilled in the forum under these points are wrong or share convincing information to prove his point

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      ////Atleast, Respected Sriman Jeyabharathan admits that the sort of information he had spilled in the forum under these points are wrong or share convincing information to prove his point/////

      Mr. Krishnakumar, this is your pigment of foolish imagination. You are living in the era of Sathrapathi Shivaji, thinking as if you were a Hindhuthva Guruji.

  68. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    I would request all the readers who are interested in the points covered in my articles to strictly concentrate their focus on those points only and altogether avoid derailing tactics deployed by anyone in this regard.

  69. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    “தொழுதகை யுள்ளும் படையொடுங்கும், அன்னார்
    அழுத கண்ணீரும் அனைத்து.”

    இப்படியும் வள்ளுவர் நாதுராம் விநாயகக் கோட்ஸே போன்றவ வஞ்சகருக்கும் கூறியிருக்கிறார்.

  70. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    Krishna kumar, You are spending so much passion, which is not good for health. Just record your dissenting views calmly. Old age and passion are unhealthy bed fellows. Beware!

    Sir, agreed, noted. thanks for the kind words.

  71. Avatar
    vedamgopal says:

    ஏன் இந்த கொலைவெறி கொலைவெறி டீ
    மொத்த சாமி மூணு மூணு
    புனித ஆவி அப்பன் பிள்ள
    மூணும் சேர்ந்து ஒண்ணு ஒண்ணு
    அந்த ஒண்ணே ஏசு சாமி
    சாமி ஆடி சிலுவை சாய்ந்தார்
    மீண்டு வந்து சலவை செய்தார்
    ஏசு சொன்னது அன்பு அன்பு
    பவுலு சொன்னது வம்பு வம்பு
    பாவியானர் பாமர ஆளு
    ரத்த சுத்தி ரத்த சுத்தி
    ஏன் இந்த கொலவெறி கொலவெறி டீ

  72. Avatar
    vedamgopal says:

    ”JESUS DIED FOR THE SINS OF ALL HUMANS, SO, CHRISTIANS NEED NOT BE BORN AGAIN TO PAY FOR THEIR MISDEEDS AS CHRIST HAS ALREADY COMPENSATED FOR THEM”.

    So now all Christians can go on sinning and no need to repent as Christ has already made them sinless without fearing any consequences. Jesus did never come on earth just to die for the sins of others, neither he die voluntarily, but was crucified by the Romans and Jews. So, how could Jesus wash away all of Christendom’s sins? Jesus did not want to die, but, wanted to live is visible in Mathew 27:46 when he cries out, “My God, My God, why hast though forsaken me?” If, Jesus just bluffed when he said that, he and Jehovah were the same, then, how can a false Son of God ever wipe off any sins?

  73. Avatar
    vedamgopal says:

    DOES A TRUE DIVING BEING EVER FEAR DEATH AS JESUS DID WHEN HE WAS DYING ON THE CROSS ????

    1. If, God’s Spirit had departed from Jesus is he not unfit for worship?
    2. How did Jesus feel the pain of all the worlds varies sins while dying?
    3. How could Jesus have cleansed the sins of unborn future generations ?
    4. Did Jesus dies even for the sins of Christian mass-murders making innocent and liberated?
    5. As per the Bible, all their sins of all the Christians existing and potential have been WHITE WASHED BY JESUS!!
    6. So, why do Christians still die everyday?
    7. If, Jehovah is causing the deaths of Christians even after Jesus paid the wages of their sins, this means both Jehovah and Jesus are fickle minded and cannot be trusted when it comes to redeeming sins!
    8. If, Jesus died spiritually, then, it means he was a hollow entity and he cannot ever siphon off the sins of mankind?
    9. How can such a fake Godman whom a little sin separated from Jehovah, salvage souls?
    10. If, Jehovah is in every Christen, then how is he born sinner?
    11. And, if, a born again Christian is not an eternal sinner, why does he need Jesus assurance?
    12. Where is the specialty of Jesus death, except that, he attained martyrdom for his cult?
    13. Then, why does not the death of the millions of creature and revolutionaries every day cleanse this cosmos of all sins and evils?
    14. If, Jesus died for the sins of all Christians, then, why do Christians get A.I.D.S, go to jail, get executed, get penalized, excommunicated, defrocked, fined, reprimanded, sued etc., ?
    15. How can Jesus salvage the souls of others, when he could not shield himself?

  74. Avatar
    vedamgopal says:

    SEMITIC RELIGIONS NEVER BELIVED IN REBIRTH THEORY

    (Copied from Hindu Voice April issue)

    A FEW MORE QUERIES TO THE CHURCH:-

    1. Why does Jesus give birth to more men?
    2. Why does Jesus make a man take birth in an elite nation like England and the other in the Thar where life is impossible?
    3. Why are some spirits born as insects, worms, plants, animals and some as humans?
    4. Why are some humans diabolical and others pious? If, Satan makes them evil, then, what is purpose of having Jesus?
    5. Why do some men have fame, intellect, wealth, power while others are not?
    6. Why different men have varying talent and interests?
    7. Why are children born mad, deformed, handicapped?
    8. Why bad things do happens to good persons, and sometimes, the evil ones live a luxurious life?
    9. If, spirits are immortal, then, from before and after a birth what happens to them?
    10. If, after death, a spirit rests eternally in its tomb, then, from where are these new born Christians produced daily?
    11. How wills Jehovah’s heavenly mansion, accommodate all the souls?
    12. Can a Christian ascend to heaven in flesh? If yes, then, how is he inferior to Jesus?
    13. Does not the biblical doomsday, echo the Hindu idea of Mahapralaya?
    14. After the biblical deluge, from where did Jehovah create the human souls?
    15. Can a sinner go to Christian heaven, just by converting?

  75. Avatar
    vedamgopal says:

    CHRISTIANITY

    C = Convert ignorant people and make them a permanent slave

    H = Homosexuality, incest practitioners – practiced and propagated by almost all the messiah (Habitual adulterator of world history to establish Christian superiority)

    R = Racism – worst kind of inhuman approach – still existing

    I = Inquisition – barbaric – even stone age people better when compare the torture done

    S = Slavery – worst kind of exploitation done – polluted them in the animal gages

    T = Torcher – inventor of torture cross –their own son of God died in the cross – do
    Prayer in front of dead body photo/statue

    I = Illegitimate child producers (your son and my son are playing with our son)

    A = Addiction – drugs, alcohol, pills, opium, kanja, cigarettes, Viagra spamming etc.,

    N = Nigger Yard or camps des Noirs’ place for dumping the indenture labor slave
    like cattle shed

    I = Imperialism – colonization and domination of poor countries

    T = Trading – in the name of globalization swindling others money also
    famous in flesh trade

    Y = Yeoman – The above are the Yeoman contribution of Christ /followers for
    the younger generation

    This is how Christianity did yeoman contribution to humanity as above.

    REJECT CHRISTIANITY – REJECT CHRISTIANITY –REJECT CHRISTIANITY

    FIRST STOP CONVERSION (INVASION THROUGH CONVERSION).

    1. Avatar
      IIMGanapathi Raman says:

      This is what Krishna Kumar has just written at 6.45 pm on 8th. No doubt it is aimed at Vedam Gopal:

      //I would request all the readers who are interested in the points covered in my articles to strictly concentrate their focus on those points only and altogether avoid derailing tactics deployed by anyone in this regard.//

      Gopal, write a separate essay to vilify Christianity. Let Christians meet you there.

      Why here? Pl talk about Savarkar and Hindutva

      1. Avatar
        paandiyan says:

        when you advice others you should follow the rules. why you had bring srilanga matter here since you have given fanastic advice to Mr.vedamgopal.

  76. Avatar
    punaipeyaril says:

    “தொழுதகை யுள்ளும் படையொடுங்கும், அன்னார்
    அழுத கண்ணீரும் அனைத்து.” — அது தங்கத்தால் சிலுவை செங்கோல் சுமந்து, கன்னிகாஸ்திரிகளை வன்புணர்ந்து, காமக்களியாட்டமும், மாமிச செழிப்பு மலைகளுமாய் வாழும் கிறிஸ்துவ மத பாதிரிகளுக்கும் சொல்லப்பட்டது…

  77. Avatar
    paandiyan says:

    பாரதத்தில் நல்ல பாரதர்களும் உண்டு விஷ பாரதர்களும் உண்டு அதை அவர்கள் உபயோகபடுத்தும் வார்த்தகளை வைத்து கண்டுபுடிக்கலாம். விஷங்களை புறம்தள்ளி திரு க்ருஷ்ணகுமார் அவர்களின் கருத்தை அந்த சாரம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சில விஷங்களை ஜெயம் என்று எண்ணி கொண்டு இருந்தவர்களை விழிப்பு ஏற்படுத்தி கொடுத்தமைக்கும் நன்றி சொல்லி கொள்கின்ரேன் இந்த தருணத்தில்

  78. Avatar
    ஷாலி says:

    // புத்தர் தசாவதாரங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறார்;புத்தர் வைதிக சமயத்தில் வணங்கப்படுகிறார் என்பதை உப்பு மிளகாய் மசாலாக்கள் கலந்து முன் வைப்பவர்கள் பௌத்த சாஸ்திரங்களில் ஸ்தோத்திரங்களில் மற்றைய வைதிக சமய தைவங்கள் புத்தரை வணங்குபவராகக் காண்பிக்கப்படுதலையும் காய்த்தல் உவத்தலில்லாமல் யோஜிக்கலாமே!!!//

    பேஷா யோஜிக்கலாம்! புத்தரால் சொல்லப்பட்ட மூல பவுத்தம் ஹீனயானம் என்னும் தேரவாதம்.இது பாமர மக்கள் பேசும் பாலி மொழியில் எழுதப்பட்டது.பிற்காலத்தில் ஆந்திரா ஆரியர் நாகர்ஜுனரால் அறிமுகப்படுத்தப்பட்டதே மகாயானம்.இது ஆரியர்களின் தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. புத்தரின் ஹீனயானம் கடவுளைப் பற்றி பேசவில்லை.நாத்திகம் பேசுகிறது.மகாயானர்களின் பவுத்தம் ஆத்திகம் பேசுகிறது.”மகாயான பவுத்தம் மூட நம்பிக்கைகள் கொண்ட கழிவுப்பொருள்களுக்கு ஒரு வாகனமாக மாறி விட்டது” என்கிறார்,தேவி பிரசாத் சட்டோபாத்யாய அவர்கள். ,புத்தரின் உண்மை வரலாற்றை மறைக்க பல புத்த அவதாரங்களை உருவாக்கினார்கள்.புத்தருக்கு முன்பு 24 புத்த அவதாரங்கள் வந்து விட்டதாகவும் இறுதியாக வந்தவர்தான் கௌதம புத்தர் என்கிறது “மகாவம்சம்”
    ஆரிய நாகர்ஜுனரால்,மனித புத்தர் விஷ்ணு அவதாரமாக “போதி சத்துவர்”கடவுளாக மாற்றப்பட்டார். இந்த போதி சத்துவரைத்தான் வைதிக தைவங்கள் வணங்குவதாக திரு.க்ருஷ்ணாஜி குறிப்பிடுகிறார்.//ஒன்று க்ரந்த வ்யூற சூத்ரம்…இந்த சூத்ரத்தை வாசிக்கையில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்ற போதி சத்துவரை தர்மராஜனான யமன்,சிவபெருமான்,உமாதேவி,போன்றோர் எல்லாம் ஸ்துதி செய்வதை வாசிக்கலாம்.// சூத்திர மனிதன் புத்தனை ஆரிய அவலோகிதேஸ்வராக மாற்றி விட்டார்கள்.
    ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்ச புராண ஸ்லோகம் “மத்சய குர்மோ வராஹங்க் நரஸிம்ஹோ த வாமஹ் ராமோ ரமசோ கிருஷ்ணங்கா புத்தா கல்கி இதிகாக்ரம்திஹ்!”

    ஆனால் இதில் பிரபல்யமான பரசுராம அவதாரம் இந்த லிஸ்டில் காணப்படவில்லை.ஏன்? பவுத்தத்தை உண்டு ஜீரணிக்க புத்தரை உள்ளே சேர்த்து பரசுராமரை வெளியே தள்ளி தசாவதார கணக்கு காட்டப்பட்டது.கிறிஸ்தவத்தில் சவுல் என்னும் பவுல் ஒரு கடவுள் கொள்கையை திரித்துவமாக மாற்றியதுபோல்,இங்கு ஆரிய நாகர்ஜுனரும் திரிபிடகமாக மாற்றிவிட்டார். அங்கு திரித்துவம்,இங்கு திரிபிடகம் (தர்மகயா,சம்போக கயா,நிர்மாண கயா) அதாவது,படைக்கப்பட்ட கடவுள்.பரிசுத்த ஆவி,மனித உருவெடுத்த மைந்தன்.இயேசுவின் பிறப்பு அற்புதம் போலவே புத்தர் பிறப்பும்,
    புத்தரின் தாய் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் வாடினார்.ஒருநாள் கனவில் விண்ணிலிருந்து ஒரு வெள்ளை யானை அவர் இடுப்பின் வழியாக வயிற்றினுள் செல்வதாக கனவு கண்டார்.வெள்ளை யானை தெய்வத்தன்மை பொருந்தியதால் தெய்வச்செய்தி சொல்லப்பட்டதாக நினைக்கிறாள்.சிறிது நாளில் கருவுற்று புத்தரை பெற்றெடுக்கிறாள்.புத்தர் மாயாவின் இடுப்பின் வழியாகப் பிறந்தார் என்பது மகாயான நூல்கள் தரும் செய்தி.அவ்வாறு குழந்தை பிறந்தபொழுது வானில் பல அதிசயங்கள் தோன்றுகின்றன.பல அறிஞர்கள் வந்து, உலகின் ரட்சகன் மண்ணில் வந்து விட்டார். என்று வாழ்த்துகின்றனர். பெத்தலேகமில் நடந்த மாதிரியே இங்கும்.இயேசுவின் மறு வருகையை எதிர்பாற்பதுபோல் மைத்ரேய புத்தனின் வருகையையும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.மகாயான விஷ்ணு ஹிந்து புத்தனுக்கும், கிறிஸ்தவத்திற்க்கும் தொடர்பு இருப்பதாலோ என்னமோ, இங்குள்ள கிருஸ்தவர்கள் முழுக்க முழுக்க ஹிந்துக்கிருஸ்தவர்களாக நடைமுறை வாழ்கையை அனுசரிக்கின்றனர்.இதனின் எச்ச சொச்சம் தான் திரு.பாண்டியன் குறிப்பிடும் தலித் கிருஸ்துவர்கள்,நாடார் கிருஸ்தவர்கள், தேவாலயத்திலும்,கல்லறையிலும் இட ஓதுக்கீடு.
    ஆரியம்- திராவிடர்களையும்,புத்தர்களையும் ஜைனர்களையும்,சீக்கியர்களையும்,நாஸ்திகர்களையும்,இறுதியாக இந்திய கிறிஸ்தவர்களையும் உண்டு செரித்து உலாத்துகிறது.

