ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாமிருவரும் இந்த மர்மத்தைச்
செவிகளில் கேட்கிறோம்
பேசுவது போல் !
வேறு யார் சேர்ந்தி டுவார்
விந்தைப் பந்தத்தில் ?
மதக்குரு ஒருவர் அடுத்தவரிடம் கேட்டார் :
“உன் ஆன்ம உள்நோக்கு என்ன
இறைவன் இருக்கை பற்றி ?
எனக் கொன்றும் தெரிய வில்லை !
ஆதலால்
உனக்கொரு கதை சொல்வேன்
கேள் நீ !
++++++++++++
நேர் எதிரே இருப்பான் இறைவன்
நெருப்பில் தோன்றுவான்
ஒருபுறம் !
தெளிந்த நீரோட் டத்தில்
தெரிவான் மறுபுறம் !
தீயை நோக்கிச் செல்லும் ஓரினம்
தீயிக்குள் பாயும் ஓரினம்
நீரோட்டம் நோக்கிச் செல்லும்
வேறினம் !
ஆசீர்வாதம் பெறுபவர் யாரிந்த
ஈரினங்களில் ?
++++++++++
நெருப்பில் மிதக்கும் மனிதர்
நீரோட் டத்தில் தோன்றுவர்
திடீரென !
நீரில் மூழ்கிடும் தலை
நெருப்பில் முளைத் தெழும்
திடீரென !
பெரும் பாலோர்
நெருப்பை நெருங்க அஞ்சி
இறுதியில் மடிந்து போவார் !
நீரின்பம் வேண்டி
நிதமும் வணங்கு வோர்
ஏமாற்றம் அடைவார்
இந்த எதிர்நிகழ்ச்சி யால் !
+++++++++++
நீடிக்கும் இந்த சூழ்ச்சி !
அப்போது
தீயின் குரல் ஒலிக்கும் :
“நெருப் பில்லை நான் !
வெறும் நீரூற்று தான் !
நெருங்கி வருவீர் என்னை !
தெறிக்கும்
தீப்பொறி களைப் பற்றிச்
சிறிதும்
கவலைப் படாதீர் ”
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 11, 2011)
- கரியமிலப்பூக்கள்
- திண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது
- விபத்து தந்த வெகுமதி
- ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே
- விட்டு விடுதலை
- நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…
- அவனேதான்
- ப மதியழகன் கவிதைகள்
- அழுகையின் உருவகத்தில்..!
- கிறீச்சிடும் பறவை
- பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு
- என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு
- முற்றுபெறாத கவிதை
- ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2
- காத்திருக்கிறேன்
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்
- உருமாறும் கனவுகள்…
- வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை
- பழமொழிகளில் திருமணம்
- அன்னையே…!
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- செல்லம்மாவின் கதை
- சித்தி – புத்தி
- விடாமுயற்சியும் ரம்மியும்!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)
- நினைவுகளின் மறுபக்கம்
- மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)
- அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு
- ஆள் பாதி ஆடை பாதி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9
- பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2