    ஸ்ரீ க்ருஷ்ணாஜி! இனியாவது சமாதானமாக போங்கள்.க்ரைஸ் தவ மதத்தோடு ஐக்கியப் படுங்கள்.”சமாதானம் பேசுபவர்கள் பாக்கியவான்கள்.” பைபிள் சொல்கிறது. “உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் வரட்டும்.”உங்க ரிக் வேதம் சொல்கிறது.அப்புறம் என்ன ஒன்னுக்குள்ளே ஒன்னு.ஒரு சின்ன பிரச்சினை உள்ளது அதை சரி செய்தீர்கள் என்றால் அமோகமாக இருக்கும்.பத்து அவதாரத்தில் ஒரு அவதாரமான பலராமன் அவதாரத்தை உருவி விட்டு புத்தனை சேர்த்துக்கொண்ட மாதிரி,ஏதாவது ஒரு அவதாரத்தை கழட்டி விட்டுவிட்டு, “இயேசுஸ்வரர்”அவதாரத்தை சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் எங்கேயோ போய்விடுவீர்கள்.அப்புறம் என்ன?ஐரோப்பாவிலிருந்து அலாஸ்கா வரை “அகண்ட ஹிந்துலோகஸ்த்தான்”.இறுதியில் சமூகத்தின் கூட்டு மனசாட்சிப்படி முஸ்லிம்களுக்கு “கபர்ஸ்தான்” கொடுத்துவிடலாம். ஆபிரகாமிய மதங்களை ஒழித்த பிறகு அனைவரும் கோரசாக பாடலாம்.” ஜெகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே! உங்கள் அகமகிழ பாடுகின்றோம் கேளுங்கள் இதையே!……”

    1. Avatar
      paandiyan says:

      //க்ரைஸ் தவ மதத்தோடு ஐக்கியப் படுங்கள்.”சமாதானம் பேசுபவர்கள் பாக்கியவான்கள்.” பைபிள் சொல்கிறது. “உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் வரட்டும்.”உங்க ரிக் வேதம் சொல்கிறது.அப்புறம் என்ன ஒன்னுக்குள்ளே ஒன்னு.ஒரு சின்ன பிரச்சினை உள்ளது அதை சரி செய்தீர்கள் என்றால் அமோகமாக இருக்கும்.பத்து அவதாரத்தில் ஒரு அவதாரமான பலராமன் அவதாரத்தை உருவி விட்டு புத்தனை சேர்த்துக்கொண்ட மாதிரி,ஏதாவது ஒரு அவதாரத்தை கழட்டி விட்டுவிட்டு, “இயேசுஸ்வரர்”அவதாரத்தை சேர்த்துக்கொண்டீர்கள் என்றால் எங்கேயோ போய்விடுவீர்கள்.//

      aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!! aha aha aha!! “இயேசுஸ்வரர்”அவதாரத்தை ..aha aha aha!!

    2. Avatar
      paandiyan says:

      //.”சமாதானம் பேசுபவர்கள் பாக்கியவான்கள்.” பைபிள் சொல்கிறது. “
      //
      jokiing??? better ans this to iraq or afgan muslims or even Euro cristians..

      1. Avatar
        IIMGanapathi Raman says:

        This is a quotation from their holy book. Holy books of each religion contain such quotable quotes for good living.

        But Madras Puzhal Jail receives every month or daily a stream of criminals walking into it, or brought into it hand cuffed, for various crimes: from heinous to mild. AND THEY ARE ALL FROM ACROSS ALL RELGIIONS. Their parents would have told them the lines from their holy books.

        Should we condemn the religion or the criminals?

        We become criminals in spite of our religions.

        Today news: Bitt Mohanty was arrested. He was serving as a PO in SBT in Kannur district. He lived in Puttaparthi. His patron was shocked. The neighbours in Kannuar shocked.

        Why? Mohanty is a Oriya Brahmin who are deep devotees of Puri Jagannath. He was brought up in orthodox Brahmin life. Today TOI says, the neighbours say he recited slokas beautifully. He taught in Chinmaya Vidyalaya and Amrita Vidyalam (both names occur in the list given by Krishna Kumar as Hindu organisations)…etc.etc.

        Why was he arrested? He raped a German tourist in a hotel in Rajasthan and was given 7 years imprisonment. He escaped during a parole, He forged a BTech degree certificate, mark sheets, voters card and showed some people as his parents.

        So lets detach a criminal mind from a religious mind.

    3. Avatar
      IIMGanapathi Raman says:

      Today paper reports – The Ajmer Dharga priests have publicly announced that they do not like Pak PM to come to Ajmer. They won’t welcome him to show their protest against the beheading of Indian soldiers by Pak Army.

      Look here: Tirupati priests fell head over heels to welcome the mass killer of Tamil people Rajapakshe.

      These two incidents show who is who. Let the readers decide.

      1. Avatar
        paandiyan says:

        Ajmer Dharga – Private body, Tirupati = govt control. this question you should ask so called secular govt not to citizens.

        1. Avatar
          IIMGanapathi Raman says:

          But you see even here in this forum people like you have defended Rajpakshe coming to Tirupati. You have not condemned it. So, there is a support base not from TTD but from ppl like you. You means some section of Hindus like you. Shall we take it that you support genocide of Tamil civilians? If you do, and at the same time, looking at your Hindutva ideological passion, shall we take it that an average Hindutva man supports genocide of civilians? True or false?

          TTD rules say there is no ban on anyone coming to worship at Tirupati whether he or she is a Muslim or a Christian or a Buddhists.

          Only that the person should sign a register that he comes for religious purpose i.e. to worship. But he need not disown his religion. Thus, Abdul Kalam, Sonia Gandhi and many others have done that.

          The point is not about the rules but about the behaviour of the priests and the TTD authorities and ppl like you: why should you all go and welcome a mass killer? Why not simply treat him as one of the lacs of devotees: let him come, worship and go, on his own?

          1. Avatar
            paandiyan says:

            sir,
            i really dont know whether you are doing comedy here. you should ask more question yourself. word by word i am able to give any clarifications. if govt body means you should look at lot. there is a protocol for everyone defnied by govt body. a week before also TN govt reframed or formed “PARIVATTAM” something. i dont recollect. he visited as a neibhour country PM and inside staff should follow the protocol. remaining questions whoever said you go and ask the clarifications i dont want to do a PROXY Job here as you do happily. since LTTE chapter is so length and i dont want to switch the topic now. remember one time pirabaran said openly srilanga issue is our internall issue we fight, unite why should india concern about it. so as a Indian i am also stricly following pirabaharan words.

    4. Avatar
      IIMGanapathi Raman says:

      // திராவிடர்களையும்,புத்தர்களையும் ஜைனர்களையும்,சீக்கியர்களையும்,நாஸ்திகர்களையும்,இறுதியாக இந்திய கிறிஸ்தவர்களையும் உண்டு செரித்து உலாத்துகிறது/

      இதைப்படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது
      திருடர்களையும் கொள்ளைக்காரனையும் வைதீகமல்லா இந்துமதம் கடவுளர்களாக ஏற்றுக்கொள்கிறது. கொள்ளைக்காரன் மதுரைவீரன், கொள்ளையடித்த திருமங்கைஆழ்வார்.
      (இவர்கள் அவ்வாழ்க்கைக்குப் பிறகு ஆன்மிக நிலை சென்றார்கள் என்பார்கள்.

      In Indian history, dacoits became kings (even now too, only they become our rulers!). Why not to make them our Gods too, it appears to the thinking of Hinduism. No sarcasm intended. But just what occurs to me.

      மேலும்_

      ராஜாஜி, ஈவெராவை, ‘ஆழ்வார்’ என்றார். இதை வைத்து ஒரு கற்பனை பண்ணலாம்.

      100 ஆண்டுகளுக்குப்பின் திண்ணையில் (பல்லாண்டு வாழ்க) ஒருவர் ஈவெராவைப்பற்றி எழுத இன்னொரு கிருஸ்ணகுமார், அவரை நாம் ஆழ்வாரா செரித்த்க யோஜிக்கலாமே ?” என்பார்.

      உண்மையில் அப்படித்தான் நடக்க்ப்போகிறது. 13வது ஆழ்வாராக ஈவெராவை எடுத்துவிடும் வைதீக இந்துமதம்.

      A good strategry to quell opposition: assimilate them and there will be silence!

        1. Avatar
          paandiyan says:

          after that you cannot make any such comments here that will be the most advantage for Hindus. how many people like you registered a strong comment when guy lost a hand in kerala..

  79. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \He says it is Constitution. I have not come across any article which clubs Sikhs, Buddhists, Jains into one category of Hindus. Modi attempted and the Sikhs went upto Supreme Court and won the case to be separate from Hindus.

    Hinduism strongly believes in varnashradharma. Sikhism strongly rejects it.

    I am afraid Krishakumar is making a invalid statement. Let him enlighten us in which part of Indian constitution.\

    Sir, Thank you, I was wrong and I stand corrected.

    நான் அரசியல் சாஸனம் என்று சொல்லியுள்ளது பிழையான வார்த்தை ப்ரயோகம். எனது க்ஷமா யாசனங்கள்.

    சட்டத்தின் பார்வையில் என்ற சொல் சற்றுத் தெளிவைக் கொடுக்கலாம். எந்த சட்டத்தில் என வினாவெழலாம்.

    ஒரு உதாரணம்

    Income Tax Act படி HUF Status சனாதனிகள், சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, சீக்கிய ஆகிய அனைவருக்கும் உண்டு. Again, If you ask me specifically, as per which particular section of IT act or IT Rules, it so, I may not be readily able to provide you the required information. But the information is authentic.

    \Hinduism strongly believes in varnashradharma. Sikhism strongly rejects it.\

    There is an inherent flaw where it is presupposed the entire Hinduism strongly believes in varnashrama dharma.

    The many Saiva streams, saktha streams, Gaudiya Vaishnavas (they adher to what they call deivi varnashrama dharma a system defined by ISKCON) who are very much Hindus do not subscribe to Varnashrama Dharma. Like, jains, baudh and sikh.

    1. Avatar
      IIMGanapathi Raman says:

      //Income Tax Act படி HUF Status சனாதனிகள், சைவ, வைஷ்ணவ, பௌத்த, ஜைன, சீக்கிய ஆகிய அனைவருக்கும் உண்டு. Again, If you ask me specifically, as per which particular section of IT act or IT Rules, it so, I may not be readily able to provide you the required information. But the information is authentic.

      \Hinduism strongly believes in varnashradharma. Sikhism strongly rejects it.\

      There is an inherent flaw where it is presupposed the entire Hinduism strongly believes in varnashrama dharma.

      The many Saiva streams, saktha streams, Gaudiya Vaishnavas (they adher to what they call deivi varnashrama dharma a system defined by ISKCON) who are very much Hindus do not subscribe to Varnashrama Dharma. Like, jains, baudh and sikh.

      //

      But you see any affidavit or a petition or a counter affidavit or a counter reply can be given by the concerned person stating like these;

      I, Krishna Kumar, Hindu, s/o late …., residing at…”
      or
      I, Jeyabarathan, Christian, s/o late…, residing at..”
      or
      I, Suvanapriyan, Muslim, s/o…. residing at…”

      Religion should be mentioned.

      A Sikh should say he is Sikh. A Jain, a Jain. A Buddhist, a Buddhist.

      In our courts of law.

      HUF is so coined because not all members may follow the same religion. If the patriarch is Hindu. It will be a HUF.

      For tax purposes, religions may be coalesced.

      But all that we are discussing in Thinnai is religious principles for religious purposes. Neither for court nor for tax purposes. For such religious principles, the Indian origin religions cannot be clubbed.

      At the same time, for social purposes, there is some possibility of clubbing these religions, which I have hinted at but you did not pursue it. If you had, you would have had a jolly horse to ride on making others jealously watching you.

      1. Avatar
        IIMGanapathi Raman says:

        Yes, there is no unanimous agreement over varnashradharam among a plethora of Hindu sects some of which you have cited. We all know that.

        But you see, if a product is modelled by a popular actor, it catches the imagination of people. So, the marketing agencies catch brand ambassador. The jewellers catch Surya, Vijay, Maddi as their brand ambassadors on contract basis.

        If their products are marketed by unknown and obscure persons, people wont look at it.

        Similarly, if varnashradharmam is practised by a group of unknown and insignificant sect, or vociferously supported by these fringe group, no one would notice and make incessant talk.

        It is not the case.

        The great Sankarachaariyaars from time immemorial till now, live, practice and endorse that dharma. The Puri Sankarachary openly said, our Indian Consitution would not have suffered innumberable revisions through amendments if it had not been drafted by a Brahmin, instead of a dalit.

        These Saamiaars do it just as Pope opposes abortion and homosexuality. Just as Chruchill defended colonialism, who said, I have not become Her Majesty’s PM to liquidate her empire.

        The Saamiars come to their posts only to keep the religion in all its pristine purity and pass to nxt generation intact and compact. We cant blame them.

        Jeeyars and Sankarachaaryas believe in Varnashradharma.

        In short, the people who matter support it. Subramania Bharathi the great Tamil poet who is on every child’s tongue, believed in it and wrote about it passionately. Swami Vivekananda gave interview that it is nonsense to abolish castes. Gandhi told in Tanjavour Congress Conference that the Brahmin is above all who should be respected by others. – a statement that made EVR ran away from Cong and attack Gandhi. Gandhi believed in the dharam.

        No wonder the support came and come from VVIPs and gets noticed, talked about and vilified and protested by those who don’t believe in it.

  80. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பு நண்பர்களே, என் தரப்பிலிருந்து நான் பகிர்ந்த விஷயங்கள் சார்ந்து நான் மேற்கொண்டு சொல்வதற்கு அதிகம் ஏதுமில்லை என்று சிறியேனுக்குப்படுகிறது.

    கருத்துரையாடல் என்பது சொன்ன விஷயங்களை சலிப்பலிக்கும் வகையில் திரும்பத் திரும்பச் சொல்லுதல் உரத்துச் சொல்லுதல் என்ற நிலைகளை எட்டியபடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. அது போன்ற ஒரு நிலையில் விவாதம் தொடர்வது கருத்துக்களுக்கு மெருகளிப்பதற்குப் பதில் திசையற்ற போக்கில் செல்லும் ஒரு வாத விவாதமாக மட்டிலும் அமையும்.

    எனக்கு வாத விவாதங்களில் அதிகம் பயிற்சியில்லை.

    கருத்துக்கள் பதிகையில் இயன்ற வரை பரிச்ரமம் எடுத்து பிழை குறைவான கருத்துக்களைப் பகிர்தல் ஒரு வ்யாசம் சமர்ப்பிப்பவருடைய நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது என் புரிதல். என் அலகீடு.

    என்ன ப்ரயாசை எடுப்பினும் சமர்ப்பிக்கப் பட்ட கருத்துக்களில் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. அப்படிப் பிழை சுட்டப்பட்டால் அதை மதித்து ஏற்பது ஒரு பண்பட்ட நிலைப்பாடு என்பதும் என் புரிதல். என் அலகீடு.

    இங்கு நண்பர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்ததில் என் புரிதல் மற்றும் என் அலகீடுகள் மற்றவருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என நான் நினைப்பதிலும் கூட பிழையுள்ளது என்று அறிய முடிகிறது. இது கூடத் தேவையான ஒரு புரிதல் தான்.

    இங்கு கருத்துப்பகிரும் அன்பர்களான ஜெயபாரதன், இந்தியன், பாண்டியன், புனைபெயரில்,கௌதமன், ஷாலி, பரமசிவம்,ஸ்மிதா, ராம் இவர்களைப் போன்று பரந்த வாசிப்போ அல்லது தெளிவான தமிழில் கருத்துக்களைப் பகிரும் பாங்கோ என்னிடம் இல்லை என்பதை நான் அறிவேன்.

    பின்னும் அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் பகிர்ந்த வ்யாசத்தில் பதியப்பட்ட கருத்துக்களில் எனக்குப் பெரும் முரண்பாடுகள் இருந்தமையால் என் தரப்பிலிருந்து எதிர்வினையாற்ற விழைந்தேன். எதிர் வினையாற்றப்பட்ட வ்யாசத்தில் கருத்துக்களை இயன்ற வரை சமநிலையுடன் பகிர முயற்சித்தேன். கடந்த பல நாட்களாக நம் தளத்தில் இந்த வ்யாசம் அன்பர் பலரால் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    எனக்கென்று கருத்துக்களைப் பகிர்வதில் சில அலகீடுகள் எனக்குண்டு. நான் திரும்பிப் பார்க்கையில் நான் என் அலகீடுகளிலிருந்து விலகியமையும் அதில் நான் அடைந்த தோல்வியையும் அவை சுட்டுகின்றன. ஆயினும் நான் எங்கே தோல்வி அடைந்துள்ளேன் எப்படித் தோல்வி அடைந்துள்ளேன் என அறிவது கூட என் நிலைப்பாடுகளையும் எனது அலகீடுகளையும் மெருகூட்டும் என நினைக்கிறேன்.

    எனது சில அலகீடுகளை வாசகர்களிடம் பகிர்கிறேன். வாசகர்களுக்கு இதில் கருத்தொற்றுமை இருக்கலாம் வேறுபாடும் இருக்கலாம்.

    1. உலகத்தில் உள்ள மாந்தர்கள் அனைவரையும் அவர்களது நிறைகள் மற்றும் குறைகள் இரண்டையும் சார்ந்து அறிதல் ஒரு மனிதரை நாம் முழுமையாக அறிய ஹேதுவாகும். இது ஒரு மனிதரைப் பற்றி அதீத விருப்பு அல்லது அதீத வெறுப்பு போன்ற சார்பு நிலைகளிலிருந்து நம்மை விலகி வைக்கும்.

    மனிதர்களை நெறிகள் சார்ந்து புரிதல் என்பதில் நெறிகள் அளவுகோலாகவும் மனிதர்கள் அளக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். மனிதர்களை அளவுகோலாக வைத்து நெறிகளை அறிய விழைந்தால் நெறிகள் தறிகெடும்.

    நெறிகள் அளவுகோலாகையில் எந்த ஒரு மனிதரையும் நாம் முற்று முழுதாக நிராகரிக்கவோ அல்லது ஏற்கவோ முடியாது. நமது நெறிகள் பற்றிய புரிதலும் மெருகேரும். நம்முடைய பல கருத்துக்களை ஏற்காத மனிதர்களிடம் கூட நாம் ஏற்கத்தகுந்த நெறிகள் / கருத்துக்கள் இருக்கையில் ஒரு மனிதர் என்ற படிக்கு அவர் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்க மாட்டார்.

    இது போன்ற ஒரு நிலைப்பாடு சமூஹத்தில் இணக்கத்தைப் பெருக்கி பூசலைக் குறைக்கும் என்பது என் புரிதல்.

    காந்தியடிகள் பற்றி எனக்கு எதிர்மறையான கருத்துக்கள் மட்டிலும் இருந்த படிக்கு என் நெறிகள் சார்ந்த நிலைப்பாட்டில் அவரைப் புரிய முயற்சித்ததில் ஒரு மனிதரைப் புரிய விழைவதில் ஒரு மஹாத்மாவைப் புரிய விழைவதில் நான் எப்படி ஒரு குழப்ப நிலையில் இருந்திருக்கிறேன் எனப் புரிகிறது.

    எனது வ்யாசத்தில் காந்தியடிகளிலிருந்து பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர், கவி காஜி நஸ்ரூல் இஸ்லாம் போன்ற சான்றோர்களை இது போன்ற ஒரு அளவுகோலிலேய அறிய விழைந்துள்ளேன்.

    2. ஒரு மனிதரைப் பற்றி நிறை குறைகளைப் பேச விழைபவர் முதற்கண் இது சம்பந்தமாக தகவற்களை கவனத்துடன் சேகரம் செய்தல் நன்று. நிறைகளைப் பற்றிப் பேசுதலில் பிழைகள் இருப்பினும் அது அதிக சலனத்தை ஏற்படுத்தாது. ஆயின் குறைகளைப் பற்றி பட்டியலிடுமுன்னர், தகவலும் புரிதலும் தெளிவாக இருத்தல் அவசியம். தகுந்த தகவலன்றி புரிதலன்றி ஒரு மனிதரைக் குறைகாண்பது தவிர்க்கப்பட வேண்டியது.

    எனது வ்யாசத்திலும் எனது உத்தரங்களிலும் இதைப் பின்பற்றியுள்ளேன். ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமான் சிறையிலிருந்து வெளிவர மன்னிப்புக்கடிதம் கொடுத்தது என்ற விஷயம் பற்றி என் வ்யாசத்தில் ப்ரஸ்தாபித்துள்ளேன். ஆயினும் நிலைப்பாடு ஏதும் எடுக்கவில்லை. காரணம், இது விஷயமாக இதை ஒட்டியும் வெட்டியும் உள்ள கருத்துக்கள் இரண்டையும் அறிந்த பின் விஷயத்தை புரிய முயற்சிப்பது விஷயத்தெளிவு நல்கும் என்பது என் புரிதல். அன்பர்கள் ஷாலி மற்றும் இந்தியன் ப்ரதிபக்ஷமாகவும் பக்ஷமாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இது சம்பந்தமாய் மேலும் வாசிக்கையில் எனக்குத் தெளிவு ஏற்படலாம். அது போன்றே காந்தியடிகளின் கொலை வழக்கில் ஸ்ரீ வீர சாவர்க்கர் அவர்களின் பங்கு பற்றியும். தெளிவான ஒரு முகாந்திரம் இல்லாது மறுக்க இயலா சான்றுகள் இல்லாது ஒரு மனிதரைக் குற்றம் சாட்டுதலை என்னால் ஏற்க இயலவில்லை.

    3. திரியிலிருந்து விலகாது கருத்துப் பகிர்தல் என்ற விஷயத்தை நான் தலையாயதாகக் கருதுகிறேன். அது ஒரு வ்யாசத்தை சமர்ப்பித்த ஒரு அன்பருக்கு நாம் செய்யும் உண்மையான வெகுமானம். திரியில் பேசப்படும் கருத்துக்களுடன் ஒத்து அல்லது வேறுபட்டு கருத்துக்கள் பகிர்வது திரியில் பேசப்படும் கருத்துக்களைப் பற்றி தெளிவு நல்கும். ஒரு முறையான விவாதம் திரியின் கருதுகோளிலிருந்து விலகலாகாது.

    இந்த வ்யாசத்தை சமர்ப்பித்தவன் என்ற ரீதியில் திரியிலிருந்து விலகிய விஷயங்களைப் பற்றி நான் கருத்துக்கள் பகிர்ந்துள்ளேன் என்ற படிக்கு நான் இந்த விஷயத்தைச் சரியாக கையாளவில்லை எனத் தெரிகிறது. இது எனது தோல்வி. இதை ஏற்கும் அன்பர்கள், தங்களது கருத்துப் பரிமாற்றங்களிலும் இதைக் கடைப்பிடித்தல் முனைப்பான focussed வாத விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்பது என் புரிதல்.

    4.தனிநபர் தாக்குதல், வசவுகள், எள்ளல், கருத்து நேர்மையின்மை, கருத்துச் சமநிலையின்மை போன்றவை வ்யாசத்திலோ அல்லது கருத்துப் பகிர்வுகளிலோ தவிர்க்கப்படுதல் ஆரோக்யமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் கருத்துத் தெளிவிற்கும் ஹேதுவாகும்.

    எனது வ்யாசத்தில் இவை முழுதும் மிகக் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. இதிலிருந்து விலகவில்லை என நினைக்கிறேன்.

    எனது கருத்துப் பரிமாற்றத்தின் போது ஏதோ ஒரு புள்ளியில் தனிநபர் தாக்குதல் மற்றும் எள்ளல் போன்று தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களில் இறங்கி அதைத் தொடர்ந்துள்ளேன் என்பது வருத்தமளிக்கிறது. கருத்துத் தடம் புரளல், உரக்கப்பேசல் போன்ற தவிர்க்கப்பட வேண்டிய முறைமைகளில் ஆயாசம் அடைந்த நான் இவ்வாறு தவறிழைக்க நேர்ந்தது எனப் புரிகிறது. இது எனது மிகப்பெரிய தோல்வி. என்மீது வசவுகள் பொழியப்படினும் பதிலுக்கு வசவுகளில் இறங்காத நான், தனிநபர் தாக்குதல் மற்றும் எள்ளல் போன்றவற்றிலிருந்தும் முனைந்திருந்தால் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் எனப்புரிகிறது. அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்கள் என் மீது வசவுகள் பொழிவது என்பது வசவுகள் பொழிவது தவறு என்ற நிலைப்பாட்டிலிருந்து தவறு தான். ஆயினும் நான் எனது நிலைப்பாட்டிலிருந்து விலகியமைக்கு எனக்குக் கிட்டிய பரிபவமாகவே அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். அன்பர் அவர்களுக்கு எனது க்ஷமா யாசனங்கள்.

    5. கடந்த சில நாட்களாக திண்ணை தளத்தில் இந்தத் திரி மட்டும் வெகுவாக விவாதிக்கப்படுவதையும் பார்க்கிறேன். என்னை விடப் பன்மடங்கு வாசிப்பனுபவம் உள்ள மற்றும் கருத்துத் தெளிவுடன் வ்யாசங்கள் நல்கிய பல அன்பர்களின் வ்யாசங்கள் முறையாக விவாதிக்கப்படாதிருப்பதற்கு என் வ்யாசம் ஒரு இடையூராக இருந்திருக்குமோ என விசனம் ஏற்படுகிறது. அதற்கு அந்த பல அன்பர்களிடம் எனது க்ஷமா யாசனங்கள்.

    6. ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்கள் இருந்திருந்தால் எனது வ்யாசத்தைப் பற்றி அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எனக்கு பலகோடி ரூபாய்க்கு சமானமாக இருந்திருக்குமே என ஒரு ஆயாசம் உண்டு. பின்னும் இயற்கையை யாரே வெல்வர்.

    சரியான சமயத்தில் சரியான முக்யமான புரிதலை எனக்கு நல்கிய அன்பர் ஸ்ரீ கணபதி ராமன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆம் முறையான கருத்துப்பரிமாற்றத்தில் கருத்துக்கள் மட்டிலும் முன்வைக்கப்பட வேண்டும். கருத்துத் திணிப்பு என்பது எவ்வகையிலும் தவறு. என் தரப்பிலிருந்து இதை இன்னொரு முக்யமான அலகீடாக ஏற்கிறேன்.

    கருத்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      There is Law called, “The Law of Diminishing Return.” It is a wonderful law. It is applicable in this case to Mr. Krisnakumarji. His comments are always long and make one tired to read as they go in multi-direction.

      If you stretch to explain your point of view in 100 lines instead of 5 to 10 lines, the message is drowned and diluted.

      S. Jayabarathan

  81. Avatar
    paandiyan says:

    the whole content ended with here…..
    //வீர சாவர்க்கர் காந்தி கொலைச் சதி வழக்கில் பொய் சொல்லித் தப்பினார் //
    what proof you have given so far??? 100 times asked this question..

    how many times this has been raised here? Answer his question first.

    1. Avatar
      paandiyan says:

      bye bye from Paandiyan
      நான் எழுதிய pala pala பின்னோட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது அதில் என்க்கு ஒன்றும் வருத்தம் இல்லை . பின்னூட்டதில் words like “நண்பர் ராமையா” “bloody”, “பூனைபெயரான்”, “Stop this non-sense demand” “Stop talking such stupid”. எல்லாம் அன்புடம், மிகவும் பண்புடன் , மிக நாகரீகமகா எழுதிய வார்த்தகளை எல்லாம் வெளியிடும் அட்மின் அவர்களை வாழ்த்தி, நான் இங்கு எழுதியதில் தவறு என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் சொல்லிக்கொள்ள விழைகின்றன். Thanks to all and when you change cristian name you are allowed here to use above words but not for hindu names. thats what admin policy here.. bye bye

      1. Avatar
        IIMGanapathi Raman says:

        But you wrote about Jeyabarathan (pointed out by Krishna Kumar)”தூக்கிலே தொங்குவாரா?”

        Thinnai had allowed that.

        Your other liners might not have been allowed, because, may I hazard the guess? Thinnai may have considered your other liners not so spicy as the one like Thookkile thongvaaaraa?

        After all, it is the duty of an administrator of any forum to make the proceedings sexy (not possible here) falling which make it spicy, specie, spiciest!

  82. Avatar
    ஷாலி says:

    என்ன ஆச்சு! திரு.பாண்டியன் அவர்களுக்கு! ஒரே AHA…AHA…AHA.ஓ…அண்ணன் சிரிக்கிறாரு! நல்லா சிரிங்கே! இந்தப் பாட்டே கேட்டுக்கிட்டு சிரிங்கே…”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு..இங்கே நீ சிரிக்கும் (திரு.ஜெ.பா) புன்சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு, நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அங்கு சிரிப்பவர் யார்? அழுபவர் யார்? தெரியும் அப்போது….
    நான் இன்னும் எவ்வளவோ எழுதனும் என்று நினைத்தேன்.அதற்குள் மரியாதைக்குரிய நண்பர் ஸ்ரீ க்ருஷ்ணாஜி அவர்கள் திரையைப் போட்டுவிட்டார்கள்.அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.நன்றி! நன்றி! ரிலாக்ஸ் ப்ளீஸ்!
    பாண்டியன் ஸார்! ஒரு நல்ல பழைய பாட்டு சூப்பர் பாட்டு கேட்டுப்பாருங்கோ! “ கதவு திறந்ததா…காற்று வந்ததா வான உலகம் தெரிந்ததா…வாழும் உலகம் புரிந்ததா….அஹா…அஹா…ஒஹோ…ஒஹோ…ஓ.ஓ.

    1. Avatar
      paandiyan says:

      அம்மா ஷாலி அவர்கள , கட்டுரை சொந்தகாரர் க்ருஷ்ணகுமார் அவர்கள பெரிய explanation கொடுத்து தி end போட்டுவிட்டபடியாலும் , தொடர்ந்து விவாதம் பண்ணியதிய தொடர மனம் இல்லாமலும் இங்கு நானும் நன்றி சொல்லி ஒரு end போட்டுவிட்டன் . இன்னொரு சமயத்தில், பின்னூட்டத்தில் சந்திப்போம் –அதுவரை நீங்கள் சொன்ன பாட்டு எல்லாம் கேட்கின்றேன் . சிரிபதில் தவறு ஒன்ரும் இல்லைய , ஊரான்தான் நம்மை பார்த்து சிரிக்ககூடாது.

  83. Avatar
    poovannan says:

    ஹிந்து சீக்கியர் என்று ஒரே அடிதடியாக இருக்கிறதே
    சீக்கியரை கேட்டு விட்டு பேசலாமே அவர்கள் ஹிந்துக்களா என்று
    இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொள்ளப்பட்ட ஹிந்துக்களை விட பல மடங்கு அதிகமானோர் சீக்கிய காலிஸ்தானி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.காளிஸ்தானி தீவிரவாதிகள் பற்றி சிறிதளவு தெரிந்தவர்களுக்கு,படித்தவர்களுக்கு கூட இது புஇர்யும்
    பஞ்சாபில் பல மாவட்டங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.குறிப்பிட்ட மாவட்டங்களில் 48 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் ஆகி விட்டது என்று ஆதாரத்துடன் பல புத்தகங்கள் அப்போது வெளிவந்தன.பேருந்தில் இருந்து சீக்கியரை இறக்கி விட்டு விட்டு மீதம் இருந்த ஹிந்துக்களை மொத்தமாக கொள்வதும் நடந்திருக்கிறது
    RSS இந்திராவின் மரணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ராஜிவை ஆதரிதததால் தான் பா ஜ கா வெறும் இரண்டு இடங்கள் 1984 தேர்தலில் பெற்றது.சீக்கியர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் பல rss காரர்களும் அடக்கம்
    இது டெல்ஹியில் வெட்டுபட்ட செக்கை குடும்பங்கள் அனைத்திற்கும் தெரியும்
    அவர்களில் ஒருவராக இருந்து பின்பு பிரதமர் ஆன மன்மோகன் சொல்வதை கொஞ்சம் பாருங்கள்

    http://www.rediff.in/election/1999/sep/02man.htm

    The first information reports lodged at different police stations in Delhi prove that several RSS men were involved in the riots, Dr Singh said.

    He dismissed as “BJP propaganda” reports that Sikh voters had asked him during campaigning how they could vote for a party that had “blood on its hands”.

    He said the BJP had no right to dictate from where he could contest. “How can they prevent me from contesting an election just because I am a Sikh?” he challenged.

    1. Avatar
      paandiyan says:

      initially i thought stay away from this topic and i put end card as well. but some of copy/past job they think that solid eveidence. A worst prime minester never ever seen in india is manmohan and he never speaks truth also. initally 2g he defend maximum level and atlast what haappend the same for so many scams. initally he try to defend and make false allegations finally he himself proff that he is a mega comedian. read here also how true the above my words.
      A variant of the second full apology is the one offered by Manmohan Singh on the anti-Sikh riots of 1984. Here the apology sounds real and sincere, but it is offered on behalf of someone else. It is also forced by events.

      Manmohan Singh’s 2005 apology for the anti-Sikh riots — in which Congress goons killed more than 3,000 Sikhs in Delhi and elsewhere after Indira Gandhi’s assassination — was applauded by the world of a great example of official contrition. But what did Singh actually say on 11 August 2005 in Parliament that sounded so sincere?

      Here are some of his key sentences and phrases.

      While calling the assassination of Indira Gandhi a “great national tragedy”, he added, “’what happened subsequently was equally shameful.” (Note: What happened cannot apparently be mentioned clearly. And the killing of 3,000-and-odd Sikhs was just “equally shameful” as the killing of the PM.)

      Singh’s apology came after the GT Nanavati Commission named several Congress leaders as complicit in the killings, and it seemed as if BJP and Akali politicians will make political capital out of it to put Congress on the mat. So he said: “I have no hesitation in apologising to the Sikh community. I apologise not only to the Sikh community, but to the whole Indian nation because what took place in 1984 is the negation of the concept of nationhood enshrined in our Constitution.”

      But why did Singh apologise for something done by Rajiv Gandhi’s government, of which he wasn’t even a part? Was there any apology from the Gandhi family, since it was Rajiv Gandhi who justified the violence claiming that when a big tree falls, the earth shakes

  84. Avatar
    poovannan says:

    மன்மோகன் இப்படி கூறியதால் அதிர்ச்சி அடைந்த எதிராக நின்ற பா ஜ க வேட்பாளர் மல்ஹோத்ரா ,மன்மோகனின் மூன்று மகள்களும் சீக்கியர் அல்லாதவரை திருமணம் செய்தவர்கள்,அவர் சீகியரே அல்ல என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்.சீக்கியரின் மேல் இருந்த டில்லி மக்களின் வன்மம் (புது டில்லியை வெடிகுண்டு தினமும் வெடிக்கும் இடமாக சீக்கிய தீவிரவாதிகள் ஆக்கி வைத்திருந்ததால் )அவரை தோல்வி அடையவும் செய்தது
    குஷ்வந்த் சிங்க் போன்றோர் மன்மோகன் சிங் வெல்ல வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.அவர் எங்கும் rss சீக்கியர்களுக்கு உதவியது என்று எழுதியது கிடையாது.பல ஹிந்துக்களின் உதவியை தான் குறிபிட்டுள்ளார். அவர் ஒரு rss எதிர்ப்பாளர். டெல்லியில் பா ஜ க வலுவான நிலையில் உள்ள கட்சி.காங்கிரஸ் கட்சியை விட அடிப்படை தொண்டர்கள் அதிகம் உள்ள கட்சி. அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சீக்கியர் கூட இறக்காமல் டெல்லி கலவரத்தை தடுத்திருக்க முடியும்.
    பங்கு பெற்ற அவர்களை பாதுகாவலர்கள் என்று வாய் கூசாமல் அதற்குள் சொல்ல முடிவதை விட சீக்கியர்களுக்கு வேறு எதுவும் வேதனை தராது.பஞ்சாபில் காலிச்டானியர்கலால் ஹிந்து தலைவர்கள்,rss தலைவர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டார்கள்

    இருவது ஆண்டுகளுக்கு முன் டெல்லிக்கு சென்றிருக்கிறீர்களா
    ஹோட்டல்கள் ஏழரைக்கு மூடப்படும்.மேல ஒரு மணி நேரம் எட்டரை வரை இருக்க கட்டணம் நூறு ரூபாய் வசூலிப்பர்.தீவிரவாதிகளின் பயம் காரணமாக எட்டரைக்கு அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும்.மதுவிலக்கு இருக்கும் குஜராத்,மணிப்பூர் மாநிலங்களில் கூட இரவில் மது கிடைத்து விடும்.ஆனால் டெல்லியில் வாய்ப்பே இல்லை.கஷ்டப்படவனுக்கு தான் தெரியும் அப்ப இருந்த டெல்லியின் நிலை .இப்ப கூட கனடாவில் காலிஸ்தான் ஆதரவாக விளையாட்டு போட்டிகளின் போது கொடிகள் தென்பட்டது

    http://www.indianexpress.com/news/dont-allow-antiindia-activities-in-canada/639440/

    It also comes close on the heels of the 25th anniversary of the bombing of Air India plane ‘Kanishka’ in 1985 which claimed the lives of 329 people in which some Khalistani extremists living in Canada were believed to be involved.

  85. Avatar
    poovannan says:

    http://www.sikhmuseum.com/bluestar/newsreports/840613_1.html

    The United News of India news agency said about 1,200 Sikh deserters from Bihar state have surrendered in neighboring Uttar Pradesh state and given up their efforts to reach Punjab. UNI said all major groups of deserters have been accounted for, although a few smaller groups are still at large.

    Military sources said at least 2,000 Sikh soldiers deserted their army bases in eastern, northern and western India last weekend and headed for Punjab state and New Delhi to protest against the army attack on the seventeenth century shrine.

    At least 46 deserters were killed in gun battles with military and police pursuers, 600 were arrested and most of the others surrendered, said the sources, who spoke on condition they not be identified.

    Thirteen rebel Sikh soldiers were reported killed and 33 seriously wounded in a pitched battle yesterday with loyal troops in Agartala, in the northeastern state of Tripura.

    Rebel soldiers captured near Bombay disclosed they had planned to take over the airport in the western port city, prompting Indian Airlines to alert all stations against possible hijack attempts.

    ராணுவ கலகத்தில் ஈடுபட்ட சீக்கிய சிப்பாய்கள் ஹிந்து உயர் அதிகாரிகளை கொன்று ஆயுதங்களோடு போராடினார்கள்.கிருத்துவ ,இஸ்லாமிய அதிகாரிகளை கொல்லாமல் விட்டு விட்டார்கள்.
    அப்போது இணையம் கிடையாது.அந்த காலத்தைய செய்தி தாள்களை இணையத்தில் ஏற்றினால்,எத்தனை ஆயிரம் ஹிந்துக்கள் பஞ்சாபில் கொல்லப்பட்டார்கள்,டெல்லியில் வெடிகுண்டு எத்தனை முறை காலிஸ்தான் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்திரா இறந்த பிறகு எத்தனை ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பற்றிய உண்மைகள் விளங்கும்

  86. Avatar
    poovannan says:

    The Indian government paid no attention to Sikh concerns and began arresting Sikhs blindly. About 150,000 Sikhs were arrested and many were killed- still not a single demand was met. Sant Jernail Singh said, “There is no solution to Sikhs’ problems without freedom.” Riots between Hindus and Sikhs broke out. When Sikhs were killed, police took no action but when Hindus were killed, not only victims were punished but also innocent Sikhs were killed. In other states of India many Sikhs were killed. All Sikhs traveling in trains and buses were stopped and killed. In Haryana, Hindus were called from villages by beating drums to kill Sikhs. Every train was stopped and Sikhs were dragged out and killed. At this point Sant Jarnail Singh was assured that the Indian government was making plans to attack the Golden Temple at Amritsar. He addressed the Sikhs and advised them to be ready to defend the Golden Temple. He said, “The day Indian government attacks the Golden Temple, foundation of Khalistan will be laid.”

    When the movement got out of the government’s control, Punjab was handed over to the military. The Indian government had planned to attack Golden Temple in the first week of June because Martyr day of Fifth Guru, Guru Arjan Dev Ji was on June 6th and Indian government knew there was going to be a big Sikh gathering. The Government knew that Sikhs would gather in thousands. Punjab was totally under military control. A curfew was announced. Telephone lines were cut and all press reporters were asked to leave Punjab. Punjab was completely disconnected from the rest of the world. The entire state was surrounded by troops and all paths were blocked. Nobody was allowed to enter or leave. All the Sikhs were being harassed all over India.

    http://www.searchsikhism.com/rss.html

    First, let’s look at the problems the RSS has created in Punjab. The first action of RSS is to weaken the power of Punjab and ultimately destroy it. To accomplish this, they have masterminded in recent years to drown the whole Punjab with massive infusions of drugs and alcohol throughout the community. They have actively been involved in the distribution and trafficking of drugs, alcohol and forming of rings of prostitution. Mostly, the targets are college students and the rural youth especially Sikhs. Most of the college students today are drug addicts and alcoholics including many girls. It becomes clear that the goal of such tactics is to depress the number of university graduates in future generations by creating a population of young drug addicts and alcoholics. A parallel fate is occurring in the Sikh agricultural community. There are presently more bars in Punjab then public schools and many more are opening daily.

    Secondly, the RSS is moving populations of Hindu migrants to Punjab from other parts of the country, so that the Hindu population can overtake the native Punjabi population. The theory is that if there are more Hindus than Sikhs in Punjab that during the elections more people will claim Hindi as their first language instead of Punjabi. By numeric superiority and by law, Hindi would eventually become the first language of Punjab. By eclipsing Punjabi as the official language, Punjab would become a Hindi State. But, it goes much deeper then that. It will also impact education policy. No Punjabi means Gurmukhi Script will not be taught resulting in less people learning Gurbani and fewer Sikhs. Punjabi is the Sikhs’ native tongue and Sri Guru Granth Sahib Ji is written in Gurmukhi script. This is a classic cultural genocidal tactic.
    இவர்கள் ஏதோ குட்டி குட்டி இயக்கங்கள் கிடையாது. 1989 தேர்தலில் முழுக்க முழுக்க காலிஸ்தானி ஆதரவாளர்களே வெற்றி வாகை சூடினார்கள்.அவர்கள் தேர்தலை புறக்கணித்ததால் பதிவான பத்து சதவீத வாக்குகளை வைத்து பின்த் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசாங்கம் 91 இல் பதவிக்கு வந்தது. அவர் முழுமுயற்சியோடு சீக்கிய தீவிரவாதத்தை அடக்கினார். சிறிது வசதியான சமூகம் என்பதால் சீக்கியர்கள் காலிஸ்தான் கிடைக்க பல இழப்புகளை வெகுநாட்கள் சந்திக்க வேண்டும் எனபது புரிந்ததும் அதில் ஈடுபாடு இழந்தார்கள்.30 சதவீதம் உள்ள தலித் சீக்கியர் காலிஸ்தான் தீவிரவாதத்தில் ஈடுபாடு காட்டாததும் காலிஸ்தான போராட்டங்கள் தோல்வியடைய இன்னொரு முக்கிய காரணம்.ஆனால் முதல் மந்திரி இந்த போராட்டத்தில் தன உயிரையும் இழந்தார்

  87. Avatar
    poovannan says:

    Hindus will occupy Punjab gradually. Already their population has increased by 12% in last ten years or so. The problem is exacerbated by the population imbalance created by ultrasound gender selection and subsequent female infanticide by native Punjabis. Migrant Hindus are readily afforded all rights in Punjab that Punjabis are not accorded in other states. We must do something to stem the flow of migrant Hindus coming into Punjab and buying land. Sikhs are not permitted these days in any of the Indian states to buy land, vote or own businesses there whereas Hindus coming in Punjab have right to vote and buy the land for farming. Soon there will be more Hindu farmers in Punjab than Sikhs and the Hindus will control the market. Sikhs will be pushed from the market and lose economic clout, eventually lose their livelihood and become severely impoverished. Sikhs need to exhibit foresight and work to stem the tide of Hindu migrants before they lose their power base. The Sikhs need to act soon or another genocide like the one in 1984 is forthcoming. If the migrants remain in Punjab they are likely to support the Congress. We need to remember that the Congress is responsible for killing more than 300,000 Sikhs in the past 17 years and putting 60,000 Sikhs in jails without any charge or trail. The record of the BJP is just as dismal.

    Secondly, pseudo saints, false living Gurus like Radha Swami, Nirankaris, Noormahals, Saccha Sodda are entities created by the RSS. The RSS has setup this network of agents to mislead unsuspecting Sikhs. These groups and individuals are given billions of rupees every year to spread their mission of misinformation and propaganda against Sikhism. These groups often distort the meanings and content of Gurbani to mislead the population. Legitimate Sikh groups are often sidelined and threatened while these scoundrels enjoy police protection and full support. Now the RSS has started sending and encouraging these false people to branch out to outside countries too. Be well aware and avoid them!

    The third tactic of the RSS involves the distortion and destruction of educational content. They have taken control of the educational policy making of the Punjab. They are pushing the lie in that Sikhism is a sect of Hinduism. Competitions are being held on Sikhism but the books provided for students include all this false information about Sikhism. The RSS is publishing the Sikh history books, which state that Sikh Gurus lived their lives as Hindus and they have done everything with the help of Hindus.

    அடிப்படைவாத சீக்கியர்கள் (நம்ம ஹிந்டுத்வர்கள்,சாவர்க்கர் ,சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள்) கம்முனிச கட்சிகளில் இருக்கும் சீக்கியர்களை,rss இயக்கத்தில் உள்ள ஹிந்துக்களை எதிரிகளாக தான் இன்றும் கருதுகிறார்கள்.பஞ்சாபில் சீகியர்களுக்கான் கட்சி அகாலி தளம்,பஞ்சாபி ஹிந்டுக்களுக்கான் கட்சி பா ஜ க. இதை மாற்ற சித்து போன்றவர்களை இழுத்தும் பா ஜ க வால் சீக்கியர்களை கட்சிக்குள் இழுக்க முடியவில்லை.
    உட்டர்க்ஹாந்து மாநிலம் பிரியும் போது அங்கு சேர்க்க கூடாது என்று உத்தம் நகரில் உள்ள சீக்கியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இன்றும் அங்குள்ள பெரும்பாலான மலைகளை சீக்கியர்கள் அவர்கள் வழிப்பாட்டு தளங்களாக கைப்பற்றி விட்டார்கள் என்று பொருமும் இந்துக்கள் உத்தர்கந்த் மாநிலத்தில் அதிகம் பேர் உண்டு

  88. Avatar
    IIM Ganapathi Raman says:

    I should add a tail piece to Poovannan’s shocking messages.

    Bihari migrant labourers go everywhere in India. Having been driven out of Mumbai, they are now deluging the South.

    But wherever they go, they don’t conceal their identity: either religious or regional.

    Most of them are Hindus. They don’t behave like Muslims in Muslim dominated area, or Christians in Chrisitian dominated area…for e.g.Bandra.

    Yet, you can find them in Punjab major cities wearing turbans. When asked, they say if they don’t, they will get killed. In Punjab, no Hindu can feel free unless he is a Punjabi Hindu for the PHs are the second majority there.

    There is always an undercurrent of animosity between Punjabi Hindus and Punjabi Sikhs – those who lived in Delhi know that.

    The Indira assassination came a handy tool to launch a virulent attack on all Sikhs. It is just an opportunity they had been waiting for. In any society such things happen. People’s pent up hatred could not be vented out due to some reasons beyond their control. So, when they get anonymity, they let loose their anger.

    If I am allowed to hazard a guess here, it is the Hindu hatred of Sikhs as well. The Hindus hide themselves under the guise of Congress walahs who were offended emotionally by the audacious act of Sikhs to kill their leader Indra.

    Guess only. I can’t show proof. But whether the guess also occurs to you is left to you. It will if you had had the same experience of close living in the North as others.

    But it is safer to say it is congwallahs’s ire vs Sikhs by that safer mode, we do away with the possibility of communal element there.

    Sometimes,பொய்மையும் வாயமையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் as the ancient Tamil poet has pointed out humanely.

    The Sikhs’ adherence to their religion and their gurus is unsurpassed even by Jews and Muslims. The Hindus, as all of us know, have neither solidarity nor uniformity in their adherence – due to their own inherent pulls and counter pulls. This makes the Hindus envy both Muslims and Sikhs for their passionate love of their religion and solidarity. The quarrels of the Hindus with Indian Muslims and Indian Christians is based on the envy.

    But the Sikhs are a great people. They have brought up the next generation w/o any feeling of vengeful thoughts against the children of the culprits. Their religion humanises them. If there is one people who are benefited by their religion, as a people, it is them.

    Fear None. Frighten None – Guru Tegh Bahadur Sahib Ji.

    1. Avatar
      paandiyan says:

      ‘இருபது வருடங்களில் கேரளத்தை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள். மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற பணத்தையும் ஆசையை தூண்டும் வேறு வழிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர் அல்லாத பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்…’ – இந்த குற்றச்சாட்டை சுமத்தியது ஆர்.எஸ்.எஸ். ஸோ, பா.ஜ.க.வோ, கேரளா மாநிலத்தை சேர்ந்த எதாவது ஒரு ஹிந்து அமைப்போ அல்ல. கேரளா மாநிலத்தை ஆளும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரான வி.எஸ்.அச்சுதானந்தன்தான் இப்படிக் கூறியிருக்கிறார்.
      உடனே இஸ்லாமிய அமைப்புகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், ‘அச்சுதானந்தன் ஹிந்துத்துவவாதிகளைப்போல் பேசுகிறார்; ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயதின்மீதும் பழி சுமத்துகிறார்’ என்று கண்டனங்களைத் தொடுத்தனர்.
      அச்சுதானந்தன் அசைந்து கொடுக்கவில்லை. ‘நான் கூறியது ஒட்டு மொத முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியல்ல; கேரளா மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைப் பற்றித்தான் சொன்னேன். அதையும்கூட, தீவிரவாத சம்பவங்களின்போது கைது செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில்தான் பேசினேன்’ என்றார்.
      மதக்கலவரங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும், நாட்டின் பிற பகுதிகளில் நடந்த காலங்களில் எல்லாம், கேரளம் மத துவேசத்தால் பாதிக்கப்படாமல் இருந்தது. அனால், 1990 – களின் மத்தியில் நிலைமை மாறிவிட்டது. மதக்கலவரத் தாக்குதல்கள் பெருகி விட்டன. கடந்த மாதம் ஒரு கும்பல் டி.ஜே.ஜோசெப் என்ற கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டித் துண்டித்த சம்பவம், கேரளா மாநிலத்தில் பெருகிவிட்ட இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிற்க்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. பேராசிரியர் ஜோசப், தான் பணிபுரியும் கல்லூரியில் நடந்த தேர்விற்க்கான கேள்வித் தாளில் இஸ்லாமியர்களின் இறை தூதர் முஹம்மது நபியை பற்றி அவதூறான தகவலைக் கூறியதாக குற்றம் சாட்டி, அவரது கை வெட்டி துண்டிக்கப்பட்டது. டி.ஜே.ஜோசெப்பின் கையை துண்டித்தவர்கள் ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்பை சேர்த்தவர்கள்.
      ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பு, இருபதுக்கும் மேற்ப்பட்ட அணிகளை உண்டாக்கி இருக்கிறது. பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக, இமாம்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக, டாக்டர்களுக்காக, பத்திரிக்கையாளர்களுக்காக…என்று தனித்தனி அணிகளை அமைத்து இயங்குகிறது. ஏராளமான இஸ்லாமியக் கல்வி மையங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறது. வேறு மதங்களில் இருந்து மதம் மாறி வந்தவர்களுக்கென்றே, தனியாக இஸ்லாமியக் கல்வி மையங்களை நடத்துகிறது.
      இவ்வளவும் செய்ய பணம் எங்கிருந்து கிடைக்கிறது? ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’வுக்கு கேரளாவில் மட்டும் 30000 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அகில இந்தியா அளவில் 80000 உறுப்பினர்கள் இருப்பதாகவும், அந்த உறுப்பினர்கள் மாதா மாதம் தரும் சந்தாத் தொகையைக் கொண்டு அமைப்பு இயங்குவதாகவும், அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அனால், சட்டத்துக்கு உட்பட்டும், சட்டத்துக்கு புறம்பாக ஹவாலா முறையிலும் கேரளத்தில் குவியும் அந்நிய செலாவணியே, இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.
      கேரளத்தை சேர்ந்த 25 லட்சம் பேர் வலைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். அவர்களால் ஆண்டு ஒன்றிற்க்கு 40000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி கேரளத்திற்கு வருகிறது. இது கேரளா மாநில அரசின் பட்ஜெட்டைப்போல் நான்கு மடங்கு. தவிர, ஆண்டிற்கு 50000 கோடி ரூபாய் ஹவாலா முறையிலும், கேரளாவிற்கு வருவதாக மாநில டி.ஜி.பி. வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
      ‘தீவிரவாத அமைப்புகளுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொகை ஹவாலா முறையில் வந்து கொண்டிருக்கிறது. அனால், இது மத்திய அரசின் அதிகாரதிற்க்குட்பட்ட விசயமாக இருப்பதால், மாநில அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க
      ஏற்கெனவே நடந்து வந்த தாக்குதல்களின் தொடர்ச்சியான ஒரு சம்பவம் போலவே, கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் கையை வெட்டி துண்டித்ததும் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் அரசியல் கட்சிகளை தட்டிஎழுப்பி இருக்கிறது. ‘தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்பதில் எல்லா கட்சிகளுக்கும் ஒத்த கருத்து உண்டாகி இருக்கிறது.
      இந்த விஷயத்தில் முதலடி எடுத்து வைத்தது – முஸ்லிம் லீக்தான். இஸ்லாமிய சமுதாயத்தில் வளரும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரசாரத்தை முஸ்லிம் லீக் ஆரம்பித்திருக்கிறது. ‘இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பெருமளவில் சேதத்தை உண்டாக்கிவிட்டர்கள். இவர்களை தனிமைப் படுத்த வேண்டும்’ என்கிறார் முஸ்லிம் லீக் தலைவர் சையித் ஹைதரலி ஷாயப் தங்கல்.
      டி.ஜே.ஜோசெப்பின் கையைத் துண்டித்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பும், இந்த தாக்குதலை கண்டித்திருக்கிறது. ‘இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அனால், இது எங்கள் அமைப்பு திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அல்ல, வெறும் உள்ளூர் பிரச்சினை…
      ‘எல்லாவற்றுக்கும் மூல கரணம் கேள்வித்தாளில் முஹம்மது நபியைப் பற்றி அவதூறு இடம்பெற்றதுதான். அதற்க்கு முன்பும் சில சம்பவங்கள் இங்கு நடந்திருக்கிறது. சில கிருஸ்தவ மிஷனரிகள் முகம்மது நபியைப் பற்றி கேவலமான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை விநியோகித்தன. முஸ்லிம் மாணவிகள் தங்களது மதப் பண்பாட்டின்படி உடை அணிந்து வருவதைக் கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் தடை செய்திருந்தன…
      இது போன்ற சம்பவங்களால் சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு இப்படிச் செய்திருக்கலாம். அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்கிறார்கள் ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் நிர்வாகிகள்.

  89. Avatar
    paandiyan says:

    see the manmohan real face and how he released TWO different statments openly. so what was the justification????

    A variant of the second full apology is the one offered by Manmohan Singh on the anti-Sikh riots of 1984. Here the apology sounds real and sincere, but it is offered on behalf of someone else. It is also forced by events.

    Manmohan Singh’s 2005 apology for the anti-Sikh riots — in which Congress goons killed more than 3,000 Sikhs in Delhi and elsewhere after Indira Gandhi’s assassination — was applauded by the world of a great example of official contrition. But what did Singh actually say on 11 August 2005 in Parliament that sounded so sincere?

    Here are some of his key sentences and phrases.

    While calling the assassination of Indira Gandhi a “great national tragedy”, he added, “’what happened subsequently was equally shameful.” (Note: What happened cannot apparently be mentioned clearly. And the killing of 3,000-and-odd Sikhs was just “equally shameful” as the killing of the PM.)

    Singh’s apology came after the GT Nanavati Commission named several Congress leaders as complicit in the killings, and it seemed as if BJP and Akali politicians will make political capital out of it to put Congress on the mat. So he said: “I have no hesitation in apologising to the Sikh community. I apologise not only to the Sikh community, but to the whole Indian nation because what took place in 1984 is the negation of the concept of nationhood enshrined in our Constitution.”

    But why did Singh apologise for something done by Rajiv Gandhi’s government, of which he wasn’t even a part? Was there any apology from the Gandhi family, since it was Rajiv Gandhi who justified the violence claiming that when a big tree falls, the earth shakes

  90. Avatar
    paandiyan says:

    An Indian minister at the centre of a political storm over bloody anti-Sikh riots in 1984 has resigned but the government remains under fire and is likely to push more riot-tainted politicians to leave, analysts said yesterday.

    Sikh leaders still seething 21 years after nearly 3,000 Sikhs were butchered in New Delhi planned renewed street protests and parliamentary attacks on India’s ruling Congress party.

    “People named in the riots should not be allowed to resign. They should be dismissed, arrested and prosecuted in special courts so an example is set,” said Sukhvir Singh Badal, leader of the opposition Sikh Shiromani Akali Dal party.

    Jagdish Tytler, minister for expatriate Indians, quit Wednesday after Prime Minister Manmohan Singh, himself a Sikh, promised action against those named in the Nanavati Commission report that probed the carnage.

  91. Avatar
    paandiyan says:

    // So, there is a support base not from TTD but from ppl like you. You means some section of Hindus like you//

    its totally wrong. how can you say only Hindu. might be you looking at the issues by using on EYE. open two and see the world.
    A VERY SOLID PROFF
    =================

    இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவில்லை என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
    இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
    இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என எல்லா அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் குரல் கொடுத்தார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் இதற்காக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
    மனித நேயத்தைப் பற்றிப் பேசக் கூடிய இந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் இதுபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
    விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராடியவர்கள். இவர்கள் போராடும் போது இலங்கை அரசு செயல்பட்டதைப் போன்றுதான் இவர்களின் செயல்பாடுகளும் இருந்தன.
    விடுதலைப் புலிகள் போருக்கு வந்த சிங்கள ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்லவில்லை. அப்பாவி மக்களையும் தான் சுட்டுக் கொண்டார்கள்.
    விடுதலைப் புலிகளும் சிங்கள அரசு செய்ததைப் போன்றே குற்றங்களைச் செய்தார்கள் என்பதை தமிழ் சமுதாய மக்களுக்கு இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழக அரசியல்வாதிகள்.
    இருவரும் ஒரே குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கும் போது கண்டிக்க வேண்டுமானால் ராஜபக்சவையும், விடுதலைப் புலிகளையும் கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நல்லவர்களாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசை கண்டனத்திற்குறியதாகவும் காட்டுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
    சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்குமாகாணத்தில் உள்ள யாழ்ப்பானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான இஸ்லாமியர்கள் பெரிய தொழிலதிபர்களாக இருந்தார்கள். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஒரு இஸ்லாமியர்கள் கூட இருக்கக் கூடாது என 24 மணி நேரம் அவகாசம் கொடுத்து, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களையும் வீடு, வாசல், சொத்துக்களை விட்டு விரட்டியடித்தனர். அவ்வாறு அந்த இடத்தை விட்டு வெளியேராதவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பார்க்காமல் சுட்டுக் கொன்றனர்.
    விரட்டப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டு அகதிகளாக சொந்த நாட்டிலேயே வாழ்ந்தனர். கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.
    விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணம் வரை ஊடுறுவிச் சென்று இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடிக்குச் சென்றனர். அங்குள்ள பள்ளிவாசலில் சுபு{ஹ (விடிகாலைத்) தொழுகையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொன்றவர்கள்தான் இந்த பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள். அந்தப் பள்ளிவாசல்களில் இரத்தக்கரை இன்றளவும் உள்ளது. அங்கு பிரபாகரனின் மகனை விட பச்சிளம் குழந்தைகள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டனர். யுத்தம் செய்ய வந்தவர்களைப் போல தொழுகையில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
    அதுமட்டுமல்லாமல், கிழக்குமாகாணத்தில் உள்ள செல்வந்தர்களைக் கடத்திச் சென்று மிரட்டி பல கோடி ரூபாய்களை அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பறித்தனர். புலனிருவை என்ற ஊரிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்ததை விட அதிகமான அய்யோக்கியத்தனத்தை இந்த விடுதலைப் புலிகளும் செய்துள்ளனர். தமிழர்கள் என்ற காரணத்திற்காக இவர்கள் செய்த தவறுகளை மறைத்து, பயந்து கொண்டு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது போன்ற பயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கிடையாது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதனைத் தான் நாங்கள் கவனத்தில் கொள்வோம். அனைவரும் சேர்ந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாகப் பேசினாலும் நாம் அவ்வாறு பேசமாட்டோம். இதன் காரணத்திற்குத்தான் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
    இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழித்த பின்னர்தான் அதிகமான மக்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகவே அரசியல் கட்சிகள் இதனை கையிலெடுத்திருக்கின்றன.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்த ஒன்றை உலகத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மட்டும் தான் செய்துள்ளதா? உதாரணமாக உலகறிய ஒரே மாதிரியான தவறான செயலை ஆயிரம் நபர்கள் செய்திருக்கும் போது தொள்ளாயிரத்து தொன்னுத்தொன்பது நபர்களை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் தண்டணை கொடுப்பது நியாயமா?அயோக்கியத்தனமா?

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு செய்ததைப் போல எந்த நாட்டில் செய்யவில்லை. இந்தியாவில் காஷ்மீர், ஒரிஸா போன்ற நாடுகளில் செய்யவில்லையா? வீரப்பனை பிடிக்கப் போகின்றோம் என்று அப்பாவி மக்களைக் கொல்லவில்லையா?போலியான என்கவுண்டர் போட்டு பல பேரை சுட்டுக் கொள்வது சட்டத்திற்கு உட்பட்டதா? பாகிஸ்தானில் எத்தனைபேர் கொல்லப்படுகின்றார்கள்?. போர்க் குற்றத்திற்காக தண்டனை கொடுத்தால் அனைவருக்கும்தான் கொடுக்க வேண்டும்.
    இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர அமெரிக்காவிற்கு ஒரு தகுதியும் கிடையாது. அணு ஆயுதம் உள்ளதென்று ஒரு நாட்டையே நாசம் செய்து விட்டார்கள். ஈராக்கில் அப்பாவிகளை கொன்று குவித்தார்களே? இவர்கள் தான் இலங்கைப் போர்க்குற்றத்திற்கு தண்டனை கொடுப்பவர்களா? பல கொலைகளைச்செய்த கொலைகாரன் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று உள்ளது. இலங்கை அரசின் குற்றத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இலங்கை அரசு செய்த போர்க்குற்றம் தூசிக்குத்தான் சம்மாகும். சரணடைந்த ஜப்பான் மக்களை குண்டு வீசி ஹிரோஷிமா, நாகஷாயி போன்ற இடத்தையே அழித்தனர். இதில் எத்தனை லட்சம் மக்களை கொன்றார்கள். இது இன்றளவும் அங்கு வாழும் அனைத்து மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதே.
    கவுதமாலா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டமோ சிறையில் அமெரிக்கா செய்தது என்ன?
    இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு என்ன அருகதை உள்ளது என்று கேட்காமல் சிறிய கொடுங்கோலனுக்கு எதிராக இந்த பெரிய கொடுங்கோலன் அமெரிக்காவை இவர்கள் ஆதரிக்கின்றனர்.
    அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்ன?
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றம் செய்ததற்காக அவரை தூக்கில் போடுவதற்காகவா இந்தத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்? கிடையவே கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண கமிஷன் கொண்டுவருவதாக அறிவித்திருந்தார். அதனைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்த தீர்மானம்.
    இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு ஒரு எறும்பு கடித்ததற்கான வலி கூட கிடைக்கப் போவதில்லை. இவர்கள் தமிழ் மக்களையும், நாட்டையும் ஏமாற்றப் பார்க்கின்றார்களா? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை.

    ஊரெல்லாம் ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் ஆதரிக்காது. அதில் நியாயம் இருந்தால் மட்டும் தான் ஆதரவு கொடுக்கும்.

  92. Avatar
    paandiyan says:

    //why should you all go and welcome a mass killer?//
    This you should ask the Indian secular government rulling by a congress party with a FULL support of DMK and also with the support of Thirumavalavan as a UPA government that why Indian government should provide the VISA why not put a hold until he get clean image from allegatations. so better ask either congress or DMK or the UPA govt (secular government.)

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      Politicians don’t have fixed ideology. They change it according to their conveniences. Karunanidhi changes colors as we all know. Other parties too.

      But Hindutva ideology is fixed. Therefore, why do Hindutva persons like you and Subramaniam Swamy like Rajapakeshe, the killer?

      Can’t you clarify the position instead of pointing fingers at others?

      1. Avatar
        paandiyan says:

        the answer is already i have pasted here? did not see? i dont want to do again and again. one of muslim leader is explained in the details and on the above you can see it.

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          அன்புள்ள் திண்ணை ஆசிரியருக்கு,

          ////paandiyan says:
          March 12, 2013 at 3:20 am

          the answer is already i have pasted here? did not see? i dont want to do again and again. one of muslim leader is explained in the details and on the above you can see it. ////

          இது மாதிரி ஆங்கிலத்திலும் [தமிழிலும்] எழுத்துப் பிழைகளும், இலக்கணை பிழைகளும் இருப்பதைச் சுட்டிக் காட்டினும், மீண்டும் மீண்டும் ஒருவர் வேண்டு மென்றே எழுதி வந்தால், திண்ணையின் தரம் குறைகிறது. பிழை திருத்தச் சொல்லி மீண்டும் எழுதியவருக்கு அனுப்ப வேண்டிய பின்னூட்டங்கள் இவை.

          1. Avatar
            paandiyan says:

            இப்படி எல்லாம் எழுதுவதற்கு முன்னால் ஒருவருடைய பெயரை சரியாக பயன்படுத்தி அதில் பூனை என்று எல்லாம் நக்கல் செய்யாமல், ஆங்கில வார்த்தைகளில் அசிங்கம் இல்லாமல் நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க முயற்சி செய்யுங்கள்

      2. Avatar
        paandiyan says:

        //But Hindutva ideology is fixed. //

        முதலில் ஹிந்து எதிருப்பு என்று வாய் கூசாமல் பொய் சொன்னீர்கள் . இல்லை என்று ஒரு முஸ்லிம் தலைவர் பேட்டி கொடுத்தன் இங்கு. அதை பார்த்து பயந்து போயி அந்த பக்கமே போகவில்லை நீங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தல் எங்கள் ஹிந்து க்கு ஒரு பாதரி உள்ளது என்றும் ஒரு ஒரு issue க்கும் அவர் ஒரு தீர்ப்பு சொல்லுவார் நாங்கள் அந்த தீர்ப்பின் படி எங்கள் ideology இருக்கும் என்பது போல உள்ளது . இந்த இலங்கை பொறுத்த வரை ஒரு குறைந்த பட்ச விஷயம் கூட உங்களுக்கு தெரியவில்ல்லை . உங்களுடய கருத்து அதை பறைசாருகின்றது. முதலில் தெரிந்துகொண்டு வாருங்கள் பேசலாம் வேறு ஒரு விவாதம் வழியாக .. நீங்களா ஒரு கட்டுரை போடலம, அதற்க்கு விவாதம் பண்ணுவோம்

      3. Avatar
        paandiyan says:

        //Politicians don’t have fixed ideology//
        ideology வேறு , கருத்து வேறு என்று நேற்று வந்த குஸ்பூ கூட டைம்ஸ் நொவ் விவாதத்தில் வாயடைக்க வைத்தார் அந்த அளவு கூடவா உங்களுக்கு விசயம் இல்லை
        //But Hindutva ideology is fixed. //
        நீங்கள் எந்த ideology இல் வருகின்றீகள் இந்த விசயத்தில் மற்றும் ஸ்ரீலங்கா தமிழன்(ஹிந்து வ இல்லையா ) எந்த ideology இல் வருவான் என்றும் நீங்கள் தெளிவாக வரவும் இன்னொரு கட்டுரையில் இங்கு வேண்டாம்.
        //Subramaniam Swamy //
        சுவாமி மிக தளிவாக நான் என்ன பன்னுகின்ர்ரன் இந்த விஷயத்தில் என்று பேட்டி கொடுத்துவிட்டார் இன்று .நீங்கள் அங்கு கூட போய் விவாதம் பண்ணலாம். இல்லை என்றால் அதை மேற்கோள் காட்டி இங்கு வாசகர்களிடம் விவாதிக்கலாம் .
        //why do Hindutva persons like you //
        ஆரம்பத்தில் யு என்றால் நீ இல்லை என்று சொன்னீர்கள் இப்பொழுது நீ என்று சொல்லி வருகின்றீகள் . நான் என் நிலையை மிக தளிவாக சொல்லி விட்டன மேல ஒரு விவாதத்தில்..
        //Can’t you clarify the position instead of pointing fingers at others?

        //
        அட்துவனுக்கு சொல்லும்போது இது வேறு சுப்ஜெக்ட் என்று அறிவுரை வழங்கும் நீங்கள் இது வேறு சுப்ஜெக்ட் இங்கு வரவேண்டாம் என்று தோனவில்லையா ?

  93. Avatar
    புனைபெயரில் says:

    அனைவரையும் பாவிகளாய் பார்க்கும் இயக்கம் சேர்ந்தவர்க்கு, அஹம் பிரம்மாஸ்மி புரியறது கஷ்டம் தான்.

  94. Avatar
    paandiyan says:

    அதுவும் சரிதான் . இப்படி தப்பும் தவறுமாக பேசும் இவர்கள் , அதுவும் இதில் ஹிந்துவாம் — இப்படி பேசும் இவர்கள் — நம் பெரும் மதிப்புக்குரிய பார்லிமென்ட் மெம்பெர்ஸ் கனிமொழி , திருமா , பாலு போன்றவர்கள் அங்கு சென்று பயணம் செய்து, ராஜபக்ஷேயுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்று வந்த பொது என்ன சைய்தார்கள்.

  95. Avatar
    paandiyan says:

    ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த
    சர்வதேச இளைஞன்
    விருது டெல்லியில்
    நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் UPA (which inluces thiruma and DKM)அரசால்
    வழங்கப்படுகிறது .

  96. Avatar
    பூவண்ணன் says:

    சீக்கிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் பல ஆயிரம்.அவர்களின் தீவிரவாதத்தால் விமானம்,ரயில்,பேருந்து என்று அனைத்திலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உயிர் இழந்தவர் பல ஆயிரம்
    ராணுவத்தில் இருந்து கலகம் செய்து உயர் அதிகாரிகளை கொன்று ஆயுதங்களை கைப்பற்றி சக ராணுவ வீரர்களோடு போரிட்டு இறந்தவர்,அவர்களால் கொல்லப்பட்டவர்களும் குறைவு கிடையாது
    இன்றும் அனைத்து சீக்கிய அடிப்படை,மிதவாத குழுக்கள் RSS தங்கள் மதத்தை அழிக்க நினைக்கும் குழுவாக தான் கருதுகின்றன.உலகெங்கும் உள்ள அவர்களின் குழுக்களின் கருத்துக்களை இப்போது இணையத்தின் துணையால் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்
    இந்திரா காந்தி இறப்பிற்கு பிறகு ஏற்பட்டது ஹிந்து சீக்கிய கலவரம்.அதற்க்கு ஆதரவு தந்தது காங்கிரஸ்,பா ஜ கா இரண்டு கட்சிகளையும் சார்ந்த ஹிந்துக்கள் .தலித்களின் வீடுகளை கொளுத்த கட்சிகளை தாண்டி சாதியால் இணைவது போல ,கட்சிகளை தாண்டி ஹிந்துக்கள் நடத்திய கலவரம் .சீகியரகளுக்காக வாதாடும் வக்கீல்கள்,பத்திர்க்கைகாரர்கள்,ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்று பலர் இதை பற்றி எழுதி உள்ளனர் .கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரியும் ,இது கட்சிகளை கடந்து ஹிந்து மக்கள் நடத்திய வெறியாட்டம் எனபது
    குஜராத்தில் குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு கலவரத்தில் ஈடுபட்டதா,இல்லை கட்சிகளை கடந்து மக்கள் கலவரம் செய்தார்களா
    முப்பது ஆண்டுகள் கூட முடியவில்லை,அதற்குள் RSS காரர்கள் காங்கிரஸ் காரர்கள் தாக்க வந்த போது உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றினார்கள் என்று கூச்சமில்லாமல் கதைகள் வர துவங்கி விட்டன
    1984 தேர்தலில் பா ஜ கா ஏன் வெறும் இரண்டு இடங்கள் பெற்றது,RSS ஏன் பா ஜ கா வை கை கழுவி விட்டு அந்த தேர்தலில் கோங்க்றேச்சை ஆதரித்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் பழி தீர்த்து கொண்ட ஹிந்துக்களின் செயல் புரியும்
    மகாராஜா ஹரி சிங் காஷ்மீர் பற்றி கூறிய கருத்தை தேவவாக்காக எடுத்து கொண்டு வாதிடுவது போல வருங்காலம் மன்மோகன் சிங் கருத்தை தான் எடுத்து கொள்ளும்.சீக்கிய கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட rss காரர்கள் பட்டியல் (அத்வானி உள்துறை அமைச்சராக இருக்கும் போது பல வழக்குகளை வாபஸ் பெற வைத்தார்)இன்றும் எதிராக போராடும் குழுக்களிடம் உண்டு

    1. Avatar
      paandiyan says:

      அதன் பின்பு வந்த நம்ப ஊர்காரர் பழிவாங்குவதில் நாகபாம்பு மாதரி இருப்பார . பயங்கரவாதம் கலர் பற்றி எல்லாம் பேசியவர் , இப்படி ஒரு ஆதாரம் இருந்தால் அத்வானிய உள்ள போட்டு இருப்பர, ஏன் பண்ணவில்லை . அவர்கள் சமுகம் பழி வாங்குவதில் வெறி புடிதர்வர்கள் என்று பயந்து தான உங்கள் அன்னை , பொம்மையை வைத்து விளையடுகின்றார் . இப்படி ஒரு லட்டு இருந்தால் அப்படி பயபடுவார என்ன . கதை அலக்க ஒரு வரைமுறை இல்லையா …

  97. Avatar
    பூவண்ணன் says:

    ஹிந்து மத ஆதரவாளர்களின் புத்திசாலித்தனமே அலாதியானது.ஷியாக்களும் சுன்னிகளும்,அஹேம்டியாக்களும் வெட்டி கொலை செய்து கொண்டால் இஸ்லாமிய உட்குழுக்களுக்குள் சண்டை என்று உண்மையை எழுதுவார்கள்.ஆனால் வன்னியர்களும்,முக்குலத்தோரும் தலித்களும் அடித்து கொண்டால்.குஜ்ஜர்களும் மீனாக்களும் வெட்டி கொண்டால் ஹிந்துக்களுக்குள் கலவரம் என்று செய்தி வராது.
    வெறி பிடித்து பழிவாங்கும் விதமாக ஹிந்துக்கள் சீக்கியரை வெட்டி கொன்றால் அதை குறிப்பிட்ட கட்சியை சார்ந்த மக்கள் (சீக்கியர் உட்பட )செய்ததாக திசை திருப்புவார்கள்(சாவர்க்கர் சாமர்த்தியமாக காந்தி கொலை வழக்கில் இருந்து நழுவி கொண்டது போல )

    1. Avatar
      paandiyan says:

      வாங்கப்ப வந்து மொதல்ல இருந்து ஆரம்பிங்க இதை — சாவர்க்கர் சாமர்த்தியமாக காந்தி கொலை வழக்கில் இருந்து நழுவி கொண்டது போல. பேசமால் காந்தி என்று ஒருவர் இல்லவே இல்லை. அவர் ஒரு ஆப்ரிக்கா கிறிஸ்டியன் என்று பகடி பன்னவேண்டியதான் அப்பொழுதுதான் இவர்கள் அடங்குவார்கள்..நான் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் இருகின்றத . மன்மோகன் என் நானாவதி மீது நடவடிக்கை உறுதி என்று அமைச்சரை resign பண்ண சொல்ல வேண்டும் . அவர என் மன்னிப்பு கேட்டு மன்றாட வேண்டும். தேர்தல் பேச்சு , பார்லிமென்ட் உள்ள ஒரு பேச்சு எல்லாம் சட்டத்தின் வரைமுறைக்குள் வராத ஒன்று . பேசிவிட்டு சாமர்த்தியமாக தப்ப ஒரு வழி என்ற அடிப்படை கூடவா இங்கு புரியவில்லை . மேல கேரளா விஷயம் கூட விவாதிக்கப்பட்டு உள்ளது. பாப்போம் எப்படி திரிகின்றார்கள் என்று .

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு அப்பாவி சீக்கியர் பலரைத் தாக்கியவர் “காங்கிரஸ்காரர்கள்”, இந்துக்கள் அல்லர் என்று என்னுடன் தர்க்கம் செய்தவர் கட்டுரை ஆசிரியர் திருவாளர். கிருஷ்ண குமார், இந்துத்வ குருஜி.

      பாலஸ்தீனியன் பயங்கரவாதி எஸ்ஸர் அரஃபாட்டு நோபெல் பரிசு கொடுத்துப் பாராட்டினார். காந்திஜி கொலைச் சதியைத் திட்டமிட்டுத் தப்பிக் கொண்ட வீர சாவர்க்கருக்குப் பாராளுமன்றத்தில் இடம் கொடுத்து படம் மாட்டி யிருக்கிறார். “சு” தந்திரப் போராட்டவாதி !!!

      சி. ஜெயபாரதன்.

  98. Avatar
    paandiyan says:

    பூவண்ணன் காதில் பூ சுர்ருவதுஎல்ல்லாம் இப்பொழுது ஆதாரம்…. பாரத்தில் என்று விஷம் ஒழியுமோ

  99. Avatar
    paandiyan says:

    Singh’s apology came after the GT Nanavati Commission named several Congress leaders as complicit in the killings, and it seemed as if BJP and Akali politicians will make political capital out of it to put Congress on the mat. So he said: “I have no hesitation in apologising to the Sikh community. I apologise not only to the Sikh community, but to the whole Indian nation because what took place in 1984 is the negation of the concept of nationhood enshrined in our Constitution.”

    But why did Singh apologise for something done by Rajiv Gandhi’s government, of which he wasn’t even a part? Was there any apology from the Gandhi family, since it was Rajiv Gandhi who justified the violence claiming that when a big tree falls, the earth shakes

  100. Avatar
    புனைபெயரில் says:

    உலகமெங்கும் போய் கொள்ளையடித்து பிழைப்பு நடத்திய மதங்களின் லிஸ்டில் இந்து மதம் கிடையாது. சிலுவை அறைந்த செண்டிமென்ட் காட்டி உலகமகா கொள்ளையர் கூட்டம் மதம் என்ற போர்வையில் அலைகிறது. படிப்பது பிழைத்து வாழ என நினைக்கும் கூட்டத்திற்கு செலக்டிவ் அம்னீசியா…

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      புனைபெயராரே ! இந்துமதம் கோடான கோடி இந்தியரைப் பிரிக்காமல் இந்தியாவுக்குள்ளே யாவது ஒன்று சேர்க்குதா ? இந்துக்களையாவது பிளக்காமல் ஒன்று படுத்துதா ? இஸ்லாமியர், சீக்கியர், கிறித்தவரை எல்லாம் விடுதலை நாட்டில் ஒருமைப் படுத்த முயற்சி செய்து உதாரண மதமாய் இருக்கிறதா ?
      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      IIM Ganapathi Raman says:

      Yesterday news: In California, parents went to court against the school introducing Asthanga Yoga. The parents allege that through this Yoga, the school attempt to make pupils believe in Hindu religion.

      If you want, I will quote the whole newsitem.

      Hindus for millennai didn’t cross seas because it is forbidden in their religion. One of the reasons for the enmity between Sankararaman and Kanchi seer was that the Seer proposed to visit China which the man said against the religion.

      Only this half century, Hindu crossed seas and went to many countries. What they do with their religion will come out soon.

      You should wait.

  101. Avatar
    புனைபெயரில் says:

    அது சரி, கிறிஸ்து மதம் ஒன்று என்று யார் சொன்னது, வாடிகன் போப் பிற்கு கோட்டா.. புரோட்டாஸ்டாண்ட், பெந்தகோஸ்து தொடங்கி, கிறிஸ் நாடார், கிறிஸ் தேவர், கிறிஸ் தலித் என்று பல பல உண்டய்யா..? சரி ஒரு கிற்ஸ்துவ நாடாரை கிறிஸ்துவ தலித்தை திருமணம் செய்யச் சொல்லுங்களேன்… எங்க மதத்திலே ஒன்னோ இரண்டோ தான் நித்யானந்தா… ஆனால், கிறிஸ்துவ மதத்தில ஒரு சின்னப் பசங்கள விடருதில்ல போலிருக்கு …

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      You didn’t get his point. He says that Hindu religion should help foster unity of different religious people within India by advocating peace and harmony among themselves. But it is not doing that. He implies that it creates disharmony. He is not talking about different sects within the religion. You may counter accordingly in defence of your religion.

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      புனைபெயராரே !

      ///புரோட்டாஸ்டாண்ட், பெந்தகோஸ்து தொடங்கி, கிறிஸ் நாடார், கிறிஸ் தேவர், கிறிஸ் தலித் என்று பல பல உண்டய்யா..? ///

      கிறித்துவ மதத்தில் பல்வேறு பிரிவுகள், பிணக்குகள் இருப்பினும், அவர்கள் வழிபடுவது ஏசு நாதரை, மேரி அன்னையை மட்டும்தான்! அவர்கள் வேதநூல் என்று படிப்பது பைபிள் ஒன்றுதான்.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        புனைபெயரில் says:

        யாரிடம் இந்தக் கதை… மேரி என்பவரை வழிபடாத கிறிஸ்துவ பிரிவும் உண்டு. ஏசு என்பவர் இறைவன் அல்ல என்ற பிரிவும் உண்டு. அது சரி, அது என்ன பைபிள்….? புதுசா பழசா..? புதிய ஏற்பாட்டிற்கு பின் லேட்டஸ்ட் ஏற்பாடு ஏன் வரவில்லை… அது சரி, சிந்திக்க விட்டா தானே , சிந்தனைகள் வரும்… அங்கு தான் அடிமை நிலை தானே..

  102. Avatar
    poovannan says:

    பாண்டியன் சார்
    நான் தருவது எல்லாம் நடந்த நிகழ்வுகள்.அதிகாரிகளை கொன்று விட்டு கலகம் செய்த சீக்கிய சிப்பாய்கள்,வெடித்து சிதறிய விமானம் ,பேருந்தில் இருந்து சீக்கியர்கள் இறக்கி விடப்பட்டு மீதம் இருந்த ஹிந்துக்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டது.கொலை செய்யப்பட்ட ராணுவ தளபதி,பிரதமர்,முதல்வர்,காவல்துறை அதிகாரிகள்,பதிலுக்கு கொல்லப்பட்ட பல ஆயிரம் அப்பாவி சீக்கியர் என்று அனைத்தையும் ஒதுக்கி விட்டு மன்மோகன் மன்னிப்பு கேட்டதை எதற்கு ஆதாரமாக காட்ட விரும்புகிறீர்கள்.பல ஆயிரம் அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள்.அந்த நிகழ்வுக்கு சீக்கிய சமுதாயத்தில் இருந்து காங்கிரெஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட மன்மோகன் மன்னிப்பு கேட்கிறார். நாளை பா ஜ கா ஆட்சிக்கு வந்து நஜ்மா ஹெப்டுல்லாஹ் பிரதமர் ஆனால் அவரும் மன்னிப்பு கேட்ப்பார். ஆனால் ஹிந்து மத வெறியர்களின் கூடாரமான சங்கம் ஒரு காலத்திலும் அப்படி ஒரு வேறு மதத்தை சேர்ந்த தலைவர் பா ஜ கா வில் உருவாக விடாது
    பெரும்பான்மையான ஹிந்துக்களால் துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட சீக்கியர்களுக்கு ஆதரவாக டெல்ஹியில் ஒரு ஹிந்து பெரும்பான்மை பகுதி கூட இல்லை.பா ஜ கா ,அதன் முன்பிறவியான ஜன சங் இரண்டும் டெல்லியில் வலுவான நிலையில் இருந்த கட்சிகள்.அவர்கள் ஆதரவாளர்கள் யாராவது வந்து கொலைகளை தூண்டிய தலைவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லி இருக்கிறார்களா

  103. Avatar
    poovannan says:

    http://parliamentofindia.nic.in/lsdeb/ls11/ses1/0528059603.htm

    There were so much fear of disturbances, riots and ethnic clashes and all that. Mr. Vajpayee was campaigning in Assam. I have got here a book which describes the fact that when he was addressing roadside election meetings in Assam, in that highly surcharged atmosphere, he had said this and I am quoting:

    “Foreigners have come here; and the Government does nothing. What if they had come into Punjab instead, people would have chopped them into pieces and thrown them away.”

    Sir, I submit that in that atmosphere prevailing in Assam at that time, for a responsible leader to make statements like this, that they should be chopped into pieces and thrown away, is something which could be nothing but inflammatory. I can tell you that soon after this, that famous or infamous Nellie massacre took place in Assam. I submit that Mr. Vajpayee contributed to creating this atmosphere by this type of inflammatory speeches made by him. This is very different to the type of speech that he made here yesterday,

    அசாமில் ஒரே நாளில் 2000 திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் ஒரே நாளில் கொல்லபட்டார்கள்.அதற்க்கு முன்பு அங்கு பேசி தூண்டிய தலைவர் யார் தெரியுமா .திரு வாஜ்பாயி
    இந்த கொலைகளை புரிந்தவர்கள் ஹிந்துக்களா இல்லையா

    1. Avatar
      paandiyan says:

      //பார்லிமென்ட் உள்ள ஒரு பேச்சு எல்லாம் சட்டத்தின் வரைமுறைக்குள் வராத ஒன்று . பேசிவிட்டு சாமர்த்தியமாக தப்ப ஒரு வழி என்ற அடிப்படை கூடவா இங்கு புரியவில்லை . //
      i did answer very well. the problem is you are not reading and come up with points based on that. whatever you think you are register the comment without reading the others point.

  104. Avatar
    paandiyan says:

    லாகூரில் பதாமி பாக் பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் எரித்துள்ளார்கள். இதற்கு காரணம் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்துவர் இஸ்லாம் மதத்தை அவதூறு செய்துவிட்டார் என்ற புரளியே.

    இகழ்ந்து பேசுபவன் எல்லாம் இப்போ ஓடுவான் பாருங்கள் புறமுதுகு காட்டி . பேசவும் வாயி இருக்குமோ?

  105. Avatar
    poovannan says:

    மதத்தை பரப்பாமல் இந்தியா முழுவதும் சுயம்பாக ஹிந்து மதம் குதித்ததா என்ன
    கொள்ளை அடிப்பதை குறிப்பிட்ட சாதிகளுக்கு என்று ஒதுக்கி விட்டு விட்டு அது இந்து மதம் அல்ல அவர்கள் இந்துக்கள் அல்ல என்றால் என்ன ஞாயம்
    கொள்ளை அடிக்காத மன்னனே கிடையாது. தாய்ப்பாலுக்கு கூட வரி போட்ட திருவன்கோர் ராஜாக்கள் இங்கு உண்டு
    அந்தமானில்,வடகிழக்கில் பழங்குடிகள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தசாவதராம் ,சிவராத்திரி தெஇர்யுமா.பசுவை உண்ண மாட்டார்களா .ஹிந்து மிச்சிஒனரியொ ,கிருத்துவ மிச்சிஒனரியொ எவன் முதலில் போகிறானோ அவன் அவர்களை இழுத்து போட்டு விடுகிறான்.
    ஆதிசங்கரர் பல புத்த விகாரங்களை இந்து கோவில்கள் ஆக்கினார்.கடல் தாண்ட கூடாது என்பதால் ஒரு குறிப்பிட்ட வரைபகுதிக்குள் இந்து மதத்திற்கு harvesting நடந்தது.

  106. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    இந்துமதக் கோட்பாடுகள் பல ஞானிகளுக்கும், உன்னத ஆன்மீக மேதைகளுக்கும் ஓர் ஆத்மீகச் சிந்தனை மதமாக உருவானது, உருவாக்கப் பட்டது, அதிலுள்ள ஆழ்ந்த ஆன்மீகக் கருத்துகள் வேறு மதக் கோட்பாடுகளில் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. உதாரணம் : வியாசர் ஆக்கிய வேத நூல் பகவத் கீதை.

    ஆகவே இந்துமதம் ஓர் உதாரண ஆன்மீக நட்பு மதமாக உடனிருந்து பிற மதங்களோடு சம நோக்கில், சம போக்கில் நிலவ வேண்டாமா ?
    சி. ஜெயபாரதன்

  107. Avatar
    paandiyan says:

    //அந்த நிகழ்வுக்கு சீக்கிய சமுதாயத்தில் இருந்து காங்கிரெஸ் கட்சியால் பிரதமர் ஆக்கப்பட்ட மன்மோகன் மன்னிப்பு கேட்கிறார். //
    இப்படிதான் உங்களுடைய பல பதிவுகள் இருகின்றன . மனம் போன போக்கில் எதயோ எழுதி கொண்டு போகின்றீர்கள். ஸ்கூல் படிக்கும்போது ஸ்பீட் ஆ சொன்னால் தப்பு தெரியாது என்று அத்ய follow பண்ணுவோம். நீங்கள் இதை இணையத்தில் பண்ணுகின்றீர்கள் . நானாவதி commision , கோர்ட் , தீர்ப்பு எல்லாம் ஜஸ்ட் லைக் தட் இக்நோர் பண்ணி நான் எனது என்று உறுதியாக ஒரு கருத்தை த்நிகின்ர்றேர்கள்
    .காங்கிரஸ் கலவரம் மற்றும் காங்கிரஸ்ஆல் ஆனா பிரதமர் மன்னிப்புக்கும் உள்ள நாடகம் கூடவா உங்களுக்கு புரியவில்லை .இரண்டு தடவை நான் கேள்வி கேட்ட பின்பும். BJP , நஜ்மா என்று எல்லாம் என் மனம் சொல்லுகின்றது என்று கூட சொல்லாமல் இப்படிதான் நிகழ்வுகள் நடக்கும் என்று ஆதர பூர்வமாக கொண்டு போகீண்றீர்கள் . அத்வானி அழித்தார் என்று சொல்லுகின்றீர்கள் , அதைய அடுத்த பதிவில் இக்நோர் பண்ணி வேறு பாணியில் போகின்றீர்கள் . வேறு மதகாரர்கள் எதற்கு வர வேண்டும் அது கட்சிய இல்லை டிராமா கோஸ்டிய ? டிராமா போடா ? இப்படிதான் DMK வை ரொம்ப நாள் கேட்டார்கள் ஏன் தலித் முதல் அமைச்சர் இல்லை என்று ? இப்போது கேள்வி இல்லை ..இதற்க்கு கூட ஒரு 10 பக்கம் பதில் போடா வேண்டாம் தயவு செய்து . படிக்க பொறுமை இல்லை கட்டுரை விவாதமும் இந்த டாபிக் இல்லை.

  108. Avatar
    புனைபெயரில் says:

    கோவிலுக்குள் வராதே என்று சொன்னதால், ஒருவன் பாவிகளே உள்ளே வாருங்கள் என்று கை நீட்டி, வெள்ளைத் தோலுடன் அழைத்தான். நீயும் நானும் சமம் என்று அவன் கட்டிப்பிடி வைத்தியமல்லவா செய்கிறான். புதுச்சேரி, கோடைக்கானல், வேலூர் , கன்னியாகுமரி என திக்கெட்டும் சிறார்களை வன்புணர்ச்சி செய்கிறான் – வெள்ளுடை வேந்தனாய். கதவை எங்களவர் சாத்தினார் என்று வந்தால் இந்த சாத்தான்களிடமன்றோ மாட்டிக்கொண்டோம். திருப்பி அல்ல… ஓங்கி ஒருமுறை கூட இந்த அநியாயத்தை கேட்டுவிடக் கூடாது என்று எங்களின் இறைதூதனின் இரு கைகளையும் அறைந்து விட்டார்கள். ஊழி நடனத்தில் நல்லது நடக்கட்டும்..

  109. Avatar
    பூவண்ணன் says:

    வெறி பிடித்த ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு மாற்று மதத்தவரை ,ஒரு சாதியார் இன்னொரு சாதியரை கொன்று குவித்தால் அதை ஹிந்துக்கள் கலவரம் என்று சொல்லாமல் குறிப்பிட்ட கட்சி செய்த கலவரம் என்று கூறுவது யார்
    சீக்கியர்கள் மேல் ஹிந்துக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்த காலகட்டம் அது.பஞ்சாபிய ஹிந்துக்களை கூட்டம் கூட்டமாக சீக்கிய தீவிரவாதிகள் கொன்று குவித்ததால் அவர்களில் பலர் டெல்லிக்கு இடம் மாறிய காலம்.பஞ்சாபி ஹிந்துக்களின் ஆதிக்கம் தான் டெல்லியில்
    ஷீலா கபூர் எனும் ஷீலா தீக்ஷிதோ ,பா ஜ க குரானாவோ மற்ற முக்கிய தலைவர்களோ அனைவரும் பஞ்சாபி ஹிந்துக்கள் தான்
    பஞ்சாபி ஹிந்துக்களை கொன்ற சீக்கியரை பழிவாங்க டெல்லியில் கண்ணில் பட்ட சீக்கியரை எல்லாம் கொன்று பஞ்சாபி ஹிந்துக்கள் ,பஞ்சாப் மாநிலத்தோடு சந்டிகருக்காக பல ஆண்டுகளாக சண்டையில் இருக்கும் ஹர்யான ஹிந்துக்களும் பழி தீர்த்து கொண்டார்கள்.இது கட்சிகளை கடந்த வெறியாட்டம்.
    அடுத்து வந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது (நேரு கூட அப்படி செய்த்தது கிடையாது) .கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்ப்பர்க்கபட்ட குஜராத் பா ஜ கா குஜராத் கலவரத்திற்கு பிறகு 2/3 இடங்கள் பெற்று வெற்றி பெற்றது போல
    ஆதாரங்களை தருவது நான்.வெறுமே பேசுவது நீங்கள்.

  110. Avatar
    பூவண்ணன் says:

    தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் கோங்க்றேச்ச்காரர்கள் வெறியாட்டம் ஆடி யாரையாவது கொன்றார்களா
    இங்கு வலு குறைவு என்று வாதிட்டால் வலுவாக இருந்த கேரளத்தில்,ஆந்திரத்தில் ,டெல்லியில் தமிழர்களை கொன்றார்களா
    பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட வெறுப்பு பெரும்பான்மையான மக்களை (எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பெரும்பான்மையானோர் நேரடியாக குற்றங்களில் ஈடுபட மாட்டார்கள்.ஆனால் வெறுக்கும் சாதிக்கோ,மதத்திற்கோ எதிராக சிலர் கலவரங்களில் ஈடுபட்டால் கண்டும் காணாதது போல இருந்து மறைமுக ஆதரவு கொடுப்பார்கள் )ஒரு குறிப்பிட்ட சாதி,மதத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக திரும்பும் போது அவர்கள் குற்றம் புரியாவிட்டாலும் ,குற்றவாளிகளை எதிர்க்க மாட்டார்கள்.இவை கட்சிகளை தாண்டியவை

    1. Avatar
      paandiyan says:

      தமிழ்நாட்டில் ராஜீவ் கொன்றது ஒரு வெளிநாட்டு பயங்கரவாத குழு, இந்திராவை கொன்றது உள்நாட்டு இந்தியன் . இந்த அடிப்படை கூடவா உங்களுக்கு புரியவில்லை . ராஜீவ் கொன்றது பயங்கரவாத குழு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. நான் உட்பட காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் பலரும் அதை தமிழன் என்று சொன்னது இல்லை. நான் கேட்டதும் இல்லை. ஆனல் உங்கள் மன அழுக்கு இப்பொழுது தெரிகின்றது. ஒரு பிரச்சனையை பல நோக்கில் ஆராயாமல் நான் சொன்னது சரி என்ற ஒரு மனப்பான்மை வந்துவிட்டால் தேடல் நின்று நான் பெரியவன் என்ற வெறி வந்துவிடும், எனவா உங்களை பொறுத்தவரை இது என் கடைசி பதில். உங்கள்டன் வாதிட எனக்கு விருப்பம் இல்லை

  111. Avatar
    பூவண்ணன் says:

    இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு நடைபெற்றது ஹிந்து சீக்கியர் கலவரம்.குஜராத்தில் கோத்ர ரயில் எரிப்பிற்கு பின் நடைபெற்றது ஹிந்து இஸ்லாமியர் கலவரம்
    அசாமில் ,பாகல்பூரில்,உத்தர்ப்ரதேசதில் நடைபெற்ற கலவரங்கள் ஹிந்து இஸ்லாமியர் கலவரங்கள்.பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு மகாராஷ்டிரத்தில் நடைபெற்றது ஹிந்து இஸ்லாமியர் கலவரம்.காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த மாநிலம். ஆட்சி இயந்திரம் கண்டு கொள்ளாமல் இருந்தால் தான் சிவசேனா ஆட்டம் போட்டிர்டுக்க முடியும்.அது தான் நடந்தது.ஸ்ரீக்ரிஷ்ணா கமிசனும் அதை உறுதி படுத்தி உள்ளது
    ஹிந்துக்களை கலவரம் செய்யாத குழுக்கள் போல காட்ட நினைப்பது ஏன்.

    1. Avatar
      paandiyan says:

      கோத்ர ரயில் எரிப்பு ஒரு acccident என்று மறக்காமல் சொல்லி விடுங்கள்

    2. Avatar
      paandiyan says:

      அப்படி பார்த்தல் காந்தி சுதந்திரம் போராடியது ஹிந்து , கிறிஸ்துவ கலவரமா ?

  112. Avatar
    paandiyan says:

    //உலகமெங்கும் போய் கொள்ளையடித்து பிழைப்பு நடத்திய மதங்களின் லிஸ்டில் இந்து மதம் கிடையாது.//
    வெரி true . இல்லை என்றால் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க தலைவர்கலுக்கு புற்றுநோயை பரப்புவர்கள இல்லை பழங்குடி மக்களை புற்றுநோயியை போல அழிப்பார்கள.